Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2007
நயன்தாரா கதைதான் கெட்டவன் : சிம்புவுடன் ஜோடி சேர எதிர்ப்புகள்- புதுமுகம் லேகா சொல்கிறார்
வல்லவனுக்கு பிறகு சிம்பு நடிக்கும் புதிய படம் கெட்டவன். இப் படத்துக்கு சிம்புவே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நந்து இயக்குகிறார்.
கெட்டவனில் கதாநாயகி யாக புதுமுகம் லேகா நடிக்கிறார். இவர் எஸ்.எஸ்.மிïசிக்கில் பணியாற்றியவர். டெலிவிஷனிலும் சத்யம் தியேட்டரிலும் லேகாவை பார்த்த சிம்புவுக்கு பிடித்து போக கெட்டவனில் நாயகியாக்கி விட்டார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.
நயன்தாராவுக்கும் தனக்கும் இருந்த தொடர்பு உலகறிந்த விஷயம் என்றும் சொந்த காதல்கதை கெட்டவன் படத்தில் இருக்கும் என்றும் சிம்பு கூறியிருந்தார்.
எனவே கெட்டவன் படம் நயன்தாரா கதை என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் கெட்டவனில் சிம்புவுடன் ஜோடி சேர தனக்கு எதிர்ப்புகள் வந்ததாக லேகா கூறினார். அவர் அளித்த பேட்டி
சினிமாவில் நடிக்க ஏற்கனவே சிறுசிறு வாய்ப்புகள் வந்தன. அவற்றை மறுத்தேன். பெரிய கேரக்டர் கிடைத்தால் பண்ணலாம் என்று இருந்தேன். கெட்டவன் கதாபாத்திரம் நான் எதிர் பார்த்த மாதிரி இருந்தது. ஓகே சொல்லி விட்டேன். டெலிவிஷனில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நான் இருந்த போது என் மேனரிஸம் எப்படி இருந்ததோ அது சினிமாவில் இருக்காது முற்றிலும் வித்தியாசமாக தெரிவேன்.
சிம்பு ஜோடியாக நடிக் கிறேன் என்றதும் தமிழ்நாடு முழவதிலும் இருந்து எதிர்ப்புகள் வந்தன. பலர் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள். கெட்டவன் படம் சிம்புவின் நிஜக்கதைஅதில் உன்னுடைய கேரக்டர் நயன்தாரா உன்னை காதலித்து விட்டு இறுதியில் உன் இமேஜை கெடுத்து பழி வாங்குகிற கதை. எனவே அந்த படத்தில் நடிக்க சம்மதிக்காதே என்று பலர் வற்புறுத்தினார்கள். எவ்வளவு பணம் தந்தாலும் நடிக்காதே என்றும் அறிவுறுத்தினர்.
ஆனால் சிம்புவுடன் நடித்த போது அப்படி எதுவும் தெரியவில்லை. அவர் ஜென்டில்மேன் ஆக பழகினார். சிம்பு பற்றி கேள்விப்பட்டதற்கும் நேரில்பார்த்ததற்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லாமல் இருந்தது. எப்படி நடிக்கணும் என்று எனக்கு சொல்லி கொடுத்தார்.நிறைய உதவி செய்தார்சிம்புவை பிடிக்காதவர்கள் தான் அவருக்கு எதிராக இப்படிப்பட்ட செய்திகளை பரப்பி விட்டுள்ளனர்.
Posted in Actor, Actress, Cinema, Director, DJ, Films, Gossip, Heroine, Intro, Introduction, Kettavan, Kiss, Kisukisu, Lega, Leka, Love, Manmadhan, Manmathan, Media, Movies, MSM, music, Nandhu, Nanthu, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Rajendar, Rajender, Rajenthar, Rajenther, Rumor, Rumour, Sensational, Sensationalism, Silambarasan, Simbu, SS Music, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, Thamizh, Thamizh Film, Thamizh Movies, Thamizh padam, TR, Vallavan, Vambu, Vampu | 3 Comments »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006
“வல்லவன்’ படம் என்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தும்: சிம்பு
சென்னை, அக்.20: “வல்லவன்’ படம் என்னுடைய சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தும் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
பி.எல்.தேனப்பன் தயாரிப்பில் நடிகர் சிம்பு இயக்கி நடிக்கும் “வல்லவன்’ படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த சூழ்நிலையில் தயாரிப்பாளருக்கும், சிம்புவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
படத்தை நீண்ட நாள்கள் இழுத்து எனக்கு அதிக செலவை ஏற்படுத்திவிட்டார் என்று தயாரிப்பாளரும், பேசியபடி எனக்கு சம்பளம் தரவில்லை என்று சிம்புவும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தனர். பின்னர் சமாதானம் செய்யப்பட்டு படம் வெளிவருவது உறுதிசெய்யப்பட்டது.
இதுகுறித்து நடிகர் சிம்பு வியாழக்கிழமை கூறியதாவது:
“வல்லவன்’ படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக சிறிது கால தாமதம் எடுத்துக்கொண்டது உண்மைதான். ஆனால் இந்த காலகட்டத்தில் நான் வேறு படங்களில் நடித்திருந்தால் இன்னும் நிறைய சம்பாதித்திருக்க முடியும்.
இந்தப் படத்துக்காக நான், என்னுடைய சம்பளத்தில் பாதிதான் கேட்டேன்.
இயக்குநர் சம்பளமாக படம் வியாபாரமாகும் தொகையில் 15 சதவிகிதமும், மற்ற படங்களில் நடிக்காததால் ஏற்பட்ட இழப்புக்கு சென்னை விநியோக உரிமையும் கேட்டிருந்தேன்.
இதற்கெல்லாம் சம்மதித்த தயாரிப்பாளர் இப்போது நஷ்டம் என்கிறார். படம் நல்ல விலைக்கு வியாபாரமாகியிருக்கிறது. எப்படி பார்த்தாலும் எனக்கு ஒரு கோடி சம்பளம் தர வேண்டும்.
படம் வெளிவர வேண்டும் என்பதற்காக இயக்குநர் சம்பளம் ஒரு கோடி, நடிகர் சம்பள பாக்கி 60 லட்சம் இவை இரண்டையும் வேண்டாம் என்று சொல்லி சென்னை விநியோக உரிமையை மட்டும் பெற்றுக்கொண்டேன். இதுதான் நடந்தது.
நான் விட்டுக்கொடுத்ததற்குக் காரணம் என்னால் இதை விட அதிகம் சம்பாதிக்க முடியும். ஒரு படத்தை இயக்க ரூ.5 கோடி சம்பளம் கேட்கும் அளவுக்கு “வல்லவன்’ படம் என்னை உயர்த்தும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு.
தயாரிப்பாளர் தேனப்பன் மீது எனக்கு வருத்தமோ, கோபமோ கிடையாது என்றார் சிம்பு.
Posted in Actor salary, Cinema, Compensation, deal, Deepavali Movies, Director, Distribution, Distributor, Diwali Cinema, Nayan Thara, release, rights, Silambarasan, Simbu, Tamil Movies, Thamizh Film, Thenappan, Vallavan | Leave a Comment »