தமிழகத்தில் “தங்க நாற்கர” திட்டம் : ரூ.14 ஆயிரத்து 334 கோடி ஒதுக்கீடு
மதுரை : தமிழகத்தில் தங்க நாற்கரம் திட்டப்படி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. இத்திட்டத்துக்காக ரூ.14 ஆயிரத்து 334 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தங்க நாற்கர சாலை திட்டம் :
தேசிய நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டமானது (என்.எச்.டி.பி.) தங்க நாற்கரம் முதல் கட்டம், வடக்கு தெற்கு மற்றும் கிழக்கு மேற்கு இடைவழி இரண்டாம் கட்டம் மற்றும் பிற தேசிய நெடுஞ்சாலைகள் மூன்றாம் கட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த தங்க நாற்கரம் நான்கு மற்றும் ஆறுவழிச் சாலைகள் மூலம் டில்லி மும்பை சென்னை கோல்கட்டா ஆகிய பெருநகரங்களை இணைக்கின்றது. இதன் நீளம் 5,864 கி.மீட்டர். இவை ஸ்ரீ நகர் கன்னியாகுமரி (வடக்கு தெற்கு), சேலம் கொச்சி மற்றும் சில்சார் போர்பந்தரையும் (கிழக்கு மேற்கு) இணைக்கின்றன. வடக்கு தெற்கு மற்றும் கிழக்கு மேற்கு இடைவழியின் நீளம் 7,300 கி.மீட்டர்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிப் பணியில் முதற்கட்டத்தின் கீழ் நிறைவடைந்த திட்டங்கள்:
- அத்திப்பள்ளி ஒசூர் (என்.எச்.7) இடையே 16 கி.மீ.,
- ஒசூர் கிருஷ்ணகிரி (என்.எச்.7) இடையே 45 கி.மீ.,
- கிருஷ்ணகிரி வாணியம்பாடி இடையே 50 கி.மீ.,
- வாணியம்பாடி பள்ளிகொண்டா (என்.எச்.46) இடையே 46 கி.மீ.,
- பள்ளிகொண்டா வாலாஜாபேட்டை (என்.எச்.46) இடையே 46 கி.மீ.,
- வாலாஜாபேட்டை காஞ்சிபுரம் (என்.எச்.4) இடையே 36 கி.மீ.,
- காஞ்சிபுரம் பூவிருந்தவல்லி (என்.எச்.4) இடையே 56 கி.மீ.,
- தடா சென்னை (என்.எச்.5) இடையே 42 கி.மீ.,
என மொத்தம் 342 கி.மீ., நீளமுள்ள இருவழிச்சாலைகள் ரூ. ஆயிரத்து 193 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட செயல்பாட்டில் உள்ள திட்டங்கள்:
- கிருஷ்ணகிரி தொப்பூர் மலைப்பகுதி (என்.எச்.7) இடையே 63 கி.மீ.,
- தொப்பூர் மலைப்பகுதி தும்பிபாடி (என்.எச்.7) இடையே 17 கி.மீ.,
- தும்பிபாடி சேலம் (என்.எச்.7) இடையே 20 கி.மீ.,
- சேலம் குமாரபாளையம் (என்.எச்.47) இடையே 54 கி.மீ.,
- குமாரபாளையம் செங்கப்பள்ளி (என்.எச்.47) இடையே 49 கி.மீ.,
- செங்கப்பள்ளி கோவை (என்.எச்.47) இடையே (கேரளா எல்லை வரை) 83 கி.மீ.,
- சேலம் நாமக்கல் (என்.எச்.7) இடையே 42 கி.மீ.,
- நாமக்கல் கரூர் (என்.எச்.7), இடையே 34 கி.மீ.,
- கரூர் திண்டுக்கல் (என்.எச்.7) இடையே 68 கி.மீ.,
- திண்டுக்கல் சமயநல்லுõர் (என்.எச்.7) இடையே 53 கி.மீ.,
- சமயநல்லுõர் விருதுநகர் (என்.எச்.7) இடையே 49 கி.மீ.,
- விருதுநகர் கோவில்பட்டி (என்.எச்.7) இடையே 39 கி.மீ.,
- கோவில்பட்டி கயத்தாறு (என்.எச்.7) இடையே 40 கி.மீ.,
- கயத்தாறு திருநெல்வேலி (என்.எச்.7) இடையே 43 கி.மீ.,
- திருநெல்வேலி பணகுடி (என்.எச்.7) இடையே 31 கி.மீ.,
ஆகிய 722 கி.மீ., நீளமுள்ள இருவழிச்சாலைகள் ரூ.4,141 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட செயல்பாட்டில் உள்ள திட்டங்கள்:
- திண்டுக்கல் திருச்சி (என்.எச். 45) இடையே 80 கி.மீ.,
- திண்டுக்கல் பெரியகுளம் தேனி (என்.எச்.45 விரிவாக்கம்) இடையே 73 கி.மீ.,
- தேனி குமுளி (என்.எச்.220) இடையே 57 கி.மீ.,
- மதுரை அருப்புக்கோட்டை துõத்துக்குடி (என்.எச்.45பி) இடையே 128 கி.மீ.,
- மதுரை ராமநாதபுரம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி (என்.எச்.49) இடையே 186 கி.மீ.,
- நாகப்பட்டினம் தஞ்சாவூர் (என்.எச்.67) இடையே 80 கி.மீ.,
- தஞ்சாவூர் திருச்சி (என்.எச்.67) இடையே 56 கி.மீ.,
- திருச்சி கரூர் (என்.எச்.67) இடையே 80 கி.மீ.,
- கோவை மேட்டுப்பாளையம் (என்.எச்.67) இடையே 45 கி.மீ.,
- சேலம் உளுந்துõர்பேட்டை (என்.எச்.68) இடையே 134 கி.மீ.,
- கிருஷ்ணகிரி திருவண்ணாமலை திண்டிவனம் (என்.எச்.66) இடையே 170 கி.மீ.,
- புதுச்சேரி திண்டிவனம் (என்.எச்.66) இடையே 36 கி.மீ.,
- கேரள எல்லை கன்னியாகுமரி (என்.எச்.47) இடையே 70 கி.மீ.,
- திருத்தனி சென்னை (என்.எச்.205) இடையே 81 கி.மீ.,
- திருச்சி காரைக்குடி ராமநாதபுரம் (என்.எச்.210) இடையே 174 கி.மீ.,
என மொத்தம் 1,450 கி.மீ., நீளமுள்ள இருவழிச்சாலைகளை சுமார் ரூ. ஒன்பதாயிரம் கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலைகளாக மாற்றும் பணி நடக்கிறது. இதற்காக மொத்தம் ரூ.14 ஆயிரத்து 334 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை 2010ம் ஆண்டுக்குள் முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.