Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007
யாரைத்தான் நம்புவதோ?
ஜீ.வி. பிலிம்ஸ் நிறுவனம், புதிய படங்களை எடுப்பதோடு, பழைய கடன்களையும் பைசல் செய்து வருகிறது.
கம்பெனிக்கு வரும் இயக்குனர்களை முழுதாய் நம்பி, “முதல் பிரதி’ அடிப்படையில் படம் தயாரித்து வருகிறார்கள்.
“கைவந்த கலை’ படத்துக்கு பாண்டியராஜன் கொடுத்த பட்ஜெட்டைவிட பத்து லட்சம் அதிகம் செலவானதாம்!
அடுத்து ஜீவாவின் (சமீபத்தில் மறைந்த இயக்குனர்) உதவியாளர் சங்கர் கே. என்பவர் ஐம்பது லட்சம் செலவில், “திருடி’ என்ற படத்தை எடுப்பதாகக் கூறி ஒரு கோடி வரை செலவை இழுத்துவிட்டாராம்.
ஜீ.வி. பிலிம்சுக்கு, இப்போது “உற்சாகம்’ என்ற படத்தை இயக்கிவரும் ரவிச்சந்திரன் (ஏற்கெனவே, கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்த வேளை, மஜ்னு படங்களை இயக்கியவர்) அனுபவம் உள்ள டைரக்டர் என்பதால் அவர் கேட்ட பட்ஜெட்டை கொடுத்து உதவினர் தயாரிப்பாளர்கள். ஆனால், ரவிச்சந்திரன் கொடுத்த பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவழித்து படத்தை உருவாக்கி இருக்கிறாராம்.
பழைய இயக்குனரும் கொடுத்த பட்ஜெட்டைக் காப்பாற்றவில்லை. புதிய இயக்குனரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. யாரைத்தான் நம்புவதோ என்று நேர்மையாக புலம்புகிறது தயாரிப்பு தரப்பு.
Posted in Budget, Cinema, Director, Economic, Expenses, Films, Finance, Flop, Gossip, GV, Hit, Jeeva, Kai Vantha Kalai, Kisukisu, Loss, Majnu, Manirathanam, Manirathnam, Maniratnam, Movies, Pandiarajan, Pandiyarajan, Profit, Ravichandran, Rumour, Rumours, Shankar, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Blogs, Tamil channels, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Magaizine, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, Thirudi, Urchagam, Urchakam, Venkatesvaran, Venkateswaran, Woes | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2006
மறைந்த பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி
சென்னை, ஆக. 30: மறைந்த நான்கு பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை நிதியுதவி வழங்கினார்.
பத்திரிகையாளர்களின் துணைவியர் நிதியுதவியை பெற்றுக் கொண்டனர்.
சா.விஸ்வநாதன் (ஆனந்த விகடன், தினமணி கதிர், சாவி) – இவரது மனைவி ஜானகி விஸ்வநாதன் ரூ. 50,000 உதவித் தொகையாக பெற்றுக் கொண்டார்.
தி. தேசிங்கு (வண்ணத்திரை வார இதழ், சென்னை) – இவரது மனைவி தே. ஆர்த்தி ரூ. 2 லட்சம் உதவித் தொகையைப் பெற்றுக் கொண்டார்.
எம்.இன்பராஜ் – (மாலைமுரசு, மதுரை) – இவரது மனைவி வேல்தங்கத்திடம் உதவித் தொகையாக ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.
எம்.சுப்புக்குட்டி (தினகரன்) – இவரது மனைவி சு.சுப்புலட்சுமியிடம் ரூ.50,000 உதவித் தொகை வழங்கப்பட்டது
Posted in Chaavi, Desingu, Dinakaran, Inbaraj, Journal, Journalists, Maalai Murasu, Reporters, Saa Viswanathan, Savi, Subbukutty, Tamil, Tamil Magaizine, Vanna Thirai | Leave a Comment »