Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Tamil Tiger’ Category

Suicide Bomb blast in Nugegoda town near Sri Lankan Capital – Government minister Douglas Devananda escapes

Posted by Snapjudge மேல் நவம்பர் 28, 2007

நுகேகொட குண்டுவெடிப்பில் 16 பேர் பலி

குண்டு வெடித்த இடம்
குண்டு வெடித்த இடம்

இலங்கையின் தலைநகர் கொழும்பின் தென்புறமாக நுகேகொட பகுதியில் இன்று பிற்பகல் சனநடமாட்டம் மிக்க இடத்தில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் முப்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

சனக்கூட்டம் நிறைந்த புடவைக் கடையொன்றில் இருந்தே இந்தப் பாரிய குண்டு வெடித்துள்ளது.

குண்டு வெடித்ததை அடுத்து அப்பகுதியில் இருந்த வாகனங்கள் சிலவும், கடைகளும் தீப்பற்றிக்கொண்டுள்ளன.

வர்த்தக நிறுவனம் ஒன்றில் காணப்பட்ட சந்தேகத்துக்குரிய பொதி ஒன்றை பாதுகாவலர்கள் அகற்ற முயன்ற போதே அந்தப் பொதி வெடித்ததாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 37 பேர் காயமடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகள் மீதே அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த குண்டுத் தாக்குதல்களை அடுத்து கொழும்பு உள்ளடங்கலாக மேல்மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடங்களை திங்கட்கிழமை வரை இலங்கை அரசு மூடியுள்ளது.


இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சி

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு நாரஹேன்பிட்டி இசப்பத்தான மாவத்தையில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின், சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சகவளாகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சேர்ந்ததாகக் கருத்தப்படும் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் இன்று காலை நடாத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

ஈ.பி.டி.பி கட்சி வட்டாரங்களின்படி இன்று புதன்கிழமை அமைச்சர் தேவானந்தா வழமையாக பொதுமக்களைச் சந்திக்கும் தினமாகையால், அங்கு வரும் பொதுமக்களை பாதுகாப்புக் கடமையிலிருந்த அதிகாரிகள் அவர்களைச் சோதனையிடுவது வழக்கம் என்றும், இவ்வாறு அங்கு வந்திருந்த நடுத்தரவயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தியபோது அந்தப் பெண் தான் அணிந்திருந்த தற்கொலை குண்டு அங்கியினை வெடிக்கவைத்ததாகத் தெரியவருகிறது.

சம்பவம் இடம்பெற்ற அறை
சம்பவம் இடம்பெற்ற அறை

ஆனாலும், அமைச்சர் தேவானந்தா எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியிருப்பதாகவும், விடுதலைப் புலிகள் அமைப்பினர் அவரைக் கொல்லுவதற்கு எடுத்த மற்றுமொரு முயற்சி பயனின்றித் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது என்றும் அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவித்த்தன.

இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புத்துறை வட்டாரங்கள், இந்தச் சம்பவத்தில் இறந்த தற்கொலைப்பெண் ஒரு போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட அங்கவீனமுற்றவர் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவருவதாகவும், குண்டுவெடிப்பினால் அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி ஸ்டீபன் பீரிஸ் என்பவர் படுகாயமைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் அங்கு மரணமாகியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தரினதும், அமைச்சர் தேவனாந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்பு உறுப்பினர் ஒருவரும் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2004 ஆம் ஆண்டு இதேபோன்றதொரு பாணியிலான பெண் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் முயற்சியிலிருந்து அமைச்சர் தேவானந்த தப்பியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இலங்கை நேயர்கள் கவனத்திற்கு

நேயர்களே, நேற்றைய தமிழோசை ஒலிபரப்பில் இலங்கை நேயர்களுக்கு நேரிட்ட சில பிரச்சினைகள் குறித்து விளக்க விரும்புகிறோம்.

நேற்று நவம்பர் 27 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வலையமைப்பு மூலமாக இலங்கை நேயர்கள் கேட்ட எமது நிகழ்ச்சி, எமது முழுமையான நிகழ்ச்சி அல்ல.

இலங்கை நேயர்கள் கேட்ட அந்த நிகழ்ச்சி, காலதாமதமாக மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது, அது மட்டுமல்லாமல், எங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படாமலும், எமது அனுமதியைப் பெறாமலும், நிகழ்ச்சியின் சில பகுதிகள் வெட்டப்பட்டன. அந்த நிகழ்ச்சி எங்களால் வெட்டப்படவில்லை என்பதை நேயர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

சிற்றலை ஒலிபரப்பு மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் கேட்கும் நேயர்கள் முழுமையாக இந்த நிகழ்ச்சியை கேட்டிருப்பார்கள்.


Posted in Arms, Attacks, Blasts, Bombs, Capital, Colombo, dead, Devananda, Douglas, Douglas Devananda, Eelam People's Democratic Party, EPDP, Government, Govt, LTTE, Military, Minister, Nugegoda, Polio, Social Services, Sri lanka, Srilanka, Suicide, Tamil Tiger, Weapons, Welfare | Leave a Comment »

Mahinda Rajapakse & LTTE made a deal? US, German and Italian ambassadors injured in a LTTE attack

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

விடுதலைப்புலிகளின் தாக்குதலில் அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயம்

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அங்கு இடம்பெயர்ந்தோர் நலன்களைப் பார்வையிடச் சென்ற அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் காயமடைந்தனர்.

அமெரிக்க மற்றும் இத்தாலியத் தூதுவர்கள் உட்பட 14 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்ததாகவும், இவர்களில் இத்தாலிய தூதுவர் உட்பட 11 பேர் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் யுத்த அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக, இலங்கை அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள், அமெரிக்கா, இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களுடன் இன்று மட்டக்களப்பு சென்றிருந்தார்.

இவர்கள் சென்ற ஹெலிக்கொப்டர் மட்டக்களப்பு நகரில் உள்ள வெபர் மைதானத்தில் தரை இறங்கியதும், அங்கு படை மற்றும் சிவில் அதிகாரிகளால் இவர்கள் வரவேற்கப்பட்டனர்.

அப்போது அங்கு இரண்டு எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் சம்பவத்தின் போது ஒரு எறிகணையின் சிதறல் அருகில் இருந்த வின்சன்ட் மகளிர் கல்லூரியில் விழுந்ததில் ஒரு மாணவியும் காயமடைந்துள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள விடுதலைப்புலிகள், இராஜதந்திரிகள் அந்தப் பகுதிக்கு வருவது குறித்து தமக்கு முன்னரே அறிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

இது குறித்துக் கருத்துக் கூறிய இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல தோர்பினூர் ஒமர்சன் அவர்கள், இப்படியாக இத்தகைய பயணங்கள் குறித்து கூறவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என்று கூறினார்.


‘ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக புலிகளுடன் மஹிந்த ரகசிய ஒப்பந்தம்’- சந்தேகம் எழுப்புகிறார் ரணில்

மஹிந்த ராஜபக்ஷவும் ரணிலும்
மஹிந்த ராஜபக்ஷவும் ரணிலும்

இலங்கையில் கடந்த 2005இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது என்பதில் ஏதோ உண்மை இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2 லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியடைந்திருந்தார்.

அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிறிபதி சூரியாராட்சி அவர்கள் ஜனாதிபதிக்கும் அவரது சகோதரர்களிற்கும் எதிராக பலவாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

ஜனாதிபதித் தேர்தலிற்கு முன்பதாக மஹிந்த ராஜபக்ச தரப்பினரிற்கும், புலிகளிற்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்தவின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பில் இரகசிய ஒப்பந்தம் இருந்தது என்று மிகவும் பாரிய குற்றச்சாட்டு ஒன்றினை ஊடகங்கள் வாயிலாக ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருக்கிறார்.

இந்த விடயம் குறித்து சந்தேகத்தை கிளப்பியுள்ள ரணில் விக்கிரமசிங்க, இப்படியாக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து இலங்கை ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும் என்று தற்போது கூறியுள்ளார்.

Posted in Ambassadors, Army, Attack, Batticaloa, Colombo, deal, German, Germany, Human Rights, Italy, LTTE, Mahinda Rajapakse, Mahinda Samarasinghe, Military, Rajapakse, Ranil, Ranil Wickremesinghe, Rebels, Siripathi, Siripathi Sooriyaarachchi, Siripathy, Sooriyaarachchi, Sooriyaarachi, Sri lanka, Srilanka, Tamil Tiger, US, USA, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal | Leave a Comment »