Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Tamil News’ Category

Meera Jasmine gets married in Thirupathy?

Posted by Snapjudge மேல் ஜூலை 25, 2007

நடிகை மீரா ஜாஸ்மின் காதல் திருமணம்- திருப்பதியில் ரகசியமாக நடந்தது

சென்னை, ஜுலை.25-

கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்தவர், மீரா ஜாஸ்மின். இவர், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தந்தை பெயர், ஜோசப். தாயார், ஜோசப் எலியம்மா. மீரா ஜாஸ்மினுக்கு ஜோ என்ற அண்ணனும், ஜெனி, ஜெவி என்ற 2 அக்காளும், ஜார்ஜ் என்ற தம்பியும் இருக்கிறார்கள்.

`சூத்திரதாரு’ என்ற மலையாள படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தை பிரபல மலையாள டைரக்டர் லோகிததாஸ் இயக்கினார். பல மலையாள படங்களில் நடித்த பின், `ரன்’ என்ற படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து, `புதிய கீதை’ படத்தில் விஜய் ஜோடியாகவும், `ஆஞ்சநேயா’ படத்தில் அஜீத்துடனும், `சண்டக்கோழி’ படத்தில் விஷாலுடனும் நடித்தார். சமீபத்தில் திரைக்கு வந்த `திருமகன்’ படத்தில், எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்து இருந்தார். இப்போது, `நேபாளி’ என்ற படத்தில் பரத் ஜோடியாக நடித்து வருகிறார்.

`நேபாளி’ படப்பிடிப்பு கடந்த மாதம் ஊட்டியில் நடந்தபோது, மீரா ஜாஸ்மின் அவசரமாக திருப்பதி போக வேண்டும் என்று டைரக்டர் வி.இசட்.துரையிடம் கேட்டார். “நீங்கள் இல்லையென்றால், படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டியிருக்கும். இதனால் பல லட்சங்கள் இழப்பு ஏற்படும்” என்று டைரக்டர் துரை கூறினார். “எப்படியாவது சமாளித்துக்கொள்ளுங்கள். இது என் வாழ்க்கை பிரச்சினை. நாளை காலை நான் திருப்பதியில் இருந்தாக வேண்டும்” என்று மீரா ஜாஸ்மின் கெஞ்சிக்கேட்டு, அவசரம் அவசரமாக திருப்பதி விரைந்தார்.

அவருடைய உதவியாளர்கள் நான்கு பேரையும் உடன் அழைத்து சென்றார். திருப்பதியில், கடந்த மாதம் 21-ந் தேதி மீரா ஜாஸ்மின் திடீர் திருமணம் செய்து கொண்டார். இதுபற்றிய செய்தி, `தினத்தந்தி’யில்தான் முதன் முதலாக வெளியானது. இந்த செய்தியை மீரா ஜாஸ்மின் மறுக்கவில்லை.

மீரா ஜாஸ்மினின் கணவர் பெயர், `மான்டலின்’ ராஜேஷ். இவருக்கும், மீரா ஜாஸ்மினுக்கும் கடந்த ஒரு வருடமாக காதல் இருந்து வந்தது. இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள். மீரா ஜாஸ்மின் எந்த ஊரில் படப்பிடிப்பில் இருந்தாலும், அந்த ஊருக்கு ராஜேஷ் சென்று விடுவார்.

உயிருக்கு உயிராக காதலித்து வந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். இந்த திருமணத்துக்கு, மீரா ஜாஸ்மின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

எதிர்ப்புகளை மீறி, மீரா ஜாஸ்மின் தனது காதலர் ராஜேசை கணவர் ஆக்கிக்கொண்டார். திருமணத்துக்குப்பின், இருவரும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள்.

இப்போது மீரா ஜாஸ்மின் ஒரு மலையாள படப்பிடிப்புக்காக கொல்கத்தா போய் இருக்கிறார். அங்கு ராஜேசும் சென்று இருக்கிறார். இருவரும் ஜோடியாக ஒரே ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள்.

இதற்கு முன்பு ரகசியமாக காதல் திருமணம் செய்துகொண்ட எல்லா நடிகைகளும் தங்கள் திருமணத்தை முதலில் மறைத்ததுபோல், மீரா ஜாஸ்மினும் தனது திருமணத்தை மறைத்து, ரகசியமாக வைத்து இருக்கிறார். விரைவில் அவர் தனது திருமணத்தை வெளியுலகுக்கு அறிவிப்பார் என்று தெரிகிறது.

——————————————————————————————–

எனக்கு திருமணம் நடக்கவே இல்லை – நடிகை மீரா ஜாஸ்மின் கொதிப்பு

இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷுடன் எனக்கு திருமணம் நடக்கவில்லை என்று நடிகை மீரா ஜாஸ்மின் ஆவேசமாக கூறினார்.

பிரபல நடிகை மீரா ஜாஸ்மினுக்கும், ஆந்திராவை சேர்ந்த மாண்டலின் கலைஞர் ராஜேஷுக்கும் திருப்பதியில் திருமணம் முடிந்து இருவரும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக செய்தி வெளியானது. ஆனால் இதனை மீரா ஜாஸ்மின் உறுதியாக மறுத்தார். ‘கொல்கத்தா நியூஸ்‘ என்ற மலையாளப்பட படப்பிடிப்புக்காக கொல்கத்தா வந்துள்ள மீரா ஜாஸ்மினை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது போது அவர் கூறியதாவது:

சாதாரண குடும்பத்திலிருந்து நடிக்க வந்த நான் கடுமையான உழைப்பாலும், திறமையாலும் தென்னிந்திய சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறேன். நான் எவ்வளவு வேகமாக வளர்ந்தேனோ அந்த அளவுக்கு பிரச்சினைகளையும் சந்தித்தேன்.

நான் ஒருவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன் குடும்பம் நடத்துவதாகவும் செய்திகள் வெளிவருவது புதிதல்ல. அதைபோலத்தான் இப்போதும் செய்தி வெளிவந்திருக்கிறது. என் மீது மீடியாக்களுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. என்னை நிம்மதியாகவே இருக்கவிட மாட்டேன் என்கிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘நேபாளிÕ படப்பிடிப்பில் இருந்து திருப்பதிக்கு போனது உண்மை. சாமி கும்பிட கோவிலுக்கு போவது தப்பா? உடனே அங்கு திருணம் நடந்தது என்பதா? திருப்பதியில் நேர்த்திகடன் நிறைவேற்ற வேண்டியது இருந்தது. அதற்காகத்தான் சென்றேன். மாண்டலின் ராஜேஷ் ஒரு நண்பர் மூலம் எனக்கு அறிமுகமானார் அவரது விழா ஒன்றுக்கு சென்றேன். உடனேயே அவருக்கும் எனக்கும் திருமணம் செய்து பார்த்து விட்டார்கள்.

நான் திருமணம் செய்யும்போது எல்லோருக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். ரகசிய திருமணம் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இனிமேலாவது என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள். இவ்வாறு மீரா ஜாஸ்மின் கூறினார்.

திருமணம் நடந்ததா என்பது குறித்து இசை கலைஞர் மாண்டலின் ராஜேஷ் தரப்பில் விசாரித்தபோது அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் கூறியதாவது:
மாண்டலின் ராஜேஷின் நண்பர் ஒருவர் மீராவுக்கும் நண்பர். அவரது ஏற்பாட்டின்படி கடந்த 20-ந் தேதி சென்னையில் நடந்த ராஜேஷின் இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் மீரா கலந்து கொண்டார். மற்றபடி ராஜேஷ§க்கும், மீராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இருவருக்கும் திருமணம் நடந்து விட்டது என்பதெல்லாம் வடிகட்டிய பொய் என்றார்.
“மீரா ஜாஸ்மின் குறைந்த அளவே படங்களில் நடித்திருந்தாலும் அவரை பற்றிய பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. முதலில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் லோகிததாஸுடன் நெருக்கமாக இருந்தார். அவருடன் குடும்பம் நடத்துவதாக செய்தி வெளியானது. சொத்து பிரச்சினை காரணமாக உறவினர்களை பிரிந்து கேரள முதல்வர் கலந்து கொண்ட விழாவில் கண்ணீர் விட்டு அழுதார் மீரா.

அதன் பிறகு நடிகர் பிருத்விராஜுடன் நிச்சயதார்த்தம் நடந்தாக கூறப்பட்டது. எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்தபோது அவருடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் வேளாங்கண்ணி கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக பேசப்பட்டது. இப்போது அதேபோல மாண்டலின் ராஜேஷுடன் திருமணம் செய்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது” என்கிறார் மீராவுக்கு நெருக்கமான இயக்குனர் ஒருவர்.

தமிழ்முரசு

————————————————————————————————–

Kumudam

Hot News: Meera Jasmine’s secret Marriage & Love Affair

01.08.07  சினிமா

‘மீராஜாஸ்மீன் கல்யாணம் பண்ணிக்கிட்டாரே?’ இதுதான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட்டாக கேட்கப்படும் கேள்வி.

அவருடன் கிசுகிசுக்கப்படும் நபர் சினிமாக்காரர் அல்ல, கர்நாடக இசைத்துறையைச் சேர்ந்தவர். ‘மாண்டலின்’ ஸ்ரீனிவாஸின் தம்பி ‘மாண்டலின்’ ராஜேஷ்தான் இந்த கிசுகிசுக்களின் ஹீரோ.

இந்த பரபரப்பிற் கிடையே ஒரு சம்பவம். பொதுவாய் மீரா ஜாஸ்மின் விழாக்களுக்கு அதிகம் செல்வதில்லை. சென்றவாரம் மங்களகரமாக ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். சினிமா நிகழ்ச்சி அல்ல, கர்நாடக சங்கீத நிகழ்ச்சி. ‘மாண்டலின்’ ராஜேஷின் கச்சேரி.

முன்வரிசையில் அமர்ந்து முழுநிகழ்ச்சியையும் பூரிப்புடன் ரசித்தார் மீரா. இந்தச் சம்பவம் பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.

‘‘இதெல்லாம் சும்மா கட்டுக்கதை. ஒரு நிகழ்ச்சிக்கு வந்ததை வச்சு காதல், கல்யாணம்னு சொல்றது தப்பு. முன்பு இப்படித்தான் மீராவை ஒரு இயக்குநருடன் இணைத்து கிசுகிசுத்தனர். இப்போது இந்த விஷயம்… பாவம்’’ என்று கேரளத்து மல்லிகைக்காக பரிதாபப்படுகிறார் அவரை நன்கு அறிந்த ஒருவர்.

இப்படி ஆளுக்கு ஆள் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண் டிருக்கும்போது இன்னொரு உஷ்ணச் செய்தியும் காதில் விழுந்தது. ஊட்டியில் பரத்துடன் மீரா ஜாஸ்மின் நடிக்கும் ‘நேபாளி’ படத்தின் ஷ¨ட்டிங். அங்கு மீராவைச் ‘மாண்டலின்’ ராஜேஷ் வந்தாராம். நீண்ட நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்களாம். அங்கிருந்துதான் திருப்பதி சென்று கல்யாணம் செய்து கொண்டார்கள் என்கிறது இன்னொரு கிசுகிசு. கேள்விப்பட்ட விஷயங்களை மீராஜாஸ்மினிடம் கேட்கலாம் என்றால், அவர் செல்ஃபோன் நமது தொடர்பு எல்லைக்கு வெளியேவே இருந்தது (உஷாரோ). ஆனால் அவருடைய நண்பர்கள் இந்தத் திருமணச் செய்தியை அடியோடு மறுக்கிறார்கள்.

‘‘நல்ல பொண்ணு சார். சத்தியமாக அவங்களுக்கு கல்யாணமாகலை’’ என்கிறார்கள்.

சினிமாக்காரர்கள் சொல்கிறார்கள். நம்புவோமாக!.

“நட்புதான்!”

இங்கு அங்கு என்று சுற்றி இறுதியில் மும்பையிலிருக்கும் ராஜேஷை தொடர்புகொண்டு, விஷயத்தை உடைத்தபோது மனிதர் சற்று பதறினார்.

‘‘சில மாதங்களுக்கு முன்பு தான் மீராவை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைச்சுது. அதிலிருந்து இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் பழகுறோம். அவருக்கும் மியூசிக்கில் ஆர்வம் இருப்பதால் என் நிகழ்ச்சிக்கு வந்தார். அவ்வளவுதான்! அதற்குள் காதல் கல்யாணம், கார்த்திகை, என்று கதை கட்டிவிடுவது நியாயமா? தவிர, திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. அப்புறம், ஒரு ஆணும், பெண்ணும் பழகினால் உடனே காதலா’’ என்று உலகின் முதல் காதல் மறுப்பு டயலாக்கோடு முடித்துக்கொண்டார்.

_ வி.சந்திரசேகரன், ராம்ஜெஸ்வி

Posted in Actress, Affair, Ajith, Anjaneya, Audio, Barath, Bharath, Calcutta, Cinema, Dhurai, Durai, Elope, Films, Freind, Friend, Function, Gossip, Heroine, Jasmine, Kerala, Kisukisu, Kolkata, Logidas, Lohidas, Lokidas, Love, Malayalam, Mandolin Rajesh, Marriage, Meera, Meera Jasmine, Mollywood, Movies, music, Nepaali, Nepali, Rajesh, Reception, release, Rumor, Rumour, Run, Sandakkozhi, Sandakozhi, SJ Soorya, SJ Surya, Soorya, Surya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Blog, Tamil Blogs, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Thirumala, Thirupathi, Thirupathy, Thurai, Tirumala, Tirupathi, Tirupathy, TTD, Vishaal, Vishal, VZ Durai, Wedding | Leave a Comment »

Cheran praises Mu Ka Azhagiri in Arima Association Meet

Posted by Snapjudge மேல் ஜூலை 24, 2007

தொல்லைக்காட்சிகளாக மாறிய தொலைக்காட்சிகள் பார்க்கும் ஆர்வம் குறைவதாக டைரக்டர் சேரன் வருத்தம்

மதுரை, ஜுலை.24- தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சியாக இருப்பதால் அவற்றை பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறது என்று சினிமா டைரக்டர் சேரன் கூறினார்.

அரிமா சங்க விழா

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய அரிமா மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவும், அரிமா சங்க பொன்விழாவும் மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடந்தது.இந்தவிழாவில், முன்னாள் பண்பாட்டு இயக்குனர் கோவை ராமசாமி கலந்து கொண்டு மதுரை மாவட்ட அரிமா கவர்னர் டி.பாண்டியராஜன் தலைமையிலான அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் சினிமா டைரக்டர் சேரன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மனப்போராட்டம்

இன்றைய சூழ்நிலையில் மனித வாழ்க்கையில் பல பிரச்சினைகள் எழுகின்றன. செல்போன்களாலும், தொலைக்காட்சிகளாலும், மனப்போராட்டம், கோபம் போன்றவை ஏற்படுகிறது.இப்போது டி.வி. பார்க்க கூட மக்களுக்கு ஆர்வம் இல்லை. அது தொல்லைக்காட்சியாக இருப்பதால் ஆர்வம் குறைந்துவருகிறது.

நல்ல சினிமா படங்கள் எடுத்தால் சில நேரங்களில் ஓடுவது இல்லை. ஆனால் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் எப்படியோ ஓடின.

ஒரு மனிதனுக்கு அவன் செய்யும் சமூக சேவைதான் நிம்மதியை தருகிறது. நாம் ஒதுக்கப்படும்போது சமூகத்தில் நம்மை அடையாளம் காட்ட தேவைப்படுவது தொண்டு தான். இதனால் பலன் பெற்றவர்கள் நம்மை மதிக்கும்போது எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் போன்ற உயர்ந்த பதவிகளை பெற்றது போன்ற மனபூரிப்பு ஏற்படுகிறது.

நான் டைரக்டு செய்த மாயக்கண்ணாடி படத்தின் கதாநாயகன் தோல்வியை மட்டுமே தழுவி வருவார். ஒருமுறை தனக்கு எந்த மாதிரியான திறமை உள்ளது என்று உணர்ந்து அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வார்.

வாழ்க்கையே பாடம்

நமக்கு தன்னம்பிக்கையை கொடுப்பது தொண்டு தான். காதல் இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் நட்பு இல்லாமல் வாழ முடியாது. எனவே தோழமை மிகவும் அவசியம். நான் சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தேன். ஆனால் அந்த இடத்தை பிடிக்க 10 ஆண்டுகள் ஆகியது. பல தியாகங்கள் செய்த பின்னர் தான் லட்சியத்தை அடைய முடிந்தது.

சேவை செய்ததன் மூலம் பெரிய மனிதர்களாகியவர்கள் தான் இந்த விழாவில் பங்கேற்று இருக்கிறார்கள். எனவே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சேவை செய்து நட்பை வளர்த்துக்கொள்ளக்கூடிய மனப்பான்மையை பெறவேண்டும்.

பட்டறிவு தான் ஒரு மனிதனுக்கு நல்ல பாடமாகும். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவர்களுக்கு பாடமாகும். நல்ல வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சேரன் பேசினார்.

விழாவில், குழு தலைவர் சங்கரலிங்கம், இணைத்தலைவர் ரவிச்சந்திரன், பன்னாட்டு இயக்குனர் நாகராஜன், மக்கள் தொடர்பு அதிகாரி சோமசுந்தரம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


:: Paraparapu Tamil Daily News :: – Connecting People Across the Web: “வைகோ ‘டூ’ அழகிரி- சேரன் அடித்த செம ‘பல்டி’!

முன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை வானுயர வாழ்த்திப் பேசிய இயக்குநர் சேரன், மதுரையில் நடந்த விழாவில் முதல்வரின் மகன் மு.க.அழகிரியை ‘வாய்க்கு வாய்’ அஞ்சா நெஞ்சன் என்று புகழ்ந்து ஆச்சரியப்படுத்தினார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிரசாரம் படு சூடாக நடந்து கொண்டிருந்தபோது, சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சேரன், வைகோவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

இந் நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மு.க.அழகிரியை பாராட்டிப் புகழாரம் சூட்டியுள்ளார். மதுரை அரிமா சங்க அமைச்சரவை பதவியேற்பு விழா ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதில் மு.க.அழகிரி, இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சேரன்,

தொண்டுகள் மூலம் சாதனை செய்த மனிதர்கள் தான் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர். யாரும் எடுத்த எடுப்பில் உயர முடியாது. படிப்படியாகத்தான் உயர முடியும். ஒரு மனிதன் வாழ்வில் உயர லட்சியம், தோழமை வேண்டும். காதல் கூட இல்லாமல் வாழ்ந்து விடலாம். ஆனால் நட்பு இல்லாமல் வாழவே முடியாது. பிறருக்கு சேவை செய்வதன் மூலமே நமது வாழ்க்கை உயரும். அஞ்சா நெஞ்சன் என்றால் அது ஒருவருக்குத்தான் பொருந்தும். அஞ்சாத உள்ளம், உள்ள உணர்வுடன் பிறருக்கு உதவக் கூடிய ஒருவரைத்தான் அஞ்சா நெஞ்சன் என்கிறோம்.

வெற்றிக்கு இலக்கணமாக நமது அஞ்சா நெஞ்சன் திகழ்கிறார். வார்த்தையால் பேசுவதை விட செயல்களில் காட்டி வருகிறார். அவரைப் போல அனைவரும் வெற்றி பெற வேண்டும். மாயக்கண்ணாடியாக இல்லாமல், மக்கள் முன் உண்மைக் கண்ணாடியாக உள்ளார் அஞ்சா நெஞ்சன் என்று சேரன் கூறிக் கொண்டே போக அழகிரியே ஒரு கட்டத்தில் நெளிந்துவிட்டார். வைகோவின் தீவிர பக்தராக அறியப்பட்டவரான சேரன், தடாலடியாக அழகிரியை வாய்க்கு வாய் புகழ்ந்து பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in Alagiri, Alakiri, Arima, Attend, Attendance, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Cheran, Cinema, Films, Function, Gossip, Kisukisu, Madurai, Mayakannaadi, Mayakannadi, Mayakkannaadi, Mayakkannadi, MDMK, Meet, Meeting, MK Alagiri, MK Alakiri, MK Azhagiri, MK Azhakiri, Movies, MuKa Alagiri, Party, Politics, Rumor, Rumour, Seran, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Blog, Tamil Blogs, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Meet, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Pictures, Tamil Theater, Tamil Theatres, Vambu, Vampu | Leave a Comment »

‘Kettavan movie is the story of Simbu-Nayanthara affair’ – Heroine Leka

Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2007

நயன்தாரா கதைதான் கெட்டவன் : சிம்புவுடன் ஜோடி சேர எதிர்ப்புகள்- புதுமுகம் லேகா சொல்கிறார்

வல்லவனுக்கு பிறகு சிம்பு நடிக்கும் புதிய படம் கெட்டவன். இப் படத்துக்கு சிம்புவே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நந்து இயக்குகிறார்.

கெட்டவனில் கதாநாயகி யாக புதுமுகம் லேகா நடிக்கிறார். இவர் எஸ்.எஸ்.மிïசிக்கில் பணியாற்றியவர். டெலிவிஷனிலும் சத்யம் தியேட்டரிலும் லேகாவை பார்த்த சிம்புவுக்கு பிடித்து போக கெட்டவனில் நாயகியாக்கி விட்டார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

நயன்தாராவுக்கும் தனக்கும் இருந்த தொடர்பு உலகறிந்த விஷயம் என்றும் சொந்த காதல்கதை கெட்டவன் படத்தில் இருக்கும் என்றும் சிம்பு கூறியிருந்தார்.

எனவே கெட்டவன் படம் நயன்தாரா கதை என்று பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் கெட்டவனில் சிம்புவுடன் ஜோடி சேர தனக்கு எதிர்ப்புகள் வந்ததாக லேகா கூறினார். அவர் அளித்த பேட்டி

சினிமாவில் நடிக்க ஏற்கனவே சிறுசிறு வாய்ப்புகள் வந்தன. அவற்றை மறுத்தேன். பெரிய கேரக்டர் கிடைத்தால் பண்ணலாம் என்று இருந்தேன். கெட்டவன் கதாபாத்திரம் நான் எதிர் பார்த்த மாதிரி இருந்தது. ஓகே சொல்லி விட்டேன். டெலிவிஷனில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நான் இருந்த போது என் மேனரிஸம் எப்படி இருந்ததோ அது சினிமாவில் இருக்காது முற்றிலும் வித்தியாசமாக தெரிவேன்.

சிம்பு ஜோடியாக நடிக் கிறேன் என்றதும் தமிழ்நாடு முழவதிலும் இருந்து எதிர்ப்புகள் வந்தன. பலர் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள். கெட்டவன் படம் சிம்புவின் நிஜக்கதைஅதில் உன்னுடைய கேரக்டர் நயன்தாரா உன்னை காதலித்து விட்டு இறுதியில் உன் இமேஜை கெடுத்து பழி வாங்குகிற கதை. எனவே அந்த படத்தில் நடிக்க சம்மதிக்காதே என்று பலர் வற்புறுத்தினார்கள். எவ்வளவு பணம் தந்தாலும் நடிக்காதே என்றும் அறிவுறுத்தினர்.

ஆனால் சிம்புவுடன் நடித்த போது அப்படி எதுவும் தெரியவில்லை. அவர் ஜென்டில்மேன் ஆக பழகினார். சிம்பு பற்றி கேள்விப்பட்டதற்கும் நேரில்பார்த்ததற்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லாமல் இருந்தது. எப்படி நடிக்கணும் என்று எனக்கு சொல்லி கொடுத்தார்.நிறைய உதவி செய்தார்சிம்புவை பிடிக்காதவர்கள் தான் அவருக்கு எதிராக இப்படிப்பட்ட செய்திகளை பரப்பி விட்டுள்ளனர்.

Posted in Actor, Actress, Cinema, Director, DJ, Films, Gossip, Heroine, Intro, Introduction, Kettavan, Kiss, Kisukisu, Lega, Leka, Love, Manmadhan, Manmathan, Media, Movies, MSM, music, Nandhu, Nanthu, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Rajendar, Rajender, Rajenthar, Rajenther, Rumor, Rumour, Sensational, Sensationalism, Silambarasan, Simbu, SS Music, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, Thamizh, Thamizh Film, Thamizh Movies, Thamizh padam, TR, Vallavan, Vambu, Vampu | 3 Comments »

Vijay incites Kreedam movie clashes? – Ajith fan club vs Trisha admirers

Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2007

oLiyile: Review: Kireedam (MalayaLam)

பூனையாக இல்லாமல் போன சோகங்கள்: கிரீடம் பெண்ணீய விமர்சனம்

குரல்வலை: கிரீடம்

கிரீடம் (2007) « Manoranjitam

செல்வேந்திரன்: தல’ தப்புமா…?!

செப்புப்பட்டயம்: கிரீடம் திரைவ�

வெட்டிப்பயல்: கிரீடம் – முள் கிரீடமா?

ராசபார்வை…: கிரீடம்!

சற்றுமுன்…: சென்னையில் திரையிட அஜீத்தின் `கிரீடம்’ படம் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை

Blogeswari: KIREEDAM: ORU KIZHISAL

BlogsOfRaghs :: பல்லவி & Charanam

Welcome to Sify.com

MSN INDIA – கிரீடம் – விமர்சனம்

சிவபாலன்: இவர்களைத் திருத்தவே முடியாதா!?

சும்மா டைம் பாஸ் மச்சி…..: ‘தல’க்கு அட்டகாசமாக பொருந்துகிறது கிரீடம்!

தமிழ் பூக்கள்: அஜீத்க்கு கிரீடம் சூட்டுமா ‘கிரீடம்’?

Mottaippaiyan: கிரீடம் விமர்சனம்

‘கிரீடம்’ – பாக்ஸ் ஆபிஸ் ஹிட்! :Sutharsan

Muthu’s Rambling Blog: Kireedam – Not what it means

Ultimate Star – Ajith Kumar Fans Club: Kreedam climax – behind the scenes

Blog with a Difference: Kireedam – Ajith’s Crown

Kreedam – Ajith hurts his back: Shooting gets affected « Tamil News: முதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை


அஜீத், திரிஷா ரசிகர்கள் மோதல்- தியேட்டர்களில் போலீஸ் குவிப்பு அஜீத், திரிஷா ஜோடியாக நடித்த கிரீடம் படம் இன்று ரிலீசானது. இதற்காக திரிஷா ரசிகர்கள் தியேட்டர்களில் கட்அவுட், பேனர் வைத்தனர். கொடி தோரணங்களும் கட்டினர்.அஜீத், ரசிகர்களும் போட்டி போட்டு பேனர் கட் அவுட் வைத்தார்கள். சில இடங்களில் திரிஷா, பேனர்கள் கிழிக்கப்பட்டன.திருவான்மிïரில் உள்ள ஒரு தியேட்டரில் அஜீத் ரசிகர்கள் 15 அடி உயர கட் அவுட் நிறுவினர். திரிஷா ரசிகர்களும் லாரியில் பேனர்களை கொண்டு வந்து இறக்கி தியேட்டரை சுற்றி வைத்தனர்.இதனால் இரு தரப்பு ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அஜீத் பேனர் வைக்க இடம் வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோஷமிட்டனர். திரிஷா பேனர்கள் கிழிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். ரசிகர் களை சமரசம் செய்தார்கள்.இது போல் `கிரீடம்’ ரிலீசான அனைத்து தியேட்டர்களின் வாயில்களிலும் ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள்.

திரிஷா பேனர்களை கிழித்தவர்கள் பற்றி புகார் அளிக்குமாறு திரிஷா ரசிகர் மன்றத்தினரிடம் போலீசார் கேட்டனர். ஆனால் அவர் கள் புகார் எதுவும் அளிக்க வில்லை. இதனால் அஜீத் ரசிகர்களை கைது செய்யாமல் விரட்டினர்.

அஜீத் ரசிகர் மன்ற தலைவர் கதிர் இது பற்றி கூறும் போது திரிஷா ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் மொத்தமே 5 ஆயிரம் பேர்தான் உள்ளனர். ஆனால் அஜீத் மன்றத்தில் 15 லட்சம் பேர் இருக்கிறார்கள். தமிழகத்தில் நடிகைகளுக்கு கட் அவுட் வைக்கும் பழக்கம் இல்லை. ஆனால் திரிஷா ரசிகர்கள் இடங்களை ஆக்கிர மித்து கட்அவுட் வைத்தனர். அஜீத் பேனர் வைக்க இடம் இல்லாமல் செய்து விட்டனர் என்று குறை கூறினார்.

திரிஷா ரசிகர் மன்ற தலைவி ஜெசி கூறும் போது சம்திங் சம்திங் படத்துக்கே நாங்கள் திரிஷாவின் பேனர் வைத் தோம். உதிரம் கொடுப்போம், உயிர்களை காப்போம், புகையிலை தடுப்போம், புற்று நோய் ஒழிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளைத்தான் நாங்கள் ஒட்டியுள்ளோம். புற்று நோய் தீமைகளை பொதுமக்களுக்கு விளக்கும் ஒரு விழிப்புணர்வாகத்தான் இந்த பேனர்களை அமைத்தோம். அவற்றை கிழித்து விட்டனர். என்று வருத்தப்பட்டார்.

அஜீத், திரிஷா ரசிகர்கள் மோதலை தொடர்ந்து கிரீடம் ரிலீசாகும் தியேட்டர் களில் இன்று போலீசார் குவிக்கப்பட்டனர். அஜீத், திரஷா பேனர்கள் கிழிக்கப்ப டாமல் கண்காணித்தனர்.
—————————————————————————————————————
ரசிகர்கள் மோதலின் பின்னணி

23 ஜூலை 2007

வழக்கமாக எதிரெதிரே இருக்கும் கதாநாயகர்களின் ரசிகர்களுக்கிடையேதான் பிரச்சினை ஏற்படும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக நடிகை த்ரிஷாவின் ரசிகர் மன்றமும் அஜீத்தின் ரசிகர் மன்றமும் முட்டிக் கொண்டிருக்கிறது.

`கிரீடம்’ படம் ரிலீஸை தொடர்ந்து சென்னை ஜெயந்தி தியேட்டரில் த்ரிஷா ரசிகர்கள் வைத்த பேனரை அஜீத் ரசிகர்கள் அகற்றச் சொல்ல பிரச்சினை எழுந்திருக்கிறது.

த்ரிஷா ரசிகர் மன்ற தலைவி ஜெஸி, நாங்கள் நல்ல நோக்கத்திற்காக மன்றம் வைத்திருக்கிறோம். ரத்ததானம், புற்றுநோய் விழிப்புணர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்தவே பேனர் வைத்தோம் என்றார்.

ஆனால் அஜீத் ரசிகர் மன்ற தலைவர் தேவா, இது நடிகர் விஜய்யின் தூண்டுதலால்தான் த்ரிஷாவின் பேனரை வைத்திருக்கிறார்கள் என்றார்.

விஜய், த்ரிஷா நடிக்கும் படம் வெளியாகும் தியேட்டரில் த்ரிஷா பேனரை வைக்கச் சொல்லுங்கள். விஜய் ரசிகர்கள் விட்டுவிடுவார்களா பார்ப்போம் என்று கொதித்து போய் பேசுகிறார்.

இருதரப்பும் இப்படி முட்டிக்கொள்ள அஜீத்தோ மஞ்சகாமாலையால் பாதிக்கப்பட்டு ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

—————————————————————————————————-

குமுதம் ரிப்போர்ட்டர்

29.07.07 ஹாட் டாபிக்

அடித்துக் கொண்ட அஜீத் – த்ரிஷா ரசிகர்கள்

– கிரீடத்தால் வந்த கிறுகிறு மோதல்

இரண்டு கதாநாயகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸானால், அன்றைய தினம் மேற்படி இரு ஹீரோக்களின் ரசிகர்களும், முட்டி மோதிக் கொள்வது ரொம்பவும் சகஜமான விஷயம்.

ஆனால், ஒரே படத்தினுடைய நாயகனின் ரசிகர்களும் நாயகியின் ரசிகைகளும் கட்_அவுட் வைப்பதில் முட்டல் மோதலில் ஈடுபடுவது கொஞ்சம் புதுசுதான்.

அஜித்_த்ரிஷா நடித்து வெளியாகியுள்ள ‘கிரீடம்’ பட ரிலீஸின் போதுதான் இப்படியரு களேபரம் அரங்கேறியிருக்கிறது. த்ரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் ஆங்காங்கே போஸ்டர் மற்றும் கட்அவுட்கள் வைக்க முயன்றபோது, அஜித் ரசிகர்கள் அதைத் தடுத்ததோடு, கிழித்து, அடித்தும் விரட்டி இருக்கிறார்கள்.

என்ன நடந்தது என்பதை நம்மிடம் விரிவாக விவரித்தார் த்ரிஷா நற்பணி மன்றத் தலைவி ஜெஸி.

‘‘ஆரம்பத்தில் நற்பணி மன்றம் அமைத்து பல நல்ல விஷயங்களைச் செய்ய முடிவெடுத்த நானும், என் சகோதரி எமியும் எங்கள் நற்பணிக்கு த்ரிஷா பெயரைப் பயன்படுத்த ஆசைப்பட்டோம். சில காலத்துக்கு முன்பு த்ரிஷா பற்றி மீடியாக்களில் வரும் செய்திகள் எல்லாம் தப்புத் தப்பாக இருந்தன. உண்மையில் அவர் குழந்தை மனம் படைத்தவர் என்பதை நாங்கள் நேரில் பழகும்போது தெரிந்து கொண்டோம். இங்குள்ள முன்னணி நாயகர்கள் பலருக்கு இல்லாத சமூக அக்கறை த்ரிஷாவுக்கு இருந்தது.

எங்களின் ஆர்வத்தைப் பாராட்டிய த்ரிஷாவிடம் புற்றுநோயின் கொடுமையைப் பற்றித் தெளிவாக எடுத்துச் சொன்னோம். எய்ட்ஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல கோடி மானியம் தருகின்றன. ஆனால் அதைவிட மோசமான நோயான புற்றுநோயை ஒழிக்கவும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் உலக சுகாதார மையம் மட்டுமே ஓரளவு உதவி செய்கிறது.

இந்த விவரங்களை த்ரிஷாவிடம் சொல்லி, நாம் புகையிலை மற்றும் புகைப் பழக்கத்தை எதிர்த்து பிரசாரம் செய்யலாமா என்று கேட்டதும், சந்தோஷமாக சம்மதம் தெரிவித்தார். அத்துடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்து, அங்குள்ள நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்ல விரும்பி அப்படியே செய்தார்.

எங்கள் மன்றம் ஆரம்பித்து ஒன்றரை வருடம்தான் ஆகிறது. இதுவரை 15 அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளோம். சுமார் பத்து மாணவர்களின் படிப்புச் செலவை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். மேலும், திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடியில் ஆதரவற்றோர் இல்லம் கட்ட இடம் வாங்கிப் போட்டிருக்கிறோம்.

இந்நிலையில், த்ரிஷா நடித்து வெளியாகும் படங்களின் போஸ்டர் மற்றும் பேனர்களில் புகையிலைக்கு எதிரான வாசகங்களைச் சேர்த்து வாழ்த்துத் தெரிவிக்க விரும்பினோம். த்ரிஷா நடித்து வெளியான ‘சம்திங் சம்திங்’ படம் வெளியானபோது, எங்கள் மன்றத்தின் சார்பில் முதன் முதலாக சில தியேட்டர்களில் கட் அவுட் வைக்கப் போனோம். இதற்கு ஜெயம் ரவி ரசிர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். நாங்கள் ஒட்டிய போஸ்டர் மீது ஜெயம் ரவி போஸ்டரை ஒட்டினார்கள். நாங்கள் உடனடியாக ஜெயம் ரவியின் அப்பாவிடம் போய் முறையிட்டோம். அவர் பேசி ரவியின் ரசிகர்களை சமாதானப்படுத்திவிட்டார்.

அதன்பிறகு இப்போது அஜித்துடன் த்ரிஷா நடித்த ‘கிரீடம்’ படம் வெளியான போதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்கள். கட் அவுட்டில் இருந்த எங்கள் மன்ற செல்போன் நம்பரில் பேசிய அஜித் ரசிகர்கள், த்ரிஷா பற்றி படுமட்டமாகப் பேசினார்கள். சில இடங்களில் எங்களைத் தாக்கியும் காயப்படுத்தினார்கள்.

முழுக்க முழுக்க சமுதாய விழிப்புணர்வு நோக்கில் செயல்படும் எங்களை அவமானப்படுத்திவிட்டதால் அப்செட் ஆகிவிட்டோம்!’’ என்றார் வேதனையுடன்.

நடந்த விவகாரம் பற்றி அஜித் தரப்பைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, ‘‘நான் சினிமாவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதுவரை என்னாலோ என் ரசிகர்களாலோ யாருக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்பட்டதில்லை. அதிலும் என் ரசிகர்கள் முழு கட்டுப்பாட்டுடன் எதிலும் எல்லை மீறாதவர்களாகவே வளர்ந்தவர்கள். ‘நான் கடவுள்’ படத்திற்காக கமிட் ஆகி, பாலாவால் ஏற்பட்ட பிரச்னை பற்றி குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த செய்தியைப் படித்துக் கொந்தளித்த என் ரசிகர்கள், எங்கேயாவது பிரச்னையை ஏற்படுத்தினார்களா? இல்லையே! அப்படிப்பட்டவர்கள் த்ரிஷா மன்றத்தினரைப் புண்படுத்தினார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் ரசிகர்கள் பெயரில் வேறு யாரோ செய்த சில்மிஷத்தை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கக்கூடும்.

இப்போது வெளிவந்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கிரீடம்’ பட தியேட்டர்கள் சிலவற்றில், விஷமிகள் சிலர் போய் கோரஸாக தொடர்ந்து குரல் எழுப்பி பார்வையாளர்களுக்குத் தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள். அவர்களை தியேட்டர் ஊழியர்கள் பிடித்து விசாரித்த தகவல் கிடைத்ததும், ‘யாரோ அவர்களைத் தூண்டிவிடுகிறார்கள். பாவம், விட்டு விடுங்கள்’ என்றேன். அதேபோல்தான் த்ரிஷா மன்றத்தினர் கூறுவதையும், பெரிதுபடுத்தாதீர்கள்’’ என்று அஜித் கூறியதாகச் சொன்னார்கள்.

இதையடுத்து த்ரிஷா தரப்பை அறிய அவரிடம் பேசிய போது, ‘‘இந்த ஃபீல்டில் ஹீரோவுக்கு இணையாக எந்த ஹீரோயினும் இருக்க முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஃபீல்டில் இருக்கும் குறுகிய காலத்தில் ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று யோசித்துச் செயல்படும் என் ரசிகர்களை யாருமே புரிந்து கொள்ளவில்லை.

சம்பந்தப்பட்ட படத்திற்கான வாழ்த்துச் செய்தியுடன் விழிப்புணர்வு வாசகங்களைச் சேர்த்து பேனர் வைக்க ஆசைப்பட்டோம். அதற்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும் எங்கள் கட்அவுட்டை எடுத்துவிட்டோம். இனி, இது போன்ற பிரச்னை வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட ஹீரோக்களுடன் நேரில் பேசலாம் என்று முடிவெடுத்தி ருக்கிறேன்!’’ என்றார் த்ரிஷா.

இவர்களின் விவகாரம் இப்படிப் போய்க்கொண்டிருக்கையில், நடிகைகளை இங்குள்ள நடிகர்கள் நசுக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழ ஆரம்பித்துவிட்டது.

பெயர் கூற விரும்பாத ஒரு ஹீரோயினியிடம் பேசும்போது, ‘‘கோலிவுட்டைப் பொறுத்தவரை எல்லா ஹீரோயின்களையும் டம்மியாகப் பார்ப்பதே இங்குள்ள ஹீரோக்களின் போக்காக இருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் ‘சிவாஜி’ படத்தில்கூட ஓர் அழகான ஸ்ரேயாவும் இருப்பதால்தான் ரசிக்கிறார்கள். ஆனால், ஸ்ரேயா பற்றி யாருமே பாராட்டி கருத்துச் சொல்வதில்லை. இது ஆணாதிக்கம் மட்டுமல்லாமல் அதற்கும் மேலானது என்றுதான் சொல்ல வேண்டும்!’’ என்றார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்து நம்மிடம் பேசிய பிரபலமான ஹீரோ ஒருவர், ‘‘கோலிவுட்டைப் பொறுத்தவரை ஹீரோக்கள்தான் எல்லாமே. அவர்களை வைத்துத்தான் ஒட்டுமொத்த வியாபாரமும் நடக்கிறது. ஒருபோதும் ஹீரோயின் தனித்து ஜெயிக்க முடியாது. அதைப் புரிந்து கொண்டு த்ரிஷா போன்ற நடிகைகள் அடக்கி வாசிப்பது அவர்களுக்கு நல்லது’’ என்றார் காட்டமாக.

இப்படி ஆளாளுக்குச் சொன்ன விஷயங்களைப் பற்றி குஷ்புவிடம் பேசி கருத்துக் கேட்டபோது, ‘‘நடந்த சம்பவங்களுக்கு அஜித் அல்லது த்ரிஷா காரணமாக இருக்க மாட்டார்கள். அவர்கள் பெயரை வைத்து யாரோ சிலர் செய்த கலாட்டாவால் ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கு எந்தக் கேடும் வந்து விடாது.

அஜித்திற்கு இணையாக அல்லது போட்டியாக த்ரிஷா ஒருபோதும் ஆகமுடியாது என்பதை த்ரிஷாவே புரிந்து வைத்திருப்பார். ஹீரோவின் லெவல் வேறுதான். என்றாலும் ஹீரோயின் இல்லாமல் எந்த ஹீரோவாவது ஒரு படமெடுத்து வெற்றியடைய வைக்க முடியுமா என்பதையும் யோசிக்க வேண்டும்!’’ என்றார் கூலாக. ஆக கிரீடம், கோலிவுட்டில் ஒரு புது சர்ச்சைக்கு முடி சூட்டியிருக்கிறது. ஸீ

– வி.குமார்

———————————————————————————————————
அஜீத் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிறார்- மாற்றப்பட்ட `கிரீடம்’ கிளைமாக்ஸ் கதை

அஜீத்குமார் நடித்த “கிரீடம்” படம் தற்போது வெளியாகி ஓடிக் கொண்டி ருக்கிறது.

இதில் அஜீத் ஜோடியாக திரிஷாவும் தந்தையாக ராஜ் கிரணும் நடித்துள்ளனர்.

போலீஸ் ஏட்டு கேரக்டரில் நடிக்கும் ராஜ்கிரண் மகன் அஜீத்தை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக்க கனவு காண்கிறார். உடற்பயிற்சி யெல்லாம் கற்றுக் கொடுத்து போலீஸ் வேலைக்கு தகுதி யாக்குகிறார்.

போலீஸ் வேலைக்கான `இண்டர்விï’வில் அஜீத்தும் தேர்வாகிறார். ஆனால் திடீர் திருப்பமாக அஜீத் ஒரு தாதாவுடன் மோதி ரவுடி யாகிறார். கிளைமாக்சில் தாதாவை கொன்று விட்டு ஜெயிலுக்கு போகிறார்.

இந்த கிளைமாக்ஸ் அஜீத் ரசிகர்கள் இடையே அதி ருப்தியை ஏற்படுத்தியது. விமர் சனங்களும் கிளம்பின.

இதையடுத்து கிளைமாக்ஸ் மாற்றப்பட்டுள்ளது. பத்திரிகை விமர்சனங்கள், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதாக பட அதிபரும், நடிகருமான கே.பாலாஜி தெரிவித்தார். மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் கதை வருமாறு:-

தாதாவை அஜீத் கொன்ற தும் போலீஸ் சப்- இன்ஸ் பெக்டராகும் கனவு தவிடு பொடியாகி விட்டதை உணர்ந்து அஜீத் அழும் காட்சி கள், பிறகு அஜீத்தை ராஜ் கிரண் கைது செய்யும் காட்சி கள் நீக்கப்பட்டுள்ளன.

தாதாவை கொன்றதும் பின்னணியில் கோர்ட் சீன் குரல் சேர்க்கப்பட்டுள்ளது. அஜீத் சட்டத்துக்கு முன் குற்றவாளியாக இருந்தாலும் கொல்லப்பட்டவர் கிரிமினல் என்பதை கருத்தில் கொண் டும் பொதுமக்கள் ணீகோரிக் கைகளை ஏற்றும் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப் படுகிறது. அவரை போலீஸ் வேலையில் சேர்த்துக் கொள்ளவும் கோர்ட் பரிந் துரைக்கிறது என்று நீதிபதி குரல் எதிரொலிக்கிறது.

பிறகு அஜீத் சப்- இன்ஸ்பெக்டர் உடையுடன் வருகிறார். அவரை பார்த்து ராஜ்கிரண் `சல்ïட்’ அடிக் கிறார். கனவெல்லாம் நன வாதே என்ற பாடல் ஒலிக்க படம் முடிகிறது.

ஒரு படம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் போது `கிளைமாக்ஸ்’ காட்சிகள் மாற்றப்படுவது அபூர்வ மான விஷயம் என்பது குறிப்பிடத் தக்கது. இதை ரசிகர்கள் வர வேற்றுள்ளனர்.

Posted in Actor, Actress, Admirer, Ajeeth, Ajith, Ajithkumar, Appreciation, Ardent, Asin, Banner, Burn, Chandrasekar, Chandrasekhar, Cinema, clash, Clubs, Craze, Cut-out, Cutout, Defame, Devotee, Effigy, Enthusiast, Fanatic, Fans, Films, Flag, Freak, Hoarding, Incite, Jassy, Jessie, Kireedam, Kiridam, Kreedam, Kridam, Love, Maniac, Movies, Nut, Passion, Protest, SA Chandrasekar, SA Chandrasekhar, Shoba, Shobha, Soorya, Star, support, Supporter, Surya, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Thala, Thrisha, Torn, Trisha, Vijai, Vijay, Zealot | 1 Comment »

The woes of a Tamil Cinema Producer – GV Films shoots off balance sheets

Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007

யாரைத்தான் நம்புவதோ?

ஜீ.வி. பிலிம்ஸ் நிறுவனம், புதிய படங்களை எடுப்பதோடு, பழைய கடன்களையும் பைசல் செய்து வருகிறது.

கம்பெனிக்கு வரும் இயக்குனர்களை முழுதாய் நம்பி, “முதல் பிரதி’ அடிப்படையில் படம் தயாரித்து வருகிறார்கள்.

“கைவந்த கலை’ படத்துக்கு பாண்டியராஜன் கொடுத்த பட்ஜெட்டைவிட பத்து லட்சம் அதிகம் செலவானதாம்!

அடுத்து ஜீவாவின் (சமீபத்தில் மறைந்த இயக்குனர்) உதவியாளர் சங்கர் கே. என்பவர் ஐம்பது லட்சம் செலவில், “திருடி’ என்ற படத்தை எடுப்பதாகக் கூறி ஒரு கோடி வரை செலவை இழுத்துவிட்டாராம்.

ஜீ.வி. பிலிம்சுக்கு, இப்போது “உற்சாகம்’ என்ற படத்தை இயக்கிவரும் ரவிச்சந்திரன் (ஏற்கெனவே, கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்த வேளை, மஜ்னு படங்களை இயக்கியவர்) அனுபவம் உள்ள டைரக்டர் என்பதால் அவர் கேட்ட பட்ஜெட்டை கொடுத்து உதவினர் தயாரிப்பாளர்கள். ஆனால், ரவிச்சந்திரன் கொடுத்த பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவழித்து படத்தை உருவாக்கி இருக்கிறாராம்.

பழைய இயக்குனரும் கொடுத்த பட்ஜெட்டைக் காப்பாற்றவில்லை. புதிய இயக்குனரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. யாரைத்தான் நம்புவதோ என்று நேர்மையாக புலம்புகிறது தயாரிப்பு தரப்பு.

Posted in Budget, Cinema, Director, Economic, Expenses, Films, Finance, Flop, Gossip, GV, Hit, Jeeva, Kai Vantha Kalai, Kisukisu, Loss, Majnu, Manirathanam, Manirathnam, Maniratnam, Movies, Pandiarajan, Pandiyarajan, Profit, Ravichandran, Rumour, Rumours, Shankar, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Blogs, Tamil channels, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Magaizine, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, Thirudi, Urchagam, Urchakam, Venkatesvaran, Venkateswaran, Woes | Leave a Comment »

Thamil Cinema Association not to support Tamil Actresses: Why?

Posted by Snapjudge மேல் மே 22, 2007

ஸ்ரேயாவுக்கு நெருக்கடி!

சென்னை, மே 23: நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளாத நடிகர், நடிகைகளின் பட சம்பந்தமான பிரச்னைகளில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் தலையிடாது என அச்சங்கங்கள் முடிவுசெய்துள்ளன.

இதையடுத்து ஸ்ரேயா, ஜோதிர்மயி உள்ளிட்ட பல நடிகைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம்:

நடிகர் சங்கத்தில் தற்போது 3500 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 700 பேர் ஆயுள்கால உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர் கட்டணமாக ரூ.2000 வசூலிக்கப்படுகிறது.

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இன்னும் நடிகர் சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளவில்லை.

ஆனால் தாங்கள் நடிக்கும் படங்களில் சம்பளப் பிரச்னை உள்ளிட்ட இதர பிரச்னைகளுக்காக அவர்கள் நடிகர் சங்கத்தையே நாடுகிறார்கள்.

உறுப்பினராக இல்லாமல் தங்களுடைய பிரச்னைகளுக்கு மட்டும் சங்கத்தை நாடும் நடிகர், நடிகைகள் மீது பல ஆண்டுகளாக உறுப்பினர்களாக உள்ளவர்களும், நடிகர் சங்க நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர். ஆனாலும் இவர்களில் பலருக்கு சம்பளப் பிரச்னை ஏற்பட்ட போது நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் அவற்றை சுமுகமாக தீர்த்துவைத்துள்ளன.

முன்னணி நடிகைகளான

  • ஸ்ரேயா,
  • ஜெனீலியா,
  • ஜோதிர்மயி,
  • தமன்னா,
  • நவ்யா நாயர்,
  • சிந்துதுலானி,
  • நடிகர் ஜீவன் உள்ளிட்ட பலர் சங்கத்தில் இன்னும் உறுப்பினராகாமல் உள்ளனர்.

ஆனால் இனி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு அளிப்பது என்றும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் நடிகர் சங்கம் முடிவுசெய்துள்ளது. இதைத் தயாரிப்பாளர் சங்கத்திடமும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கூறியதாவது:

அனைத்து நடிகர், நடிகைகளும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். உறுப்பினர் அல்லாத பலருக்கு இதுவரை பல பிரச்னைகளில் இரண்டு சங்கங்களும் துணையாக இருந்துள்ளன.

இனி வரும் காலகட்டங்களில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு தர முடிவு செய்திருக்கிறோம். நடிகர், நடிகைகள் உறுப்பினர் கட்டணமாகத் தரும் தொகையை மூத்த மற்றும் நலிவுற்ற கலைஞர்களின் நலனுக்காகத்தான் பயன்படுத்துகிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்று பலர் தங்களை உறுப்பினர்களாகப் பதிவுசெய்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் உயர வேண்டும்.

Posted in Actress, Association, Compensation, Dues, Geneelia, Genelia, Geneliya, Issues, Jeevan, Jeneelia, Jenelia, Jeneliya, Jodhirmayee, Jodhirmayi, Jothirmayee, Jothirmayi, Member, Navya, Navya Nayar, Raama Narayan, Raama Narayanan, Rama Narayan, Rama Narayanan, Salary, Shreya, Shriya, Sindhu Dholani, Sindhu Dolani, Sreya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Theater, Tamil Theatres, Thamanna, Union | Leave a Comment »

Raj TV’s ‘Kalainjar Television’ Launch – Is it against Maran brothers’ Sun TV?

Posted by Snapjudge மேல் மே 22, 2007

ராஜ் டிவியில் “கலைஞர் டிவி’

சென்னை, மே 22: சன் டிவி நிறுவனத்தாருடன் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து, தனியாக ஒரு தமிழ் டிவி சானலைத் தொடங்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

ராஜ் டிவி மூலமாக இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது திமுக. “கலைஞர் டிவி’ என்ற பெயரில் இந்த சானல் விரைவில் தொடங்கப்படும் என்று ராஜ் டிவி நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறினார்.

புதிய சானலை தொடங்குவதில் தி.மு.க.வுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ராஜேந்திரன் மறுக்கிறார். எனினும் இந்த சானலுக்கு “கலைஞர் டிவி’ என்று பெயர் வைத்ததில் இருந்தே இதற்குப் பின்னணியைத் தெரிந்து கொள்ளலாம் என்று டிவி வட்டாரங்கள் தெரிவித்தன.

கலைஞர் என்ற பெயர் திமுக தலைவரைக் குறிக்கவில்லை. கலை உலகத்தைச் சேர்ந்த கலைஞர்களைக் குறிப்பிடும் வகையில்தான் கலைஞர் டிவி என்று பெயர் வைத்திருப்பதாக ராஜேந்திரன் கூறுகிறார்.

இந்த டிவி சானலுக்காக தி.மு.க. தரப்பில் இருந்து முதலீடு இருக்கக் கூடும் என்றும் பங்குகள் மூலமாக இந்த முதலீடு இருக்கலாம் என்றும் பங்கு வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.

ராஜ் டிவி உரிமையாளர் இதையும் மறுக்கிறார். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பங்கு விற்பனையில் திரட்டப்பட்ட பணத்தில் இப்புதிய சானலைத் தொடங்குகிறோம் என்றார் அவர்.
புதிதாக டிவி நிறுவனத்தை உடனே தொடங்கும் அளவுக்கு தி.மு.க.வுக்கு அனுபவம் இல்லை. எனவேதான் ராஜ் டிவி உதவியோடு புதிய சானலை திமுக தொடங்குவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கலைஞர் டிவி தொடங்கப்படுவது குறித்து முதல்வர் கருணாநிதியின் 84-வது பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஆகஸ்ட் 15 ம் தேதியிலிருந்துதான் முழுமையான ஒளிபரப்புத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக 11 டிவி சானல்களை தொடங்கப்போவதாக ராஜ் டிவி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதில் 2 சானல்களையாவது உடனே தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற முதல்வர் கருணாநிதி மூலம் முயற்சிப்பதாகவும் தெரிகிறது.

திமுக தரப்பு செய்திகளையும் தமிழக அரசின் செய்திகளையும் உடனுக்குடன் ஒளிபரப்ப சன் டிவியை திமுக நம்பியிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் கலாநிதி, சன் டிவியையும், தினகரன் பத்திரிகையையும் நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தாருடன் கருணாநிதி குடும்பத்தினருக்கு சமீபத்தில் மோதல் ஏற்பட்டுவிட்டது.

எனவே இனிமேல் சன் டிவியை சார்ந்திருக்காமல் இருக்கவே கலைஞர் டிவி தொடங்கப்படுவதாகவும், இந்த சானல், செய்திக்கு முக்கியத்துவம் தரும் சானலாக இருக்கும் என்றும் தெரிகிறது. அதே நேரத்தில் 24 மணி நேர செய்தி சானலைத் தொடங்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ராஜ் டிவி நிறுவனத்திடம் தற்போது இல்லை.

புதிதாக வர இருக்கும் கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சிகளை தருமாறு, சன் டிவியில் மாலை நேரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் இரு தனியார் நிறுவனங்களிடம், பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
================================================================

ஏறுமுகத்தில் ராஜ் டி.வி. பங்குகள்

சென்னை, மே 22: ராஜ் டிவி நிறுவனத்தின் பங்குகள் சில நாள்களாக ஏறுமுகத்தில் உள்ளன.

மே 14-ம் தேதி ராஜ் டி.வி.யின் பங்கு விலை ரூ. 188.65 ஆக இருந்தது. அடுத்த நாளில் ரூ. 226.40-க்கு உயர்ந்தது. மே 16-ம் தேதி ரூ. 250.40 ஆனது.

ஆனால் அடுத்த நாளே பங்கின் விலை சற்று குறைந்து ரூ. 239.15 என விற்பனையானது. வாரத்தின் இறுதி நாளான மே 18-ம் தேதி ராஜ் டி.வியின் பங்கு ரூ. 248.45-க்கு விலை போனது.

மே 12-ம் தேதியன்று சட்டப் பேரவையில் நடைபெற்ற முதல்வர் பொன்விழா நிகழ்ச்சிகளை ராஜ் டி.வி. நேரடியாக ஒளிபரப்பியது. அதைத் தொடர்ந்து தீவுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ராஜ் டி.வியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ராஜ் டி.வி.யின் பங்கு விலை உயர்வுக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் திமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ராஜ் டி.வி.யின் பங்குகளை வாங்கிவிட்டதாக சந்தை வட்டாரத்தில் பேச்சு எழுந்ததும் பங்கு விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

திங்கள்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் சரிவைச் சந்தித்த முன்னணி நிறுவனப் பங்குகளில் சன் டி.வி. நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சன் டி.வி. குழுமத்தின் பங்குகளில் 90 சதவீதம் அதன் தலைவர் கலாநிதி மாறன் வசமே உள்ளது.

மே 14-ம் தேதியன்று சன் டி.வி. பங்குகளின் விலை கிடுகிடுவென சரிந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 1,603-லிருந்து ரூ. 1,534.50 ஆகக் குறைந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 68.50 குறைந்தது.

அதைத் தொடர்ந்து மே 16-ம் தேதி ரூ. 1474.20 ஆகவும் மே 17-ம் தேதி ரூ. 1,477 ஆகவும் குறைந்தது. மே 18-ம் தேதி பங்கின் விலை சற்று அதிகரித்து ரூ. 1,521.50-ஐ எட்டியது. இந்த வாரம் திங்கள்கிழமை சந்தையில் சன் டி.வி. பங்குகள் ரூ. 1,471.50 விலைக்கு விற்பனையானது.

———————————————————————————————————

கருணாநிதி- ராதிகா “திடீர்’ சந்திப்பு: கலைஞர் டி.வி.யில் ராடான் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு?

சென்னை, மே 23: அதிக தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து முன்னணியில் உள்ள ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் ஆக.15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கு கலைஞர் டி.வி. என பெயர் சூட்டப்படும் என தெரிகிறது.

ராஜ் டி.வி.யுடன் இணைந்து கலைஞர் டி.வி. செயல்படும் என்றும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய அதிக தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து அவற்றை சன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பி “டி.ஆர்.பி ரேட்’ எனப்படும் அதிக விளம்பர வருவாய் ஈட்டும் நிறுவனமாக விளங்கும் ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டுள்ளது.

கருணாநிதி-ராதிகா சந்திப்பு: முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ராடான் நிறுவன உரிமையாளர் நடிகை ராதிகா, செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தார்.

சுமார் 45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது, கலைஞர் டி.வி.யில் ராடான் டி.வி. யின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ராதிகா பேட்டி: இச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா கூறியது:

சன் டி.வி.யில் இருந்து ராடான் வெளியேறவோ அல்லது வெளியேற்றப்படவோ இல்லை. புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளதால் அதுகுறித்து தான் அவருடன் பேசினேன்.

நீண்ட நாள்களாக முதல்வரை நான் சந்திக்கவில்லை. எனது தந்தை நடிகர் “எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழா’ விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அதுகுறித்து தான் முதல்வரிடம் அதிக நேரம் ஆலோசனை நடத்தினேன் என்றார்.

இருப்பினும், கலைஞர் டி.வி.யில் ராடான் நிறுவன நிகழ்ச்சிகளை மாற்றவே இந்த சந்திப்பு நடந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருபவர் ராதிகா. கருணாநிதியை “அப்பா’ என்றே அழைக்கக் கூடியவர். தனது கணவர் சரத்குமார், திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக சென்றபிறகும் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருகிறார் ராதிகா.

அதனால், கலைஞர் டி.வி.யில் தனது தயாரிப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் வியாபார நோக்கில் முன் யோசனை உள்ள ராதிகா, சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இந்த புதிய டி.வி.க்கு மாற்றினால், மற்ற சன் நெட்வொர்க் டி.வி. களில் ஒளிபரப்பாகும் தனது நிகழ்ச்சிகள் நிச்சயம் பாதிக்கப்படும் என்பதையும் உணர்ந்து வைத்துள்ளார்.

அதனால், கலைஞர் டி.வி.க்கு தனியாக புதிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் டி.வி.யின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கலைஞர் டி.வி.யில் சேர்ந்துள்ளதாகவும், மேலும் சன் டி.வி.வில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை ஈர்க்கவும் கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
———————————————————————————————————

“கலைஞர் டிவி’: கருணாநிதி அறிவிப்பு

சென்னை, மே 23: புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 15 முதல் ஒளிபரப்பை தொடங்கும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

புதிய டிவி “கலைஞர் டிவி’ என்று அழைக்கப்படும் என்பதையும் அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

சன் டிவி குழுமத்துடன் மோதல் ஏற்பட்டதை அடுத்து திமுகவின் கொள்கைகளை, செயல்பாடுகளை, அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இந்த புதிய டிவி தொடங்கப்படுகிறது.

புதிய டிவி திமுக சார்பில் நடத்தப்படாது என்பதை கருணாநிதி தெளிவுபடுத்தி உள்ளார். இருப்பினும் திமுகவின் பிரசார பீரங்கியாகவே புதிய டிவி செயல்படும் என்று தெரிகிறது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்காக ஆகஸ்ட் 15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்கப்படும். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 3-ம் தேதி வெளியிடப்படும். புதிய தொலைக்காட்சியில் பணிபுரிய நல்ல அனுபவம் பெற்றவர்கள் முன்வந்துள்ளனர். அந்த தொலைக்காட்சி கட்சியின் (திமுக) சார்பில் நடத்தப்படுவதல்ல. அந்த தொலைக்காட்சிக்கு என்னுடைய பெயர் சூட்டப்படுகிறதா என்று என்னிடம் கேட்டபோது, பல பேர் அவ்வாறு விருப்பப்படுகிறார்கள் என்று நான் கூறினேன்.

சன் டிவிக்கு நெருக்கடியா?

சன் டிவியை வேறு இடத்துக்கு மாற்றிச் செல்லும்படி யாரும் எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் சில பத்திரிகைகள்தான் அவ்வாறு இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு வருகின்றன என்றார் கருணாநிதி.

————————————————————————————————

உதறலெடுக்கிறது சன் டிவிக்கு!!!


தனது அறுபதாண்டுகால பொது வாழ்க்கையில் துரோகிகளையும், எதிரிகளையும் உரிய நேரத்தில் அடையாளம் கண்டு, எதிர்கொண்டு, வீழ்த்தி வெற்றிவாகைசூடிய கலைஞர், கடந்த சில நாட்களாக சொந்த பந்தங்களிடமிருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் கலங்கி நிற்கிறார்.’ _கலைஞருக்கு நெருக்கமான மூத்த அமைச்சரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவை!

இதை உறுதிப்படுத்தும் விதமாக கலைஞர் எழுதிய, விரக்தியும், ஆதங்கமும் நிறைந்த கவிதைகள் முரசொலியில் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. என்ன நடக்கிறது தி.மு.க.வுக்குள்ளும், கலைஞரைச் சுற்றியும்….?

‘தினகரன்’ நாளிதழ் விவகாரத்தைத் தொடர்ந்து தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் கட்சியிலிருந்தும் நீக்கப்படும் நிலையில் இருக்கிறார். சர்ச்சைக்குரிய சர்வே வெளிவந்ததற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், கலாநிதி மாறன் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நேரடித் தொடர்பில்லாத தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை நியாயப்படுத்தும் வகையில், தமிழக அரசின் உள்துறைச் செயலாளரை தயாநிதி மாறன் மிரட்டியதாகக் காரணமும் சொல்லப்பட்டது.

‘உண்மையான காரணம் அதுவல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது உள்ளூர நடந்து வந்த நிழல் யுத்தத்தின் முடிவுதான் இது’ என்ற முன்னுரையோடு சில பின்னணித் தகவல்களை விளக்குகிறார்கள், கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமான தி.மு.க. முன்னோடிகள் சிலர்.

தி.மு.க. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர்களுக்குக் கணிசமான பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கட்சி நிதி தவிர, இதில் கணிசமான பணத்தை தயாநிதி மாறனே தன் சொந்த முயற்சியில் திரட்டி விநியோகித்தார் என்றொரு தகவலும் உண்டு. அத்தோடு நிற்காமல், யதார்த்தமான பேச்சு வழக்கோடும், சிரித்த முகத்தோடும் மேடைகளில் வலம் வந்த தயாநிதி, தி.மு.க.வின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார் என்பதை, எந்த தி.மு.க. தொண்டனும் மறுக்க மாட்டான்.

தயாநிதியின் இந்தச் செயல்பாடுகள் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற இலக்கோடு அமைந்ததால், கலைஞர் மட்டுமல்ல.. மாறன் சகோதரர்களை ஒருவித சந்தேகக் கண்ணோடு பார்த்து வந்த ஸ்டாலின், அழகிரி ஆகியோரும் கூட ரசித்து, ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள். இதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்தன.

தேர்தல் முடிந்து, ஆட்சி அமைந்த சில மாதங்களில் சில மாவட்டச் செயலாளர்களைத் தொடர்பு கொண்ட தயாநிதி மாறன், மாவட்டம் தோறும், கட்சி அலுவலகங்களை நவீன வசதிகளுடன் அமைத்துத் தர தான் தயாராக இருப்பதாகச் சொன்னார். அத்துடன் மாவட்டச் செயலாளர்களுக்கு வாகன வசதியும், ஒன்றியம் தோறும் சிறிய அளவிலான கட்சி அலுவலகங்கள் அமைக்கவும் அவர் திட்டம் வைத்திருந்தார்.

சில மாவட்டச் செயலாளர்கள் மூலம் ஸ்டாலினுக்கு இந்த விஷயம் தெரியவர… ஒரு கட்டத்தில் கலைஞரின் காதுகளுக்கும் இந்த விஷயம் எட்டியதாகத் தெரிகிறது. ஓர் அவசர ஆலோசனைக்குப் பின் தயாநிதி மாறன் அளிக்க முன்வந்த உதவியையும் வசதியையும் புறக்கணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள் மாவட்டச் செயலாளர்கள். ‘இது கட்சிக்கு உதவி செய்வதற்கான யோசனை அல்ல…. கொஞ்சம் கொஞ்சமாக கட்சியையே கைப்பற்றுவதற்கான திட்டம்’ என்று ரத்த உறவுகளிடம் இருந்து வந்த கருத்துக்களைத் தொடர்ந்தே தயாநிதியின் உதவி ஏற்க மறுக்கப்பட்டது.

இதுதவிர, கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலர், ஆட்சி அமைந்த பின்பு தங்களின் வருத்தத்தை வெளியிட அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்த தயாநிதி, ‘உரிய’ உதவிகளை அவர்களுக்குச் செய்து தந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் தயாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடுகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தது அறிவாலய வட்டாரம். அதே நேரம் தயாநிதியின் செல்வாக்கு கட்சிக்குள் வேகமாகப் பரவி வருவதையும் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.

‘இதன் தொடர்ச்சியான நடவடிக்கையாகத்தான் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி, அதன் மூலம் பலனடையும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்’ என்ற வாதத்தை கலைஞர் ஏற்றுக் கொண்டதுதான் தயாநிதியின் தடாலடி நீக்கத்திற்குக் காரணம்!’ என்கிறார்கள் அந்தத் தலைவர்கள்.

தயாநிதியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட கணத்தில் இருந்தே… கலைஞருக்குப் பிறகு யார் என்ற கேள்வியும், அதற்கான பதிலும் உரக்க ஒலிக்கத் தொடங்கிவிட்டது. கலைஞரின் குடும்பத்திற்குள் ‘ஸ்டாலினை உங்கள் இடத்தில் அமர வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் தாமதிக்க வேண்டாம். உடனடியாக அதை நிறைவேற்றுங்கள்’ என்று கலைஞருக்கு குடும்பத்தின் விஸ்வரூப நெருக்கடிகள் அதிகமாக ஆரம்பித்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்.

அதற்குக் காரணமும் இருந்தது. சமீபத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசிய பொன்முடி, பழனிமாணிக்கம் போன்றவர்கள், கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான் தலைமையேற்க வேண்டும். அவர்தான் தகுதியான தலைவர் என்கிற ரீதியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். ஆனால், கடைசியாகப் பேசிய பேராசிரியர் அன்பழகன், ‘கலைஞரை வைத்துக் கொண்டு, அவருக்குப் பிறகு யார் என்று பேசக்கூடாது. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று, ஒருவித விரக்தியில் பேசினார்.

பேராசிரியரின் இந்தப் பேச்சுத்தான் கோபாலபுரத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி விட்டது என்கிறார்கள், அந்த வட்டாரத்தில். ‘நீங்கள் இருக்கும்போதே ஸ்டாலினை முழுமையாக ஏற்கமாட்டார்கள் போல் தெரிகிறது. உங்களுக்குப் பின்னால் பிரச்னையின்றி ஸ்டாலின் ஆட்சிப்பீடத்தில் அமர முடியுமா என்பது சந்தேகமே. எனவே, உங்கள் பிறந்தநாளான வரும் ஜூன் 3 அன்றே அதிகார மாற்றத்திற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்’ என்று தயாளு அம்மாள், அழகிரி உள்ளிட்ட கலைஞரின் ரத்த உறவுகள் நெருக்கடி தந்திருப்பதாகச் சொல்கிறார்கள், கோபாலபுரம் வட்டாரத்தில்.

‘ஒட்டுமொத்த கட்சியே தளபதியின் பின்னால் நிற்பது மாதிரிதான் தெரிகிறது. பிறகு ஏன் வீண் சந்தேகம் எழுகிறது?’ என்று நம்மிடம் இந்த விவரங்களைச் சொன்னவர்களிடம் கேட்டால், ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் பதில் சொல்கிறார்கள்.

‘‘தலைவரின் மகன் என்ற அடிப்படையில் இயல்பாகவே தளபதியின் பின்னால் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு நின்றார்கள், நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது என்பது சாதாரணமான விஷயமில்லை. அதுவும் தயாநிதி மாதிரியான வசீகரமும், பணபலமும் உள்ள ஒருவர் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும்போது, எவ்வளவோ உஷாராக இருக்க வேண்டிய ஸ்டாலின், அதைப்பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறோம். தலைவருக்கு வயது 84 ஆகிறது. இந்த வயதிலும் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வணக்கம் வைத்தால், வலது கையைத் தூக்க முடியாவிட்டாலும், இடது கையையாவது பாதி தூக்கி பதில் வணக்கம் சொல்வார் தலைவர். ஆனால் ஸ்டாலினுக்கு வணக்கம் சொன்னால், மாவட்டச் செயலாளர்களுக்கே கூட பல நேரங்களில் பதில் வணக்கம் கிடைப்பதில்லை. இதனால் உள்ளுக்குள்ளேயே வெந்து, நொந்து போனவர்கள் அனேகம் பேர்!

ஆனால் தயாநிதியின் பார்வையும், பழகும் விதமும் இதற்கு நேர்மாறானது. ஓராண்டுக்கு முன்பு தேர்தல் பிரசாரம் செய்யப் போனபோது முதன் முறையாக ஓர் ஒன்றியச் செயலாளரின் அறிமுகம் கிடைத்து, அவருடைய வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார் தயாநிதி. கடந்த மாதம் தலைவர் வீட்டிற்கு வந்திருந்தார் அந்த ஒன்றியச் செயலாளர். தலைவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தயாநிதி, இந்த ஒன்றியச் செயலாளரைப் பார்த்ததும் நினைவுபடுத்திக் கொண்டு அவரே வலியச் சென்று பெயரைச் சொல்லி அழைத்து நலம் விசாரித்தார். நெகிழ்ந்து போய் கண்ணீரே விட்டுவிட்டார் அந்த ஒன்றியச் செயலாளர். அதிகாரம், பதவி, பணம் இவற்றைவிட உண்மையான கட்சிக்காரன் விரும்புவது இதுபோன்ற பாச உணர்வைத்தான். இப்படித் தனது அன்பால் தமிழ்நாடு முழுக்கவுள்ள பலநூறு நிர்வாகிகளை இப்போதும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் தயாநிதி. தலைவருக்குப் பிறகு இவர்கள் என்ன நிலை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.

சமீபத்தில் கூட பாருங்கள். நாகப்பட்டினம் நகர சபைத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வுக்கு அதிக கவுன்சிலர்கள் இருந்தார்கள். ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் அந்த கவுன்சிலர்கள் கவனிக்கப்பட்டு, ‘கட்சியின் பெயர் உங்களின் செயல்பாடுகளில்தான் உள்ளது. தி.மு.க. ஜெயிக்க வேண்டும்’ என்று ஸ்டாலினே கேட்டுக் கொண்டார். ஆனால், சில தி.மு.க. கவுன்சிலர்கள் மாற்றி ஓட்டைப் போட்டுவிட, அங்கே அ.தி.மு.க. ஜெயித்துவிட்டது. ஸ்டாலினின் கட்டுப்பாடு இந்த அளவில்தான் இருக்கிறது. இது கலைஞருக்கும் தெரியும்.

‘தலைவருக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்ற எங்கள் தளபதியைத் தவிர வேறு எந்த நாதிக்கும் தகுதி கிடையாது’ என்று மேடையில் முழங்கிவிட்டு, அன்று இரவே ‘தயாநிதி ஊட்டியில் இருக்கிறாரா, சென்னை திரும்பிவிட்டாரா?’ அவரை எந்தச் சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்? என்று விசாரிக்கும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்த நிஜங்களை உணர்ந்துதான் இப்போதே அதிகாரத்தை மாற்றித் தரும்படி தலைவரை நிர்ப்பந்திக்கிறார்கள்!’’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இந்த நெருக்கடிகளுக்கிடையேதான் கடந்த 14_ம் தேதியன்று காலை, மகாபலிபுரம் புறப்பட்டுப் போனார் கலைஞர். அன்று இரவுவரை அங்கிருந்த கலைஞருடன் ஆற்காட்டார், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரும் உடனிருந்திருக்கிறார்கள்.

அங்கேதான், தனது உணர்வை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் கலைஞர். ‘நான் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை. ஏன்யா… நான் பதவியில் இல்லைன்னா என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வருவியா நீ?’ என்று துரைமுருகனைப் பார்த்துக் கேட்டாராம் கலைஞர். ஆனாலும் ஸ்டாலினுக்கு ஓர் அங்கீகாரம் தரும் வகையில் அவரை துணை முதல்வர் பதவியில் அமர வைக்கும் முடிவுக்கும் வந்திருக்கிறார் கலைஞர்.

ஸ்டாலின் துணை முதல்வரானால், பேராசிரியர், வெறும் அமைச்சராக இருப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால்தான், ‘அன்பழகனை துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க ஆவன செய்ய வேண்டும். குறைந்தபட்சம் கவர்னர் பதவியிலாவது அவரை அமர்த்த வேண்டும்’ என்று கேட்டு பிரதமருக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதி அதை ஆற்காட்டார் மூலமாகக் கொடுத்தனுப்பினாராம் கலைஞர். தனது பிறந்த நாளன்று ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கும் வகையில் கலைஞர் அறிவிப்புகளை வெளியிடலாம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

ஆனால், துணை ஜனாதிபதி, கவர்னர் என்ற இரண்டு யோசனையையும் நிராகரித்துவிட்டாராம் அன்பழகன். வேண்டுமானால் தர்மசங்கடத்தைத் தவிர்க்க, அமைச்சரவையிலிருந்து விலகவும்கூட அவர் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் கலைஞர் தரப்பில் தொடர்ந்து பேராசிரியரை வற்புறுத்தி வருகிறார்கள்.

இதன் பிறகுதான் ‘கழகம் எனும் காதலியைத் தேடி ஓடுகிறேன். காலமெல்லாம் காத்திருந்து கைபிடித்துவிட்டு, நள்ளிரவில் அவளைக் (கட்சியை) கைவிட்டுச் செல்வதற்கு நான் என்ன நளனா? அவள்தான் என்னை நம்பி ஏமாந்த தமயந்தியா?’ என்று கேட்டு கவிதை எழுதியிருக்கிறார் கலைஞர். கவிதைக்காக ‘காதலி’ என்ற போர்வையில் கட்சியைக் குறிப்பிடும் கலைஞர், மறைமுகமாகச் சொல்ல வந்தது, ஆட்சியைத்தான். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் ஆட்சியைவிட்டு இறங்கமாட்டேன்’ என்று இதன் மூலம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் கலைஞர்!’’ என்கிறார்கள்.

ஸ்டாலின் துணை முதல்வரானதும் பெங்களூர், கோவா போன்ற இடங்களில் அவ்வப்போது நீண்ட ஓய்வெடுக்கும் திட்டமும் கலைஞரிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.. இதன் மூலம் கட்சியும் ஆட்சியும் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் இருப்பதுடன் ஸ்டாலினும் பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறாராம் கலைஞர். ‘இதுதான் தி.மு.க.வின் இன்றைய நிலையும், கலைஞரின் மனநிலையும்’ என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

குமுதத்திலிருந்து.

—————————————————————–

குமுதம் ரிப்போர்ட்டர் –  10.06.07

திருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைந்த திகில் படத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது, கலைஞர்_மாறன் குடும்பத்தினரிடையே நடக்கும் மோதல். அந்தளவுக்கு மோதலும் சமாதானமும் மாறி மாறி தொடர்ந்து, இப்பிரச்னையை உயிரோட்டமாக வைத்திருக்கின்றன.

மே_29 அன்று டெல்லியிலிருந்து திரும்பிய கலைஞர், மாறனின் மகள் அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலினின் மகன், மற்றும் மகள் ஆகியோரைக் கடிந்து கொண்டதாகக் கடந்த இதழ் குமுதம் ரிப்போர்ட்டரில் குறிப்பிட்டிருந்தோம். மாறன் சகோதரர்களுடனான சமாதான முயற்சிகளை, கலைஞர் எந்த வகையிலும் விரும்பவில்லை என்பதைக் காட்டும் வகையிலேயே இந்தச் சம்பவத்தை எடுத்துக் கொண்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

ஆனால், கலைஞர் குடும்பத்துடன் மாறன் சகோதரர்களுக்கு முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்த நாள் முதலாக அதைச் சரிப்படுத்த முயன்றுவரும், கலைஞரின் மகள் செல்வி மட்டும் மனம் தளரவில்லை. தயாநிதி மீதான கட்சி நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பிருந்தே, தான் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியபோதும், செல்வி தனது முயற்சிகளைக் கைவிடவில்லை.

இதன் ஒரு கட்டமாக, எந்த அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்குப் போனவர்களை கலைஞர் கண்டித்தாரோ…. அதே அன்புக்கரசியை, கடந்த வியாழன்று கோபாலபுரம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் செல்வி. முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கலைஞரைச் சந்தித்துவிட்டுப் போனபிறகு, அன்புக்கரசி சகிதம் கலைஞரைச் சந்தித்துப் பேசினார் செல்வி. உணர்ச்சிபூர்வமாக நடந்த அந்த சந்திப்பைத் தொடர்ந்து கொஞ்சம் உற்சாகமாகவே வெளியேறியிருக்கிறார்கள் செல்வியும், அன்புக்கரசியும். மாறன் குடும்பத்தினரிடையேயும் ஒருவித திருப்தி அலைகளை ஏற்படுத்தியிருந்தது இந்தச் சந்திப்பு.

ஆனால், தயாளு அம்மாள், அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞர் குடும்பத்தினர் யாருக்கும் இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் அவர்களை (கலாநிதி, தயாநிதி) மீண்டும் சேர்க்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள் இவர்கள். கடந்த சனிக்கிழமையன்று மாலை கோபாலபுரத்திற்கும், சி.ஐ.டி. காலனிக்கும் வரவழைக்கப்பட்ட பிரபல ஜோதிடர்கள் இருவரிடம் கலைஞர் வீட்டு பெண்மணிகள் ‘‘எல்லாம் நல்லபடியாகப் போகும்தானே…?’’ என்று விளக்கம் கேட்டுப் பெற்றதாகவும் ஒரு தகவல் உண்டு. அவர்கள் எதிர்பார்க்கும் ‘நல்லது’ என்பது சமாதானம் ஆகிவிடக்கூடாது என்பதுதானாம்!

இதற்கிடையில் சமாதான முயற்சிகளின் தூதுவராக வெளிப்படையாகவே களமிறங்கியிருக்கிறார் முரசொலி செல்வம். இவருடைய முயற்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பாக, இவரைப் பற்றியும், கலைஞருக்கு இவர் எந்த அளவுக்கு நெருக்கமானவர் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

திருவாரூர் மண்ணில் பிறந்த நீதிக்கட்சியின் தளபதிகளில் ஒருவரான ஏ.டி. பன்னீர்செல்வம் 1940_ல் நடைபெற்ற ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார். அவர் மீது பற்றுக்கொண்ட கலைஞர், அதே ஆண்டில் தனது சகோதரிக்கு (முரசொலி மாறனின் தம்பியாக) பிறந்த ஆண் குழந்தைக்கு பன்னீர்செல்வம் என்று பெயரிட்டார். பின்னாளில் ‘செல்வம்’ என்று சுருக்கி அழைத்தார்கள். ‘உனக்கு ஒரு மகள் பிறந்தால் இவனுக்கு திருமணம் செய்து கொடு’ என்று தனது தாய் அஞ்சுகம் சொன்ன வார்த்தைக்கேற்ப தனக்குப் பிறந்த மகளுக்கு செல்வி என்று பெயரிட்டு, செல்வத்திற்கே பின்னாளில் மணமுடித்து வைத்தார் கலைஞர்.

அண்ணன் முரசொலி மாறன் வெளிப்படையாக அரசியலில் இறங்கி, கலைஞருக்குத் துணையாக இருந்தார் என்றால், வெளிப்படையாக வராமல் கலைஞரின் அரசியல் தொடர்புகளுக்குப் பாலமாக விளங்கியவர் செல்வம்தான். முரசொலி ஆசிரியரான பின்பு ‘முரசொலி செல்வம்’ ஆனார்.

கலைஞருடன், நெருங்கிப் பழகும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்து, நெருக்கத்தை ஏற்படுத்தித் தந்தவர் முரசொலி செல்வமாகத்தான் இருப்பார். டி.ஆர்.பாலு, துரைமுருகன் பொன்முடி என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

‘அண்ணா மறைந்தபோது அவர் முகத்தைக் காண ஆவலுடன் இருந்த என்னை, உள்ளே அழைத்துச் சென்று அண்ணாவின் முகம் காணச் செய்தவர் செல்வம்தான்’ என்று வைகோ கூட ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

இப்படி இரண்டாம் தலைமுறைத் தலைவர்களுக்கும், கலைஞருக்கும் பாலமாக இருந்ததாலேயே, தான் நினைத்ததையும், மற்றவர்கள் கலைஞரிடம் சொல்ல நினைக்கும் விஷயங்களையும் தயங்காமல், உரிமையுடன் சொல்லும் சுதந்திரத்தைப் பெற்றார் செல்வம். இவருடைய வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் பல நேரங்களில் கலைஞர் மதிப்பளித்ததுண்டு!

உரிமைமீறல் பிரச்னை ஒன்றுக்காக 1992_ல் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்பட்டார், முரசொலி ஆசிரியர் பதவியிலிருந்த செல்வம். (இப்போதும் அதே பொறுப்பில் தொடர்கிறார்) சிரித்த முகத்துடன் அவர் கூண்டில் நின்ற போட்டோக்களை அடுத்த நாள் தினசரிகளில் பார்த்த கலைஞர், செல்வத்தை உச்சிமோந்து பாராட்டினார். ‘கூண்டு கண்டேன்; குதூகலம் கொண்டேன், என்று முரசொலியிலும்கூட எழுதினார் கலைஞர்.

இந்த நெருக்கமும், உரிமையும் தந்த இடத்தை வைத்துத்தான் மே_9 அன்று தி.மு.க. நிர்வாகக்குழு கூடுவதற்கு முன்பாக கலைஞருக்குக் கடிதம் எழுதிய செல்வம், ‘தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்’, என்று கேட்டுக் கொண்டார். கொஞ்சம் கடுமையான வார்த்தைகளுடன் அந்தக் கடிதம் இருந்தபோதும், அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை கலைஞர். (செல்வத்தின் வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டு தயாநிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது வேறு விஷயம்!)

அந்த செல்வம்தான் கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும்தனது சமாதான முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறார். கலைஞரைச் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று, கடந்த சில வாரங்களாகவே முயற்சித்து வருகிறார் தயாநிதி. ஆனால் அதற்கான வாய்ப்பும், அனுமதியும் கிடைக்கவேயில்லை.

இந்த நிலையில், கலைஞரின் பிறந்த நாளையட்டி அவரைச் சந்தித்து வாழ்த்திவிட வேண்டும். முடிந்தால் தனது விளக்கத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்த தயாநிதி, ஜூன் 2_ம் தேதியன்று செல்வத்தை அனுப்பி கலைஞரிடம் பேச வைத்திருக்கிறார். ‘தயாநிதி உங்களைச் சந்திக்க விரும்புகிறான்’ என்று செல்வம் சொல்ல… அதற்குப் பதிலளித்த கலைஞர், ‘நான் சந்திக்கத் தயார். ஆனால், அதற்கு முன்பாக அவர்களை (கலாநிதி_தயாநிதி) அழகிரியைப் போய்ப் பார்க்கச் சொல். அழகிரி சம்மதித்தால், நான் அவர்களைச் சந்திக்கிறேன்!’ என்றாராம்.

கலைஞரின் இந்த வார்த்தைகள்தான் இரண்டு தரப்பையும் இரண்டு விதமாகப் பேச வைத்திருக்கிறது. ‘‘அவனை (அழகிரி) யாரென்று நினைத்தீர்கள்? அவன் என் மகன்! என் ரத்தம்!!’’ என்று தயாநிதிமாறனிடமே ஒருமுறை நேரடியாகச் சீறியவர் கலைஞர். அதே கோபம் இப்போதும் இருந்திருந்தால், ‘யார் நினைத்தாலும், யார் ஏற்றுக் கொண்டாலும் நான் சமாதானம் ஆகமாட்டேன்’, என்று சொல்லியிருப்பார். ஆனால் ‘அழகிரி சம்மதித்தால் நான் சந்திக்கத் தயார்’ என்று இப்போது இவர் சொல்லியிருப்பதே சமாதானத்தைக் கலைஞர் விரும்புகிறார் என்றுதான் அர்த்தம்’’, என்று சொல்லி சந்தோஷப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் மாறன் குடும்பத்தினர் தரப்பில்.

இவர்களின் சந்தோஷத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சமீப காலங்களில் சமாதானப் பேச்சுப் பேச வந்த அனைவரிடமும் கோபத்தைக் காட்டிய கலைஞர், ‘இத்தகைய முயற்சிகளை இனியும் மேற்கொள்ள வேண்டாம்’, என்றும் சொல்லியனுப்பினார். ஆனால், இந்த முறை தயாநிதிக்காக செல்வம் பேசியபோது இந்த வார்த்தைகளைச் சொன்ன கலைஞர், அதன்பிறகும் செல்வத்துடன் பழைய பாச உணர்வுடனேயே இருந்தார்.

அடுத்த நாள் கோபாலபுரத்தில் கலைஞர் பிறந்த நாள் கேக் வெட்டியபோது செல்வமும் உடனிருந்தார். அன்று மாலை நடைபெற்ற பிறந்தநாள் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார் செல்வம். இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர். பாலு, செல்வத்தின் பெயரையும் குறிப்பிட்டு வரவேற்றுப் பேசினார்.

‘‘இதே செல்வத்தை விமர்சித்து நட்பை விட கட்சிதான் பெரிது என்று நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசினார், செல்வத்தின் நண்பரும் அமைச்சருமான பொன்முடி. அன்றைய சூழ்நிலையில் அதையும் கலைஞர் ரசித்தார். இப்போது வழக்கத்தில் இல்லாத வகையில் செல்வத்தின் பெயரை தனியாகக் குறிப்பிட்டு பாலு சொன்ன போதும் அதை கலைஞர் ரசித்தார். இன்று சூழ்நிலை மாறியிருப்பதைத்தானே இது காட்டுகிறது?’’ என்று ஒரு வித திருப்தியோடு கேட்கிறார்கள் தயாநிதி தரப்பில்.

ஆனால், கலைஞர் குடும்பத்தினரின் கருத்துக்கள் வேறு மாதிரி இருக்கின்றன. ‘‘உணர்ச்சி வேகத்தில் நடைபெற்ற மதுரைச் சம்பவத்தை வைத்து அழகிரியைக் கொலைகாரன், ரவுடி, என்றெல்லாம் சன் டி.வி.யில் மாறி மாறிச் சொன்னதை கலைஞர் இன்னும் மறக்கவில்லை. இந்த வார்த்தைகள் அழகிரியை எந்தளவுக்கு பாதித்தன என்பதையும் கலைஞர் உணராமலில்லை.

கடந்த காலங்களை மறந்துவிட்டு, பின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல் மாறன் சகோதரர்கள் செய்த சில விஷயங்களை அழகிரியும் ஸ்டாலினும், ஏன்… தயாளு அம்மாள் உள்ளிட்ட எல்லோருமே மறக்கத் தயாராக இல்லை. இந்தப் பிளவுக்கு ஒரு அங்கீகாரம் தரும் வகையிலும் பழைய உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும்தான் சன் டி.வி.க்கு எதிராக கலைஞர் டி.வி. தொடங்கவும், தனியாக கேபிள் நெட் வொர்க் ஒன்றைத் தொடங்கவும் தீவிரமாக இருக்கிறார்கள் கலைஞர் குடும்பத்தினர்!’’ என்கிறார், இவர்களுக்கு நெருக்கமான கட்சி முன்னோடி ஒருவர்.

‘‘இந்தப் பின்னணியில் அழகிரி சமாதானம் ஆவதே நடக்காத காரியம் என்பதால்தான், ‘அழகிரி சம்மதித்தால் நான் தயாநிதியைச் சந்திக்கத் தயார்’ என்று நம்பிக்கையில்லாமல் சொன்னார் கலைஞர்’’ என்றும் சொல்கிறார் அந்தப் பிரமுகர்.

‘‘இப்போதைக்கு இந்த சமாதான முயற்சிக்கான லகானை அழகிரியிடம் தந்திருக்கிறார் கலைஞர். அதை வைத்து அவர் சமாதானத்தை எட்டிவிட வேண்டும் என்பதற்காக அல்ல இது. இப்போதுள்ள மனநிலையிலேயே, மாறன் சகோதர்களுக்கு எதிரான யுத்தத்தை சுதந்திரமாகவும் உறுதியாகவும் நடத்த கலைஞர் தந்திருக்கும் அனுமதிதான் அது!’’ என்றும் சொல்கிறார்கள் அழகிரி தரப்பில்.

அப்படியே அழகிரியுடன் சமாதானமாகப் போக நினைத்தாலும், தயாநிதியை அரசியல் ரீதியாக முடக்கிப்போடும் வகையில் சில நிபந்தனைகளை விதிப்பார்கள் என்பதால், அதைச் செய்ய மாறன் குடும்பத்தினர் ரொம்பவே தயங்குவார்கள் என்றும் சொல்கிறார்கள். தவிர, மதுரை வன்முறைச் சம்பவம் தொடர்பாக அழகிரிக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டுப்பெற்று, விசாரணையும் தொடங்கிவிட்ட நிலையில், அதே அழகிரியுடன் நாளை சமாதானமாகச் சென்றுவிட்டால், தினகரன் ஊழியர்களும், பொதுமக்களும் அதை எப்படிப் பார்ப்பார்கள் என்ற யோசனையும் தயாநிதி தரப்பில் இருக்கிறது.

இத்தனை சந்தேகங்கள், தயக்கங்களைத் தாண்டி செல்வத்தின் முயற்சிகள் எந்தளவுக்குக் கை கொடுக்கும்? அந்த முயற்சிகளை அழகிரியும் ஸ்டாலினும் எந்தளவுக்கு அனுமதிப்பார்கள் என்பதை இனிவரும் நாட்களில் நடக்கவுள்ள சம்பவங்கள்தான் உலகிற்கு உணர்த்தும்! ஸீ

கலைஞர் _ மாறன் குடும்பத்தினரிடையே மோதலும், சமாதான முயற்சிகளும் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க… சத்தமில்லாமல் ஒரு புத்தகத்தைப் படிக்கிறாராம், இந்த சர்ச்சைகளில் தொடர்புடைய ஒருவர். புத்தகத்தின் தலைப்பு ‘‘உறவுகள் மேம்பட!’’

உறவுகளுக்கிடையே நெருக்கமும், சிநேகமும் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது.. என்பதை விளக்கும் புத்தகம் இது. ‘நானே பெரியவன் என்ற அகந்தையை விட வேண்டும்… பின்விளைவுகளை அறியாமல் எதையும் பேசக்கூடாது… சில நேரங்களில் சில சங்கடங்களைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணரவேண்டும்… பிரச்னைகள் ஏற்படும்போது அடுத்தவர்தான் இறங்கி வரவேண்டும் என்று நினைக்காமல், நீங்கள் முதலில் பேச்சைத் தொடங்கவேண்டும்…’ என்றெல்லாம் பத்திபத்தியாக ஆலோசனை சொல்கிறதாம் அந்தப் புத்தகம்.

சரி…. இதைப் படிப்பது யார் என்று கேட்டால், ‘ஏப்பு… ஏதோ படிக்கிறார்… படித்துத் தெளிந்து நல்லது நடந்தால் சரிதானே? ஆள் யாருன்னு கேட்டு ஏன் இன்னொரு பிரச்னையைக் கிளறுரீக….’’ என்று யதார்த்தமாகச் சொன்னார், இத் தகவலை நமக்குச் சொன்ன வி.ஐ.பி.!

ஸீ எஸ்.பி. லட்சுமணன்

Posted in ADMK, Ads, Arts, Assets, AVM, Bribery, Bribes, BSNL, Campaign, Dayaalu Ammal, Dayalu Ammaal, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Dinakaran, District Secretary, Districts, DMK, Elections, family, Feud, Government, Governor, Govt, Influence, Investment, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, Ka Anbalagan, Ka Anbhazhagan, Kalainjar, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kannada, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kickbacks, Launch, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Malayalam, Maran, Market, Media, MR Radha, MSM, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, News, News Channel, Palani Manikkam, PalaniManikkam, Pazhani Manikkam, PazhaniManikkam, Polls, Power, Preach, Radaan, radan, Radhika, Raj, Raj TV, Rajendran, Rating, revenue, Sarathkumar, Secretary, Serial, Sharathkumar, Shares, Soap Opera, Soaps, Stalin, Stocks, Sun, Sun Network, Sun TV, Survey, Surya, Suryaa, Tamil News, TeleSerial, Television, Telugu, Thalapathi, thalapathy, Thayanidhi, Thayanidhy, Thayanithi, Thayanithy, TRP, TV, vice-president, VP | 1 Comment »