சவரத் தொழிலாளிக்கு “நாய்” ஜாதி என்று சான்றிதழ் வழங்கிய கிராம அதிகாரி `சஸ்பெண்டு’
திருவனந்தபுரம், அக்.24-
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள பெரும்பாய் கோடு கிராமத்தை சேர்ந்த வர் பி.சி.விஜயன். சவரத் தொழிலாளியான இவர் வீடு கட்டுவதற்காக கோட்டயம் நகரசபையில் கடன் உதவி பெற விண்ணப்பித்திருந்தார்.
அதற்காக அவருக்கு ஜாதிச் சான்றிதழ் தேவைப்பட்டது. சான்றிதழ் பெறுவதற்காக “பெரும்பாய்கோடு” கிராம நிர்வாக அதிகாரியை அணுகி னார். பலமாத அலைச்சலுக் குப்பின் அவருக்கு ஜாதிச் சான்றிதழை அந்த அதிகாரி வழங்கினார்.
சான்றிதழை வாங்கிப் பார்த்ததும் விஜயன் அதிர்ச்சி அடைந்தார். அதில் `சுர கன்‘ (கேரளாவில் சவரத் தொழிலாளிகளை அழைக்கும் பெயர்) என்பதற்குப் பதி லாக “சுனகன்” என்று இருந் தது. சுனகன் என்றால் மலை யாளத்தில் நாய் என்று அர்த்தம். எழுத்து பிழையாக இது நடந்திருக்கலாம் என்று நினைத்த விஜயன் உடனே அந்த அதிகாரியிடம் இது பற்றி தெரிவித்து திருத்தி தர கூறினார். ஆனால் அவர் இதை கண்டுகொள்ளவில்லை. “வார்த்தையை திருத்தி மறு சான்றிதழ் தர வேண்டு மென்றால் அரசு கெசட்டில் நீ அறிவிப்பு வெளியிட வேண் டும்” என்று கூறி விஜயனை அனுப்பி வைத்துவிட்டார். திருத்தப்பட்ட ஜாதி சான்றிதழ் பெறுவதற்காக விஜயன் எவ்வளவோ அதிகாரிகளை பார்த்தார். ஆனால் எந்த பிரயோஜனமும் இல்லை.
இந்த விஷயம் பற்றி விஜயன் டி.வி. சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இதனால் அவரது பிரச்சினை மாவட்ட கலெக்டர் காதுக்கு எட்டியது. உடனே அவர் மண்டல வரு வாய்த்துறைக்கு இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டார். தவறுதலாக சான்றிதழ் வழங் கிய அந்த கிராம நிர்வாக அதிகாரியை சஸ்பெண்டு செய்தார்.