Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Supreme Court’ Category

SC’s nod to Maharashtra for barrage across Godavari

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007

கோதாவரி ஆற்றுக்கு குறுக்கே மகாராஷ்டிரம் பாப்லி அணை கட்ட உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

புதுதில்லி, ஏப். 27: கோதாவரி ஆற்றுக்கு குறுக்கே பாப்லி அணை கட்டும் திட்டத்தை மகாராஷ்டிர அரசு தொடரலாம் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த அணை கட்டுமானத் திட்டத்துக்கு ஆந்திர மாநிலம் எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத் தக்கது.

கோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் வறட்சியால் வாடும் தெலங்கானா பகுதியில் குறைந்தது 5 கிராமங்களாவது பாதிக்கப்படும் என்று கூறி, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆந்திர மாநிலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், டி.கே.ஜெயின் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், அணை கட்டும் பணியை மகாராஷ்டிரம் தொடரலாம் என இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால் அடுத்த உத்தரவு வரும் வரை அணையின் மதகை திறக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆந்திர மாநில அரசு தவிர, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல எம்.பி.கள் மகாராஷ்டிர அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

————————————————————————————–

சுற்றுச் சூழல் சீர்கேட்டால் நீர்மட்டம் பாதியாக குறைந்த நர்மதா நதி

ஓம்காரேஷ்வர், (ம.பி) ஜூன் 8: சுற்றுச் சூழல் சீர்கேட்டினாலும், காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதினாலும் நர்மதா நதியின் நீர்மட்டம் 50 சதவீதம் குறைந்துள்ளது.

“”நர்மதா நதியின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என மத்திய நிலத்தடி நீர் அமைப்பு எச்சரித்துள்ளதாக மத்தியப் பிரதேச பாஜக துணைத் தலைவர் அனில் தாவே நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

மலைகள் மற்றும் காடுகளினால் ஆண்டு தோறும் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வந்தது. ஆனால், தற்போது காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதால் மழையளவு மட்டுமின்றி நதியின் நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.

1213கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த நதியில் 41 உபநதிகள் கலந்தாலும் வளர்ந்து வரும் சுற்றுச் சூழல் சீர்கேடானது, உயிரினங்கள் வாழ தகுதியில்லாத இடமாக மாற்றி விடக்கூடும்.

புண்ணிய நதியாக நர்மதா நதியை மக்கள் போற்றி வருகின்றனர். ஆனால், தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களின் அன்றாட தேவைகளான குளியல், துவைத்தல் போன்ற பணிகளுக்கு இந்த நதியைப் பயன்படுத்துகின்றனர்.

நதியை அசுத்தமாக்காமலும், அதே சமயம் சுற்றுச் சூழல் சீர்கேடு அடையாமலும் நீரைப் பயன்படுத்தும்படி மக்களை கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Posted in Andhra, Andhra Pradesh, AP, Conflict, Court, Dam, Districts, Drought, Environment, Famine, Floods, Forests, Garbage, Godavari, Godavari Water Disputes Tribunal, GWDT, Irrigation, Issue, maharashtra, Mountains, Narmada, Narmadha, Pollution, Rain, River, SC, Scarcity, Sriram Sagar, Supreme Court, Telengana, Telungana, Tribunal, Waste, Water | 1 Comment »

Justice System in India – Opinion, Analysis, Statistics

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 9, 2007

நீதிமன்றப் புறக்கணிப்புகள் நியாயமானவையா?

கோ. நடராஜன்

அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படும் மக்களாட்சி, சட்டத்தின் ஆட்சியே. சட்ட முறைமைப்படி வாழும் சமூகத்தில் மக்களுக்குச் சட்டத்தின் மூலம் பலவகையான உரிமைகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். மக்களும் நிர்வாகமும் செய்ய வேண்டியவை எவை எவை என்பதை சட்டம் நிர்ணயித்துள்ளது. மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும், குற்றம் செய்வோரைத் தண்டிக்கவும், சட்ட முறைமையின்படி நின்று நீதியை நிலைநிறுத்திடவும் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்.

ஆனால் நம் நாட்டில் நீதிமன்றங்கள், நீதி வழங்கிடும் பணியில் எவ்வாறு செயல்படுகின்றன? தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி ஆகும். தீர்ப்புகள் தாமதம் ஆவதால் நீதியைத் தேடி வந்தவர்கள், நீதிமன்றங்கள் தங்களை விட்டால் போதும் என்ற நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர்.

நீதி வழங்கும் செயல்பாட்டில், நீதிமன்றங்களின் பணி சிறக்க நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், வழக்காளிகள் – அனைவருமே ஒத்துழைக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் நடைமுறையில் நீதிக்கான முயற்சி, “தவளையும் எலியும்’ ஒரு கயிற்றில் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்து தப்பிக்கும் முயற்சியாகவே தொடர்கிறது. காலப் பயன்பாட்டின் அருமை உணராத, தாமதங்களைப் பற்றி கொஞ்சம்கூட அக்கறை எடுக்காத அமைப்பாக நீதிமன்றங்கள் செயல்படுவது, நிறுவன அமைப்புகளின் செயல்பாட்டு முறைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வியாகும்.

ஆண்டின் 365 நாள்களில் 100 சனி, ஞாயிறுகள் (12 சனிக்கிழமைகள் வேலை நாள்கள்) போக மீதமுள்ள 265 நாள்களில் 20-க்கும் மேற்பட்ட விடுமுறை தினங்கள் போக 245 நாள்களில் கீழமை நீதிமன்றங்களில் 60 முதல் 100 நாள்கள் வரை நீதிமன்றப் புறக்கணிப்புகள் செய்யப்படுகின்றன. காவல்துறையினரோடு ஏற்படும் மோதலே 50 சதவீத நீதிமன்றப் புறக்கணிப்புகளுக்குக் காரணமாகின்றன. காவல்துறைக்கோ, வழக்கறிஞர்களுக்கோ எல்லையற்ற அதிகார வரம்புகள் எதுவும் கிடையாது. காக்கிச்சட்டையும், கறுப்புக் கோட்டும் சட்டத்தை மதித்து நடந்து நீதியைக் காப்பதில் முன்னணியில் செயல்பட வேண்டியவர்கள்.

எந்தவொரு பிரச்சினை என்றாலும், நீதிமன்றங்களின் மூலம் தீர்வுகாண முடியும். நேரடிப் போராட்டங்களே கூடாது என்றாலும் போராட்டங்களின் மூலம் மட்டுமே தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற வழக்கறிஞர்களின் நிலைப்பாடு, நீதிமன்றங்கள் மீதான நம்பகத்தன்மைக்கு எதிரானதாகவே அமையும். நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டங்களின் பின், முடிவாய் என்ன நடந்தது என்பது சிலசமயம் புதிராகவே உள்ளது.

நீதிமன்றப் புறக்கணிப்புகள் நியாயம்தானா? நீதிமன்றப் புறக்கணிப்பில் பாதிக்கப்பட்ட வழக்காளிகளுக்கு நிவாரணம் என்ன? இதுபோன்ற கேள்விகளுக்கு, நியாயமான எந்தப் பதிலும் இல்லை. காவல்துறையினருடன் கருத்து மோதல் ஏற்பட்டால் காவல்துறை வழக்கறிஞர்கள் – உயர்நிலைக் குழுவிற்கு முறையிட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது நன்மை பயக்கும். கல்வியும், வளமும் இல்லாத மக்கள் நிறைந்த நம் நாட்டில், ஏற்றத்தாழ்வுகள் வெகுவாய் அதிகரிக்கின்ற சமூக அமைப்பில், விரைவான நீதி வழங்கல் முறையின் மூலமே மக்களாட்சியின் மாண்பினையும், மக்களுக்கான நல்வாழ்வையும் உறுதிப்படுத்த முடியும். “”நிலவுகின்ற சமூக அமைப்பிற்கு ஏற்பவே, நீதிமன்றங்களின் செயல்பாடும், நீதி வழங்கும் முறைமையும் அமையும்” என்ற கருத்தை முன்வைத்தார் லெனின்.

நீதிமன்றப் புறக்கணிப்பு என்பது வழக்கறிஞர்கள் தங்கள் பணிகளைச் செய்யாமல் இருப்பதே. பெரும்பாலான நாள்களில் பெரும்பாலான வழக்குகளில் எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி வழக்கறிஞர்கள் “வாய்தா’ வாங்கி இழுத்தடிப்பதும், இரு தரப்பு விவாதங்கள் முடிந்தபின்னும், “”விளக்கம் கேட்டல்” என்ற பெயரில் தீர்ப்பைத் தராமல் நீதிபதிகள் மாதக்கணக்கில் இழுத்தடிப்பதும் வேறு வகையிலான நீதிமன்றப் புறக்கணிப்புகள்.

நீதிமன்றப் புறக்கணிப்புகள் எவ்வகையில் வெளிப்பட்டாலும் அவை நியாயமற்றவை. சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானவை. குற்றவாளிகளுக்கு சாதகமானவை. அடிப்படை அறநெறிகளுக்கும் புறம்பானவை.

நம் நீதிமன்றச் செயல்முறைகளில் பெரும் மாற்றங்கள் வந்தால் தவிர “விரைவான நீதி’ கானல்நீரே. உயர் நீதிமன்றங்களில் “ரிட்’ வழக்குகள் அனுமதிக்கப்பட்ட பின் அவை குறித்த காலத்தில் விசாரிக்கப்படுவதில்லை. இது அரசுத் தரப்புக்கும், எதிர்த்தரப்புக்கும் சாதகமாகும். இந்நிலை மாறிட நிலுவையில் உள்ள வழக்குகள் குறிப்பிட்ட காலக்கெடுவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் உரிமையியல் வழக்குகளில் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை வழக்குகளை வரிசைப்படி அழைத்து வாய்தா கொடுப்பதில் வீணாகிறது. இதைத் தவிர்க்க நாளொன்றுக்கு சுமார் 50 வழக்குகள் மட்டுமே அழைக்கப்பட வேண்டும்; திருத்தப்பட்ட உரிமையியல் நடைமுறைச் சட்டப்படி கூடுதலான வாய்தாக்களுக்கு கட்டணம் செலுத்த கட்டளையிட வேண்டும்.

நுகர்வோர் குறைதீர் மையம், குடும்பநல நீதிமன்றம், காசோலை செல்லுபடியாகாத வழக்குகள் – இவற்றை ஓர் ஆண்டுக்குள் முடித்தாக வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

“காவல் நிலையத்திற்குள்ளும், நீதிமன்றத்தின் படிக்கட்டிலும் காலடி வைக்காதவரே நல்ல மக்கள்’ என்ற கருத்து நிலை உள்ளது. அவ்வளவு தூரம் இவ்விரு நிறுவனங்களும் மக்களுடன் நட்புணர்வுடனும் இணக்கமாகவும் செயல்படவில்லை என்பதே அதன் உள்நிலை.

பல்வேறு வழக்கறிஞர் அமைப்புகள் விரைவான நீதிக்காக, முழுமையான சமூக நீதிக்காக, கூடுதல் நீதிபதிகள், எல்லா வட்டங்களிலும் நீதிமன்றங்கள், பரவலாக்கப்படும் நீதிமன்ற முறைமை… இவற்றை அடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

பூனைக்கு மணி கட்டுவது சுலபம். அதன் “கிண்கிணி’ ஓசையைத் தொடர்ந்து கேட்பதுதான் கடினம்.

(கட்டுரையாளர்: உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாணையத்தில்
வழக்கறிஞர்).

Posted in Analysis, Assembly, Court, Courts, Democracy, Democratic, Government, Govt, HC, High Court, Judge, Jury, Justice, Law, Legislative, Legislature, Op-Ed, Order, Police, Republic, SC, Supreme Court | 1 Comment »

Pakistan judge sacking sparks rows – Political Changes

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

பாகிஸ்தானில் அரசியல் மாற்றம்?

பொ. லாசரஸ் சாம்ராஜ்

பாகிஸ்தானின் வரலாற்றில் முதன்முதலாக அந்நாட்டின் தலைமை நீதிபதியான இப்திகார் முகமது சௌத்ரி அதிபர் முஷாரபின் அதிரடி உத்தரவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பாகிஸ்தான் அரசியலில் இந்த நடவடிக்கை பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை நீதிபதியின் தவறான நடவடிக்கைகளும், அதிகாரத் துஷ்பிரயோகமும்தான் அவரின் பதவியைப் பறிக்க முக்கிய காரணங்கள் என்கிறார் அதிபர் முஷாரப்.

தலைமை நீதிபதியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐந்து நீதிபதிகளைக் கொண்ட குழுக்களை அதிபர் நியமித்துள்ளார். இதில் மூவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணையில் உள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. இதில் நீதிபதி அப்துல் ஹமீது டோகர் மீது நில மோசடி ஊழல் குறித்தும்; ஹுசைன் சௌத்ரி மீது அவர் மகளுக்கு மருத்துவக் கல்லூரி பட்ட மேற்படிப்பிற்கு சிபாரிசின் பேரில் இடம் வாங்கியது குறித்தும்; ஷாலத்தி மீது பல்கலைக்கழக நிதி மோசடி குறித்தும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர்கள் தவிர லாகூர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹுசைன் சௌத்ரிக்கு, பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதியிடம் பல மனக்கசப்புகள் உள்ளன என்பது வெளிப்படை.

இப்படிப்பட்ட நீதிபதிகள் கொண்ட உயர்நிலைக் குழு விசாரணை செய்து கொடுக்கும் தீர்ப்பை தான் ஏற்பதாக முஷாரப் மார்தட்டி அறிவித்துள்ளது வேடிக்கையிலும் வேடிக்கை.

உண்மையில் தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் வேறு பல உள்ளன. நேர்மைக்கும், துணிச்சலுக்கும் பெயர்போன நீதிபதி இப்திகார் 2005 ஜூன் 30-ல் பணி மூப்பு அடிப்படையில் பாகிஸ்தானின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் அளித்த சில தீர்ப்புகள் மக்களின் பேராதரவைப் பெற்றன. இதனால் இவர் “மக்கள் நீதிபதி’ என்று புகழப்பட்டார்.

பொதுவாக, சர்வாதிகாரிகளும், புகழுக்கு அடிமையான அரசியல் தலைவர்களும், அதிகாரத்தையும், புகழையும் தான் விரும்புகிறவர்களுக்கு மட்டும் பிச்சையிட்டுத்தான் பழக்கப்பட்டவர்களேதவிர, பகிர்ந்தளிப்பவர்களல்ல. இத்துடன் தங்களை எவரும் கேள்வி கேட்பதையோ விமர்சிப்பதையோ இவர்கள் பொறுப்பவர்களல்ல. இதற்கு முஷாரபும் விதிவிலக்கல்ல.

நீதிபதி இப்திகார் மீது முஷாரபுக்கு தீராத வெறுப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சில முக்கிய வழக்குகள் இன்னும் சில நாள்களில் இப்திகார் முன்பு விசாரணைக்கு வரவிருந்தன.

முதலாவது, இரட்டை குடியுரிமை பெற்றவரான பிரதமர் செüகத் அஜீஸ் பதவியில் நீடிக்கலாமா என்பது குறித்த வழக்காகும். இரண்டாவது வழக்கு அதிபர் முஷாரப் இன்னொரு முறை தேர்தலில் போட்டியிடலாமா என்பது குறித்த வழக்கு.

இவ்விரண்டு வழக்குகளையும் நேர்மையான நீதிபதி விசாரித்து சட்டப்படி தீர்ப்பளித்தால் அதிபர் மற்றும் பிரதமரின் பதவிகளுக்கு ஆபத்து என்பதை உணர்ந்த முஷாரப் முந்திக் கொண்டார் என்பதுதான் உண்மை.

இந்தப் பிரச்சினை முதன்முறையாக பாகிஸ்தானின் அனைத்துக் கட்சிகளையும், பெரும்பாலான வழக்கறிஞர்களையும், பொது மக்களையும், மக்கள் தொடர்பு சாதனங்களையும், மாணவர்களையும், ஓரணியில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்றாலும், இந்தப் போராட்டம் வெற்றி பெற பல தடைகள் உள்ளன. முதலாவது, பாகிஸ்தான் வரலாற்றில் அமைதியாக எந்த பெரிய அரசியல் மாற்றமும் ஏற்பட்டதில்லை. இரண்டாவது, மக்கள் ஜனநாயக உணர்வுள்ளவர்களாக இருந்தாலும், ராணுவ ஆட்சிக்குப் பழக்கப்பட்டு போனவர்கள். மூன்றாவதாக, அங்குள்ள அரசியல் கட்சிகள் கொள்கை அடிப்படையிலும், தனிநபர், பிராந்தியம், மதத்தை மையமாகக் கொண்டும் பிரிந்து கிடக்கின்றன.

புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ஆர்னால்டு டாயன்பி ஓர் ஆட்சியின் வீழ்ச்சிக்கு இரண்டு முக்கிய காரணங்களைக் குறிப்பிட்டார். அதில் பிரதானமானது நீதித்துறையில் வளரும் ஊழல்.

இரண்டாவது, கல்வித்துறையில் உள்ள ஊழல். இவை இரண்டும் பாகிஸ்தானில் மட்டுமல்ல; இந்தியாவிலும் நச்சு விதைகளைப் பரப்பும் பெரும் மரங்களாய் பல்கிப் பெருகி வருகிறது.

பிறர் தவறிலிருந்து பாடம் படிப்பவன்தான் சிறந்த மாணவன். அதுபோல, பிற நாடுகளின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். இல்லையென்றால், எதிர்கால இந்தியா பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தேவை சுயபரிசோதனை.

(கட்டுரையாளர்: பேராசிரியர், அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் துறை, புதுவை பல்கலைக்கழகம்).


பாகிஸ்தானில் 7 நீதிபதிகள் பதவி விலகல்

இடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி
இடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி

பாகிஸ்தான் நாட்டின் தலைமை நீதிபதி இஃப்திகர் முகமது சௌத்திரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அங்கு ஏழு நீதிபதிகள் தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளார்கள்.

கடந்த வாரம் தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தியதாக் கூறி தலைமை நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இது வரை எட்டு நீதிபதிகள் தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளார்கள்.

பாகிஸ்தானின் பல வழக்குரைஞர்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தலைமை நீதிபதியின் பதிவி நீக்கம் நீதித் துறையின் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு தாக்குதல் என அவர்கள் கூறியுள்ளார்கள்.

தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. தம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கை தாம் நீதிமன்றத்தில் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.


தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு கடுமையானது: பாகிஸ்தான் அதிபர் முஷாரப் விளக்கம்இஸ்லாமாபாத், மார்ச் 20: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து தாற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள இஃப்திகார் செüத்ரி மீதான குற்றச்சாட்டு கடுமையானது என்று அதிபர் பர்வீஸ் முஷாரப் தெரிவித்தார்.”தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் எந்தவித மோதலும் கிடையாது. பெஷாவர் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் இஃப்திகார் மீது சில குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் மார்ச் 5-ம் தேதி எனக்கு அனுப்பியிருந்தார். நாட்டின் மிக உயரிய பதவியில் இருப்பவர் என்பதால் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முதலில் இது குறித்து தெரிவித்து கருத்து கேட்கப்பட்டது. அவர் அதற்கு அளித்த பதில் திருப்தியைத் தரவில்லை.இந் நிலையில் தலைமை நீதிபதியே என்னைச் சந்தித்து நேரில் விளக்கம் அளித்தார். அப்போது நான் குற்றச்சாட்டையும், அதற்கு தரப்பட்ட ஆதாரத்தையும் அவரிடம் தெரிவித்தேன். அவரால் சரியான பதிலைத் தர முடியவில்லை.இந் நிலையில்தான் அவரைத் தாற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. அதற்குள் இந்த விஷயம் அரசியல் எதிரிகளால் திரித்து பிரசாரம் செய்யப்பட்டது. “”ராணுவ ஆட்சியாளர் நாடாளுமன்றத்தையும் நீதித்துறையையும் காலில்போட்டு மிதிக்கப் பார்க்கிறார்” என்று ஆதாரம் இல்லாமல் என்மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த தவறான பிரசாரம் பாகிஸ்தானில் மட்டும் இல்லாமல் சர்வதேச அரங்கிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த மூத்த நீதிபதி பகவன்தாஸ் இப்போது இந்தியாவில் யாத்திரை சென்றிருக்கிறார். அவர் வரும் வியாழக்கிழமை நாடு திரும்புகிறார். இஃப்திகார் மீதான குற்றச்சாட்டும் அதற்கான ஆதாரங்களும் அவர் தலைமையிலான பெஞ்சிடம் அளிக்கப்படும். அதன் பிறகு அவர் முடிவெடுக்கட்டும். அதுவரை காத்திருக்கத் தயார்.

தன் மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்படுவதைத் தடுக்கவும், தன்னைத் தியாகியாகச் சித்திரித்துக் கொள்ளவும் நீதிபதி இஃப்திகார் செüத்ரி முற்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதனால் நீதித்துறைக்கு நன்மை ஏதும் விளையாது’ என்றார் அதிபர் பர்வீஸ் முஷாரப். குவெட்டாவிலிருந்து வந்திருந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர்களிடம் இந்த விளக்கத்தை அவர் அளித்தார்.

அந்த குற்றச்சாட்டுகள்தான் என்ன என்று கேட்டபோது, விஷயம் நீதிமன்றத்தில் இருக்கும்போது அதை வெளியே தெரிவிப்பது முறையாகாது என்றார் முஷாரப்.

6 நீதிபதிகள் ராஜிநாமா முடிவு: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இப்திகார் செüத்ரிக்கு ஆதரவாக, தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்ய கீழ் நீதிமன்றங்களைச் சேர்ந்த 6 நீதிபதிகள் முன்வந்துள்ளனர். இவர்களில் ரமேஷ் சந்திர என்பவர், தாற்காலிகத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள நீதிபதி பகவன்தாஸின் மாப்பிள்ளை ஆவார். மற்ற நீதிபதிகளின் பெயர்கள் வருமாறு:

  • அஷ்ரஃப் யார் கான்,
  • முஸ்தஃபா சஃபி,
  • ஈஷான் மாலிக்,
  • அல்லா பச்சாயோ கபூல்,
  • பிர் அசதுல்லா ஷா ரஷ்டி.

================================================================================
தலைமை நீதிபதி நீக்கப்பட்ட விவகாரம் நீதிமன்ற தீர்ப்புக்கு தலை வணங்குவோம்: பாக். அரசு உறுதிமொழி

இஸ்லாமாபாத், மார்ச் 27: பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது செüத்ரி பதவி நீக்கப்பட்ட விவகாரத்தில், நீதிமன்றத் தீர்ப்புக்கு தலை வணங்குவோம் என பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது.

இஃப்திகார் முகமது மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப்பெறும் எண்ணமில்லை எனவும் அரசு மறுத்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இஃப்திகார் முகமது, அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், எதிர்ப்பின் வேகத்தைத் தணிப்பதற்காகவே பாகிஸ்தான் அரசு இத்தகைய உறுதிமொழியை அளித்துள்ளது.

முஷாரப்பின் 8 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ள இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, அதிபர், பிரதமர் மற்றும் எம்.பி.களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த விவகாரத்தை அரசியலாக்கும் முயற்சிகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும்; முற்றிலும் அரசமைப்புச் சட்டம் தொடர்பான இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளை அனுமதிக்கக் முடியாது.

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. உச்ச நீதிமன்ற குழு வழங்கும் தீர்ப்பு எதுவாயினும் அதை அரசு ஏற்றுக் கொள்ளும்.

வழக்கறிஞர்கள் தங்களது கோரிக்கைகளை அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். நீதித்துறை விவகாரத்தை அரசியலாக்கும் (எதிர்க்கட்சிகளின்) முயற்சிகளை அவர்கள் அனுமதிக்கக் கூடாது என முஷாரப் கூறியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இஃப்திகார் முகமது செüத்ரியை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரி போராடி வரும் எதிர்க்கட்சிகள் ஜனநாயக மீட்புக் கூட்டணியை அமைத்துள்ளன. போராட்டங்களை ஒடுக்குவதற்காக, பாகிஸ்தான் அரசு ஏராளமான எதிர்க்கட்சி தொண்டர்களை தடுப்புக் காவலில் கைது செய்துள்ளது.
================================================================================
முஷாரப் திறமையான பொய்யர்: பாக். மனித உரிமைக் கமிஷன் தலைவர் தாக்கு

நியூயார்க், மார்ச் 27: “அதிபர் பர்வீஸ் முஷாரப் ஒரு திறமையான பொய்யர்’ என கூறியுள்ளார் பாகிஸ்தான் மனித உரிமைக் கமிஷன் தலைவர் அஸ்மா ஜஹாங்கீர்.

“ஆனால் முஷராபின் பிடி நழுவி வருகிறது; எல்லா இடங்களில் இருந்தும் அவருக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது’ என கூறியுள்ளார் அவர்.

தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது செüத்ரியை, முஷாரப் பதவி நீக்கம் செய்துள்ள விவகாரம் குறித்து குறிப்பிட்ட அஸ்மா, முஷாரப் மீண்டும் ஒரு முறை பொய் சொல்வதுடன், அனைவரையும் திசை திருப்புகிறார். அவரது இந்த நடவடிக்கை, அவரே கூறியுள்ளது போல இயல்பானதோ அல்லது வழக்கமானதோ அல்ல. முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. நீதித்துறையை முஷாரப் சீர்குலைப்பது இது முதல்முறை அல்ல. ஆட்சிக்கு வந்தவுடனே, அதிபருக்கு விசுவாசமாக இருப்பதாக பதவிப் பிரமாணம் எடுக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகளை வலியுறுத்தியவர் அவர்.

அதிபராகவும், ராணுவத் தலைமைத் தளபதியாகவும் முஷாரப் இரட்டைப் பதவி வகிப்பதற்கு எதிராக இப்திகார் உத்தரவிடலாம் என்ற அச்சத்தினாலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பதை ஏற்க முடியாது. இப்திகார் உள்ளிட்ட எந்த நீதிபதிக்கும் அத்தகைய துணிச்சல் கிடையாது.

நீதிபதி பதவி நீக்கப்பட்ட விவகாரத்தில் மாதக் கணக்கில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்திலும், வேலைநிறுத்தத்திலும் ஈடுபட முடியாது. எனவே அவர்களது போராட்டம் விரைவிலேயே உருக்குலைந்து போகும்.

பாகிஸ்தானில் காணாமல் போனவர்கள் பற்றி கவலை தெரிவித்து, அவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டுள்ளார் முஷாரப். காணாமல் போனவர்கள் தீவிரவாதிகள் என உலகை நம்ப வைக்க முயற்சிக்கிறார் அவர். ஆனால் அது உண்மை அல்ல. காணாமல் போன 141 பேரில் 60 -70 சதவீதம் பேர், சிந்தி மற்றும் பலூச் தேசியவாதிகள். அவர்கள் அனைவரும் மதச்சார்பற்றவர்கள். சிலர் நாடு முழுவதும் நன்கறியப்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள். அவர்களுக்கும் தலிபான், அல்-காய்தா போன்ற அமைப்புகளுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இந்த விஷயத்தில் முஷாரப் புளுகுகிறார்.

காணாமல் போனவர்களை அரசு கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என இப்திகார் முகமது உத்தரவிட்டது பற்றி அஸ்மாவிடம் கேட்கப்பட்டது.

இப்திகார் செüத்ரி காணாமல் போனவர்கள் பற்றி எந்தத் உத்தரவும் வழங்கவில்லை. மனித உரிமை ஆணையத்தின் புகாரை ஒன்றரை மாதங்கள் அவர் நிலுவையில் வைத்திருந்தார். வேறு வழியில்லாமல்தான் அந்த வழக்கை அவர் விசாரணைக்கு ஏற்றார்.

அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய அவர் எந்த உத்தரவும் வழங்கவில்லை. அவர் செய்ததெல்லாம் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டதுதான். நூற்றுக் கணக்கானவர்கள் காணாமல் போகும்போது எந்த நீதிமன்றம் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியும் என்றார் அஸ்மா ஜஹாங்கீர்.
================================================================================
பாக். தலைமை நீதிபதியான பகவான்தாஸ் குர்-ஆன் வாசகத்தை படித்து பதவியேற்பு

இஸ்லாமாபாத், மார்ச் 27: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தாற்காலிக தலைமை நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்து மதத்தைச் சேர்ந்த ராணா பகவான்தாஸ் குர்-ஆன் வாசகத்தைப் படித்து பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

பாகிஸ்தானில் 1985-ம் ஆண்டு ஜெனரல் ஜியா-உல் ஹக் சர்வாதிகார ஆட்சி நடத்தியபோது தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த சட்டத்தை ஏற்படுத்தினார்.

அச்சட்டத்தின்படி நீதிபதிகள் பதவியேற்பு உரையில் “”அல்லாவே என்னை வழிநடத்து, எனக்கு உதவி செய்” என்ற குர்-ஆன் வாசகம் இடம் பெற்றது. அதுவே வழக்கமாக இப்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் தாற்காலிக தலைமை நீதிபதியாக இந்து மதத்தைச் சேர்ந்த பகவான்தாஸ் நியமிக்கப்பட்டதை உலகமே கவனித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் புனித யாத்திரை மேற்கொண்ட பிறகு பாகிஸ்தான் திரும்பிய அவர் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
================================================================================

பஜூர் பழங்குடிகளுடன் பாக். சமரச உடன்பாடு

இஸ்லாமாபாத், மார்ச் 28: ஆப்கானிஸ்தானை ஒட்டிய எல்லைப் பகுதியில் வெளிநாட்டுத் தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, பஜூர் பழங்குடி இனத்தவருடன் சமரச உடன்பாட்டை பாகிஸ்தான் அரசு செய்து கொண்டுள்ளது.

கடந்த 6 மாதங்களில் பழங்குடி மக்களுடன் பாகிஸ்தான் அரசு (ராணுவம்) செய்துகொள்ளும் இரண்டாவது சமரச உடன்படிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

“வெளி நாடுகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் எவரையும் பழங்குடிகள் தங்கள் பகுதியில் செயல்பட அனுமதிக்க மாட்டார்கள்; எதற்காகவும் இரக்கப்பட்டு புகலிடமும் தர மாட்டார்கள். இதற்குப் பிரதிபலனாக, பழங்குடி பகுதிகளில் எந்தவித ராணுவ நடவடிக்கையாக இருந்தாலும் அதை பழங்குடிகளின் தலைவர்களுக்குத் தெரிவித்து, அவர்களின் சம்மதத்துக்குப் பிறகே எடுக்கப்படும்.

“பழங்குடி மக்களின் சடங்குகள், சம்பிரதாயங்கள் மதிக்கப்படும். அவர்களுடைய சமுதாயத் தலைவர்களின் செல்வாக்கிலும், நடவடிக்கைகளிலும் அரசோ, ராணுவமோ குறுக்கிடாது’ என்பதுதான் உடன்பாட்டின் முக்கிய அம்சமாகும்.

இதன் மூலம், வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் பழங்குடி மக்களுக்குள்ள தனிச் சிறப்புகளும், சுயேச்சை உரிமைகளும் அரசால் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

பஜூர் பழங்குடிகளுக்கு முன்னதாக, மாமுண்ட் என்ற பழங்குடிகளுடனும் இதே போன்ற ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன்னால் செய்து கொள்ளப்பட்டிருக்கிறது.

பஜூர் பழங்குடிகள், தலிபான் பழங்குடிகளுக்கும் அவர்களின் தலைக்கட்டுகளுக்கும் ஆதரவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்குடிப் பகுதிகளில் உஸ்பெகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் பழங்குடிகளுக்கும் நடந்த மோதலில் 100 பேருக்கும் மேல் இறந்தனர். சமீபத்தில் நடந்த இத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசையே குற்றஞ்சாட்டியது அமெரிக்க அரசு.

வசீரிஸ்தான் பகுதியில் பழங்குடிகளுக்கு அதிக செல்வாக்கை ஏற்படுத்தித் தருகிறது இத்தகைய உடன்படிக்கைகள் என்று அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. இத்தகைய அதிகாரத்தால் அவர்கள் தலிபான்கள், அல்-காய்தா போன்ற அமைப்புகளை ஆதரிப்பதற்கு ஊக்கம் பெறுகிறார்கள் என்று சாடியது அமெரிக்கா. ஆனால் பாகிஸ்தான் இதற்கு நேர்மாறாக நினைக்கிறது. நமக்கும் அவர்களுக்கும் இடையிலான பலப்பரீட்சையைத் தவிர்த்துவிட்டால், அவர்கள் நாம் சொல்வதைத்தான் கேட்பார்கள் என்கிறது பாகிஸ்தான்.

கடந்த சில வாரங்களாகவே அன்னிய நாட்டு தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் பழங்குடிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதுவே தங்களுடைய கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்கிறது பாகிஸ்தான் அரசு.

வசீரிஸ்தான் பிரதேசத்தில் பஜூர் பழங்குடிகள் பகுதியில் உள்ள மசூதியில் அல்-காய்தா தீவிரவாதிகளும் தலிபான்களும் பதுங்கி இருக்கிறார்கள் என்ற சந்தேகத்தில் பாகிஸ்தான் ராணுவமும் அமெரிக்க வான்படையும் சில மாதங்களுக்கு முன்னால் குண்டுவீச்சு நடவடிக்கைகளில் இறங்கின.

இதில் 80-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். முஸ்லிம் மதப்பள்ளிக்கூடம் ஒன்று தரைமட்டமானது. அதில் படித்த அப்பாவி மாணவர்கள் உயிரிழந்தனர். இதை அடுத்து பாகிஸ்தான் அரசு மனம் மாறியது. அமெரிக்காவின் ஆலோசனையை உதறித்தள்ளிவிட்டு, பழங்குடிகளுடன் சமாதான ஒப்பந்தங்களை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறது.

===========================================================
பாக். உளவுத்துறை அதிகாரி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத், மார்ச் 29: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி மாஜ் ஹம்ஸôவும் அவருடன் காரில் வந்த மேலும் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மாஜ் ஹம்ஸô உள்ளிட்ட 6 பேர் பெஷாவரில் இருந்து கர் என்ற பகுதிக்கு காரில் வந்துகொண்டு இருந்தனர். ராஷாகாய் என்ற பகுதியில் கார் வந்தபோது மறைந்திருந்த சிலர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் மாஜ் ஹம்ஸô, பணியாளர் சுபேதார் சய்யீத், 2 மலைவாழ் மக்கள் கொல்லப்பட்டனர். கார் டிரைவர், மற்றொரு மலைவாசி ஆகியோர் காயங்களுடன் தப்பினர்.

வெளிநாட்டு தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் பழங்குடியினத் தலைவரின் அனுமதி பெற்றே எடுக்கும் என்று பஜூர் மற்றும் மாமுண்ட் இன மக்களிடம் பாகிஸ்தான் உடன்படிக்கை செய்து கொண்டது. இது பிடிக்காத சில தலிபான் ஆதரவு சக்திகள் அப்பகுதியில் அமைதியைக் கெடுக்கும் முயற்சியாக இக்கொலைச் சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.

தெற்கு வஜிரிஸ்தானில் பழங்குடியினர் வாழும் டேங்க் பகுதியில் நடந்த தீவைப்பு மற்றும் குண்டுவீச்சு சம்பவங்களில் குறைந்தபட்சம் இருவர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் 6 வங்கிகளைக் கொள்ளையடித்து அவற்றுக்கு தீ வைத்தனர் என போலீஸôர் தெரிவித்தனர். அப்பகுதியில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

மற்றொரு சம்பவத்தில் தனியார் பள்ளி முதல்வர் ஃபரீத் மெசூத் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த ஆயுதமேந்திய 12 தீவிரவாதிகள் அவரையும், அவருடைய சகோதரரையும் துப்பாக்கி முனையில் கடத்தினர்.


பாகிஸ்தான் தலைமை நீதிபதி மீதான விசாரணை இடை நிறுத்தம்

பாகிஸ்தான் தலைமை நீதிபதி இஃப்திகார் செளத்திரி
பாகிஸ்தான் தலைமை நீதிபதி இஃப்திகார் செளத்திரி

பாகிஸ்தானின் தலைமை நீதிபதி இஃப்திகார் சௌத்திரி அவர்களுக்கு எதிரான, தவறான நடத்தை குறித்த குற்றச்சாட்டுக்கான நீதி விசாரணையை பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் இடை நிறுத்தியுள்ளது.

இந்த வழக்கை விசாரிப்பதற்கான நீதிமன்றத்தின் சட்ட அதிகாரம் குறித்த சௌத்திரி அவர்களின் சாவலை கையாண்டு முடிக்கும் வரை இந்த விசாரணையை ஆரம்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

சௌத்திரி அவர்கள் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி, அதிபர் முஷாரப் அவர்கள் கடந்த மார்ச் மாதத்தில் சௌத்திரியை பணி இடைநீக்கம் செய்தார்.

சௌத்திரி அவர்களின் நீக்கத்துக்கு எதிரான எதிர்ப்புகள், இராணுவ ஆட்சிக்கு எதிரான பரந்துபட்ட போராட்டமாக மாறியுள்ளதுடன், 7 வருடங்களுக்கு முன்னர் அதிபர் முஷாரப் அவர்களை அதிகாரத்தை கைப்பற்றியது முதல், இன்று வரையிலான காலப்பகுதியில் அவரது நிர்வாகத்துக்கு எதிரான மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.



 

Posted in abuse, Afghanistan, al-Qaeda, Assassination, Ayman al-Zawahri, Bajur, Bench, Bhagavandas, Bhagawandas, Bhagvandas, Bhagwandas, Chaudary, Chaudhary, Chaudhry, Chowdary, Chowdhary, Chowdhry, Chowthary, Courts, dead, Iftikhar Mohammed Chaudhry, ISI, Islam, Islamabad, Judge, Judiciary, Justice, Khar, Law, Militants, Musharaf, Musharaff, Muslim, Mutahida Majlis-e-Amal, Order, Pakistan, Party, Pashtun, Pervez, Politics, Power, Qazi Hussain Ahmad, Ramesh Chandra, South Asia, Supreme Court, Taleban, Taliban, tribal, tribal council | 7 Comments »

Margadarsi’s petition – Jaya condemns raids: Apex court admits plea accusing attack on freedom of press

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

மார்கதர்சி நிதி நிறுவன விவகாரம்: ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி, பிப். 24: மார்கதர்சி நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

ஆந்திரத்தில் ஈநாடு பத்திரிகையும், தொலைகாட்சியும் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால் அந்த பத்திரிகையை நடத்தி வரும் ராமோஜி ராவ்வுக்கு சொந்தமான மார்கதர்சி நிதி நிறுவனத்தின் அலுவலங்களில் போலீஸôர் சோதனை நடத்தினர்.

இதை எதிர்த்து ராமோஜிராவ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மாநில போலீஸôர் மார்கதர்சி நிறுவனத்தில் சோதனை நடத்தியது குறித்து பதிலளிக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

மார்கதர்சி நிதி நிறுவன விவகாரம் முற்றுகிறது: பத்திரிகைகள் மீது வழக்கு தொடுக்கும் ஆணையை திரும்பப்பெற்றது ஆந்திர அரசு

ஹைதராபாத், பிப். 24: அரசின் மீது குற்றஞ்சாட்டி ஆதாரம் இல்லாமல் வெளியிடப்படும் செய்திகளுக்காக பத்திரிகைகள் மீதும் தொலைக்காட்சிகள் மீதும் அவதூறு வழக்கு தொடுக்க ஆந்திர அரசு பிறப்பித்திருந்த ஆணை திரும்பப் பெறப்பட்டது.

தெலுங்கு தேசம், பாரதீய ஜனதா, தெலங்கானா ராஷ்டிர சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சித் தலைவர்களின் பலத்த எதிர்ப்பை அடுத்து ஆந்திர சட்டப் பேரவையில் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சர்ச்சைக்குரிய அந்த ஆணை இம் மாதம் 20-ம் தேதி மாநிலத்தின் தலைமைச் செயலர் ஜே. ஹரிநாராயணரால் வெளியிடப்பட்டது. பத்திரிகைகள் மீது செய்தி, மக்கள் தொடர்புத் துறை ஆணையர்கள் வழக்கு தொடுப்பதற்கான அதிகாரத்தை அந்த ஆணை வழங்கியிருந்தது. அத்துடன் இத்தகைய வழக்குகளுக்காகவே சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கியிருந்தது.

இந்திரா காந்தி பிரதமராகப் பதவி வகித்தபோது மத்திய அரசால் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தில் பத்திரிகைகளின் குரலை ஒடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை இந்த ஆணை நினைவுபடுத்துகிறது என்று எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ராமோஜி ராவ் தலைமையிலான ஈ நாடு பத்திரிகையும் ஈ டி.வி.யும் ஆந்திர அரசுக்கு எதிராக தினமும் ஏதாவது பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அரசின் ஊழல்களையும், குறைகளையும் அம்பலப்படுத்துகின்றன. இது ஆளும்கட்சிக்கு பெருத்த சங்கடத்தை அரசியல்ரீதியாக ஏற்படுத்தி வருகிறது. இந் நிலையில் ராமோஜி ராவுக்குத் சொந்தமான மார்கதர்சி நிதி நிறுவனத்தின் விவகாரங்களை மாநில அரசு கிளற ஆரம்பித்தது. அதன் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதை அடக்குமுறை நடவடிக்கையாகவே எல்லா எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் கருதுகின்றன.

இப்போது இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை சென்றிருக்கிறது. நிலைமை மோசமாகிவருவதால், சர்ச்சைக்குரிய ஆணையைத் திரும்பப் பெற ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. அதை முதல்வரே பேரவையில் அறிவித்தார். ஆனால் அதற்கு முன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் எந்த நடவடிக்கையையும் நடத்தவிடாமல் ரகளை செய்தனர். அரசை குறைகூறினர். இந்த விவகாரத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் ராஜசேகர ரெட்டி பதவி விலக வேண்டும் என்று கோரினர்.

கேள்வி நேரம் நடைபெறவில்லை, அடுத்த நிகழ்ச்சிகளையும் திட்டமிட்டபடி எடுத்துக் கொள்ள முடியவில்லை. இந் நிலையில் முதல்வர் ராஜசேகர ரெட்டியே எழுந்து சர்ச்சைக்குரிய ஆணை, தனக்குத் தெரியாமலேயே வெளியிடப்பட்டது என்றும் அது குறித்து விசாரணை நடத்துவதாகவும் பத்திரிகைகளை தங்களுடைய அரசு மதிப்பதாகவும் விளக்கம் அளித்தார்.

அதை எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்கவில்லை. இந்த விவகாரம் குறித்து முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகே இந்த அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டினர். அப்படியே முதல்வர் கூறுவது உண்மை என்று வைத்துக்கொண்டாலும், தனக்கே தெரியாமல் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டதற்காக, தார்மிக அடிப்படையில் அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Posted in abuse, ADMK, AIADMK, Andhra Pradesh, Andhra Pradesh Protection of Depositors of Financial Es, Andra Pradesh, AP, APPDFE, Charminar Bank, Chitfunds, Chits, Congress, Congress(I), Corruption, deposit, depositors, Eenaadu, Eenadu, Enaadu, Enadu, Finance, Freedom, Government, High Court, Jaya, kickbacks, Krushi Bank, Law, Margadarasi, Margadarsi, Margadarsi Financiers, Order, Petition, Petitions, Politics, Power, Press, Prudential Bank, Ramoji Rao, RBI, Reserve Bank of India, SC, Supreme Court, Tamil Nadu, Telugu, TN, Ushodaya, Ushodaya Enterprises Limited, Y.S. Rajasekhar Reddy, YSR | Leave a Comment »

Irrespective of decree, govt can acquire private land: SC

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

உரிமையாளருக்கு சாதகமாக ஆணை இருந்தாலும் பரவாயில்லை நிலத்தை அரசு கையகப்படுத்தலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுதில்லி, பிப். 12: நிலத்தின் உரிமையாளருக்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தாலும் அந்த நிலத்தை கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

நிலத்தின் உரிமையாளருக்கு சாதகமாக நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்த நிலையில் அந்த நிலத்தை கையகப்படுத்தும் நோக்கில் அரசு அறிவிக்கை வெளியிட்டால் அதை தவறான நோக்கத்தில் வெளியிட்டதாக கருத முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.கே.தாக்கர், லோகேஷ்வர் சிங் பென்டா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பு அளித்துள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி மற்றும் டிவிஷன் பெஞ்ச் ஆகியவை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்ற பெஞ்ச் மேற்சொன்ன தீர்ப்பை பிறப்பித்தது.

உரிமையாளருக்கு ஆதரவாக சிவில் கோர்ட் ஒன்று தீர்ப்பு பிறப்பித்த பிறகு அந்த நிலத்தை கையகம் செய்யலாம் என்று அறிவிக்கை பிறப்பிப்பது சட்ட விரோதமானது என்று தனி நீதிபதியும் உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்சும் தீர்ப்பு பிறப்பித்திருந்தன.

கர்நாடக மாநிலம் தொடர்பானது இந்த வழக்கு. அரசு நிறுவனமான எச்எம்டி, கடிகார தொழிற்சாலை அமைப்பதற்காக தேவராயபட்டினத்தில் பல்வேறு சர்வே எண்கள் கொண்ட 120 ஏக்கர் நிலத்தை கர்நாடக தொழில் பகுதி மேம்பாட்டு வாரியம் கையகப்படுத்தியது.

இந்த 120 ஏக்கரில் சுமார் ஒரு ஏக்கர் நிலம் முத்தப்பா குடும்பத்துக்குச் சொந்தமானதாகும். இது தொடர்பாக முத்தப்பா என்பவர் பிரச்சினை எழுப்பியிருந்தார்.

எமது குடும்பத்தைச் சேர்ந்த நிலம் கையகப்படுத்தப்பட்ட படி விட்டுக் கொடுத்தோம். ஆனால் அதற்கு மேலாக சிறிது நிலத்தை எச்.எம்.டி ஆக்கிரமித்துள்ளது. இதிலிருந்து காலி செய்ய மாட்டோம் என்று முறையிட்டார் முத்தப்பா.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சிவில் கோர்ட், எச்எம்டி ஆக்கிரமித்த நிலத்தை உரிமையாளரிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து எச்எம்டி அப்பீல் செய்தபோதும் அது டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

எனினும் சிவில் கோர்ட் உத்தரவை எச்எம்டி ஏற்கவில்லை. அதற்கு பதிலாக மாநில அரசை அணுகி அந்த நிலம் தொடர்பாக புதிய அறிவிக்கையை பிறப்பிக்கும்படி கோரியது. இதனால் உயர்நீதிமன்றத்தை நில உரிமையாளர் அணுகினார். இதையடுத்து தனி நீதிபதியும், டிவிஷன் பெஞ்சும் நிலத்தை கையகப்படுத்தி அரசு வெளியிட்ட அறிவிக்கை செல்லாது என்று தீர்ப்பு வெளியிட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது எச்எம்டி.

Posted in appellate authorities, authorities, CK Thakkar, CK Thakker, Courts, decree, encroachment, Government, High Court, HMT, Industrial Area Development Board, Judgement, Jury, Justice, Karnataka, Land Acquisition, Land Acquisition Act, Law, Logeshwar singh Benda, Lokeshwar Singh Penta, Muthappa, Order, private land, Property Ownership, Public Property, Supreme Court | Leave a Comment »

SC flays legislature for misuse of Ninth Schedule

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

முக்கிய தீர்ப்புகள்

உச்ச நீதிமன்றம் கடந்த 3 நாள்களில் அடுத்தடுத்து 2 முக்கியமான தீர்ப்புகளை அளித்துள்ளது. அவை- நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களின் அதிகாரங்கள் தொடர்புடையவை.

இவற்றில் அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணை தொடர்பான தீர்ப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சட்டத் திருத்தங்களை நிறைவேற்றி அதை 9-வது அட்டவணையில் சேர்ப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச், அரசியல் சட்டத்தின் 9- வது அட்டவணையில் சேர்க்கப்படும் சட்டங்கள் அரசியல் சட்டத்தின் அடிப்படை அமைப்பைத் தகர்ப்பதாக இருந்தால், அவை நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டவையே என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரசியல் சட்டத்தின் 14,19,20 மற்றும் 21- வது பிரிவுகளில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீறும் வகையிலான சட்டங்கள் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதால் அவற்றை நீதிமன்றம் விசாரிக்க முடியும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது 1951ல் இந்திய அரசியல் சட்டத்தில் ஒரு முக்கியச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு 9-வது அட்டவணை என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. சில சட்டங்கள், குறிப்பாக ஜமீன்தாரி முறை நீக்கப்பட்ட பிறகு நிலச் சீர்திருத்தச் சட்டங்கள், நீதிமன்ற பரிசீலனைக்கு அப்பாற்பட்டவையாக இருக்க வேண்டும் என்று கருதி இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவரை இந்த அட்டவணையில் 284 சட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் 30 சட்டங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களின் பரிசீலனையில் உள்ளன.

1974க்குப் பிறகு 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் அதைப் பரிசீலிக்க 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்கப்படும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9-வது அட்டவணையில் இடம் பெறும் சட்டங்கள், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதாக இருந்தாலும் கூட அவற்றை விசாரிக்கவோ, பரிசீலிக்கவோ நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் அட்டவணையின் குறிப்பிடத்தக்க அம்சம். இந்த அட்டவணையில் சேர்க்கப்பட்ட அனைத்து சட்டங்களுக்கும் அரசியல் சட்டத்தின் 31-பி பிரிவு ஒட்டுமொத்தமாக ஆய்வுக்கு உட்படாத பாதுகாப்பு அளிக்கிறது. தற்போதைய தீர்ப்பின் மூலம் இந்த நிலைமை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்தமும் இந்த அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அப்பாற்பட்டுத்தான் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து, 9- வது அட்டவணையில் அது சேர்க்கப்பட்டது.

இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை முழுமையாக ஆய்வு செய்து முடிவு தெரிவிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குழுவின் ஆய்வை பரிசீலனை செய்த பிறகு உச்ச நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும்.

மற்றொன்று நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றம் எடுத்த முடிவு சரியானதுதான் என்று 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட பெஞ்ச் புதன்கிழமை தீர்ப்பு அளித்தது.

எத்தகைய சட்டத் திருத்தங்கள் செய்தாலும் பல்வேறு அம்சங்களையும் ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும் என்பதையே இந்தத் தீர்ப்புகள் உணர்த்துகின்றன.

Posted in 9th Schedule, Article 31B, Constitution Bench, constitutional amendment, Fundamental Rights, IX Schedule, Jawaharlal Nehru, Kesavananda Bharati, Law, Ninth Schedule, Order, Supreme Court, Supreme Court of India, YK Sabharwal | Leave a Comment »

Justice KG Balakrishnan sworn-in as Chief Justice of India

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் கே.ஜி. பாலகிருஷ்ணன்

புது தில்லி, ஜன. 15: உச்ச நீதிமன்றத்தின் 37-வது தலைமை நீதிபதியாக கே.ஜி. பாலகிருஷ்ணன் (61) பதவியேற்றார்.

குடியரசுத் தலைவர் மாளிகையின் அசோகா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவருக்குப் பதவிப் பிரமாணம், ரகசிய காப்புப் பிரமாணம் செய்துவைத்தார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்கும் முதல் தலித் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2010 மே 12-ம் தேதி வரை இப்பதவி வகிப்பார். சமீபத்திய ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அதிக ஆண்டுகள் பதவியில் இருக்கப் போவது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளத்தில் பிறந்து, சட்டம் பயின்று வழக்கறிஞராகத் தொழில் தொடங்கி பிறகு படிப்படியாக உயர்ந்து மாவட்ட முன்சீப், உயர் நீதிமன்ற நீதிபதி, தமிழ்நாடு, குஜராத் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதியானவர் பாலகிருஷ்ணன். நண்பர்கள் இவரை பாலா என்றே செல்லமாக அழைப்பர்.

பதவியேற்பு விழாவைக் காண அவருடைய தாயார் கே.எம். சாரதா சக்கர நாற்காலியில் வந்திருந்தார். பாலகிருஷ்ணனின் மனைவி நிர்மலாவும் உடன் இருந்தார்.

குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், ஏ.கே. அந்தோனி, லாலு பிரசாத், ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ், சுசீல்குமார் ஷிண்டே, ராம்விலாஸ் பாஸ்வான், மீரா குமார், கபில் சிபல், ஓய்வுபெறும் கே.என். சபர்வால் மற்றும் ஏற்கெனவே ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.என். சிங், ஏ.எம். அகமதி, ஏ.எஸ். ஆனந்த், வி.என். கரே, ஆர்.சி. லஹோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாழ்க்கைக் குறிப்பு: கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தின் தாலயோலபரம்பு கிராமத்தில் 1945 மே 12-ம் தேதி பிறந்தார். எர்ணாகுளம் மகாராஜா சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். கொச்சியில் 1968 மார்ச் 16-ம் தேதி வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டு பணியைத் தொடங்கினார்.

1973 ஜனவரி 10-ல் கேரள நீதித்துறையில் முன்சீஃபாக நியமிக்கப்பட்டார். 1982 ஜூலை 23-ல் உதவி செஷன்ஸ் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். பிறகு கேரள உயர் நீதிமன்றத்தின் துணை பதிவாளராகப் பணியாற்றினார். 1985 செப்டம்பர் 26-ல் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1986 ஜூலை 11-ல் நிரந்தரமாக்கப்பட்டார்.

குஜராத் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 1998 ஜூலை 16-ல் நியமிக்கப்பட்டார்.

பிறகு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 1999 செப்டம்பர் 9-ல் நியமிக்கப்பட்டார்.

நீதித்துறை- நாடாளுமன்றம் இடையே நெருங்கிய உறவு ஆபத்தானது: ஓய்வுபெறும் தலைமை நீதிபதி சபர்வால் கருத்து

புதுதில்லி, ஜன. 14: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் நீதித்துறைக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். நீதிமன்றங்கள் சுதந்திரமாகத் தீர்ப்பு வழங்குவதைப் பாதிக்கும் என்று கருத்துத் தெரிவித்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்கே. சபர்வால்.

சனிக்கிழமையுடன் பதவி ஓய்வு பெறும் நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் சபர்வால். நீதித்துறைக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படுவது குறித்துக் கேட்டதற்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். விவரம்:

தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், பல பிரச்சினைகளைச் சந்தித்து தீர்வு கண்டிருக்கிறேன். திருப்தியுடன் ஓய்வு பெறுகிறேன்.

நீதி வழங்குவதில் காலதாமதம் இருக்கக் கூடாது என்பது எனது கருத்து. அதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். கீழ் நீதிமன்றங்களிலும், உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் பத்து ஆண்டுகள் கூட தேங்கிக் கிடக்கின்றன. இருபது ஆண்டுகளைக் கடந்து, நிலுவையில் உள்ள வழக்குகளும் இருக்கின்றன. அதனால், நீதித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றோருக்கு எதிராக உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்குக் கூட கடிதம் எழுதியிருக்கிறேன்.

பிறழ் சாட்சிகளால் வழக்குகள் மேலும் காலதாமதமடைவதைத் தடுக்கும் வகையில், சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், தங்களது முந்தைய நிலையிலிருந்து மாறும் சாட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

வாக்குமூலங்களை ஒளி, ஒலிப்பதிவு செய்ய கூடுதல் மாஜிஸ்திரேட்டுகள், நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்ட வேண்டும். நீதிமன்றங்களுக்கு போதிய கட்டமைப்பு வசதிகளைச் செய்துதர வேண்டும்.

நீதித்துறைக்கு நிதி சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான், நீதித்துறை முழுத்திறமையுடன் செயல்பட முடியும். வேறு துறைகளில் ஒதுக்கீட்டைக் குறைத்துக் கொண்டு, நீதித்துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.

புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ள கே.ஜி. பாலகிருஷ்ணன், மிகவும் திறமையான நீதிபதி. ஏற்கெனவே துவக்கப்பட்ட திட்டங்களை அவர் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார் என்பதில் சந்தேகமில்லை.

நீதித்துறையில் கறுப்பு ஆடுகள்: நீதித்துறையில் ஊழல் இன்னொரு கவலை தரக்கூடிய விஷயம். எல்லோர் மீதும் களங்கம் இல்லாவிட்டாலும், ஒரு சில கறுப்பு ஆடுகளும் உள்ளன. அப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

நீதித்துறைக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருவதாகக் கருத்து நிலவுகிறது. ஒவ்வொரு துறையும் தங்கள் அதிகார வரம்புக்கு உள்பட்டு பணியாற்றினால் எந்த மோதலும் வர வாய்ப்பில்லை. தற்போதைய நிலையில் எந்த உரசலும் இருப்பதாக நான் கருதவில்லை.

நீதிபதிகள் நியமனத்தில் தற்போது வெளிப்படையான அணுகுமுறை உள்ளது.

ஊடகங்கள், ஊழலை அம்பலப்படுத்துவதில் தவறில்லை. அதே நேரத்தில், அது நீதிபதிகளின் தீர்ப்பைப் பாதிக்கும் வகையில் இருந்தால், அதைவிட மோசமானது ஏதும் இருக்க முடியாது.

எந்த ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் சட்ட உதவி மறுக்கப்படக்கூடாது. வழக்கறிஞர்கள் தனிப்பட்ட கருத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காமல், யாரும் சட்ட உதவி கிடைக்காமல் தனிமைப்படுத்தக்கூடாது என்ற உணர்வுடன் தொழிலை மட்டும் கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் சபர்வால்.

Posted in APJ Abdul Kalam, Biography, Biosketch, Chief Justice of India, Corruption, Dalit, election commission, Ernakulam, Government Law College, Judge, Judiciary, Jury, Justice, K J Gopinathan, Kerala, Kerala High Court, KG Balakrishnan, KM Saradha, Konakuppakattil Gopinathan Balakrishnan, Kottayam, Law, Legislature, Lifesketch, Newsmakers, Nirmala, Order, people, Supreme Court | Leave a Comment »

Tha Kiruttinan Murder case – Mu Ka Azhagiri obstructs procedures?

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2007

தா. கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடைசிறப்பு நிருபர்

புதுதில்லி, ஜன. 12: மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.

இந்த வழக்கில், முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி, சாட்சிகளில் ஒருவரான முத்துராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அசோக்பான் மற்றும் லோகேஸ்வர் சிங் பன்டா ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது.

தமிழக அரசுக்கும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிற பதில்மனுதாரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

முத்துராமலிங்கம் தனது மனுவில் கூறியிருப்பதாவது:

முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள அழகிரி, தன்னிடம் உள்ள ஏராளமான பண பலத்தையும் ஆள் பலத்தையும் பயன்படுத்தி வருகிறார். வழக்கு விசாரணை நடைபெறும் போதெல்லாம், அழகிரியின் ஆதரவாளர்கள் பெருமளவில் கூட்டத்தைத் திரட்டி நீதிமன்றத்துக்கு வந்து கோஷமிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நீதிமன்ற அறைக்குள் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. சாட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பீதியை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள்.

அரசுத் தரப்பு சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள். கொலை செய்யப்பட்ட கிருட்டிணனின் சகோதரர் உள்பட மேலும் பல சாட்சிகள், மிரட்டல் காரணமாக நீதிமன்றத்துக்கு வருவதற்கே பயப்படுகிறார்கள்.

வழக்கை விசாரிக்கும் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. அவருக்கும் மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. அதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய அதிமுக அரசு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், தற்போதைய (திமுக) அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரும் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. சம்பந்தப்பட்ட நீதிபதி மாற்றப்பட்டுவிட்டதாக அதற்குக் காரணம் கூறியிருக்கிறது.

தற்போதைய அரசு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலர் சார்பில், ஏற்கெனவே ஆஜரானவர். அதனால், வழக்கு விசாரணை வேறு மாநிலத்துக்கு மாற்றப்படாவிட்டால், நீதியே கேலிக்கூத்தாக்கப்பட்டுவிடும் என்று மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

——————————————————————————————

தா.கிருட்டிணன் கொலை வழக்கு: துணை மேயர் உள்பட 11 பேர் ஆஜர்

மதுரை, ஜூன் 2: திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்குத் தள்ளிவைத்து மதுரை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை கே.கே. நகரில் உள்ள அவரது வீடு அருகே 2003 மே 20-ம் தேதி தா.கிருட்டிணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக் கொலை தொடர்பாக மு.க.அழகிரி, அவரது ஆதரவாளர்களான தற்போதைய

  • மதுரை மாநகராட்சி துணை மேயர் பி.எம்.மன்னன்,
  • எஸ்ஸார் கோபி,
  • கராத்தே சிவா,
  • ஈசுவரன்,
  • மணி,
  • சீனிவாசன்,
  • பாண்டி,
  • ராஜா,
  • கார்த்திகேயன்,
  • பாலகுரு,
  • முபாரக் மந்திரி,
  • இப்ராகிம் சேட் ஆகிய 13 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

மதுரை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில், கடந்த டிசம்பர் மாதம் சாட்சிகள் விசாரணை நடைபெற்றது. அப்போது, சாட்சிகளை விசாரிக்கக் கூடாது என முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்ததன்பேரில், இவ் வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மதுரை நீதிமன்றத்தில் இந்த வழக்கு, வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில், துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்ட 11 பேர் ஆஜராகினர். மு.க.அழகிரி, கராத்தே சிவா ஆகிய 2 பேர் ஆஜராகவில்லை.

வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிபதி டீக்காராமன் உத்தரவிட்டார்.

Posted in abuse, Accused, ADMK, Alagiri, Alakiri, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, CM, Court, dead, DMK, Karate Siva, Kiruttinan, Krishnan, Law, Law and Order, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Madurai, MK Alagiri, MK Alakiri, MK Azhagiri, MK Azhakiri, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Muthuramalingam, Order, Paandi, Pandi, Police, Power, Secretary, Supreme Court, Tha Kiruttinan, Tha Krishnan, Thaa Kirutinan | 3 Comments »

10 Cabinet Ministers & 93 MPs have Criminal Cases in various Courts

Posted by Snapjudge மேல் திசெம்பர் 8, 2006

பல்வேறு குற்ற வழக்கில் 10 மத்திய அமைச்சர்கள், 93 எம்.பி.க்கள்

புதிதில்லி, டிச. 8: பல்வேறு குற்ற வழக்குகளில் 10 மத்திய அமைச்சர்களும், 93 எம்.பி.க்களுக்கும் விசாரணையை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அமைச்சராக இருந்த சிபு சோரன் மற்றும் சித்து எம்.பி. ஆகியோருக்கு கொலை வழக்கில் அண்மையில் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மன்மோகன் சிங் அமைச்சரவையில் உள்ள மத்திய அமைச்சர்களான

  • முகம்மது அலி அஷரப் (கடத்தல்-பணம் பறிப்பு),
  • சங்கர் சிங் வகேலா (லஞ்ச வழக்கு),
  • லாலு பிரசாத் (ஊழல் வழக்கு),
  • ரேணுகா செüத்ரி (அரசு ஊழியரை மீது தாக்குதல்),
  • சரத் பவார் (மத ரீதியான வழக்கு) உள்ளிட்ட 10 அமைச்சர்கள் குற்ற வழக்கில் சிக்கி உள்ளனர்.

அதேபோல எம்.பி.க்களில் சாது யாதவ், பப்பு யாதவ் உள்ளிட்ட 93 பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

Posted in abuse, Cabinet, Congress (I), Corruption, Court, High Court, India, Justice, Lalu prasad Yadav, Law, Manmohan Singh, Ministry, Navjot Singh Siddhu, NCP, Order, Politics, Power, Renuka Chowdhry, Sharad Pawar, Shibu Soren, Supreme Court, UPA, Waghela | Leave a Comment »

Jail sentence should not exceed 14 years even after aggregation of multiple sentences

Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: 14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கக் கூடாது

புதுதில்லி, நவ. 27: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஒரு வழக்கில் அதிகபட்சம் 14 ஆண்டுகளுக்கு மேல், சிறை தண்டனை விதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குற்றவாளிக்கு அந்த மாநில உயர்நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்திருந்தது. மூன்று குற்றங்களில் தொடர்புடைய அவருக்கு மொத்தமாக இந்த தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதை ஆட்சேபித்து அக்குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா, மார்க்கண்டேய கட்ஜு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து அளித்த தீர்ப்பு விவரம்:

ஆயுள் தண்டனையை தவிர பிற தண்டனைக் காலம் அதிகபட்சம் 14 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது. பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்புடைய ஒரு வழக்கில் குற்றவாளிக்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் அளவுக்கே சிறை தண்டனை விதிக்கலாம். மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது தவறாகும்.

Posted in 14, 20, Court, Imprisonment, India, Jail, Judge, Law, Life sentence, MP, Order, Police, RI, Supreme Court | Leave a Comment »

Sealing resumes in Delhi amid tight security – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் நவம்பர் 8, 2006

யார் செய்த தவறுகள்?

சட்டத்துக்குப் புறம்பாக உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைப்பதை எதிர்த்து வணிகர்கள் தில்லி மாநகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டங்களை நடத்தத் தொடங்கிவிட்டனர்.

நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய தில்லி அரசும் மத்திய அரசும் “”வர்த்தகர்கள் போராட்டம் நடத்துகிறார்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்” என்று சொல்லி சலுகை காட்டுங்கள் என்று நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளன.

தில்லியைத் தவிர, வேறு எங்கு இப்பிரச்சினை நடந்திருந்தாலும் இந்த அளவுக்கு மத்திய அரசு “கருணை’காட்டியிருக்குமா என்பது சந்தேகமே.

சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டிய அரசு, சட்டத்தை வளைந்து போகச் செய்வது சரியானதல்ல. தில்லியில் இன்று ஏற்பட்டுள்ள இதே பிரச்சினை எல்லா நகரங்களிலும் இருக்கிறது. தில்லியில் அரசு மேற்கொள்ளும் உறுதியான முடிவினால் இந்தியாவில் அனைத்து நகரங்களுக்கும் புதிய விடிவு பிறக்கும். மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.

“”கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அரசு வலிமையற்றது அல்ல. கழுத்தில் கத்தியை வைத்து சலுகையை யாரும் கேட்க முடியாது. சட்டம் ஒழுங்கை மீறி மக்களை பணயம் வைத்து சலுகை கேட்க முடியாது” என்று நீதிமன்றம் அளித்துள்ள பதில் மிக அழுத்தமானது.

நாற்பது ஆயிரம் வர்த்தகர்கள் இப்பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான். மாற்று ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். அதை வர்த்தகர்களும் ஏற்க வேண்டும்.

தேவையற்ற ஆக்கிரமிப்புகளால் திணறிக் கொண்டிருக்கும் தில்லி நகரை சீரமைக்கும் முதல் முயற்சிக்கே இந்த அளவுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. இதற்குக் காரணம் அரசியல். வாக்குவங்கிகளை வசமாக்கும் முயற்சியில் எந்த வழியை வேண்டுமானாலும் கையில் எடுக்கலாம் என்ற அரசியலால் இந்த நிலைமை.

சட்டத்துக்குப் புறம்பான கடைகளைத் தொடக்க நிலையிலேயே தடுக்க வேண்டிய நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளே பல இடங்களில் இவை நிரந்தரமாக நீடிக்கக் காரணமாக இருக்கின்றனர்.

பல ஊர்களில், நிரந்தரக் கட்டடத்தில் கடை இருந்தாலும் அதை “தினசரி கடை’ என்பதாகக் குறைந்த கட்டணத்துக்கு (அதிகக் கையூட்டுப் பெற்று) நாள் வாடகை ரசீது கொடுக்கிறார்கள். அதே இடத்தில் பல ஆண்டுகளாகத் தொழில் செய்து வருவதாக ஒரு “ஆதாரத்தை’ ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். ஒரு நேர்மையான அதிகாரி இந்த ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டால், இந்த ரசீதுகளை ஆதாரமாகக் காட்டி, “தினசரி கடைகளை’த் தொடர்ந்து நடத்த அனுமதி கேட்டு வழக்குப்போட்டு, வழக்கு முடியும் வரை தினசரி கடைகள் மீது நடவடிக்கை கூடாது என்று தடையுத்தரவும் பெற்று, நிரந்தரக் கடைகள் நீடிக்கின்றன.

அண்மையில், ஒரு மாநகராட்சிக்குச் சொந்தமான 3.4 ஏக்கர் நிலம் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் (பல ஆண்டுகள் கழித்து) கையகப்படுத்தப்பட்டது. அங்கிருந்த நூறு கடைக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். பின்னர் போராட்டத்தைக் கைவிட்ட கடைக்காரர்கள் அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கை இதுதான்: “”….நாங்கள் (ஓர் அரசியல்வாதியிடம்) முப்பதாயிரம், நாற்பதாயிரம் அட்வான்ஸ் கொடுத்துள்ளோம். அட்வான்ஸ் மட்டும் திரும்பக்கிடைக்க வகை செய்யுங்கள்”.

இப்படிப்பட்ட நிலைமை இருக்கும்போது, தில்லி போன்ற பெருநகரில் 40,000 வர்த்தகர்கள் மூலம் அரசுக் கருவூலத்துக்கு வராமல் திசைமாறிய தொகை எத்தனை கோடியாக இருக்கும்?
The areas being targetted are:

  • Category A – Defence Colony, Friends Colony, Panchsheel Park, Vasant Vihar.
  • Category B – G K 1, 2, 3 4, Green Park, Green Park Extension, Hauz Khas, Gulmohar Park, Panchsheel Enclave, South Extension.

டெல்லியில் அனுமதியற்ற கடைகளுக்கு `சீல்’ வைப்பு இன்று தொடங்கியது

டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் அனுமதி இல்லாமல் கடைகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த கடைகளை இடித்தும், சீல் வைத்தும் டெல்லி மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் செப்டம்பர் மாதம் நடத்திய ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது.

இதை தொடர்ந்து கடைகளுக்கு சீல் வைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. குடியிருப்பு பகுதி களில் உள்ள 44 ஆயிரம் கடைகளுக்கும் சீல் வைக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடி யாக உத்தரவிட்டது.

இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முழு அடைப்பில் ஈடுபட்டனர். தடியடி நடந்தது. கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. வியாபாரிகள் கல்வீசியதில் பஸ்கள் சேதம் அடைந்தது. துணை ராணுவத்தால் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது.

கடைகளுக்கு சீல் வைப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பு கமிட்டி ஒன்றை அமைத்தது. இந்த கமிட்டியின் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் இன்று முதல் மீண்டும் கடைகளுக்கு சீல் வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி டெல்லி குடியிருப்பு பகுதிகளில் அனுமதியற்ற கடைகளுக்கு `சீல்’ வைப்பு பணி இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது. அசம்பாவிதங்கள் நடைபெற்று விடாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Posted in Ashram Chowk, Business, Commerce, Corruption, Customers, Delhi Shops, Dinamani, Editorial, Kapil Sibal, Municipal Corporation of Delhi, New Delhi, nexus, Politicians, Safdarjung, Shop owners, Supreme Court | Leave a Comment »

Inclusion of the Tamil Nadu Reservation Act in the IX Schedule is unconstitutional: KM VIjayan

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

தமிழக இடஒதுக்கீடு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்த்தது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஜயன் வாதம்

புதுதில்லி, நவ. 1: தமிழக இட ஒதுக்கீடு சட்டத்தை, நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தாத வகையில், அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்த்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு வாதிட்டார் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன்.

சட்டங்களை இயற்றி அவற்றை 9-வது அட்டவணையில் சேர்க்க நாடாளுமன்றத்துக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையிலான 9 நீதிபதிகள் பெஞ்ச், திங்கள்கிழமை முதல் விசாரித்து வருகிறது. தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் உள்பட பல்வேறு மாநில சட்டங்களை இதில் சேர்த்தது குறித்தும் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

ஒரு சட்டம் இயற்றப்பட்டு, அதை 9-வது அட்டவணையில் சேர்த்து விட்டால், அது நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்ற பாதுகாப்பைப் பெற்று விடுகிறது.

மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமனை அடுத்து, “வாய்ஸ்’ என்ற நுகர்வோர் அமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை வாதிட்ட விஜயன், கேசவானந்த் பாரதி வழக்கில் 1973-ம் ஆண்டு நீதிமன்றத்துக்குப் பிறகு தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் 1994-ம் ஆண்டு 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டதால், அது நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது என்றார்.

அரசியல் சட்டத்தின் பிரிவு 31 (ஏ)-ன் கீழ் நிறைவேற்றப்பட்ட சட்டங்களைத் தவிர, மற்ற சட்டங்களை 9-வது அட்டவணையில் சேர்க்க முடியாது. ஆனால், தமிழக இட ஒதுக்கீடு சட்டம் 31 (ஏ)-வின் கீழ் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

எழுத்து மூலம் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், 9-வது அட்டவணை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். 94 சதம் மக்கள் இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அறிவித்துவிட்ட பிறகு, இட ஒதுக்கீடு அர்த்தமற்றதாகிவிட்டது. தமிழக இட ஒதுக்கீடு சட்டம், அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றும், அதை அமல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Constitution, Fali Nariman, fraud, Harish Salve, judicial review, Keshavanand Bharti, KM Vijayan, Ninth Schedule, Reservation Act, Supreme Court, Tamil Nadu, Voice | 1 Comment »

China to require all executions to be approved by its highest court

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

சீனாவில் மரண தண்டனை சீர்திருத்தம்

சீனாவில் தான் உலக அளவில் அதிக மரண தண்டனைகள்
சீனாவில் தான் உலக அளவில் அதிக மரண தண்டனைகள்

சீனாவில் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி மரண தண்டனைகளை விதிக்க, இனி நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றாக வேண்டும்.

அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்தப் புதிய விதிகள், சீனா மரண தண்டனை தொடர்பாக கடந்த இருபது ஆண்டுகளில் செய்த மிகப் பெரிய சீர்திருத்தம் என்று அந் நாட்டின் அரச ஊடகம் தெரிவிக்கிறது.

இதனால் மரண தண்டனை வழங்கும் அதிகாரம் இனி மாகாண நீதிமன்றங்களுககு இருக்காது.

உலகிலேயே அதிக அளவு மரண தண்டனைகள் சீனாவில்தான் விதிக்கப்படுகின்றன. பல சமயங்களில் அநீதி இழைக்கப்படுகிறது என்ற குரல்கள் எழுவதால், அதைச் சமாளிக்க இது போன்ற சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக பீஜீங்கில் இருக்கும் பி பி சி நிருபர் தெரிவிக்கிறார். ஆனால் அதே சமயம் மரண தண்டனையை சீனா ஒழிக்கும் என்பதற்கான தடையங்கள் ஏதும் தென்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

Posted in Amnesty International, Capital punishment, China, Death Sentence, Judge, Life sentence, Supreme Court, Xinhua | Leave a Comment »

“Supreme Court crosses its Boundaries” – ‘Reservations are not meant for 2.5 lacs p.a. salaried folks’

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

இட ஒதுக்கீட்டுக் கொள்கை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 31-ல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சென்னை, அக். 25: இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து வரும் 31-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலர் தொல். திருமாவளவன் கலந்து கொள்கிறார்.

இது தொடர்பாக அக் கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

“பதவி உயர்வில் ஒதுக்கீடு’ என்கிற சமூகநீதிக் கொள்கை தொடர்பான முடிவுகளை மத்திய அரசு தான் எடுக்க முடியும். அவற்றில் நீதிமன்றங்கள் தலையிடுவது அதிகார வரம்பு மீறல் ஆகும்.

  • “50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது.
  • ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோருக்கு இட ஒதுக்கீட்டுப் பயன் கிடைக்கக் கூடாது.
  • பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம்’ என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்துள்ளது.

சமூகநீதிக் கொள்கையை முற்றிலும் அழிக்கும் முயற்சி இது. தனது இறையாண்மைக்கு எதிராக வரம்பு மீறும் உச்ச நீதிமன்றத்தின் போக்குகளை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படும்.

Posted in 2.5 Lakhs, Condemn, Creamy Layer, Dalit Panthers, Percentage, Reservations, Salary limits, Supreme Court, Thol Thiruma, Thol Thirumavalavan, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal | 4 Comments »

‘SC Opinion on Creamy Layer is unfortunate’ – CPI(M)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

இட ஒதுக்கீட்டில் “கிரீமி லேயர்’: உச்ச நீதிமன்ற ஆணை பிற்போக்கானது -இந்திய கம்யூனிஸ்ட்

புதுதில்லி, அக். 21: தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினர் மத்தியில் உள்ள உயர் வருவாய் பிரிவினருக்கு (கிரீமி லேயர்) இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணை மிகவும் பிற்போக்குத்தனமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இதை மாற்றுவதற்கு நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை வருமாறு;

நமது சமுதாயத்தில் உள்ள மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீது நீதித்துறை தொடுத்துள்ள தாக்குதல் இது.

இதை மாற்றவில்லை என்றால், அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்ற லட்சியத்தையே இது தகர்த்துவிடும்.

இடஒதுக்கீட்டுக் கொள்கையையும், அதன் அமலாக்கத்தையும் மறுவரையறை செய்திருப்பதன் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் அத்துமீறி பிரவேசித்துள்ளது.

இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்துக்கு இருக்க வேண்டும் என்பதை, பாரபட்சமற்ற மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டியது நாட்டின் கொள்கை வகுப்பாளர்களே தவிர, உச்ச நீதிமன்றம் அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இப்போதைய நிலையே நீடிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு: எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் மத்தியில் உள்ள உயர் வருவாய் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்பது சரியான நடவடிக்கை அல்ல; இப்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று தெலுங்கு தேச கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தில்லியில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறினார்.

Posted in Affluent, AP, Chandrababu Naidu, Communist, CPI(M), Creamy Layer, Judgement, Marxist, Oppression, Reservations, Rich, SC/ST, scheduled castes, scheduled tribes, Second generation, Supreme Court, Telugu, Telugu Desam | Leave a Comment »