Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Tambaram’ Category

Law on protection of waterbodies vs Govt buildings encroachment – Environment

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

நீர்நிலை ஆக்கிரமிப்பில் அரசு கட்டடங்கள்

வி. கிருஷ்ணமூர்த்தி

தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் அகற்றுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்னர்தான் ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வழி வகுக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சுமார் 38 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசித்து வருவதாகத் தெரிய வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நீர்நிலைகளின் ஏதாவது ஒரு பகுதியில் மட்டும்தான் இருக்கின்றன. ஆனால், நீர்நிலைகளை ஒட்டுமொத்தமாக அழிக்கும் வகையில் பல்வேறு அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதுதான் அதிர்ச்சியூட்டும் செய்தி.

நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சமுதாயக்கூடங்கள், நூலகங்கள், பஸ் நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் நீர்நிலைகளையொட்டியே அமைந்துள்ளன.

மதுரை உலகனேரி கண்மாயில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் உள்ள அத்திகுளம், செங்குளம் கண்மாயில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட அப்போதைய தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தலைமையில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. தாம்பரத்தை அடுத்த கோவிலம்பாக்கம் ஏரி என பல்வேறு நீர்நிலைகளில் அரசு பள்ளி உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

2006 ஆகஸ்டில் சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் துரைப்பாக்கத்தில் “ரெட்டைக் குளத்தை’ வணிக வளாகமாக்கும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “”அரசியல் சட்டத்தின் 51-ஏ (ஜி) பிரிவின்படி ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. எனவே, அவற்றில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்காமல், ஏற்கெனவே இடம்பெற்றிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்” என்றனர்.

இருப்பினும், இந்த வழக்கில் தொடர்புடைய குளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

2005 ஜூன் 27-ல் ஆக்கிரமிப்பு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, இப்ராஹிம் கலிஃபுல்லா ஆகியோர் அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். இப்போது போலவே அப்போதும் கால வரம்பு நிர்ணயித்தனர்.

1997-ல் உச்ச நீதிமன்றம், நீர்நிலைகளை பொதுப் பயன்பாடு என்ற காரணத்துக்காக எடுப்பதும் தவறு என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.

2005 ஜூனில் ஏரி பாதுகாப்பு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கற்பகவிநாயகம், சி. நாகப்பன் ஆகியோர் மேற்கூறிய தீர்ப்பை தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டி நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மதிக்காத அதிகாரிகளை நீதித்துறையினரும், நீர்நிலைகளில் அரசு சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை தங்கள் அலுவலகங்களாக ஏற்றுக்கொள்ளும் நீதித்துறையினரை அதிகாரிகளும் எப்படி பார்க்கிறார்கள் என்பதே மக்களிடம் எழுந்துள்ள கேள்வி.

நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த அரசும் குறிப்பாக, வருவாய்த்துறையினரும் ஆர்வம் காட்டுவதில்லை. தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாததும் ஒருவகையில் நீதிமன்ற அவமதிப்பே. எனவே, இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகளின் செயலை நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து, அவமதிப்பு வழக்காக ஏன் எடுத்துக்கொள்வதில்லை?

எத்தனை தீர்ப்பு வந்தாலும், எத்தனை சட்டம் போட்டாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்ற அதிகாரிகளின் மனப்போக்கு மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உறுப்பினர்களும் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டனர். இதற்கு அதிகாரம் அளிப்பதற்காகவே தற்போது சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஏழைகள் என்பதற்காக ஏரி, குளங்களை ஆக்கிரமித்தவர்களை விட்டுவிட முடியாது. என்றாலும், அவர்களுக்கு உரிய விலையில் உறைவிட வசதிகளை அரசு அளிக்கத் தவறுவதே, பிரச்னைக்கு அடிப்படைக் காரணம். அதேவேளையில், நீர்நிலைகளைப் பொதுப் பயன்பாட்டுக்காக அரசுத் துறைகள் ஆக்கிரமிப்பதை எந்த விதத்திலும் அனுமதிக்கவும் கூடாது.

விவசாயம், நீர்ப்பாசனம் என்பதோடு நிற்காமல் நிலத்தடி நீர் வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சமநிலை ஆகியவையும் இந்த நீர்நிலைகளைச் சார்ந்தே இருக்கிறது. ஏரி, குளங்களை நமது முன்னோர் உருவாக்கியது ஏன் என்பதை அனைவருக்கும் குறிப்பாக, நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு. அரசு கட்டடமோ, தனியார் குடியிருப்போ எதுவாக இருந்தாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் புதிய ஆக்கிரமிப்புகள் வராமல் தடுப்பதும்தான் தற்போதைய அவசர, அவசியத் தேவை.

————————————————————————————–

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் மவுனம்: ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்துமா அரசு?


சென்னை: ஏரி, குளம், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலக்கெடு விதித்துள்ள ஐகோர்ட் உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது ஒட்டு மொத்த பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் குடிநீர் ஆதாரமாக 300 ஏரிகள் உள்ளன. இதில், சென்னை நகரில் 30 ஏரிகளும், புறநகரில் 270 ஏரிகளும் உள்ளன. ஒவ்வொரு ஏரியும் குறைந்தபட்சம் நுõறு ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்டது.

ஏரிகள் அனைத்தும் “மராமத்து’ முறையில் அந்தந்த கிராம மக்களே துõர்வாரி, கரையை பலப்படுத்தி வந்தனர். இப்பணி பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 30 ஆண்டுகளில் சென்னை மற்றும் புறநகர் பகுதி அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தது. குடியிருப்புகளும் அதிகரிக்க ஆரம்பித்தன. இதன் விளைவாக விவசாய நிலங்கள் அனைத்தும் பட்டா நிலங்களாக மாற்றப்பட் டன.

ஏரியை சுற்றி குடியிருப்புகள் வளர்ந்ததால் ஒவ்வொரு ஆண்டு பருவ மழைக்கும் ஏரி நிரம்பி உபரி நீர் கலங்கலில் வெளியேறி போக்கு கால்வாய் வழியாக கடலில் கலந்தது.

ஏரிகள், நீர் இல்லாமல் தரிசு நிலம் போல காட்சியளித்தன. அரசும் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள சில ஏரி நிலங்களின் ஒரு பகுதியை வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் என பல தரப்பட்ட துறைக்கு பிரித்து கொடுத்தது. ஏரியின் பரப்பளவு மூன்றில் ஒரு பங்காக சுருங்கியது. இதைப் பார்த்த அரசியல்வாதிகள், உள்ளூர் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக விரோத கும்பல்களுக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வழி கிடைத்தது.

சென்னை புறநகரில் உள்ள பல ஏரிகளின் ஒரு பக்க கரையை உடைத்து ஆக்கிரமிக்கப்பட்டது. அந்த இடங்கள் கூறு போட்டு அப்பாவி பொதுமக்களுக்கு சொற்ப விலைக்கு விற்கப்பட்டன. ஆக்கிரமித்த இடங்களுக்கு பல துறையினர் “மாமுல்’ பெற்று சாலை வசதி, மின் இணைப்பு மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்டவை வழங்கி ஆக்கிரமிப்பு இடங்களில் குடியிருக்க அனுமதியும் அளிக்கப் பட்டது.

இதனால், சென்னை மற்றும் புறநகரில் நீர்நிலைகளுக்கு ஆதாரமாக உள்ள பல நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஏரிகள் காணாமல் போயின. மிகப்பெரிய ஏரிகளாக விளங்கிய வேளச்சேரி ஏரி, பள்ளிக்கரணை ஏரி, போரூர் ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் பல மடங்கு சுருங்கின.அதேபோல, ஒவ்வொரு ஏரிக் கும் கலங்கல் இருந்தது. அந்த கலங்கல் வழியாக வெளியேறும் உபரிநீர் கடலில் கலக்க நுõறடிக்கும் மேற்பட்ட அகலம் கொண்ட போக்கு கால்வாய் இருந்தது.

சில ஆண்டுகளாக மழை பொய்த் ததால் பெரும்பாலான வாய்க் கால்கள் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்து விட்டனர். நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு ஐகோர்ட் காலக்கெடு விடுத்துள் ளது. ஐகோர்ட்டின் உத்தரவை தமிழக அரசு மதித்து ஏரிகள், போக்கு கால் வாய் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாவண்ணம் ஏரி யை கம்பிவேலி போட்டு பாதுகாக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இதனால், குடிநீர் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

ஆக்கிரமிப்புகள் அகற்ற கெடு:

ஏரியை காப்பாற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுநல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

* நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் நவம்பர் மாதத்திற்குள் ஒரு திட்டம் இறுதி செய்யப்பட வேண்டும்.

* ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க அரசு பரிசீலிக்கலாம்.

* நீர் நிலை ஆக்கிரமிப்புகளை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை சிவில் கோர்ட் அனுமதிக்கக்கூடாது.

* பாதிக்கப்பட்டவர் ஐகோர்ட் டை அணுகலாம்.

* நீர் நிலைகளை ஆக்கிரமித்து நிலங்களை விற்றவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* எதிர்காலத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தால் நோட்டீஸ் வழங்காமலே ஆக்கிரமிப்புகளை அகற்றலாம்.

* ஆக்கிரமிப்புகள் அகற்றியது குறித்து வரும் 2008ம் ஆண்டு ஜூன் 15ம் தேதிக்குள் பொதுப்பணித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Posted in activism, Activists, Adambakkam, Agriculture, Assets, Boundary, Buildings, Civic, Drink, Drinking, encroachers, encroachment, encroachments, Enforcement, Environment, Evict, Eviction, Farmers, Govt, Ground water, groundwater, harvest, harvesting, Irrigation, KANCHEEPURAM, Lakes, Land, Law, Order, Original, Pallavaram, peasants, Peerkankaranai, penal, Private, Protection, Public, Rain, Rajakilpakkam, resettlement, rice, River, structures, Tambaram, Tanks, Temple, Ullagaram, Water, waterbodies, waterbody | Leave a Comment »

Chennai Overbridge & Flyover Construction Delays – Status Report

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

பாதியில் முடங்கிய 3 மேம்பாலங்கள்: ரூ. 42 கோடி வீணாகும் அவலம்

சென்னை, ஆக. 2: சென்னை தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை காரணமாக ரூ. 42 கோடியில் தொடங்கப்பட்ட 3 மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

  • தாம்பரம் சானடோரியம்,
  • பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை,
  • பல்லாவரம் திரிசூலம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படவில்லை.

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து இங்குள்ள குரோம்பேட்டை நியூகாலனி குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் வி. சந்தானத்துக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறையினர் அளித்துள்ள பதில் விவரம்:

சானடோரியம் மேம்பாலம்:

ரூ. 14.40 கோடி திட்ட மதிப்பீட்டில் 2003 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த மேம்பாலப் பணிகள் திட்டமிட்டபடி 2005 ஜூனில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

70 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவது, கிழக்குத் தாம்பரம் பகுதியில் இறங்குதளம் அமைக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு ஆகியவற்றால் இந்த மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி 2008 டிசம்பருக்குள் இந்த மேம்பாலப் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.

பல்லாவரம் -துரைப்பாக்கம் ரேடியல் சாலை மேம்பாலம்:

ரூ. 22 கோடி திட்ட மதிப்பீட்டில் 2004 பிப்ரவரியில் இந்த திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன.

திட்ட மதிப்பீட்டில் ரூ. 20 கோடி, நிலம் கையகப்படுத்தவே செலவிடப்பட்ட நிலையில் இதுவரை 53 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 723 சதுர மீட்டர் நிலம் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 2006 பிப்ரவரியில் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி 2008 ஜூனில் இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிக்கப்படும் என தெரிகிறது.

பல்லாவரம்- திரிசூலம் மேம்பாலம்:

ரூ. 5.75 கோடி திட்ட மதிப்பீட்டில் 2003 நவம்பரில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

இதுவரை 40.55 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்புத்துறை நிலத்தை ஒப்படைக்காததால் திட்டமிட்டபடி 2005-ல் இந்த மேம்பாலப் பணிகள் முடிக்கப்படவில்லை.

பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலம் கிடைத்த நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் இதன் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமதம் ஏன்?:

இந்த மூன்று மேம்பாலங்களும் பாதியில் முடங்கியதற்கு இவற்றுக்கு தேவையான நிலத்தை பெறுவதில் ஏற்பட்ட பிரச்னையே காரணம்.

பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டங்களுக்கு முக்கியத் தேவை நிலம். ஆனால், இந்த திட்டங்களை உருவாக்கிய அரசு அதிகாரிகள் தேவையான நிலத்தை பெறுவதற்கான வழிமுறைகளை தெளிவாக வகுக்கவில்லை.

தனியார் பயன்பாட்டுக்கான பெரிய திட்டங்களுக்கு சாதாரண மக்களின் நிலங்கள் தேவை என்றால் விரைந்து செயல்பட்டு நிலத்தை கையகப்படுத்தும் அரசு நிர்வாகம், மக்களின் திட்டங்களுக்காக சில தனியாரிடம் இருந்து நிலத்தை பெறுவதில் மட்டும் ஆமை வேகத்தில் உரிய அக்கறை இன்றி செயல்படுவதே இத்தகைய திட்டங்கள் முடங்க முக்கிய காரணம் என இப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Posted in activity, ADMK, Airport, Auto, Bridge, Bus, Cars, Chennai, Commuter, completion, Construction, Dam, Data, Delays, DMK, Engineering, Expenses, flyover, Inflation, Information, infrastructure, L&T, Labor, laborers, Larsen, Larsen and Toubro, larsentoubro, Lights, Madras, Mayor, Overbridge, Pallavaram, Politics, Progress, Projection, Projects, Record, Roads, RTI, Scooter, Signal, Stalin, Stall, Statz, Surface, Tambaram, Thambaram, Thrisoolam, Thrisulam, Time, Toll, Toubro, Track, Transport, Trisoolam, Trisulam | Leave a Comment »

Rs 11000 cr outlay for rural roads under Bharat Nirman scheme

Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007

புதிய ஊரக சாலைகள் அமைக்க ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு

புது தில்லி, மார்ச் 28: நடப்பு நிதியாண்டில், நாட்டில் புதிய ஊரக சாலைகள் அமைக்க ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமரின் கிராம முன்னேற்ற திட்டத்தின் கீழ், மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ், ஆயிரம் மக்கள் வசிக்கும் அனைத்து கிராமங்களிலும் அனைத்துப் பருவநிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய தரமான புதிய சாலைகள் அமைக்கப்படும்.

மலைக் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களில் புதிய சாலைகள் அமைக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் நாட்டில் 66,802 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 1.46 லட்சம் கி.மீ. புதிய சாலைகள் அமைக்கப்படும். மேலும், 1.94 லட்சம் கி.மீ. பழைய சாலைகளும் புதுப்பிக்கப்படும்.

இத்திட்டம் 2005-06-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்ட இரு ஆண்டுகளில் 10,303 கிராமங்களுக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. 36,341 பழைய சாலைகள் மேம்படுத்தப்பட்டன. 2005-06 ஆம் நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ.4,219.98 கோடியும், 2006-07-ம் நிதியாண்டில் ரூ.5,376.28 கோடியும் செலவழிக்கப்பட்டதாக ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங் தெரிவித்தார். சாலை அமைப்புப் பணிகளில் தரத்தைப் பாதுகாக்க, மூன்றடுக்கு தரக் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் கூறினார்.

இப்பணிகளில் மக்களின் பங்களிப்பை உறுதிசெய்ய பணி நடைபெறும் இடங்களில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பணிகளின் நிதி நிர்வாகங்கள், தொழில்நுட்ப ஆய்வு ஆகியவை ஆன்லைன் மூலமாக கண்காணிக்கப்படுகிறது என அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங் தெரிவித்தார்.

========================================================
தமிழகத்தில் சாலை மேம்பாட்டுக்கு ரூ.77 கோடி: டி.ஆர். பாலு அனுமதி

புதுதில்லி, மார்ச் 29: மறுசீரமைக்கப்பட்ட மத்திய சாலை நிதித் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் சாலை ரூ.77.70 கோடி செலவில் சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு அனுமதியளித்துள்ளார்.

தமிழகத்தில், மாநில நெடுஞ்சாலைகள், முக்கிய மாவட்ட சாலைகள் மற்றும் இதர மாவட்டச் சாலைகளில் 26 சாலைகளில் விரிவாக்கப் பணிகளும் வலுப்படுத்தும் பணிகளும் நடைபெறும்.

முக்கியத் திட்டங்கள் விவரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம் -சோமங்கலம் சாலை மேம்பாட்டுக்கு ரூ.9 கோடி.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி -பட்டுக்கோட்டை -செங்கப்பட்டி சாலை ரூ.4.56 கோடியில் விரிவுபடுத்தப்பட்டு, மேம்படுத்தப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யார்-வந்தவாசி-போளூர் சாலை சதார்ரங்கல் சாலையுடன் இணைக்க ரூ.3.84 கோடி செலவிடப்படும்.

ஆற்காடு -விழுப்புரம் சாலைக்கு ரூ. 4.19 கோடி செலவிடப்படும்.

செய்யூர் -வந்தவாசி -போளூர் சாலையை மேம்படுத்தி, விரிவுபடுத்த ரூ.3.71 கோடி.

வேலூர் மாவட்டத்தில் திருவாளம் -காட்பாடி -வேங்கடகிரி கோட்டா சாலையில் பழுதுநீக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.4.10 கோடி செலவிடப்படும்.

சித்தூர் -திருத்தணி சாலையை மேம்படுத்த ரூ.4 கோடி செலவிடப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் பெண்ணாகரம் -நாதன்முறை சாலை மேம்பாட்டுக்கு ரூ.3.50 கோடி.

சேலம் மாவட்டத்தில் பொன்னம்மாபேட்டை முதல் வலசையூர் வீராணம் சாலை வழியாக சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.3.50 கோடி செலவிடப்படும்.

சென்னையில் ரூ.3 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கப்படும்.

திருவாரூர் மாவட்டத்தில் உளிக்கோட்டி -தளிக்கோட்டை-வடசேரி சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.5 கோடி செலவிடப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை -திருத்தணி -ரேணிகுண்டா சாலை மற்றும் இச் சாலையில் இடம் பெற்றுள்ள மேம்பாலத்தைப் புதுப்பிக்க ரூ.2.50 கோடி.

கரூர் மாவட்டத்தில் தோகமலைப்பட்டி சாலையில் பாலம் அமைக்க ரூ.1 கோடி செலவிடப்படும்.

திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சேலம், சிவகங்கை, கோவை, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திண்டுக்கல், சென்னை, தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, திருவள்ளூர், கரூர், ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் சிதம்பரத்திலும் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

Posted in Arcot, Artery, Auto, Balu, Bharat Nirman, Budget, Bus, car, Chengalpattu, Commerce, Development, Dharmapuri, DMK, Finance, infrastructure, Kanchipuram, Kanjeepuram, Karur, Pattukottai, Plan, PMGSY, Pradhan Mantri Gram Sadak Yojana, Raghuvansh Prasad Singh, Roads, Rural, Rural Development, Salem, Scheme, Suburban, Tambaram, Thiruvannamalai, Thiruvaroor, TR Balu, Transport, Transportation, Vandhavasi, Vellore, Village, Vizhuppuram | Leave a Comment »

Alternate Suggestions to Satellite City – Madras City Decongestion

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

நெரிசலை சமாளிக்க துணை நகரத்துக்கு மாற்றாக புதிய மாநகராட்சிகளை உருவாக்கலாம்- அரசுக்கு யோசனை

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை, செப். 8: சென்னையில் அதிகரித்துவரும் மக்கள் நெருக்கத்தைக் குறைக்க, புறநகர்ப் பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய மாநகராட்சிகளை உருவாக்கலாம் என நகர்ப்புற வளர்ச்சிக்கான பல்வேறு அமைப்புகள் யோசனை கூறியுள்ளன.

துணை நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டதை அடுத்து, இப் பிரச்சினைக்கு புதிய மாநகராட்சிகளை அமைப்பது மட்டுமே தீர்வாக அமையும் என இவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.

சென்னை மாநகரைவிட, “சென்னை பெருநகர்’ (சி.எம்.ஏ.) என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் வரையறுத்துள்ள பகுதிகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.

சென்னையில் தற்போது உள்ள மக்கள்தொகையைவிட சென்னை பெருநகர்ப் பகுதியின் மக்கள்தொகை 3 மடங்காக உள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளில் 4 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர்ப் பகுதியில் (சி.எம்.ஏ.) தற்போது 16 நகராட்சிகள், 20 சிறப்பு நிலை ஊராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

இவை அனைத்தும் ஒரே மாதிரியான நகர்ப்புறத் தன்மையுடன் இருந்தாலும் மக்கள்தொகை அடிப்படையில் வெவ்வேறு நிலை உள்ளாட்சிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இதனால் இப் பகுதிகளில் கழிவுநீர் அகற்றுதல், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சென்னையில் ஏற்பட்டுவரும் நெரிசலுக்கும், புறநகர்ப் பகுதிப் பிரச்சினைகளுக்கும் ஒரே சமயத்தில் தீர்வு காண வேண்டும்.

அதற்காக விவசாய நிலங்களையும், கிராமப்புறப் பகுதிகளையும் ஒட்டுமொத்தமாகக் கையகப்படுத்தி துணை நகரம் அமைப்பதை விட புறநகர்ப் பகுதிகளை ஒருங்கிணைத்து தனி நகரமாக அறிவிக்கலாம் என்கின்றனர் நகர்ப்புற வளர்ச்சி ஆய்வாளர்கள்.

புதிய மாநகராட்சிகள் சாத்தியமா?

தமிழகத்தில் தற்போது 6 மாநகராட்சிகள் உள்ளன. இவை தவிர திருப்பூர் 7-வது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. மேலும், ஈரோடு,
  2. தஞ்சாவூர்,
  3. வேலூர்,
  4. தூத்துக்குடி நகராட்சிகளை மாநகராட்சிகளாக அறிவிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

உள்ளாட்சித் துறையில் இதற்காக ஓர் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள தேவையைக் கருதி சென்னைக்கு அருகே புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது குறித்தும் அரசு பரிசீலிக்கலாம் என பல்வேறு ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடிப்படை வசதிகளை மேம்படுத்தினாலே போதும்: சென்னை மாநகரில் உள்ள அளவுக்கு, புறநகர்ப் பகுதிகளிலும் குடிநீர் விநியோகம், கழிவுநீர்-குப்பைகள் அகற்றுதல், சாலைகள், துரிதமான போக்குவரத்து ஆகிய வசதிகளை திட்டமிட்டு மேம்படுத்தினால் துணை நகரங்கள் தானாகவே உருவாகிவிடும்.

சென்னை புறநகரில் ஒரே மாதிரியான பகுதிகள் வெவ்வேறு நிலை உள்ளாட்சிகளாக இருப்பதால், சில பகுதிகளுக்கு மட்டுமே புதிய திட்டங்களின் பயன்கள் கிடைக்கின்றன.

இவ்வாறு பயன் பெறாமல் பின்தங்கியுள்ள பகுதிகள், மற்ற பகுதிகளுக்கு பிற்காலத்தில் இடையூறாக மாறிவிடும் என சிட்லபாக்கம் குடியிருப்போர் நலச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி. விஸ்வநாதன் கூறுகிறார்.

தீர்வு என்ன?

சென்னை பெருநகர்ப் பகுதியில் தாம்பரம் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகள், அம்பத்தூர் மற்றும் அதைச் சார்ந்த பகுதிகள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளன.

இவற்றின் வளர்ச்சி வேகம் அடுத்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரிக்கும் என நகர்ப்புற வளர்ச்சித் துறை மதிப்பிட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, கிண்டி முதல் மறைமலை நகர் வரையுள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாநகராட்சியையும், மதுரவாயல் முதல் மணலி வரையுள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாநகராட்சியையும் உருவாக்கலாம் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Posted in Ambattur, Chennai, Corporation, Government, Guindy, Ideas, Madras, Maduravayal, Manali, Maraimalai Nagar, Satellite City, Suggestions, Tambaram, Tamil, Thoughts | Leave a Comment »