எல்லோரும் பாடலாம்!
நம்மைப் போல் நிறைய பேர் ரேடியோவைக் கேட்டு வளர்ந்தவர்கள். இலங்கை வானொலி நிலைய நிகழ்ச்சிகள், திருச்சி நிகழ்ச்சிகள் என்று மனம்கவர்ந்த நிகழ்ச்சிகள் எத்தனையோ. அதேபோல், எத்தனையோ அறிவிப்பாளர்கள், தங்கள் வளமான குரலாலும், நிகழ்ச்சியை நயத்துடன் வழங்கும் முறையாலும் நம்மைக் கவர்ந்தவர்கள். இன்று, ரேடியோ மிர்ச்சியும் சூரியன் எஃப்.எம்&மும் நம் செவிகளைக் குளிர் வித்தாலும், எப்போது பார்த்தாலும் சினிமா பாட்டுதான். கூடவே உற்சாகத்தைப் புட்டி புட்டியாக ஊட்டியே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, உச்சபட்ச குரலில் அறிவிப்பாளர்கள் குதிக்கிறார்கள்.
இது ஒருபக்கம்… இன்னொரு பக்கம், ஆர்வமும் திறமையும் உள்ள எல்லோருக்குமே இதுபோன்ற வானொலி நிகழ்ச்சிகள் தொகுக்கவோ, வழங்கவோ வாய்ப்பு கிடைப்பதில்லை. தங்கள் குரல் வளத்தால், மக்களைக் கட்டிப்போட முடியாமல் இருப்பவர்களும் ஏராளம். இவர்களுக்கு எல்லாம் வரப்பிரசாதமாகக் கிடைத்திருப்பதுதான் ‘பாட்காஸ்டிங்’ (றிஷீபீநீணீstவீஸீரீ).
‘பாட்காஸ்டிங்’ என்றால்என்ன? முதலில் ‘வலைப்பூக்கள்’ எனப்படும் பிளாக்குகளைப் (ஙிறீஷீரீs) பார்த்து விடுவோம். பிளாக்கர் (ஙிறீஷீரீரீமீக்ஷீ) என்ற நிறுவனம் ஒவ்வொருத்தரும் தம் கருத்துக்களை, அனுபவங்களை இணையத்தில் எழுதி வெளியிட வழி செய்தது. இப்படி ஒவ்வொருவரும் தமக்கான ஒரு சின்ன ‘இணையக் குடிலை’ உருவாக்கிக் கொள்ளலாம். இது இலவசமான சேவை. இப்படி உருவாக்கப்படும் குடிலில், ‘இம்சை அரசன் 23&ம் புலிகேசி’யின் விமர்சனம் முதல், இத்தாலியின் வெற்றி வரை எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். கிண்டல் செய்யலாம். திட்டலாம். குறை சொல்லலாம். இது உங்கள் இடம்.
இந்த வலைப்பூக்கள் மூலம், எழுதத் தெரிந்த ஒவ்வொருவரும் சுயமான பதிப்பாளரும் ஆகிவிட்டார்கள். பத்திரிகையில் எழுத முடியாத எத்தனையோ கருத்துக்கள், வலைப்பூக்களில் இடம்பெறுகின்றன. அதேபோல், பத்திரிகைகளில் இடம் கிடைக்காத எத்தனையோ எழுத்தாளர்கள், இணைய எழுத்தாளர்கள் ஆனதும் இப்படித்தான். சர்வ சுதந்திரம். எழுத்தை ஜனநாயகப்படுத்தியது இந்த வலைப்பூக்கள்.
எழுதத் தெரிந்தவர்களுக்கு வலைப்பூக்கள். நல்ல குரல்வளத்துடன் பாடத் தெரிந்தவர்களுக்கு… பேசத் தெரிந்தவர்களுக்கு… தொகுக்கத் தெரிந்தவர்களுக்கு..? இவர்களுக்கு என்று உருவானதுதான் ‘ஆடியோ பிளாக்ஸ்’ (கிuபீவீஷீ ஙிறீஷீரீs). இதன் மற்றொரு பெயர்தான் ‘பாட்காஸ்டிங்’. இதைத் தமிழில் ‘குரல் பத்தி’ என்று அழைக்கிறார்கள்.
இப்படி ‘பாட்காஸ்ட்’ செய்பவர்கள் எல்லாம் இப்போது சுயமான ஒலிபரப்பாளர்கள் ஆகிவிட்டார்கள். ஒவ்வொரு நாளும் தங்களுக்குப் பிடித்த விஷயங்கள் பற்றி கருத்து சொல்கிறார்கள். விமர்சனம் செய் கிறார்கள். பழைய பாடலில் தோய்ந்து எழுகிறார்கள். முடிந்தபோது, அடுத்தவரை பேட்டி எடுத்து ஒலிபரப்புகிறார்கள். ஒருவரே எல்லாம் செய்வதால், அவரின் விருப்பத்துக்கேற்ப, அவரது ‘குரல் பத்தி’ சிறப்பாக இருக்கிறது.