Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Sujatha’ Category

Tamil Movies: Screenplay adaptations from Novels & Books

Posted by Snapjudge மேல் திசெம்பர் 11, 2007

பார்வை: ஒன்பது ரூபாய் நோட்டையொட்டி..!

தமிழ் நாவல்கள் திரைப்படங்களாவது பல சந்தர்ப்பங்களில் பலத்த விமர்சனத்துக்கு ஆளாகும்படிதான் ஆகியிருக்கிறது. எழுத்தின் சுவையை ஃபிலிம் சுருள் சாப்பிட்டுவிட்டதாக உலகு தழுவிய புகார் உண்டு.

இந்தப் பிரச்சினை தீருவதற்கு கதாசிரியர்களே இயக்குநர்கள் ஆனால்தான் உண்டு. உன்னைப் போல் ஒருவன் கதையை எழுதி, அதை இயக்கியும் இருந்தார் ஜெயகாந்தன். அப்படி தானே எழுதி தானே இயக்கியவர் வரிசையில் இடம் பெற்றிருக்கிறார் தங்கர் பச்சான். அவருடைய ஒன்பது ரூபாய் நோட்டு நாவல் சமீபத்தில் சினிமாவாகி உள்ளது.

தமிழில் சிறப்பாகப் போற்றப்பட்ட பல நாவல்கள் சினிமா ஆகியிருக்கின்றன. பரவலாக ரசிக்கப்பட்ட பல நாவல்கள் சினிமாவாக ரசிக்க முடியாமல் போயிருக்கின்றன. “”1935-ல் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் “மேனகா’, “திகம்பர சாமியா’ரில் இருந்தே நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன.

அகிலனின் “குலமகள் ராதை’, “பாவை விளக்கு’, “கயல்விழி’ (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன.

கல்கியின் “தியாக பூமி’, “கள்வனின் காதலி’, “பார்த்திபன் கனவு’ போன்ற கதைகளும் மக்களால் கதையாகவும் சினிமாவாகவும் வரவேற்கப்பட்டன.

கொத்தமங்கலம் சுப்புவின் “தில்லானா மோகனாம்பாள்’, நாமக்கல் கவிஞரின் “மலைக்கள்ளன்’ ஆகியவை நாவலைவிடவும் பெரிய அளவில் சினிமாவாகச் சிலாகிக்கப்பட்டவை” என்கிறார் சினிமா விமர்சகரும் திரைப்பட மக்கள் தொடர்பாளருமான பெரு. துளசி பழனிவேல்.

“”மக்களுக்குச் சினிமா பொழுது போக்கு அம்சமாகவே உள்வாங்கப்பட்டிருக்கிறது. காமெடியும், அடிதடியும், கண்ணீரும் அதில் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கலர் ஃபுல்லாக வழங்கப்பட வேண்டும். ஆனால் வாசிப்பு அனுபவம் முற்றிலும் வேறுவிதமானது. கதையுலகில் ஆராதிக்கப்படும் ஆயிரம் பக்க “அன்னா கரீனி’னாவையும் “மோகமுள்’ளையும் சினிமாவாக்கும் போது இது இன்னும் பட்டவர்த்தனமாகத் தெரிய ஆரம்பிக்கிறது” என்கிறார் ஓர் உதவி இயக்குநர்.

சுஜாதாவின் “காயத்ரி’, “கரையெல்லாம் செண்பகப் பூ’, “இது எப்படி இருக்கு’ நாவல்களுக்குக் கிடைக்காத வரவேற்பு, மகரிஷியின் “புவனா ஒரு கேள்விக்குறி’, “பத்ரகாளி’ படங்களுக்குக் கிடைத்தது.

வாசக வெற்றி திரைப்பட வெற்றிக்குப் போதுமானதாக இல்லாத நிலை இது. அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா, படமானபோது அது பரவலாக வரவேற்கப்படவில்லை.

மகேந்திரன் சில படங்களே இயக்கியிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை நாவல்களே. திறமையான கலைஞர்களால் கதைகளை அதன் சாராம்சம் கெடாமல் திரைப்படங்களாக்க முடியும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம்.

  • உமா சந்திரனின் “முள்ளும் மலரும்’,
  • புதுமைப்பித்தனின் “சிற்றன்னை’யைத் தழுவி எடுத்த “உதிரிப் பூக்கள்’,
  • பொன்னீலனின் “பூட்டாத பூட்டுகள்’,
  • சிவசங்கரியின் “நண்டு’ போன்ற நாவல்களைப் படமாக்கியிருக்கிறார் மகேந்திரன்.

“”இருந்தாலும் சினிமா இயக்குநர்கள் அவர்கள் நேசித்து உருவாக்கிய கதையை உரசிப்பார்த்துக் கொள்ளவும் சரி பண்ணிக் கொள்ளவும்தான் தமிழ் எழுத்தாளர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான் சுஜாதா, பாலகுமாரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற பல எழுத்தாளர்கள் வசனகர்த்தாக்களாக்கப்பட்டிருக்கிறார்கள் இப்போது” என்கிறார் பழனிவேல்.

சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று சாதாரணமாக ஒரு பிரயோகம் உண்டு. சினிமா வேறு; நாவல் வேறு என்பதும் நமக்குப் பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது.

Posted in Agilan, Akilan, Anna, Annadurai, Authors, Books, Cinema, dialogues, Directors, Fiction, Films, Kalki, Kothamangalam, Kothamangalam Subbu, Kothamankalam, Kothamankalam Subbu, Literature, Magarishi, Magendhiran, Magendhran, Magenthiran, Maharishi, Mahendhiran, Mahendran, Mahenthiran, Mahenthran, Movies, Novels, Ponneelan, Pudhumai Pithan, Pudhumaipithan, Puthumai Pithan, Puthumaipithan, Screenplay, Sivasankari, Sivashankari, Story, Subbu, Sujatha, Uma Chandhran, Uma Chandran, Uma Chanthiran, Uma Chanthran, Writers | Leave a Comment »

Sujatha – Vaaram oru Paasuram (Kalki) : 39

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

வாரம் ஒரு பாசுரம் – 39

சுஜாதா

கல்கி ஜூலை 15, 2007 

வழக்கொழிந்து போன பல அழகான சொற்களை மறுபடி நோக்கி ஒரு இலேசான பெருமூச்சு விடுவதற்கான வாய்ப்புகள் ஆழ்வார் பாசுரங்கள் பலவற்றில் உள்ளன.

‘திறம்புதல்’ என்ற சொல்லைக் கொஞ்சம் கவனிக்கலாம். இதற்குத் தப்புதல் என்பது பொருள். இதன் எதிர்ப்பதம் திறம்பாமை. திறம்பாத கடல் என்றால் அலையடித்துச் சலிக்காத கடல். திறம்பாத உலகம் – சலியாதிருக்கிற உலகம், திறம்பாது – நான் சொல்வதை என்றால் தப்பாமல், தவறாமல்… இப்படித் தீர்மானிக்கப்பட்ட நெறியிலிருந்து தவறாமையைக் குறிக்கும் வார்த்தை இது. நம்மாழ்வார்
திருவாய்மொழியில் இதனை அத்தனை வேறுபட்ட பொருள்களிலும் ஒரே பாசுரத்தில் பயன்படுத்தியுள்ளார்.

“திறம்பாமல், மண் காக்கின்றேன் யானே என்னும்;
திறம்பாமல், மலை எடுத்தேனே என்னும்;
திறம்பாமல், அசுரரைக் கொன்றேனே என்னும்;
திறம் காட்டி, அன்று ஐவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல், கடல் கடைந்தேனே என்னும்;
திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ
திறம்பாத உலகத் தீர்க்கு என் சொல்லுகேன் –
திறம்பாது என்திரு மகள் எய்தினவே?”

ஒரு தாய் தன் மகள் மேல் கண்ணன் வந்து என்ன என்னவோ
பிதற்றுகிறாளே என்று கவலைப்படுவதாகப் பத்துப் பாடல்களின்
வடிவில் ஆழ்வார், பகவத்கீதையின் 18ஆவது அத்தியாயக் கருத்துகள் அத்தனையையும் அழகாகச் சொல்லிவிடுகிறார்.

இந்தப் பெண் நான்தான் பூமியைத் தவறாமல் காக்கிறேன் என்கிறாள். நான்தான் மலையைத் தூக்கினேன் என்கிறாள். அசுரனைக் கொன்றேன் என்கிறாள். என் திறமையைக் காட்டி அன்று பாண்டவர்களைக் காப்பாற்றினேன் என்கிறாள். பாற்கடலைக் கடைந்ததும் நான்தான் என்கிறாள். அலை ஓயாத (திறம்பாத) கடல் வண்ணனான திருமால் வந்து புகுந்ததால் இது நிகழ்ந்ததா! தவறு செய்யாத (திறம்பாத) உலகத்தவர்களுக்கு என்ன சொல்வேன். என் மகளுக்குத் தப்பாது (திறம்பாது) இது வந்துவிட்டதே. ஏழுமுறை இந்தச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் ஆழ்வார் – ஏழு முறையும்
திறம்பாமல்.

Posted in 4000, Aalvar, Aalwar, Aazhvar, Aazhwar, Azhwar, Dictionary, Kalki, Nammalwar, Nammazhvar, Nammazhwar, Paasuram, Pasuram, Sujatha, Thiruvaaimozhi, Thiruvaimozhi, Vocabulary, Words | Leave a Comment »

Who is Iyer, Anthanan – Thirunedunthandagam

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

அந்தணன் யார் – சுஜாதா

தமிழில் பல சொற்கள் காலப்போக்கில் பொருள் மாறுகின்றன. ஐயர் என்ற சொல், சங்க காலத்தில் ‘தலைவர்’ என்ற பொருளில்தான் பயின்று வந்தது. இன்று அது கேலி வார்த்தையாகிவிட்டது.

‘அந்தணன்’ என்ற சொல்லும் அப்படி காலப்போக்கில் பொருள் மாறி வந்துள்ளது. திருக்குறள் ‘அறவாழி அந்தணன்’ என்று கடவுளைக் குறிக்கிறது. மற்றொரு குறளில் ‘அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலால்’ என்று எல்லா உயிர்களின் மேலும் அன்பு செலுத்துபவர்களை அந்தணர் என்றது.

இந்த உயர்ந்த பொருளில்தான் திருமங்கையாழ்வார் தன் திருநெடுந்தாண்டகத்தில் இந்தப் பாடலில் அந்தணனைப் பயன்படுத்தியுள்ளார்.

‘இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் – தன்னை
இருநிலம், கால், தீ, நீர், விண், பூதம்
ஐந்தாய்,
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல்
ஆகி,
திசை நான்குமாய்த் திங்கள் ஞாயிறு
ஆகி,
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல்
ஆகா
அந்தணனை, அந்தணர் மாட்டு
அந்தி வைத்த
மந்திரத்தை, மந்திரத்தால்
மறவாது என்றும்
வாழுதியேல் வாழலாம், மட
நெஞ்சமே!
(கால் – காற்று)

இந்திரனுக்கும் பிரம்மனுக்கும் முற்பட்டவன். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று ஐம்பூதங்களாய், தமிழ் ஓசையாய், வட சொல்லாய், நான்கு திசைகளாய், சூரிய சந்திரராய் தேவலோகத்தில் உள்ள தேவர்களாலும் அறிய முடியாத அந்தணன் (சிறந்தவன்) அவனை மந்திரங்கள் சொல்லி மறக்காமல் தினம் வாழ்த்தினால் நீ வாழலாம், என் பேதை நெஞ்சமே!

எண் சீர்விருத்தம் என்னும் விரிவான வடிவம்கொண்ட 30 பாசுரங்கள் கொண்டது திருநெடுந்தாண்டகம். திருமங்கையாழ்வாரின் புலமைக்கும் பக்திக்கும் ஒரே சமயத்தில் ஈடு கொடுக்கும் பாடல்கள் அவை.

Posted in Aalwar, Paasuram, Pasuram, Sujatha, Thirumangai, Thirumangai Aazhwar, Thirunedunthandagam, Thirunedunthandakam, Thirunetunthandagam, Thirunetunthandakam | Leave a Comment »

Sujatha – Kalki :: Vaaram oru Pasuram

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 22, 2007

தஞ்சைப் பகுதியில் நிலச் சொந்தக் காரர்களையும் குத்தகைக்காரர்களையும் மேல்வாரம் குடிவாரம் என்று இன்றும் சொல்கிறார்கள். திருப்பாணாழ்வாரின் இந்தப் பாடலில் ‘வாரம்’ வருகிறது. விளக்கம் நான் கேட்டதில்லை. முழுசாக இரண்டரை மணி நேரம் ஒரே ஒரு பாசுரம்!

உத்யோகக் கட்டாயங்களினால் நான் என் பெற்றோரைப் பிரிந்து பல ஊர்களுக்குச் சென்று அலைந்து திரிந்து ஸ்ரீரங்கம் வந்து அவசரத்தில் திரும்பும்போது ‘ஸாரிப்பா! உன்னோட அதிகம் பேச முடியல’ என்று மன்னிப்புக் கேட்பேன். அதற்கு அவர் ‘பரவாயில்லை, உனக்கும் எனக்கும் உள்ள உறவு ‘ஒழிக்க ஒழியாது’ என்பார். இந்தச் சொற்றொடர் திருப்பாவை 28ஆம் பாசுரத்தில் வருகிறது.

‘‘கறவைகள் பின்சென்று கானம்
சேர்ந்து (உ)ண்போம்
அறிவொன்றும் இல்லாத
ஆய்க்குலத்து (உ)ன்தன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம்
உடையோம்
குறையொன்றும் இல்லாத கோவிந்தா!
உன் தன்னோ(டு)
உறவேல் நமக்கிங்கொழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம்
அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா! நீ தாராய் பறை ஏலோர்
எம்பாவாய். (திருப்பாவை, 28)
(கறவை – பசு, சிறுபேர் – செல்லப்பெயர்)

பசுக்களின் பின்னால் போய்க் காட்டை அடைந்து கட்டுச்சோறு தின்பவர்கள் நாங்கள். அதிக அறிவில்லாத எங்கள் இடைக் குலத்தில் நீ வந்து பிறக்கும் புண்ணியம் எங்களுக்குக் கிடைத்தது. குறையற்றவனே! கோவிந்தனே! உன்னோடு எங்கள் உறவு ஒழித்தாலும் ஒழியாதது. அறியாத சிறுமிகள் உன்னை அன்பினால் ‘நீ’, ‘வா’ என்றெல்லாம் அழைக்கிறோம். கோபிக்காதே! எங்களுக்கு வேண்டியதைத் தருவாய்.

கல்வியற்றவர்களும் பக்தியால் அவனுடைய அருளைப் பெறலாம். பகவானுக்கும் ஆத்மாக்களுக்கும் உள்ள தொடர்பு ஆரம்பமற்றது; எப்போதும் இருப்பது. அதை பகவானாலும் ஆத்மாக்களாலும் தனியாகவோ சேர்ந்தோ ஒழிக்க முடியாது. ‘என்று நீ அன்று நான்’ என்று தாயுமானவர் சொல்வதுபோல… உண்மையான உறவுகள் அனைத்துமே ஒழிக்க ஒழியாதவை. கணவன்-மனைவி, அப்பா-பிள்ளை, தாய்-மகள், நண்பர்கள்-காதலர்கள் – ஏன், எதிரிகளேகூட ஒழிக்க முடியாது உறவுகள்தாம்!

பாரமாய பழவினை பற்றறுத்து
என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றி
யென்னுள்புகுந்தான்
கோரமாதவம் செய்தனன்
கொலறியேனரங்கத்தம்மான் திரு
ஆரமார்பதன்றோ அடியேனை
யாட்கொண்டதே

‘சுமையாக நின்ற பழைய பாவங்களின் சம்பந்தத்தைத் தொலைத்து என்னைத் தன்னிடத்தில் அன்புடையவனாகப் பண்ணி வைத்தான். அதுமட்டுமல்லாமல் என் இதயத்துக்குள் நுழைந்துவிட்டான். உக்ரமான தவம் ஏதாவது நான் முற்பிறவியில் செய்திருக்க வேண்டும், தெரியவில்லை. திருவரங்கனின் மார்பன்றோ என்னை ஆட்கொண்டது.’

திருப்பாணாழ்வார் திவ்யப் பிரபந்தத்தில் பத்துப் பாடல்களைத்தாம் பாடியுள்ளார். பத்தும் முத்துக்கள்.

இந்த உருக்கமான பாடலில் உள்ள ‘வாரம்’ என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. ‘என்னைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்டான். பகவான் என் எஜமானன்; நான் அவரிடம் வாடகைக்கு இருக்கிறேன்’ என்கிற அர்த்தம், கவிதை நயமும் ஆழமும் மிக்கது. ‘பங்காகப் பற்றும் படி செய்தான்’ என்கிற பொருளும் வாரம் என்பதற்கு உண்டு. ‘வாரமாக ஓதுவார்கள்’ என்றால் நிஷ்டையாக நியமமாக ஓதுகிறவர்கள். ‘வாரம் நடப்பது’ என்பது கோயிலுக்குப் பிரார்த்தனை செய்து கொண்டு போவது. ‘வாரமோதல்’ என்பது உருச் சொல்வது. Litany. நியமமாகச் சொல்லுதல். இப்படிப் பல படிமங்கள் கொண்ட சொல்லில் திருப்பாணாழ்வார் சொல்வது எந்த வாரம் என்று நீங்களே தீர்மானிக்கலாம்.

‘வாரம் ஒரு பாசுரம்’ என்ற ஒரே ஒரு பிரயோகத்தில் மட்டும் இன்று இந்தச் சொல் முடங்கிக் கிடக்கிறது.

Posted in 4000, Divya Prabhandham, Kalki, Sujata, Sujatha, Thirupaanazhvaar, Thiruppavai, Vaaram oru Pasuram | Leave a Comment »

Kanimozhi presents ‘Chennai Sangamam’ – Tamil Sangamam

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

கலை, பண்பாட்டை மக்களிடம் சேர்க்கும் முயற்சியே “சென்னை சங்கமம்’: கனிமொழி

சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ள “சென்னை சங்கமம்’ கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிக்கான “ஆடியோ சிடி’யை, திங்கள்கிழமை வெளியிட்டார் எழுத்தாளர் சுஜாதா. உடன் (இடமிருந்து) சென்னை சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கனிமொழி, திரைப்பட இயக்குநர் வசந்த், தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் கஸ்பர் ராஜ்.

சென்னை, பிப். 20: தமிழகத்தின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை மக்களிடம் சேர்க்கும் முயற்சியாக “சென்னை சங்கமம்’ திருவிழா நடத்தப்படுவதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கனிமொழி தெரிவித்தார்.

சென்னையில் பிப். 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை “சென்னை சங்கமம்’ திருவிழா நடைபெறவுள்ளது. இதன் அங்கமாக “தமிழ்ச் சங்கமம்’ என்ற விழா பிப். 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக திங்கள்கிழமை சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியது:

“சென்னை சங்கமம்’ சென்னை நகரத்துக்கான விழா. இதன் மூலம் தமிழ்ப் பாரம்பரிய கிராமிய இசை, நடனக் கலை, நாடகம் ஆகியவை சென்னை நகரின் தெருக்களிலும், திறந்த வெளியிலும் நடத்தப்படவுள்ளன.

இதில் 700 கலைஞர்கள் கலந்துகொண்டு 37 கலை வடிவங்களை சென்னை நகரின் பல பகுதிகளில் நிகழ்த்தவுள்ளனர். இந்த அரிய கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டுகளிக்க வேண்டும்.

புதன்கிழமை ஒன்றரை மணி நேர பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சி பிலிம் சேம்பர் திரை அரங்கில் நடைபெறும். இது முதல் ஆண்டு என்பதால் சில தவறுகள் இருக்கலாம். அடுத்த ஆண்டு அவை திருத்தப்பட்டு பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படும். மேலும் இது விரிவடைந்து தமிழக விழாவாக மாற்றவும் முயற்சி எடுக்கப்படும் என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழ் மையம், பொது நூலகத்துறை, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. நாட்டுப்புற இசை, நாட்டியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. நூலகத்துறை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே நூலகத்துறை இவ்விழாவை ஏற்பாடு செய்வதில் அங்கமாகத் திகழ்கிறது என்றார்.

அண்ணா நகர், மயிலாப்பூர், ராயபுரம் பூங்காக்களில் தப்பாட்டம்: நையாண்டி மேளம் நிகழ்ச்சிகள் இலவசமாக கண்டு களிக்கலாம்

சென்னை, பிப். 20-

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை பிரபலப்படுத்தும் முயற்சியாக “சென்னை சங்கமம்” என்ற கலை விழாவை தமிழ் மையம் என்ற அமைப்பு நடத்துகிறது. கிரா மிய கலைஞர்களுக்கும் மக்க ளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் இந்த கலாச்சார நிகழ்ச்சிகளில் 1300 பேர் பங் கேற்கிறார்கள்.

மக்கள் அதிகம் கூடும்

  • அண்ணா நகர் டவர் பூங்கா,
  • மயிலாப்பூர் நாகேசுவரராவ் பூங்கா,
  • தி.நகர் நடேசன் பூங்கா,
  • கே.கே.நகர் சிவன் பூங்கா,
  • ராயபுரம் ராபின்சன் பூங்கா,
  • மாட வீதி,
  • பிலிம் சேம்பர்,
  • பெசன்ட் கடற்கரை,
  • கோட்டூர்புரம் பூங்கா,
  • நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம்,
  • கலைவாணர் அரங்கம்,
  • மிïசிக் அகாடமி,
  • ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அரங்கம்,
  • தியாகராய ஹால்,
  • பாரதி இல்லம் உள்பட பல இடங்களில் நிகழ்ச்சி நடக் கிறது.
  • கர்நாடக சங்கீதம்,
  • மயி லாட்டம்,
  • ஒயிலாட்டம்,
  • தப்பாட்டம்,
  • நையாண்டி மேளம்,
  • பாவைக் கூத்து,
  • காவடி ஆட்டம் உள்பட பல நிகழ்ச்சிகள் நடக்கும் இந்த பிரமாண்ட கலை-பண்பாடு, இலக்கியத் திருவிழாவை இன்று (செவ்வாய்) மாலை முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். இந்த கலை விழா நாளை முதல் 25-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.

நாளை (புதன்) நடக்கும் கலை நிகழ்ச்சிகள், இடம் நேரம் விபரம் வருமாறு:-

மிïசிக் அகாடமி-சிம் போனி இசை (மாலை 6.30)

தியாகராய ஹால்-இறை யன் கூத்து, இஸ்லாமிய இசை. மற்றும் நாடகம் (மாலை 6.30)

தி.நகர் நடேசன் பூங்கா: காலை 6 மணி-நாதசுரம், 6.30-கே.காயத்ரி வாய்ப் பாட்டு

மாலை 5.10: கட்டை கால் ஆட்டல்

6.15: சென்னை இளைஞர் குழு இசை

இரவு 7.00: சுதா ரகுநாதன் பாட்டு

புஷ்பவனம் குப்புசாமி

கே.கே.நகர் சிவன் பூங்கா:

காலை 6.00: தேவார திருப் புகழ்

6.30: வாலிவலம் வெங்கட் ராமன் பாட்டு

மாலை 5.00: தப்பாட்டம், காவடி ஆட்டம்

6.30: புஷ்பவனம் குப்புசாமி பாடும் கிராமிய பாடல்கள்

ராயபுரம் ராபின்சன் பூங்கா:- மாலை 5.00: குதிரை ஆட்டம், கானா பாடல்கள்

6.30: கிரேஸ் குழுவின் இசை கச்சேரி

கோட்டூர்புரம் பூங்கா:

மாலை 5.00: காளியாட்டம், மாடட்டம், மயிலாட்டம்

மயிலாப்பூர் நாகேசுவரராவ் பூங்கா:-

காலை 6.00: நாதசுரம்

6.30: அக்கரை சகோதரிகள் வயலின் இசை நிகழ்ச்சி.

நையாண்டி மேளம்

மாலை 5.00:- நையாண்டி மேளம், பாவைக் கூத்து.

6.30: டி.எம்.கிருஷ்ணா வாய்ப்பாட்டு

அண்ணா நகர் டவர் பூங்கா:-

காலை: நாதசுரம்,

6.30: மகதி வாய்ப்பாட்டு

மாலை 5.00: புலியாட்டம் மண்ணின் பாடல்

6.30: சாருமதி ராமச்சந்திரன் சுபஸ்ரீ ராமச்சந்திரன், வாய்ப்பாட்டு

பிலிம் சேம்பர்:-

மாலை 5.00:- பாப்பம்பாடி ஜமா குழுவினரின் பறையாட் டம்

6.00: பட்டிமன்றம், நடுவர்: சாரதா நம்பி ஆரூரான்.

Posted in Artistes, Arts, Attraction, Books, Carnatic, Casper Raj, Chennai, Chennai Sangamam, Culture, Dance, Drama, Events, Folk, Gasper Raj, Gasperraj, Heritage, Kaavadi, Kanimozhi, Kavadi Aattam, Madras, Mayilattam, music, Naiyandi Melam, Native, Oyilattam, Paavai Koothu, Pattimanram, Sujatha, Tamil Sangamam, Thamizh, Thangam Thennarasu, Thappaattam, Theater, Tourist, Vasanth | 3 Comments »

Sivaji – The Boss: Movie starts its post-production work

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

ஒரு வருடத்துக்கு மேல் நடந்த ரஜினியின் `சிவாஜி’ படப்பிடிப்பு முடிந்தது

சென்னை, பிப். 14-

ரஜினி நடிக்கும் `சிவாஜி’ படம் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சந்திரமுகி ரிலீசுக்கு பின் இப் படத்தில் அவர் நடித்துள்ளார். மெகா பட்ஜெட்டில் படம் தயா ரானது.

ரஜினி ஜோடியாக ஸ்ரேயா நடித்தார். மணிவண்ணன், சுமன், ரகுவரன், விவேக், வடிவுக்கரசி எனபலர் நடித்துள்ளனர்.

2005-ல் டிசம்பர் 13ந் தேதி முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. ஏவிஎம் ஸ்டூடியோ, பிஅண்ட்சி மில், புளியந்தோப்பு போலீஸ் நிலையம், கும்ப கோணம் கோவில், புதுவை நகராட்சி அலுவலகம், என பல இடங் களில் படப்பிடிப்பு நடந்தது

ஐதராபாத், பெங்களூர், புனே நகரங்களிலும் பிர மாண்ட `செட்’கள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நயன்தாரா ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். இப் பாடல் காட்சியில் புனேயில் கர காட்ட கலைஞர்களை வைத்து படமாக்கினார்கள். வெளிநாட்டு அழகிகளை வரவழைத்து ஒரு பாடல் காட்சியும் எடுக்கப்பட்டது. வெனிஸ் நகர செட் அமைத்து ஒரு பாடலை எடுத்தனர். சண்டைக்காட்சிகளும் நவீன முறையில் படமாக்கப்பட் டுள்ளது.

இறுதி கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்த இயக்குனர் ஷங்கர் முடிவு செய்தார். இதற்காக சில நாட்களுக்கு முன்பு ரஜினியும் படக்குழுவினரும் அமெரிக்கா சென்றனர். அங்கு ஒரு வாரமாக படப்பிடிப்பு நடந்தது. ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். தந்தை கெட்டப் அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் ரகசியமாக படப்பிடிப்பு நடந்தது. படப் பிடிப்பை சிலர் படமெடுத்து இண்டர் நெட்டில் வெளியிட் டதால் சிவாஜியில் ரஜினி கெட்டப் வெளியேதெரிந்து விட்டது. எனவே படப்பிடிப்பு எச்சரிக்கையாக நடத்தப்பட்டது. படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்தது. இன்று மாலை அல்லது நாளை ரஜினி சென்னை திரும்புகிறார். ஒரு வருடத்துக்கு மேலாக நடந்த படப்பிடிப்பு முடிந்து விட்டது.

ஏவி எம் ஸ்டூடியோவில் ஏற்கனவே இரு வாரங்கள் டப்பிங் பேசினார். அமெரிக் காவில், படமான காட்சிகளுக்கு அடுத்து டப்பிங் பேசுகிறார்.ஸ்ரேயாவுக்கு சந்தியா பின்னணி குரல் கொடுக்கிறார். ஷங்கரின் காதல் படம் மூலம் அறிமுகமானவர் சந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இடையில் ஸ்ரேயாவுக்கு பின்னணி குரல் கொடுத்து டப்பிங்கும் பேசி வருகிறார்.

தமிழ் புத்தாண்டில் `சிவாஜி’ ரிலீஸ் ஆகிறது.

Posted in AR Rehman, AVM, Manivannan, Raghuvaran, Raguvaran, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Shankar, Shreya, Shriya, Sivaji, Sivaji the Boss, Sriya, Sujatha, Suman, Vadivukkarasi, Vivek | Leave a Comment »

Ponvandu – Meendum Thoondil Kathaigal : Sujatha

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

காலையிலேயே நந்திதாவை மேரி குளிப்பாட்டி பவுடர் அப்பி கூந்தலை இரட்டைப் பின்னி வாசனையாக அழைத்து வர பைஜாமாவும் சண்டே ஹிண்டு வுமாக ராஜேஷ் ‘‘கன்னுக்குட்டி சக்கரக்கட்டி நந்தும்மா’’ என்று கன்னத்தில் முத்தமிட்டான்.

‘‘என்னப்பா இப்பதான் குளிச் சேன். எச்சப் பண்ணிட்ட’’ என்ற அதட்டலில், கொஞ்சம் சங்கீதாவின் தோரணை தெரிய திடுக்கிட்டான்.

அவன் பாசாங்காக முகத்தைச் சுளித்துக் கொள்ள ‘போனாப் போறது’ என்று குழந்தை மறு முத்தம் கொடுத்தது. ஐந்து வயசுக்கு என்ன சாமர்த்தியம். தாயில்லாத வாழ்க்கைக்கு இப்போதே செய்து கொள்ளும் ஏற்பாடா? என்ன பேச்சு பேசுகிறாள். இவளை விட்டுவிட்டு நான் எப்படி வாழப் போகிறேன்? என்ன நியதி இது? தாய் இறந்தபின் பெண் குழந்தை தந்தையிடம் வாழக்கூடாதா?

‘‘காலைலயே எல்லாத்தையும் எடுத்து வெச்சிக்கிட்டாங்க’’ என்றாள் மேரி.

‘‘காட்டு?’’

தரையில் வைத்து சிறிய அலுமினிய பெட்டியைத் திறக்க நந்திதாவின் சகல உடமைகளும் அதில் இருந்தன. கலர் பாக்ஸ், நூல் பந்து, ஐந்து வித கைகுட்டைகள், ஹேர்பின், ப்ருச், ப்ளாஸ்டிக் வளையல், பீச்சில் வாங்கின இருட்டில் ஜொலிக்கும் பம்பரம், ஜிலுஜிலு கண்ணாடி நகை, குட்டி டயரி, தீப்பெட்டி!

‘‘இது எதுக்கு கண்ணு?’’

‘‘இதுக்குள்ள தங்கராசு இருக்கான்.’’

‘‘பொன்வண்டுங்க… வெளிய விட்டுரும்மா. மூச்சுவிட முடியாம செத்துப்போய்டும் கண்ணு.’’

‘‘திறந்தேன், போகமாட்டங்கறது.’’

இந்நேரம் செத்திருக்கலாம்.அதை ஏன் சொல்லவேண்டும்? அழ ஆரம்பித்து விடுவாள் ராகம் போட்டு. அற்ப காரணத்துக்கெல்லாம் அரைமணியாவது அழுவாள்.

டாக்டர் சாந்தா சொன்னபடி ‘தாய்க்கு ஏங்கிருக்கு. அதான் காரண மில்லாம அழுது.’

‘‘என்ன செய்யணும் டாக்டர்?’’

‘‘உங்க மனைவிக்கு தங்கச்சி இருக்காங்களா?’’

‘‘வினோதா.’’

‘‘அவங்க மாதிரி இருப்பாங் களா?’’

‘‘ஆமாம். ரெண்டு குழந்தைங்க இருக்கு.’’

‘‘அவங்க ஹஸ்பண்டு.’’

‘‘இந்திக்காரர், ராஜஸ்தான்.’’

‘‘ஓ! கேட்டுப் பாருங்களேன்.’’

‘‘நான்கூட யோசிச்சேன்.’’

‘‘அவங்க புருசன் ஒப்புத்துப் பாரா?’’

‘‘அவர் ஒண்ணும் சொல்லமாட்டார். ஜாலி யான டைப். கொஞ்சம் பாஷை ப்ரச்னை. அவ்வளவு தான்.’’

‘‘யோசிக்காதிங்க. தாய் இறந்துபோன மனநிலையில் ஒரு தாய்போல ஒரு பதில் பிம்பம் இவளுக்குத் தேவைப்படுது. குழந்தைக்கு இதுதான் நல்லது. கஸின்ஸ் கூட கலகலப்பா இருக்கறதும் மறக்கறதுக்கு உதவும்.’’

நந்திதா சமர்த்தாக டி.வி.யில் ‘போகோ’ பார்த் துக் கொண்டிருந்தாள்.

அவள் பெட்டியில் மேலாக இருந்த பொம்மை புத்தகத்தில் சங்கீதாவின் கன்னத்தோடு ஒட்டியபடி போட்டோ இருந்தது. கண்ணீரைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு ‘‘இது எப்ப எடுத்தது?’’ என்றான்.

‘‘நீதாம்பா. டிஸிவேர்ல்டு போயி ருந்தமே. நான்கூட ஷர்ட்ல வாந்தியெடுத்திட்டேனே. நீகூட கோவிச்சுண்டியே.’’

‘‘இத்தனை விவரங்கள் வேண்டாம்டா கண்ணு. வெரிகுட் எல்லாம் ரெடியாக்கும். அப்பாவை விட்டுட்டுப் போகப் போறியாக்கும். வினோதா சித்தி வந்துண்டே இருக்கா.’’

‘‘அய்யா!’’

‘‘என்ன மேரி?’’

‘‘நந்துக் கண்ணுவை நீங்களே வெச்சுக்கலாமே, தினம் குளிப்பாட் டிர்றேன். சட்டைகவுனு போட்டு ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்து ஸ்கூல்ல கொண்டு விட்ருவேன். சாயங்காலம் நீங்க வர்றவரைக்கும் பாத்துக்கறேன்!’’

‘‘இல்லை மேரி. வினோதாம்மா கிட்ட இருக்கறதுதான் இப்போதைக்கு சரியான முடிவு. அவங்க வீட்டில நிறைய கஸின்ஸ் இருக்காங்க. அவங்ககூட இருந்தாத்தான் மெல்ல மறப்பாங்க.’’

‘‘மறக்கணுங்கறிங்களாய்யா?’’

அவன் சற்று திகைத்தான்.

‘‘அவங்க நல்லா பாத்துப்பாங்க. படிக்க வெப்பாங்க. அதான் எதிர் காலத்துக்கு நல்லது. பொம்பளைப் பிள்ளையில்லையா? ஏன் உங்கிட்ட ஏதாவது சொல்லித்தா?’’

‘‘இல்லைங்க ஆனா முகம் வாடியிருக்குதுங்க. பாப்பா முன்ன மாதிரி இல்லை. உங்க மேல ரொம்ப உசிரு, ஒட்டுதல்ங்க.’’

‘‘அடிக்கடி போய் பார்த்துக்கப் போறேனே. இதபாரு… ஏற்பாடெல் லாம் செய்தாச்சு. டி.சி. வாங்கி ஸ்கூல் மாத்தியாச்சு. இப்ப என்னைப் போட்டுக் குழப்பாதே. எதுக்கு நீ அழுவறே?’’

ஸ் ஸ் ஸ்

வாசலில் கார் வந்து நிற்க, வினோதாவும் குழந்தைகளும் உள்ளே ஓடிவந்து நந்திதாவை அணைத்துக் கொள்ள ‘‘நந்து நீ என் ரூம்லதானே படுத்துக்கப் போறே?’’

‘‘இல்லை என் ரூம்ல. அவ கர்ள்.’’

‘‘மாத்தி மாத்தி படுத்துப்பா.’’

வினோதா நந்திதாவின் நெற்றியில் படிந்த கீற்றைப் பரிவுடன் தள்ளியபடி ‘‘என்ன மேரி எல்லாம் ரெடியா?’’ என்றாள்.

‘‘உங்க வூட்டுக்காரரு வரலிங் களா?’’

‘‘கார்ல இருக்கார்.’’

‘‘காலைலிருந்தே ரெடிம்மா.’’

வினோதா அவனைக் கண்ணுக்குக் கண் பார்த்தாள். ராஜேஷ் அவள் பார்வையைத் தவிர்த்தான்.

‘‘ப்ரகாஷை உள்ள கூப்பிடேன்.’’

‘‘அது அங்கயே இருக் கட்டும். செல்போன் பேசி முடிக்கலை இன்னும். கவலைப்படாதீங்க. எல்லாருக்கும் இதுதான் நல்லது அத்திம்பேர்!’’

‘‘உங்களுக்குத்தான் நல்லது நடக்கணும்னு அம்மா சொன்னா… சீக்ரமா…’’

‘‘அந்தப் பேச்சே இல்லைன்னு சொல்லு.’’

‘‘எத்தனை நாள் தனியா இருப்பீங்க அத்திம்பேர்?’’

‘‘அந்தக் கவலையை நீங்க படவேண்டாம்.’’

‘‘உங்களுக்கு இருக்கற அந்தஸ்துக்கு தயக்கமில்லாம குடுப்பா. அப்பவே பலபேர் விசாரிச்சிண்டிருந்தா.’’

‘‘நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கறியா? சம்மதிக்கறேன்.’’

‘‘எனக்குக் கல்யாணம் ஆய்டுத்தே. கொஞ்சம் லேட்டு அத்திம்பேர்.’’

‘‘ப்ரகாஷ்ட்ட கேட்டுப் பாக்கறேன்’’ என்று கண் சிமிட்டினான்.

‘‘கேட்டா ‘லே ஜாவோ’ன்னுடுவார்’’ என்று சிரித்தாள்.

இரண்டு பேருக்கும் ஒரே குரல். ஒரே முகஜாடை. ஒரே வாசனை! நந்து சீக்கிரம் பழகிவிடுவாள்.

‘‘சித்தி! நீ அம்மா மாதிரியே இருக்கே!’’

‘‘அம்மாதாண்டி நான். சித்தினு கூப்டாதே. இவங்க மாதிரி ‘வின்னு’ன்னு கூப்பிடு.’’

‘‘பேர் சொல்லியா?’’

‘‘அதான் எனக்குப் பிடிக்கும்.’’

‘‘வின்னு!’’

‘‘என் செல்லமே!’’

‘‘நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. இதோ இரண்டு நாள்ள பழகிடுவா. பாரு மூக்கு ஒழுகறது பாரு’’ என்று டிஷ்யுவால் அவள் மூக்கைத் துடைத்து விட்டாள்.

‘‘போலாமா?’’

சோபாவில் உட்கார்ந்து நந்திதாவை மடிமேல் வைத்துக் கொண்டு மெல்லப் பேசினான். ‘‘நந்து நீ வின்னு சித்தியோட இருக்கறது உன் நல்லதுக்குத்தான். அம்மாவும் சந்தோஷப்படுவா.’’

‘‘அம்மாதான் செத்துப் போய்ட் டாளே!’’

‘‘பெருமாள்ட்ட போய்ட்டா’’

‘‘திட்டினியாப்பா?’’

‘‘இல்லைமா திட்டலை.’’

‘‘ரகுவை கிள்ளாம இருக்கச் சொல்லு.’’

‘‘சேச்சே! நான் அந்த வழக்கத்தை எப்பவோ நிறுத்திட்டேன் பெரியப்பா.’’

புறப்படும்போது நந்திதா ஒரு முறை திரும்ப அவனருகில் வந்து, ‘‘அப்பா நான் இங்கயே இருக்கேனே’’ என்றாள்.

கண்ணீரை அடக்கிக்கொண்டு ‘‘நீ எங்கயும் போகலைமா. தினம் வந்து உன்னைப் பார்ப்பேன்.’’

‘‘பெங்களுர்க்கா…? பொய்!’’

‘‘தினம் போன்ல பேசுவேன். ஏய் யாராவது ஏதாவது எங்க நந்திதாவைச் சொன்னா உடனே எனக்கு போன் பண்ணிடுவா. அடுத்த நிமிஷம் ஏரோப்ளேன்ல வந்து…’’

‘‘போப்பா பொய்ப்பா.’’

வினோதாவின் கணவன் ஆரனை பொறுமையில்லாமல் அழுத்த ‘‘கமிங் கமிங்’’ என்று கூவினாள்.

வினோதாவுடன் வாசலுக்கு வந்தான்.

‘‘ஹாய் ப்ரகாஷ்!’’

இவனைப் பார்த்து ‘‘ஹாய் பார்ட்னர் சப்குச் டீக் டாக்’’ என்று காரில் இருந்தபடியே கையசைத்தான். செல்போனில் பேசிக் கொண்டிருந்தான் ப்ரகாஷ். ‘‘கமான் டியர் லேடி’’ என்று நந்திதாவை தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான். ‘‘வின் வின், நாட் டு வொர்ரி… நாட் டு வொர்ரி.. எவ்ரிதிங் ஃபைன்’’ என்றான்.

‘‘இன்னிக்கே பங்களுரா? மெல்ல ஓட்டச் சொல்லு.’’

கார் புறப்பட்டது.

‘‘அத்திம்பேர் வரேன். வா நந்து எதாவது வேணும்னா…’’ என்று பாதியில் நிறுத்தினாள்.

ஸ் ஸ் ஸ்

அவர்கள் போனதும் ப்ரேமலதா வந்தாள். வந்த உடன் இரைந்துகிடந்த செய்தித்தாள்களையும் பத்திரிகைகளை யும் அடுக்கி வைத்தாள். கூடத்தைப் பெருக்கினாள், திண்டுகளைத் தட்டிப் போட்டாள்.

‘‘இதெல்லாம் எதுக்கு ப்ரேம்? மேரி வருவா.’’

கிச்சனுக்குச் சென்று காபி போட்டுக் கொண்டு வந்தாள்.

‘‘ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கிங்க.’’

‘‘நான் செய்தது சரியா ப்ரேம்?’’

‘‘நிச்சயம். குழந்தைக்கு நல்லதுதான் செய்திருக்கீங்க.’’

‘‘போறப்ப என்னைத் திரும்பிக்கூட பார்க்கலை ப்ரேம்.’’

‘‘கமான்! ஆண்பிள்ளை அழக் கூடாது.’’

அவன் கன்னத்தில் உருண்ட கண்ணீரைத் தன் துப்பட்டாவால் துடைத்துவிட்டாள். ‘‘பிட்ஸா எதாவது ஆர்டர் பண்ணட்டுமா? உங்களுக்குப் பிடிக்குமே.’’

‘‘ஒண்ணும் வேண்டாம்.’’

‘‘ஆர் யு ஓகே. உடம்பு சரியில்லையா?’’ நெற்றியில் தொட்டுப் பார்த்தாள்.

‘‘ஒரு பாராஸிட்டமால் போட்டுக்கறீங்களா? எங்கருக்கு?’’

‘‘காலைலருந்து சஞ்சலம். கொஞ்ச நேரம் தூங்கினா சரியாய்டும்.’’

‘‘சரி பெட்ரூம்ல போய் படுத்துக்கங்க. டின்னர் ரெடி பண்றேன்’’

‘‘வேண்டாம் ப்ரேம். எனக்கு சாப்படற மூடு இல்லை.’’

‘‘ராத்திரி தனியா இருப்பிங்களா? கலீக்ஸ் யாராவது வந்து படுத்துக்க சொல்லிருங்கீங்களா?’’

‘‘தேவையில்லை.’’

‘‘ஐ கேன் ஸ்டே. உங்களை தனியா விட்டுட்டுப் போறதுக்கு எனக்கு பயமா இருக்கு. சங்கீதாவைப் பத்திப் பேச விரும்பறீங்களா?’’

‘‘இல்லை. மறக்க விரும்பறேன் முடியலை.’’

‘‘லைஃப் கோஸ் ஆன்.’’

‘‘ஆமாம்.’’

‘‘எப்ப முதல்ல சந்திச்சீங்க?’’

‘‘ஆகஸ்ட் 98, எட்டே வருஷம்.’’

‘‘அநியாயம்’’ என்றாள். தன்னை விடுவித்துக் கொண்டு புறப்பட்டாள்.

ஸ் ஸ் ஸ்

போகும்போது குழந்தைகள் ஐஸ்க்ரீமுக்குப் பிடிவாதம் பிடித்தன. வினோதா வழியில் ஒரு கடையில் நிறுத்தச் சொன்னாள்.

நந்திதாவை ‘‘வா கண்ணு ஐஸ்க்ரீம் சாப்டலாமா?’’

நந்திதா தலையை ஆட்டி ‘‘வேண்டாம்’’ என்றாள்.

‘‘ப்ரகாஷ் பாத்துக்க. இந்தப் பிசாசுங்களுக்கு ஐஸ்க்ரீம் கப்பம் கட்டியாகணும். இதோ வந்துர்றன்’’ என்று தன் குழந்தைகளுடன் இறங்கிச் சென்றாள்.

‘‘வின், அப்படியே எனக்கு ஒரு பிஸ்தா கப்பு’’ என்றான் ப்ரகாஷ்.

அவர்கள் ஆளுக்கொரு ஐஸ்க்ரீம் கோனை நாக்கால் தடவிக்கொண்டு திரும்பி வந்தபோது, நந்திதா காரில் இல்லை.

ஸ் ஸ் ஸ்

‘‘நல்லா பாடுவா, அபசுரம் இல்லாம பாடுவா… சமைப்பா… எல்லாத்துக்கும் புன்னகை. திட்டினா கூட புன்னகை. யாரோடயும் சண்டை போடாம என்ன குடும்பம்? என்ன ஃபேமிலி? சே! எங்கிட்ட கடவுள் சொல்லியிருக்கலாம். எட்டு வருஷம்தாண்டா இந்த தேவதைன்னு… நாடு நகர மெல்லாம் சுத்தாம இன்னும் கொஞ்சம் அதிக நேரம் வீட்ல இருந்திருப்பேன்.’’ நெஞ்சைப் பிடித்துக் கொண்டான்.

‘‘ஆர் யு ஆல் ரைட்?’’ அவள் தோளில் சாய்ந்து கொண்டான். ப்ரேமா அவன் தலையை நிமிர்த்தி ஆழ்ந்து பார்த்தாள். ‘‘ப்ரேம் என்னைக் கல் யாணம் பண்ணிப்பியா?’’ அவள் தலையை அசைத்து ‘‘நாளைக்குக் காலைல இதே கேள்வி இருக்கான்னு பார்க்க லாம் ராஜேஷ்.’’ ‘‘உன் கூட வரலை?’’ என்றான் ப்ரகாஷ்.

‘‘நாசமாப் போச்சு. உன்னை ஒரு நிமிஷம் பாத்துக்கச் சொன்னா இப்டி கோட்டை விட்டுட்டியே… இப்ப எங்க போய்த் தேடுவேன்? அத்திம்பேருக்கு என்ன பதில் சொல்வேன்? பாழாப் போற செல்ஃபோனை காதை விட்டுப் பிடுங்கு முதல்ல.’’

திகைத்துபோய் ‘‘நந்திதா நந்து..’’ என்று இங்குமங்கும் தேடினாள்.

ப்ரேமா புறப்படும்போது, ராஜேஷ் கூடவே சென்று அவளை அப்படியே அணைத்துக் கொண்டு, திரும்ப அழைத்துவந்து விளக்கை அணைத்து அவளைப் படுக்கையில் வீழ்த்தினான்.

¬¬¬

ப்ரகாஷ் ‘நாட் டு வொர்ரி. அந்தப் பொண்ணு ஒரு மாதிரி மோரோஸா இருந்திச்சு. திரியும் வூட்டுக்குத்தான் போயிருக்கும். கிட்டக்கத்தானே. இந்தா முதல்ல அங்க போன் போடு. டியர்! நாட் டு வொர்ரி… நோ ப்ராப்ளம்.’ என்றான்.

¬¬¬

‘‘ராஜேஷ் ராஜேஷ்! உணர்ச்சிவசப் படாதீங்க.’’

டெலிபோன் மணி அடித்தது.

‘‘போன் போன்’’ என்றாள் மூச்சுத் திணறலிடையே…

‘‘அடிக்கட்டும்’’ என்றான்.

‘‘ப்ளீஸ்! எடுங்க அத்திம்பேர். எடுங்க போனை’’ என்று வினோதா பதறினாள்.

¬¬¬

பிரிவா சோகமா காமமா தன்னிரக்கமா எது அந்தக் கணத்தில் அவனைச் செலுத்தியது என்று தெரியாமல் அவசர அவசரமாக அவளைக் கலைத்தான். பட்டென்று ஸ்விட்ச் தட்டப்பட்டு ஒளிவெள்ளம் பரவியது. ‘‘நந்திதா!?’’ அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

‘‘நந்திதா ‘‘ய்யென்ன?, என்ன வேணும் கண்ணு?’’

‘‘அம்மா போட்டோ.’’

Posted in Kumudam, Sujatha, Tamil, Thoondil Kathaigal | 1 Comment »

Sujatha – Thoondil Kathaigal : Status

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

வாசலில் ஒரு டெம்போ வந்து நிற்க, அதிலிருந்து ஃப்ரிஜ்ஜும் டி.வி.யும் இறக்கப்பட்டதை ப்ருந்தா வேடிக்கை பார்த்தாள். யார் வீட்டிலேயோ புதுப் பணம் வந்திருக்கிறது போலும் என்று எண்ணினாள்.

காதில் பென்சில் வைத்துக் கொண்டிருந்தவன், அவளிடம் வந்து ‘‘மிஸ்டர், ராஜாராம்ங்கறவரு ஃப்ளாட் எதுங்க?’’

‘‘எங்க வீட்டுக்காரர் பேரு ராஜாராம். எதுக்கு கேக்கறீங்க?’’

‘‘ப்ரமிளா ஏஜென்சிஸ்லிருந்து டெலிவரி பண்ண வந்திருக்கோம்.’’

‘‘தப்பா வந்திருக்கிங்க. நாங்க எதும் ஆர்டர் பண்ணலைப்பா.’’

அவன் தன் டெலிவரி சலானை மறுபடி பார்த்தான். செல்போனில் எண்களை ஒத்தினான்.

‘‘பார்ட்டி ஆர்டர் இல்லைங்கறாங்க. கருமாதிங்களா விலாசம் தப்பா?’

‘‘….’’

‘‘பேசுங்க’’ என்று அவளிடம் கொடுத்தான்.

‘‘அம்மா நான் ப்ரமிளா ஏஜென்சிஸ்லிருந்து மேனேஜர் முத்துராகவன் பேசறேன். மிஸ்டர் ராஜாராமன் ஒரு டீலக்ஸ் ஃபேமிலி மாடல் ப்ரிஜ்ஜும், ஒரு 28 இன்ச் டிவியும் ஆர்டர் செய்திருக்கார். நீங்க டெலிவரி நோட்ல கையெழுத்துப் போட்டு பொருளை வாங்கிட்டா போதும். கேயரண்டி கார்டுங்களும் மேன்யுவலும் கொடுப்பாங்க.’’

‘‘இத பாருப்பா! எங்கயோ தப்பு நேர்ந்திருக்கு. நாங்க யாரும் எதும் ஆர்டர் செய்யலை.’’

இதற்குள் ராஜு டூவீலரில் வந்து இறங்கினான். ‘‘இங்க பாருங்க என்னவோ சொல்றான். ஃப்ரிஜ்ஜாம் டி.வி.யாம்’’.

ராஜு அவளைக் கவனிக்காமல், ‘‘ஓ வந்தாச்சா! இந்த வீடுதாம்பா உள்ள கொண்டு போங்க.’’

ப்ருந்தாவுக்குத் திக்கென்றது.

இரண்டு சாதனங்களும் ரொம்ப பெரிசாக இருந்தது.

‘‘பழைய டி.வி.யை இப்பவே எடுத்துக்கிட்டு போயிர்றிங்களா, இடம் இல்லை.’’

அந்தப் பத்துக்குப் பன்னிரண்டு அறையில் ப்ளாஸ்டிக் உறைகளும் தர்மகோல் அட்டைப்பெட்டி எல்லாம் நிறைந்து உட்கார இடம் இல்லாமல் ப்ருந்தாவுக்கு எதும் புரியவில்லை. ஏது காசு இவருக்கு? மாசம் பதினெட்டாயிரத்தில் இருபதாம் தேதி தாண்டவே சிங்கியடிக்கிறதே.

‘‘ஏ.சி எப்பப்பா வரும்?’’

‘‘கோடவுன்ல சொல்லிருக்குங்க.’’

‘‘இதுக்கெல்லாம் பணம் எப்படி வந்தது?’’

‘‘இவாளை முதல்ல கையெழுத்து போட்டுட்டு அனுப்பிச்சுர்றேன்.’’ தாங்கஸ்ப்பா…

‘‘நலுங்காம நசுங்காம கொண்டாந்திருக்கோம். ஏதாவது போட்டுக் கொடுங்க, ரெண்டுபேர் இருக்கோம்.’’

அவளை அடுத்த அறைக்கு அழைத்தான். ‘‘ப்ரு! அம்பது ரூபா இருக்கா?’’

‘‘பத்து ரூபாதான் இருக்கு. காப்பி பொடி வாங்கணும்.’’

‘‘சரி அதைக் குடுத்துடு.’’

‘‘இந்தாங்க காப்பி சாப்பிடுங்க.’’

அவன் ஒரு மாதிரி பார்த்துவிட்டு முகம் இறுகி முணுமுணுத்துக் கொண்டே, ‘‘லட்ச ரூபாய்க்கு பொருள் வாங்குவீங்க. பத்துரூபா தருவீங்களாம்மா…. வச்சுக்கங்க. எச்சக்கையால காக்கா ஓட்டமாட்டீங்க’’ என்று புறப்பட்டான்.

றீ றீ றீ

‘‘என்னங்க இதெல்லாம்?’’

‘‘பாத்தா தெரியலை ஃப்ரிஜ், டீ.வி…’’

‘‘ஏது காசு?’’

‘‘காசா? லோன்மேளா, ப்ரமிளா ஏஜென்சி கூவிக்கூவி, கூப்ட்டு கூப்ட்டு குடுக்கறான். ஒரே ஒரு டோக்கன் பேமெண்ட் வாங்கிண்டு சாலரி சர்டிஃபிகேட் காட்டினா போதும். மாசா மாசம் கட்டி கழிச்சுக் கட்டிருவேன்.’’

‘‘மாசம் எத்தனை?’’

‘‘ஆறாயிரம்… அந்த டிடெய்ல்ஸ் எல்லாம் உனக்கு எதுக்கு?’’

‘‘எப்படிங்க நம்ம சம்பளத்தில் இதெல்லாம் நமக்குத் தேவைதானா? மது ஸ்கூல் பீஸ் கட்டியாகணும்’’

‘‘உனக்கு எதுவுமே தேவையில்லை. தினம் தேங்கா தொவையலும் சீராமிளகு ரசமும் போறும்.’’

‘‘ஆறாயிரம் சம்பளத்தில கழிச்சுட்டா… எப்படி நான் குடித்தனம் நடத்தறது?’’

‘‘பயப்படாதே உனக்கு மாசாமாசம் கொடுக்கற எட்டாயிரத்தைக் குறைக்கமாட்டேன்.’’

‘‘எட்டாயிரமா, பன்னண்டாயிரங்க.’’

‘‘கவலையை விடு. எனக்கு அரியர்ஸ் வரவேண்டியிருக்கு. அப்புறம் உத்தண்டி ப்ராபர்ட்டிக்கு பஞ்சாயத்துல என்ஓசி வந்துட்டா, சுளையா நம்ம ஷேர் முப்பது லட்சமாவது வரும். நம்ம ஸ்டேட்டஸ் எங்கயோ போய்டும்.’’

‘‘ஆமாம். பதினெட்டு வருஷமா வராதது…’’

அவன் முகம் சுருங்கி ‘‘எல்லாத்தையும் நெகட்டிவ்வாவே பார்க்காதே… லைஃப்ல பாசிட்டிவ்வா யோசி. இங்கிலீஷ்ல கில்ஜாய்ம்பா. அது நீதான். எதுக்கெடுத்தாலும் நொள்ளை…’’

அவள் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.

அவன் தொடர்ந்து, ‘‘மனுசனுக்கு மனைவி உற்சாகம் தரணும். நம்பிக்கை தரணும். எல்லாத்தையும் கலைக்கிறதில கெட்டிக்காரி நீ!’’

‘‘இல்லை, கூட்டிக் கழிச்சு பாத்தா கணக்கு சரியாவே வரலையே. எனக்கு நீங்க செய்யற காரியம் வயத்தைக் கலக்கறது.’’

‘‘நாளைக்கு ஏ.சி.காரன் வருவான் க்ரில் போட.’’

மது மரக்கட்டை பேட்டுடன் உள்ளே வந்து ‘‘ஐ! டீ.வி. ஏதுப்பா? அவ்வளவு காசு நம்ம கிட்ட?’’ என்றான்.

‘‘அப்படியே அம்மாவைக் கொண்டிருக்கியேடா. மதுக்கண்ணா உங்கப்பா ஒண்ணும் அத்தனை புவர் இல்லை. முதல்ல இந்த லோகிளாஸ் லொகாலிட்டியை விட்டு ஓடணும். எம்.ஆர்.சி. நகர்ல பெரிய வீடு பாத்துண்டிருக்கேன்.’’

றீ றீ றீ

ராஜாராமன் ஆபிஸ் போயிருந்தான். பெரிய டி.வி.க்கும் குளிர்பெட்டிக்கும் இடம் பண்ணிக் கொடுத்து மிச்சமிருந்த இடத்தில் பிரம்பு நாற்காலி போட்டு மத்யானம் அணில்கள் ஓய்ந்துவிட்ட வேளையில், நடிகை பார்த்துக் கொண்டிருக்க… நாட்டுக்கோழி பிரியாணி செய்வது பற்றி ஒரு கிராம மாது விளக்கிக் கொண்டிருந்தாள்.

மது ‘‘கோழிக்கு வலிக்காதாம்மா?’’ என்று கேட்டான்.

‘‘வலிக்காம கழுத்தை திருகுவா உங்கப்பா மாதிரி.’’ பால்கனியிலிருந்து விளையாடி விட்டு வந்தான். ‘‘அம்மா அந்தாளு இங்கயே பாத்துண்டிருக்கான்ம்மா. அப்பாவைக் கூப்பிடறார்.’’

‘‘யாருப்பா’’ என்றாள் பால்கனியிலிருந்து.

வாட்டசாட்டமாக இருந்தான். காலர் இல்லா சட்டையை மீறி புலிநகம் போட்ட சங்கிலி தெரிந்தது. முழங்கைவரை முறுக்கிவிட்ட புஜத்தில் தாயத்து கட்டிய இடத்தில் தசைநார்கள் பீறிட்டன. மீசை கன்னம்வரை வழிந்திருந்தது. ஜிம்மிலிருந்து வந்தவன் போலத் தோன்றினான்.

‘‘ப்ரமிளா ஏஜென்சிலருந்து வர்றன். உன் புருசன் ராஜாராமனைப் பார்க்கணும்.’’

‘‘ஆபீஸ் போயிருக்காரே!’’

‘‘ஆபீஸ்ல வீட்டுக்குப் போயிருக்கறதா சொன்னாங்க…’’

‘‘இல்லையே ஒரு வேளை வருவாரா இருக்கும்.’’

‘‘சரி காத்துட்டிருக்கேன்.’’

‘‘என்ன விஷயம்?’’

‘‘உன் புருசன் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகியிருக்கு. அதை அவர்கிட்ட காட்டி உடனே ஆபீசுக்கு வந்து கேஷ் கட்டு. இல்லை பொருளை எடுத்துட்டுப் போயிருவோம்னு சொல்லு.’’

‘‘சரிப்பா, அவர் வந்த உடனே சொல்றேன்.’’

‘‘ஒண்ணும் பிரச்னை இல்லை. அரை மணியில மறுபடி வரேன் சொல்லிவை.’’

அவன் போனதும் ராஜு பெட்ரூமிலிருந்து வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டு வந்தான். ‘‘போய்ட்டானா?’’

‘‘நீங்க எப்ப வந்தீங்க? ஆபீஸ் போகலை?’’

‘‘அப்பவே வந்துட்டேனே. கிச்சன்ல பிசியா இருந்தே.’’

‘‘என்னவோ செக்குங்கறான்… பவுன்ஸ்ங்கறான். ஒண்ணும் புரியலை. வேண்டாம் வேண்டாம்னு அடிச்சுண்டேன்’’

‘‘அது ஒண்ணுமில்லை கண்ணு. பன்னண்டு போஸ்ட் டேடட் செக் பன்னண்டாம் தேதி போடுறான்னா, பத்தாம் தேதியே போட்டிருக்கான். பேங்க்ல ஆனர் பண்ணலை போல இருக்கு. இத்தனைக்கும் சேஷாத்ரிகிட்ட சொல்லியிருந்தேன். ஒருவேளை சிக்னேச்சர் மேட்ச் ஆகலையோ என்னவோ… நான் உடனே பேங்க் போய் அதைச் சரி பண்ணிடுவேன். நீ ஒண்ணும் கவலைப்படாதே.’’

ப்ருந்தா அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

றீ றீ றீ

ராஜு மத்யானம் திரும்ப வந்தபோது ‘‘எல்லாம் சரியாய்டுத்து. அவன்கிட்ட போய் சத்தம் போட்டுட்டு வந்தேன். படவா ராஸ்கல்! ரவுடிகளைல்லாம் அனுப்பறயே… என்ன கம்பெனி நீ, கன்சூமர் கோர்ட்ல கேஸ் போட்டுருவேன்னு. அவன் பயந்துண்டு மன்னிப்பு கேட்டு, இனி அந்த மாதிரி நடக்காதுன்னான். ஜாக்கிரதை, ஆர்.ஏ.புரத்தைவிட்டே உன் கடை இல்லாம பண்ணிடுவேன். கபர்தார் என்னை என்னன்னு நினைச்சிண்டிருக்கே பத்மாஷ்னு…’’

‘‘பணம் கொடுத்தாச்சா?’’

‘‘கட்டியாச்சுடி மூதேவி சனியனே!’’

‘‘நவம்பர் 14.

வைதேகியின் பெண் சீமந்தத்துக்கு தங்க வளையலும் ரெட்டை வடசங்கிலியும் எடுத்துக்கொள்ள பீரோவைத் திறந்தபோது, சங்கிலியைக் காணோம். வேலைக்காரியைக் கூப்பிட்டு ‘‘செவலா! நீ வீடு பெருக்கி துடைக்கறப்ப பீரோ திறந்திருந்தது. எதையாவது தெரியாம எடுத்தேன்னா சொல்லிடு’’ என்றாள்.

அவள் தரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள், இத்தனை வருசம் உங்கிட்ட வேலை செய்யறேன். இப்படி ஒரு கேள்வி கேட்டுட்ட பத்தியா? நாங்க ஏளைங்கதாம்மா, திருடங்க இல்லை.’’

‘‘இப்ப நான் என்ன கேட்டுட்டேன். எடுக்கலைன்னா எடுக்கலைன்னு சொல்லிட்டுப் போயேன்.’’

நவம்பர் 15

வேலைக்காரி நின்று விட்டாள்.

ராஜுவிடம் சொன்னபோது, அவளை அப்படி கேட்டிருக்கக் கூடாது, ‘‘நான் ஆர்.ஏ.புரம் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்துர்றேன். சாவியை வேலைக்காரி பார்க்கறமாதிரி கண்ட கண்ட இடத்தில வெக்கக்கூடாது. இது ஒரு பாடம். போனாப் போறது… நா உனக்குப் புதுசு வாங்கித்தரேன்’’ என்றான்.

சாயங்காலம் மது ‘‘அப்பா பீரோ சாவியை அம்மா எங்க வெப்பான்னு கேட்டிண்டிருந்தாம்மா. தலைகாணிக்கு அடிலன்னு சொன்னேன்’’

டிசம்பர் 12

சாயங்காலம் டெலிபோன் ஒலித்தபோதே அதில் மிரட்டல் இருந்தமாதிரி தோன்றியது, ப்ருந்தாவுக்கு. எடுக்கலாமா வேணாமா என்று யோசித்தாள். ராஜு வேறு இல்லை. அடித்து நின்றுவிட்டு உடனே மறுபடி அடிக்கத் தொடங்கியது.

‘‘அலோ.’’

குரலே கன்னத்தில் அறைந்தது. ‘‘என்ன மாதிரி டுபாக்கூர் பார்ட்டிம்மா நீங்க… உன் வீட்டுக்காரரு… இந்த முறையும் செக் பவுன்ஸ் ஆய்டுச்சாம். நீங்க சோறு திங்கறீங்களா, வேற எதாவதா… மானம், வெக்கம், சூடு, சுரணை வேண்டாம்? ஆபீஸ§க்கு போன் போட்டா எடுக்கறதே இல்லை. தபாரு டி.வியையும் ப்ரிஜ்ஜையும் எடுத்துட்டு வரும்படி முதலாளி ஆர்டர். அரைமணியில டெம்போ வரும். ஒயரை எல்லாம் புடுங்கி தயாரா வச்சிரு. காசில்லைன்னா ஏன் பொருள் வாங்கறீங்க? வாயையும்… பொத்திகிட்டு தயிர் சாதம் தின்னுகிட்டு, படுத்துக் கிடக்கிறதுதானே உங்க மாதிரி ஆளுங்கள்ளாம்..’’ ‘சரி உட்டுரு துரைராஜ்’ என்ற மற்றொரு குரல் கேட்க… ‘‘வந்துகிட்டே இருக்கோம்’’ என்று முடித்தான்.

உடம்பெல்லாம் வியர்த்தது. நாக்கு வறண்டு நடுங்கும் விரல்களுடன் ராஜுவுக்குப் போன் செய்தாள்.

‘‘எங்க போய்த் தொலைஞ்சிட்டீங்க..? அவன் பாட்டுக்குப் போன்ல கண்டகண்டபடி திட்டறான். அப்படியே உடம்பெல்லாம் கூசறது. அரைமணில டெம்போ எடுத்துண்டு வரானாம்.’’

‘‘அப்டியா? நீ என்ன பண்றே.. அவா வரதுக்குள்ள கதவைப் பூட்டிண்டு உங்க அக்காவாத்துக்கு போய்டு. நான் அந்த முட்டாள் பசங்களைப் போய் பாத்து ஒண்ணுல ஒண்ணு தீர்த்துட்டுத்தான் மறுகாரியம்.’’

‘‘உடனே வாங்க… எனக்குப் பதர்றது, பயத்தில புடவைல…’’

‘‘எல்லாம் வரேன். நீ கதவைப் பூட்டிண்டு வைதேகி வீட்டுக்குப் போயிடு. என்ன அசடு அசடு! நீ ஒண்ணுத்துக்கும் கவலைப்படாதே. அவனுக்கு ஒரு லாயர் நோட்டீஸ் அனுப்பிருக்கேன். ஃப்ரிஜ் சரியா வேலை செய்யலை. ஐஸ் க்யுப் பார்ம் ஆறதில்லை. டி.வி. க்ளாரிட்டி இல்லை. அதனால பேமெண்டடை நிறுத்தி வச்சிருக்கேன்னு… அப்படியே கதிகலங்கிப் போய்டுவான். ஒரு மசுத்தையும் பிடுங்க முடியாது. என்னன்னு நினைச்சிண்டிருக்கான். ஸ்கவுண்ட்ரல்.’’

‘‘எப்ப வர்றீங்க?’’

‘‘எம்.ஆர்.சி. நகர் போய்ட்டு வந்துர்றேன்.’’

‘‘எம்.ஆர்.சி. நகர்ல என்ன?’’

‘‘சொன்னனே ஒரு புது ஃப்ளாட் பாத்துண்டிருக்கேன். அப்படியே உண்டாய் கம்பெனி ஷோ ரூமுக்குப் போய்ட்டு மத்யானம் உங்கக்கா வீட்டுக்குச் சாப்பிட வந்துர்றேன். பருப்பு உசிலி பண்ணி வைக்கச் சொல்லு. உங்கக்கா நன்னா பண்ணுவா.’’

‘‘உண்டாய் கம்பெனியா?’’

‘‘ஆமாம்… டூவீலர் நம்ம ஸ்டேட்டஸ்க்குச் சரியில்லை. ஒரு கார் வாங்கப் போறேன்’’ என்றான்.

Posted in Kumudam, Status, Sujatha, Tamil, Tamil Story, Thoondil Kathaigal | 14 Comments »