Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Suggestions’ Category

SriKrishna Commission Report – Pay Commission suggests Firing over Suspension

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 17, 2007

ஆபத்துக்கு அச்சாரம்!

மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கும் ஒரு பிரச்னை நிர்வாகத்தையும், நாட்டின் வருங்காலத்தையும் பெரிய அளவில் பாதிக்கும் தன்மையது என்பதால், தவறான முடிவு எடுக்கப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் எழுகிறது. இந்த விஷயம் ஊடகங்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை என்பது அதைவிட வருத்தமாக இருக்கிறது.

முன்னாள் நீதிபதி பி.எஸ். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆறாவது ஊதிய கமிஷன் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது மே மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது. இந்த அறிக்கையை அரசு அப்படியே ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்றாலும், அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் வருங்காலத்தில் அரசு ஊழியர்களின் பணி நியமனங்கள் மற்றும் அவர்களது ஊதியங்கள் தீர்மானிக்கப்படும்.

தான் சமர்ப்பிக்க இருக்கும் ஆறாவது ஊதிய கமிஷன் பற்றி சமீபத்தில் பேசும்போது, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.

இனிமேல், மூத்த அரசு அதிகாரிகளின் நியமனத்தில் வேலை உத்தரவாதப் பிரிவு அகற்றப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பணியிலிருந்து அகற்றப்படும் வகையில் திருத்தங்கள் செய்ய சிபாரிசு செய்யப்போவதாக அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய அரசு ஊழியர்களுக்கான சேவை விதிகளின்படி, ஓர் அரசு ஊழியர் தவறிழைத்திருக்கிறார் என்று நிரூபிக்கப்படாதவரை அவரை வேலையிலிருந்து அகற்ற முடியாது. அதாவது, திறமையின்மை ஒருவரைப் பதவியிலிருந்து நீக்க சரியான காரணமாக இருக்காது.

நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கருத்துப்படி, அரசு ஊழியர்கள் தங்களுடைய பணி நிரந்தரமானது என்கிற காரணத்தால் அலட்சிய மனப்போக்குடன் செயல்படுகிறார்கள் என்பதுடன் பொதுமக்களையும் அவர்களது கோரிக்கைகளையும் பொருள்படுத்துவதில்லை. ஒருவகையில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கூற்றில் உண்மை இருக்கிறது. ஆனால், அவர் மறந்துவிடும் மற்றொரு பக்கமும் இருக்கிறது.

அரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளும் மேலதிகாரிகளும் இடமாற்றம் செய்ய முடியுமே தவிர பணியிலிருந்து அகற்ற முடியாது என்பதால்தான், இன்னமும் பல அதிகாரிகள் நேர்மையாகவும் பயமின்றியும் செயல்பட முடிகிறது.

ஆட்சியில் இருப்பவர்களிடம் பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை அளித்துவிட்டால், தங்களுக்கு அடிபணிந்து நடக்காத அதிகாரிகளை அகற்றிவிட்டு, குற்றேவல் புரியத் தயாராக இருக்கும் அதிகாரிகளை மட்டும்தான் வைத்துக் கொள்வார்கள். இதுவே, நிர்வாகம் சீர்கெடவும், அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யவும், ஊழல்கள் அதிகரிக்கவும் வழிகோலிவிடும் என்பது ஏனோ நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவுக்குத் தெரியாமல் போய்விட்டது.

தனியார் வர்த்தக நிறுவனங்களிலுள்ள திறமையும் சுறுசுறுப்பும் ஏன் அரசு நிர்வாகத்தில் இல்லை என்பதற்கு, அரசு ஊழியர்களின் சேவை விதிகள்தான் காரணம் என்பது நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் கருத்து. முதலாவதாக, அரசு இயந்திரத்தை, வியாபார நிறுவனங்களுடன் ஒப்பிடும் போக்கு அபத்தமானது. மக்களின் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசு நிர்வாகமும், வியாபார லாபத்துக்காக நடத்தப்படும் தொழில் நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. எந்தவிதத்திலும் ஒப்பிடத்தக்கவை அல்ல.

அரசு நிர்வாகம் செம்மையாக இல்லாமல் இருப்பதற்கும், மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்காமல் இருப்பதற்கும், சுறுசுறுப்பாகவும் பொறுப்புணர்வுடனும் இயங்காமல் இருப்பதற்கும் காரணம், அந்த நிர்வாகத்தை நடத்துகின்ற நமது அரசியல் தலைவர்கள்தான் மிக முக்கியமான காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. நமது அரசியல்வாதிகளின் தரத்திலும், அவர்களது செயல்பாடுகளிலும், கண்ணோட்டத்திலும் மாறுதல் ஏற்படாத வரையில் நிர்வாகச் சீர்திருத்தம் என்பது வெறும் கானல்நீராகத்தான் இருக்க முடியும். ஆட்சியாளர்கள் திறமைசாலிகளாகவும், தூய்மையானவர்களாகவும் இருப்பார்களேயானால், அரசு நிர்வாகமும் அதற்குத் தகுந்தாற்போல மாறும் தன்மையது என்பதுதான் உண்மை.

அரசு ஊழியர்களுக்கான சேவை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, அவர்களை எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்யும் அதிகாரம் ஆட்சியாளர்கள் கையில் கொடுக்கப்படுவது ஆபத்துக்கு அச்சாரம் போடும் விஷயம். இதனால் பாதிக்கப்படப் போவது திறமையற்றவர்களும் ஊழல் பேர்வழிகளுமல்ல. மாறாக, திறமைசாலிகளும் நேர்மையானவர்களும்தான். விபரீதத்தை விலை கொடுத்து வாங்கிவிடக் கூடாது!

Posted in Appeals, Commission, Compensation, Corruption, employees, Fired, Government, Govt, job, Justice, kickbacks, Krishna, Law, Mull, Order, Pay, Report, Salary, Security, Sri Krishna, SriKrishna, Suggestions, Suspend, Suspension, Work | Leave a Comment »

President Abdul Kalam: ‘Journalists can partner national development’ – Ramnath Goenka Excellence in Journalism Awards Speech

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

நாட்டின் வளர்ச்சியில் நாளேடுகள்!

“பத்திரிகைத் துறையில் சிறந்த சேவைபுரிந்தமைக்காக ராம்நாத் கோயங்கா பெயரிலான விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். விருது பெற்றவர்களுக்குப் பாராட்டுகளையும் விழாவில் பங்கேற்கும் உங்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு, பத்திரிகைச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு, பத்திரிகைகளுக்குத் தணிக்கை என்ற நெருக்கடியான காலகட்டத்தில்கூட பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அஞ்சாமல் பாடுபட்டவர் ராம்நாத் கோயங்கா. சுதந்திரப் போராட்ட வீரர், தொழில் அதிபர், பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அயராது பாடுபடுபவர் என்று பன்முகச் சிறப்பு பெற்றவர் ராம்நாத் கோயங்கா.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் சுதந்திரம் அடைந்த பிறகும் அவர் வெளியிட்ட பத்திரிகைகள் அனைத்துமே அவருடைய நாட்டுப்பற்றுக்கும், அச்சமின்மைக்கும் சான்றாகத் திகழ்கின்றன. 1932-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அதிபரானார். பிறகு வெவ்வேறு இந்திய மொழிகளிலும் பத்திரிகைகளைத் தொடங்கினார். அவருடைய சீரிய வழிகாட்டுதலில் எல்லா பத்திரிகைகளும் மக்களால் பேசப்படும் அளவுக்குச் சிறப்பாக வெளிவந்தன.

“”பத்திரிகையாளர்கள் தேச வளர்ச்சியின் பங்குதாரர்கள்” என்ற தலைப்பில் இன்று உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.

1944-ல் எனக்கு 13 வயது. இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. என்னுடைய அண்ணன் சுதேசமித்திரன், தினமணி ஆகிய நாளிதழ்களுக்கு துணை முகவராக இருந்தார். வேலைக்காக அவர் இலங்கை சென்றதால், ராமேஸ்வரத்தில் இவ்விரு பத்திரிகைகளையும் விநியோகிக்கும் பொறுப்பை நான் ஏற்க நேர்ந்தது. மாணவனாக இருந்த நான், உலகப் போர் குறித்த செய்திகளை ஆர்வமாகப் படித்து வந்தேன். முதலில் தினமணி நாளிதழை வாங்கியதும், ஸ்பிட்ஃபயர் ஃபைட்டர் விமானம், லுஃப்ட்வாஃப் விமானத்துக்கு எதிராக எப்படி சண்டை போட்டது என்பதை ஆர்வமாகப் படிப்பேன். விமானவியலில் எனக்கு ஆர்வத்தை விதைத்ததே தினமணிதான். உலகம் முழுவதுமே மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் அன்றாடம் ஆயிரம் நடக்கலாம். பத்திரிகையாளர்கள் அவற்றை ஊன்றிக் கவனித்து உரிய வகையில் செய்தியாகத் தர வேண்டும்.

1999-ல் டெல் அவிவ் நகருக்குச் சென்றேன். ஹமாஸ் போராளிகள் லெபனான் எல்லையில் ராணுவத்துக்குக் கடும் சேதத்தை ஏற்படுத்திவிட்டனர் என்று தொலைக்காட்சியில் முக்கிய செய்தியை அடிக்கடி ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் பத்திரிகைகளை வாங்கியபோது, இந்தச் செய்தியை முதல் பக்கத்திலேயே காண முடியவில்லை. ரஷியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வந்த ஒரு விவசாயி, பாலைவனப் பகுதியில் மூன்று ஆண்டுகளாகத் தங்கி காய்கறி, பழச்சாகுபடியை அமோகமாக மேற்கொண்டு சாதனை படைத்திருப்பது குறித்த செய்திதான் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது. மக்களும் அச்செய்தியைத்தான் ஆர்வமாகப் படித்தார்கள். பத்திரிகைத் துறையின் சிறந்த பங்களிப்பு என்றே அச் செய்தியை நானும் கருதுகிறேன்.

எல்லா பத்திரிகைகளிலும் ஆராய்ச்சிப் பிரிவு இருக்க வேண்டும். செய்திகளைத் தர, ஆய்வுசெய்ய, முக்கியமானவற்றை எடுத்துரைக்க இதைப் பயன்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் உள்ள பத்திரிகையியல் ஆய்வுப்பிரிவுடன் இந்தப் பிரிவு இணைக்கப்பட வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அது ஏன், எதனால் ஏற்படுகிறது, அதற்கு நீண்டகால, குறுகியகால தீர்வு என்ன என்று அறிய இது உதவும். மூத்த பத்திரிகையாளர்களும் இளைஞர்களும் இதில் சேர வேண்டும். இதனால் பத்திரிகையின் தரமும் உயரும்.

வெளிநாட்டுப் பத்திரிகைகளில் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன், அதை ஆய்வுப்பிரிவுக்கு அனுப்புகின்றனர். அயல்பணி ஒப்படைப்பு என்ற அவுட்-சோர்சிங் முறை குறித்து அமெரிக்காவில் கடுமையான ஆட்சேபம் எழுந்தபோது, ஆய்வு செய்து செய்தி தர ஒரு பத்திரிகையாளர் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார். அயல்பணி ஒப்படைப்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் கருவிகள், சாதனங்களில் 90% அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து, செய்தியாக அளித்தார். அது அமெரிக்க, ஐரோப்பிய மக்களுக்கு வியப்பை அளித்தது.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐ.டி.) எப்படி வளர்ந்திருக்கிறது என்று அறிய “டிஸ்கவரி’ சேனலின், தாமஸ் ஃப்ரீட்மேன் இந்தியாவுக்கு வந்து பெங்களூர் போன்ற ஊர்களில் ஒரு மாதத்துக்கும் மேல் தங்கினார். “”தி வேர்ல்ட் ஈஸ் ஃபிளாட்” (உலகம் தட்டையானது) என்ற புத்தகத்தை எழுதினார். இந்தியாவில் மட்டும் அல்ல, உலகெங்கும் இப் புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தியப் பத்திரிகையாளர்களும் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யலாம்.

பத்திரிகைகள் சமுதாயத்துக்குப் பயன் தரும் வகையில் செயலாற்ற முடியும் என்பதற்கு இரண்டு சமீபத்திய உதாரணங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மகாராஷ்டிரத்தில் விதர்பா பகுதிக்கு கடந்த மாதம் சென்றேன். அங்கு விவசாயிகளின் பிரச்னை குறித்து விவசாயிகள், அதிகாரிகள், வேளாண்துறை நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள் ஆகியோருடன் விவாதித்தேன். இதேபோல பத்திரிகைகளின் ஆய்வுக்குழுவும் நேரடியாகவே அந்தந்த இடங்களுக்குச் சென்று செய்தி சேகரித்தால் பிரச்னையை அடையாளம் காணவும், அரசுக்கு தீர்வுக்குண்டான வழிகளைச் சொல்லவும் உதவியாக இருக்கும்.

கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்துக்குச் சென்றேன். பீட்டா காட்டன் என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட புதியவகை பருத்தியைச் சாகுபடி செய்து நஷ்டம் ஏற்பட்டதால் அந்த மாவட்ட விவசாயிகள் மனம் நொந்த நிலையில் இருந்தனர். வறட்சி காரணமாக மகசூல் குறைந்தது; அல்லது சாவியாகிப் போயிருந்தது. தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் தொடர்ந்து கிடைத்துவந்தால்தான் பீட்டா காட்டன் விதைகளால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற உண்மை அவர்களுக்கு அனுபவம் வாயிலாகத்தான் கிடைத்தது. இதுவே முன்கூட்டி தெரிந்திருந்தால் அவர்களின் நஷ்டத்தைத் தவிர்த்திருக்க முடியும். தரமான விதை, சாகுபடி முறையில் விவசாயிகளுக்கு முறையான பயிற்சி, உரிய நேரத்தில் வங்கிக் கடன், விளைபொருளை உடனே சந்தைப்படுத்த நல்ல வசதி, மழை இல்லாமல் போனால் பாசன நீருக்கு மாற்று ஏற்பாடு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு முற்றியிருக்காது.

அடுத்தது பாசனத் தண்ணீர் பற்றியது. வாய்க்கால்களை வெட்டுவது, மடையை மாற்றுவது ஆகிய வேலைகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம்; ஆறே இல்லாத இடங்களில் தண்ணீரை எப்படிக் கொண்டுவருவது? மழைக்காலத்தில் எந்தெந்த வழிகளில் எல்லாம் நீரைச் சேமிக்கலாம் என்பதை விவசாயிகளுக்குச் சொல்லித்தந்து உடன் இருந்து அமல் செய்தால் வறட்சி காலத்தில் அது கைகொடுத்து உதவும். இவை மட்டும் அல்லாது மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஆலைகளும் சாகுபடியாளர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு அவர்களுடைய விளைபொருள்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்கும் வசதி செய்யப்பட வேண்டும். கந்துவட்டிக்காரர்களிடம் விவசாயிகள் சிக்காமல் இருக்க, எல்லா கிராமங்களுக்கும் வங்கிகளின் சேவை கிடைக்க வேண்டும்.

விவசாயிகள் வேளாண் உற்பத்தித் திறனைப் பெருக்கிக் கொள்ளவும், விளைபொருள்களுக்கு நல்ல விலையைப் பெறவும் ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

பஞ்சாபின் கேரி புத்தார் என்ற இடத்தில் விவசாயிகள், தொழில்துறையினர், ஆய்வு நிலையம், கல்விக்கூடம் ஆகியவற்றின் நெருங்கிய ஒத்துழைப்பால் பருத்திவிதையின் உற்பத்தித்திறன் இருமடங்காகப் பெருகியது. விவசாயிகளுக்கு நிவாரணம் தரும் திட்டங்களை யாருக்குத் தர வேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்து குறிப்பிட்ட காலவரம்புக்குள் அளிக்க வேண்டும். இதற்கு நல்ல நிர்வாக அமைப்பும், திட்ட நிறைவேறலுக்கு இன்னின்னார்தான் பொறுப்பு என்ற நிர்வாக நடைமுறையும் அவசியம். விதர்பாவில் பிரச்னை என்ன, தீர்வு என்ன என்பதை பத்திரிகைகளின் ஆய்வுக்குழுக்கள் கண்டுபிடித்து எழுத முடியும்.

போரிலும், உள்நாட்டுக் கலவரங்களிலும் இறப்பவர்களைவிட சாலை விபத்துகளிலும் பிற நெருக்கடிகளிலும் இறப்பவர் எண்ணிக்கை நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு இப்படி இறப்பவர்கள் அல்லது காயம்படுகிறவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை எட்டும் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த 10 லட்சம் பேரைக் காப்பாற்ற ஒருங்கிணைந்த, உதவித் திட்டம் அவசியம். ஆந்திர மாநிலத்தில் அப்படியொரு திட்டம் அற்புதமாகச் செயல்படுத்தப்படுகிறது. நெருக்கடிகால மேலாண்மை-ஆய்வு என்ற அமைப்பு ஹைதராபாதைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

சாலை விபத்து, பிரசவ காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் ஆபத்துகள், கிரிமினல் நடவடிக்கைகளால் உயிர்களுக்கு ஏற்படும் ஆபத்து, வீடுகளில், தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் ஏற்படும் தீ விபத்து, மின்சார விபத்து, ரசாயன விபத்து, நில நடுக்கம், ஆழிப் பேரலை, மிருகங்களால் விபத்து என்று எதுவாக இருந்தாலும் தகவல் கிடைத்த 30 நிமிஷங்களுக்குள் அந்தப் பகுதிக்கு முதலுதவி ஆம்புலன்ஸ்களுடன் சென்று சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றி, உயர் சிகிச்சைக்குத் தாமதம் இன்றி, அமைப்பின் தகவல் தொடர்பு-வாகன வசதிகளைப் பயன்படுத்தி கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் இந்த முறை. இதற்கு முதல்படியே, நெருக்கடி காலத்தில் 108 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு என்ன நெருக்கடி, எந்த இடம் என்ற தகவலைச்சுருக்கமாக, தெளிவாகச் சொன்னால் போதும், மற்றவற்றை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

இந்த அமைப்பு ஏற்பட்ட பிறகு ஆந்திரத்தின் 23 மாவட்டங்களில் 380 ஆம்புலன்ஸ்கள் அவசர உதவி, மீட்புப் பணிகளில் உதவி வருகின்றன. இதுவரையில் 11,500 பேரின் உயிர் உரிய நேரத்தில் உதவிகள் அளித்து காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சேவை 24 மணி நேரமும் வாரம் முழுவதும் கிடைப்பது இதன் தனிச்சிறப்பு. இச் சேவையைப் பிற மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் அரசும், தனியார் நிறுவனங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும். பத்திரிகையாளர்கள் இதில் முக்கியத் தொடர்பாளர்களாக இருந்து சேவை புரியலாம்.

பத்திரிகை என்பது வாசகர்களுக்குத் தகவல்களையும் கல்வியையும் அளிப்பது. பத்திரிகைகள் நன்கு செயல்பட்டால் தேசம் வலுவடையும். பரபரப்பு செய்திக்கு பத்திரிகைகள் முக்கியத்துவம் தரக்கூடாது. துணிச்சலாக, உண்மையாக, உத்வேகம் ஊட்டுகிற வகையில் செய்திகளைத் தருவதுதான் உண்மையான பத்திரிகையியலாகும். அது தேசத்தின் பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு உதவும். பத்திரிகைகளால் இளைஞர்களின் மனத்தை மாற்ற முடியும் என்பதால், ஆக்கபூர்வமாகச் செயல்படுவது மிகமிக அவசியம்.

100 கோடி இந்தியர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, பத்திரிகையியலுக்கான ராம்நாத் கோயங்கா விருதில் மேலும் 2 பிரிவுகளையும் தொடங்க வேண்டும்.

1. ஊரக வளர்ச்சிக்கு உதவும் வகையில் செய்தி தருவதற்கும்,

2. பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதற்கும்

என்று 2 விருதுகளை 2007-08 முதல் வழங்க வேண்டும்.

(ராம்நாத் கோயங்கா பெயரிலான பத்திரிகையியல் விருதுகளை வழங்கி தில்லியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திங்கள்கிழமை ஆற்றிய உரையின் சுருக்கம்)

————————————————————————————————-
பெருமைக்குப் பெருமை…

“எந்தவொரு பதவிக்கும் அதற்கான பெருமையோ, அதிகாரமோ கிடையாது. அதை அலங்கரிக்கும் நபர்கள் நடந்துகொள்ளும் விதத்தால்தான் பதவிகள் பெருமைகளையும் அதிகாரங்களையும் பெறுகின்றன’ – இந்த வாசகங்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை உலகத்துக்கு உணர்த்தி இருக்கிறார் இன்று தனது பதவிக்காலம் முடிந்து ஓய்வுபெறும் நமது குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

இந்தியக் குடியரசின் தலைவர்களாக இருந்த ஒவ்வொருவரும் அந்தப் பதவிக்குச் சில கௌரவங்களைச் சேர்த்தார்கள். அவர்களது தனித்தன்மையால் அந்தப் பதவி மேலும் பரிமளித்தது. ஓரிரு சம்பவங்களைத் தவிர, பெரிய அளவில் இந்தியக் குடியரசின் தலைமைப் பதவி அதை அலங்கரித்தவர்களால் களங்கப்பட்டதில்லை. களங்கம் என்று அரசியல் பார்வையாளர்களால் குறிப்பிடப்படும் சம்பவங்களும்கூட, அன்றைய ஆட்சியாளர்களின் தவறால் நிகழ்ந்தவையே தவிர குடியரசுத் தலைவராக இருந்தவரால் ஏற்படவில்லை.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், எந்த அளவுக்கு இந்தப் பதவிக்கு கௌரவம் சேர்ப்பார் என்று தெரியாத நிலையில்தான் அந்தப் பதவியில் அமர்ந்தார் அப்துல் கலாம். ஐந்து ஆண்டுகள் கடந்து இப்போது பதவியிலிருந்து அவர் ஓய்வுபெறும்போது, இப்படி ஒரு குடியரசுத் தலைவர் இனி இந்தியாவுக்கு எப்போது கிடைக்கப்போகிறார் என்ற ஆதங்கத்தை அனைவரது இதயங்களும் வெளிப்படுத்தும் அசாதாரணப் புகழோடு விடைபெறுகிறார்.

அரசியல்வாதி அல்லாத ஒருவர், குழப்பமான அரசியல் சூழ்நிலையில் செயல்பட முடியுமா என்பதற்கு விடையளித்திருப்பதுதான் அப்துல் கலாமின் முதல் வெற்றி. அரசியல்வாதிகள் மீது அதிகரித்து வரும் அதிருப்திக்கு நடுவிலும், நாளைய இந்தியா பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தனது குடியரசுத் தலைவர் பதவியைத் திறம்பட நிர்வகித்தது அப்துல் கலாமின் அடுத்த வெற்றி. இனிமையாகவும் எளிமையாகவும் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் செயல்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகச் செயல்பட்டு, ஓர் உண்மையான மக்களின் குடியரசுத் தலைவராக வாழ்ந்து காட்டியது அவரது மிகப்பெரிய வெற்றி.

குடியரசுத் தலைவரின் ஆணைப்படி ஒரு விஷயம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இதுவரை ரகசியமாகக் காக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அவரைச் சந்தித்து அவருடன் ஒரு சில நாள்கள் தங்கிப்போக விழைந்தனர் அவரது உறவினர்கள். குடியரசுத் தலைவரின் வேண்டுகோளின்படி, ராமேஸ்வரத்திலிருந்து புதுதில்லி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அவரது 53 உறவினர்களும், குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியர்களால் வரவேற்கப்பட்டு, ஊர் சுற்றிக் காண்பிக்கப்பட்டு, விருந்தினர்களுக்கான எல்லா உபசரிப்புகளுடனும் கவனிக்கப்பட்டனர். ஒரு வாரம் தங்கியிருந்து விடையும் பெற்றனர்.

அவர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பதற்காக, ஒருமுறைகூட அரசு வாகனம் பயன்படுத்தப்படவில்லை. அதுமட்டுமல்ல, அவர்களது உணவுக்கான செலவைக்கூடத் தனது தனிப்பட்ட கணக்கில் சேர்த்து அதற்கான கட்டணத்தை வசூலித்துவிட வேண்டும் என்கிற கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருந்தார் குடியரசுத் தலைவர். தனது சம்பளப் பணத்திலிருந்து சுமார் மூன்றரை லட்சம் ரூபாயை அரசுக் கணக்குக்கு மாற்ற உத்தரவிட்டார் ஒரு குடியரசுத் தலைவர் என்று நாளைய குடியரசுத் தலைவர் மாளிகை ஆவணங்கள் இதை வெளிப்படுத்தும்.

இரண்டே இரண்டு பெட்டிகளுடன் வெளியேற இருக்கும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெருமையை இந்திய வரலாறு பக்கம் பக்கமாக எழுத இருக்கிறது. அந்த அளவுக்கு, அந்தப் பதவிக்கு அவர் பெருமை சேர்த்ததற்குக் காரணம், அவரது நேர்மையும் எளிமையும்; தனது மனதுக்குத் தவறு என்று பட்டதை தைரியமாக வெளிப்படுத்திய உள்ளத்தூய்மை. நாளைய தலைமுறைக்கு நம்பிக்கை அளித்தவர் என்பதுதான் இந்தியக் குடியரசுக்கு அப்துல் கலாமின் மிகப்பெரிய பங்களிப்பு.

இவரைத் தொடர்ந்து இனி யார் அந்தப் பதவியில் அமர்ந்தாலும், அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திச் செல்வது – அப்துல் கலாமின் தனி முத்திரை. இதுவரை குடியரசுத் தலைவராக இருந்தவர்கள் பதவி ஓய்வுபெற்ற பிறகுதான் “பாரத ரத்னா’ பட்டம் பெற்றார்கள். “பாரத ரத்னா’ குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முன்னுதாரணம் அப்துல் கலாமால்தான் நிகழ்ந்தது.

இவர்போல இன்னொருவர்…? வருவார், வரவேண்டும். அதுதான் அப்துல் கலாமின் எதிர்பார்ப்பும். அது பொய்த்துவிடலாகாது!

——————————————————————————————————————–
அப்துல் கலாமின் 10 கட்டளைகள்

புது தில்லி, ஜூலை 25: வளரும் நாடாக இருக்கும் இந்தியா வல்லரசாக மாற, 10 கட்டளைகளைத் தெரிவித்தார் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் அப்துல் கலாம் (75).

மக்களின் தேவைகளை, கோரிக்கைகளை நிறைவேற்றுகிற வகையில் அரசு செயல்பட வேண்டும், அரசின் நடவடிக்கைகள் வெளிப்படையாக அமைய வேண்டும், லஞ்சம்-ஊழல் அறவே இல்லாத நிலைமை ஏற்பட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

5 ஆண்டு பதவிக்காலம் முடிவு பெறுவதை ஒட்டி நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை வானொலி, தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக உரை நிகழ்த்திய கலாம் பேசியதாவது:

“நம் நாட்டின் நூறு கோடி இதயங்களையும் எண்ணங்களையும் இணைத்து, “”நம்மால் முடியும்” என்ற நம்பிக்கையை வளர்த்து, நாட்டை வல்லரசாக்குவதே என்னுடைய எஞ்சிய வாழ்நாளின் லட்சியம்.

குடியரசுத் தலைவராக நான் பதவி வகித்த ஐந்து ஆண்டுகளும் அழகானதாகவும், அடுக்கடுக்கான பல சம்பவங்கள் நிறைந்ததாயும் வேகமாகக் கழிந்தன. 2020-க்குள் இந்தியாவை வல்லரசாக்கும் நல்ல முயற்சியில் நாட்டு மக்களாகிய உங்களுடன் நானும் சேர்ந்துகொள்வேன்.

பதவி வகித்த ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் நன்கு ரசித்தேன். அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள், சிறப்புக் குழந்தைகள் என்று பலதரப்பட்டவர்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் நான் கழித்த நாள்களை மறக்க முடியாது.

இந்தியாவை வல்லரசாக்க 10 அம்சங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

1. நகர்ப்புற மக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் வாழ்க்கைத் தரத்தில் வித்தியாசம் இருக்கக்கூடாது.

2. அத்தியாவசியமான பண்டங்களையும் சேவைகளையும் அனைவரும் பெறும் வகையில் சமத்துவம் நிலவ வேண்டும்.

3. மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள்களும், தரமான குடிநீரும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

4. அரசு நிர்வாகமானது மக்களின் தேவைகளை, விருப்பங்களைப் புரிந்து அவற்றை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

5. அரசின் நிர்வாக நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். யாருக்கும், எதற்கும் சலுகை காட்டப்படுவதாக மக்கள் நினைக்கக் கூடாது.

6. அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல், வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவது போன்ற குறைகள் இருக்கக்கூடாது.

7. எல்லா வகையிலும் வாழ்வதற்குச் சிறந்த இடம் என்ற பெயரை நமது நாடு பெற வேண்டும்.

8. நம்நாட்டு அரசியல் தலைமையையும் மற்ற துறைகளில் உள்ள தலைமையையும் நினைத்து நாம் பெருமைப்படும் விதத்தில் அவை தங்களை மேலும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை: விரைவான பொருளாதார வளர்ச்சிக்காக, நமது தொன்மையான-பலதரப்பட்ட கலாசாரத்தையும் நாகரிகத்தையும் தொலைத்துவிடக்கூடாது. எதிர்கால சந்ததிக்காக அவற்றைப் பாதுகாக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

9. ஏழைகள் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் நமது தேசத்தின் செல்வச் செழிப்பை நாம் கணக்கிட வேண்டும்.

10. மொத்த பொருளாதார உற்பத்தி அளவு எப்படி உயர்ந்திருக்கிறது, மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி மேம்பட்டிருக்கிறது, பழைய மரபுகளை, பண்புகளை நாம் இன்னமும் எப்படி கட்டிக்காத்து வருகிறோம் என்பதையும் கணக்கிட வேண்டும்.

நம் நாட்டிலிருந்தே வறுமையை ஒழிக்க வேண்டும், படிக்காதவர்களே இல்லை என்ற வகையில் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும், பெண்களுக்கும்-குழந்தைகளுக்கும் குற்றம் இழைக்கும் கொடுமைகள் மறைய வேண்டும்.

திறமைசாலிகளான அறிஞர்கள், அறிவியலாளர்கள், முதலீட்டாளர்கள் இந்தியாவைத் தேடிவரும் வகையில் நம் நாடு முன்னேற வேண்டும்.

அனைவருக்கும் கல்வி: சமூக, பொருளாதார வித்தியாசம் பாராமல் தகுதி வாய்ந்த எல்லா மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பும் கல்வி பயில வாய்ப்பு தரப்பட வேண்டும்.

அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும்.

வேளாண்மை, தொழில், சேவைத்துறை ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதி செய்ய வேண்டும்.

நாட்டின் 6 லட்சம் கிராமங்களுக்கும் அதிகாரம் அளிப்பதும், 7 ஆயிரம் மையங்களில் நகர்ப்புற வசதிகளை, கிராமங்களுக்கே கொண்டு செல்லும் மையங்களை (புரா) நிறுவதலும் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

முப்படையினர் தியாகம்: நமது ராணுவத்தின் முப்படையினரும் இரவிலும் கண்விழித்து நாட்டைப் பாதுகாப்பதால், நாமெல்லாம் கண்மூடி நிம்மதியாகத் தூங்க முடிகிறது.

சியாசின் பனி முகட்டில் குமார் முனை என்ற இடத்துக்குச் சென்றேன்; சிந்துதர்சக் நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கடியில் சாகசப் பயணம் மேற்கொண்டேன். “”சுகோய்-30” ரக போர் விமானத்தில் படுவேகமாகப் பறந்து சென்றேன். இந்த 3 அனுபவங்கள் மூலம் நம்முடைய ராணுவ வீரர்களின் அறிவு, திறமை, உள்ள உறுதி, தியாகம், வீரம் ஆகியவற்றை நன்கு உணர்ந்துகொண்டேன்.

ஆப்பிரிக்க தொலைத்தகவல் தொடர்பு: ஆப்பிரிக்க நாடுகளின் தொலைதூரப் பகுதிக்கும் தகவல்-தொழில்நுட்பத்தின் நவீன பலன்கள் கிடைக்க, “”அனைத்து ஆப்பிரிக்க ஈ நெட்வொர்க்” என்ற இணையதள வசதியைச் செய்துதரும் இந்திய அரசின் திட்டம் மகோன்னதமானது.

இதன் மூலம் இந்தியாவின் 7 பல்கலைக்கழகங்களும் ஆப்பிரிக்காவின் 5 பல்கலைக்கழகங்களும், 17 சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும், 53 தொலை-மருத்துவ மையங்களும், 53 தொலைக்கல்வி நிலையங்களும் இணைக்கப்படும்.

இந்தியாவின் பன்முகத்தன்மையும், கலாசார வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மக்களின் அருங்குணமும் எனக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

25 வயதுக்குக் குறைவான 54 கோடி இளைஞர்கள் வாழும் ஒரே நாடு இந்தியாதான்; இப்பூவுலகில் மிகப்பெரிய சொத்தாக இதையே கருதுகிறேன். இவர்களுக்கு நல்ல கல்வி, தலைமைப்பண்பு ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்து, நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும்’ என்றார் கலாம்.

Posted in 10, Abdul Kalaam, Abdul Kalam, Analysis, APJ, APJ Abdul Kalaam, APJ Abdul Kalam, Attention, Awards, Bharat Ratna, Bharath, Bharath Rathna, Bharath Ratna, Biosketch, Dev, Development, Education, Excellence, Express, Faces, Freedom, Future, Goenka, Honest, Honesty, Independence, Indian Express, Integrity, Journal, journalism, journalist, Journalists, Kalam, Mag, magazine, Media, MSM, Nation, News, Newspaper, Op-Ed, Opportunity, Path, people, Plan, Planning, Politician, Politics, President, Principle, Prizes, Profits, Ramnath, Ramnath Goenka, Ratna, Reporter, responsibility, revenue, RNG, sales, Sensation, Sensationalism, solutions, Suggestions | Leave a Comment »

Corrections required for the Correctional Force – Prison Reforms

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

தேவை, சிறைத்துறையில் மாற்றங்கள்

குற்றவாளிகளும் மனிதர்கள்தான் என்பதை முதலில் நாம் ஏற்றுக் கொள்கிறோமா? வாக்குரிமை பெற்றுள்ள அவர்களும் இந்தியக் குடிமக்கள்தானே? அப்படியானால், அவர்கள் ஏன் விலங்கினும் கீழாக நடத்தப்பட வேண்டும்? சிறைச்சாலைகள் ஏன் மாட்டுக் கொட்டகைகளைவிட மோசமான நிலையில், கவனிப்பாரற்று இருக்க வேண்டும்? ~ இதுபோன்ற கேள்விகள் சமூக ஆர்வலர்களால் அடிக்கடி எழுப்பப்படுகின்றன.

சிறைச்சாலைகளை நவீனப்படுத்தவும், புதிய சிறைச்சாலைகளை நிறுவவும் மத்திய அரசு 75 சதவிகித மானியம் வழங்குகிறது. தனது பங்குக்கு வெறும் 25 சதவிகிதம் செலவு செய்தால் போதும் என்கிற நிலைமையிலும் பெருவாரியான மாநிலங்கள், சொல்லப்போனால் அத்தனை மாநிலங்களுமே, அந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்வதில்லை.

உலகிலேயே சிறைத்தொகை விகிதம் குறைவான நாடு இந்தியாதான்; லட்சம் பேரில் வெறும் 30 பேர்தான் சிறைகளில் இருக்கிறார்கள். அமெரிக்காவின் விகிதம் 737. ரஷியாவில் 613 பேர். குற்றம்புரியும் மனப்பான்மை இந்த அளவுக்குக் குறைவாக இருந்தும், நமது சிறைகள் நிரம்பி வழிகின்றன. மேலே சொல்லப்பட்ட புள்ளிவிவரமே முழுமையாகச் சரியானது என்று சொல்லிவிட முடியாது. காரணம், நமது சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகளில் பலர், இன்னும் தீர்ப்பு வழங்கப்படாமல் காத்திருக்கும் அப்பாவிகள். குற்றம் நிரூபிக்கப்படாமலேயே பல ஆண்டுகள் காராகிரகத்தில் இருக்கும் குற்றவாளிகளின் எண்ணிக்கை மிகமிக அதிகம்.

அது ஒருபுறம் இருக்க, சிறைகள் இருக்கும் நிலைமையைப் பற்றிக் கேள்விப்படும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. எந்தவித அடிப்படைச் சுகாதார வசதிகளும் கிடையாது; துர்நாற்றமும், பராமரிப்பின்மையும் இணைபிரிக்க முடியாமல் இணைந்திருப்பவை; குண்டர்கள் மற்றும் ரௌடிகளின் அட்டகாசத்திற்குக் கணக்கு வழக்கே இல்லை; சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் உதவியோடு தடைசெய்யப்பட்ட எல்லாமே தங்குதடையின்றி சிறையில் புழங்குதல் – இப்படி நாம் கேள்விப்படுவதெல்லாமே உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை.

இந்த நிலைமைக்கு என்ன காரணம்? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்று மார்தட்டிக் கொள்கிறோமே, நமது நாட்டில் சட்டதிட்டங்கள்தான் அதற்குக் காரணம். 1894-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சிறைச்சாலைச் சட்டம்தான் இப்போதும் அமலில் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இல்லை? காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது இயற்றப்பட்ட சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சுதந்திர இந்தியச் சிறைகள் செயல்படுகின்றன.

காலனி ஆதிக்கம் பிறப்பித்த சட்டம் என்பதால், சிறை என்பது பொதுமக்களின் பார்வைக்கு அப்பாற்பட்ட, பத்திரிகைகள் மற்றும் பொதுநல ஆர்வலர்களின் புலன் விசாரணைக்கு உட்படாத பகுதியாக இப்போதும் இருந்து வருகிறது. சிறைக்குள் நடப்பதைப் படம்பிடிக்க முடியாது. எழுத முடியாது. கேள்வி கேட்க முடியாது. அந்த நான்கு சுவர்களுக்குள் என்ன நடந்தாலும் அது வெளியே வராது, தெரியாது என்கிற நிலைமை தொடர்ந்தால், சீர்திருத்தம் எப்படி நிகழும்?

இந்த நிலைமை சமூக விரோதிகளுக்கும், சுயநலவாதிகளான சில அதிகாரிகளுக்கும் சௌகரியமாக இருக்கிறது. அதேபோல, காவல்துறையினருக்கும் இந்த நிலைமை தொடர்வது வசதியாக இருக்கிறது. வெளியே காவல்நிலையங்களில் தங்களால் பழி வாங்க முடியாத, பழிதீர்த்துக் கொள்ள முடியாதவர்களை ஏதாவது காரணம் காட்டி கைது செய்து சிறையில் அடைத்துவிட்டால், அவர்களை வழிக்குக் கொண்டு வருவது காவல்துறையினருக்கு எளிதாக இருக்கிறது. ஆனால், காவல்துறையினர் மறந்துவிடும் விஷயம் என்னவென்றால், இதுவே சமூக விரோதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் இடையில் நட்புறவை வளர்த்துக் கொள்ளப் பயன்படுகிறது என்பதை.

நீதிமன்ற மேற்பார்வை நடப்பதில்லையா என்று கேட்கலாம். நடக்கிறது. ஆனாலும், சிறைகளின் நிலைமை இப்படி இருக்கிறதே என்று நாம் யாரிடம் போய் கேட்பது? மேற்பார்வை சரியாக இருக்குமானால், இந்தச் சீர்கேடுகள் நிலவுவானேன்? இத்தனை விசாரணைக் கைதிகள், தாங்கள் எதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டு வாழ்கிறோம் என்று மறந்துபோன நிலையில் சிறைப் பறவைகளாகத் தங்கள் வாழ்க்கையைத் தொடருவானேன்?

தேர்தல் சீர்திருத்தம் பற்றி, நிர்வாகச் சீர்திருத்தம் பற்றி, பொருளாதாரச் சீர்திருத்தம் பற்றி, சமுதாயச் சீர்திருத்தம் பற்றியெல்லாம் நாளும் பொழுதும் பேசிக்கொண்டிருக்கிறோமே, நாம் மறந்துவிட்ட முக்கியமான விஷயங்கள் சில உண்டு. அவற்றில் தலையாயவை காவல்துறை, நீதித்துறை மற்றும் சிறைத்துறைச் சீர்திருத்தங்கள்.

மக்களாட்சியில் மக்களின் பார்வையிலிருந்து யாரும் எதையும் மறைத்து வைப்பது என்பது மக்களாட்சித் தத்துவத்துக்கு இழுக்கு!

————————————————————————————-

காவல் துறை சீர்திருத்தங்கள்

என். ரமேஷ்

பொதுமக்களின் நியாயமான புகார்களைப் பதிவு செய்ய மறுப்பது; முதல் தகவல் அறிக்கை தராமல் இருப்பது, காவல் நிலையச் சாவுகள், ஆளுங் கட்சியினரின் அத்துமீறல்களைக் கைகட்டி வேடிக்கை பார்ப்பது, போலி “மோதல் சாவுகள்’, வாக்குமூலம் பெற கொடுமையான வழிமுறைகள் என அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் குறித்து, காவல் துறையின் மீது பல புகார்கள்.

காலனியாதிக்க அடக்குமுறையை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 1861-ஆம் ஆண்டு காவல் துறைச் சட்டம் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையிலேயே, இன்றைக்கும் செயல்படுகிறது காவல் துறை.

இந்நிலையை மாற்றும் நோக்கில் 1977-ஆம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சிக் காலத்தில் முன்னாள் ஆளுநர் தரம் வீரா தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய காவல் ஆணையம் (National Police Commision்) எட்டு அறிக்கைகளை அளித்தது. ஆனால், இந்த அறிக்கைகள் அளிக்கப்பட்டு 27 ஆண்டுகளாகியும், இதன் அடிநாதமான அம்சங்கள் அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரகாஷ் சிங் தேசிய காவல் ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 1996-ல் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையிலான பெஞ்ச் 22-9-2006-ல் முக்கியத் தீர்ப்பை அளித்தது. இதில், ஜனநாயக அமைப்புக்கு உகந்த காவல் சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இயற்றும்வரை, நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவற்றை 6 அம்சங்களாகப் பிரித்து உத்தரவு பிறப்பித்தது.

வெளிப்படைத்தன்மை, மாநில அரசின் சட்டவிரோத நிர்பந்தங்களுக்கு அடிபணியாமை, சட்ட அடிப்படையிலான காவல் துறையின் செயல்பாடு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். முதல்வர் அல்லது உள்துறை அமைச்சரைத் தலைவராகக் கொண்டும், மாநில காவல் துறை தலைமை இயக்குநரைச் செயலராகக் கொண்டும் செயல்படும் இதில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். தகுதி அடிப்படையில் காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) நியமிக்கப்படவும், ஒருவர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அப் பதவி வகிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். மண்டல ஐ.ஜி, எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஆகியோரது பதவிக்காலமும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக இருக்க வேண்டும்.

சட்டம்- ஒழுங்குப் பிரிவு, விசாரணைப் பிரிவு ஆகியவை தனித்தனியாகப் பிரிக்கப்பட வேண்டும். காவல் துறையினரின் இடமாற்றம், பதவி உயர்வு, பணி நியமனம் ஆகியவற்றை முடிவு செய்ய, மேல்முறையீடுகளை விசாரிக்க பணிநிலை வாரியம் அமைக்க வேண்டும். டி.எஸ்.பி. வரையிலான காவல் துறை அலுவலர்கள் மீது பொதுமக்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க மாவட்ட நிலையில் ஓர் ஆணையமும், எஸ்.பி. முதல் உயர்நிலை அதிகாரிகள் வரையிலானோர் மீதான புகார்களை விசாரிக்க மாநில ஆணையமும் அமைக்கப்பட வேண்டும். இவற்றுக்கு முறையே ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதி தலைவராக நியமிக்கப்பட வேண்டும். மத்திய அரசு தேசிய பாதுகாப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும். இவற்றை 2006 டிசம்பர் 31க்குள் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பின்னர், இக் காலக்கெடு 2007 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

தமிழக அரசு இந்த ஆணைகளில் மிக முக்கியமானவற்றை அமல்படுத்த முடியாது எனக் கூறிவிட்டது. காவல் துறையை, அரசியல் தலையீட்டிலிருந்து பாதுகாப்பதற்காக உருவாக்க வேண்டிய மாநில பாதுகாப்பு ஆணையத்தை (State Security Commision) அமைப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகளைக் காப்பது என்ற கோணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த, காவலர்கள் புகார் ஆணையம் (Police Complaints Authority) அமைப்பது குறித்தும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளது. புதிய அமைப்பு மற்றொரு “இணையான அதிகார மையமாக’ செயல்படுவதால் இரட்டிப்புச் செலவு ஏற்படும் என மாநில அரசு கூறியுள்ளது. இது ஏற்க முடியாத வாதம்.

புதிய காவல் துறை சட்டத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தமிழக அரசு. சோலி சோரப்ஜி தலைமையிலான குழு உருவாக்கித் தந்துள்ள மாதிரி காவல் சட்டம், மாநில பாதுகாப்பு ஆணையத்துக்கு இணையான, மாநில போலீஸ் வாரியம் அமைக்கப் பரிந்துரைத்துள்ளது.

மிக முக்கியமாக, காவல் துறையினர் மீதான பொதுமக்களின் புகார்களை விசாரிக்கவும், துறை சார்ந்த விசாரணைகளை மேற்பார்வையிடவும் அதிகாரம் பெற்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளைத் தலைவர்களாகக் கொண்டு மாவட்ட, மாநில ஆணையங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் மாதிரிச் சட்டம் பரிந்துரைத்துள்ளது. எஃப்ஐஆர் பதிய மறுப்பது, சட்டவிரோத கைது- பிடித்து வைத்தல்- தேடுதல் உள்ளிட்ட சில “வழக்கமான’ போலீஸ் அத்துமீறல்களுக்கு கிரிமினல் தண்டனை வழங்கவும் மாதிரிச் சட்டம் வகை செய்கிறது.

புதிய காவல் சட்டத்தில் இதுபோன்ற முக்கிய அம்சங்கள் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை மட்டுமல்ல; குடிமக்களின் கடமையும்கூட

Posted in Analysis, Citizens, Civil, Correctional, Courts, Criminal, HC, Jail, Judges, Justice, Law, National Police Commision, Op-Ed, Order, Police, Police Complaints Authority, Prison, reforms, SC, Society, solutions, State Security Commision, Suggestions | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to overcome diabetics?

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சர்க்கரை வியாதிக்குத் தேன்!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

எனக்கு வயது 59. கடந்த 10 வருடங்களாக நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தினால் துன்பப்படுகின்றேன். சாப்பாட்டுக்கு முன்பாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 330 மி.கி./க்ப் என்ற அளவில் உள்ளது. உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் நெருப்பில் சுட்டது போல் எரிச்சல், உணர்ச்சியற்ற தன்மையுடன் மரத்துப் போய் உள்ளது. ஆண்மைக் குறைவும் மலச்சிக்கலும் உள்ளது. என் உடல் உபாதை மாற ஆயுர்வேத மருத்துவம் கூறவும்.

சர்க்கரை வியாதிக்கான சிகிச்சைமுறை இன்று நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல ஆயுர்வேதம் கூறவில்லை. சர்க்கரை வியாதி உள்ளவர் நல்ல பலசாலியாக இருந்தால் கடுகெண்ணெய் அல்லது வேப்பெண்ணெய் அல்லது புங்கெண்ணெய் போன்றவற்றில் ஒன்றை உடலுக்குத் தகுந்தவாறு பருகச் செய்து உடலின் உட்புறத்தில் குடல் மற்றும் ரத்தக் குழாய்களில் நெய்ப்பை உருவாக்கச் செய்வார்கள். நெய்ப்பு ஏற்பட்டுள்ளதை அறிகுறிகள் மூலம் அறிந்ததும் குடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை வாந்தி மற்றும் பேதி மூலம் வெளியேற்றி உடலின் உட்புறச் சுத்தியை ஏற்படுத்துவார்கள். அதன் பிறகு தோஷநிலைகளை நன்கு அறிந்து ஆசனவாய் வழியாக மூலிகைகளைக் கொண்டு காய்ச்சப்பட்ட கஷாயத்தைச் செலுத்தி குடலைச் சுத்தமாக்குவார்கள். இந்த சிகிச்சை முறைகளால் ஏற்படும் உடல் சோர்வை நீக்க வறண்ட பிரதேசத்தைச் சார்ந்த பிராணிகளின் மாமிச சூப்பைப் பருகச் செய்து உடலுக்குத் தேவையான புஷ்டியை ஏற்படுத்துவார்கள்.

சர்க்கரை நோயால் மிகவும் மெலிந்து எந்நேரமும் உடலில் சோர்வை உணர்பவர்களுக்கு மேற்குறிப்பிட்ட சுத்தி முறைகளால் மேலும் உடல் தளர்வடையும் என்பதால் அதைச் செய்யாமல் அவர்களுக்குச் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மருந்துகளை மட்டும் கொடுப்பார்கள். அந்த வகையில் –

நெல்லிக்காயை இடித்துப் பிழிந்த ஸ்வரஸம் 2 அவுன்ஸ்(60 மிலி), தேன் 1 அவுன்ஸ், மஞ்சள் பொடி அரை டீ ஸ்பூன் இவற்றை ஒன்றாய்க் கலக்கிக் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிக நல்லது. (தேன் நாக்கில் பட்டதும் இனிப்பாகத் தெரிந்தாலும் ஜீரண இறுதியில் அது காரமாக மாறுவதால் சுத்தமான தேன் சர்க்கரையை குறைக்கத்தான் செய்யும்)

உணவில் சம்பா கோதுமையை முக்கிய உணவாக அமைத்து பாகற்காய், கோவைக்காய் போன்றவற்றைப் பொரியலாகவும், புளிக்கு பதில் நெல்லி முள்ளியையும் வறுத்த உப்பையும் சேர்ப்பார்கள். நாள் முழுவதும் இனிப்பே கிடையாதா? என்ற ஏக்கத்தைத் தவிர்க்க சீனாக் கற்கண்டை உபயோகிப்பார்கள். பசு, குதிரை ஆகியவற்றின் சாணத்திலிருந்து எடுத்த பார்லி அல்லது மூங்கில் விதையின் மாவினால் அப்பம், சத்துமாகஞ்சி முதலியவற்றைத் தயாரித்து உண்ணக் கொடுப்பார்கள். சாமை, பயறு, பழைய அரிசி, எள்ளு, கடுகு, நாவல் பழம், கசப்பான கீரைகள், கடுக்காய், நெல்லிக்காய், தானிக்காய் எனப்படும் திரிபலை, தர்ப்பை நீர், தேன்கலந்த நீர் ஆகியவற்றை உணவாக ஏற்றார்கள்.

வறட்சியான பொருள்களால் உடம்பை அழுத்தித் தேய்த்தல், தேகப் பயிற்சி, இரவு கண்விழித்தல் ஆகியவற்றால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க முயற்சி மேற்கொண்டார்கள். எங்கு சென்றாலும் குடை, பாதரட்சை இன்றி நடந்தே செல்லுமாறு சர்க்கரை நோயாளியை வற்புறுத்தினார்கள்.

மேற்குறிப்பிட்ட அத்தனை வகை சிகிச்சையாலும் குறையாத சர்க்கரை வியாதியை வேங்கை, கருங்காலி வைரக் கட்டைக் கஷாயத்தில் மூழ்கி வைத்த 100 பலம் சிலாஜதுவை அதே வைரக் கட்டைக் கஷாயத்துடன் உட்கொண்டு மாமிச சூப்பைச் சாதத்துடன் உண்ணச் செய்தார்கள்.

இதன்மூலம் சர்க்கரை வியாதி மட்டுமல்ல, தைராய்டு, கேன்சர் கட்டிகள், முடிச்சு நோய், உடற்பருமன், குஷ்டம், பவுத்திரம், கிருமி, யானைக்கால் வீக்கம் போன்ற நோய்களையும் நீக்கச் செய்தார்கள்.

நிசோசீராதி தைலத்தை மேலுக்குத் தடவி வருவதால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சல் நீங்கிவிடும்.

சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதன்மூலம் ஆண்மைக் குறைவு உபாதையும் நீங்கும். நெல்லிக்காய்ச் சாறு குடிப்பதால் மலச்சிக்கல் உபாதையும் குறைந்துவிடும்.

இடிந்து கொண்டிருக்கும் ஒரு வீட்டை, கம்புகளால் முட்டுக் கொடுத்து அதைத் தாங்கிப் பிடிக்கச் செய்து வீட்டைக் காப்பதுபோல நடைப்பயிற்சி – உணவுக் கட்டுப்பாடு – மருந்து எனும் கம்புகளால் சர்க்கரை வியாதியால் இடிந்து கொண்டிருக்கும் நம் மனித உடல் மேலும் சரியாது பாதுகாக்கப்படுகிறது.

Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Blood, BP, Cialis, cure, diabetics, Diet, Doctor, Dysfunction, ED, Erectile, Exercise, Health, Healthcare, insulin, Medicine, Penis, Research, Sodium, solutions, Sugar, Suggestions, Viagra | Leave a Comment »

Gastro-Oesophagal Reflux Disease – GORD (Unmai Online)

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2007

மருத்துவமும், மூடநம்பிக்கைகளும்

நெஞ்சு எரிச்சல்

மரு. இரா. கவுதமன் MDS
முக அறுவை மருத்துவர்

சாதாரணமாக நாம் ‘வயிற்றெரிச்சலை’ பற்றிதான் அதிகம் நினைக்கிறோம், பேசுகி-றோம். வயிற்றெரிச்சல் என்று நோயைப் பற்றி பேசுவதைக் காட்டிலும், மற்றவர்கள் நம்மீது கொண்டுள்ள ‘பொறாமை’யையே நாம் பெரும்-பாலும் வயிற்றெரிச்சல் என்று சொல்கி-றோம் ‘என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்-டாய், நீ உருப்படமாட்டாய்’ என சொல்-வது மிகவும் சாதாரண ஒரு செய்தி, அந்த வயிற்-றெரிச்சலை பற்றி சொல்லாமல், இது என்ன ‘நெஞ்சு எரிச்சல்’ என நீங்கள் எண்ணக் கூடும்.

உளவியல் ரீதியான வயிற்றெரிச்சலை மறந்து உடலியல் ரீதியான வயிற்றெரிச்சலைப் பற்றி காண்போம். பல நேரங்களில் வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற கோளாறே நெஞ்-செரிச்சலாக வெளிப்படுவதால் இந்த கோளாறை “நெஞ்சு எரிச்சல் ‘நோய்’ (Gastro Oesophagal Syndrome) என குறிப்பிடுகிறோம். இதில் Gastro என்பது வயிற்றையும், Oesopha gas என்பது உணவுக் குழாயையும் குறிக்கும். வயிற்றில் சேரும் உணவுக் குழாய், தொண்-டையிலிருந்து தொடங்கும் அமைப்பு வயிற்றில் உருவாகும் அமிலச் சுரப்பிகள் உணவுக்குழாய் மூலம் தொண்டை வரை பரவும் நிலை உள்ளதால் இந்நோய்க்கு ‘நெஞ்சு எரிச்சல் நோய்’ (Gastro-Oesophagal Disease) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நோயைப் பற்றி நோக்குவோம்.

நோய் கூற்றியல்: நாம் உண்ணும் உணவு செரிக்க வேண்டும். செரித்த உணவில் உள்ள சத்துப் பொருள்கள்தான் நம் உடலின் வளர்ச்சிக்கும், இயக்கத்தற்கும் அடிப்படை தேவையான பொருள்கள். உணவு செரிமானம் வாயிலிருந்தே துவங்கி விடும். வாயில் உள்ள உமிழ் நீர் (Sauva) மாவுச்சத்தை செரிக்கத் துவங்கும். அதேபோல் வயிற்றில் சுரக்கும் வயிற்று நீர் (Gastric Juice) மாவுச் சத்து, புரதச் சத் ஆகியவற்றை செரிக்க வைக்கும். வயிற்று நீரில், ஹைட்ரோ குளோரிக் அமிலம், பெப்சின் (Pepsin) இன்ட்ரின்சிக் ஃபேக்டர் (Intrinsic Factor) மியூக° (Mucus) ஆகியவை உள்ளன.

இதில் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் பெப்சினும், நரம்பு தூண்டுதலால் சுரப்பவை. நம் உடலில் மாவுச் சத்து (Carbohydrates) குறையும் பொழுது, சர்க்கரையின் அளவு குறையும். இதை ‘ஹைப்போ கிளை-சிமியா (Hypoglycaemia) என்று சொல்லுவோம். இந்த நிலை ஏற்பட்டால் ‘வேக°’ (Vagus) என்ற நரம்பு தூண்டப்படும். இந்த நரம்புதான் வயிற்றிற்கு செல்லும் நரம்பு. உணவின் வாசனை, உணவைப் பார்த்தல் ஆகிய செயல்-பாடுகளும் இந்த நரம்பை தூண்டிவிடும்.

இதனால் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பு உண்டாகும். இதுவே பசி உணர்வாக நமக்கு வெளிப்படும்.

சாதாரணமாக இந்த அமிலச் சுரப்பு பசி எடுக்கும் நிலையை உண்டாக்கினாலும், உணவு உட்கொண்ட பின் நின்று விடும். நெஞ்சு எரிச்சல் நோய் (Gastro-Oesophagal Reflux Disease- GORD) உள்ளவர்களுக்கு இந்த அமிலச் சுரப்பு அடிக்கடி ஏற்பட்டு, உணவுக் குழல் புண்ணாகி, சுருங்கி விடும் (Ulcer and Stonosis) நிலைகூட ஏற்படும். பெரும்பாலான நேரங்களில் நெஞ்சு எரிச்சல், இதய எரிச்சல் (Heart Burn) என குழப்பத்தை ஏற்படுத்தும். இதயத் தமனி (Coronard artery) சுருக்கம் (Ischaemia) சில நேரங்களில் இதேபோன்ற அறிகுறியை தோற்றுவிக்கும். உடனே மார-டைப்பு என நினைத்து சிலர் அதற்கு மருத்து-வம் செய்யும் நிலை ஏற்படும். ‘ஆ°பிரின்’ (Aspirin) மருந்து மாரடைப்புக்கு கொடுக்கும் மருந்தாகும்.

ஆனால் இதே மருந்து நெஞ்சு எரிச்சல் நோய்க்குக் கொடுத்தால், நெஞ்சு எரிச்சல் நோய் மிகவும் அதிகமாகி விடும். அதேபோல் இதயநோயை, நெஞ்சு எரிச்சல்-தான் என்று அசட்டையாக நினைத்து சரியான மருத்துவம் செய்யாமல் விட்டு விட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே சரியான ஆய்வுகள் மூலம் இதயநோயா அல்லது நெஞ்சு எரிச்சல் நோயா எனக் கண்டுபிடித்து மருத்து-வம் செய்தல் அவசியம்.

நோய் காரணீயம்: நெங்சு எரிச்சல் நோய் சாதாரணமாக அடிக்கடி வாந்தி எடுக்கும் சில நோயாளிகளுக்கு இந்நோய் அடிக்கடி ஏற்படும். வயிய்றழற்சி (Gastritis) போன்ற நோயுள்ளவர்-களுக்கு இந்நோய் அடிக்கடி ஏற்டும். வயிற்றழற்சி உள்ளவர்களின் உணவுக் குழயில் உள்ள சுருக்குத் தசைகள் (Sphincter) சரியாக வேலை செய்யாததால் அமிலச் சுரப்பு மேல் நோக்கி செல்லும் நிலை ஏற்படும். சாதாரண நிலையில் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில், உணவும் மற்ற சுரப்பிகளும் கீழ்-நோக்கியே செல்லும்.

ஆனால் நெங்சு எரிச்சல் நோயில் சுருக்குத் தசை செயல்பாடு குறைப்-பாட்டால் அமிலச் சுரப்பு மேல் நோக்கிச் சென்று எரிச்சலை ஏற்படுத்தும்.

நோயின் அறிகுறிகள்:

நெஞ்சு எரிச்சல் நோயில் அடிப்படை அறிகுறியே நெஞ்சில் எரிச்-சல் ஏற்படுவதுதான். நெஞ்சு எலும்புக்கு பின்-புறம் நெஞ்சு கரிப்பாகத் தோன்றும் இந்நோய் நாளடைவில் எரிச்சலாக மாறும். சிலருக்கு உணவுக்கு பின் அதிகளவில் எரிச்சல் ஏற்படும். வயிறு நிறைய உணவு உண்டாலும் அதிகளவு உண்டாகும். வயிறு முட்ட உணவு உண்டு-விட்டு, உடனே படுக்கைக்குச் சென்றால் எரிச்-சல் நெஞ்சுப் பகுதியில் ஏற்படும்.

மசாலா கலந்த மாமிச உணவு, மது, பீடி, சிகரெட் போன்றவை இந்நோயை அதிக அளவு உண்டாக்கும். படுத்திருக்கும் நிலை, வயிற்றை அழுக்கிக் கொண்டு குனிந்து வேலை செய்வர்களுக்கு அதிக அளவு ஏற்படும் வாய்ப்பு உண்டு. உணவு உண்டபின் எரிச்சல் ஏற்படுவதோடு அன்றி புளி ஏப்பம் உண்டாகும். அடிக்கடி ஏப்பம் விடுதல் போன்றவை உண்டாகும். சில சமயங்களில் தூங்கும் பொழுது புரை ஏறுதல், இருமல் உண்டாதல் ஆகிய நிலைகளோடு சேர்ந்து நெஞ்சு எரிச்சலும் ஏற்படும்.

இந்நோயுள்ளோர் படுக்கைக்கு அருகிலேயே தண்ணீர், பால் வைத்திருந்து, அதை குடித்தால், எரிச்சல் குறையும். முறையான மருத்துவம் செய்து கொள்ளாமல் விட்டால், நாளடைவில் உணவு நெஞ்சிலேயே நிற்பது போன்ற உணர்வு ஏற்படும். தொண்டை அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படும். நெஞ்சுப் பகுதியில் ஏற்படும் எரிச்சல் தொண்டை வரை பரவும். அதனால் கழுத்துப் பகுதியில் எரிச்சல் உள்ள உணர்வு தோன்றும். உணவுக் குழலின் பகுதிகளில் புண்ணாகி (Ulcer) சுழற்சி ஏற்படும். சில நேரங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும்.

நோயறிதல்:

நோயின் அறிகுறிகளை வைத்தே இந்நோயை எளிதில் கண்டு பிடிக்-கலாம். இதய நோயா இல்லையா என்பதை இதய மின் பதிவில் (ECG) கண்டு பிடிக்கலாம். ‘உள்நோக்கி’ (endoscopy) முறை-யில் எளிதாக அறியலாம். சாதாரணமாக உணவுக் குழலை உள்நோக்கி வழியாகப் பார்த்தால் அது உலர்ந்த நிலையில் இருக்கும். அதுவே நெஞ்சு எரிச்சல் நோயுள்ளவர்-களுக்கோ, மூச்சு விடும் பொழுதெல்லாம் (ஏற்படும் நெஞ்சு சதைப் பகுதி அழுத்தப்-படுவதால்) வயிற்றில் உள்ள பொருள்கள் மேலும் கீழும் வந்த வண்ணம் இருக்கும். சிலருக்கு உணவுக் குழாயில் உள்ள புண்-களையும் உள்நோக்கி வழியே, தெளிவாக காண முடியும். உணவுக் குழாய் சுருக்கம், அழற்சி ஆகியவற்றையும் உள்நோக்கி வழியே காணலாம்.

மருத்துவம்:

உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும். இந்நோயை கட்டுப்படுத்த நல்ல மருந்துகளும் உள்ளன. அதிக அளவு வயிறு முட்ட உண்-ணாமல் அளவோடு உண்ண வேண்டும். மசாலா, எண்ணெய், கொழுப்பு உணவுகள், சாக்லெட்டுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். காபி, டீ அதிகம் குடிப்பவர்-களுக்கும் இந்நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதை தவிர்த்தல் நலம்.

பீடி, சிகரெட், மது போன்றவை இந்நோயை அதிகமாக்குவதால் அதை அடியோடு நிறுத்துவது நலம் பயக்கும். உணவு உண்ட உடனே படுக்கைக்குச் செல்-லாமல் கொஞ்ச நேரம் நடத்தல் அல்லது அமர்ந்-திருத்தல் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும். அமில அதிர்ப்பான்காள (Antacid) ‘டைஜின்’ ‘ஜெலுசில்’ போன்ற மருந்துகள் நல்ல பலனைத் தரும்.

நரம்புத் தூண்டுதலை குறைகின்றதன் மூலம் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் தற்போது அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. நேரத்-திற்கு உணவு உண்ணுதல், அமிலச் சுரப்பைத் துண்டாத உணவுப் பழக்கங்கள் உணவு உண்டதும் லேசான நடைப்பயிற்சி. உடனே உறங்கச் செல்லாமை ஆகியவை நம்மை இந்நோயிலிருந்து காக்க உதவும். ஆரம்ப நிலையில் சரியான மருத்துவம் செய்து-கொள்ளாத நோயாளிகளுக்கு நோயின் கடுமை அதிகரிக்கும்.

அவர்களுக்குக் கூட உள்நோக்கி வழியாகவே மாறிவரும் மருத்துவ அறிவியலில் உள்நோக்கி வழியாகக் செய்யும் இம்மருத்துவம் மிகவும் எளிமையானதாகும். மருத்துவ-மனையில் ஓரிரு நாள் இருந்தால் போதும். நெஞ்சு எரிச்சல் நோய்க் கூறுகளை இந்த இதழில் கண்டோம். மனவியல் ரீதியான வயிற்றெரிச்சலைத் தவிர்த்து உடலியல் ரீதியான வயிற்றெரிச்சலை வரும் இதழில் காண்போம்.

Posted in Acid, Acidity, Antacids, Artery, Aspirin, Base, Care, coronary, cure, Digene, Disease, Disorder, Doc, Doctor, ECG, endoscopy, Gastric, Gastritis, Gastro, Gelusil, glycemia, Health, Healthcare, HeartBurn, Hypoglycaemia, Hypoglycemia, medical, Medicine, Neutral, Operation, Options, pH, Pizza, Reflux, Research, Sauva, solutions, Suggestions, surgery, Tablets | 2 Comments »

N Vittal – How to bring new synergy into current Agriculture practices: Marketing

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

வேளாண்மையும் “பெருந்தொழிலாக’ வேண்டிய நேரம்!

என். விட்டல்

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான “”ரிலையன்ஸ்”, தகவல் தொடர்புத் துறையில் ஜாம்பவானாக உருவெடுத்துவரும் சுநீல் மித்தலின் “ஏர்-டெல்’ போன்ற நிறுவனங்கள் இப்போது வேளாண்மைத் துறையில் பெரும் அக்கறை எடுத்துவருகின்றன.

மிகப் பிரம்மாண்டமான அளவில் உற்பத்தி, விநியோகம், விற்பனை என்ற தங்களுடைய தொழில்துறை வெற்றி உத்தியை, வேளாண்மைத்துறையிலும் புகுத்த முயல்கின்றன.

“மனிதர்கள் காலில் போட்டுக்கொள்ளும் செருப்புகளும் பூட்ஸ்களும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன; வேளாண்துறையில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை மண்டிகளிலும், வெயிலும் தூசும் நிரம்பிய சந்தைகளிலும், வீதிகளிலும் கோணியைப் பரப்பி விற்கப்படுகின்றன’ என்று ஆமதாபாதில் இந்திய நிர்வாகவியல் மாணவர்களிடையே உரை நிகழ்த்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கவலையோடு குறிப்பிட்டிருந்தார்.

மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மூலம், பெருநகரங்களில் உள்ள அங்காடி வளாகங்களில் வேளாண் விளைபொருள்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு, “”பேக்” செய்யப்பட்டு, எடை, தரம், விலை குறியீடுகளுடன் விற்கப்படுமானால் லாலு சுட்டிக்காட்டிய முரண்பாடு மறைந்துவிடும். இது மட்டும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேறினால், இந்திய வேளாண்மைத்துறையில் “”மூன்றாவது புரட்சி” ஏற்பட்டுவிடும்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது கைக்கும் வாய்க்கும் எட்டுகிற நிலைமையில்தான் நமது உணவு தானிய உற்பத்தி இருந்தது. உணவு தானியத் தேவையில் தன்னிறைவு பெற்றவர்களாகக் கூட இல்லை. 1970-களில் அறிமுகப்படுத்தப்பட்ட “”பசுமைப் புரட்சி”யின் விளைவாக நிலைமை தலைகீழாக மாறியது. அதில் பங்கேற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் போன்றவர்கள் “”இரண்டாவது பசுமைப் புரட்சி” இப்போது அவசியம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

வறுமைக் கோட்டுக்குக்கீழே வாழும் ஏழைகளுக்காக இப்போது மீண்டும் கோதுமை, அரிசி போன்றவற்றை இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கிறோம்.

கிராமப்புறங்களில் ஏற்பட்ட இரண்டாவது புரட்சி, பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக நம்மை இடம் பெறச் செய்த “”வெண்மைப் புரட்சி”யாகும். அமுல் நிறுவனத்தின் தந்தையும் தலைசிறந்த நிர்வாகியுமான டாக்டர் வர்கீஸ் குரியனும், சிறந்த காந்தியவாதியும் கைதேர்ந்த கூட்டுறவு இயக்க நிபுணருமான டாக்டர் திரிபுவன்தாஸ் படேலும் இந்தப்புரட்சிக்கு முழுமுதல் காரணகர்த்தாக்கள். குஜராத்தில் மட்டும் எல்லா மாநிலங்களிலுமே பால் பண்ணைகள் பெருக இவர்களின் நடவடிக்கைகள் முன்னோடியாகத் திகழ்ந்தன.

பசுமைப்புரட்சி காலத்தில் உரிய நேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருள்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்தது. பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. வீரிய விதைகள் விநியோகிக்கப்பட்டன.

விவசாயிகள் சாகுபடி செய்யும் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது, சந்தையில் அந்த விலைக்குக் குறைவாக விற்கும் நிலைமை ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் திட்டத்தை இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலம் அமல்படுத்தியது, நெல், கோதுமை, சர்க்கரை போன்றவற்றை போதிய அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்ள கிடங்கு வசதிகளும், அவற்றுக்கு ரயில் பாதை இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.

இப்போது இந்திய வேளாண்மை பற்றிப் பேசினாலே முதலில் நினைவுக்கு வருவது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதுதான். பருத்தி சாகுபடியில் இறங்கியவர்களும், அதிக பொருள் செலவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வயலுக்கு அடித்தவர்களும்தான் அதிகம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதைத் தடுக்க, முதலில் விவசாயிகளை அழைத்து அவர்களின் மனத்தளர்ச்சி, விரக்தி மனப்பான்மை நீங்க, நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேச வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து மிகுந்த நம்பிக்கையோடு இறக்குமதி செய்யப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளும், அதிக விலைக்கு வாங்கப்பட்ட பூச்சிக் கொல்லிகளும் பலன் தராமல் பருவமழை பொய்த்ததால் கடன் சுமை அதிகரித்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அப்படி இறக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ஒரு லட்ச ரூபாயை உதவித்தொகையாகத் தருகிறது.

வறுமை தாளாமல் விவசாயக் கூலிகள் தவிக்கும்போது அவர்களுக்கு அரசின் உதவி உரிய முறையில் கிடைக்காமல் போவதால், நக்சல்களின் நெருப்புப் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு நக்சல்களாக மாறுகின்றனர்.

தற்கொலைக்கு அடுத்தபடியாக இந்திய வேளாண்மையை மிகவும் பாதிக்கும் அம்சம் உற்பத்தித் திறன் ஆகும். நம்மைவிடக் குறைந்த சாகுபடி பரப்பைக் கொண்டுள்ள சீனா, நம்மைவிட அதிக அளவு தானிய விளைச்சலைத் தருகிறது.

நிலத்திலிருந்து விளைவது குறைவாக இருப்பது ஒருபகுதி என்றால், விளைந்த தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையும் அறுவடை செய்து எடுத்து வரும்போது சேதாரப்படுத்துவதன் மூலம் 10 சதவீத உற்பத்தியை வீணாக்குகிறோம்.

எல்லா பருவகாலத்திலும் பூச்சி அரிக்காமல், பறவைகள், எலிகள் பாழ்படுத்தாமல் தானியங்களையும் இதர விளைபொருள்களையும் சேமித்து வைக்க கலன்கள், குதிர்கள், கிடங்குகள், குளிர்பதன வசதி இல்லாமல் 40 சதவீதம் வரை வேளாண் சாகுபடி வீணாகிறது.

ஓராண்டு சாகுபடி பற்றாக்குறையாக இருப்பதும் அடுத்த ஆண்டு உபரியாவதும் தொடர்கிறது. பற்றாக்குறையின்போது பணமே கிடைக்காமல் ஏழ்மையில் மூழ்க நேரிடுகிறது என்றால், உபரியின்போது கொள்முதல் விலை சரிந்து, போட்ட அசலைக்கூட எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 60 சதவீத பங்கைப் பிடிக்கின்றனர்.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தில் நேரடியாக ஈடுபட்டு, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீத அளவுக்கு மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.

இந் நிலையில் பெரிய தொழில்நிறுவனங்கள் இத் தொழிலில் ஈடுபட்டால் நிலங்களை வளப்படுத்துவது, பாசன வசதி அளிப்பது ஆகியவை விரிவான அளவில் நடைபெறும். அடுத்து தரமான விதைகள், விலைகுறைந்த இயற்கை உரங்கள், நவீன சாகுபடி உத்தி ஆகியவற்றைப் பின்பற்ற முடியும்.

திசு வளர்ப்பு மூலம் செடிகளையும் கொடிகளையும் வளர்ப்பது, ஒட்டுச் செடிகளைப் பயன்படுத்துவது என்று வேளாண்மையில் லாப நோக்குடன் புதியவை புகுத்தப்படும். அடுத்தபடியாக விளைபொருள்களைச் சேதம் இன்றி அறுவடை செய்வதும் கிடங்குகளுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் கொண்டு செல்வது சாத்தியம்.

இடைத்தரகர் இன்றி, உற்பத்தியாளருக்கும் கணிசமான தொகை கிடைக்கும் நுகர்வோருக்கும் கட்டுப்படியாகும் விலையில் பண்டங்கள் கிடைக்கும். கூட்டுறவுத்துறை வலுப்பெறும். உற்பத்தி, விநியோகம், விற்பனை போன்றவை விவசாயிகளுக்குச் சாதகமாக மாறும்.

அதன் பிறகு தொழில் நிறுவனங்களின் தலையீட்டால் ஏற்படும் மூன்றாவது வேளாண்மைப் புரட்சியானது “”விவசாயியைச் சார்ந்த வேளாண்மை” என்ற நிலைமையை மாற்றி, “”வேளாண்-வர்த்தகம் சார்ந்த வேளாண் தொழில்” என்ற நிலைமைக்குக் கொண்டு செல்லும்.

(கட்டுரையாளர்: முன்னாள் ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு ஆணையர்.)

——————————————————————————————-

காலச்சுழலில் கழனியும் உழவரும்

 

தமிழக விவசாயி காசி
தமிழக விவசாயி காசி

 

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அறுபது விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் விவசாயத்தையும் அதனைச் சார்ந்த தொழில்களையும் சார்ந்தே வாழ்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும் இப்போது பற்றாக்குறையைப் போக்க உணவு இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், தமிழகத்தில் மாறிவரும் விவசாயச்சூழல் மற்றும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பலவிதமான பிரச்சனைகள் குறித்து அன்பரசன் தயாரித்து வழங்கும் சிறப்புத் தொடர்.

———————————————————————————-

ரிலையன்ஸ் கடைகளுக்கு நிபந்தனை விதிக்க ராமதாஸ் யோசனை
சென்னை, ஜூலை 7: சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்களை விற்கக் கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

ரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட போன்ற பன்நாட்டு நிறுவனங்களும் சில்லறை வணிகத்தில் ஈடுபடத் தொடங்கி இருக்கின்றன. நகரங்கள் தோறும் கடைகளைத் திறந்து வைத்துள்ளன.

இதனால் பாரம்பரியமிக்க சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களும், சில்லறை வணிகக் கடைகளால் வேலை வாய்ப்பு பெற்று வரும் பல லட்சம் தொழிலாளர்களும் நடுத் தெருவுக்கு வரும் ஆபத்து உருவாகி வருகிறது.

இந்த ஆபத்தான நிலைமையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் சென்னை போன்ற நகரங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தாராள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. காலப்போக்கில் இந்த கடைகளால் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள பல லட்சம் பேர் வேலை இழக்கும் ஆபத்து ஏற்படப் போகிறது.

கேரளத்தில் அனுமதி இல்லை: இந்நிலையில் பக்கத்து மாநிலமான கேரளத்தில் ரிலையன்ஸ் கடைகளுக்கு இனிமேல் அனுமதி வழங்குவது இல்லை என்றும் ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அவற்றை ரத்து செய்வது என்றும் அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

மேற்கு வங்கத்தில் ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருள்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்று மிகக் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

கேரளத்தைப் போன்று தமிழகத்திலும் ரிலையன்ஸ் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். இனிமேல் அனுமதி வழங்கக் கூடாது என்று உள்ளாட்சி மன்ற அமைப்புகளுக்கு ஆணையிட வேண்டும். அல்லது மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனையைப் போன்று உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்கக் கூடாது என்ற நிபந்தனையாவது விதிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

———————————————————————————————————————————–

உதட்டளவு அக்கறை கூடாது…!

“விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு’ என்று தனது சுதந்திர தின உரையில் பிரதமர் வலியுறுத்தி இருப்பதும், விவசாயிகளுக்குப் பல சலுகைகளையும் திட்டங்களையும் அறிவித்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள்.

உலகமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தம், தாராளமயமாக்கல் போன்ற கோஷங்களுடன் இன்றைய பிரதமர், நிதியமைச்சராக இருந்தபோது இந்தியாவுக்கு ஒரு புதிய பொருளாதாரத் திட்டத்தை வகுத்ததுமுதல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது என்னவோ விவசாயிகளும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களும்தான்.

கடந்த 15 ஆண்டுகளில் விவசாயம் மிகக் குறைந்த ஊக்கத்தையும், வளர்ச்சியையும்தான் காண நேர்ந்தது என்பதைப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. கிராமப்புறங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தை, நமது பொருளாதாரப் பத்திரிகைகளும் புதிய பொருளாதாரத் திட்ட விற்பனையாளர்களும் உருவாக்க முற்பட்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், விவசாயமும், விவசாயிகளும் இதுவரை சந்தித்திராத ஒரு சோதனையான கட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான்.

சமீபத்தில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கமிஷன் ஒன்றின் அறிக்கையின்படி, கடனால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது. ஆந்திரத்தில் 82 சதவிகிதம், தமிழகத்தில் 75 சதவிகிதம், பஞ்சாபில் 65 சதவிகிதம் விவசாயிகள், விவசாயத்திற்காக வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாமல் தவிக்கின்றனர் என்கிறது இந்த அறிக்கை. சராசரியாக, இந்திய விவசாயி ஒவ்வொருவரின் கடன் சுமையும் ஏறத்தாழ ரூ. 25,985 என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இப்படிக் கடன் சுமையில் சிக்கிக்கொள்ளும் விவசாயிகளில் பலரும், தனியாரிடம் கடன் வாங்கியவர்களாக இருக்கிறார்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

லாபகரமாக இல்லாவிட்டால், ஏன் விவசாயம் செய்ய வேண்டும்? அந்த விளைநிலங்களைப் “ப்ளாட்’ போட்டு வீடு கட்டவோ, தொழிற்சாலை அமைக்கவோ பயன்படுத்திவிட்டு, நமக்குத் தேவையான உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாமே? இப்படியொரு யோசனையை முன்வைக்கிறார்கள், புதிய பொருளாதாரக் கொள்கையின் விற்பனைப் பிரதிநிதிகள்.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விவசாயிகளுக்கு ஏகப்பட்ட மானியங்களை அந்த அரசுகள் வழங்குகின்றன. தங்களது தேவைக்கு அதிகமாக உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கின்றன. நச்சுப் புகையால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை, இந்தியா போன்ற நாடுகளில் நிறுவ ஊக்குவிப்பதும், அவர்களது தேவைக்கான உணவுப் பொருள்களைத் தாங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதும் இந்த நாடுகளின் நோக்கம் என்று நாம் கூறவில்லை. ஆனால், அந்த நாடுகள் விவசாயத்துக்கு அளிக்கும் ஊக்கத்திற்கு என்ன காரணம் என்று யோசிக்கச் சொல்கிறோம்.

நமது விவசாயிகளுக்குத் தரும் விலையைவிட அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யும் போக்கு சமீபகாலமாகக் காணப்படுகிறது. வேண்டுமென்றே இந்திய விவசாயிகளை விவசாயத்தைப் புறக்கணிக்கச் செய்யும் முயற்சி நடைபெறுகிறதோ என்கிற சந்தேகம்கூட எழுகிறது. அது ஆபத்தை விலைகொடுத்து வாங்கும் செயல்.

ஒரு தேசத்தின் பாதுகாப்பு என்பது எல்லைகளைக் காக்கும் ராணுவத்திடம் மட்டும் இல்லை. தனது நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் தன்னிறைவிலும் இருக்கிறது. அடுத்த வேளைக் கஞ்சிக்கு அயல்நாட்டுக் கப்பலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுமானால், அதைவிட பலவீனமான நாடு எதுவும் இருக்க முடியாது. இதை எழுபதுகளிலேயே புரிந்து கொண்டிருந்ததால்தான், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி “பசுமைப்புரட்சி’ என்கிற கோஷத்துடன் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வழி வகுத்தார்.

இந்திரா காந்தியின் மருமகள் தயவால் பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங்கின், விவசாயிகள் மீதான அக்கறை உதட்டளவில் நின்றுவிடாமல் உணர்வுபூர்வமாக இருக்கும் என்று நம்புவோம். விவசாயம் சார்ந்த பொருளாதாரமாகத் தொடர்வதுதான் இந்தியாவின் வருங்காலத்துக்கு நன்மை பயக்கும்!

——————————————————————————————————————

இது புதுசு: நலம், நலமறிய ஆவல்!

வயதிலும் இளைமையாய் ஜொலிக்க வேண்டும் என்பது மக்களின் ஆசையாக இருக்கிறது. ஆனால் உலர்ந்த தலைமுடியைப் பராமரிப்பது எப்படி?, எண்ணெய் பிசுக்கான முகத்தைச் சரி செய்வது எப்படி?, சத்தான உணவு எது?…. என்பது போன்ற பல்வேறு தகவல்களையும் ஒரே இடத்தில் பெறுவது எப்படி என்ற கவலையும் கூடவே தொற்றிக் கொள்கிறது.

மக்களின் எந்தத் தேவையையும் உடனுக்குடன் தெரிந்து கொண்டு அதைப் பணமாக்கத் தெரிந்திருப்பதுதான் பிசினஸýக்கு அழகு. இதற்கு உதாரணமாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் மக்களின் இந்த ஆசையையும் பூர்த்தி செய்ய களமிறங்கியிருக்கிறது. ரிலையன்ஸ் வெல்னஸ் என்ற பெயரில் “ஆரோக்கிய வணிக’த்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

பரீட்சார்த்தமாக முதலில் ஆரம்பித்திருக்கும் இடம் ஹைதராபாத். விரைவில் பெங்களூர், சென்னை, மும்பை நகரங்களில் துவங்க இருக்கிறார்கள்.

இது குறித்து ரிலையன்ஸ் வெல்னஸ் நிர்வாக இயக்குநர் நினு கண்ணாவிடம் பேசினோம்.

“”மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது. ஆனால் ஆரோக்கியம் என்பது ஆரோக்கிய உணவு, ஆரோக்கியம் குறித்த மருந்துகள், அது குறித்த புத்தகங்கள்- சி.டி.கள், உடற்பயிற்சி கருவிகள், யோகா பயிற்சி என பலதுறைச் சம்பந்தமுடையதாக இருக்கிறது. அதை ஒருங்கிணைப்பதற்குத்தான் இந்தத் திட்டம்” என்றார்.

இந்தியா முழுதும் 51 நகரங்களில் இப்படி 1200 நிலையங்களை ஆரம்பிக்க இருக்கிறார்கள். 1500 சதுர அடியில் இருந்து 3,500 சதுர அடி பரப்பில் இது அமையும். காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இயங்கும் இந் நிலையத்தில் இலவசமாக ஆரோக்கியம் குறித்த ஆலோசனை வழங்குவதற்கான மருத்துவர் ஒருவரும், கண் பரிசோதனை செய்வதற்கான மருத்துவரும் இருப்பார்கள். “”தோல் பொலிவு, தலைமுடி பராமரிப்பு, உயரம்- உடல் எடைக்கான விகிதம், சர்க்கரை அளவு போன்றவற்றுக்கான டிப்ஸ் தருவது மட்டும்தான் இந் நிலையத்தில் மருத்துவர் இருப்பதற்கான பிரதான நோக்கம். இது கிளினிக் போலவோ, அல்லது மருந்து கடை போலவோ நோயாளிகளைக் குணப்படுத்தும் இடமாக இல்லாமல், நோய் வராமல் தடுப்பதற்கான ஆரோக்கிய கூடமாகச் செயல்படும். இதற்காக மாதந்தோறும் ஹெல்த் புரோக்ராம்கள் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் அவர்.

அதே போல இங்கு பதிவு செய்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் உடல்நிலை குறித்த தகவல்களையும் வெப்சைட்டில் தனிப்பக்கம் ஏற்படுத்திப் பதிவு செய்து வைத்திருப்போம். அதற்கான குறிப்பு அட்டை ஒன்றையும் அவர்களுக்கு வழங்குவோம். திடீர் விபத்து நேரங்களில் அவரைப் பரிசோதிக்கும் மருத்துவர், இந்தக் குறிப்பு அட்டை மட்டும் இருந்தால் அவருடைய ரத்த வகை என்ன, எந்த மாதிரியான அலர்ஜி உள்ளவர், முகவரி என்ன போன்ற தகவல்களை அந்த வெப்சைட்டில் சுலபமாகப் பெறமுடியும்” என்கிறார் நினு கண்ணா.

ரிலையன்ஸ் ஃப்ரஸ்ஸýக்கு சில இடங்களில் எதிர்ப்பு ஏற்பட்டது போல இதற்கு எதிர்ப்புகள் ஏற்பட்டதா? என்றோம். சிரித்துக் கொண்டே சொன்னார்.

“”இந்த நிமிடம் வரை எங்கள் நிலையம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது” .

Posted in Advice, Agriculture, Air-tel, Airtel, Ambani, Analysis, BBC, BigBox, BMI, Boom, Channels, Chat, Consultation, Consulting, Consumers, Cultivation, Customers, Diet, Distribution, Doc, Doctor, Drinks, Eat, Economy, Farmer, Farming, Fat, Fertilizer, Free, Freight, Goods, Growth, Health, Herbs, Ideas, Industry, Interviews, Investment, Lalloo, LalooY, Lalu, Luxury, Malls, Management, Manufacturing, Marketing, medical, milk, Mittal, Mktg, Necessity, Need, Nutrition, Op-Ed, Operations, Paddy, PMK, Podcast, Production, Protein, Ramadas, Ramadoss, Reliance, Reliance Fresh, Reliance Industries Limited, retail, Sell, service, Shopping, Shops, Snippets, solutions, Specials, Suggestions, support, Swaminathan, Tablets, Telecom, Tummy, Vendors, Vitamins, Wal-Mart, Walmart, weight, Wellness, Yadav | Leave a Comment »

Health Education – Teaching about adulthood, sex & biology to Students

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

அலசல்: பட்டாம்பூச்சிகளின் மேல் கல்லை வைக்கலாமா?

ரவிக்குமார்

பாரம்பரியத்திலும் கலாசாரப் பெருமையிலும் ஊறிய இந்தியாவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 5.7 மில்லியன் என அலறுகிறது ஒரு புள்ளிவிவரம்.

பெண் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான இந்திய அமைப்பு இந்தியாவில் 53 சதவிதம் குழந்தைகள் பால் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என்ற அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடுகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்தியாவையே கலக்கியது ஒரு மல்ட்டி மீடியா மெசேஜ் (எம்.எம்.எஸ்). எட்டாவது படிக்கும் மாணவன் அவனுடைய சக மாணவியிடம் நடத்தியிருக்கும் பால் ரீதியான குறும்புகளை அவனே செல்போனில் படம் எடுத்த காட்சிகள்தான் அவை.

மேற்சொன்ன கொடுமைகளிலிருந்து எதிர்கால இந்தியாவின் இளைய தலைமுறையைக் காப்பாற்றுவதற்கு என்ன வழி? என்று யோசித்த அரசாங்கம், இந்த ஆண்டு முதல் யுனிசெஃப் அமைப்பால் வடிவமைக்கப்பட்ட (ஏ.இ.பி.) வளர்இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை பள்ளிகளில் அறிமுகப்படுத்தவுள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தக் கல்வித் திட்டத்தில் இருக்கும் சாதக, பாதக விஷயங்களைப் பற்றி சிலரிடம் கேட்டோம்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடம், பால் ரீதியான விழிப்புணர்வை வழங்கி வரும் சென்னையைச் சேர்ந்த “துளிர்’ அமைப்பின் இயக்குனர் வித்யா ரெட்டி, “”வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டத்தை அவர்களிடம் ஆலோசிக்காமல் வடிவமைக்கக் கூடாது. இன்னொரு விஷயம், இந்தக் கல்வித் திட்டத்தை குழந்தைகளின் பெற்றோர், கல்வியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், உளவியல் அறிஞர்கள் கொண்ட குழுவின் ஒப்புதலோடு ஏற்படுத்தியிருக்க வேண்டும். இந்தக் கல்வித் திட்டத்தைச் சாதாரணமாக மற்ற வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்களைக் கொண்டு நடத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அது பத்தோடு, பதினோராவது வகுப்பாக முடிந்துவிடும்.” என்றார்.

“”நமக்கென்று ஒரு கலாசாரப் பின்னணி இருக்கிறது. அதன் அஸ்திவாரத்தையே ஆடவைக்கும் பல வேலைகளில் ஒன்றாகத்தான் இதையும் பார்க்கிறேன். வளர் இளம் பருவத்தினருக்கான இந்தக் கல்வித் திட்டத்தை பெற்றோர்களின் வழிகாட்டுதலோடுதான் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் விபரீதமாகத்தான் போய் முடியும். முதலில் பெரியவர்களுக்கே பால் ரீதியான கல்வியில் பெரியதாகத் தெளிவு இல்லாதபோது, குழந்தைகளுக்கு அது மோசமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்” என்றார் சுயம் அறக்கட்டளையின் தாளாளரான உமா.

“”இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி ஒருசில வீடுகளில் தான் இருக்கும். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. குடிதண்ணீருக்காக மக்கள் கஷ்டப்படும் கிராமங்களில் கூட வீட்டுக்கு வீடு பெரும்பாலும் டிவி இருக்கிறது. கூடவே கேபிள் கனெக்ஷனும். நாளுக்கு நாள் மீடியாவில் விதவிதமான திரைப்பாடல்கள் எந்தவிதமான சென்சாரும் இல்லாமல் அரைகுறை ஆடைகளுடன் அப்படியே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோதாததற்கு செல்போன், இன்டர்நெட்… என்று எத்தனையோ தகவல் தொடர்புச் சாதனங்கள். அதைப் பயன்படுத்தி எந்த மாதிரியான தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள் என்று நான் சொல்லத் தேவையில்லை. மீடியா இன்றைக்கு எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு நாம் பார்த்த சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் தற்போதுள்ள சிறுவர்களின் அறிவுத் திறனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்கள் படிக்கும் முறை, மிகவும் தாராளமாக அவர்களிடம் புழங்கும் செல்போன்கள் எல்லாமே அடுத்தகட்டத்துக்கு அவர்களை மிக அவசரமாகத் தூண்டுபவையாக இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு வளர் இளம் பருவத்தினருக்கான பால்ரீதியான விழிப்புணர்வுக் கல்வி அவசியம் என்றுதான் நினைக்கிறேன். இந்த பருவத்தின் வாயிலில் இருப்பவர்களுக்குத்தான் நிறைய குழப்பங்கள் இருக்கும். பால் ரீதியான அவர்களின் குழப்பங்களுக்குச் சரியான விளக்கங்களை அவர்களுக்கு பெற்றோர்களும் விளக்குவதற்கு முன்வரமாட்டார்கள். பருவ வயதை அடையும் பெண்ணுக்கு உடலில் ஏற்படும் மாறுபாடுகளை “இது இயல்பான ஒன்றுதான்’ என்று பெண்ணுக்கு எடுத்துச் சொல்வதற்கு யோசிக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? பெண்களுக்கு இப்படி என்றால், ஆண் பிள்ளைகளுக்கும் உடலில் இயல்பான மாற்றங்கள் நடக்கும். இந்தச் சமயத்தில் பெற்றோர்களின் அனுசரனை இல்லாதபோது,

அவர்களுக்கு கேட்காமலேயே கிடைப்பது சக நண்பர்களிடம் கிடைக்கும் ஆலோசனைகள்தான். அவை பெரும்பாலும் தவறான அறிவுரைகளாகவே இருக்கும். முதலில் அவர்களின் உடலை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நல்லவிதமான தொடுதல் என்பவை எது, கெட்டவிதமான தொடுதல் என்பவை எவை என்ற புரிதல்கள் எல்லாம்,இந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் அறிவுறுத்தப்படவேண்டும். கலாசாரம், பாரம்பரியம் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு இந்த விஷயத்தை அணுகாமல், அடுத்த தலைமுறைக்கு இன்றைய சமூகத்தில் இருக்கும் ஆபத்துகளை எதார்த்தமான முறையில் நாம் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.” என்றார் உளவியல்பூர்வமான ஆலோசனைகளை கிராமத்தில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு அளித்துவரும் சி.ஆர். செலின்.

“”ஸ்டேட்-போர்டு, மெட்ரிகுலேஷன் போர்ட் என எல்லா வகையான கல்வி அமைப்பிலும் வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை வழங்குவதில் தவறில்லை. இதனால் எண்ணற்ற கிராமப்புற மாணவர்களுக்கு பெரிதும் பயன் விளையும். பொதுவாக மேல்தட்டு மக்கள் பெருவாரியாகப் படிக்கும் பள்ளிகளில், வளர் இளம் பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்கு “கவுன்சலிங்’ கொடுப்பதற்கென்றே தனியாக வசதி செய்திருப்பார்கள். வளர் இளம் பருவத்தினருக்கான கல்வியை தகுந்த அறிதலுடன் அறிவியல் பூர்வமான புரிதல்களுடன் கற்றுக்கொடுப்பதற்கு ஆசிரியர்கள் ஆத்மார்த்தமான பங்களிப்பை அளிக்கவேண்டும். அதேநேரத்தில் எல்லா பள்ளிகளிலும் நிச்சயமாக “புகார் பெட்டி’ வைக்கப்படவேண்டும். அவை மாவட்ட கல்வி அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். கல்வித் துறையில் ஜனநாயகத்தின் வெளிப்பாடாகவே இதை வலியுறுத்துகிறோம்.” என்றார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் செல்வா.

“”பட்டாம்பூச்சியின் மேல் கல்லை வைப்பது போன்ற செயல்தான் இது. நாகரிகத்தில் நம்மை விட முன்னேறிய நிலையில் இருக்கும் மகாராஷ்டிரம் மாநிலத்திலேயே இந்தச் செக்ஸ் கல்விக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளுக்கு, அன்னிய நாடுகளின் இத்தகைய கல்வி முறைகள் தேவையே இல்லை. நம் வீடுகளிலேயே நாம் காலம்காலமாக கடைப்பிடிக்கும் ஒழுக்கமுறைகள் அப்படியேதான் இருக்கின்றன. இத்தகைய செக்ஸ் எஜுகேஷன்களால் தேவையில்லாத சந்தேகங்கள்தான் மாணவர்களிடேயே ஏற்படும். அப்படி பால் ரீதியான சந்தேகத்தை செக்ஸ் எஜுகேஷன் தெளிவுபடுத்துவதாகவே இருக்கட்டும். ஆறாவது முதல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இது தேவையில்லாத தெளிவுதானே? குழந்தைகள் பால் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாகும் கொடுமையைக் காரணம் காட்டி செக்ஸ் எஜுகேஷனை ஆதரிக்க முடியாது. வெளிநாடுகளில் கூட இத்தகைய செக்ஸ் எஜுகேஷன் எதிர்மறையான விளைவுகளையே அளித்திருக்கிறது. இந்த கல்வித் திட்டத்துக்குப் பின், முறைகேடான பால் உறவுக்குப் பின் காலை வேளையில் கர்ப்பத் தடைக்காக தயாரிக்கப்பட்ட மாத்திரைகளின் விற்பனையும், அதையும் தாண்டி இளம் குழந்தைத் தாய்மார்களின் எண்ணிக்கையும்தான் செக்ஸ் எஜுகேஷனால் வெளிநாட்டிற்கு கிடைத்த பரிசு என்பது “ரெட் அலர்ட்’ என்னும் புத்தகத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவர்களுக்கே பதினெட்டு வயது ஆனவுடன்தான் அனாடமி வகுப்புகள் நடக்கின்றன. ஆறாம் வகுப்பிலேயே இதைத் தெரிந்து கொள்ளட்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?” என்றார் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை செüந்தரராசன்.

“”அடலசன்ட் எஜுகேஷன் புரோக்ராம் என்பது செக்ஸ் எஜுகேஷன் அல்ல என்பதை சி.பி.எஸ்.இ.-யின் அதிகாரப்பூர்வமான இணையத்தளத்திலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இன்னமும் இதற்கான பாடத்திட்டங்கள் வரையறுக்கப்படவில்லை. இந்த ஆண்டே பள்ளிகளில் இந்தத் திட்டத்தை தொடங்குவார்களா என்றும் தெரியாது. அதற்குள் இவ்வளவு எதிர்ப்புகள்.” என்றார் டி.ஏ.வி. பள்ளியின் முதல்வரான டாக்டர் சதீஷ்.

– எந்தத் திட்டமாக இருந்தாலும் அதில் சாதகமான விஷயங்களும் பாதகமான விஷயங்களும் நிச்சயம் இருக்கும். அதிலிருக்கும் குறைகளைப் போக்கிவிட்டால் எல்லாத் திட்டங்களும் செயல்படுத்தப்படும் திட்டங்கள்தான்.

Posted in A, abuse, adult, adulthood, Adults, AIDS, Awareness, Biology, Boy, Brain, Censor, Chat, Children, Cinema, Computer, Condom, Controversy, Culture, Development, discussion, Education, Exposure, Female, Formal, Gentleman, Girl, Glamour, Health, HIV, Imagination, Insights, Intercourse, Interview, Issue, Kid, Kiss, Lady, Love, Lust, male, masturbate, masturbating, Mature, Media, menstruation, MMS, Movies, NC-17, Opinions, Period, PG, Physchology, PMS, Private, Rape, Rating, Sex, SMS, solutions, Students, Suggestions, Tamil, Teachers, Teen, Teenage, Textbooks, Thamizh, TV, UNICEF, Violence, VT, Vulgar, WHO | Leave a Comment »

State Chennai Metropolitan Transport Corporation – Opportunity for Improvements

Posted by Snapjudge மேல் ஜூன் 12, 2007

பிரச்சினை: ஓரம்போ… ஓரம்போ!!

க. ஆனந்த பிரபு

டபுள் டக்கர், வெஸ்டி புல், பளபளக்கும் நீல, சிவப்பு பஸ்கள் என புதுப்புது பஸ்களாகப் பறக்க விட்டாலும், கடைசி மூச்சை விடுவதற்காக காத்திருக்கும் “தள்ளுராஜா… தள்ளு’ பஸ்களும் சென்னையில் அதிகம் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.

அவை டெர்மினஸிருந்து முக்கி முனகிப் புறப்பட்டு லொடக்லொடக்கென்று ஓடி, போகிற வழியில் பிரேக் டவுனாகி வேறு பஸ் பிடித்து போவதற்குள் இன்டர்வியூவே முடிந்துபோகிற சோக அனுபவங்களும் பலருக்குத் தொடரத்தான் செய்கிறது.

ஒரு கற்பனைக்காக, எல்லாருமே புகைபிடிப்பதை விட்டு விட்டாலும், பஸ்கள் புகைபிடிப்பதை விடாது போலிருக்கிறது.

தேய்ந்துபோன டியூப் அடிக்கடி பஞ்சராகிக்கொண்டே இருப்பது போல போக்குவரத்துறையில் மட்டும் இதுபோன்ற கஷ்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க காரணம் என்ன?

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அன்பழன் சொல்கிறார் :

சென்னை மாநகரத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 554 பஸ்கள் இருக்கின்றன. இதில் சுமார் ஆயிரத்து 700 முதல் ஆயிரத்து 800 பஸ்களே இயங்கும் நிலையில் உள்ளன. மீதமுள்ள சுமார் 700 பஸ்கள் பழுதடைந்து இயங்காத நிலையில் உள்ளன.

மத்திய அரசு போக்குவரத்துச் சட்டத்தின்படி ஒவ்வொரு பேருந்தும் அதிகபட்சமாக 6 லட்சம் கிலோ மீட்டர் அல்லது 6 ஆண்டு காலம் மட்டுமே இயக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்துப் பஸ்களும், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், 6 லட்சம் கிலோ மீட்டரைத் தாண்டியும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதன் காரணமாகவே மாநகர பஸ்கள், பாதி வழியிலே நின்று விடுவதும், நிறைய பஸ்கள் புகைகளைக் கக்குவதுமாக இருக்கிறது. இது பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது.

மாநகரப் பேருந்துகளைப் பராமரிக்க போதுமான அளவு ஊழியர்கள் இல்லாமையாலும் போதுமான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இல்லாமையாலும் போக்குவரத்து கழகம் தினக்கூலி அடிப்படையில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி நடத்தி வருகிறது.

இதுமட்டுமல்லாமல் பேருந்துகளுக்கு ஏற்ற உதிரிப்பாகங்களும் இல்லை. அப்படியிருந்தாலும் அவற்றின் தரம், நிலைப்புத்தன்மை வெறும் பெயரளவிலேயே இருக்கிறது.

1970-ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ஒரு ஆண்டுக்கு ஒரு வண்டிக்கு 7.5 பேர் வீதம், பணியாளர்களை நியமிக்கப் பட வேண்டும் என்று அப்பொழுதே மத்திய அரசால் அமைக்கப்பட்ட பட்டாபிராமன் குழு பரிந்துரை செய்தது. ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் ஆள் குறைப்பின் காரணமாக அதை ஒரு வண்டிக்கு ஒரு நபர் வீதம் குறைத்து 6.5 பேர் வீதம் பணியாளர்களை மட்டும் வைத்து இன்றளவும் இயக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பலமுறை எழுத்து மூலமாகவும், போராட்டம் மூலமாகவும் எடுத்துக்கூறியும் புதிதாகப் பணியாளர்களை நியமிக்கத் தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது.” என்கிறார் அவர்.

இவரின் குரல்போலவே ஒரு பேருந்தில் பயணிக்கிறபோது நாம் கேட்ட சில ஆதங்கக் குரல்களையும் இங்கே தருகிறோம்:

“”பஸ் டிக்கெட் விலை ஏத்தலைன்னு சொல்லுறாங்க. ஆனா சாதா கட்டண பஸ்ûஸக் கண்ணுலையே காணோம். கூடுதல் காசு கொடுத்து போறதைத் தவிர எங்களுக்கு வேற வழி என்ன இருக்கு?” என்றனர் கோயம்பேட்டில் காய்கறி மார்க்கெட்டிற்குப் போகும் இரு பெண்கள். இவர்களின் பேச்சைக் கேட்டு பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் ஆவேசத்தோடு, “”ராத்திரி பத்து மணிக்கு மவுண்ட்ரோடே கூட பஸ் இல்லாம அஸ்தமித்துப் போகிறது. ஒன்பதரைக்கே நைட் சர்வீஸ் ஆரம்பித்து ரெட்டைப் படி பிடுங்கிறது என்ன நியாயம்? எங்கே கூட்டம் அதிகம் இருக்கிறதோ அங்க குறைவான பஸ்ûஸ விடுறாங்கன்னா பாருங்களேன். தொழிலாளர் கூட்டம் நிரம்பி வழியும் அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து தாம்பரத்துக்குப் போக ஒரே ஒரு பஸ்தான். அதுவும் ராத்திரியிலதான் தெரியுமா?” என்று உரக்கக் கத்தினார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொரும் தங்கள் சோகக் கதைகளை ஆவேசமாகச் சொல்லிக்கொண்டே இருந்தனர். லொடக்லொடக் என பஸ் போய்க்கொண்டே இருந்தது.

—————————————————————————————————

தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் டவுன் ஸ்களில் டிக்கெட் எந்திரம் அறிமுகம்

சென்னை, ஜுலை. 17-

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. ஓட்டை உடைசலான பஸ்கள் ஒதுக்கப்பட்டு நவீன சொகுசு பஸ்கள் விடப்பட்டுள்ளன.

பயணிகள் நீண்ட தூரம் சொகுசாக பயணம் செய்ய ஏதுவாக `அல்ட்ரா டீலக்ஸ்’ பஸ்கள் விடப்பட்டுள்ளது.

டவுன் பஸ்கள் சொகுசு இருக்கைகளுடன் தற்போது விடப்படுகின்றன. சென்னை யில் புதிதாக விடப்பட்டுள்ள டவுன் பஸ்கள் அனைத்திலும் நவீன தொழில்நுட்பத்துடன் புகையை வெளியேற்றாத பாரத் நிலை மூன்று மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திரா, கர்நாடக, கேரளா மாநில அரசு போக்குவரத்து கழகங்களில் கண்டக்டர்கள் டிக்கெட் கையால் எழுதியோ, அச்சடித்த டிக்கெட்டை கிழித்தோ கொடுப்பது இல்லை. சாப்ட் வேர் பொருத்தப்பட்ட கையடக்கமான சிறிய எலக்ட்ரானிக் எந்திரம் மூலம் டிக்கெட்

வழங்கப்படுகிறது.இந்த முறையை தமிழக அரசு போக்குவரத்து கழகங் களிலும் பின்பற்ற அமைச்சர் கே.என்.நேரு முடிவு செய்தார். அதன்படி பரீட்சார்த்த முறையில் சென்னையில் 5 பஸ்களில் டிக்கெட் எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.

கண்டக்டர் எளிதாகவும், விரைவாகவும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க உதவும் இந்த மெஷினின் மதிப்பு ரூ.8000. அரை கிலோ எடை கொண்ட மெஷினில் உள்ள பட்டனை அழுத்தினால் டிக்கெட் வெளிவரும்.

ஒவ்வொரு `ஸ்டேஜ்’-க்குரிய கட்டணம் அதில் சாப்ட்வேர் மூலம் பதிவு செய்யப்பட்டு இருக்கும். பயணிகள் எத்தனை டிக்கெட் கேட்டாலும் விரைவாக கொடுக்க முடியும்.

ஒவ்வொரு ஸ்டேஜ்க்கு உரிய கட்டணமும் தானாக மாறிக் கொண்டே இருக்கும். தனி நபருக்கு டிக்கெட் கொடுப்பதாக இருந்தாலும் குடும்பத்துக்கும் மொத்தமாக டிக்கெட் கொடுப்பதாக இருந் தாலும் இந்த முறை மிக எளிது. ஒரே டிக்கெட்டில் எத்தனை பேர் பயணம் செய்யவும் அதில் குறிப்பிட முடியும்.

கண்டக்டர் ஒவ்வொரு ஸ்டேஜிலும் வினியோகம் செய்யப்பட்ட டிக்கெட் எத்தனை, ஏறிய பயணிகள் விவரம் போன்றவற்றை எழுத தேவையில்லை. மெஷின் மூலம் டிக்கெட் வழங்கும் போது அதில் அனைத்து விவரங்களும் பதிவாகி விடும். டிக்கெட் பரிசோதகர் கூட மெஷினில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால் பயணிகள் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்ற விவரம் தெரிந்து விடும்.

டவுன் பஸ்களில் எவ்வளவு பேர் பயணம் செய்தாலும் நவீன டிக்கெட் மெஷின் மூலம் விரைவாக டிக்கெட் கொடுக்க இயலும்.

இந்த புதிய திட்டத்தை அனைத்து போக்குவரத்து கழகங்களிலும்நடை முறைப்படுத்த அமைச் சர் கே.என்.நேரு உத்தர விட்டுள்ளார். முதல் கட்டமாக 10 ஆயிரம் டவுன் பஸ்களில் அறிமுகம் செய்யப்படுகிறது.

அதைத்தொடர்ந்து புறநகர் பஸ்களிலும், விரைவு பஸ் களிலும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட உள்ளது. பெங்களூர், ஐதராபாத் போன்ற நகரங்களில் இருந்து டிக்கெட் மெஷின் கொள்முதலுக்கான டெண்டர் கோரப்படுகிறது.

இன்னும் ஒரு மாதத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் எந்திரம் கொடுக்கும் போது, அதை கையாள்வது குறித்த பயிற்சியும் கண்டக்டர்களுக்கு அளிக் கப்படும். இந்த மெஷின் மூலம் 3 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை ஒரு நாளைக்கு வழங்க முடியும்.

————————————————————————————————–

நிறுத்தத்தில் நிற்க முடியாமல் பயணிகள் ஒதுங்கிச் செல்கின்றனர்.

ஆக்கிரமிப்புகளின் பிடியில் பஸ் நிறுத்தங்கள்

சென்னை, ஆக. 30: சென்னை நகரில் பெரும்பாலான பஸ் நிலையங்களும், நிறுத்தங்களும் ஆக்கிரமிப்புகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன.

பஸ் நிறுத்தங்களில் இருந்தும் விலகி நிற்கும் பயணிகள், பஸ்களை விரட்டிச் சென்று பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்த பஸ் நிறுத்த ஆக்கிரமிப்புகளால், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தினத்தோறும் அவதிப்படுகின்றனர்.

சென்னை நகரில் 1,200-க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதில், மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பவை 364. மீதமுள்ளவை போக்குவரத்துத் துறையின் கீழ் வருகின்றன.

ஆனால், உண்மையில் இவற்றில் பெரும்பாலான பஸ் நிறுத்தங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் சிக்கியிருக்கின்றன.

கடைகளும், வாகனங்களும்… சென்னையில் ஜாம்பஜார், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல இடங்களில் கடைகளை ஒட்டியபடி, பஸ் நிறுத்தங்கள் அமைந்துள்ளன.

இதனால், கடைகளுக்கு வருவோர் மற்றும் அந்தக் கடைகளைச் சேர்ந்தவர்கள் தங்களது வாகனம் மற்றும் பொருள்களை பஸ் நிறுத்தத்திலேயே விட்டுச் செல்கின்றனர். இதனால் பஸ்

“”பஸ் நிறுத்தங்களை பைக்குகள் மட்டும் ஆக்கிரமிக்கவில்லை. ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களும் ஆக்கிரமிக்கின்றன. குறிப்பாக, எழும்பூர், கடற்கரை ரயில் நிலைய பஸ் நிறுத்தங்களில் நிற்பது ஆட்டோக்கள் தான்.

இதைக் காரணமாக வைத்துக் கொண்டு, பஸ் டிரைவர்கள் பஸ்ûஸ சிறு தூரம் தள்ளி நிறுத்துகின்றனர். இதை எதிர்பார்க்காத பயணிகள் ஓடிச் சென்று ஏறுகின்றனர். இன்னும் சில பஸ்கள் சாலையின் நடுவில் நிறுத்தப்படுகின்றன. இதனால், “திடீர்’ போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது” என்றார் ரயில் – பஸ் பயணிகள் நலச் சங்க தலைவர் ரவிக்குமார்.

குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட பெண்கள் அதிகம் வரும் இடங்களுக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தங்களில், அவர்கள் அமர்வதற்குக்கூட இடம் இருப்பதில்லை.

பஸ் நிலையங்களில்… பஸ் நிறுத்தங்கள் மட்டுமின்றி, சென்னை நகரின் சில பஸ் நிலையங்களும் கடும் ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கின்றன. பிராட்வே பஸ் நிலையத்தின் உள்ளே இப்போது ஏராளமான கையேந்தி பவன்கள்.

கடையில் உள்ளவர்கள் தங்களது பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களைக் கழுவி பயணிகள் நிற்கும் இடத்திலேயே ஊற்றுகின்றனர். பஸ் நிலையத்தில் பெரும்பாலான கடைகள் இந்த முறையைத்தான் பின்பற்றுகின்றனர். இதைக் கண்டு, மிரளும் பயணிகள் வேறு இடம் நோக்கிச் செல்கின்றனர். பஸ் வரும் நேரத்தில் ஓடிவந்து ஏறுகின்றனர்.

பஸ் நிறுத்தங்கள் இல்லாமல் அவதி: பூந்தமல்லி, குமணன்சாவடி, போரூர் போன்ற சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் பஸ் நிறுத்தமே இல்லை என்பதும் மற்றொரு குறை.

காஞ்சிபுரம், வேலூர் போன்ற ஊர்களுக்குச் செல்ல பூந்தமல்லி விக்னேஸ்வரா தியேட்டர் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் காத்திருக்கின்றனர்.

இந்த நிறுத்தத்தில் நிழற்குடை உள்பட எந்த அடிப்படை வசதியும் கிடையாது. வெட்ட வெளியில் தான், நிற்க வேண்டிய அவலம் என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள்.

புதிய பஸ் நிறுத்தங்கள் எப்போது?: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பஸ் நிறுத்தங்களை இடித்து விட்டு, புதிய பஸ் நிறுத்தங்கள் அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கிறார் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி.

இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போதுதான் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

இந்த விஷயத்தில் மாநகராட்சியின் பணிகள் மந்தம் என்றால், பெரும்பாலான பஸ் நிறுத்தங்களைக் கையில் வைத்திருக்கும் போக்குவரத்துத் துறையோ கவலையே படாமல் இருக்கிறது. பஸ் பயணிகளின் பிரச்னையை புரிந்து கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும் துறைகளை “உசுப்பி’ விடுமா அரசு நிர்வாகம்?.

———————————————————————————————–
ஏ.சி. வால்வோ பஸ்களில் சூப்பர் டீலக்ஸ் பஸ்களைவிட இரண்டரை மடங்கு கட்டணம்

சென்னை, செப். 13: தமிழகத்திலேயே முதன் முறையாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அதி நவீன குளிர்சாதன “வால்வோ’ பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

சென்னை கோயம்பேடு புறநகர் பஸ்நிலையத்தில் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த பஸ் சேவையைத் தொடங்கி வைக்கிறார். தடம் எண் 21ஜி (தாம்பரம்-பிராட்வே), தடம் எண் 19ஜி (பிராட்வே-கோவளம்), தடம் எண் 70 (தாம்பரம்-ஆவடி), சென்னை விமான நிலையம்-பிராட்வே உள்ளிட்ட வழித்தடங்களில் முதல் கட்டமாக 5 பஸ்களும், பின்னர் 5 பஸ்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

முதல்வர் பார்வை:

இந்த நவீன பஸ்களில் இரண்டு பஸ்கள் செவ்வாய்க்கிழமை மாநகரப் போக்குவரத்துக்கழக அலுவலகத்துக்கு அருகில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் புதன்கிழமை தலைமைச் செயலகத்துக்கு வந்த பஸ்களை முதல்வர் கருணாநிதி பார்வையிட்டார்.

ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என். நேரு, ஆர்க்காடு வீராசாமி, மாநகரப் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் ஆர். பாலசுப்பிரமணியன் உள்பட பலர் உடனிருந்தனர்.

இரண்டரை மடங்கு கட்டணம்:

ஏ.சி. பஸ்களில் சூப்பர் டீலக்ஸ் பஸ்களைக் காட்டிலும், இரண்டரை மடங்கு கட்டணம் வசூலிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ. 10-ம், அதிகபட்சம் ரூ. 50-ம் வசூலிக்கப்படும். ஒவ்வொரு வழித்தடத்திலும் இந்த பஸ்களை 12 நடைகள் இயக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்டிங் மெஷின்கள் அறிமுகம்:

இந்த பஸ்கள் அனைத்திலும் டிக்கெட் வழங்குவதற்கு “டிக்கெட்டிங் மெஷின்கள்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளன. படிப்படியாக அனைத்து மாநகர பஸ்களிலும் டிக்கெட்டிங் மெஷின்கள் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவீன கேமராக்கள்:

இந்த பஸ்ஸின் நடுப்பகுதி கதவு மற்றும் பின் பகுதியில் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் எல்.ஈ.டி. திரை டிரைவர் இருக்கைக்கு முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பஸ்ஸில் ஏறி, இறங்கும் பயணிகளையும், பின் பகுதியில் வரும் வாகனங்களையும் டிரைவர் கவனித்து, பஸ்ûஸ எளிதாக இயக்க முடியும்.

இந்த பஸ்களில் சென்சாருடன் கூடிய தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கதவுகள் மூடும்போது பயணிகளின் கை, கால், உடமைகள் சிக்கிக் கொண்டால் உடனே கதவுகள் தானே திறந்துவிடும்.

டிஜிட்டல் வழித்தட பலகைகள்:

பஸ்ஸின் முன் பகுதி, பின் பகுதி மற்றும் இடது பக்கவாட்டில் நவீன எல்.ஈ.டி. டிஜிட்டல் வழித்தடப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகளுக்கு சொகுசான பயணத்தை அளிக்கும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 41 இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

மொபைல் ரீசார்ஜ் செய்ய வசதி:

இந்த பஸ்களில் லேப்டாப் உபயோகிப்பவர்களுக்காக சிறப்பு வசதியும், மொபைல் ரீசார்ஜ் செய்துகொள்வதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளுக்கு அவ்வப்போது தகவல்களை அளிக்கும் வகையில் மைக் மற்றும் ஆம்பிளிபையர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இனிமையான இசை ஒலிக்கவும் நவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

45 டிரைவர்களுக்கு பயிற்சி:

தானியங்கி கியர் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட இந்த பஸ்களை திறம்பட இயக்குவதற்காக மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 45 டிரைவர்களுக்கு, வால்வோ நிறுவனம் 15 நாள்கள் பயிற்சி அளித்துள்ளது. இந்த டிரைவர்களுக்கு தொப்பியுடன் கூடிய தனிப்பட்ட சீருடை வழங்கப்பட்டுள்ளது.

இணையதள முன்பதிவு:

ஏ.சி. வால்வோ பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும் அதே நாளில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இணையதள முன்பதிவு முறையும் அறிமுகப்படுத்ப்பட உள்ளது.

Posted in Analysis, Ashok Leyland, Auto, Automation, Bus, car, Chennai, Commute, Commuter, Conductor, Driver, Engines, Environment, Express, Fares, Govt, Home, Improvements, Insights, Internet, Interview, Madras, Maintenance, Metro, Motors, MTC, Nehru, Non-stop, Nonstop, Office, Operations, Opportunity, Pallavan, Pollution, PP, Private, Public, Railways, Repair, Rikshaw, Share autos, solutions, Spare parts, Spares, Suburban, Suggestions, TATA, Terminus, Ticket, Tickets, Trains, Transport, Transportation, Volvo, Work | Leave a Comment »

V Muthiah – State of Cooperative societies – Backgrounder, Elections, Law amendments

Posted by Snapjudge மேல் ஜூன் 8, 2007

தேவை மாதிரி கூட்டுறவு சட்டம்

வி. முத்தையா

இந்தியாவில் சுமார் 6 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 23 கோடி உறுப்பினர்கள் அங்கம் வகித்து வருகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

உலகிலேயே மிகப்பெரிய சமூக, பொருளாதார இயக்கமாக கூட்டுறவு இயக்கம் விளங்கி வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் குறிப்பாக வேளாண் கடன், இடுபொருள், உரம், மீன்வளம், பால்வளம், சர்க்கரை, வேளாண் விளைபொருள்கள் கொள்முதல் மற்றும் விற்பனை ஆகிய பல துறைகளின் வளர்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.

தமிழகத்தில் விவசாயிகளுக்குக் கடன் வழங்குவது, பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்துவது ஆகியவற்றில் கூட்டுறவு சங்கங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

தமிழகத்தில் 1.9 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 1.7 கோடி அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 27 ஆயிரம் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு பொதுநலநோக்கத்துடன் அறிவித்துவரும் மக்கள் நலத் திட்டங்களை சமூக அக்கறையோடும் செம்மையாகவும் செயல்படுத்துவதில் கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

அரசின் திட்டங்களை, அரசுக்கு அதிகமான நிதி இழப்பு ஏற்படாத வகையில் இவை செயல்படுத்தி வருகின்றன. அதேசமயம் தனக்கு இழப்பை ஏற்படுத்திக் கொண்டு அரசின் பிரதிநிதியாக நுகர்வோருக்கு சேவை செய்து வரும் இந்தக் கூட்டுறவுகளுக்குப் பதிலாக வேறு மாற்று முறை எதுவும் நிச்சயம் அரசுக்குக் கிடைக்க முடியாது.

இக் கூட்டுறவு சங்கங்கள் அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துகின்றன என்பது அகில இந்திய அளவில் பாராட்டப்படக் கூடிய விஷயமாகும்.

தமிழகத்தில் மக்கள் இயக்கமாக வளர்ந்த கூட்டுறவு இயக்கம் அரசியல்வாதிகளுக்கு வெஞ்சாமரம் வீசும் சில சுயநல அதிகாரிகளின் கைப்பிடியில் சிக்கி சீரழிந்து வந்தது. அரசியல் குறுக்கீடுகள், தலையீடுகள் காரணமாக கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயகப் பண்பை இழந்துவிட்டன.

பல கோடி மதிப்புள்ள சொத்துகளை தன்னகத்தே கொண்டு சிறப்பாகச் செயல்பட்ட பல கூட்டுறவு சங்கங்கள் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் தள்ளப்பட்டு தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. பணியாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, மறுக்கப்பட்டு செயல் இழந்த நிலையில் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கூட்டுறவு அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நல்ல செய்தியாகும். கடந்த 1999-ல் நடைபெற்ற தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்கிற புகார் எழுந்ததையும் கருத்தில்கொண்டு தற்போதைய தேர்தல் முறையில் மாற்றம் செய்யவேண்டியது மிக அவசியமாகும்.

அகில இந்திய கூட்டுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு தன்னாட்சியைக் கொண்டு வருவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதைச் செய்வோம் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.

தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் நிர்வாகம் செய்யும்போது அரசின் தேவையற்ற தலையீட்டைத் தடுக்க சட்டப்பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். தேவையானால் அரசியலமைப்புச் சட்ட உத்தரவாத்திற்காக மத்திய அரசிடம் முறையிட வேண்டும்.

மேலும் கூட்டுறவு சங்கங்களில் தன்னாட்சியை உறுதிப்படுத்த பிரகாஷ் குழுவினால் 1991-ல் உருவாக்கப்பட்ட “மாதிரி கூட்டுறவு சட்டம்’ தமிழகத்தில் உடனடியாக சட்டமாக்கப்பட வேண்டும். மாதிரி கூட்டுறவு சட்டத்தில் பல நல்ல அம்சங்கள் உள்ளன. இவை கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயகபூர்வமாக செயல்படுவதை உறுதிபடுத்துவதாக இருக்கும்.

கூட்டுறவு சங்கங்களில் பதிவாளரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. இது ஒரு ஒழுங்குமுறைச் சட்டம் என்பதைவிட இயக்குவிக்கும் சட்டமாக இருக்கும். தணிக்கை அறிக்கை அங்கத்தினர்களுக்கு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அனுமதியின்றி சங்கத்தைக் கலைக்க பதிலாளருக்கு அதிகாரம் கிடையாது.

மேலாண்மை, சட்டம், வங்கியியல், கணக்கியியல், விவசாயம், பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான புலமை பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளில் மூன்று பேர் இடம்பெற்றிருக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் அரசின் நிறுவனம் அல்ல என்பதை மாதிரி கூட்டுறவு சட்டம் தெளிவுபடுத்துகிறது. நிர்வாகிகள் மீது பொறுப்பு சுமத்தப்படுகிறது. கூட்டுறவு நிறுவனம் அங்கத்தினர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்கள் தேர்வு செய்யும் நபர்கள் பொறுப்பு ஏற்பவர்களாகவும், பதில் சொல்ல கடமைப்பட்டவர்களாகவும், அதிகாரம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.

சுயநல அரசியல் போக்கு வளர்ந்துவிட்ட இக் காலகட்டத்தில் கூட்டுறவு அமைப்புகளைப் பாதுகாக்க “மாதிரி கூட்டுறவு சட்டத்தை’ அவசியம் சட்டமாக்க வேண்டும்.

கூட்டுறவு அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற இருப்பதை வரவேற்கும் அதேநேரத்தில் “மாதிரி கூட்டுறவு சட்டத்தை’ சட்டமாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் பரந்து, விரிந்த கட்டமைப்புடன் இயங்கி அங்கத்தினர்களுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் அமைப்பாக கூட்டுறவு அமைப்புகள் செயல்பட இயலும்.

(கட்டுரையாளர்: பொருளாளர், ஏ.ஐ.டி.யு.சி. கூட்டுறவு தொழிலாளர் கூட்டமைப்பு)

——————————————————————————————–

கூட்டுறவே நாட்டுயர்வு!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

இந்தியாவின் வளர்ச்சிக்கு, கூட்டுறவுத் துறை ஒரு முக்கிய காரணியாகத் திகழ்கின்றது. ஆனால் தமிழகத்தில் நடந்த கூட்டுறவுத் தேர்தல்களில் ஆளும் திமுகவின் அத்துமீறல்களால் முறையாகத் தேர்தல் நடக்கவில்லை என அதன் தோழமைக் கட்சிகள் தீவிரமாக எதிர்த்துப் போராடின. ஏற்கெனவே அதிமுகவும் மதிமுகவும் இந்தத் தேர்தலைப் புறக்கணித்தன. முதல்வர் அனைத்துக் கூட்டுறவுத் தேர்தல்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். இதுவே அந்தத் தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததற்கான ஆதாரமாகிவிட்டது. திரும்பவும் எப்போது தேர்தல் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மாவீரன் திப்புசுல்தான் காலத்தில் கூட்டுறவு முறையில் பண்டக சாலைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் பொருள்கள் நியாய விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டன. கூட்டுறவு அமைப்புக்கு தன்னுடைய குடிமக்களையே உறுப்பினர்களாக்கி அவர்களே முன்னின்று நடத்தும் கூட்டுறவு முறையைக் கொண்டு வந்தார் திப்புசுல்தான்.

இந்திய விடுதலைக்கு முன்பே – 1904-ம் ஆண்டில் இப்போதைய திருவள்ளுவர் மாவட்டத்தில் திரூர் என்ற கிராமத்தில் கூட்டுறவுச் சங்கம் இந்தியாவிலேயே முதன்முதலில் தொடங்கப்பட்டது. சர்.டி. ராஜகோபாலாச்சாரியார் என்ற அதிகாரி இச்சங்கத்தின் முதல் பதிவாளராகப் பொறுப்பேற்றார். தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பை உருவாக்கக் காரணமாக இருந்தவர் கூட்டுறவுத் தந்தை என்று அழைக்கப்படும் டி.ஏ. ராமலிங்கம் செட்டியார் ஆவார்.

ஏழைகள் தன்னந்தனியாகத் தங்களின் நலனுக்காக காரியத்தைச் செய்ய இயலாது. அவர்கள் கூட்டுமுயற்சியாகச் செய்தால்தான் வெற்றிபெற முடியும். எனவே, கூட்டுறவு என்ற உறவுமுறை வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஊர்கூடி தேர் இழுத்தால் தேர் நகரும். சிறு உளியால்தான் சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. சிறுதுளிதான் பெரு வெள்ளம். இதன் அடிப்படையில்தான் கூட்டுறவு இயக்கம் பிறந்தது. இங்கிலாந்தில் முதன் முதலாக 1844-ல் ராக்டேல் என்ற பகுதியில் 28 நெசவாளர்கள் சேர்ந்து 28 பவுண்ட் மூலதனத்தில் கூட்டுறவு நுகர்வோர் அமைப்பை உருவாக்கினர்.

இன்றைக்கு கூட்டுறவு அமைப்பு சகல துறைகளிலும் இயங்கி வருகிறது. விவசாயிகள், நெசவாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், ஆடு வளர்ப்போர், கரும்பு உற்பத்தியாளர்கள், வீட்டுவசதி, கதர் கிராமத் தொழில், தொழிலாளர்கள், மீனவர்கள், மகளிர் என – அனைத்துத் தரப்பினரும் தங்களுடைய நலன், பாதுகாப்பு கருதி தங்களுக்குத் தாங்களே கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். நேருவின் கலப்புப் பொருளாதாரத்தில் கூட்டுறவு இயக்கம் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது.

நாடு விடுதலை பெற்றபின், கூட்டுறவுச் சங்கங்கள், அடிப்படையில் கிராமப்புற விவசாயிகளின் நலனை மனதில்கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கப்பட்டன. வேளாண் தொழிலுக்கு நீண்டகால, குறுகியகாலக் கடன்கள் வழங்கப்பட்டன. கூட்டுறவுத்துறை விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்கியது.

1904-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கூட்டுறவுச் சட்டம் 1961, 1963, 1983 என, பல காலகட்டங்களில் முக்கியத் திருத்தங்களைப் பெற்று இச்சட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் இந்த அமைப்பு செம்மையாகச் செயல்பட பலர் காரணமாகத் திகழ்ந்தனர்.

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தைத் தொடங்கிய வ.உ. சிதம்பரனார், கூட்டுறவு முறையில் அந்த அமைப்பை நடத்தினார். முன்னாள் முதல்வர் ராஜபாளையம் பி.எஸ். குமாரசாமி ராஜா, நெல்லை மேடை தளவாய் குமாரசாமி முதலியார், ஈரோடு ஏ.கே. சென்னியப்ப கவுண்டர், சென்னிமலை எம்.பி. நாச்சிமுத்து, சென்னை டாக்டர் நடேசன், மதுராந்தகம் வி.கே. ராமசாமி முதலியார், வேலூர் பி.எஸ். ராஜகோபால நாயுடு, தஞ்சை நாடிமுத்து பிள்ளை, வேலூர் பக்தவத்சல நாயுடு, மணலி ராமகிருஷ்ண முதலியார், பொள்ளாச்சி மகாலிங்கம் என பலர் கூட்டுறவு இயக்கம் சிறப்பாக இயங்க 1950களில் அரும்பாடுபட்டனர்.

மீனவர் நலனில் அக்கறை கொண்ட சிங்காரவேலர், தொழிலாளர்களின் நலனுக்காகப் போராடிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி. ராமமூர்த்தி, அனந்தநம்பியார், எம். கல்யாணசுந்தரம் போன்றோர் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வளர பெரும்பணியாற்றினர்.

கூட்டுறவுச் சட்டப்படி, சங்கத்தின் தலைவராக ஒருவர் இரண்டு முறைதான் பொறுப்பு வகிக்க முடியும் என்ற நிலை மாற்றப்பட்டது. 1983-ம் ஆண்டு சட்டம், கூட்டுறவுச் சங்கம் சுயஅதிகாரத்துடன் செயல்பட வழிவகுத்தது. 1988-ல் திருத்தப்பட்ட இச் சட்டம், செயல்படாத சங்கங்களை மாநில அரசு கலைக்கும் உரிமையை அளித்தது. கூட்டுறவு அமைப்புகள் ஆரம்ப காலங்களில் செயல்பட்ட மாதிரி தற்பொழுது இல்லை.

சுயநல விரும்பிகளின் பொறுப்புக்கு வந்தன. “”கூட்டுறவு அமைப்புகளுக்கு முழு சுயாட்சி அளிப்பதற்கான திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவரத் தயாராக உள்ளது” என்று கூட்டுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் உறுதி அளித்துள்ளார்.

இந்த அமைப்புகளுக்கு, பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தன்னாட்சி போன்ற உரிமைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். கலைக்கப்படும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு காலந்தாழ்த்தாமல் தேர்தல்களை நடத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் கூட்டுறவு அமைப்புகள் திறம்படச் செயல்பட்டால் பொருளாதாரம், மக்களின் நலன், ஜனநாயகம் தழைக்கும். அரசியல் தலையீடு இல்லாமல் உறுப்பினர்களுடைய விருப்பத்தின்பேரில் கூட்டுறவு இயக்கங்கள் செயல்பட வேண்டும்.

கூட்டுறவு இயக்கம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் அமைப்பு மட்டுமல்ல; கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு பல பாடங்களைப் போதிக்கும் போதிமரமுமாகும்.

கூட்டுறவின் வெற்றி, உறுப்பினர்களின் நாணயத்தைப் பொருத்து அமைகிறது; அது சங்கங்களின் எண்ணிக்கையைப் பொருத்ததல்ல என்றார் காந்தியடிகள். கூட்டுறவு அமைப்புகளின் ஊழல், அதிகார முறைகேடுகள், திட்டமிட்டு நடைபெறுகின்றன. இம்மாதிரியான சீர்கேடுகளைக் களையும்வண்ணம் கூட்டுறவு அமைப்புகள் செயல்பட, அரசு மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அக்காலத்தில், கூட்டுறவுத் துறையில் பொறுப்பேற்ற நிர்வாகிகள், தங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது தங்களுடைய சொந்தப் பணத்தையே பயன்படுத்தினர். ஈரோடு எஸ்.கே. சென்னியப்ப கவுண்டர் ஒன்றுபட்ட கோவை மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்தார்.

காந்தியவாதியான அவர், ஈரோட்டிலிருந்து கோவைக்குச் சென்று கூட்டுறவுப் பணிகளை ஆற்றும்பொழுது, தம்முடைய சொந்தப் பணத்தைக் கொடுத்து, எளிமையான உணவை வாங்கிவரச் சொல்வார். கூட்டுறவுத் துறை வாகனங்களில் தன் குடும்பத்தாரை ஏற்ற மாட்டார். இவரைப்போன்று, மேடைதளவாய் குமாரசாமி முதலியாரும், தமது உறவினர் ஒருவர், சட்டத்திற்குப் புறம்பாக உதவி கேட்டு வந்தபோது, அலுவலகத்தை விட்டு வெளியே செல்லுமாறு கண்டிப்புடன் கூறிவிட்டார். ஆனால் இன்றைக்குப் பொறுப்பில் உள்ளவர்கள், கூட்டுறவு அமைப்பின் கணக்கிலேயே தமக்கு மட்டுமல்லாமல், தம்முடைய பரிவாரங்களுக்கும் ஆடம்பரச் செலவுகளுக்காக மக்களின் பணத்தை வாரி இறைக்கின்ற காட்சிகளைப் பார்க்கிறோம்.

இப்போது, கூட்டுறவுத் துறையை அனைத்து வசதிகளையும் அள்ளித்தரும் காமதேனுவாகக் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறுகச் சிறுகச் சேர்த்து அமைக்கப்பட்ட அமைப்புகள், ஒழுங்கற்ற நிர்வாகிகள் பொறுப்பேற்பதால், சீரழிந்து வருகின்றன. எளியோர், வறியோர் எல்லோரும் சேர்ந்து சிரமப்பட்டு அமைத்த கூட்டுறவு முறையின் கண்ணியத்தைக் காக்க அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

Posted in Agriculture, amendments, Analysis, Backgrounder, Banks, channel, Citizen, Coop, Cooperative, Cooptex, Democracy, Distribution, Economy, Elections, Expenses, Farmer, Finance, Fish, Fishery, Grains, Help, Industry, Insights, Law, Leaders, Loan, Loss, Management, Members, milk, Op-Ed, Opinion, Paddy, Polls, Poor, Ration, RBI, revenue, sales, Society, solutions, SSI, Suggestions, TUCS | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to increase Sperm Count

Posted by Snapjudge மேல் மே 23, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடற்சூட்டால் வரும் கேடு!

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, சரத்பேட்டை- 602 103.

எனக்கு வயது 35. மனைவிக்கு வயது 22. மூன்று வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. எங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் புண்ணியம் இல்லை. எனக்கு விந்தணுக்கள் குறைவாக உள்ளது. சிறு குழந்தைகளைக் கண்டால் கண்களில் நீர் நிறைந்து விடுகிறது. ஏக்கமும் அழுகையும் கட்டுப்படுத்த முடியவில்லை. என் மனைவிக்கும் மாதவிலக்கு நாட்கள் அதிகமாக இருப்பதால், அவளுடைய உடல் நலம் தேறவும், என் உடல் நிலை கோளாறையும் சரி செய்ய என்ன வழி?

எஸ்.ராஜேஷ், மதுரை.

ஆண்கள் பலருக்கும் விந்தணு குறைபாடு இன்று அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு எனும் பூமியின் வெப்பம் அதிகரித்திருப்பதை ஒரு காரணமாகக் கூறுகின்றனர். மனிதனின் தனிப்பட்ட செயல்களாலும் உடற் சூடு அதிகரிக்கக் கூடும். புகைப் பழக்கம், மதுபானம் அருந்துதல், நிதானமற்ற பதட்டமான சூழ்நிலையில் அலுவல் வேலை, சிறு விஷயங்களுக்குக் கூட வீட்டில் கடும் கோபம் கொள்ளுதல், உணவில் அதிகம் காரம், புளி, உப்பு, காரம்மசாலா சேர்த்தல், ஆவக்காய், மாங்காய் ஊறுகாய் அதிகமாகச் சாப்பிடுதல், இரவில் அதிக நேரம் கண் விழித்தல், குழந்தை வேண்டுமே என்ற ஏக்கத்தில் அதிகமான தாம்பத்ய உறவு, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்காதிருத்தல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது பேதி மருந்து சாப்பிடாதிருத்தல் என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாம் உண்ணும் உணவு அனைத்தும் ஏழு தாதுக்களால் ஜீரணம் செய்யப்படுகின்றன. உணவின் சாரத்தை முதலில் பெறும் ரஸதாது தனக்கு வேண்டிய சாரத்தைப் பெற்று, கபத்தைக் கழிவாக வெளியேற்றுகிறது. அடுத்த சாரத்தை ரத்தம் ஜீரணம் செய்து தன் பகுதியைப் பெற்றுக்கொண்டு, பித்தத்தைக் கழிவாக வெளியேற்றுகிறது. மாமிசம் உணவின் சாரத்தை உறிஞ்சி, உடலின் உட்புற துவாரங்களில் கழிவைச் சேர்க்கிறது. மேதஸ் எனும் தாது தன் பங்காகிய உணவின் சாரத்தை உறிஞ்சி, வியர்வையைக் கழிவாக வெளியேற்றுகிறது. எலும்பு, உணவின் போஷகாம்சத்தைப் பெற்று நகம், தலைமுடி ஆகியவற்றைக் கழிவாகவும், மஜ்ஜை உணவுச் சத்தை உறிஞ்சி, தோல், கண் பகுதியில் எண்ணெய்ப் பசையைக் கழிவாகவும், இறுதியாக விந்து, உணவின் சாரத்தைப் பெற்று “ஓஜஸ்’ எனும் உடலின் சாராம்சத்தையும் ஏற்படுத்துகிறது. உண்ணும் உணவின் மிகவும் சூட்சமமான சாரத்தைப் பெறும் விந்து, அணுக்களை உற்பத்தி செய்வதில் முழுவதுமாக உணவை நம்பித்தான் இருக்கிறது. நிலம் மற்றும் நீரின் அம்சம் அதிகம் கொண்ட இனிப்புச் சுவை விந்தணுக்களின் உற்பத்திக்கு அதிக அளவில் உதவி செய்கிறது. அதிரஸம், பாயசம், சர்க்கரை கலந்த பாலுடன் உளுந்துக் கஞ்சி, உளுந்து வடை (பசு நெய்யில் பொரித்தது), சர்க்கரைப் பொங்கல் போன்றவை விந்தணுக்களை அதிகப்படுத்துபவை. கீழ்காணும் மூலிகை மருந்துகளை நாட்டு மருந்துக் கடையிலிருந்து வாங்கி நன்றாக அரைக்கவும்.

அமுக்கராக் கிழங்கு, பூனைக் காலி விதை, தண்ணீர்விட்டான் கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, பால் முதுக்கன் கிழங்கு, நெரிஞ்சில் விதை, அதிமதுரம், பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரப் பருப்பு.

மேற்கண்ட பருப்புகளையெல்லாம் வகைக்கு 100 கிராம். அரைத்ததை துணியால் சலித்து, கண்ணாடி பாட்டிலில் காற்று புகாதபடி மூடிவைக்கவும். 5 கிராம் சூரணத்தில் 10 மிலி பசு நெய்யும் (உருக்கி), 5 மிலி தேனும் குழைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிடவும். விந்தணுக் குறைபாட்டை இம்மருந்து தீர்க்கக் கூடும். தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிடவும்.

உங்கள் மனைவியின் மாதவிலக்கு நாட்கள் அதிகம் ஏற்படுவதற்கான காரணத்தை அறிவது நலம். இருப்பினும் பொதுவாக புஷ்யானுகம் சூரணம் சாப்பிட நல்லது. 5 கிராம் சூரணம் 1 1/2 ஸ்பூன் (7.5 மிலி) சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர், 1/2 ஸ்பூன் தேன் குழைத்து காலையில், மாலையில் உணவிற்கு 1 மணிநேரம் முன்பாகச் சாப்பிடலாம். சதாவரீகுலம், அசோகாரிஷ்டம், பலசர்ப்பிஸ், குமார்யாஸவம் போன்ற மருந்துகள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு கருப்பையின் வலுவை அதிகப்படுத்தலாம்.

Posted in Alternate, Ayurvedha, Birth, Child, conceive, conceiving, conception, Count, couple, couples, Expect, Female, fertile, fertility, Gene, Health, Help, male, Medicines, Natural, Parent, Pregnancy, Pregnant, Sex, Sperm, Suggestions, Swaminathan, Therapy | Leave a Comment »

Adoption process in India – Analysis, Backgrounder, Suggestions

Posted by Snapjudge மேல் மார்ச் 29, 2007

தளரட்டும் நிபந்தனைகள்

இந்தியக் குழந்தைகளைத் தத்தெடுப்பதில் வெளிநாட்டவர் பலருக்கு ஆசை உள்ளது. குறிப்பாக, இந்தியக் கலாசாரம், ஆன்மிகம் இவற்றால் கவரப்பட்ட வெளிநாட்டவர், ஓர் இந்தியக் குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவது இயற்கையே. ஆனால், சிக்கலான சட்டவிதிமுறைகள் காரணமாக வெளிநாட்டவரால் தத்தெடுக்கப்படும் இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

2001-ம் ஆண்டில் 1298 குழந்தைகள் வெளிநாட்டவரால் தத்தெடுக்கப்பட்டனர். 2006-ல் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 853 மட்டுமே! சுனாமியால் சில ஆயிரம் குழந்தைகள் தாய், தந்தையரை இழந்த நிலையில் தத்துகொடுக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மாறாக, குறைந்திருக்கிறது!

இந்திய அரசு இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, குழந்தைகளை வெளிநாட்டவர் தத்தெடுக்கும் விதிமுறைகளை எளிமைப்படுத்த ஓர் ஆய்வுக் குழுவை அமைத்துள்ளது.

வெளிநாட்டவர் ஓர் இந்தியக் குழந்தையைத் தத்தெடுக்க விரும்பினால் இரு நாடுகளிலும் அங்கீகாரம் பெற்ற ஓர் அமைப்பின் மூலமாகத்தான் அணுக முடியும். இவ்வாறு அங்கீகாரம் பெற்ற சில நிறுவனங்களும்கூட, வெளிநாட்டவரிடம் அதிகப் பணம் பெற்று குழந்தைகளை விற்ற மோசடிச் சம்பவங்களால் தத்துக்கொடுக்கப்படும் விதிமுறைகள் கடுமையானதாக மாற்றப்பட்டன. அவை நியாயமானவையே. என்றாலும் சில விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டியவை. குறிப்பாக, தத்தெடுப்பவரின் வயது வரம்புகள்.

தற்போதுள்ள நிபந்தனையின்படி, தத்தெடுக்க விரும்பும் கணவன் – மனைவி இருவருடைய வயது கூட்டுத்தொகை 90க்குள் இருக்க வேண்டும். ஒருமைப் பெற்றோர் (சிங்கிள் பேரன்ட்) என்றால் 30 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும் போன்ற வயது வரம்புகள் இக்காலத்திற்கு பொருத்தமற்றவை. பிரேசில் நாட்டில் தத்தெடுக்கப்படும் குழந்தை அல்லது சிறாரின் வயதைவிட தத்தெடுப்பவர் குறைந்தபட்சம் 15 வயது அதிகமானவராக இருக்க வேண்டும் எனும் நிபந்தனை எளிமையானதாக இருக்கிறது.

தத்தெடுக்கப்படும் இந்தியக் குழந்தையின் நலன் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நிபந்தனைகளை அமைத்துக் கொண்டால் போதுமானது.

தத்தெடுக்கும் நேரத்தில் ஒரு தம்பதி வசதியுடன் வாழவும் பின்பு அந்த வசதியை பிறகு இழக்கவும் நேரிடலாம். அதேபோன்று, தத்தெடுப்பதற்கு முன்பாக “குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருந்த தம்பதி’, தத்தெடுத்த சில மாதங்களில் விவாகரத்தும் பெறலாம். எந்த நிலையிலும் தத்துக்கொடுக்கப்பட்ட குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதாக நிபந்தனைகள் அமைந்தால் போதும்.

தத்தெடுக்கும் வெளிநாட்டவர் அக்குழந்தையை தமது நாட்டில் தங்கள் தத்துப்பிள்ளை என்று ஆவணப்படுத்தி, அந்நாட்டுக் குடியுரிமை பெற்றுத் தருவதற்கு 2 ஆண்டு கால அவகாசம் அளிக்கிறது இந்திய அரசு. அதே நேரத்தில், அக்குழந்தை ஏதோ ஒரு காரணத்தால் கைவிடப்படும் நிலை வந்தால், அந்நாட்டு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதைக் காட்டிலும், தத்தெடுப்போர் இக் இக்குழந்தைகளின் பெயரில் குறிப்பிட்ட தொகையை வைப்புநிதியாகச் செலுத்த நிபந்தனை விதிப்பது நடைமுறையில் பயனுள்ளதாக இருக்கும்.

உள்நாட்டில், இந்தியப் பெற்றோர் தத்தெடுக்கும் வழிமுறைகளும் எளிமையாக்கப்பட வேண்டும். “தத்தெடுக்கும் தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு தத்துப் பிள்ளையோ, சொந்த மகனோ, பேரன் பேத்தியோ தத்தெடுக்கும் வேளையில் இருக்கக்கூடாது’ என்பதுபோன்ற விதிகள் தேவையற்றவை. சொந்தமாக ஒரு குழந்தை இருப்பினும் தங்களுக்கு இன்னொரு தத்துப்பிள்ளை வேண்டும் என்கிற ஆசையும், அதற்கான வசதியும் இருப்பின் அதை ஏன் அனுமதிக்கக் கூடாது?

Posted in Adoption, Analysis, Angelina, Anjelina, Backgrounder, Brad, Brad Pitt, Children, History, Jolie, Kid, solutions, Suggestions | Leave a Comment »

Engineering, Medical Professional courses Entrance Exams – Analysis, Options

Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007

இன்னொரு கோரிக்கை உண்டு

தொழிற்கல்வி படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு உண்டா, இல்லையா என்று குழம்பிக் கொண்டிருந்த மேனிலைப் பள்ளி மாணவர்களை, குறிப்பாக பெற்றோர்களை நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்துள்ளது குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஒப்புதல்.

பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யும் சட்டம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஏறக்குறைய இரு மாதங்கள் ஆன பின்பே ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த ஒப்புதல் இன்னும்கூட சற்று முன்னதாகவே கிடைத்திருந்தால் தேவையற்ற மன உளைச்சல் தவிர்க்கப்பட்டிருக்கும்.

இப்போது, நுழைவுத் தேர்வு முறை கிடையாது என்பது சட்டப்பூர்வமாக உறுதியாகிவிட்டது. இனி பொதுப் போட்டியில் வாய்ப்பு இழந்த கிராமப்புற மாணவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை மலரும் நேரத்தில், சில நெருடலான நிகழ்வுகளும் நடக்கவே செய்கின்றன.

பொது நுழைவுத் தேர்வு முறையை அரசு ரத்து செய்துவிட்டாலும் தமிழகத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் (நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்) நுழைவுத் தேர்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சுமார் 15 தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு பாடப் பிரிவுகளில் 30 ஆயிரம் மாணவர்களைச் சேர்க்க முடியும்.

ஒரு மாணவன் எத்தனை தனியார் பல்கலைக்கழகங்களுக்கு நுழைவுத் தேர்வு எழுத முடியும்? ஒவ்வொரு நுழைவுத் தேர்வுக்கு அல்லது விண்ணப்பத்துக்கு குறைந்தது ரூ.500 செலவிட்டாக வேண்டும் என்றால், ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு இது எப்படி சாத்தியமாகும்?

இந்த தனியார் பல்கலைக்கழகங்கள் தமிழக அரசு வலியுறுத்தும் ஒற்றைச் சாளர முறைக்கு உடன்பட வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில், 2001-ம் ஆண்டு இதே போன்ற பிரச்சினையின்போது, தங்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் நுழைவுத் தேர்வு முறை ரத்துக்கு ஒப்புக்கொண்டாலும் நிர்வாக ஒதுக்கீட்டில் தங்களை அரசு கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றன.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) நோக்கமே மேலும் மேலும் தனியார் (நிகர்நிலை) பல்கலைக்கழகங்களை உருவாக்குவதுதான். ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக இத்தகைய தனியார் பல்கலைக்கழகங்கள் பெருகியுள்ளன.

நுழைவுத் தேர்வு முறை அமல் செய்யப்பட்ட காலத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன. எனவே, மாணவர்களை வடிகட்டுவதற்கு ஓர் வழிமுறையாக நுழைவுத் தேர்வு முறை கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 250 ஆகிவிட்டது. போதிய அளவு மாணவர்களுக்கு இடம் கிடைத்துவிடுகிறது. எனவே, நுழைவுத் தேர்வு முறை தேவையில்லை என்ற கல்வியாளர்களின் கருத்தும் கவனிக்கத் தக்கது.

அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே ஐஐடி, என்ஐடி-யில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 50 சதவீதம் அந்த மாநிலத்து மாணவர்களுக்கும் மீதி 50 சதவீதம் வெளிமாநில மாணவர்களுக்கும் என ஒதுக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் இந்தியா முழுவதும் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர வாய்ப்பு உள்ளது.

இதே போன்று தனியார் (நிகர்நிலை) பல்கலைக்கழகங்கள் ஒரே அமைப்பாக, இந்தியா முழுமைக்கும் ஒரேயொரு பொது நுழைவுத் தேர்வை நடத்தினாலும் வரவேற்கக் கூடியதே.

Posted in Abdul Kalam, Analysis, Anna University, APJ, Backgrounder, Education, Engineering, Entrance, Exam, History, IIM, IIT, JEE, Kalam, Law, medical, Options, President, professional, REC, Research, solutions, Suggestions, Tamil, Technology, Tests, UGC, University | Leave a Comment »

Ban mid-stream realignment of political coalitions: Moily report

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

பதவி உள்ளவரை தாவல்

கட்சித்தாவல் தடை சட்டத்தில் மேலும் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக சீர்திருத்தக் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

கட்சித் தாவல் தொடர்பான வழக்குகள் தாமதமாவதால், தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவரே முடிவு செய்து, கட்சி தாவியவர்களைப் பதவி நீக்கலாம் என்பது பரிந்துரைகளில் ஒன்று.

அதேபோன்று, ஒரு கூட்டணி அரசில் உள்ள ஒரு கட்சி அல்லது கட்சிகள், அக்கூட்டணியிலிருந்து விலக நேருமென்றால், அவர்கள் திரும்பவும் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்ற பரிந்துரையும் நியாயமானதே.

தேர்தலுக்கு முன்பாக கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியிலும் அக்கூட்டணிக் கட்சியினர் மற்றும் ஆதரவாளர் வாக்குகள் உள்ளன. ஒரு சாதாரண சிறிய கட்சி, ஒரு பெரிய கட்சியின் கூட்டணியில் வெற்றி பெற்ற பின்னர், அதைத் தனக்குக் கிடைத்த வெற்றியாகக் காட்டுவது சரியானதாக இருக்க முடியாது.

கட்சித் தாவலுக்கும் கூட்டணியிலிருந்து கழன்று கொள்வதற்கும் அடிப்படைக் காரணம் அமைச்சர் பதவி. கட்சி தாவுவோருக்கு அமைச்சர் பதவி அளிக்கத் தடை விதித்தால் தாவலும் தானே தடைபடும். தற்போது உள்ள கட்சித் தாவல் தடை சட்டத்திலும்கூட, கட்சியின் எம்பி, எம்எல்ஏ-க்கள் மூன்றில் இரண்டு பங்கு பேர் பிரிந்து, தனி அமைப்பாக மாறுவது அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு பதவிக்காக பிளந்துபோவோரின் கட்சிப் பதவிகளைப் பறித்துவிட்டு, அடிப்படை உறுப்பினர்களாக நீடிக்கச் செய்வதன் மூலம் அவர்களை திரிசங்கு சொர்க்கத்தில் வைக்க முடியும். ஆனால், எல்லா சந்தர்ப்பங்களிலும் முடியாது.

விகிதாசார தேர்வு முறை இல்லாத நிலையில், ஒரு வாக்கு வித்தியாசத்தில்கூட ஒரு தொகுதியில் ஒரு கட்சி வெற்றி வாய்ப்பை இழக்க முடியும் என்பதால், கட்சித் தாவல் தடை சட்டங்கள் மிகவும் நுட்பமாக, விரிவாக அமைய வேண்டும்.

இதேபோன்று, கொடுங்குற்றங்கள், ஊழல் உள்ளிட்ட மோசமான குற்றச்சாட்டு உள்ளவரை தகுதிநீக்கம் செய்வதிலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8வது பிரிவில் திருத்தம் தேவை.

கிரிக்கெட் வீரர் சித்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரன் ஆகியோரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் கொலைக் குற்றத்துக்காக தண்டனை பெற்று, வழக்கிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில் தேர்தலில் போட்டியிடுகிறார். இன்னொருவர் தண்டனை பெற்று சிறையில் இருந்தும் எம்.பி.யாக நீடிக்கிறார். இத்தகைய குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டத்தில், ஊழல் என்பதற்கான வரையறையை விரிவு செய்ய வேண்டும் என்றும் இக்கமிஷன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஒரு எம்பி, எம்எல்ஏ தனிப்பட்ட முறையில் ஒரு நபருக்கு ஒரு காரியத்தைச் செய்துதரப் பணம் பெற்றால் அது ஊழல். அதே பணத்தை கட்சிநிதியில் வரவு வைத்து காரியம் செய்து கொடுத்தால் அது ஊழலாகக் கருதப்படுவதில்லை.

ஒரு எம்பி, எம்எல்ஏ அல்லது ஒரு கட்சியின் தலைவர், அரசு இயந்திரத்தின் அனைத்து வசதிகளையும் தனியாருக்குச் செய்து கொடுத்து, பிரதிபலனாக அந்நிறுவனத்தின் பங்குகளைக் குறைந்த விலைக்கு தானோ அல்லது தனது உறவினர்களையோ வாங்கிக்கொள்ளச் செய்வதும் ஊழல்தான். ஆனால் இதை தற்போதுள்ள நடைமுறைப்படி ஊழல் என்று சொல்ல முடியாது.

சில மாநிலங்களில், தன் கட்சி ஆட்சிக்கு வந்து, தான் அமைச்சர் பொறுப்பேற்றதும், தன் மீதான ஊழல் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும்படி நீதிமன்றத்தில் மனு கொடுத்து, வழக்கிலிருந்து விடுபடும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இவையும் தடுக்கப்பட வேண்டும்.

Posted in Administrative Reforms Commission, Affiliation, Assembly, Ban, Bribery, Coalition, coalition defectors, coalition governments, Corruption, Dinamani, EC, Election Commissioner, Elections, Government, Governor, India, kickbacks, Lok Sabha, Manmohan Singh, Minister, MLA, MP, Op-Ed, Opinion, Opposition, Party, Politics, Polls, Report, Rule, Shibu Soren, Sibu Soren, Sidhu, solutions, Split, stability, State, Suggestions, UPA, Veerappa Moily, Victim, Vote | Leave a Comment »

No more Entrance Exams – Will it benefit Rural Students?

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

“”தேர்வு இல்லை; ஆனால் நுழைவு உறுதியா?”

அ.கி. வேங்கடசுப்ரமணியன்

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்பிற்கான நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை அண்மையில் தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளது.

இந்த மசோதாவை தாக்கல் செய்யும்போது, உயர் கல்வித்துறை அமைச்சர் “”கிராமப்புறத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கும், நகர்ப்புறத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே ஒரு சம ஆடுதளம் (கங்ஸ்ங்ப் டப்ஹஹ்ண்ய்ஞ் ஊண்ங்ப்க்) உருவாக்குவதற்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்வது அவசியமாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதை எளிதாக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால் நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டதாலேயே இது நிறைவேறி விடுமா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.

மேல்நிலைப் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களிடையே கிராமப்புற நகர்ப்புற வேறுபாட்டைத் தவிர அரசு சார்ந்த பள்ளிகள், அரசு சாராத பள்ளிகள் என்ற வகையில் பெருத்த வேறுபாடு உள்ளது.

அரசு, நகராட்சி, ஆதிதிராவிட நலத்துறை, கள்ளர் சீரமைப்புத் துறை, சமூக நலத்துறை, வனத்துறை போன்ற அரசு சார்ந்த பொதுத்துறை பள்ளிகள் உள்ளன. இதைத் தவிர அரசு உதவி பெறும் மற்றும் பெறாத தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் போன்றவையும் உள்ளன.

கிராமப்புறத்தில் அரசு சார்ந்த பள்ளிகளில் மேல்நிலைப் பள்ளியிறுதித் தேர்வு எழுதியவர்கள் சுமார் 1.5 லட்சம்.

தனியார் பள்ளியில் 1.01 லட்சம்.

நகர்ப்புறத்தில் அரசுப் பள்ளியில் தேர்வு எழுதியவர்கள் 0.82 லட்சம்.

தனியார் பள்ளியில் 1.76 லட்சம்.
கிராமம், நகரம் இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ஏறத்தாழ 45 சதவீத மாணவர்கள் அரசு சார்ந்த பொதுப் பள்ளிகளில் படித்து தேர்வு எழுதியுள்ளனர்.

பள்ளியிறுதி வகுப்பில் தேறியவர்களின் சதவீதம், கிராமப்புற, நகர்ப்புறப் பள்ளிகளுக்கு இடையில் சிறிதும், அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத பள்ளிகளுக்கு இடையில் பெரிதும் வேறுபடுகிறது.

2006ஆம் ஆண்டு இவ்வகையில் தேர்ச்சி சதவீதம் 2006ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி தேர்வில் வெற்றி பெற்றவர் சதவீதம்

கிராமப்புறம் பொதுத்துறை பள்ளிகள் 61. 14 சதவீதமும்,

தனியார் பள்ளிகள் 83.71 சதவீதமும்,

நகர்ப்புறம் பொதுத்துறை பள்ளிகள் 62.70 சதவீதமும்,

தனியார் பள்ளிகள் 85.76 சதவீதமும் பெற்றுள்ளன.
கிராமமோ, நகரமோ இரண்டிலுமே பொதுத் துறை பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் தனியார் பள்ளிகளைவிட பெரிதும் குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பொதுத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏழை எளிய குடும்பங்களில் இருந்து வருபவர்கள்தான். வசதி உள்ள குடும்பத்தில் தாயோ, தந்தையோ அல்லது இருவருமோ படித்திருப்பார்கள். குழந்தைகளின் படிப்பிற்கும் வீட்டுப் பாடத்திற்கும் உதவி செய்வார்கள்.

ஆனால் பொதுத்துறை பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களே பெற்றோராக இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு அதிகம் தேவைப்படுகிறது. இந்தப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளும் குறைவு. அதைப் பற்றி சமூகத்தின் ஆர்வமும் அக்கறையும் குறைவு.

பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கு தேர்ச்சி மட்டும் போதாது. வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டில் பயன் பெறுபவர்களும் அவர்களுக்கு என வரையறுக்கப்பட்ட மதிப்பெண்கள் பெற வேண்டும். இந்த மதிப்பெண்கள் பெறுபவர்கள் பெரும்பாலும் நகர்ப்புறப் பள்ளிகளில் படித்துத் தேறியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

2006ஆம் ஆண்டில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 200க்கு 194 மதிப்பெண்கள் பெற்ற 6300 மாணவர்களில், 5600க்கும் மேற்பட்டவர்கள் நகர்ப்புறங்களில் இருந்து வந்தவர்கள்தான். இவர்களில் எத்தனை பேர் நகர்ப்புற அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

மொத்தம் பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் சுமார் 3.84 லட்சம் பேரில் முதல் 10 சதவீதம் அதாவது முதல் 38400 இடங்களில் எத்தனை கிராமப்புற / நகர்ப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளனர் என்பது தெரியவில்லை.

நுழைவுத் தேர்வை ரத்து செய்தாலும் இடங்களை ஒதுக்கினாலும், கிராமப்புற அரசுப் பள்ளியில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 93 ஆயிரம் மாணவர்கள், நகர்ப்புறத்தில் உள்ள அரசு சாரா பள்ளிகளில் இருந்து தேர்ச்சி பெறும் சுமார் 1.52 லட்சம் மாணவர்களுடன் தர வரிசையில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நுழைய முடியும். இதற்கு என்ன செய்ய முடியும்?

முதலில் கிராமம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகள், நூலகங்களில் தேவையான புத்தகங்கள், ஆய்வுக் கூடத்துக்கு அவசியமான கருவிகள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாநகராட்சியும் தான், வசூலிக்கும் கல்வி வரியை முழுவதுமாக கல்விக்காகச் செலவிட்டால், நிச்சயமாகச் சிறந்த தனியார் பள்ளிக்கு இணையாக பொதுத்துறை பள்ளிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்க முடியும்.

கிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அரசே தனிக் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

மேலே கூறியவற்றைத் தவிர, வேறு ஒரு முக்கியப் பிரச்சினையும் உள்ளது. மேல்நிலைப் பள்ளி தேர்வு எழுதுபவர்கள் பெரும்பாலும் 17 வயது நிரம்பியவர்கள். தமிழ்நாட்டில் இவர்களது எண்ணிக்கை 2006-ஆம் ஆண்டு சுமார் 11.91 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு மாநில பாடத்திட்ட மேல்நிலைத் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 5.22 லட்சம்தான்.

மைய பாடத்திட்டத்தை (சி.பி.எஸ்.இ.) எழுதியவர்கள் சுமார் 4500 பேர். எனவே 17 வயது நிரம்பியவர்களில் பாதிப்பேருக்கு மேல் பள்ளியிறுதித் தேர்வை எழுதவில்லை. இவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள்தான்.

கிராமப்புற மக்கள்தொகை நகர்ப்புற மக்கள்தொகையைவிட சுமார் ஒன்றரை மடங்கு அதிகம் இருந்தாலும், கிராமப்புறங்களில் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை நகர்ப்புறத்தைவிட குறைவாக உள்ளது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் பள்ளிப் படிப்பை இறுதி வரை தொடராமல் இடையிலே விடுபடுதல்.

எனவே கிராமப்புறங்களில் தொடக்கக் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும். கிராமப்புறத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், இளைஞர் அமைப்புகள், சுய உதவிக் குழுக்கள் இவை அனைத்தும் ஊராட்சியுடன் இணைந்து இந்தப் பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் கிராமப்புறத்திலிருந்து மேல்நிலைப் பள்ளி இறுதித் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையில் கிராமப்புற மக்கள் இருக்கும் விகிதத்திற்கு இணையாக இருக்க வேண்டும். அதேபோல் அரசுப் பள்ளியில் இருந்து தேர்வு பெறும் மாணவர்களின் சதவீதத்துக்கும், தரவரிசையும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக உயர வேண்டும்.

இவை இரண்டையும் செய்யாவிட்டால் நுழைவுத் தேர்வு ரத்து ஆனாலும், இட ஒதுக்கீடு இருந்தாலும், கிராமப்புற ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, மருத்துவம் மற்றும் தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில் “”நுழைவுத் தேர்வு இல்லை. ஆனாலும் நுழைய முடியவில்லை” என்ற நிலையே தொடரும்.

தொலைநோக்குக் கல்வி

கி. இராசா

மக்களுக்குக் கல்வி வழங்குவதில் பல முறைகள் உள்ளன. நேரடியாக வகுப்பறையில் வழங்கப்படும் கல்விமுறை; அஞ்சல் வழியாக வழங்கப்படும் கல்விமுறை. அடிப்படைக் கல்வியை ஓரிரு ஆண்டுகள் தந்து உயர்கல்வி தரும் திறந்தநிலைக் கல்விமுறை.

இக் கல்விமுறைகள் அனைத்தும் “உயர்கல்வியைப் பரவலாக்குவது’ என்ற நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டவை. ஆனால் உயர்கல்வியைப் பெறுவதற்கு முன்பாகவே அதற்கு முந்தைய அடிப்படை மற்றும் உயர்நிலைக் கல்வி பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அடிப்படைக் கல்வி யாருக்கு வழங்கப்படுகிறதோ அந்தப் பயனாளிகளுக்கு அது சரியாகச் சென்று சேர்கிறதா? என்றும், அதனால் அவர்கள் பயன் பெறுகிறார்களா? என்றும் அக்கறையோடு மீள்பார்வை செய்வதற்கான வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.

இத்தகு மீள்பார்வை முறைகளோ, சுயமதிப்பீட்டு முறைகளோ இல்லையென்றால் “முழு எழுத்தறிவு இயக்கம்’ என்பது “வயலில் நிறுத்திய வைக்கோல் பொம்மை’ போலத்தான் பயன்தரும்!

ஒரு சமுதாயத்தில் ஆண், பெண் இருபாலாருக்கும் கல்வி வழங்கப்படுகிறது. ஆண் பெறுகின்ற கல்வி, அவனுக்கும் அவனையொத்த பிறருக்கும் பயன்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இப் பயன்பாடு அவன் வாழும் தலைமுறையால் உணரப்படுகிறது.

பெண் பெறுகிற கல்வியோ, வாழும் தலைமுறைக்கு மட்டுமல்லாது, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. வரலாற்றில் இதற்குப் பல சான்றுகள் உள்ளன. பெண்களுக்கு வழங்கப்படும் கல்வி இத்தகு தொலைநோக்குப் பயன்பாடு உடையது என்பதால்தான் இதனைத் “தொலைநோக்குக் கல்வி’ என்கிறோம்.

ஒரு சமுதாயம் வளமான சமுதாயமாகத் திகழ வேண்டுமென்றால் அங்கு பெண் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் பெண்களுக்குக் கல்வி வழங்குவதில் அரசுகள் அக்கறை காட்டுவதில்லை என்பதுவே இப்போதுள்ள குற்றச்சாட்டு.

அனைத்துலக மாணவர்களின் கல்வியறிவு பற்றிய மதிப்பீட்டறிக்கையில் தாய்மார்கள் கல்வியறிவு பெற வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கல்லூரிப் படிப்பை முடித்த தாய்மார்களின் பிள்ளைகள், பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட தாய்மார்களின் பிள்ளைகளைவிட அறிவைப் பெறுவதில், பெற்ற அறிவைப் பயன்படுத்துவதிலும் பல நிலைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

அதேசமயத்தில் சமுதாயத்திலும் பணியிடத்திலும் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மைக்கு முக்கியக் காரணம் விகிதாசாரக் குறைவாகும்.

1991க்கும் 2001க்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்தில் பெண்களுக்குக் கல்வி தருவதற்காக மத்திய அரசு மேற்கொண்ட முனைப்பான நடவடிக்கையின் காரணமாக 15 சதவீதம் மட்டுமே உயர்த்த முடிந்தது. நாடு முழுவதும் இன்னும் 19 கோடி பெண்கள் கல்வியறிவு பெறாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மைநிலை. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் 51 சதவீதமாக இருந்த இந்த நிலை 2001ல் 64 சதவீதமாக அதாவது 13 சதவீதம் – கூடுதல் பெற்றுள்ளது. இது தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, உயர்கல்வி ஆகிய நான்கு கட்டக் கல்விகளைப் பெறுகின்ற மொத்தப் பெண்களின் விகிதாசாரமாகும்.

பெண்கள் அதிக அளவில் கல்வியறிவு பெற முடியாமல் போவதற்குச் சொல்லப்படும் முக்கியமான காரணங்களில் ஒன்று, அவர்கள் வயதுக்கு வந்து விடுவதாகும். இந்த இயற்கை நிகழ்வு அவர்களுக்குப் பாதகமாக அமைந்து விடுகிறது. முதல் ஐந்து வகுப்புகளில் தொடக்கக்கல்வி பெறும் சிறுமியர்களில் 38 – 67 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். கிராமப்புறங்களில் இது 10, 11 வயதுகளிலேயே நிகழ்ந்து விடுகிறது. இதையும் மீறி 8ஆம் வகுப்புவரை பயிலும் சிறுமியர்களில் கிட்டத்தட்ட 58 சதவீதம் பேர் திருமணம் மற்றும் இதர காரணங்களுக்காக பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே முடித்து விடுகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

இவ்வாறு சிறுவயதில் பெண்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாமல் போவதற்கு அவர்களின் பெற்றோரே முக்கியக் காரணமாகின்றனர். கல்வியறிவு பெறாத பெற்றோர்கள் அந்த நேரத்திற்கு அவசரப்பட்டு முடிவு எடுக்கிறார்களே ஒழிய, தங்கள் மகளைப் பற்றிய நெடுநோக்குப் பார்வை அவர்களுக்கு இல்லை. இதனால் பெண்ணைச் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கின்ற அவலமும் நிகழ்ந்து விடுகிறது. கல்வி அறிவைப் பெறாத நிலையில் சிறுமியரின் வாழ்வு சீர்கேடாகிறது.

ஒரு நாடு, இன்றைய காலகட்டத்தில் அதிகமாகப் பேசப்படும் அல்லது வளர்ச்சிக்கான அடையாளமாகக் கருதப்படும் அறிவுச்சந்தையில் சவால்களைச் சந்திக்க வேண்டுமென்றால் பெண்கள் அதிக அளவில் உயர்கல்வி பெற வேண்டும் என்பதை அறிவு வளர்ச்சியையும், பொருளாதார முன்னேற்றத்தையும் இணைத்துப் பார்க்கும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதற்கு உயர்கல்வியில் “பெண்களுக்கு உகந்த படிப்பு இது; ஆண்களுக்கு உகந்த படிப்பு இது’ என்று பிரித்துப் பார்க்கும் “பால் மையக் கல்வி’ போக்கையும் கைவிட வேண்டும் என்று அவர்கள் உறுதிபடச் சொல்கின்றனர்.

இதற்கெல்லாம் இன்றியமையாததாக “பால்வேறுபாடு கூடாது’ என்ற முழக்கம் கல்வி நிலையில் முதன்மைப்பட வேண்டும். அப்போதுதான் சமுதாயம் உண்மையான முழுக் கல்வியைப் பெற முடியும்.

இன்றைய நிலையில் கல்வி என்பது வகுப்பறையோடு நின்று விடுவதில்லை. கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகும் அது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் இன்றைய கல்வியாளர்களால் வாழ்நாள் கல்வி என்று அழைக்கப்படுகிறது.

வாழ்நாள் கல்வியால் அறிவுப்புரட்சியையும் அதன்வழி, பொருளாதார நிலைபேற்றையும் ஒரு நாடு அடைய முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இதற்கான சில செயல்முறைத் திட்டங்களை மேலும் காலம் தாழ்த்தாது இப்போதிருந்தே வகுக்க வேண்டும்.

இதன் முதற்கட்டமாக, வளமான எதிர்காலத்திற்கு ஒரு நாட்டை இட்டுச் செல்வதற்கான ஆற்றல் வாய்ந்த பெண் கல்வியில் தொடக்க நிலையிலிருந்தே குறைபாடுகள் களையப்பட வேண்டும். தொடக்கக் கல்வியில் சிறுமியர்கள் கல்வி “இடைவீழ்ச்சி’ அடைவதற்கான காரணங்கள் என்னவென்று கண்டறிதல் வேண்டும். கண்டறிந்த உண்மைகளின் மீதான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். இதற்கான முனைப்பு இயக்கம் ஒன்றை அந்தந்தப் பகுதிப் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்க வேண்டும்.

இது அரசு இயக்கமாக இல்லாமல் மக்களின் விருப்ப இயக்கமாகவும் இருக்க வேண்டும். இரண்டாவது கட்டமாக, கல்வி வழங்குவதில் பால்வேறுபாட்டைக் களைய வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக தாய்மார்களுக்குக் கல்வி வழங்குவதற்கென கல்வியாளர்களைக் கொண்டு ஒரு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தொடக்கநிலையில் சிறுமியர்கள் பள்ளிப்படிப்பைப் பாதியில் கைவிடும் அவலம் தொலையும்.

இவ்வாறு தொலைநோக்குப் பார்வையோடு படிப்படியாகப் பெண்கல்வித்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இன்னும் 15 ஆண்டுகளில் – அதாவது 2020ல் இந்தியா பொருளாதாரத்தில் நிலைபெற்ற நாடாகவும், அறிவுச்சந்தையில் வளம்பெற்ற நாடாகவும் உருவாகும் சூழல் வெகுதொலைவில் இல்லை.

(கட்டுரையாளர்: பாரதிதாசன் பல்கலைக் கழக பேராசிரியர்).

Posted in Action Plan, Admissions, Advices, Age, Ak Venaktasubramanian, AK Venkatasubramanian, Bachelors, Children, City, Degree, Dinamani, Divide, Education, Engineering, Entrance Exam, Female, Girl, High School, Higher Studies, Human Resources, JEE, Ki Rasa, Kids, Kindergarten, Knowledge, Masters, medical, Money, Op-Ed, Opinion, Primary, professional, Rich vs Poor, Rural, Secondary, Strategy, Student, Students, Study, Suggestions, Tamil Nadu, Teacher, Technology, TN, TNPCEE, Urban, Village, Women | Leave a Comment »

C Vaiyapuri :: Local body elections’ rules & regulations

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

கடும் தேர்தல் விதிமுறைகள்

சி. வையாபுரி

இரண்டு கட்டமாய் நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் அரங்கேறிய உறவுகள், உறவு முறிவுகள் கட்சித் தாவல்கள் முதல் நடமாடும் கஜானாக்களாக மாறிய வேட்பாளர் பட்டாளங்கள், வேட்பு மனுத் தாக்கல் என்கிற முளைப்பாரி சடங்குகளோடு தள்ளுமுள்ளு வெட்டுக் குத்து ரத்தக்களரி வரையிலும் நிம்மதி கெடச் செய்த மிருகச் சண்டைகள் நம்மைத் தலை குனிய வைத்துள்ளன.

இன்று

  • 246 வாக்காளர்களைக் கொண்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் தலா ரூ. 50 ஆயிரம் வரையிலும்,
  • 2850 பேர்களைக் கொண்ட தலைவர் தேர்தலில் தலா ரூ. 6 லட்சம் வரையும் செலவழித்ததாகத் தகவல்கள் வருகின்றன. ஏன் இவ்வளவு பணத்தைக் கொட்டி விரயமாக்குகிறார்கள்?

இந்தக் கேள்விக்கு விடையாக ஒரு வேட்பாளர் சொன்னார்:

“”ஐந்து ஆண்டுகளில் உள்ளாட்சித் திட்டங்களுக்காக அரசாங்கப் பணம் குறைந்தது ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையிலும் ஒதுக்கீடுகள் வரும் போது 10 சதவீத பர்சன்டேஜ் கிடைத்தால் ரூ. 5 முதல் 10 லட்சம் வருகிறதல்லவா?

இதைத் தவிர வேறு எந்த விதத்திலும் லஞ்ச ஊழல் செய்ய மாட்டேன்” என்று சத்தியப் பிரமாணமும் செய்தார்.

அதாவது, 10 சத “பர்சன்டேஜ்’ என்பது லஞ்ச ஊழல் என்கிற குற்றத்திற்கு அப்பாற்பட்ட ஒரு வருவாயாகவே கருதப்பட்டு சகல கட்சியினராலும் அங்கீகாரமும் பெற்றுள்ளது என்பதையே இது காட்டுகிறது. இப்படிப்பட்டவர்களால் அவர்களது தொகுதிகள் அடிப்படை வசதிகளைப் பெற்று தன்னிறைவடைந்து விடும் என்று எப்படி நம்ப முடியும்?

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடையும் சம்பா நடவும் மட்டுமன்றி, தாமிரபரணி, ஈரோடு, காலிங்கராயன் ஆயக்கட்டுகளில் விவசாயப் பணிகள் தீவிரமாய் இயங்கிய நேரத்தில் வந்த உள்ளாட்சித் தேர்தல், உழவுப் பணிகளை முடக்கி வைத்தது. ஆள் பற்றாக்குறையினால் விவசாயிகள் அல்லாடிப் போனார்கள்.

ஊராட்சி நிர்வாகங்களெல்லாம் விவசாயம், நெசவு, கிராம சிறு தொழில் புரிகின்ற மேன்மக்களிடமிருந்து தடிக் கொம்பு பேர்வழிகளுக்கு எப்போது கைமாறத் தொடங்கியதோ அப்போதே துளித் துளியாய் இருந்த ஊழல், அருவியாய் பெருகி விட்டது. நம் கிராமங்கள் எப்படி உருப்படும்?

ஐ.நா. சபையின் உலக மக்கள்தொகைக் கண்காணிப்புக் குழு அண்மையில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. 2008-ம் ஆண்டு இறுதியில் கிராமங்களில் தற்போது 60 சதமாய் இருக்கின்ற மக்கள்தொகை 50 சதமாகச் சுருங்கி நகரங்களில் தற்போது 40 சதமாக உள்ளது 50 சதமாக உயரும் என்று அது எச்சரிக்கை செய்துள்ளது.

வழிகாட்டுதல்களும் சமூக சகோதர வாழ்வும் விவசாயம் மற்றும் கிராமத் தொழில்கள் புத்துயிர் பெறுவதும் கிராமங்களில் தெளிவில்லாமல் உள்ளன. தரமான கல்வி, நம்பகமான சுகாதார மருத்துவ வசதி, தொடர்ந்த வேலைவாய்ப்புகள் இவையும் இங்கு அரிதாகி வருவதுமே கிராமங்களிலிருந்து மக்கள் சாரைசாரையாய் நகரங்களை முற்றுகையிடக் காரணமாகின்றன என்றும் அந்த அறிக்கை விவரிக்கின்றது.

இப்படித் தொடரும் இந்த அவலங்களுக்கு இனி ஒரு தீர்வு வேண்டும். நாட்டில் 60 லட்சம் டன் கோதுமையும் 30 லட்சம் டன் பருப்பு வகைகளும் இறக்குமதியாகியுள்ளன. சென்ற ஆண்டு ஏற்றுமதியில் முதல்நிலை வகித்த இந்தியா இந்த ஆண்டு இறக்குமதியில் முன்னிலை வகிக்கின்றது.

ஆகவே, அடுத்த தேர்தல்களில் வேட்பாளர்கள் வேட்பு மனு செய்வதிலும் ஊரைச் சுற்றுவதிலும் மந்தை மந்தையாய் மக்களைத் திரட்டி கிராமத் தன்னிறைவுக்கான உற்பத்திகள் அனைத்தையும் கூசாமல் முடமாக்கி வெட்டித்தனமாய் காலத்தை விரயமாக்குவதையும் கட்டுப்படுத்த நடத்தை விதிகள் கடினமாக்கப்பட வேண்டும்.

குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரங்களை அரசாங்கமே ஏற்க வேண்டும். எவரும் தனித்தனியாகத் தனி மேடை அமைத்து ஏறி இறங்க அனுமதிக்கக் கூடாது. ஒரே ஊர்க்காரர்கள்தானே? ஒன்றாக ஒரே மேடையில் நின்று தங்களது கொள்கை, வேலைத் திட்டங்களைப் பிரகடனம் செய்வதோடு பிரசாரம் முடிவடைய வேண்டும்.

வாக்குச் சீட்டின் மாதிரிகளை அரசாங்கமே அச்சிட்டு பெரிய அளவில் ஊரில் முக்கியப் பகுதிகளில் விளம்பரம் செய்து விட்டு நேராக வாக்குப் பதிவை முடித்து விட வேண்டும்.

இந்தவிதமான தேர்தல் நடத்தை நெறிகள் மற்றும் விதிகள் யாவும் மாநகரம் வரைக்கும் பொருந்துவதாய் இருத்தல் வேண்டும்.

நடைபெற்று முடிந்துள்ள இந்தத் தேர்தல் மாபெரும் ஒரு ஜனநாயகத்தின் அடையாளம். ஆமாம்! அப்படித்தான் நாம் எண்ண வேண்டும். ஆனால், நடைபெற்ற விதங்களை எண்ணும்போது நாம் நாகரிகமடைந்த ஒரு சமூக மக்களா அல்லது காட்டு விலங்குகளா என்கிற வருத்தமான கேள்வி மனத்தைக் கோரப்படுத்துகிறது.

இப்படி ஒரு தேர்தல் மறுபடியும் வருமானால், எல்லாமே பாழ்பட்டு அமைதி, நிம்மதி, கலாசாரம் என்பதன் அடையாளங்கள் முற்றிலுமாய் அழிக்கப்பட்டுவிடும்.

Posted in C Vaiyapuri, Civic Polls, Corruption, Dinamani, Election Reform, Expenses, local body elections, Op-Ed, regulations, rules, Rural, Suggestions, Tamil Nadu, Thoughts, Villages | 2 Comments »