Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Subsidy’ Category

Impact of MNCs and pricing pressures by Govt. Policy – Harming the local farmer

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2007

ஊருக்கு இளைத்தவன்…

உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்பது நம் நாட்டுப் பழமொழி.

உலக வர்த்தக ஸ்தாபனத்தின் (டபிள்யூ.டி.ஓ.) ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்தியா போன்ற நாடுகள், உரிய தற்காப்பு சட்டங்களை தேசிய அளவில் இயற்றாததால், கவசம் தரித்துக்கொள்ளாத காலாட்படை வீரர்களாய், வளரும் நாடுகளின் விவசாயிகள் களத்தில் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.

தோஹாவில் தொடங்கி இன்றுவரை இதன் பேச்சுவார்த்தைகளில், வல்லரசு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் தங்களுக்குச் சாதகமான விஷயங்களை மட்டுமே வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

பெரிய நிறுவனங்கள் தயாரித்த விதைகளைப் போட்டால்தான் சாகுபடி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை விவசாயிகளின் மனங்களில் எப்படியோ விதைத்து விட்டார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகளில்கூட மன்சான்டோ நிறுவனத்தின் விதைகளும், மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட “”பீட்டா காட்டன்” பருத்தி விதைகளும் சர்வசாதாரணமாக புழக்கத்துக்கு வந்துவிட்டன.

தில்லியை மையமாகக் கொண்ட வர்த்தகம், வளர்ச்சிக்கான மையம் (சென்டாட்) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நமது விவசாயிகளும், நுகர்வோர்களாகிய நாமும் எப்படிச் சுரண்டப்படுகிறோம் என்று ஓரளவுக்குத் தெரியவந்துள்ளது.

உலகின் பூச்சிகொல்லி விற்பனையில் 65% சந்தையை பேயர்ஸ், சின்ஜென்டா, பிஏஎஸ்எஃப், டெü, மன்சான்டோ என்ற நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.

உலகின் விதை விற்பனையில் 72%, மன்சான்டோ, டூபான்ட், சின்ஜென்டா, குரூப் லிமாகரின் என்ற 10 நிறுவனங்கள் மூலமே நடைபெறுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பனையில் 91% மன்சான்டோ வசம் உள்ளது.

10 நிறுவனங்கள் மட்டும், தின்பண்டங்களுக்கான உலக சில்லறை வர்த்தகத்தில் 24% சந்தையைப் பிடித்துள்ளன. அதன் மதிப்பு -மயக்கம்போட்டு விழுந்துவிடாதீர்கள் -சுமார் ஒரு கோடியே நாற்பது லட்சம் கோடி ரூபாய்கள். அதில் வால்மார்ட், கேரிஃபோர், மெட்ரோ ஏஜி, அஹோட் ஆகியவற்றின் பங்கு 64%.

வாழைப்பழ விற்பனையில் மட்டும் சிகிடா, டோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனங்கள் 50% சந்தையைப் பிடித்துவைத்துள்ளன.

யூனிலீவர், புரூக்பாண்ட், காட்பரி, ஸ்வெப்பீஸ், அல்லய்ட்-லியான்ஸ் ஆகியவை தேயிலை விற்பனையில் 80 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன.

கார்கில், செனக்ஸ், ஏடிஎம், ஜெனரல் மில்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலகின் தானிய விற்பனையில் 60 சதவீதத்தைத் தங்கள் கைகளில் வைத்துள்ளன. கேரிஃபோர் என்ற நிறுவனத்தின் வருவாய், சிலி நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைவிட அதிகம். வால்மார்ட் நிறுவனத்தின் வருமானம் பாகிஸ்தானின் தேசிய வருமானத்தைவிட 3.2 மடங்கு அதிகம்.

கார்கில் நிறுவனத்தின் வருமானம் ருமேனியா நாட்டின் தேசிய வருமானத்துக்குச் சமம்.

இந்தியாவில் தேயிலையின் சில்லறை விற்பனை விலை ஒரு கிலோ ரூ.160. ஆனால் தேயிலைச் சந்தையில் ஏலத்தில் ஒரு கிலோ ரூ.50க்குத்தான் வாங்கப்படுகிறது. மூன்று மடங்கு விலையில் விற்கப்படுகிறது.

உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்து கடைகளில் ஒரு கிலோ ரூ. 143-க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உருளைக்கிழங்குக்குத் தரப்படும் கொள்முதல் விலையைப்போல இது 28 மடங்கு.

கோதுமை இறக்குமதியில் தொடங்கி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எல்லா முடிவுகளுமே விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. அதன் விளைவுதான், பல்வேறு மாநிலங்களில் காணப்படும் விவசாயிகள் தற்கொலை.

மத்திய, மாநில அரசுகளில் உள்ளவர்கள் நமது விவசாயிகளின் நலனைப் பற்றி எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகின்றனர் என்பதைத்தான் மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஊருக்கு இளைத்தவன் உழவுத் தொழில் புரிபவர் என்கிற நிலை தொடர்வது நல்லதல்ல.

Posted in Agriculture, Banana, Biz, Brookebond, Brookebonds, Business, Cadburys, Chips, Commerce, Consumer, Copyrights, Customer, Dalit, Deflation, DNA, Doha, Economy, Exports, Farmer, Farming, Fertilizer, Food, Foodgrains, Genetic, harvest, Imports, Inflation, markets, MNC, Monsanto, Natural, Needy, organic, peasant, Poor, Potato, Prices, Pricing, Recession, rice, Rich, Seeds, Shares, Shopping, Shweppes, Sivaji, Statistics, Stats, Stocks, Subsidy, Suicide, Suicides, Talks, Tax, Tea, Trade, Trademark, Unilever, Urea, Vidharaba, Vidharabha, Vitharabha, Wal-Mart, Walmart, Wealthy, Weeds, Wheat, WTO | Leave a Comment »

Dinamani op-ed: TJS George – East India Company still rocks on as World Bank

Posted by Snapjudge மேல் ஜூலை 22, 2007

கிழக்கிந்திய கம்பெனி சாகவில்லை, உயிரோடு இருக்கிறது!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

எவ்வளவு சுலபமாக நாடுகள் தங்களுடைய வரலாற்றை சலவைக்குப் போட்டுவிடுகின்றன! இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய ராணுவம் செய்த அக்கிரமங்கள் என்ன என்று அந்நாட்டின் புதிய தலைமுறைக்குத் தெரியவே தெரியாது. வியத்நாமில் அமெரிக்கா செய்த அக்கிரமங்கள் அந்நாட்டு பள்ளிக்கூட குழந்தைகளுக்குத் தெரியாது.

ஆரியர்கள் திருநைனார்குறிச்சியிலிருந்தும், திராவிடர்கள் குலு பள்ளத்தாக்கிலிருந்தும் வந்தார்கள் என்று நம் நாட்டின் சில பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகின்றனர்!

உண்மை எது என்பது, (வரலாற்று) குப்பையைப் பெருக்க வந்தவர்களின் கண்களில்தான் இருக்கிறது.

பிரிட்டிஷ்காரர்கள்தான் தங்களுடைய ரயில்வே மூலமும் தடையற்ற வர்த்தக நடைமுறைகள் மூலமும் இந்தியாவுக்கு வாழ்வையும் வளத்தையும் கொண்டுவந்து சேர்த்தார்கள் என்று இந்தியாவில் படித்த பெரும்பாலானவர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை என்னவோ தலைகீழாக இருக்கிறது. இந்தியாவின் செல்வமும் இயற்கை வளங்களும்தான் பிரிட்டனுக்குப் புது வாழ்வைத் தந்தன.

இந்தியாவின் வளமான பகுதிகள் பல, பிரிட்டிஷாரின் நன்மைக்காக இங்கே அடியோடு அழிக்கப்பட்டன. பிரிட்டனின் “மான்செஸ்டர் டி-73′ ரக பருத்தியை வாழ்விப்பதற்காக டாக்கா மஸ்லின் பூண்டோடு அழிக்கப்பட்டது. அந்தத் துணியை நெய்த திறமைவாய்ந்த நெசவாளர்களின் கட்டைவிரலை வெட்டி வீசினர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனித் துரைமார்கள்!

ஏகாதிபத்திய காலத்தில் நிலவிவந்த உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டுவரும் வேலையை, ஆய்வு நூல்கள் மூலம் அவ்வப்போது மேற்கொள்கின்றனர் மேற்கத்திய நாடுகளின் அறிஞர்கள்.

இப்போதுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் (எம்.என்.சி.) முன்னோடியாகத் திகழ்ந்த கிழக்கிந்திய கம்பெனி எப்படி ரத்த வெறி பிடித்து அலைந்தது என்பதை நிக் ராபின்ஸ் என்பவர் தன்னுடைய ‘The Corporation that Changed the World: How the East India Company Shaped the Modern Multinational’ என்ற நூலில் அற்புதமாக விளக்கியிருக்கிறார்.

அச்சத்தில் உறைந்தே போகும் அளவுக்குச் சில உண்மைகளை அவர் அந் நூலில் தெரிவித்துள்ளார். ராபர்ட் கிளைவ், கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரத்துக்குள் “ஒரு உள் வியாபாரம்’ செய்து பெரும் தொகையை அள்ளியிருக்கிறார். கம்பெனியின் தலைவரும் அவரே என்பதால் மோசடி செய்வது அவருக்குக் கடினமான வேலையாக இருக்கவில்லை.

பிரிட்டனிலோ, கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திடமிருந்தும் அரசிடமிருந்தும் அவ்வப்போது சலுகைகளைத் தொடர்ந்து பெற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து லஞ்சம் கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர்.

“மேலை நாடுகளின் நாகரிகத்தின் பின்னால் இருப்பது, ஈரானிய எண்ணெய் வயல்களில் அடித்த கொள்ளையில் கிடைத்த லாபம்தான்’ என்று ஈரானிய அதிபர் அகமதி நிஜாத் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் அவனை, “மரை கழன்றவன்’ என்றும் “மேலைநாடுகளுக்கு எதிரானவன்’ என்றும் முத்திரை குத்தும் அளவுக்கு எல்லோருடைய மூளையும் அற்புதமாகச் சலவை செய்யப்பட்டிருக்கிறது.

அகமதி நிஜாத் என்ன சொன்னாரோ அது உண்மைதான்! 1950-களின் ஆரம்பத்தில் ஈரானில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த மூசாதேக் என்பவர் ஈரானின் மன்னரான ஷாவை நாட்டைவிட்டே ஓடவைத்தார். பிறகு ஈரானின் எண்ணெய் வயல்களை தேச உடைமையாக்கினார். எண்ணெய் வயல்களைச் சொந்தமாக வைத்திருந்த பெரும் பணக்காரர்களும், மேற்கத்திய நாடுகளின் அரசுகளும் சில மாதங்களுக்கெல்லாம் இணைந்து செயல்பட்டு மன்னர் ஷாவை மீண்டும் ஈரானுக்கு அழைத்துவந்து முடிசூட்டின. மூசாதேக் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

இது தனிப்பட்ட ஒரு சம்பவம் அல்ல. சூயஸ் கால்வாயை கமால் அப்துல் நாசர் தேச உடைமையாக்கியபோது, எகிப்துடன் யுத்தத்துக்குச் சென்று மூக்குடைபட்டு திரும்பியது பிரிட்டன்.

பனாமா கால்வாய் யாருக்குச் சொந்தம் என்ற நீண்ட கால பிரச்னை முற்றி, 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு எதிரான கலவரமாக உருவெடுத்தது. அப்போது அமெரிக்கா பனாமா மீது படையெடுத்து, அதன் அதிபர் மேனுவல் நோரிகாவை போதைப் பொருள் கடத்தல் சட்டப்படி கைது செய்தது.

ஏகாதிபத்தியத்திடம் காலனிகளாக இருந்த நாடுகள் விடுதலை பெற்ற பிறகும் காலனியாதிக்கம் முடியவில்லை; 19-வது நூற்றாண்டில் பிரிட்டன் செய்த வேலையை இப்போது அமெரிக்கா எடுத்துக் கொண்டுவிட்டது. வியாபாரத்தில் உள்ளடி வேலை செய்யும் “உள்-வர்த்தகம்’ என்ற அயோக்கியத்தனத்தை அது கையாள்கிறது. என்ரான், வேர்ல்ட் காம். போன்ற பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் அடையாளம் இல்லாமல் மறைந்த கதையைப் பார்த்தாலே இந்த பித்தலாட்டம் புரியும்.

அரசியல்ரீதியான ஊழல் என்பதை, வாஷிங்டனில் “ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தரகுக் கூட்டம்’ என்று நிலைநிறுத்திவிட்டது அமெரிக்கா. அத்தோடுகூட, அது தனது ராணுவ பலத்தையும் மிதமிஞ்சிப் பயன்படுத்துகிறது.

இராக்கில், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் காலடி எடுத்து வைத்தது அங்குள்ள எண்ணெய் வளத்துக்காகத்தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா?

இப்போது “கிழக்கிந்திய கம்பெனி’ உலகம் முழுக்க பரவியிருக்கிறது. ராபர்ட் கிளைவும் வாரன் ஹேஸ்டிங்ஸýம் இன்னமும் உலா வருகின்றனர். அவர்களின் பெயர்தான் “உலக வங்கி’, “உலகமயமாக்கல்’ என்று மாற்றி வழங்கப்படுகிறது!

————————————————————————————————————–
யாருக்காக மானியங்கள்?

விவசாயத்துக்கான மானியங்கள் தொடரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்திருக்கிறார். அதே சமயம், உரங்களுக்குத் தரப்படும் மானியத்தை புதிய முறையில் எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்து அடுத்த ஆண்டு முதல் அமலுக்குக் கொண்டுவரலாம், இந்த ஆண்டு பழைய முறையிலேயே மானிய உதவியை அளிக்கலாம் என்றும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பிரதமர் முடிவெடுத்திருக்கிறார்.

விவசாயத்துக்கு மானியம் என்பது அவசியம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளுக்கே இதில் இருவித கருத்துகள் இல்லை. அதே சமயம், உர மானியம் என்பது யாருக்குப் போகிறது, அது நீடிப்பது அவசியமா என்பதைக் கட்டாயம் தீர்மானித்தாக வேண்டும்.

கடந்த ஆண்டு உர மானிய நிலுவை ரூ.8,000 கோடி என்றும் இந்த ஆண்டு ரூ.40,000 கோடி என்றும் அரசே வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மத்திய புள்ளியியல் துறை கணக்கெடுப்பின்படி, 2000-01-ம் ஆண்டில் உர மானியமாக ரூ.13,800 கோடி, மின்சார மானியமாக ரூ.6,449 கோடி, பாசன மானியமாக ரூ.13,681 கோடி, இதர மானியங்களாக ரூ.854 கோடி என்று மொத்தம் ரூ.34,784 கோடி விவசாயத்துக்காக தரப்பட்டுள்ளது.

உணவு தானிய கையிருப்பைப் பொருத்தவரை, 3 மாத கையிருப்பு, 6 மாத கையிருப்பு என்பதெல்லாம், பொது விநியோக முறைக்கு மாதந்தோறும் எடுத்துக்கொள்ளப்படும் அரிசி, கோதுமை போன்றவற்றின் அளவைப் பொருத்ததே தவிர உண்மையில் நம் நாட்டு மக்களின் தேவையைப் பொருத்தவை அல்ல.

லட்சக்கணக்கான டன்கள் கோதுமை, அரிசி கையிருப்பில் இருக்கும் அதேவேளையில் 20 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. ஒரு வேளை சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் இரவில் பட்டினியோடு படுப்பவர்கள் பற்றிய புள்ளிவிவரம் ஏதும் திரட்டப்படுவதில்லை.

“வேலைக்கு உணவு திட்டம்’ என்ற முன்னோடி திட்டம்கூட, தேர்வு செய்யப்பட்ட மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில்தான் முனைப்பாக அமல்படுத்தப்படுகிறது. அதுவும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் உதவியோடு மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

உர மானியம் தொடர்பாக அடிக்கடி பேசப்படும், அதே வேகத்தில் மறக்கப்படும் இரு விஷயங்கள் நினைவுபடுத்தப்பட வேண்டியவை. உர உற்பத்தியில் பொதுத்துறை (அரசு) நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஈடுபடுகின்றன. உர உற்பத்திக்கு அரசு நிறுவனங்கள் எவ்வளவு (விரயமாக) செலவு செய்தாலும், எந்த அளவு உற்பத்தி செய்தாலும் அவற்றை அரசு வாங்கிக் கொண்டு மானியத்தையும் கையோடு வழங்கிவிடுவதால், அரசின் மானியம் விரயமாகிறது என்பது முதல் குற்றச்சாட்டு. நவீனத் தொழில்நுட்பத்தில், செலவைக் குறைத்து தயாரிப்பது அவசியம் என்ற நிர்பந்தம் இல்லாமல் பழைய முறையிலேயே தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்பது இக்குற்றச்சாட்டின் சாரம்.

அடுத்தது, ரசாயன உரங்களால் நிலம் தன்னுடைய இயற்கையான சத்தை இழப்பதுடன், சாகுபடியாகும் உணவு தானியங்களும் உண்பவர்களுக்குத் தீங்கை விளைவிப்பனவாக இருக்கின்றன என்பதாகும். எனவே இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். மக்கிய எருவையும், மண்புழுக்களையும் நிலங்களில் இட்டு மண்ணை வளப்படுத்த வேண்டும் என்ற கூக்குரல் எங்கும் கேட்க ஆரம்பித்துவிட்டது. இயற்கை வேளாண்மை என்ற கருத்தை வலியுறுத்துகிறவர்கள் இதையும் வலியுறுத்துகின்றனர்.

விவசாய விலை நிர்ணயக் குழு என்ற உயர் அமைப்பில், சாகுபடியாளர்களின் நேரடிப் பிரதிநிதிகளை அதிக அளவில் சேர்த்து, அவர்களைக் கொண்டே பிராந்தியங்களுக்கு ஏற்ற வகையில் கொள்முதல் விலைகளையும் சிறப்பு மானியங்களையும் நிர்ணயிக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்துள்ளபடி, சந்தையில் நிலவும் விலைக்குக் குறையாமல் கொள்முதலுக்கு விலைதரப்பட வேண்டும். குறைந்தபட்ச கொள்முதல் விலை என்பது, விவசாயிகளின் அடிவயிற்றில் அடிப்பதாக இருப்பதைக் கைவிட வேண்டும். வேளாண் பொருள்களின் விலை உயர்ந்தால் பணவீக்க விகிதம் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று “”நிபுணர்கள்” மிரட்டுவதை கேட்டுக் கொண்டு விவசாயத்தைப் படுகுழியில் தள்ளக்கூடாது.

Posted in abuse, Affairs, Agriculture, America, bank, Barrier, Biz, Business, Canal, Center, CIA, Consumer, Corn, Corporation, Current, Customer, Divide, Duty, Economy, Electric, Electricity, England, ethanol, Exploit, Exploitation, External, Farming, Farms, Fertilizer, Fertilizers, Finance, Foreign, GDP, Govt, Growth, IMF, Incentive, Incentives, Income, Industry, International, Iran, Irrigation, IT, MNC, multinational, Needy, NRI, Panama, Poor, Power, Queen, Relations, Rich, State, Subsidy, Suez, Tamil, Tariffs, Taxes, Trade, UK, Unipolar, USA, War, warlord, WB, Wealthy, World, world bank | Leave a Comment »

Centre sanctions subsidy for sugar exports, says Pawar

Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007

“சர்க்கரை உற்பத்தி 260 லட்சம் டன்களாக உயரும்’

புது தில்லி, மார்ச் 28: 2006-07-ம் ஆண்டுக்கான கரும்பு அரைவைப் பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 260 லட்சம் டன்களைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் சர்க்கரை உற்பத்தி 193 லட்சம் டன்களாக இருந்தது. கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் உற்பத்தி அதிரித்துள்ளதாக சர்க்கரை ஆலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை உற்பத்தி நடப்பாண்டில் 250 லட்சம் டன்களைத் தாண்டும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு ஆகியவை அரசுக்கு அறிக்கை அளித்திருப்பதாக மத்திய அமைச்சர் சரத்பவார் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் தற்போது கரும்பு அரைவைப் பருவமாகும். எனவே சர்க்கரை உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என கரும்பு ஆலை அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மாநில சர்க்கரை ஆலைகள் ஆணையரின் அறிக்கைப்படி நடப்பு அரைவைப் பருவத்தில் சர்க்கரை உற்பத்தி, 238.34 லட்சம் டன்களை எட்டும் என அரசு மதிப்பீடு செய்திருந்தது.
============================================================================================

சர்க்கரை ஏற்றுமதிக்கு ரூ.850 கோடி ஊக்கத்தொகை

புனே, மார்ச் 28: சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்காக மத்திய அரசு ரூ.850 கோடி ஊக்கத் தொகை அனுமதித்துள்ளது. நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி அதிகரிக்கும் என்பதால் கடந்த ஜனவரி முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் புனேயில் தெரிவித்தார்.

நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி 250 லட்சம் டன்களை எட்டும் என்றும், ஏற்கெனவே 40 லட்சம் டன் உபரியாக கையிருப்பு உள்ளது என்றும், ஆண்டுக்கு நமது உள்ளூர் தேவை 190 லட்சம் டன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்க்கரை ஏற்றுமதிக்கு, துறைமுகம் உள்ள மாநிலங்களில் டன் ஒன்றுக்கு 1300-ம் பிற இடங்களில் ரூ.1400-ம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றார்.

கோதுமை உற்பத்தி நடப்பாண்டில் 72 லட்சம் டன்களாக இருக்கும். கோதுமை ஏற்றுமதிக்கு அரசு அனுமதிக்காது. தேவையைப் பொறுத்து தரமுள்ள 30 லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Posted in Agriculture, Ban, Budget, Commerce, Commodity, Expenditure, Exports, Finance, Government, Govt, Industry, maharashtra, Mahrashtra, Manufacturing, Pawar, Prices, Production, Stock, Subsidy, Sugar, Sugarcane, Trading | 1 Comment »

‘There are no plans in the budget to solve the woes of the Farmers’ – Gurumurthy

Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007

விவசாயிகளின் நெருக்கடியைத் தீர்க்க பட்ஜெட்டில் திட்டம் இல்லை: குருமூர்த்தி கோவை, மார்ச் 8: விலைவாசி உயர்வுக்கும் வேளாண் துறை சந்தித்து வரும் நெருக்கடிக்களுக்கும் தீர்வு காணும் திட்டம் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று கட்டுரையாளர் எஸ். குருமூர்த்தி கூறினார்.

இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் கோவையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய பட்ஜெட் குறித்த கூட்டத்தில் அவர் பேசியது:

இந்த பட்ஜெட்டில் தெளிவான அரசியல் பார்வை இல்லை. வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்துள்ளதுபோல நிதியமைச்சர் கூறியுள்ளார். வேளாண் விரிவாக்கத் திட்டங்களுக்குப் புத்துயிர் அளிப்பது போன்ற 7 அம்சங்கள் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இடம் பெற்றுள்ளன.

கடன் சுமையைத் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சினை, வேளாண் துறையில் குறைந்து கொண்டே போகும் மூலதன உருவாக்க விகிதம், வேளாண் துறையில் அரசின் முதலீடு குறைந்து கொண்டே செல்லும் போக்கு, உணவு தானிய உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை குறித்து பட்ஜெட்டில் முழுமையாக விளக்கவே இல்லை.

நாட்டின் பொருளாதாரத்துக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் பார்க்காமல் வெறும் ஆண்டுச் சடங்காக பட்ஜெட்டை மாற்றிவிட்டார்.

நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. விலைவாசி உயர்வுக்கு நிதியமைச்சர் கூறும் காரணம் ஏற்கக் கூடியதாக இல்லை.

கிராமப்புற சமூக பாதுகாப்புத் திட்டமும் மழைநீர் சேகரிப்புத் திட்டமும் வரவேற்கத்தக்கவை. அதிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட்டில் தெளிவான திட்டம் எதுவும் இல்லை. குழப்பமே அதிகம் காணப்படுகிறது.

நாட்டில் ரியல் எஸ்டேட் தொழிலில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் 10 சதவீதம் உயர்வு காணப்படுகிறது என்றார் குருமூர்த்தி.

உலகமயமாதல் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல: பத்திரிகையாளர் குருமூர்த்தி பேச்சு

சென்னை, மார்ச் 9: உலகமயமாதல் என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. பன்முகத் தன்மை கொண்டது என்று பத்திரிகையாளரும், ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி குறிப்பிட்டார்.

துரைப்பாக்கம் எம்.என்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரியில் “உலகமயமாதலும் எதிர்கொள்ள வேண்டிய உத்திகளும்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் குருமூர்த்தி ஆற்றிய சிறப்புரை:

உலகமயமாதல் பிரச்சினைக்கு உளவியல், பண்பாடு, அரசியல் எனப் பல பரிமாணங்கள் உண்டு. இப்பிரச்சினையை நிபுணர்களோ, வணிகர்களோ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

நம் நாட்டில் ஏற்பட்ட சில பொருளாதார மாற்றங்களுக்கு உலகமயமாதல்தான் காரணம் என்றும் சித்திரிக்கப்படுகிறது. அது சரியல்ல. உண்மையில் தொழில் நிறுவனங்களின் மீது அரசு கொடுத்த அழுத்தம் தளர்த்தப்பட்டதே காரணம்.

மேலை நாடுகளில் வலிமையான அரசு உண்டு. வலிமையற்ற சமுதாயம் உள்ளது. இந்தியாவில் வலிமையற்ற அரசு இருக்கிறது. ஆனால், நம் சமுதாயம் வலிமையானது.

இந்தியாவில் பண்பாட்டின் அடிப்படையிலான சமுதாயமே உலகமயமாதலை எதிர்கொண்டு வெற்றி பெறப் போகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் தங்கிய இந்தியர்கள் இந்தியாவைப் பழித்துக் கொண்டிருந்தனர்.

போக்ரனில் அணு ஆயுத சோதனையை இந்தியா நடத்தியது உலக நாடுகளை உலுக்கிவிட்டது. அதன் விளைவாக ஜப்பான் உள்பட அனைத்து நாடுகளும் இந்தியாவிலிருந்து பொருளாதார ரீதியில் மிரட்டின.

அதுவரை இந்தியாவைப் பழித்துக் கொண்டிருந்த வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து மொத்தம் 58 லட்சம் டாலர் அளவுக்கு முதலீடு வந்து குவிந்தது.

ஒவ்வொரு நாட்டுக்கும் மென் சக்தி என்றும் வன் சக்தி என்றும் உண்டு. நாட்டின் வளமை, கல்வியறிவு, அறிவியல் வளர்ச்சி ஆகியவை மென் சக்தி. ஆனால், ராணுவ வலிமை, படைபலம் என்பது வன் சக்தி.

மென் சக்தி அபரிதமாக உள்ள ஜப்பானுக்கு உலக அளவில் போதிய மரியாதை கிடைக்காததற்கு வன்சக்தி இல்லாததே காரணம் என்றார் குருமூர்த்தி.

கருத்தரங்கைத் தொடங்கி வைத்த இந்தோ ஜப்பான் தொழில் வர்த்தக சபைத் தலைவர்என்.கிருஷ்ணசாமி: உலகமயமாதல் என்பது நம் நாட்டுக்குப் புதிதல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாகவே “வசுதேவ குடும்பகம்’ என்ற கோட்பாடு இதைத்தான் வலியுறுத்துகிறது.

உலகமயமாதலை எதிர்கொள்ள கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். மாணவர்களுக்குக் கதவுகளைத் திறந்துவிட வேண்டும்.

உலகமயமாதலின் பாதிப்பைத் தவிர்க்க வேண்டுமானால், நாடுகள் நீங்கி, நாம் அனைவரும் உலகப் பிரஜைகளாக வேண்டும் என்றார்.

கருத்தரங்கை ஒட்டி, கல்லூரியின் மேலாண்மையியல் ஆய்வுத் துறை தயாரித்த மலரை கல்லூரிச் செயலர் ஹரிஷ் எல்.மேத்தா வெளியிட்டார். முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீபால் பங்கேற்றார்.

கல்லூரி முதல்வர் வி.கே.ஆர்.ஜெயசிங் தலைமை வகித்தார். மேலாண்மையியல் துறைத் தலைவர் கே.எஸ். மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். துணைப் பேராசிரியர் ரூபி செல்வின் நன்றி கூறினார்.

முரசொலி மாறனின் உறுதி

“”தோஹா மாநாட்டில் உலக வர்த்தக சபை முன் வைத்த தீர்மானங்களை இந்தியாவின் சார்பில் பங்கேற்ற அப்போதைய தொழில் அமைச்சர் முரசொலி மாறன் ஏற்கவில்லை.

அத்தீர்மானத்தை வடிவமைத்தவர் யார் என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளிக்க உலக வர்த்தக சபையினர் திணறினர். வளரும் நாடுகளைப் பாதிக்கும் அத்தீர்மானத்தில் கையெழுத்திட முரசொலி மாறன் உறுதியாக மறுத்து விட்டார்.

இறுதியில் அமெரிக்கா மெüனமாக தீர்மானத்தைத் திரும்பப் பெற்றது. மாறனுடன் எனக்குப் பல சில முரண்பட்ட கொள்கைகள் இருந்தாலும் அவர் காட்டிய உறுதி மிகவும் பாராட்டத்தக்கது. அதுதான் இந்தியாவின் வலிமை” என்றார் குருமூர்த்தி.

வரி விலக்குகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும்: ப.சிதம்பரம் அறிவிப்பு

புதுடெல்லி, மார்ச்.8-

இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய கவுன்சில் சார்பில் மத்திய பட்ஜெட் பற்றிய கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பட்ஜெட் அம்சங்கள் பற்றி பேசினார். அப்போது வரி விலக்குகளை அரசு படிப்படியாக வாபஸ் பெறும் என்று அறிவித்தார்.

அவர் கூறியதாவது:-

வரி விலக்குகள் காரணமாக 2006-007-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 191 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஒவ்வொரு வகைக்கு வழங்கப்படும் வரி விலக்கும் ஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் கூறி இருக்கிறார். எனவே வரி விலக்குகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும். எந்தெந்த வகைக்கு வழங்கப்படும் வரி விலக்குகளை விலக்கிக் கொள்ளலாமோ அந்த வரி விலக்குகளை அரசு வாபஸ் பெறும்.

என்றாலும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, அறிவுசார் துறைகள், மூத்த குடிமக்கள் தொடர்பான வரிவிலக்குகள் நீடிக்கும்.

ஆபத்து மிகுந்த தொழில்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கும் பிரச்சினையில் எந்தெந்த தொழில்கள் மீதான முதலீடு என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது அரசாங்கம்தான்.

வேளாண்மை துறைக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. வேளாண்மை பொருட்களின் இறக்குமதியால் அவற்றின் சப்ளை அதிகரித்து விலை குறையும். என்றாலும் வேளாண்மை பொருட்களின் உற்பத்தியை பெருக்குவதுதான் இதற்கு நீண்டகால தீர்வு ஆகும். எனவே நெல், கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணை ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐ.டி.ஐ. நிறுவனங்களை நவீனப்படுத்துவதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதற்காக ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஐ.டி.ஐ. நிறுவனங்களை நவீனமாக்கும் முயற்சியில் அரசுடன் தொழில் துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

உற்பத்தி வரி மற்றும் சேவை வரியை இணையதளம் மூலம் செலுத்தும் முறையை தொடங்கி வைத்து ப.சிதம்பரம் பேசுகையில் கூறியதாவது:-

பொருளாதார வளர்ச்சி 8.5 முதல் 9 சதவீதம் என்ற அளவில் உள்ளது. உற்பத்தி வளர்ச்சியும் இரு இலக்கமாக உள்ளது. ஆனால் அந்த அளவுக்கு உற்பத்தி வரி வசூல் வளர்ச்சி விகிதம் அமையாதது ஆச்சரியமாக உள்ளது. கம்பெனிகளின் வருமான வரி, சேவை வரி வசூல் அதிகரித்த அளவுக்கு உற்பத்தி வரி வசூல் உயரவில்லை. உற்பத்தி வரி ஏய்ப்பு நடைபெறுவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்த நிலை நீடித்தால் அது நீண்டகால போக்கில் கம்பெனிகளை பாதிப்பதாக அமையும். கம்பெனிகள் உற்பத்தி வரியை குறித்த காலத்தில் முறைப்படி செலுத்த வேண்டும். இது நல்ல தொழில் அணுகுமுறை ஆகும்.

இந்த நிதி ஆண்டில் உற்பத்தி வரி வசூல் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 266 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. உற்பத்தி வரி வசூலில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

“மத்திய விற்பனை வரி 3 ஆண்டுகளில் ரத்தாகும்’

புதுதில்லி, மார்ச் 10: மத்திய விற்பனை வரி (சிஎஸ்டி) விதிப்புமுறையை ரத்து செய்யும் நோக்கிலான மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய விற்பனை வரி 4 கட்டங்களாக மூன்று ஆண்டுகளுக்குள் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

இதையடுத்து “ஒருங்கிணைந்த பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மசோதாவை’, 2010- ஏப்ரல் 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வழியேற்படும்.

“1956 சிஎஸ்டி சட்டத்தை’ திருத்தும் நோக்கில் இந்த வரிவிதிப்பு சட்ட (திருத்த) மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிஎஸ்டி வரிவிதிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி மூன்றிலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும்; அதற்கு அடுத்த ஆண்டு (2009) இரண்டிலிருந்து ஒரு சதவீதமாகவும், 2010 மார்ச் 31-ம் தேதி முழுவதுமாகவும் ரத்து செய்யப்படும். மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வெள்ளிக்கிழமை மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

சிஎஸ்டி வரிவிதிப்பு முறையை நீக்க வேண்டும் என்ற யோசனை 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பலமுறை கூடி ஆலோசித்து ஒருமித்த கருத்தை எட்டிய பிறகே இதை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பால், எண்ணெய், உரம் விலையை குறைக்க நடவடிக்கை: ப.சிதம்பரம்

புதுதில்லி, மார்ச் 10: நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக, பால், எண்ணெய்வித்துக்கள் மற்றும் உரம் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பணவீக்க விகிதம் 5-5.5 சதவீதமாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆனால், கடந்த பிப்ரவரி 24-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் முந்தைய 6.05 சதவீதத்திலிருந்து 6.10 சதவீதமாக அதிகரித்தது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய உறுப்பினர்களுடனான பட்ஜெட்டுக்குப் பிந்தைய ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் சிதம்பரம் கூறியது:

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தானிய மற்றும் பருப்பு வகைகள் மீது கவனம் செலுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. எண்ணெய்வித்துக்கள் மற்றும் உரத்தின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர்களின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படும்.

பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்றார் அவர்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் விதத்தில், வெண்ணெய் எடுக்கப்பட்ட பால் பவுடர் ஏற்றுமதிக்கு கடந்த மாதம் அரசு தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.

========================================================

விளைநிலம் காப்போம்

சிறப்புப் பொருளாதார மண்டலம் பற்றிய அறிவிப்புகளும், இதற்கு விளைநிலங்கள் ஒதுக்கப்படக்கூடாது என்ற எதிர்வினைகளுமாக பரபரப்படைந்திருக்கும் இவ்வேளையில், வேளாண் அறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் ஒரு யோசனையை முன்வைத்துள்ளார்: “சிறப்பு வேளாண்மை மண்டலங்கள் அமைக்கப்பட வேண்டும்’.

வளமான நிலங்களைப் பாதுகாக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் இது அவசியமான ஒன்று. பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களை நகர் விரிவாக்கம் மற்றும் தொழில் வளர்ச்சிக்காக இழந்துவிட்ட இன்றைய நிலையிலும்கூட, காப்பாற்றப்பட வேண்டிய விளைநிலங்கள் இன்னமும் இருக்கவே செய்கின்றன.

சிறப்பு வேளாண்மை மண்டலம் அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனை கொஞ்சம் காலதாமதமானது என்றாலும் மிக அவசியமானது. விவசாய நிலங்களைக் குறைந்த விலையில் வாங்கி, அவற்றை விவசாயப் பட்டியலிலிருந்து நீக்கி, மனைகளாக மாற்றுவதற்கு அங்கீகாரம் பெற்று, பல நூறு மடங்கு லாபம் சம்பாதிக்கும் நிலைமை உள்ளவரையிலும், விவசாய நிலங்களைக் காப்பாற்றுவது எளிதல்ல.

முதல்கட்டமாக, மாவட்ட வாரியாக தற்போது வேளாண்மை நிலம் எவை என்பதை அரசு அறிவிக்க வேண்டும். வேளாண்மை நிலங்கள் குறித்த விவரங்களை மாவட்டம், ஊர், கிராமம், சர்வே எண் விவரங்களுடன் இணைய தளத்தில் வெளியிட்டு இந்த நிலங்கள் குடியிருப்புகளாகவோ தொழிற்கூடங்களாகவோ மாறும் வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இத்தகைய வெளிப்படையான அறிவிப்பு இருந்தால், அரசு அறிவிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கூட விளைநிலத்தில் அமையாத நிலைமை உருவாகும். நகர் விரிவாக்கம் என்ற பெயரில் விளைநிலங்கள் மறையாமல் இருக்க உதவும்.

இந்தியாவில் வேளாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. 60 சதவீதம் பேர் வேளாண்மைத் தொழில்களை நம்பி வாழ்கின்றனர். இருந்தபோதிலும் வேளாண்மை பற்றிய தெளிவு அரசிடம் இல்லை. விவசாயிகளும் ஆர்வம் இழந்தவர்களாக இருக்கின்றனர்.

தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவதற்குத்தான் எந்த அரசும் ஆர்வம் காட்டுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிடும் ஆர்வம், அக்கறை வேளாண்மைக்கு காட்டப்படுவதில்லை.

இன்றைய மிகப்பெரிய சோகம், இரண்டு தலைமுறைகளாக பாரம்பரிய விவசாயத்தை முற்றிலுமாக மறந்துவிட்ட இளம் தலைமுறை விழிபிதுங்கிக் கிடக்கிறது. இயற்கை வேளாண்மையில் மீண்டும் ஈடுபட மனத்தளவில் ஆசை இருந்தாலும், பாரம்பரிய விவசாயம் குறித்த அனுபவ அறிவோ, வழிவழித் தகவல்களோ இல்லாமல் இன்றைய இளம் விவசாயிகள் தயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய சிறப்பு வேளாண்மை மண்டலங்கள் அமைக்கப்படும்போது அவற்றுக்கு அளிக்கப்படும் சலுகைகள் பாரம்பரிய விவசாயத்தை ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும்.

வேளாண்மை நிலங்கள் வேறு பயன்பாட்டுக்குப் போகாமல் காப்பதுபோலவே, இந்த மண்ணுக்கே உரித்தான பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்து, அவற்றை மீண்டும் பரவலாக விளைவிக்கும் முயற்சிகள் தேவையாக இருக்கின்றன. தாவர விதைகள் மற்றும் செடிகொடிகளைக் கொண்டு எளிய முறையில் பூச்சிவிரட்டிகள் தயாரிக்கும் முறை, எரு தயாரிக்கும் பாரம்பரிய முறைகளை மீண்டும் நம் வயல்களில் புகுத்த வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. அந்தந்த நிலத்தில் விளையக்கூடிய பயிர்களைப் பயிரிடுவதும், அந்த நிலத்திற்கு அருகில் கிடைக்கும் பொருளையே உரமாக மாற்றும் பாரம்பரிய வழிமுறைகளை மேற்கொள்வதும் மட்டுமே இன்றைய வேளாண்மையின் செலவைக் குறைத்து, விவசாயிக்கு ஓரளவாகிலும் வருவாய் கிடைக்கச் செய்யும்.

வானிலை, மண்வளம், பயிர் வளர்ச்சி, நீர் பயன்பாடு என எல்லாவற்றிலும் தகவல்தொழில்நுட்பம் புகுந்துவிட்டது. பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கவும் தகவல்தொழில்நுட்பம் உதவும்.

=================================================
மேலும் 50 உழவர் சந்தைகள்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப். 4: புதிதாக 50 உழவர் சந்தைகள் ரூ. 12.5 கோடியில் இந்த நிதியாண்டில் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

வேளாண் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

உழவர் சந்தைக்கு என நிரந்தரப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் மூடப்பட்ட 28 உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அறுவடைக்குப் பின் விளை பொருளை நேர்த்தி செய்யும் தொழில்நுட்ப பயிற்சி ரூ. 50 லட்சம் செலவில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும்.

வட்டி குறைப்பு: விவசாயிகளுக்கான பொருளீட்டுக் கடன் தொகைக்கு வட்டி 8 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும். பொருளீட்டு கடன் அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ. 2.75 கோடியில் 100 உலர் களங்கள் அமைக்கப்படும். சிறு, குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் தோட்டக்கலை மூலிகைப் பயிர்கள் மற்றும் மலைப் பயிர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்ய தனி சந்தைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி மண்டலங்களில் மேம்படுத்தப்பட்ட நாற்றங்கால்கள் அமைக்கப்படும்.

வேளாண் பல்கலையில் ரூ. 50 கோடியில் வசதிகள்: மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 50 கோடி நிதியைக் கொண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உலகத் தரம் வாய்ந்த பரிசோதனை ஆய்வுக் கூடம் உள்பட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

சென்னை நந்தனத்தில் வேளாண்மை பள்ளியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்ததை ஆங்கிலேயர்கள் கோவைக்கு மாற்றம் செய்தனர். இவ்வாறு மாற்றப்பட்டு 100 ஆண்டுகள் ஆனதையொட்டி வேளாண் பல்கலைக்கழகத்தில் நூற்றாண்டு கட்டடம் ரூ. 5 கோடியில் கட்டப்படும்.

தருமபுரியில் வேளாண் அறிவியல் மையம்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் 100 சதவீத நிதி உதவியுடன் தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி கிராமத்தில் வேளாண்மை அறிவியல் மையம் ரூ. 1 கோடி 10 லட்சம் செலவில் அமைக்கப்படும். இம் மையத்தில் விவசாயிகள், பண்ணை மகளிர், இளைஞர்களுக்கு வேளாண் தொழில்களில் பயிற்சி அளிக்கப்படும்.

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 560 ஹெக்டேர் பரப்பில் ரூ. 5.56 கோடியில் துல்லிய பண்ணை திட்டம் செயல்படுத்தப்படும்.

தேசிய தோட்டக்கலை திட்டத்தின் மூலமாகவும் நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலமாகவும் 390 ஹெக்டரில் ரூ. 4 கோடியில் துல்லிய பண்ணைத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

ஏற்றுமதிக்கு உகந்த வாழையில் 150 ஹெக்டேர் பரப்பில் ரூ. 2 கோடியில் துல்லியப் பண்ணை அமைக்க தேசிய தோட்டக் கலை வாரியத்தின் மூலம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும்.
=================================================
வேளாண் துறை இரண்டு அடுக்காக மாற்றப்பட்டு சீரமைக்கப்படும்: அமைச்சர்

சென்னை, ஏப். 4: வேளாண் துறையில் மூன்று அடுக்கு முறை மாற்றப்பட்டு இரண்டு அடுக்கு முறை செயல்படுத்தப்படும். அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

வேளாண்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

நவீன தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு விரைவில் சென்றடையவும் ஒரே இடத்தில் கிடைத்திடவும் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனைத்துறை, விதைச்சான்று துறை ஆகிய துறைகளின் விரிவாக்கப் பிரிவுகளை ஒருங்கிணைத்து விவசாயிகள் ஒன்றிய அளவில் அனைத்து தகவல்களையும் பெற ஏற்பாடு செய்யப்படும்.

அதன் பொருட்டு தற்போது தாலுகா அளவில் பணியாற்றி வரும் பணியாளர்களின் பணி நிலை பாதிக்காதவாறு ஒன்றிய அளவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

நிர்வாகம் மாவட்ட அளவிலிருந்து ஒன்றிய அளவில் நேரடியாகச் செயல்படும்.

பயணப்படி உயர்வு: வேளாண் துறையில் பணிபுரியும் உதவி வேளாண் அலுவலர்களுக்கு 1996-ம் ஆண்டு முதல் நிரந்தர பயணப்படி மாதம் ஒன்றுக்கு ரூ. 140 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் எரிபொருள் செலவினங்கள் உயர்ந்துள்ள நிலையில் பயணப்படியை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.

அங்கக நடைமுறைகள் கடைப்பிடித்து உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களுக்கு சான்று அளிக்கும் வகையில் தற்சமயம் இயங்கி வரும் வேளாண்மை விதைச் சான்று துறையானது “விதை மற்றும் அங்கக சான்றளிப்பு துறை’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.

அங்கக வேளாண்மை சான்றிதழ் பயிற்சி பெறவும் அதற்கென ஒரு தனிப் பிரிவு தொடங்கவும் தில்லியில் உள்ள அபிடா நிறுவனத்தில் பயிற்சி பெற உயர் அலுவலர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

தரிசு நில மேம்பாடு: சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான பட்டா தரிசு நிலங்களை 50 ஏக்கருக்கு மேல் ஒரு தொகுப்பாக உள்ள இடங்களில் நிலத்தின் உரிமையாளர்கள் கூட்டாகச் சேர்ந்து கோரிக்கை வைத்தால் அரசு தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயத்துக்கு ஏற்ற நிலமாக சீர் செய்து கொடுக்கப்படும்.

அதோடு தேவையான அளவு நிலத்தடி நீரும், சாதகமான புவியியல் நிலையும் இருக்கும் இடங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி கொடுத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்ய மானிய உதவிகள் வழங்கப்படும். நிலத்தடி நீர் போதுமான அளவு இல்லாத தொகுப்பு நிலங்களில் மரப் பயிர்கள் நடவுசெய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

=================================================

வேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு ரூ. 25 ஆயிரம் கோடி திட்டம்: பிரதமர் அறிவிப்பு

புதுதில்லி, மே 30: வேளாண்மைத் துறை வளர்ச்சிக்கு ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.

புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் நிறைவுரையாற்றிய போது பிரதமர் மன்மோகன் சிங் இத் திட்டத்தை அறிவித்தார்.

வேளாண்மைத் துறையின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடுத்த 4 ஆண்டுகளில் இந் நிதி வழங்கப்படும் என்றார்.

இது குறித்து அவர் மேலும் பேசியது:

வேளாண்மைத் துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு அடுத்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு இந் நிதியை வழங்கும். இது தொடர்பான திட்டத்தை அடுத்த இரு மாதங்களில் திட்டக் குழு மற்றும் மத்திய வேளாண்மை அமைச்சகம் இறுதி செய்யும்.

வேளாண்மைத் துறை அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னைகளைத் தீர்க்க மாநில அரசுகளை ஊக்குவிக்கும் வகையில் இத் திட்டம் இருக்கும்.

கோதுமை, நெல், தானியங்கள் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் உணவுப் பாதுகாப்பு இயக்கம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. உணவு தானியப் பொருள்களுக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையை குறைக்கும் நோக்கிலும் இத் திட்டம் அறிவிக்கப்படவுள்ளது.

கடுமையான முடிவுகள் எடுத்து அதை தீவிரமாக அமல்படுத்தினால் மட்டுமே வேளாண்மைத் துறையில் 4 சதவீத வளர்ச்சியை அடைய முடியும்.

தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைக்க நிதி அமைச்சர் ப. சிதம்பரம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

முன்னதாக, தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் கோதுமை உற்பத்தியை 80 லட்சம் டன்களாகவும், நெல் உற்பத்தியை 1 கோடி டன்களாகவும், தானிய உற்பத்தியை 20 லட்சம் டன்களாகவும் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உணவு பாதுகாப்பு இயக்கம்: மன்மோகன் சிங் யோசனை

பற்றாக்குறை காரணமாக அண்மையில் கடுமையாக விலை உயர்ந்த கோதுமை, நெல், தானியங்கள் மற்றும் உணவு எண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க உணவுப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கலாம் என பிரதமர் மன்மோகன் சிங் யோசனை தெரிவித்தார்.

புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த 53-வது தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் இது குறித்து அவர் மேலும் பேசியது:

வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எந்தவகையில் உதவி செய்யலாம் என்பதை வரையறுக்க திட்டக்குழு உரிய பரிந்துரைகள் அளிக்கலாம் என்றார்.

கூட்டத்தில் மத்திய வேளாண்மை அமைச்சர் சரத் பவார், திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்டோர் பேசினர்.

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங், நிதி அமைச்சர் ப. சிதம்பரம், திட்டத்துறை இணை அமைச்சர் எம்.வி. ராஜசேகரன், திட்டக் குழு உறுப்பினர் செயலர் ராஜீவ் ரத்னா ஷா, மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

11-வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்கான வேளாண்மைக் கொள்கைகளை வகுப்பது தொடர்பாக இக் கூட்டம் நடைபெற்றது.

—————————————————————————————–
வேளாண்மைத் துறை மானியங்களை குறைக்க வேண்டும்: சரத்பவார் குழு பரிந்துரை

புதுதில்லி, மே 30: வேளாண்மைத் துறையை மேம்படுத்த மானியங்களைக் குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையிலான துணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பரிந்துரையில் மேலும் கூறியிருப்பது:

நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்

வேளாண்மைத் துறைக்கு மாநில அரசுகள் அளித்து வரும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். பாசனத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உணவுப் பதப்படுத்தல் துறையில் உள்ள தடைகளை நீக்க வேண்டும்.

வேளாண் மண்டலங்கள்

வேளாண்மைக் கடன் வசதியை மேம்படுத்தவும், கடன் வசூலை விரைவு படுத்தவும் சிறப்பு மையங்கள் கொண்ட மண்டலங்களை நாடு முழுவதும் அமைக்க வேண்டும். கடன் வசூலிப்பு மையங்களின் தலைவர்களாக சுயேச்சையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். குறிப்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிக்கலாம்.

இன்சூரன்ஸ் திட்டத்தில் புதிய அணுகுமுû

தற்போது நடைமுறையில் உள்ள பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் புதிய அணுகுமுறைகளை கொண்டு வர வேண்டும். அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பில்லாத பயிர்களை இத் திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.

4 சதவீத வளர்ச்சி

11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் பொருளாதார வளர்ச்சி வீதம் 9 சதவீதமாக இருக்கும் நிலையில், வேளாண்மைத் துறையின் வளர்ச்சி வீதம் 4 சதவீதமாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

மானியங்களை குறைக்க வேண்டும்

உலக வர்த்தக அமைப்பின் வேளாண்மைத் துறை சார்ந்த கொள்கையைப் பின்பற்றி, மானியங்களை குறைக்க வேண்டும். மானியமாக அளிக்கப்பட்டு வரும் நிதியை ஆராய்ச்சி, விரிவாக்கப் பணிகள், அடிப்படைக் கட்டமைப்பு வசதி மற்றும் வேளாண்மை இன்சூரன்ஸ் போன்ற திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.

உற்பத்தி குறைவுக்கு கவலை

கடந்த 10 ஆண்டுகளாக வேளாண்மைத் துறையில் உற்பத்தி குறைந்து கொண்டே வருவது கவலையளிக்கிறது. புதிய விளைநிலங்களை அதிகரிக்கவும் வாய்ப்பு இல்லாத நிலையில், உற்பத்தியும் குறைந்து வருவது நாட்டின் உணவு பாதுகாப்புக்கு ஆபத்தானது.

1980-களில் 3.1 சதவீத வளர்ச்சியில் இருந்த கோதுமை உற்பத்தி 1990-களில் 1.83 சதவீதமாகவும், 2004-05-ம் ஆண்டில் 0.11 சதவீதமாகவும் உள்ளது. அதே போல் அரிசி உற்பத்தியும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்று துணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

————————————————————————————————-

உழவுக்கு வஞ்சனை!
June 1, 2007 Dinamani Editorial

விவசாயத்திலிருந்து நாட்டின் மொத்த உற்பத்திக்கான பங்களிப்பு கடந்த சில ஆண்டுகளாகவே 2%-க்கும் குறைவாக இருப்பதால் இம் முறை அரசின் முழுக் கவனமும் அத்துறை மீது திரும்பியிருக்கிறது. ஏற்கெனவே ஒதுக்கியிருக்கும் நிதியுடன் கூடுதலாக ரூ. 25,000 கோடி ஒதுக்க மத்திய அரசு தயார், மாநிலங்கள் தங்களுடைய சூழல், தேவைகளுக்கேற்ப திட்டங்களைத் தீட்டி எங்களை அணுகினால் போதும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரமும் தில்லியில் கூடிய தேசிய வளர்ச்சிமன்றக் கூட்டத்தில் சமீபத்தில் கூறியிருக்கிறார்கள்.

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. விவசாயத்தின் “”உண்மையான பிரச்னைகளை”த் தீர்க்க யாருக்கும் மனது இல்லை. இப்போது விவசாயம் லாபகரமான தொழில் இல்லை. 15 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள்தான் அதிகம். ஜமீன்தாரி முறையை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட நில உச்சவரம்பு சட்டம் இப்போது விவசாய உற்பத்திக்கே உச்சுருக்காக இருக்கிறது. விவசாய நிலங்கள் பாகப்பிரிவினை காரணமாக, பல துண்டுகளாகச் சுருங்குவதால் திட்டமிட்ட வகையிலோ, கட்டுப்படியாகும் வகையிலோ சாகுபடிகளை மேற்கொள்ள முடிவதில்லை. பருப்பு வகைகள், சிறு தானியம், எண்ணெய் வித்துகள் சாகுபடி குறைந்ததற்கு இது முக்கிய காரணம்.

நேரடி நெல் விதைப்புக்கும், நாற்று நடுவதற்கும், அறுவடைக்கும் இப்போது இயந்திரங்கள் வந்துவிட்டன. அவற்றை வாடகைக்கு வாங்கித்தான் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். விவசாய வேலைக்கு இப்போது கூலி ஆள்கள் கிடைப்பதில்லை. அருகில் உள்ள தொழிற்பேட்டையில் மாதம் 1,500 ரூபாய் சம்பளத்துக்கு (ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூலி!) எவர்சில்வர் டப்பாவில் “டிபன்’ எடுத்துச் செல்லும் கலாசாரம் கிராமத் தொழிலாளர்களிடையே பரவி வருகிறது. (தஞ்சை டெல்டா போன்ற பகுதிகள் விதிவிலக்காக இருக்கலாம்.) “”விவசாயத்தை நம்பினால் பிழைக்க முடியாது, இது நிரந்தரமான தொழில் அல்ல” என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது.

கரும்பு பயிரிட்டால் காசு அள்ளலாம் என்பதெல்லாம் பொய்யாய், பழங்கதையாகி வருகிறது. “”சர்க்கரை ஆலையில் கரும்பை வெட்ட அனுமதி தரவில்லை, காய்ந்த கரும்பை விவசாயிகள் தீ வைத்துக் கொளுத்தினார்கள்” என்ற செய்திகள் ஏன் வருகின்றன?

விவசாய இன்சூரன்ஸ் திட்டம் என்பது, விவசாயத்தை மக்கள் அனைவரும் கைவிட்ட பிறகுதான் நல்ல நிலையில் அமலுக்கு வரும் என்று தோன்றுகிறது.

விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எல்லா இடுபொருள்களும் கடன் வசதியும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். விவசாய விளைபொருள்களைச் சேமித்துவைக்க கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றைக் கட்டித்தரும் திட்டம் இன்னமும் ஏட்டளவிலேயே இருக்கின்றன.

உழவர் சந்தை திட்டம் ஓரிரு இடங்களில் மட்டுமே துடிப்பாகச் செயல்படுகிறது. கால்நடை வளர்ப்பு, பால் பெருக்கம் போன்ற திட்டங்கள் மக்களுடைய சுய முயற்சியாலும், ஊக்கத்தாலும் மட்டுமே நடைபெறுகிறது. அரசு தரப்பில் முனைப்பு காணப்படுவதில்லை. தரிசு நிலங்களில்கூட காட்டாமணக்கு, கருவேலம் சாகுபடிதான் கண்ணில்படுகிறது.

விவசாயத்தை வளப்படுத்துவது எப்படி என்று விவசாயிகளைத் தவிர “”நிபுணர்கள்” கூடிப்பேசி முடிவெடுப்பதால் இன்னமும் அந்தத்துறை திணறிக் கொண்டிருக்கிறது.

எதை எடுத்தாலும் இறக்குமதி என்கிற முடிவு எடுப்பதும், வெளிநாட்டிலிருந்து எப்போது கப்பல் வரும், மக்களின் பசி தீரும் என்கிற நிலைமை ஏற்படுவதும் ஒரு நாட்டின் சுதந்திரத்துக்கும் இறையாண்மைக்கும் ஆபத்து. உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத எந்தவொரு நாடும் முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாகக் கருத முடியாது. விவசாயத்துக்காகச் செலவிடப்படும் மானியம், நாட்டின் பாதுகாப்புக்காகவும், பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்காகவும் செலவிடப்படும் அடிப்படைச் செலவு என்றுதான் கருத வேண்டும்.

விவசாயத்தை வஞ்சனை செய்து தொழில்வளத்தைப் பெருக்குவது தேசத்துக்கே செய்யும் வஞ்சனை!

Posted in Agriculture, Allocation, Analysis, Biz, BJP, Bonds, Budget, Business, Central Sales Tax, Chidambaram, Commerce, CST, Dharmapuri, Doha, Economy, Exports, Farmers, Farming, Finance, Funds, Garden, Globalization, GST, Gurumurthy, Instructor, Interest, Japan, Loans, Maran, Murasoli, Options, Plan, Planning, Professor, Rates, RSS, Sales Tax, SEZ, Small Biz, solutions, Subsidy, Teacher, University, Water | 1 Comment »

LPG connection – Kerosene, Cooking gas Cylinder distribution policy: Analysis & Study

Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007

எரிவதை எடுத்தால் பொங்குவது நிற்கும்

சமையல் எரிவாயு, பொதுவிநியோக மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு அளித்துவரும் மானியத்தை ஏழைகளுக்கு மட்டும் தருவது பற்றி மத்திய அரசு யோசித்து வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தேவ்ரா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மண்ணெண்ணெய்க்கு லிட்டருக்கு ரூ.15 வீதம் 118 லட்சம் கிலோ லிட்டருக்கு ரூ. 17,700 கோடி மானியம் அளிக்கப்படுகிறது. அதேபோன்று, வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.150 வீதம் 74.42 கோடி சிலிண்டர்களுக்கு ரூ.11,163 கோடி மானியம் வழங்கப்படுகிறது. மொத்தத்தில் ரூ.27,863 கோடி. இதைப் பெரும் சுமையாக மத்திய அரசு கருதுவதில் வியப்பில்லை.

ஆனால், இவற்றின் விநியோகத்தில் நிலவும் முறைகேடுகளைத் தடுத்தாலே மானியச் செலவு பாதியாகக் குறைந்துவிடும் என்பதுதான் உண்மை நிலை. வீட்டுச் சமையலுக்காக விலை குறைத்து விற்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள் முறைகேடாக, வணிகப் பயன்பாட்டுக்கு திசை திருப்பப்படுகின்றன. சமையல் எரிவாயு சிலிண்டரிலிருந்து வணிக சிலிண்டருக்கு எரிவாயுவை மாற்றிக்கொடுக்கும் “”சமூகவிரோத குடிசைத் தொழில்” பரவலாக நடக்கிறது. பொது விநியோக மண்ணெண்ணெயும் தொழிற்கூடங்களுக்கு கூடுதல் விலையில் விற்கப்படுகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஒரு நுகர்வோருக்கு குறைந்தபட்சம் 21 நாள் இடைவெளிக்குப் பிறகுதான் தர வேண்டும் என்பது எண்ணெய் நிறுவனத்தின் நிபந்தனை. ஆனால் நுகர்வோருக்கே தெரியாமல் அவரது கணக்கில் ஒவ்வொரு 21 நாளுக்கும் ஒரு சிலிண்டரை வைத்து கள்ளச் சந்தைக்கு அனுப்பப்படும் முறைகேடுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்த முறைகேடுகளைத் தடுக்க முடியாத மத்திய அரசு, தங்கள் நிதியை வீணடிக்காமல், மானியத்தை ஏழைகளுக்கு மட்டும் கொடுத்து, நிதிச் சுமையை குறைத்துக் கொள்ள முயல்கிறது.

ஏழைகள் என்பதை வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் என்று வைத்துக் கொண்டால், அனைத்துக் குடும்பங்களுமே சமையல் எரிவாயு மானியத்தை இழக்க நேரிடும். மண்ணெண்ணெய் பயன்படுத்துவோரில் பாதிக்கும் மேற்பட்டோர் மானியத்தை இழப்பர்.

மத்திய அரசு இத்தகைய முடிவு எடுக்கும்பட்சத்தில் பாதிக்கப்படுவோர் நடுத்தர வருவாய்ப் பிரிவைச் சேர்ந்த குடும்பங்கள்தான். 21 நாளைக்கு ஒரு சிலிண்டர் என்பதை 30 நாளைக்கு ஒருமுறை என்று மாற்றலாம். அல்லது, நியாயவிலைக் கடைகளில் குடும்ப அங்கத்தினர் எண்ணிக்கைக்கு ஏற்ப சர்க்கரை அளவைத் தீர்மானிப்பது போன்று, சமையல் எரிவாயு பயன்பாட்டிலும் அங்கத்தினர் எண்ணிக்கைக்கு ஏற்ப சிலிண்டர்கள் எண்ணிக்கையை முறைப்படுத்தலாம்.

முறைகேடுகளில் ஈடுபடும் காஸ் ஏஜென்ஸி, மண்ணெண்ணெய் நிலையங்களின் உரிமத்தை ரத்து செய்யும் தீவிர நடவடிக்கை நடைமுறையில் இருந்தால், வணிக வளாகங்களுக்கு சமையல் எரிவாயு செல்வது நின்றுவிடும்.

ஒரு காஸ் ஏஜென்ஸிக்கு 200 குடும்பங்களுக்கு மேல் அனுமதிப்பதை தவிர்த்து, மீதமுள்ள நுகர்வோருக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சமையல் எரிவாயு விநியோகத்தை நடத்தலாம். இவற்றால் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.

மக்களுக்காக தரப்படும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தி, கொள்ளை லாபம் சம்பாதிக்கிற சிலரைத் தண்டிக்கவும், தடுத்து நிறுத்தவும் வழி காணாமல், மானியத்தை நிறுத்துவது நியாயமல்ல.

வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்திலும் பொதுவிநியோக மண்ணெண்ணெய் பயன்பாட்டிலும் முறைகேடுகளைச் செய்வோர், நிச்சயமாக, மக்கள் அல்ல. ஆனால் மானியத்தை ரத்து செய்தால் பாதிக்கப்படுவது மக்கள் மட்டுமே.

Posted in 2007, Analysis, Budget, Cooking Gas, cylinders, Diesel, Distribution, Economy, Electricity, Finance, Gas, Gas Agency, India, Kerosene, LPG, Murali Deora, Petrol, Petroleum, Petroleum Minister, Policy, Politics, Power, Ration, Study, Subsidy | Leave a Comment »

Small Business Administration: SSI Financial Analysis

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

யாருக்காக சட்டம்?

கோ. கிருஷ்ணமூர்த்தி

அக்டோபர் 2 – அன்னியர் ஆதிக்கத்திலிருந்து இந்தியத் திருநாட்டிற்கு விடுதலை வாங்கித் தந்த அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள். நடப்பாண்டில் அன்றுதான் புதிதாக இயற்றப்பட்ட குறுந்தொழில், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சி சட்டம் அமலுக்கு வந்த நாள்.

இதன்மூலம், முதன்முறையாக குறுந்தொழில் மற்றும் சிறுதொழிலுக்குச் சட்ட அங்கீகாரம் கிடைத்த வகையில் மகிழ்ச்சியே. ஆனால் சட்டம் முழுமையாக நன்மையைத் தருவதற்குப் பதிலாக ஏமாற்றத்தையும் சேர்த்துத் தந்துள்ளது. இந்தியப் பொருளாதார அரங்கில் புதிதாக உருவான சேவைத் துறை நிறுவனங்களுக்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையே முடிச்சுப் போட்டு ஒரே சட்டத்தின் ஆளுகையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் எதிர்காலத்தைக் காலம்தான் கணிக்க வேண்டும்.

மத்திய அரசின் கலால்வரியைப் பொறுத்தமட்டில், மொத்தம் ரூ. 4 கோடிக்கு மிகாத விற்றுவரவு உள்ள தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே கலால்வரிச் சலுகை உண்டு. ஆனால், இந்தப் புதிய சட்டம், அகில இந்திய அளவில் உள்ள சிறுதொழில் சங்கங்கள் பல கோரிய போதிலும் தொழிலாளர் எண்ணிக்கை, விற்றுவரவு ஆகிய அடிப்படைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு மூலதனத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு குறுந்தொழில், சிறுதொழில் மற்றும் நடுத்தரத் தொழில் என இலக்கணம் வகுத்துள்ளது.

இதுவரை குறுந்தொழில் என்பது ரூ. 25 லட்சத்திற்குக் கீழ் இயந்திரங்களின் மூலதன மதிப்பு என்றும், சிறுதொழில் என்பது ரூ. 25 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலும் இருந்து வந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் சிறுதொழில் என்பது ஒரு கோடி அதிகபட்ச எல்லை என்பதை ரூ. 5 கோடியாக உயர்த்தியுள்ளார்கள். இதில் நிலம், கட்டடம், பரிசோதனைக் கூடம் (Laboratory), ஆய்வு உபகரணங்கள் (Inspection Equipments), டூல்ஸ், டை, அலுவலகப் பொருள்கள், மின்உற்பத்தி /மின்மாற்றி உபகரணங்கள், பொருளைக் கையாளும் கருவிகள் (Material Handling Equipments) போன்றவைகளின் மதிப்பு சேராது. அதாவது 5 கோடி ரூபாய் இயந்திரங்கள் மூலதனம் என்றால் மொத்த மதிப்பு ரூ. 10 கோடியையும் தாண்டும்.

இந்தப் புதிய சட்டத்தின் மூலம் நேற்று வரை நடுத்தரத் தொழில்களாக இருந்தவை சிறிய தொழில்களாக மாறிவிட்டன. குறுந்தொழில், சிறுதொழில் முதலியன நடுத்தரத் தொழிலாக உயர்வதற்குப் பதிலாக நடுத்தரத் தொழில் சிறிய தொழிலாகிவிட்டது. அதாவது கல்லூரி மாணவர்களை உயர்நிலைப்பள்ளி மாணவர்களாக்கிவிட்டனர். இது பரிணாம வளர்ச்சி ஆகாது. மாறாக, முரண்பாடுகளைக் கொண்ட மூன்று தொழிற்பிரிவுகளைச் சலுகைகள் அளிப்பதற்காக ஒரு சட்டத்தின்கீழ் கொண்டு வந்து இருக்கிறார்கள். இதன் விளைவு என்னவாக இருக்கும்? இந்த மூன்றில் யார் வலியவரோ அவர் மெலிந்தவர்போல வேஷமிட்டு அனைத்து சலுகைகளையும் சுருட்டிக் கொள்வார். இதைத் தவிர்க்கவே, குரங்குகளுக்கு தீனிபோடும் பொழுது மொத்தமாக ஓரிடத்தில் தீனியை வைக்க மாட்டார்கள். தீனியை வைத்தால் வலிமையான பெரிய குரங்குகள் சிறிய குரங்குகளை அண்டவிடாது. அதனால் தீனியை விசிறி எறிவார்கள். இது நமது முன்னோர் பங்கீட்டு நீதி. ஆனால், இப்பொழுது நடைமுறையில் உள்ள குறுந்தொழில், சிறுதொழில் மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சி சட்டம் நமது முன்னோர்களின் பங்கீட்டு நீதிக்கு முரணாக இருக்கின்றது.

இத்தகைய விநியோக நீதி இட ஒதுக்கீட்டைப் பொறுத்தமட்டில் காலங்காலமாகச் செழுமைப்படுத்தப்பட்டு இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. முதலில் ஷெட்யூல்டு வகுப்பினர், ஷெட்யூல்டு பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தொடங்கிய இட ஒதுக்கீடு, பின்னர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனியாக வழங்கப்பட்டது. இப்பொழுது சமூகத்தின் முற்பட்ட வகுப்பினருக்கும் சிறுபான்மை வகுப்பினர்களுக்கும் பொருளாதார அடிப்படையில் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட நலிந்த பிரிவினருக்கு ஒட்டுமொத்தமாக உள்ஒதுக்கீடுகள் இல்லாமல் சலுகைகள் அளிக்கப்பட்டால் வலியவர் கைக்குத்தான் சலுகைகள் போகும் என்பதற்கு இட ஒதுக்கீடு சிறந்த எடுத்துக்காட்டு.

யாருக்கு லாபம்?

இந்தச் சட்டத்தின் காரணமாக யாருக்கு லாபம்? இந்தச் சட்டத்தினால் முதலில் பலன் பெறுபவை. நடுத்தரத் தொழில்கள்தான். வங்கிகளைப் பொறுத்தமட்டில் குறுந்தொழில்களுக்கும், சிறுதொழில்களுக்கும் முக்கி முனகிக் கொண்டே கடன் கொடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. முதலீட்டு அடிப்படையில் நேற்றைய நடுத்தரத் தொழில்கள் இன்றைய சிறுதொழில்களாக சட்டபூர்வமாக மாறி விடுகின்றன. அவற்றுக்குக் கொடுக்கப்படும் வங்கிக்கடனும் முன்னுரிமைக் கடனாக மாறி விடுகிறது. வங்கிகளுக்குப் பிரச்சினை இல்லை. அதனால் அவைகளுக்கும் மறைமுக லாபம்தான்.

சுமார் ரூ. 2 கோடி மூலதன இயந்திரங்களைக் கொண்டு ரூ. 200 கோடி விற்பனையை எட்டும் சிறிய தொழிற்சாலைகள் நடைமுறை மூலதனக் கடனாக ரூ. 40 கோடி வரை வாங்கலாம். இந்த ஒரு கடன் மனுவைப் பரிசீலனை செய்து கடன் வழங்குவதன் மூலம் நூற்றுக்கணக்கான குறுந்தொழில், சிறிய தொழில் மனுக்களை ஏறெடுத்தும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. குறுந்தொழில் மற்றும் சிறுதொழிலுக்கு வழங்கப்படும் முன்னுரிமை வங்கிக்கடன் கடந்த சில ஆண்டுகளில் 18%ல் இருந்து 8% ஆக குறைந்துவிட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் வரும் ஆண்டுகளில் கணிசமான அளவு உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்தச் சட்டத்தால் குறுந்தொழில், சிறுதொழில்களின் நிதிப் பிரச்சினை தீரப்போவது இல்லை. பழைய நிலையே தொடரும்.

இதற்கெல்லாம் முடிவாக வளர்ந்துவிட்ட அமெரிக்காவிலே நல்ல கொள்கை வகுத்துள்ளார்கள். அங்குள்ள (Small Business Administration) சிறுதொழில்களை வரையறை செய்யும்பொழுது, “”500 தொழிலாளர்கள் அல்லது ஆண்டுக்கு 6 மில்லியன் டாலர்கள் (ரூ. 28 கோடி) விற்பனை, இதில் எது பொருந்துமோ அவைகள்தான் சிறியவை” என்று கூறப்பட்டுள்ளது.

இத்தகைய அணுகுமுறையை நாம் பின்பற்றாத காரணத்தால் ரூ. 500 கோடி விற்றுவரவு என்றாலும் அவையும் சிறுதொழில் என்று கூறி அவர்களுக்கும் சலுகைகள் வழங்கத் தயாராகிவிட்டோம்.

வலிமையானவர்கள் மட்டுமே வாழ முடியும் (law of the Jungle) என்பது கொடிய விலங்குகள் வாழ்கின்ற காட்டுக்குச் சரியாக இருக்கலாம். ஆனால் மக்களாட்சிக்கு ஒத்துவராது. 98% உள்ள குறுந்தொழில், சிறுதொழிலுக்குச் சட்டம் என்ற பெயரால் சுமார் 2000 முதல் 3000 வலுவான தொழிற்சாலைகளுக்குப் பலன் தரும் ஒரு சட்டம் இயற்றப்படுவது வேடிக்கை. நாளடைவில், நடுத்தரத் தொழிலே மிஞ்சும். சிறுதொழில்கள், குறுந்தொழில்கள் நசிந்து விடும்.

இந்த நிலைமையை மாற்றுவது எப்படி?

சட்டத்திற்கான விதிகளை வகுக்கும்பொழுது, ஆண்டு விற்பனை குறுந்தொழிலுக்கு ரூ. 3 கோடி என்றும், சிறுதொழிலுக்கு ரூ. 30 கோடி என்றும், நடுத்தரத் தொழிலுக்கு ரூ. 300 கோடி என்றும் வரையறை செய்யலாம். இதன்மூலம் உண்மையான சிறுதொழில் வளர்ச்சிக்கு உதவலாம். இல்லையென்றால் இது பெரிய தொழிற்சாலைகள் நாளடைவில் சிறிய தொழிற்சாலைகளாக மாறுவதற்கு வழிவகுக்கும்.

(கட்டுரையாளர்: சிட்கோ மின்னணு வளாக உரிமையாளர்கள் சங்கத் தலைவர்.)

Posted in Analysis, Business, Economy, employees, Factory, Finance, Growth, Industry, Labor, Law, Loans, Manufacturing, Op-Ed, Operations, Production, Small Business Administration Act, Small Scale Industries, SSIs, Subsidy, Thoughts, workers | Leave a Comment »

Tamil Nadu supplementary Budget for Rs. 1,158 Crores – Details

Posted by Snapjudge மேல் திசெம்பர் 8, 2006

சட்டசபையில் தாக்கல்: ரூ. 1,158 கோடிக்கு துணை பட்ஜெட்

சென்னை, டிச. 6- தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் அன்பழகன் துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ரூ. 1157.95 கோடி அளவுக்கு நிதி ஒதுக்க இதில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது.

முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ஏழை குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், மற்றும் அடுப்பு கள் வழங்குவதற்காக ரூ. 60 கோடி அனுமதித்துள்ளது.

* மீன்பிடி தொழில் அதிகம் இல்லாத மாதங்களில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 993 மீனவ மகளிருக்கு உதவித் தொகை வழங்குவதற்காக ரூ. 12 கோடியே 36 லட்சம் அனுமதித்து உள்ளது.

* தமிழில் பெயர் சூட்டப் படும் தமிழ் சினிமா படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ. 30 கோடி ஒதுக் கீடு செய்யப்படுகிறது.

* விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற் காக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்திற்கு கடனாக ரூ. 200 கோடி வழங்க அரசு அனுமதித்துள்ளது.

* தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பங்கு மூலதன உதவி வழங்குவதற்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* கரும்புக்கான உயர்த்தப்பட்ட மாநில அரசின் பரிந்துரை விலையை விவசாயிகளுக்கு வழங்க கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு ரூ. 89 கோடியே 2 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

* மாணவர்களுக்கான பயண அனுமதிக்குரிய பஸ் கட்டணத்தை மாநில போக்குவரத்து நிறுவனங் களுக்கு அளிக்க ரூ. 100 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.

* மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின்கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் திருமண உதவி நிதிக்காக ரூ. 10 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.

* அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக கலெக்டர் களுக்கு தன் விருப்ப மானிய மாக அரசு ரூ. 56 கோடியே 51 லட்சம் அனுமதி அளித் துள்ளது.

* சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட் டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதிக்கான ஒதுக்கீடு ரூ. 1 கோடியில் இருந்து ரூ. 1 கோடியே 20 லட்சம் என அரசு உயர்த்தி உள்ளது. இதற்காக துணை மதிப்பீடுகளில் ரூ. 103 கோடியே 51 லட்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Posted in Agriculture, Anbazhagan, Assistance, Budget, Busniess, Campaign, Collectors, Crore, Details, DMK, Economy, Electricity, Entertainment Tax, Finance, Fishery, Fishing, Free, Gas, Government, Grain, Karunanidhi, Loan, MPLAD, Paddy, promises, Propaganda, Schemes, Stove, Students, Subsidy, Sugarcane, supplementary, Tamil Cinema, Tamil Movies, Tamil Nadu, TNEB, Women | 1 Comment »

The ills of Indian Agriculture – RS Narayanan

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

புல்லும் ஓர் ஆயுதம்

ஆர்.எஸ். நாராயணன்

இருபத்தி ஐந்து மாடுகளை வைத்துக்கொண்டு இயற்கை விவசாயம் செய்யும் எங்களுக்குத் தீவனத் தட்டுப்பாடு வந்தது. இதைச் சரி செய்யப் புல் வளர்க்க யோசித்தோம். மானாவாரியாக எதைப் பயிர் செய்யலாம், பாசனமாக எதைப் பயிர் செய்யலாம் என்று திட்டமிட்டு புல்விதை விலைகளை விசாரித்தோம். மயக்கம் வந்துவிட்டது. குதிரை மசால் விதையின் விலை கிலோ ரூ. 200. கொழுக்கட்டைப்புல் விதை ரூ. 90. நெல் விதை 6 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

இந்தியாவின் விவசாயப் பிரச்சினைகளை நெல்லால் தீர்க்க முடியாதபோது, புல்லால் தீர்த்து விடலாம் என்று தோன்றுகிறது. மாடுகளையும் பட்டினி போட வேண்டாம். பச்சைப்புல்லைக் கொடுத்தால் பாலும் நிறையக் கிடைக்குமே. பழைய நினைவுகளை அசைபோட்டுப் பார்த்தபோது டாக்டர் ராமசாமி, ஐ.ஐ.ங. பேராசிரியர் (ஓய்வு), கூறிய கருத்து மனத்தில் பளிச்சிட்டது. அவர் இவ்வாறு கூறுகிறார்: காளை மாடுகளை உழவுக்கும், பாரம் சுமக்கும் வாகனமாகவும் பயன்படுத்தினால் 60 லட்சம் டன் பெட்ரோலியத்தை மிச்சப்படுத்தலாம்.

இதன் மதிப்பு ரூ. 20,000 கோடி. நவீன முறையில் வண்டிகளைத் திருத்திச் சில மாற்றங்களைச் செய்தல், கால்நடைகளுக்கு நல்ல தீவனம் வழங்கிப் பராமரித்தல் ஆகிய தொழில்கள் மூலம் கிராமங்களில் 2 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கலாம். நாட்டுக்கும் நன்மை. ராமசாமியின் கருத்துப்படி இந்தியக் கால்நடைத்துறை – கால்நடைகள் மூலம் பெறும் வருமான மதிப்பு – மொத்த எசட யில் ஏழு சதவீதம். ஆனால் கால்நடை மேம்பாட்டுக்கும் புல் வளர்ப்புக்கும் செலவுத்திட்டம் (  allocation) 0.3 சதவீதமே என்று நொந்து கொள்கிறார்.

மீளுமா இந்திய வேளாண்மை? என்று எஸ். ஜானகிராமன் ஒரு கொக்கி போட்டுள்ளார் (22-8-06 துணைக்கட்டுரை). அரசு வழங்கும் மானியங்களைக் கால் பங்காகக் குறைத்து விட்டு வேளாண்மைப் பொது முதலீட்டை நான்கு பங்காக உயர்த்தக் கோரியுள்ளார். மானியங்களைக் குறைக்க வேண்டாம். இந்த மானியங்கள் நிஜமாகவே விவசாய உற்பத்திக்கு வழிவகுத்துள்ளதா என்று யோசித்து இதனால் யார் பயனடைகிறார்கள் என்று பார்ப்பது நல்லது.

  • உர மானியம் என்பது மண் வளத்தை அழிக்கும் ரசாயன உரக் கம்பெனிக்கு வழங்கப்படுகிறது.
  • கருவிகள் – இயந்திர மானியம், டிராக்டர் கம்பெனிக்கு வழங்கப்படுகிறது.
  • இதே மானியத்தை இயற்கை இடுபொருள்களுக்கும், கால்நடை – தீவனப் பராமரிப்புக்கும் மாற்றியமைத்துவிட்டாலே போதும். இந்தியா ஒரு வல்லரசாக மாறிவிடும்.

உலகில் பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியா செலவிடும் மானியம் குறைவுதான். உலகளாவிய அளவில் ஒரே சட்டம் அமல் செய்து விவசாயிகளுக்கு இவ்வாறு மறைமுகமாக வழங்கப்படும் மானியம் நிறுத்தப்பட்டு விட்டால், முதலில் அழிவது அமெரிக்காதான். அமெரிக்காவில் சிறு விவசாயி என்பவருக்கு 1,000 ஹெக்டேர் நிலம் இருக்கும். எல்லா அமெரிக்க விவசாயிகளும் ஹைடெக் . அங்கு தேச வருமானத்தின் பெரும்பகுதி இந்த ஹைடெக் விவசாயத்திற்குச் செலவாகிறது. இந்த ஹைடெக் விவசாயம் முழுக்க முழுக்க மானியத்தை நம்பியுள்ளது. ஓர் இந்திய விவசாயி மானியத்தை நம்பாமல் தனித்து இயங்கும் வாய்ப்பு இங்கு உள்ளதுபோல் வேறெங்கிலும் இல்லை. அடித்தளமே இல்லாத அமெரிக்க விவசாயத்தை விடவும் ஒரு பலமான வாழ்வியல் அடித்தளத்துடன் இயங்கும் இந்திய விவசாயத்தை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள, விவசாயம் பற்றி மகாத்மா காந்தியும் ஜே.சி. குமரப்பாவும் எழுதியுள்ளதைப் படித்தாலே போதுமானது. தீர்க்க தரிசனம் புலப்படும்.

இந்தியாவில் விவசாயப் பொருளாதார மேம்பாட்டுக்குத் திட்டமிடும் வல்லுநர்கள், அடித்தளம் இல்லாத அமெரிக்காவை மாடலாக வைத்து உருவாக்கிய திட்டத்தில் ரசாயன உரங்களுக்கும் – டிராக்டர் போன்ற இயந்திரங்களுக்கும் மானியங்கள் வழங்கப்படுகின்றன.

அமெரிக்காவில் கிராமங்களே இல்லை. இரண்டு ஏக்கர் திட்டமும் இல்லை. இருக்கும் இரண்டு ஏக்கரில் 8 துண்டு. “”துண்டு” என்று நான் அதைச் சொல்லவில்லை. 25 செண்டு என்ற sub division Fragmentation  என்று கூறப்படும் துண்டான நிலத்தை நினைவில் கொள்ள வேண்டும். இதையே “”இந்திய விவசாயத்தைப் பற்றியுள்ள நோய்”   என்று மேலைநாட்டு அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். குமரப்பாவும் காந்தியும் இதை நோயாகப் பார்க்காமல், “”காளை உழவுக்கு ஏற்ற கால்காணியே விவசாயிகளை வாழ வைக்கும்” என்று புரிய வைத்தும் நாம் புரிந்து கொள்ளாமல், சந்தைப் பொருளாதாரத்திற்கு ஏழை விவசாயிகளை அடிமைகளாக்கி, நகரத்துச் சேரிகளுக்கு அனுப்பி வைக்கிறோம்.

“”முத்ரா ராக்ஷசம்” என்ற சம்ஸ்கிருத நாடகத்தை மையமாக வைத்து ஆர்.எஸ். மனோகரின் நாடகமான சாணக்கிய சபதத்தில் ஒரு காட்சி வரும். சாணக்கியர், “”அர்த்த சாஸ்திரம்” எழுதியவர். அதாவது “”பொருளாதார விஞ்ஞானம்”. அப்படிப்பட்ட அறிஞர், ஒரு புல் தடுக்கி விழுந்துதான் சபதம் செய்தாராம். இந்தியாவுக்கு முதல் பொருளாதாரத் திட்டத்தை வகுத்துக் கொடுத்த மாபெரும் ராஜதந்திரியை ஒரு புல் வீழ்த்தியுள்ளது. புல்லை நாம் அலட்சியப்படுத்த முடியாது. வல்லவர்களான இந்திய விவசாயிகளுக்கு இன்று நெல்லைவிடப் புல்லே நல்ல ஆயுதமாகப்படுகிறது.

Posted in Agriculture, Budget, Farmer, Finance, Grants, India, Policy, Strategy, Subsidy, Tamil, USA | Leave a Comment »

Unemployment Benefits to Youth – Issues

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006

அரசு வழங்கும் உதவித் தொகை பெற வங்கிக் கணக்கு: இளைஞர்கள் அதிருப்தி

சென்னை, செப். 11: அரசு வழங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகையைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கு அவசியம் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இது உதவித் தொகைபெற விண்ணப்பிக்கும் இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

படித்து வேலையில்லாத இளைஞர்கள் தமிழக அரசின் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

படித்து ஐந்தாண்டுகளுக்கு மேல் வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அக்டோபர் 2-ம் தேதி முதல் தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தகுதியுள்ள இளைஞர்களுக்கு இத்தகைய உதவித் தொகை மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தில் உதவித் தொகை பெற விரும்பும் இளைஞர்கள் பொதுத்துறை வங்கிகளில் வங்கிக் கணக்கு ஒன்றைத் தொடங்க வேண்டும். வங்கிகள் மூலமாகத்தான் இந்த நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சிதம்பரம் கூறினார்.

ரூ. 500 தேவை: அரசு தரும் உதவித் தொகையைப் பெறுவதற்கு தற்போது ரூ. 500 செலுத்தி வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு பெரும்பாலான இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உதவித் தொகை பெறுவதற்கு தாய் அல்லது தந்தை, கணவர் அல்லது மனைவியின் மாத வருமானம் ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதிமுறையும் பலரிடையே அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.

சென்னை போன்ற பெருநகரில் வாழ்வதற்கு நாளொன்றுக்கு ரூ. 75 அவசியம் தேவை. பிற நகரங்களில் கட்டாயம் ரூ. 50 தேவை. இந்நிலையில், விண்ணப்பங்கள் அனுப்புவதற்காக அரசு அளிக்கும் உதவித் தொகை பெரும்பாலான இளைஞர்களுக்கு பயன் தருவது சந்தேகம் என்றே பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மேலும் அஞ்சல் வழிக் கல்வி பயில்வோருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படாது என்ற விதிமுறையும் கடுமையானது என்று பல இளைஞர்கள் கருதுகின்றனர்.

Posted in Assistance, Benefits, Cash, Employment, Grants, Jobless, Subsidy, Tamil, Unemployed, Youth | Leave a Comment »

Jury announced for Granting Govt. Subsidies for Tamil Cinema

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

திரைப்படங்களுக்கு அரசு மானியம்: குழு அமைப்பு

சென்னை, செப். 7: அரசு மானியம் பெற தகுதியுடைய திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2005 ஆம் ஆண்டில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அரசு மானியம் பெறுவதற்கு தகுதியுடைய திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்கு நீதிபதி பாஸ்கரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சரோஜா தங்கவேலு, ஸ்ரீபிரியா ஆகியோர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

Posted in Art, Culture, Docu Drama, Documentary, Government, Grants, Justice Bhaskaran, Kollywood, Movie, Saroja Thangavelu, Short Film, Sri Priya, Subsidy, Tamil, Tamil Cinema, Tamil Movies, Tamil Nadu, TN | Leave a Comment »

Liberalization, WTO, US Subsidy Economy, Protection of Developed Countries

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 23, 2006

உலக வணிகம் எட்டாக் கனியா?

மு. இராமனாதன்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 1999-இல் உலக வணிக அமைப்பின் (World Trade Organisation – WTO) அமைச்சரவை மாநாட்டின்போது நடந்த கிளர்ச்சிகள் பிரபலமானவை. போராட்டக்காரர்களின் முக்கியக் குற்றச்சாட்டு, கட்டற்ற வணிகம் எனும் நஞ்சை, வளரும் நாடுகளின் வாயில் அமெரிக்கா புகட்டுகிறது என்பதாக இருந்தது. ஆனால் கட்டற்ற வணிகம் எனும் இலக்கை அடைய பெருந்தடையே அமெரிக்காதான் என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது. ஜூலை கடைசி வாரத்தில் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்த ரபஞ-வின் பிரதான அமைச்சர்களின் பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்தது. தமது விவசாயிகளுக்கு வழங்கி வரும் அபரிமிதமான சலுகைகளையும் மானியங்களையும் பின்வாங்க அமெரிக்கா மறுத்துவிட்டது. சலுகைகள் மற்றும் மானியங்களால் செயற்கையாக விலை குறைக்கப்பட்ட செல்வந்த நாடுகளின் விவசாய விளைபொருள்களோடு தங்களால் போட்டியிட முடியவில்லை; இந்த வணிகம் சமனாக்கப்பட வேண்டும் என்று வளரும் நாடுகளின் பிரதிநிதிகளான இந்தியாவும் பிரேசிலும் வலியுறுத்தியபோது கட்டற்ற வணிகம் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் கசந்தது. பேச்சுவார்த்தைகள் முறிந்தன. இப்போது வேளாண் மானியங்களை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குமா என்பதிலிருந்து, ரபஞ எனும் அமைப்பே நீடிக்குமா என்பது வரையிலான ஐயங்கள் உறுப்பு நாடுகளிடையே தோன்றியிருக்கின்றன.

செல்வந்த நாடுகள், விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்குவது மட்டுமன்றி, விளைபொருள்களுக்கு ஏற்றுமதிச் சலுகைகள் வழங்கி சர்வதேசச் சந்தையில் அவற்றின் விலை குறைவாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்கின்றன. அதேவேளையில் பிற நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்குத் தீர்வைகள் விதித்து உள்ளூர்ச் சந்தையில் அவற்றின் விலை கூடுதலாக இருப்பதை உறுதி செய்து கொள்கின்றன. இன்னின்ன நாடுகள் இன்னின்ன பொருள்களைத்தான் இறக்குமதி செய்யலாம் என்கிற ஒதுக்கீடுகள் வேறு! மாறாக தீர்வைகளும், மானியங்களும், ஒதுக்கீடுகளும் படிப்படியாக அகற்றப்பட்ட, தடைகளற்ற வணிகம் நிலவி வரவேண்டும் என்பதுதான் ரபஞ -வின் கொள்கை. ஆனால் சமச்சீரான வணிகம் என்பதில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் இரட்டை வேடம் தரித்து வருகின்றன.

வேளாண்மை எப்போதும் செல்வந்த நாடுகளின் செல்லப்பிள்ளை! அமெரிக்காவில் ஆண்டொன்றில் உற்பத்தியாகும் பருத்தியின் மதிப்பு ரூ. 13,500 கோடி. இதற்கு அரசு வழங்கும் மானியங்களோ ரூ. 18,000 கோடி என்கிறார் “கார்டியன்‘ நாளிதழின் கட்டுரையாளர் ஹீதர் ஸ்டீவார்ட். 25 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு – செலவுத் திட்டத்தில் 40% வேளாண் மானியங்களுக்கே போகிறது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல்! ஒன்றியத்தின் மானியங்களில் 80% போய்ச் சேர்வது 20% பணக்கார விவசாயிகளிடமே என்கிறது “தி எகானமிஸ்ட்‘ பத்திரிகை. எனில், செல்வந்த நாடுகளின் பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு வெறும் 2 சதவீதம்தான். எனினும் இந்நாடுகளில் பணக்கார விவசாயிகளின் அரசியல் செல்வாக்கு அதிகம். வரும் நவம்பரில் செனட் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்திற்கு இது தெரியும். ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய உறுப்பு நாடும், வேளாண் மானியங்களின் குருபீடமுமான பிரான்சின் அதிபர் தேர்தல் மே 2007-இல் வருகிறது. அவர்களுக்கும் இது தெரியும்.

வேளாண் மானியங்களைச் செல்வந்த நாடுகள் எல்லாக் காலங்களிலும் ஆதரித்தே வந்திருக்கின்றன. வேளாண் மானியங்களைக் குறைப்பதற்குக் கைமாறாக அமெரிக்கா அறிவுசார் சொத்துரிமை, காப்புரிமை போன்றவற்றில் தனது கோட்பாடுகளை வளரும் நாடுகள் ஏற்க வேண்டுமென்றது. மேலும் அமெரிக்காவும் ஐரோப்பாவும் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளிலும் வளரும் நாடுகளின் சந்தைகளைத் திறக்க வேண்டுமென்றன. இதில் கணிசமான வெற்றியும் பெற்றன. ஆனால் வேளாண் மானியங்கள் அப்போதும் ஒரு சமரசத்தை எட்டவில்லை. ரபஞ-வின் அமைச்சரவை மாநாடு 2001-இல் வளைகுடா நாடான கத்தாரின் தோஹா நகரில் நடந்தது. வளரும் நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ற பங்கு உலக வணிகத்தில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பது தோஹா உடன்படிக்கையின் சாரம். இது 2005-க்குள் எட்டப்பட வேண்டுமென இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. பயங்கரவாதிகளின் 2001-செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச ஒத்துழைப்பு எனும் சித்தாந்தம் வலுப்பெற்று வந்த காலத்தில் நடந்தது தோஹா மாநாடு. ஆனால் இந்த உணர்வு அதிக காலம் நீடித்திருக்கவில்லை.

2003-இல் மெக்ஸிக்கோவின் கான்கன் நகரில் நடந்த மாநாடு ஒத்திசைவின்றி முடிவுற்றது. 2005-இல் ஹாங்காங்கில் நடைபெற்ற மாநாட்டில் “தோஹா சுற்று’ மீண்டும் விவாதத்திற்கு வந்தது. வேளாண் விளைபொருள்களுக்கு வழங்கி வரும் ஏற்றுமதி மானியங்களை 2013-க்குள் விலக்கிக் கொள்ள செல்வந்த நாடுகள் சம்மதித்தன. எனில் அதைவிட பல மடங்கு அதிகமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் மானியங்களைக் குறைப்பதைக் குறித்த தீர்மானத்தை அவை 2006-க்கு ஒத்தி வைத்தன. இதன் தொடர்ச்சியாகத்தான் ஜூலை இறுதியில் ஜெனீவாவில் ஆறு அமைச்சர்களின் (அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், இந்தியா, பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா) பேச்சு வார்த்தை நடந்தது; செல்வந்த நாடுகளின் பிடிவாதத்தால் தோல்வியுற்றது.

இது வளரும் நாடுகளுக்குப் பெரிய பின்னடைவுதான். கடந்த ஆண்டுகளில் கட்டற்ற வணிகத்திற்கு வளரும் மற்றும் ஏழை நாடுகளில் ஆதரவு அதிகரித்திருக்கிறது. தமது மனித வளமும் இயற்கை வளமும் வணிக லாபங்களை ஈட்ட வல்லவை என்பதை அவை உணர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆயினும் இந்தத் தோல்வியின் பின்விளைவுகள் என்ன?

முதலாவதாக, ரபஞ-விற்கு அமைப்பு ரீதியாக ஏற்படும் பாதிப்பு. 1947-இல் 23 உறுப்பு நாடுகளுடன் தொடங்கப்பட்டது “காட்’. அதன் இன்றைய வடிவமான ‘ரபஞ’-வின் உறுப்பினர் எண்ணிக்கை 150. ரபஞ குறைகளற்ற அமைப்பு அல்ல. ஆனால் சர்வதேச வணிகத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரே அமைப்பு. ஐ.நா.வைப்போல பலவான்களுக்கு வீட்டோ அதிகாரம் இல்லாத அமைப்பு. உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் ஓர் ஓட்டுதான். உறுப்பு நாடுகளிடையே ஏற்படும் வணிகத் தகராறுகளை, இதுவரை பாரபட்சமின்றித் தீர்த்து வைத்திருக்கிறது ரபஞ. கோஸ்டா ரிகா போன்ற ஒரு குட்டித்தேசம் கூட அமெரிக்காவைக் கேள்வி கேட்கக்கூடிய அமைப்பு ரபஞ ஒன்றாகத்தான் இருக்க முடியும். தோஹா சுற்றின் தோல்வி ரபஞ-வை பலவீனப்படுத்தலாம்.

இரண்டாவதாக, சர்வதேச வணிக உடன்பாடு என்பது போய், இனிமேல் நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உடன்பாடுகள் அதிகமாகலாம். இந்தியாவின் வணிக அமைச்சர் கமல்நாத், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்றவற்றுடன் இந்தியா இரு தரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் என்று சொல்லியிருக்கிறார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பான “ஆசியான்’ அமைப்புடனும் இந்தியா வணிக ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறது. ஆனால் இதுபோன்ற இரு தரப்பு ஒப்பந்தங்களில் சக்தி மிகுந்த நாடுகள் செல்வாக்கு செலுத்துவதைத் தவிர்க்க முடியாது.

மூன்றாவதாக, கட்டற்ற வணிகம் எனும் சித்தாந்தத்தில் வெறுப்புற்ற நாடுகள் இன்னும் பாதுகாப்புக் கவசங்களைப் பூணலாம். மானியங்களும், ஒதுக்கீடுகளும் அதிகரிக்கலாம்.

இவை எல்லாமே உலகம் முழுமையும் ஒரே சந்தையாக்கும் கட்டற்ற வணிகம் என்னும் தொலைநோக்குத் திட்டத்திற்குப் பின்னடைவே ஆகும். பிரேசிலின் சர்வதேச வணிக உறவுகள் எனும் அமைப்பின் தலைவர் மார்கஸ் ஜாங் சொல்கிறார்: “”பல தரப்புகளை ஒருங்கிணைக்கும் வணிக அமைப்பு அவசியமானது. இது நெருக்கடியான காலகட்டம்தான். ஆனால் இதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். வருவோம்.” நம்பிக்கைகளால் ஆனதுதானே உலகம்!

(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்.)

Posted in Economy, Globalization, Liberalization, Protection, Subsidy, Tamil, Trade, USA, World Trade Organisation, WTO | 1 Comment »