Archive for the ‘Tamil Audio’ Category
Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2007
நயன்தாரா கதைதான் கெட்டவன் : சிம்புவுடன் ஜோடி சேர எதிர்ப்புகள்- புதுமுகம் லேகா சொல்கிறார்
வல்லவனுக்கு பிறகு சிம்பு நடிக்கும் புதிய படம் கெட்டவன். இப் படத்துக்கு சிம்புவே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நந்து இயக்குகிறார்.
கெட்டவனில் கதாநாயகி யாக புதுமுகம் லேகா நடிக்கிறார். இவர் எஸ்.எஸ்.மிïசிக்கில் பணியாற்றியவர். டெலிவிஷனிலும் சத்யம் தியேட்டரிலும் லேகாவை பார்த்த சிம்புவுக்கு பிடித்து போக கெட்டவனில் நாயகியாக்கி விட்டார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.
நயன்தாராவுக்கும் தனக்கும் இருந்த தொடர்பு உலகறிந்த விஷயம் என்றும் சொந்த காதல்கதை கெட்டவன் படத்தில் இருக்கும் என்றும் சிம்பு கூறியிருந்தார்.
எனவே கெட்டவன் படம் நயன்தாரா கதை என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் கெட்டவனில் சிம்புவுடன் ஜோடி சேர தனக்கு எதிர்ப்புகள் வந்ததாக லேகா கூறினார். அவர் அளித்த பேட்டி
சினிமாவில் நடிக்க ஏற்கனவே சிறுசிறு வாய்ப்புகள் வந்தன. அவற்றை மறுத்தேன். பெரிய கேரக்டர் கிடைத்தால் பண்ணலாம் என்று இருந்தேன். கெட்டவன் கதாபாத்திரம் நான் எதிர் பார்த்த மாதிரி இருந்தது. ஓகே சொல்லி விட்டேன். டெலிவிஷனில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நான் இருந்த போது என் மேனரிஸம் எப்படி இருந்ததோ அது சினிமாவில் இருக்காது முற்றிலும் வித்தியாசமாக தெரிவேன்.
சிம்பு ஜோடியாக நடிக் கிறேன் என்றதும் தமிழ்நாடு முழவதிலும் இருந்து எதிர்ப்புகள் வந்தன. பலர் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள். கெட்டவன் படம் சிம்புவின் நிஜக்கதைஅதில் உன்னுடைய கேரக்டர் நயன்தாரா உன்னை காதலித்து விட்டு இறுதியில் உன் இமேஜை கெடுத்து பழி வாங்குகிற கதை. எனவே அந்த படத்தில் நடிக்க சம்மதிக்காதே என்று பலர் வற்புறுத்தினார்கள். எவ்வளவு பணம் தந்தாலும் நடிக்காதே என்றும் அறிவுறுத்தினர்.
ஆனால் சிம்புவுடன் நடித்த போது அப்படி எதுவும் தெரியவில்லை. அவர் ஜென்டில்மேன் ஆக பழகினார். சிம்பு பற்றி கேள்விப்பட்டதற்கும் நேரில்பார்த்ததற்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லாமல் இருந்தது. எப்படி நடிக்கணும் என்று எனக்கு சொல்லி கொடுத்தார்.நிறைய உதவி செய்தார்சிம்புவை பிடிக்காதவர்கள் தான் அவருக்கு எதிராக இப்படிப்பட்ட செய்திகளை பரப்பி விட்டுள்ளனர்.
Posted in Actor, Actress, Cinema, Director, DJ, Films, Gossip, Heroine, Intro, Introduction, Kettavan, Kiss, Kisukisu, Lega, Leka, Love, Manmadhan, Manmathan, Media, Movies, MSM, music, Nandhu, Nanthu, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Rajendar, Rajender, Rajenthar, Rajenther, Rumor, Rumour, Sensational, Sensationalism, Silambarasan, Simbu, SS Music, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, Thamizh, Thamizh Film, Thamizh Movies, Thamizh padam, TR, Vallavan, Vambu, Vampu | 3 Comments »
Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007
யாரைத்தான் நம்புவதோ?
ஜீ.வி. பிலிம்ஸ் நிறுவனம், புதிய படங்களை எடுப்பதோடு, பழைய கடன்களையும் பைசல் செய்து வருகிறது.
கம்பெனிக்கு வரும் இயக்குனர்களை முழுதாய் நம்பி, “முதல் பிரதி’ அடிப்படையில் படம் தயாரித்து வருகிறார்கள்.
“கைவந்த கலை’ படத்துக்கு பாண்டியராஜன் கொடுத்த பட்ஜெட்டைவிட பத்து லட்சம் அதிகம் செலவானதாம்!
அடுத்து ஜீவாவின் (சமீபத்தில் மறைந்த இயக்குனர்) உதவியாளர் சங்கர் கே. என்பவர் ஐம்பது லட்சம் செலவில், “திருடி’ என்ற படத்தை எடுப்பதாகக் கூறி ஒரு கோடி வரை செலவை இழுத்துவிட்டாராம்.
ஜீ.வி. பிலிம்சுக்கு, இப்போது “உற்சாகம்’ என்ற படத்தை இயக்கிவரும் ரவிச்சந்திரன் (ஏற்கெனவே, கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்த வேளை, மஜ்னு படங்களை இயக்கியவர்) அனுபவம் உள்ள டைரக்டர் என்பதால் அவர் கேட்ட பட்ஜெட்டை கொடுத்து உதவினர் தயாரிப்பாளர்கள். ஆனால், ரவிச்சந்திரன் கொடுத்த பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவழித்து படத்தை உருவாக்கி இருக்கிறாராம்.
பழைய இயக்குனரும் கொடுத்த பட்ஜெட்டைக் காப்பாற்றவில்லை. புதிய இயக்குனரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. யாரைத்தான் நம்புவதோ என்று நேர்மையாக புலம்புகிறது தயாரிப்பு தரப்பு.
Posted in Budget, Cinema, Director, Economic, Expenses, Films, Finance, Flop, Gossip, GV, Hit, Jeeva, Kai Vantha Kalai, Kisukisu, Loss, Majnu, Manirathanam, Manirathnam, Maniratnam, Movies, Pandiarajan, Pandiyarajan, Profit, Ravichandran, Rumour, Rumours, Shankar, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Blogs, Tamil channels, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Magaizine, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, Thirudi, Urchagam, Urchakam, Venkatesvaran, Venkateswaran, Woes | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 8, 2007
ஜூன் மாதம்தான் ‘சிவாஜி’ ரிலீஸ்: சில எதிர்பார்ப்புகளும் எதிர்ப்புகளும்…?
ரஜினியின் ‘சிவாஜி’ படம் வெளிவருவதற்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும் எதிர்ப்புகளையும் உண்டாக்கியிருக்கிறது.
எதிர்பார்ப்புகள்:
* தமிழகத்தில் சிவாஜியை ரிலீஸ் செய்யும் உரிமையை ஜெமினி லேப் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. 65 கோடிக்குதான் படத்தை விற்பனை செய்வோம் என்று கூறி வந்த ஏ.வி.எம் நிறுவனம் 55 கோடிக்கு ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுள்ளது
* மே 17}ல் ரிலீஸôகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவாஜி, ஜூன் மாதம் தான் திரைக்கு வருகிறாராம். இதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
காரணம் 1: ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இருவரும் நடிக்க, ஒரு காட்சி எடுத்து இணைக்கப்பட இருக்கிறது.
காரணம் 2: ஏ.ஆர். ரஹ்மான் படத்தின் பிண்ணனி இசைக்கு கால தாமதம் செய்கிறார்.
எதிர்ப்புகள்:
* படத்தின் டிக்கெட்டுகள் ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து வியாபாரம் செய்யப்பட்டது சட்டப்படி தவறு. தியேட்டர்களில் வைத்துதான் சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும். கல்யாண மண்டபத்தில் வைத்து விற்பனை செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தை நாடி பிரச்சினையை கிளப்ப ஒரு குழு தயராகி வருகிறதாம்.
* பாமக நிறுவனர் ராமதாஸ், தனது தொண்டர்களிடம் ரகசிய கட்டளை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி சிவாஜி படம் ரிலீஸôகும் தியேட்டர்களில் எங்கெங்கெல்லாம் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால், உடனே தனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளாராம்.
சிவாஜி என்றாலே போராட்டம்தான் போல…
Posted in Amitabh, Anbumani, ARR, Audio, AVM, Bachan, Chiranchivi, Chiranjeevi, Director, Fans, Gemini, Kollywood, May, music, PMK, Ragavendira, Ragavendra, Ragaventhra, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Ramadas, Ramadoss, Rehman, Sankar, SC, Shankar, Shivaji, Shivaji the boss, Shreya, Shriya, Sirancheevi, Siranjeevi, Sivaji, Sivaji Fans, Sivaji Story, Sivaji the Boss, Sriya, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Telugu, Tollywood | 1 Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007
பாடலோடு வாழ்ந்து….
“திருமகன்’ – மாளவிகா, எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படங்களிலும், நடித்த படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிவிடும். ரத்னகுமார் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கும் “திருமகன்’ படத்தைப் பற்றிக் கேட்டபோது…
“” நான் இயக்கிய “குஷி’ “வாலி’ படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவா என்னுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். நான் நடித்திருக்கிறேன் என்பதற்காகச் சொல்லவில்லை… தேவா இசையமைத்த படங்களிலேயே இதுதான் பெஸ்ட். இதுவரை அவர் இசையமைத்த படங்களில் இந்தப் படத்தின் ரீரெக்கார்டிங்குக்காகத்தான் அதிக நாள்கள் செலவிட்டுள்ளார்.
கிராமிய மணம் கமழும் இந்தக் கதைக்கு வைரமுத்துவின் பாடல் வரிகளும், தேவாவின் இசையும் பெரிய பலம். குறிப்பாக
- “பொறந்தது’,
- “இதுக்குத்தானா’,
- “ஷாக்கடிக்குது’,
- “திருமகனே’ போன்ற பாடல்களைக் கேட்டு, பார்த்து மட்டும் மகிழாமல் பாடியும், பாடலோடு வாழ்ந்தும் மகிழ்வீர்கள். நான் இதுவரை பணியாற்றிய படங்களில் பாடல்கள், வெஸ்டர்ன் கலந்து அல்ட்ரா மாடர்ன் டைப்பில் இருக்கும்; கிராமியப் பின்னணியிலான “திருமகன்’ பாடல்கள் அல்ட்ரா டைப் ஆசாமிகளையும் அசத்தும்” என்றார் எஸ்.ஜே.சூர்யா.
Posted in Deva, Kushi, Malaviga, Malavika, Rathnakumar, SJ Soorya, SJ Surya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Thirumagan, Thirumakan, Vaali, Vairamuthu, Vali | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006
எல்லோரும் பாடலாம்!
நம்மைப் போல் நிறைய பேர் ரேடியோவைக் கேட்டு வளர்ந்தவர்கள். இலங்கை வானொலி நிலைய நிகழ்ச்சிகள், திருச்சி நிகழ்ச்சிகள் என்று மனம்கவர்ந்த நிகழ்ச்சிகள் எத்தனையோ. அதேபோல், எத்தனையோ அறிவிப்பாளர்கள், தங்கள் வளமான குரலாலும், நிகழ்ச்சியை நயத்துடன் வழங்கும் முறையாலும் நம்மைக் கவர்ந்தவர்கள். இன்று, ரேடியோ மிர்ச்சியும் சூரியன் எஃப்.எம்&மும் நம் செவிகளைக் குளிர் வித்தாலும், எப்போது பார்த்தாலும் சினிமா பாட்டுதான். கூடவே உற்சாகத்தைப் புட்டி புட்டியாக ஊட்டியே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, உச்சபட்ச குரலில் அறிவிப்பாளர்கள் குதிக்கிறார்கள்.
இது ஒருபக்கம்… இன்னொரு பக்கம், ஆர்வமும் திறமையும் உள்ள எல்லோருக்குமே இதுபோன்ற வானொலி நிகழ்ச்சிகள் தொகுக்கவோ, வழங்கவோ வாய்ப்பு கிடைப்பதில்லை. தங்கள் குரல் வளத்தால், மக்களைக் கட்டிப்போட முடியாமல் இருப்பவர்களும் ஏராளம். இவர்களுக்கு எல்லாம் வரப்பிரசாதமாகக் கிடைத்திருப்பதுதான் ‘பாட்காஸ்டிங்’ (றிஷீபீநீணீstவீஸீரீ).
‘பாட்காஸ்டிங்’ என்றால்என்ன? முதலில் ‘வலைப்பூக்கள்’ எனப்படும் பிளாக்குகளைப் (ஙிறீஷீரீs) பார்த்து விடுவோம். பிளாக்கர் (ஙிறீஷீரீரீமீக்ஷீ) என்ற நிறுவனம் ஒவ்வொருத்தரும் தம் கருத்துக்களை, அனுபவங்களை இணையத்தில் எழுதி வெளியிட வழி செய்தது. இப்படி ஒவ்வொருவரும் தமக்கான ஒரு சின்ன ‘இணையக் குடிலை’ உருவாக்கிக் கொள்ளலாம். இது இலவசமான சேவை. இப்படி உருவாக்கப்படும் குடிலில், ‘இம்சை அரசன் 23&ம் புலிகேசி’யின் விமர்சனம் முதல், இத்தாலியின் வெற்றி வரை எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். கிண்டல் செய்யலாம். திட்டலாம். குறை சொல்லலாம். இது உங்கள் இடம்.
இந்த வலைப்பூக்கள் மூலம், எழுதத் தெரிந்த ஒவ்வொருவரும் சுயமான பதிப்பாளரும் ஆகிவிட்டார்கள். பத்திரிகையில் எழுத முடியாத எத்தனையோ கருத்துக்கள், வலைப்பூக்களில் இடம்பெறுகின்றன. அதேபோல், பத்திரிகைகளில் இடம் கிடைக்காத எத்தனையோ எழுத்தாளர்கள், இணைய எழுத்தாளர்கள் ஆனதும் இப்படித்தான். சர்வ சுதந்திரம். எழுத்தை ஜனநாயகப்படுத்தியது இந்த வலைப்பூக்கள்.
எழுதத் தெரிந்தவர்களுக்கு வலைப்பூக்கள். நல்ல குரல்வளத்துடன் பாடத் தெரிந்தவர்களுக்கு… பேசத் தெரிந்தவர்களுக்கு… தொகுக்கத் தெரிந்தவர்களுக்கு..? இவர்களுக்கு என்று உருவானதுதான் ‘ஆடியோ பிளாக்ஸ்’ (கிuபீவீஷீ ஙிறீஷீரீs). இதன் மற்றொரு பெயர்தான் ‘பாட்காஸ்டிங்’. இதைத் தமிழில் ‘குரல் பத்தி’ என்று அழைக்கிறார்கள்.
இப்படி ‘பாட்காஸ்ட்’ செய்பவர்கள் எல்லாம் இப்போது சுயமான ஒலிபரப்பாளர்கள் ஆகிவிட்டார்கள். ஒவ்வொரு நாளும் தங்களுக்குப் பிடித்த விஷயங்கள் பற்றி கருத்து சொல்கிறார்கள். விமர்சனம் செய் கிறார்கள். பழைய பாடலில் தோய்ந்து எழுகிறார்கள். முடிந்தபோது, அடுத்தவரை பேட்டி எடுத்து ஒலிபரப்புகிறார்கள். ஒருவரே எல்லாம் செய்வதால், அவரின் விருப்பத்துக்கேற்ப, அவரது ‘குரல் பத்தி’ சிறப்பாக இருக்கிறது.
Posted in Audio Blogs, Blogs, Junior Vikadan, Podcasting, podcasts, R Venkatesh, Tamil, Tamil Audio, Tamil Pod, Vikatan | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 31, 2006
தமிழ்ப் பாடல்களுக்கு தனி இணையதளம் முதல்வர் தொடங்குகிறார்
சென்னை, ஆக. 31: தமிழ்ப் பாடல்களுக்கென்று பிரத்யேகமான இணையதளம் வியாழக்கிழமை தொடங்கப்படுகிறது. சென்னை ஆன்லைன் இணையதள இதழ் இந்த இணையதளத்தைத் தொடங்குகிறது.www.tamil-songs.co.in
என்ற இந்த இணையதளத்தை தமிழக முதல்வர் கருணாநிதி முறைப்படி தொடங்கி வைக்கிறார். மத்திய இணை அமைச்சர் ஜி.கே. வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர், திரைப்பிரமுகர்கள் எம்.சரவணன், ராம்குமார், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
Posted in Chennaionline, CM, E-Commerce, Kalainjar, Karunanidhi, MP3, Online, Tamil, Tamil Audio, Tamil Cinema, Tamil Music, Website | 1 Comment »