Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Tamil Blog’ Category

Meera Jasmine gets married in Thirupathy?

Posted by Snapjudge மேல் ஜூலை 25, 2007

நடிகை மீரா ஜாஸ்மின் காதல் திருமணம்- திருப்பதியில் ரகசியமாக நடந்தது

சென்னை, ஜுலை.25-

கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்தவர், மீரா ஜாஸ்மின். இவர், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தந்தை பெயர், ஜோசப். தாயார், ஜோசப் எலியம்மா. மீரா ஜாஸ்மினுக்கு ஜோ என்ற அண்ணனும், ஜெனி, ஜெவி என்ற 2 அக்காளும், ஜார்ஜ் என்ற தம்பியும் இருக்கிறார்கள்.

`சூத்திரதாரு’ என்ற மலையாள படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தை பிரபல மலையாள டைரக்டர் லோகிததாஸ் இயக்கினார். பல மலையாள படங்களில் நடித்த பின், `ரன்’ என்ற படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து, `புதிய கீதை’ படத்தில் விஜய் ஜோடியாகவும், `ஆஞ்சநேயா’ படத்தில் அஜீத்துடனும், `சண்டக்கோழி’ படத்தில் விஷாலுடனும் நடித்தார். சமீபத்தில் திரைக்கு வந்த `திருமகன்’ படத்தில், எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்து இருந்தார். இப்போது, `நேபாளி’ என்ற படத்தில் பரத் ஜோடியாக நடித்து வருகிறார்.

`நேபாளி’ படப்பிடிப்பு கடந்த மாதம் ஊட்டியில் நடந்தபோது, மீரா ஜாஸ்மின் அவசரமாக திருப்பதி போக வேண்டும் என்று டைரக்டர் வி.இசட்.துரையிடம் கேட்டார். “நீங்கள் இல்லையென்றால், படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டியிருக்கும். இதனால் பல லட்சங்கள் இழப்பு ஏற்படும்” என்று டைரக்டர் துரை கூறினார். “எப்படியாவது சமாளித்துக்கொள்ளுங்கள். இது என் வாழ்க்கை பிரச்சினை. நாளை காலை நான் திருப்பதியில் இருந்தாக வேண்டும்” என்று மீரா ஜாஸ்மின் கெஞ்சிக்கேட்டு, அவசரம் அவசரமாக திருப்பதி விரைந்தார்.

அவருடைய உதவியாளர்கள் நான்கு பேரையும் உடன் அழைத்து சென்றார். திருப்பதியில், கடந்த மாதம் 21-ந் தேதி மீரா ஜாஸ்மின் திடீர் திருமணம் செய்து கொண்டார். இதுபற்றிய செய்தி, `தினத்தந்தி’யில்தான் முதன் முதலாக வெளியானது. இந்த செய்தியை மீரா ஜாஸ்மின் மறுக்கவில்லை.

மீரா ஜாஸ்மினின் கணவர் பெயர், `மான்டலின்’ ராஜேஷ். இவருக்கும், மீரா ஜாஸ்மினுக்கும் கடந்த ஒரு வருடமாக காதல் இருந்து வந்தது. இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள். மீரா ஜாஸ்மின் எந்த ஊரில் படப்பிடிப்பில் இருந்தாலும், அந்த ஊருக்கு ராஜேஷ் சென்று விடுவார்.

உயிருக்கு உயிராக காதலித்து வந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். இந்த திருமணத்துக்கு, மீரா ஜாஸ்மின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

எதிர்ப்புகளை மீறி, மீரா ஜாஸ்மின் தனது காதலர் ராஜேசை கணவர் ஆக்கிக்கொண்டார். திருமணத்துக்குப்பின், இருவரும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள்.

இப்போது மீரா ஜாஸ்மின் ஒரு மலையாள படப்பிடிப்புக்காக கொல்கத்தா போய் இருக்கிறார். அங்கு ராஜேசும் சென்று இருக்கிறார். இருவரும் ஜோடியாக ஒரே ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள்.

இதற்கு முன்பு ரகசியமாக காதல் திருமணம் செய்துகொண்ட எல்லா நடிகைகளும் தங்கள் திருமணத்தை முதலில் மறைத்ததுபோல், மீரா ஜாஸ்மினும் தனது திருமணத்தை மறைத்து, ரகசியமாக வைத்து இருக்கிறார். விரைவில் அவர் தனது திருமணத்தை வெளியுலகுக்கு அறிவிப்பார் என்று தெரிகிறது.

——————————————————————————————–

எனக்கு திருமணம் நடக்கவே இல்லை – நடிகை மீரா ஜாஸ்மின் கொதிப்பு

இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷுடன் எனக்கு திருமணம் நடக்கவில்லை என்று நடிகை மீரா ஜாஸ்மின் ஆவேசமாக கூறினார்.

பிரபல நடிகை மீரா ஜாஸ்மினுக்கும், ஆந்திராவை சேர்ந்த மாண்டலின் கலைஞர் ராஜேஷுக்கும் திருப்பதியில் திருமணம் முடிந்து இருவரும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக செய்தி வெளியானது. ஆனால் இதனை மீரா ஜாஸ்மின் உறுதியாக மறுத்தார். ‘கொல்கத்தா நியூஸ்‘ என்ற மலையாளப்பட படப்பிடிப்புக்காக கொல்கத்தா வந்துள்ள மீரா ஜாஸ்மினை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது போது அவர் கூறியதாவது:

சாதாரண குடும்பத்திலிருந்து நடிக்க வந்த நான் கடுமையான உழைப்பாலும், திறமையாலும் தென்னிந்திய சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறேன். நான் எவ்வளவு வேகமாக வளர்ந்தேனோ அந்த அளவுக்கு பிரச்சினைகளையும் சந்தித்தேன்.

நான் ஒருவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன் குடும்பம் நடத்துவதாகவும் செய்திகள் வெளிவருவது புதிதல்ல. அதைபோலத்தான் இப்போதும் செய்தி வெளிவந்திருக்கிறது. என் மீது மீடியாக்களுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. என்னை நிம்மதியாகவே இருக்கவிட மாட்டேன் என்கிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘நேபாளிÕ படப்பிடிப்பில் இருந்து திருப்பதிக்கு போனது உண்மை. சாமி கும்பிட கோவிலுக்கு போவது தப்பா? உடனே அங்கு திருணம் நடந்தது என்பதா? திருப்பதியில் நேர்த்திகடன் நிறைவேற்ற வேண்டியது இருந்தது. அதற்காகத்தான் சென்றேன். மாண்டலின் ராஜேஷ் ஒரு நண்பர் மூலம் எனக்கு அறிமுகமானார் அவரது விழா ஒன்றுக்கு சென்றேன். உடனேயே அவருக்கும் எனக்கும் திருமணம் செய்து பார்த்து விட்டார்கள்.

நான் திருமணம் செய்யும்போது எல்லோருக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். ரகசிய திருமணம் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இனிமேலாவது என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள். இவ்வாறு மீரா ஜாஸ்மின் கூறினார்.

திருமணம் நடந்ததா என்பது குறித்து இசை கலைஞர் மாண்டலின் ராஜேஷ் தரப்பில் விசாரித்தபோது அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் கூறியதாவது:
மாண்டலின் ராஜேஷின் நண்பர் ஒருவர் மீராவுக்கும் நண்பர். அவரது ஏற்பாட்டின்படி கடந்த 20-ந் தேதி சென்னையில் நடந்த ராஜேஷின் இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் மீரா கலந்து கொண்டார். மற்றபடி ராஜேஷ§க்கும், மீராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இருவருக்கும் திருமணம் நடந்து விட்டது என்பதெல்லாம் வடிகட்டிய பொய் என்றார்.
“மீரா ஜாஸ்மின் குறைந்த அளவே படங்களில் நடித்திருந்தாலும் அவரை பற்றிய பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. முதலில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் லோகிததாஸுடன் நெருக்கமாக இருந்தார். அவருடன் குடும்பம் நடத்துவதாக செய்தி வெளியானது. சொத்து பிரச்சினை காரணமாக உறவினர்களை பிரிந்து கேரள முதல்வர் கலந்து கொண்ட விழாவில் கண்ணீர் விட்டு அழுதார் மீரா.

அதன் பிறகு நடிகர் பிருத்விராஜுடன் நிச்சயதார்த்தம் நடந்தாக கூறப்பட்டது. எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்தபோது அவருடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் வேளாங்கண்ணி கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக பேசப்பட்டது. இப்போது அதேபோல மாண்டலின் ராஜேஷுடன் திருமணம் செய்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது” என்கிறார் மீராவுக்கு நெருக்கமான இயக்குனர் ஒருவர்.

தமிழ்முரசு

————————————————————————————————–

Kumudam

Hot News: Meera Jasmine’s secret Marriage & Love Affair

01.08.07  சினிமா

‘மீராஜாஸ்மீன் கல்யாணம் பண்ணிக்கிட்டாரே?’ இதுதான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட்டாக கேட்கப்படும் கேள்வி.

அவருடன் கிசுகிசுக்கப்படும் நபர் சினிமாக்காரர் அல்ல, கர்நாடக இசைத்துறையைச் சேர்ந்தவர். ‘மாண்டலின்’ ஸ்ரீனிவாஸின் தம்பி ‘மாண்டலின்’ ராஜேஷ்தான் இந்த கிசுகிசுக்களின் ஹீரோ.

இந்த பரபரப்பிற் கிடையே ஒரு சம்பவம். பொதுவாய் மீரா ஜாஸ்மின் விழாக்களுக்கு அதிகம் செல்வதில்லை. சென்றவாரம் மங்களகரமாக ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். சினிமா நிகழ்ச்சி அல்ல, கர்நாடக சங்கீத நிகழ்ச்சி. ‘மாண்டலின்’ ராஜேஷின் கச்சேரி.

முன்வரிசையில் அமர்ந்து முழுநிகழ்ச்சியையும் பூரிப்புடன் ரசித்தார் மீரா. இந்தச் சம்பவம் பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.

‘‘இதெல்லாம் சும்மா கட்டுக்கதை. ஒரு நிகழ்ச்சிக்கு வந்ததை வச்சு காதல், கல்யாணம்னு சொல்றது தப்பு. முன்பு இப்படித்தான் மீராவை ஒரு இயக்குநருடன் இணைத்து கிசுகிசுத்தனர். இப்போது இந்த விஷயம்… பாவம்’’ என்று கேரளத்து மல்லிகைக்காக பரிதாபப்படுகிறார் அவரை நன்கு அறிந்த ஒருவர்.

இப்படி ஆளுக்கு ஆள் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண் டிருக்கும்போது இன்னொரு உஷ்ணச் செய்தியும் காதில் விழுந்தது. ஊட்டியில் பரத்துடன் மீரா ஜாஸ்மின் நடிக்கும் ‘நேபாளி’ படத்தின் ஷ¨ட்டிங். அங்கு மீராவைச் ‘மாண்டலின்’ ராஜேஷ் வந்தாராம். நீண்ட நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்களாம். அங்கிருந்துதான் திருப்பதி சென்று கல்யாணம் செய்து கொண்டார்கள் என்கிறது இன்னொரு கிசுகிசு. கேள்விப்பட்ட விஷயங்களை மீராஜாஸ்மினிடம் கேட்கலாம் என்றால், அவர் செல்ஃபோன் நமது தொடர்பு எல்லைக்கு வெளியேவே இருந்தது (உஷாரோ). ஆனால் அவருடைய நண்பர்கள் இந்தத் திருமணச் செய்தியை அடியோடு மறுக்கிறார்கள்.

‘‘நல்ல பொண்ணு சார். சத்தியமாக அவங்களுக்கு கல்யாணமாகலை’’ என்கிறார்கள்.

சினிமாக்காரர்கள் சொல்கிறார்கள். நம்புவோமாக!.

“நட்புதான்!”

இங்கு அங்கு என்று சுற்றி இறுதியில் மும்பையிலிருக்கும் ராஜேஷை தொடர்புகொண்டு, விஷயத்தை உடைத்தபோது மனிதர் சற்று பதறினார்.

‘‘சில மாதங்களுக்கு முன்பு தான் மீராவை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைச்சுது. அதிலிருந்து இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் பழகுறோம். அவருக்கும் மியூசிக்கில் ஆர்வம் இருப்பதால் என் நிகழ்ச்சிக்கு வந்தார். அவ்வளவுதான்! அதற்குள் காதல் கல்யாணம், கார்த்திகை, என்று கதை கட்டிவிடுவது நியாயமா? தவிர, திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. அப்புறம், ஒரு ஆணும், பெண்ணும் பழகினால் உடனே காதலா’’ என்று உலகின் முதல் காதல் மறுப்பு டயலாக்கோடு முடித்துக்கொண்டார்.

_ வி.சந்திரசேகரன், ராம்ஜெஸ்வி

Posted in Actress, Affair, Ajith, Anjaneya, Audio, Barath, Bharath, Calcutta, Cinema, Dhurai, Durai, Elope, Films, Freind, Friend, Function, Gossip, Heroine, Jasmine, Kerala, Kisukisu, Kolkata, Logidas, Lohidas, Lokidas, Love, Malayalam, Mandolin Rajesh, Marriage, Meera, Meera Jasmine, Mollywood, Movies, music, Nepaali, Nepali, Rajesh, Reception, release, Rumor, Rumour, Run, Sandakkozhi, Sandakozhi, SJ Soorya, SJ Surya, Soorya, Surya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Blog, Tamil Blogs, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Thirumala, Thirupathi, Thirupathy, Thurai, Tirumala, Tirupathi, Tirupathy, TTD, Vishaal, Vishal, VZ Durai, Wedding | Leave a Comment »

Cheran praises Mu Ka Azhagiri in Arima Association Meet

Posted by Snapjudge மேல் ஜூலை 24, 2007

தொல்லைக்காட்சிகளாக மாறிய தொலைக்காட்சிகள் பார்க்கும் ஆர்வம் குறைவதாக டைரக்டர் சேரன் வருத்தம்

மதுரை, ஜுலை.24- தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சியாக இருப்பதால் அவற்றை பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறது என்று சினிமா டைரக்டர் சேரன் கூறினார்.

அரிமா சங்க விழா

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய அரிமா மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவும், அரிமா சங்க பொன்விழாவும் மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடந்தது.இந்தவிழாவில், முன்னாள் பண்பாட்டு இயக்குனர் கோவை ராமசாமி கலந்து கொண்டு மதுரை மாவட்ட அரிமா கவர்னர் டி.பாண்டியராஜன் தலைமையிலான அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் சினிமா டைரக்டர் சேரன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மனப்போராட்டம்

இன்றைய சூழ்நிலையில் மனித வாழ்க்கையில் பல பிரச்சினைகள் எழுகின்றன. செல்போன்களாலும், தொலைக்காட்சிகளாலும், மனப்போராட்டம், கோபம் போன்றவை ஏற்படுகிறது.இப்போது டி.வி. பார்க்க கூட மக்களுக்கு ஆர்வம் இல்லை. அது தொல்லைக்காட்சியாக இருப்பதால் ஆர்வம் குறைந்துவருகிறது.

நல்ல சினிமா படங்கள் எடுத்தால் சில நேரங்களில் ஓடுவது இல்லை. ஆனால் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் எப்படியோ ஓடின.

ஒரு மனிதனுக்கு அவன் செய்யும் சமூக சேவைதான் நிம்மதியை தருகிறது. நாம் ஒதுக்கப்படும்போது சமூகத்தில் நம்மை அடையாளம் காட்ட தேவைப்படுவது தொண்டு தான். இதனால் பலன் பெற்றவர்கள் நம்மை மதிக்கும்போது எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் போன்ற உயர்ந்த பதவிகளை பெற்றது போன்ற மனபூரிப்பு ஏற்படுகிறது.

நான் டைரக்டு செய்த மாயக்கண்ணாடி படத்தின் கதாநாயகன் தோல்வியை மட்டுமே தழுவி வருவார். ஒருமுறை தனக்கு எந்த மாதிரியான திறமை உள்ளது என்று உணர்ந்து அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வார்.

வாழ்க்கையே பாடம்

நமக்கு தன்னம்பிக்கையை கொடுப்பது தொண்டு தான். காதல் இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் நட்பு இல்லாமல் வாழ முடியாது. எனவே தோழமை மிகவும் அவசியம். நான் சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தேன். ஆனால் அந்த இடத்தை பிடிக்க 10 ஆண்டுகள் ஆகியது. பல தியாகங்கள் செய்த பின்னர் தான் லட்சியத்தை அடைய முடிந்தது.

சேவை செய்ததன் மூலம் பெரிய மனிதர்களாகியவர்கள் தான் இந்த விழாவில் பங்கேற்று இருக்கிறார்கள். எனவே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சேவை செய்து நட்பை வளர்த்துக்கொள்ளக்கூடிய மனப்பான்மையை பெறவேண்டும்.

பட்டறிவு தான் ஒரு மனிதனுக்கு நல்ல பாடமாகும். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவர்களுக்கு பாடமாகும். நல்ல வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சேரன் பேசினார்.

விழாவில், குழு தலைவர் சங்கரலிங்கம், இணைத்தலைவர் ரவிச்சந்திரன், பன்னாட்டு இயக்குனர் நாகராஜன், மக்கள் தொடர்பு அதிகாரி சோமசுந்தரம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


:: Paraparapu Tamil Daily News :: – Connecting People Across the Web: “வைகோ ‘டூ’ அழகிரி- சேரன் அடித்த செம ‘பல்டி’!

முன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை வானுயர வாழ்த்திப் பேசிய இயக்குநர் சேரன், மதுரையில் நடந்த விழாவில் முதல்வரின் மகன் மு.க.அழகிரியை ‘வாய்க்கு வாய்’ அஞ்சா நெஞ்சன் என்று புகழ்ந்து ஆச்சரியப்படுத்தினார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிரசாரம் படு சூடாக நடந்து கொண்டிருந்தபோது, சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சேரன், வைகோவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

இந் நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மு.க.அழகிரியை பாராட்டிப் புகழாரம் சூட்டியுள்ளார். மதுரை அரிமா சங்க அமைச்சரவை பதவியேற்பு விழா ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதில் மு.க.அழகிரி, இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சேரன்,

தொண்டுகள் மூலம் சாதனை செய்த மனிதர்கள் தான் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர். யாரும் எடுத்த எடுப்பில் உயர முடியாது. படிப்படியாகத்தான் உயர முடியும். ஒரு மனிதன் வாழ்வில் உயர லட்சியம், தோழமை வேண்டும். காதல் கூட இல்லாமல் வாழ்ந்து விடலாம். ஆனால் நட்பு இல்லாமல் வாழவே முடியாது. பிறருக்கு சேவை செய்வதன் மூலமே நமது வாழ்க்கை உயரும். அஞ்சா நெஞ்சன் என்றால் அது ஒருவருக்குத்தான் பொருந்தும். அஞ்சாத உள்ளம், உள்ள உணர்வுடன் பிறருக்கு உதவக் கூடிய ஒருவரைத்தான் அஞ்சா நெஞ்சன் என்கிறோம்.

வெற்றிக்கு இலக்கணமாக நமது அஞ்சா நெஞ்சன் திகழ்கிறார். வார்த்தையால் பேசுவதை விட செயல்களில் காட்டி வருகிறார். அவரைப் போல அனைவரும் வெற்றி பெற வேண்டும். மாயக்கண்ணாடியாக இல்லாமல், மக்கள் முன் உண்மைக் கண்ணாடியாக உள்ளார் அஞ்சா நெஞ்சன் என்று சேரன் கூறிக் கொண்டே போக அழகிரியே ஒரு கட்டத்தில் நெளிந்துவிட்டார். வைகோவின் தீவிர பக்தராக அறியப்பட்டவரான சேரன், தடாலடியாக அழகிரியை வாய்க்கு வாய் புகழ்ந்து பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in Alagiri, Alakiri, Arima, Attend, Attendance, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Cheran, Cinema, Films, Function, Gossip, Kisukisu, Madurai, Mayakannaadi, Mayakannadi, Mayakkannaadi, Mayakkannadi, MDMK, Meet, Meeting, MK Alagiri, MK Alakiri, MK Azhagiri, MK Azhakiri, Movies, MuKa Alagiri, Party, Politics, Rumor, Rumour, Seran, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Blog, Tamil Blogs, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Meet, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Pictures, Tamil Theater, Tamil Theatres, Vambu, Vampu | Leave a Comment »

Operation Salma Ayup – Unmai Online: Bavanandhi

Posted by Snapjudge மேல் மே 11, 2007

ஆப்பு’ ரேசன் சல்மா அயூப் – பவானந்தி

காந்தியக் கொன்ன கோட்சே, கொலை செய்யப் போகும் முன்பே கையில் ‘இஸ்மா-யில்’னு பச்சை குத்திக்கிட்டு சுன்னத் செஞ்சுகிட்டுத்தான் போனான். ஒரு வேளை தான் யார்னு அடையாளம் கண்டு பிடிக்கப் படாட்டா, முஸ்லீம்னு தெரியட்டும்; அதனால் கலவரம் வந்து முஸ்லீம்களைக் கொல்லட்டும்கிறதுக்காக அப்படி செஞ்சான். தான் செஞ்ச தப்பை அடுத்தவன் மேல போட்டு மாட்டிக் கொடுக்கிறது அவ்வாளுக்கு நிகர் அவாளே!

இப்படி முஸ்லீம் பேரைப் பயன்படுத்தி பூணூல் கூட்டம் பண்ற முடிச்சவிக்கித் தனத்துக்கு இன்னொரு எடுத்துக்காட்டுதான் இப்ப சமீபத்தில நடந்தது. ரிடையராகி வீட்டில உட்கார்ந்துகிட்டிருந்தாலும், ஏகப்பட்ட பார்ப்பான் இன்னைக்கு இண்டர்நெட்டிலதான் உட்கார்ந்திருக்கான். தங்கள் குல ஆதிக்கம் அழிஞ்சிடாம இருக்க மூளைச் சலவை செய்யற வேலையில ரொம்ப பூணூல் இறங்கயிருக்குது. இதுக ஒரு பேர்லதான் வரும்னு இல்ல. நல்ல பிள்ளையாட்டமா ஒரு பேர்ல இருந்து கட்டுரை எழுதுறது. அப்புறம் ஏகப்பட்ட போலி பேர்கள்ல தனக்குத்தானே பாராட்டி முதுகைச் சொறிஞ்சுக்கிறது; பகுத்தறிவு, இனஉணர்வு எவனாவது பேசிட்டா அவனைப் பத்தி தரக்குறைவா எழுதறதுன்னு இதுகளோட ஆட்டம் தாங்க முடியல இணையத்தில்.

‘மொழி’ படத்துல வர்ற புரபசர் கேரக்டர் மாதிரி (எம்.எஸ்.பாஸ்கர் ஏற்ற பாத்திரம்) ‘சமீபத்தில 1967-ல அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தப்போ’, ‘சமீபத்தில நேரு இறந்தப்-போ’ன்னு இந்த மறதிக் கேஸு 40 வருஷத்துக்கு முன்னாடி இருக்குற மாதிரியே எழுதும். ‘சமீபத்துல இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சப்போ’ன்னு எழுதும்போது, விவேக் படத்தில வர்ற நகைச்சுவை தான் நினைவுக்கு வருது.

இது ஒரு கேஸுன்னா, இன்னொரு கேஸ் இருக்கு. அது அடுத்தவங்க பெயரில் ஒரு பக்கத்தை ஆரம்பிச்சு, இதுங்க அரிப்பை எல்லாம் அதில தீர்த்துக்கிறது. வலைப்பூக்கள்னு சொல்லப்படுகிற Blog Spot-கள் தமிழர்களால் அதிகளவு பயன்படுத்தப்-படுகிறது. பத்திரிகைகளில் பிரசுரிக்க அலையாமல், தங்கள் படைப்புகளை, கருத்துகளை உலகம் முழுக்கக் கொண்டுபோக எளிய வழி இது. தத்தம் பெயரிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த நல்ல வாய்ப்பைத்தான் தவறாய் பயன்படுத்துது இந்தக் கேஸு.

“திராவிட இயக்கங்கள், பெரியாரியம், தமிழ் உணர்வு போன்றவற்றையொட்டி, தனது வலைப்பூ தளத்தின் மூலமாக தன் கருத்துகளை சொல்லி வந்த ஒரு பெண் பதிவாளரின் பெயரில் போலிப் பதிவு யாரோ உருவாக்கி-யிருந்தார்கள். ‘Eveready’ என்பதையே ‘Every day’  என்று போலி உருவாக்குவது போல அந்தப் பெண்னின் பெயருடன் ஒரு எழுத்தைச் சேர்த்து புதிய வலைப்பக்கம் உருவாக்கப்-படுகிறது. அதே வடிவமைப்பு! அதே எழுத்து வடிவம்! அதே வண்ணங்கள்!

ஆனால், தளம் முழுக்க ஆபாசப் படங்களும், கதைகளுமாக எழுதப்பட்டிருந்தது. தளத்தின் உரிமையாளர் பெயர் சல்மா அயூப் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே சல்மா அயூப் என்ற பெயரில் இதற்கு முன்பும் பல தளங்களில் கருத்துகள் வெளிவந்துள்ளது. யாரிந்த ‘சல்மா அயூப்’ என்பது பெருங்குழப்பமாயிருந்தது. அந்தக் குறிப்பிட்ட பெண் பதிவரே ‘இந்தச் சிக்கல் தீரும் வரை நான் இணையத்தில் செயல்படப்போவதில்லை’ என்று சொல்லுமளவுக்கு முடக்கிப் போடும் வேலை நடந்ததுங்கிறாரு. இந்தப் பிரச்சினையில இறங்கி வேலை பார்த்த பாலபாரதி.

‘சல்மா அயூப் என்பது போலிப் பெயர் என்பது உறுதிப்பட்டுவிட்ட நிலையில், அது யாரெனக் கண்டுபிடிக்கும் பதியை மேற்கொண்டோம். அந்தத் தளம் எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் (IP Member Tracker) வாய்ப்பைப் பயன்படுத்தி கிண்டியில இருக்கிற முகவரியைக் கண்டு பிடித்துவிட்டோம். நாளை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க உள்ளோம். ஏற்கனெவே அவர்களிடம் சொல்லி வைத்தாயிற்று? அப்படின்னு ஒரு பதிவு இணையதளத்தில் வெளிவந்தது.

அவ்வளவுதான் அடுத்த சில மணி நேரத்தில் பாலபாரதிக்கு போன் போட்டு “நான் உங்களைப் பார்க்கணும் எங்க வரணும்’னு கேட்குது ஒரு ஆண் குரல். இடத்தை சொன்னவு-டனே குறிப்பிட்ட நேரத்தில ஒரு கார்ல வந்திறங்கினார் ஒரு ஆளு. சல்மா அயூப்ங்கற பெயருக்கு பின்னாலே ஒளிஞ்சிருந்த பூணூல் பேர்வழி தான் அவரு.

முதல்ல “நான் எழுதல. என் தளத்தின் முகவரியிலிருந்து என் பாஸ்வேர்டு தெரிஞ்ச யாரோ இந்த மாதிரி செஞ்சிருக்காங்க’ன்னு சொல்லி கெஞ்சியிருக்காரு. “நாங்க இதுபத்தி போலீஸ்ல போட்டுக்கொடுக்கப்போறோம். உங்க பாஸ்வேர்டல எழுதறத யாருன்னு அப்பத் தெரிஞ்சிடும்ல’ என்று அ.மு.க. சார்பில் பாலபாரதி சொல்ல அ.மு.க. (அனானி முன்னேற்றக் கழகம்) ஒரு மணி நேரத்தில மெல்ல மெல்ல ஒத்துக்கிட்டு, மன்னிப்புக் கேட்டுட்டு இனிமே இதுமாதிரி செய்ய மாட்டேன்னு எழுதிக் கொடுத்துட்டுப் போயிட்டாரு.

நம்மாளுகதான் பெருந்தன்மையான ஆளுகளாச்சே! ‘மாட்டிக்கிட்டாரு மாப்புள! ஆனா சகபதிவர்தானே அதனால் மன்னிச்சு விட்டுடுவோம்’னு முடிவெடுத்து பெயரைக் கூட வெளியில சொல்லாம விட்டுட்டாங்க. இந்தப் பெருந்தன்மையை புரிஞ்சுக்கத் தெரியாத பூணூல், ‘நான் எழுதல என்னை மிரட்டிக் கையெழுத்து வாங்கிட்டாங்க’ன்னு வெளியில போய்ச் சொல்ல ‘பாப்பானுக்கு முன்புத்தி கொஞ்சமும் கிடையாதுங்கிறது’ அப்பத்தான் ரொம்பப் பேருக்கு விளங்குச்சு. “ஏன்டா, நீ எங்கிருந்து எழுதறன்னு இங்கிருந்தே கண்டுபிடிச்ச எங்களுக்கு நீ என்ன பேசினன்னு பதிஞ்சு வைக்கத் தெரியாதா? இந்த புளுகு வேலை செஞ்சுக்கிட்டிருந்தா. நீ வந்ததிலிருந்து என்ன பேசினங்குற ஆடியோவை இணையத்தில் போட்டுடுவோம்’ நம்மாளுக சொன்னதுக்கப்புறம் தான் அந்த இழிபிறவிக்கு புரிஞ்சது- ‘ஆகா நமக்கு அறி-வில்லை’ங்கிறது.

“இந்த மாதிரி பண்ற ஆளுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட இறக்கம் காட்டக்கூடாது வோய்! ஆனா அதே மாதிரி பல புனை பெயர்ல எழுதற உங்களவாவைப்பத்தி ஏன் பேச மாட்டேங்குறீர்’னு ஒரு பூணூல் கொதிச்சது.

“புனை பெயர் வேற, போலிப் பெயர் வேற, என் புனை பெயர்ல நான் என்ன வேண்ணா எழுதிட்டுப் போறேன். ஆனா உன்னைய மாதிரி ஆபாசமா நான் எழுதல. அப்படியும் என்னையக் கண்டுபிடிக்கணும்னா நீங்கதான் திறமைசாலி வெங்காயங்களாச்சே. முடிஞ்சா கண்டுபிடிச்சுக்க’ன்னு பதிலடிச்சுவிட்டதில மூக்கில ப்ளாஸ்திரி ஒட்டற அளவுக்கு உடைஞ்சு போச்சு.

இப்படி “ஆப்பு’ அடிச்ச ‘ஆபரேசன் சல்மா அயூப்’ பண்ண தோழர்களுக்கு பாராட்டு சொல்லணும்னாலும். அந்தப் பூணூலோட ‘சைபர் கிரைம்’ குற்றவாளியா போஸ் கொடுக்க வச்சிருந்தா தானே மத்தவங்களுக்கு புத்திவரும். விட்டுட்டீங்களே பாலபாரதி! எங்களுக்கு அந்த இறக்கம்லாம் தேவையில்லை. அந்த இழி பிறவியோட பெயரை நாங்க சொல்லிடுறோம்.ஆபரேசன் சல்மா அயூப்ல ஆப்பு அடிக்கப்பட்ட ஆளு ‘ஜெயராமன்’ங்கிற பூணூலு!

Posted in Bavanandhi, Blogspot, Controversy, Issues, Operation, Salma Ayub, Salma Ayup, Tamil Blog, Tamil Blogs, Unmai, unmaionline, Viduthalai, Vituthalai | Leave a Comment »