Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Srikanth’ Category

Tamil Actor Srikanth’s Wedding imbroglio – Engagement canceled?

Posted by Snapjudge மேல் மே 20, 2007

நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூன் 18-ல் திருமணம்

சென்னை, மே 13: நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூன் 18-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

srikanth Wedding pictures vandhana issueரோஜாக் கூட்டம் என்ற தமிழ்ப் படம் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த், அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில், கனா கண்டேன், பார்த்தீபன் கனவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இயக்குநர் சசி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கும் புதுச்சேரியில் பிறந்து சென்னையில் குடியேறிய, சாரங்கபாணி மற்றும் ஷாலினி ஆகியோரது மகள் வந்தனா என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 18-ம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற உள்ளது.

வந்தனா

  • ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ. படிப்பையும்,
  • ஸ்விட்சர்லாந்தில் ஹோட்டல் மேலாண்மைப் படிப்பையும் முடித்துள்ளார்.

———————————————————————————————

நடிகர் ஸ்ரீகாந்த் திருமணம் ரத்து

சென்னை, மே 20: நடிகர் ஸ்ரீகாந்த் மணமுடிக்கவிருந்த வந்தனாவின் குடும்பத்தினர் மோசடிப் புகாரில் சிக்கியதையடுத்து இந்தத் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம்:

“ரோஜாக்கூட்டம்’ படத்தில் அறிமுகமாகி “ஏப்ரல் மாதத்தில்’, “பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாரங்கபாணி என்பவரின் மகள் வந்தனாவுக்கும் வரும் ஜூன் 18-ம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.

கடந்த வாரம் முதல் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் வந்தனாவின் சகோதரர் ஹர்ஷவர்தன், தந்தை சாரங்கபாணி ஆகியோர் மீது பல மோசடிப் புகார்கள் வெளிவந்துள்ளன.

சென்னையில் உள்ள காலி மனைகள் மீது போலி ஆவணங்கள் தயாரித்து அவற்றை விற்கவும், அந்த சொத்துக்களின் மீது கடன் பெற்று ஏமாற்றியதாகவும் ஹர்ஷவர்தன் மீது வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேளச்சேரி, வள்ளுவர் கோட்டம், தி.நகர், கோட்டூர்புரம் போன்ற இடங்களில் நில மோசடி செய்ததற்காக ஏற்கெனவே கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் ஹர்ஷவர்தன்.

மேலும் உதகையில் “மெரிட் இண்டர்நேஷனல் எஜுகேஷனல் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் வந்தனா குடும்பத்துக்கு ஒரு கல்லூரி இருக்கிறது. வந்தனாதான் இக்கல்லூரியின் செயல் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்தக் கல்லூரியை விரிவுபடுத்த சென்னையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சுமார் 12 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர். அதற்கான தவணையும் சில மாதங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அதற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இவற்றையெல்லாம் மறைத்த வந்தனாவின் குடும்பத்தினர் தங்களுடைய மகளை ஸ்ரீகாந்துக்கு திருமணம் செய்ய நிச்சயித்துள்ளனர். இதுபற்றி தெரிந்தவுடன் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் மணமகள் வீட்டாரிடம் விசாரித்துள்ளனர். ஆனால் மணமகள் குடும்பத்தாரின் சமரச பேச்சுவார்த்தை எதுவும் பலனளிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதுகுறித்து ஸ்ரீகாந்தின் தந்தையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

திருமண வேலைகள் வேகமாக நடந்துவந்தன. இந்தச் சமயத்தில் அவர்களைப் பற்றி வெளிவரும் செய்திகள் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வந்தன. அதையும் நிறுத்த சொல்லிவிட்டோம். என் மகனின் எதிர்காலம்தான் முக்கியம் என தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைகளால் ஸ்ரீகாந்த்-வந்தனா திருமணம் நடைபெறுவது சாத்தியமில்லை என்றே ஸ்ரீகாந்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

—————————————————————————————-

ஸ்ரீகாந்தையே மணப்பேன்:வந்தனா சபதம்

சென்னை, மே 21: என் மீதான களங்கத்தைப் போக்கி குற்றமற்றவள் என நிரூபித்து, ஸ்ரீகாந்தை மணம் முடிப்பேன் என்று வந்தனா நம்பிக்கையுடன் கூறினார்.

இந்நிலையில் நிருபர்களிடம் வந்தனா ஞாயிற்றுக்கிழமை கூறியது:

கடந்த சில நாள்களாக, என் குடும்பத்தினர் பற்றி வெளிவரும் செய்திகளால் அதிர்ச்சி அடைந்துள்ளேன். மணப்பெண் என்ற முறையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என் மீது எந்த வழக்கும் இல்லை. என்னிடம் போலீஸôர் விசாரணை நடத்தவில்லை.

நான் எந்தவொரு வங்கியிலும் கடன் பெறவில்லை. யார் வாங்கிய கடனுக்கு ஒப்புதலோ, உத்தரவாதமோ கொடுக்கவில்லை. கடன் பத்திரத்தில் கையெழுத்து கூட போடவில்லை. அப்படியிருக்கும்போது எப்படி என் மீது வழக்குத் தொடர முடியும்.

எனக்கும், ஸ்ரீகாந்துக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தைத் தடுத்து நிறுத்த யாரோ திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புகிறார்கள் என நினைக்கின்றேன்.

சகோதரருடன் தொடர்பில்லை: எனது சகோதரர் ஹர்ஷவர்தன், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக எங்களைப் பிரிந்து தனியாக வாழ்கிறார். எனது நிச்சயதார்த்தத்துக்குகூட அவர் வரவில்லை. அவரோடு எனக்கோ, எங்கள் குடும்பத்துக்கோ எந்தவித தொடர்பும் இல்லை. அப்படி இருக்கும்போது அவரது செயல்பாடுகளை எங்களோடு இணைத்து பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

எனது குடும்பமும், ஸ்ரீகாந்த் குடும்பமும் ஒன்றாக உட்கார்ந்து பேசித்தான் திருமணத்தை முடிவு செய்தோம். அதேபோன்று இப்போது புதிதாக தோன்றியுள்ள பிரச்சினைகளையும் இரண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி முடிவு செய்வோம்.

என் மீது இப்போது ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கி, குற்றமற்றவள் என்பதை நிரூபித்து, ஸ்ரீகாந்த்தை மணப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஸ்ரீகாந்த் புத்தி கூர்மை உள்ளவர். இப்போதுள்ள சூழ்நிலையை அவர் நன்கு புரிந்து கொண்டு, என்னையும் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன் என்றார் வந்தனா.

———————————————————————————————

நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும்: போலீஸ் அதிகாரி தகவல்

சென்னை, ஜுன். 15-

நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என்று ஒரு போலீஸ் உயர் அதிகாரி கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

நடிகர் ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.

அப்போது தங்கள் காதலுக்கு அடையாளமாக இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோக்கள் எடுத்துள்ளனர். அந்த போட்டோக்கள் அனைத்தையும் வந்தனா பத்திரமாக வைத்துள்ளார்.

இடையில் ஏற்பட்ட சிறு, சிறு குழப்பங்களால் எங்கே ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர்கள் பிரிய நேரிட்டது.

ஆனால் நடிகர் ஸ்ரீகாந்த்தை பிரிந்து இருக்க வந்தனாவால் முடியவில்லை. எனவே நேற்று முன்தினம் (13-ந்தேதி) காலை பெட்டி, படுக்கைகளுடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தனா வந்து விட்டார்.

இதை ஸ்ரீகாந்த் பெற்றோர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வந்தனாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி உள்ளனர். அப்போது நடிகர் ஸ்ரீகாந்தும் வீட்டில்தான் இருந்துள்ளார்.

காதலியின் இந்த திடீர் நடவடிக்கையால் நடிகர் ஸ்ரீகாந்த் கடும் அதிர்ச்சி அடைந் தார். அவர் வந்தனாவிடம் சமரசம் செய்துள்ளார்.

“இப்போது எந்த பிரச்சினையும் செய்யாதே, எல்லா வற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் சென்று விடு” என்று கெஞ்சி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வந்தனா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தான் தயாராக வைத்து இருந்த போட்டோக்களை எடுத்து ஸ்ரீகாந்த் பெற்றோரிடம் காட்டி உள்ளார்.

அப்போது அவர், “ஸ்ரீகாந் துக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. ஊர் அறிய திருமணம் செய்யத்தான் நான் காத்து இருந்தேன். எங்களைப் பிரித்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்” என்று மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்.

இதனால் பயந்து போன ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறி உள்ளார். அவர் தற்போது திருப்பதியிலோ அல்லது ஐதராபாத்திலோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

வந்தனா சொல்வது போல ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்துள்ளதாக என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும். எனவே அவர் இருக்கும் இடைத்தை தேடி கண்டுபிடித்து அவரிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளோம்.

அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
———————————————————————————————
பேசி தீர்க்க வேண்டியதை தெருவுக்கு இழுத்து விட்டனர்: ஸ்ரீகாந்த் சித்தப்பா பேட்டி

சென்னை, ஜுன். 15-

வந்தனாவின் அதிரடி வருகையால் ஸ்ரீகாந்தும் அவர் பெற்றொரும் வீட்டை காலி செய்து விட்டு வெளியேறி விட்டனர். தற்போது அங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் சித்தப்பா நரசிம்மன் மட்டுமே உள்ளார்.

அவர் கூறியதாவது:-

எங்களது சொந்த ஊர் திருப்பதி. நாங்கள் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்கள் குடும்பத்தில் யாராவது இறந்தால் கூட திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான மரியாதையுடன் தான் இறுதிச் சடங்குகள் நடைபெறும். அந்த அளவுக்கு எங்கள் குடும்பம் ஆச்சாரமானது.

ஸ்ரீகாந்த் வந்தனாவை மிகவும் விரும்பினான். எனவேதான் நாங்கள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். பிறகுதான் வந்தனா குடும்பத்தினர் மீது வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வந்தனாவிடம் கேட்டபோது, “எனக்கு எதுவும் தெரியாது” என்று மறைத்து விட்டார். திருமணத்துக்கு முன்பே இப்படி உண்மைகளை மறைப்பவர் திருமணத்துக்குப் பிறகு எப்படி இருப்பாரோ என்ற பயம் எங்களுக்கு ஏற்பட்டது. எனவேதான் திருமணத்தை தடை செய்தோம்.

நேற்று முன்தினம் வந்தனா திடீரென்று எங்கள் வீட்டுக்குள் புகுந்து விட்டார். பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினையை தெருவுக்கு கொண்டு வந்து விட்டார். நாங்கள் அவமானத்தால் தலைகுனிந்து நிற்கிறோம்.

இவ்வாறு நரசிம்மன் வேதனையுடன் கூறினார்.

மனித உரிமைகள் கழக மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் கல்பனா கூறியதாவது:-

வந்தனா எங்களிடம் நடந்த சம்பவங்கள் குறித்து ஏற்கனவே புகார் கூறி இருந்தார். திடீரென அவர் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்றதை இன்று காலை பத்திரிகைகளில் பார்த்து அறிந்தோம். இன்று காலை அவரை சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் தனக்கும் ஸ்ரீகாந்துக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறினார். ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணத்துக்கு ஆதாரம் உள்ளது.

எனவே நாங்கள் ஸ்ரீகாந்துடன் வந்தனாவை சேர்த்து வைப்போம். போலீஸ் இதில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை அறிய காத்து இருக்கிறோம்.

இவ்வாறு கல்பனா கூறினார்.
——————————————————————————————-
கோவிலில் தாலி கட்டினார்: நடிகர் ஸ்ரீகாந்த் திருமண படங்கள் வந்தனா வெளியிட்டார்- பரபரப்பு பேட்டி

சென்னை, ஜுன். 15-

ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த்.

இவர் வடபழனி குமரன் காலனியில் தந்தை கிருஷ்ணமாச்சாரி, தாயார் ஜெயந்தி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

நடிகர் ஸ்ரீகாந்த் சென்னை அண்ணாநகர் `கே’ பிளாக்கில் வசித்து வரும் சாரங்கபாணியின் மகள் வந்தனா (வயது24)-வை காதலித்து வந்தார். முதலில் இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. பிறகு சமரசம் ஏற்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் வந்தனாவின் பெற்றோர் சாரங்கபாணி- ஷாலினி, அண்ணன் ஹர்ஷவர்த்தன் மீது சி.பி.ஐ. போலீசில் மோசடி வழக்குகள் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதனால் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடக்காது என்று ஸ்ரீகாந்த் பெற்றோர் அறிவித்தனர்.

திருமண முறிவு ஏற்பட்டதால் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி அடைந்தார். காதலி வந்தனாவுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார். வந்தனா எவ்வளவோ முயன்றும் ஸ்ரீகாந்த் பேசவில்லை. என்றாலும் மனம் தளராத வந்தனா “ஸ்ரீகாந்தை திருமணம் செய்தே தீருவேன். நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று சபதம் செய்தார்.

கடந்த சில தினங்களாக அவர் நிறுபூத்த நெருப்பு போல மனம் குமுறியபடி இருந்தார். நேற்று முன்தினம் பெட்டி படுக்கைகளுடன் அதிரடியாக ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் புகுந்து விட்டார்.

ஸ்ரீகாந்துக்கும் தனக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறிய அவர் இனி இந்த வீட்டில்தான் இருப்பேன் என்றார். ஸ்ரீகாந்த் மனைவி போல அந்த வீட்டில் சுற்றி வந்தார். அதோடு ஸ்ரீகாந்த் பெற்றோரையும் மிரட்டும் வகையில் பேசினார்.

வந்தனா இந்த ரகளையில் ஸ்ரீகாந்த் மட்டுமின்றி அவர் பெற்றோரும் ஆடி போய் விட்டனர். இது தொடர்பாக அவர்கள் வடபழனி போலீசில் நேற்று புகார் செய்தனர்.

பெண் இன்ஸ்பெக்டர் வயோலாபாய் மனுவை ஏற்றுக்கொண்டு விசாரித்தார். நேற்றிரவு நேரமாகி விட்டதால் இன்று காலை அவர்கள் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.

வந்தனாவிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து வெளியேற வந்தனா மறுத்து விட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இது தொடர்பாக ஒரு போலீஸ் உயர்அதிகாரி கூறியதாவது:-

நடிகர் ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.

அப்போது தங்கள் காதலுக்கு அடையாளமாக இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோக்கள் எடுத்துள்ளனர். அந்த போட்டோக்கள் அனைத்தையும் வந்தனா பத்திரமாக வைத் துள்ளார்.

இடையில் ஏற்பட்ட சிறு, சிறு குழப்பங்களால் எங்கே ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர்கள் பிரிய நேரிட்டது.

ஆனால் நடிகர் ஸ்ரீகாந்த்தை பிரிந்து இருக்க வந்தனாவால் முடியவில்லை. எனவே நேற்று முன்தினம் (13-ந்தேதி) காலை பெட்டி, படுக்கைகளுடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தனா வந்து விட்டார்.

இதை ஸ்ரீகாந்த் பெற்றோர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வந்தனாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி உள்ளனர். அப்போது நடிகர் ஸ்ரீகாந்தும் வீட்டில்தான் இருந்துள்ளார்.

காதலியின் இந்த திடீர் நடவடிக்கையால் நடிகர் ஸ்ரீகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் வந்தனாவிடம் சமரசம் செய்துள்ளார். “இப்போது எந்த பிரச்சினையும் செய்யாதே, எல்லா வற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் சென்று விடு” என்று கெஞ்சி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வந்தனா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தான் தயாராக வைத்து இருந்த போட்டோக்களை எடுத்து ஸ்ரீகாந்த் பெற்றோரிடம் காட்டி உள்ளார்.

அப்போது அவர், “ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. ஊர் அறிய திருமணம் செய்யத்தான் நான் காத்து இருந்தேன். எங்களைப் பிரித்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்” என்று மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்.

இதனால் பயந்து போன ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறி உள்ளார். அவர் தற்போது திருப்பதியிலோ அல்லது ஐதராபாத்திலோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

வந்தனா சொல்வது போல ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்துள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும். எனவே அவர் இருக்கும் இடைத்தை தேடி கண்டுபிடித்து அவரிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளோம்.

அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

இந்நிலையில் வந்தனாவின் தாய் ஷாலினி வடபழனி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எனது மகளை ஸ்ரீகாந்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், வந்தனாவின் பெற்றோர் ரூ. 10 லட்சம் பணம் கேட்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்த புகார் மனு மீது இன்று மதியம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வயோலாபாய் விசாரணை நடத்தினார். ஸ்ரீகாந்தின் வீட்டுக்கு சென்ற அவர் அங்கு தங்கிருந்த வந்தனாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

ஸ்ரீகாந்தின் பெற்றோர் ரூ. 10 லட்சம் பணம் கேட்டனர் என்று கூறியிருப்பதால் அவர்கள் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. எனவே ஸ்ரீகாந்தின் பெற்றோர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.srikanth marriage pictures vandhana issue

கணவன்- மனைவியாக வாழ்ந்தனர் வந்தனா தாயார் பேட்டி

ஸ்ரீகாந்தும் வந்தனாவும் கணவன்- மனைவியாக வாழ்ந்தனர் என்று வந்தனாவின் தாய் கூறினார்.

ஸ்ரீகாந்தின் வீட்டில் வைத்து வந்தனாவின் தாய் ஷாலினி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருமணம் முடிந்த பிறகு ஸ்ரீகாந்த் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து தங்கினார். அப்படி தங்கும் நாட்களில் ஸ்ரீகாந்தும், வந்தனாவும் கணவன்- மனைவி போலவே வாழ்ந்து வந்தனர்.

எங்களை பொறுத்தவரை ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் முடிந்து விட்டது. எனவே இதில் நாங்கள் மறுப்பு எதுவும் சொல்ல முடியாது. எங்கள் குடும்பத்தினர் மீது வழக்கு இருப்பதாக குற்றச்சாட்டு கூறி உள்ளனர். ஆனால் ஸ்ரீகாந்த், அக்கா என்று அழைக்கும் கீதாவின் மீதும் வழக்கு உள்ளது.

எனவே ஸ்ரீகாந்தின் பெற்றோர் எனது மகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது எனது மகளிடம் இருந்து ஸ்ரீகாந்தை பிரித்து விவாகரத்து வாங்கும் முயற்சி நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
———————————————————————————————-

Posted in abuse, Affair, Alimony, Annul, Annulment, Apartments, April Mathathil, Assets, bank, Bride, Bridegroom, Charangabani, Charankabani, Cheat, Cinema, Divorce, Dowry, Engagement, family, Female, Finance, Flat, Harshavardhan, Housing, HR, Human Rights, Images, Justice, Kid, Kisukisu, Kotturpuram, Law, Loan, Love, Marriage, Merit International, Movies, Order, Photos, Pictures, Police, Prathiban Kanavu, Proof, Puthucherry, Real Estate, Relation, Roja koottam, Rojakoottam, Rumour, Sarangabani, Scandal, Shaalini, Shalini, Shrikant, Shrikanth, Snaps, Srikant, Srikanth, Status, T nagar, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Thirumala, Thirupathi, Thirupathy, TTD, Valluvar Kottam, Vandana, Vandhana, Velachery, Vows, Wedding | 6 Comments »

Recent Tamil Movie Reviews

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2006

இருவர் மட்டும்
காட்டில் இருகேரக்டர்களை உலவவிட்டு பின்னியுள்ள கதை…

சிறு வயதிலேயே காட்டில் வசிக்கும் அழகு அனாதை. மலை அடிவாரத்தில் நீர் வீழ்ச்சி அருகில் ஆங்கிலேயர்கள் கட்டிப்போட்ட பழைய மரவீட்டில் தனியாக குடியிருக்கிறான். பறவைகள், விலங்குகளிடம் பாசம் காட்டுகிறான். வெளியுலக அறிவு இல்லை.

திருமணத்திற்கு வற்புறுத்தும் குடும்பத்தினரை விட்டு பிரிந்து அதே காட்டின் வழியாக பஸ்சில் செல்லும் செல்வி டிரைவர், கண்டக்டரிடம் தகராறு செய்ய வற்புறுத்தி இறக்கி விடப்படுகிறாள். மிருகங்கள் சத்தத்தில் பயந்து ஓடும் அவள் அழகு வீட்டில் பதுங்க விறுவிறுப்பு…

அழகு, செல்வி இடையே மோதல், நட்பு, காதல் என நீண்டு திருமணத்துக்கு தயாராக திருப்பம்…

கல்யாணத்துக்கு அம்மா ஆசிர்வாதம் வாங்குவோம் என்று செல்வியை அழைத்து போய் மூடிக்கிடந்த அறையை திறக்க… செத்துப்போன அவன் தாய் பலகாலம் நாற்காலியில் அப்படியே பிணமாக சாய்ந்து கிடக்க மரண பயம். தப்பி ஓடுகிறாள் செல்வி. அவளை விரட்டி பிடித்து ஆவேசமாக தூக்கி வந்து பலவந்தமாக தாலி கட்டுகிறான், அழகு அறியாமையில் இருந்து மீண்டானா? செல்வி அவனோடு வாழ்ந்தாளா? என்பது கிளைமாக்ஸ்…

இரு பாத்திரங்கள் மட்டுமே கதையை நகர்த்துவது வித்தியாசம்… அழகுவாக வரும் அபய், பாத்திரத்துக்கு கச்சிதம். மரங்களில் ஏறி குருவிக்குஞ்சிக்கு பொறியை சவைத்து நாக்கில் வைத்து உணவூட்டுவது… தாயை இழந்த குஞ்சுகளை மீட்டு வந்து வீட்டில் தொட்டிலில் வைத்து தாலாட்டுவது பளிச்…

தாய் உயிருடன் இருப்பதாக அவள் பிணத்துடன் பேசும்போது திடுக்கிட வைக்கிறார். செல்வியாக வரும் சுனிதாவர்மா இளமைச்சாரல்… காடு, மலை, நீர் வீழ்ச்சி பின்னணியில் அரைகுறை ஆடையுடன் சூடேற்றுகிறார்.

அழகு தாய் பிணத்தை தன்னோடு வைத்து வாழ்வதை பார்த்து மிரண்டு ஓட்டம் பிடிப்பது மரண பயம்… குழிதோண்டி மண்ணில் புதைந்த அழகுவை மீட்க அழுது போராடுவது ஜோர்…

படத்துக்கு ஜீவனாக இருப்பது அருவியும், காடு, மலை இயற்கை காட்சிகளும் பி.கே.தாஸின் காமிரா அவற்றின் கொள்ளை அழகை மொத்தமாகஅள்ளியுள்ளது. அந்த பகுதியில் வாழவேண்டும் என்ற ஆவலை தூண்ட வைக்கிறது.

புத்திசாலித்தனமாக பேசவும் ஊருக்குள் நடமாடிவிட்டு வரவும் செய்யும் அழகுக்கு மரணம் பற்றிய அறிவு இல்லை என்பது சறுக்கல் இருவரை மட்டுமே வைத்து படம் பண்ணியது துணிச்சல் என்றாலும் சிலஇடங்களில் அலுப்பு…

விஜய் ஆண்டனி இசையில் வைரமுத்துவின் பாடல் சுகராகம்… இயற்கையின் ஜில்லிப்போடு கவித்துவமாக படத்தை செதுக்கியுள்ளார். இயக்குனர் துவாரகிராகவன்.

நெஞ்சில்
சுற்றுப்பயணத்தில் உருவாகும் காதல் கதை…

தனியார் நிறுவனம் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களை தேர்வு செய்து லண்டனுக்கு இலவச சுற்றுலா அனுப்புகிறது.

பயணக்குழுவில் உள்ள நவ்தீப்-அபர்ணாவுக்கு காதல். அவர்களை பிரிக்க அதே குழுவில் சென்ற கிருஷ்ணமூர்த்தியும் கல்யாணியும் சதி செய்கின்றனர்.ஆனந்த் மோசமானவன் என்று பிரியாவை நம்ப வைத்து அவனை வெறுக்கச் செய்கின்றனர்.

மோதலை சாதகமாக்கி பிரியாவை அடைய துடிக்கிறான் லண்டனில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி. காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது விறுவிறுப்பான கிளைமாக்ஸ்.

காதலர்களாக வரும் நவ்தீப், அபர்ணா துருதுரு ஜோடி. இருவரும் மோதிக் கொள்ளும் ஆரம்ப காட்சிகள் கல கல…

போதையில் ரஞ்சிதா நவ்தீப் நெருக்கம் திருப்பம். காதல் தோல்விக்கு பின் கதையில் வேகம்… மணிசுடன் சுற்றி நவ்தீப்பை அபர்ணா வெறுப்பேற்றுவது நறுக்…

அபர்ணா நடிப்பில் மெருகு… காதல், கோபம், தோல்வி, வெறுப்பு என ஒவ்வொன்றிலும் வித்தியாசம். காதலனை இன்னொரு பெண்ணுடன் பார்த்து நொறுங்குவது நச்…

ஆண்களை வெறுப்பவராக ரஞ்சிதாவும் பெண்களை வெறுப்பவராக தலைவாசல் விஜயும் கச்சிதம்… காதலர்களை பிரிக்கும் சூழ்ச்சி திக்.. இருவரும் மனம் மாறி காதலர்களாவது கலகலப்பு…

வடிவேலு-மயில்சாமி சிரிக்க வைக்கின்றனர். இங்கிலீஸ்காரன் வடிவேலு, கேரக்டர் நச்… கலகலப்பும் விறுவிறுப்புமாக கதை சொல்லியுள்ளார் இயக்குனர் செல்வா. இமான் இசையில் பாடல்கள் தாளரகம்.

ரெண்டு
மாதவனின் இருவேட ஆக்ஷன், காமெடி படம்.

பட்டிணத்துக்கு வேலை தேடி வரும் மாதவன் பொருட்காட்சியில் மேஜிக் ஷோ நடத்தும் மாமா கிரிகாலனிடம் அடைக்கலமாகிறார். எதிரில் நாகக்கன்னி ஷோ நடத்தும் வெள்ளி மீது காதல்.

மாதவன் உருவத்தில் இன்னொருவர் தொடர் கொலைகள் செய்ய போலீஸ் இவரை பிடிக்கிறது. அதிலிருந்து மீண்டாரா, கொலைகள் ஏன் நடக்கின்றன என்பதை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார் சுந்தர்.சி.

பொருட்காட்சி அரங்கில் மாதவன், வடிவேலு பண்ணும் காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ரகம்.

மேஜிக் ஷோவுக்கு பணம் கொடுத்து ஆட்களை வர வைப்பது, சவாரி வந்த ஆட்டோ டிரைவரிடம் ஆர்.சி. புக்கை வாங்கி அடகு வைத்து பணம் வாங்குவது.. என மாதவன் காமெடி அவதாரம் எடுத்துள்ளார். பெண் மனதில் இடம் பிடிக்க வடிவேலுவுக்கு ஆலோசனை சொல்லி சிக்கலில் மாட்ட வைப்பது ரகளை.

வில்லன்களை பழிவாங்கும் கேரக்டரில் வேகம். திருமண மண்டபத்தில் விலிப்பு நோயால் ஒரு பெண்ணின் திருமணம் நிற்க அவளுக்கு தனது அண்ணனை மணமுடித்து வைப்பது ஜீவன். அனுஷ்கா காதல் கவிதை.

வில்லன்களை தீர்த்து கட்டுவது மிரட்டல். திருமண மண்டபத்தில் பலரை கொன்று சாய்ப்பது தூக்கலான வன்முறை. வில்லன் ரகசியம் தெரிந்தவர் மாதவன் தந்தை மட்டும்தான். அவரோடு மொத்த குடும்பத்தையும் கொல்வது ஒட்டவில்லை.

அனுஷ்கா அழகு பதுமையாய் ஜொலிக்கிறார். கவர்ச்சியில் தாராளம்.

வெள்ளியாக ரீமாசென் பளிச். மேஜிக் நிபுணர் கிரிகாலனாக வடிவேலு பண்ணும் காமெடி ஜோர்.. தப்பு தப்பாக மேஜிக் செய்து பார்வையாளர்களிடம் மாட்டி விழிப்பது.. ஒரு பெண்ணின் இதயத்தில் இடம் பிடிக்க வீர சாகசம் செய்ய முயன்று தோற்று தவிப்பது என கலகலப்பூட்டுகிறார்.

மணிவண்ணன், மயில்சாமி, சந்தானம், விச்சு, தாரிகா ஆகியோரும் உள்ளனர்.

முதல் பாதி கலகலப்பாகவும் மறுபாதி விறுவிறுப்பாகவும் செல்கிறது. இமாம் இசை பலம். ரசனையான ரெண்டு.

ஆவணி திங்கள்
கிராமத்தில் வசிக்கும் அனாதை இளைஞன் ராசப்பா. உதவாக்கறை நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறான். குடும்ப பாசத்துக்கு ஏங்குகிறான்.

திருமண ஆசை ஏற்படுகிறது. உள்ளூர் புரோக்கர் மூலம் பெண் பார்க்கிறான். புரோக்கர் அவனை ஏமாற்றி பணம் பறிக்கிறார். பெண் அமையவில்லை. ஏதேச்சையாக புரோக்கர் மகள் காயத்ரியை காணும் ராசப்பா அவள் மீது காதல் கொள்கிறான். காயத்ரியும் விரும்புகிறாள்.

சொந்த பந்தம் இல்லாத ராசப்பாவுக்கு பெண் கொடுக்க புரோக்கர் மனைவி மறுக்கிறாள். அதை சவாலாக ஏற்று பாறையில் வெடி வைத்து உடைக்கும் ஆபத்தான வேலையில் சேர்ந்து பணம் சம்பாதித்து வீடு வாசல் என்று வசதியாகிறான் ராசப்பா. அதன் பிறகு அவனுக்கு பெண் கொடுக்க புரோக்கர் குடும்பம் சம்மதிக்கிறது. திருமணத்துக்கும் நாள் குறிக்கிறார்கள்.

அப்போது ஜமீன்தார் பேத்தி தீபிகா மூலம் ராசப்பா வாழ்வில் விதி விளையாடுகிறது. தீபிகா விளையாட்டாக செய்யும் காரியத்தால் ராசப்பா ஒரு கையை இழக்கிறான். திருமணம் தடைபடுகிறது. மனம் உடையும் தீபிகா தன் திருமணத்தை தள்ளி வைத்து ராசப்பாவுக்கு பெண் தேடுகிறாள் பெண் அமையவில்லை. திருமணம் நடந்ததா? என்பது கிளைமாக்ஸ்.

ராசப்பாவாக வரும் ஸ்ரீகுமார் கிராமத்து இளைஞனாக கச்சிதம். ஒற்றைக் கையுடன் மனதை பிழிகிறார். காயத்ரியாக மதுஷா, தீபிகாவாக தேஜினி போட்டி போட்டு நடித்துள்ளனர். கிணற்றுக்குள் வெடி வைத்து விபத்து ஏற்படும் காட்சி தத்ரூபம்.

லிவிங்ஸ்டன், டெல்லிகுமார், காதல் சுகுமார், அஜய்ரத்னம் ஆகியோரும் உள்ளனர். ஆர்.சங்கர் இசையில் பாடல்கள் நீண்ட இடைவெளிக்குபின் இனிமை. வேதா செல்வத்தின் ஒளிப்பதிவு கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது. ஹரிகிருஷ்ணா வின் இயக்கத்தில் ஆவணித் திங்கள் மனதை வருடுகிறது.

சிவப்பதிகாரம்
அரசியல்வாதிகளை மாணவன் பழிவாங்கும் கதை…

கல்லூரியில் படிக்கும் ஒழுக்கமான முதல் மாணவன் சத்தியமூர்த்தி. இடைதேர்தல் பற்றி சகமாணவர்களுடன் கருத்துகணிப்பு வெளியிட பலிக்கிறது.

தோற்றுபோன சண்முகராஜன் தனது தோல்விக்கு கருத்து கணிப்புதான் காரணம் என்று அடியாட்களுடன் கல்லூரியை முற்றுகையிட்டு கலாட்டா செய்கிறார்.

மந்திரி உதவியோடு கல்லூரிக்குள் கேஸ் சிலிண்டர்களை வெடிக்க செய்து பல மாணவர்களை சாகடிக்கிறார்.

சத்தியமூர்த்தியின் வாட்சுமேன் தந்தையும் தீயில் பலியாகிறார்.

கண் முன்னே நடக்கும் இந்த கொடூரத்தை பார்த்து பழிவாங்க துடிக்கும் சத்தியமூர்த்தியை பேராசிரியர் ரகுவரன் தடுக்கிறார்.

பொது தேர்தலில் வேட்பாளர்களாக அவர்கள் நிறுத்தப்பட்டதும் கொலைகார அரசியல்வாதிகளை ஒவ்வொருவராக அழிப்பது கிளைமாக்ஸ்…

சத்யமூர்த்தியாக வரும் விஷால் கச்சிதம். நல்ல மாணவராக மனதில் நிற்கிறார். நாட்டுப்புற பாடல் ஆராய்ச்சியாளராக கிராமத்தை வலம் வருவது வேகத்தடை. பொது தேர்தல் அறிவிப்பு வெளியானதும் சூடுபிடிக்கிறது.

வேட்பாளர்களை சாகடிப்பது திக்… திக்… வேட்பாளர்கள் மிரண்டு மொத்தமாக வேட்புமனுவை வாபஸ் பெறுவது… தேர்தலை தேர்தல் கமிஷன் தள்ளி வைப்பது வித்தியாசம்.

விஷாலை காதலிப்பவராக வரும் மம்தா அழகு, கவர்ச்சியில் ஜொலிக்கிறார். அமைதியான பேராசிரியராக வந்து போகிறார் ரகுவரன். கலெக்டர் வேலை பார்த்தவர் என்ற முடிச்சு அவிழும்போது திக்…

கஞ்சா கருப்பு கலகலப்பூட்டுகிறார். அழுத்தம் இல்லாத முதல் பாதி கதை இவரால்தான் நகர்கிறது.

மணிவண்ணன், சண்முக ராஜன், உபேந்திரா லிமாயே, ஸ்ரீகாந்த் ஆகியோரும் உள்ளனர்.

இடைவேளை வரை வயலும் வயக்காடுமாக மெதுவாக நகரும் கதைக்கு பிற்பகுதியில் வேகம் கொடுத்துள்ளார் இயக்குனர் கரு.பழனியப்பன். வித்யாசாகர் இசையில் பாடல் கள் கிராமிய மணம் வீசுகிறது. கோபிநாத் கேமராவில் பசுமை.

வாத்தியார்
ஆசிரியர் தாதாவாகும் கதை…

அர்ஜ×னுக்கு இன்னொரு `ஜென்டில்மேன்’ பாணி படம். அநீதிகளை எதிர்க்கும் ஆசிரியர் `கெட்டப்`பில் வெளுத்துள்ளார்.

பரீட்சை பேப்பரில் அதிக மதிப்பெண் போட மிரட்டும் ரவுடி மாணவன். அர்ஜ×ன் மாணவியை மானபங்கம் செய்யும் சக வாத்தியார் போன்றோரை நொறுக்க வேலை பறிபோகிறது.

பள்ளிக் கட்டிட கூரை எரிந்து 48 மாணவர்கள் பலியாக ஆவேசமாகும் அர்ஜ×ன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை துவைத்து மக்கள் முன் நிறுத்துகிறார். அதில் ஒரு அதிகாரி செத்துப்போக கொலைப்பழி சுமந்து சிறைக்கு போகிறார். ரிலீசாகும் போது தீயவர்களை அழிக்குமாறு பலர் படையெடுக்க தாதா கெட்டப்புக்கு மாறுகிறார்.

ஊனமுற்றோருக்காவும், ஆதரவற்ற முதியோர்களுக்காவும் அன்னை இல்லம் திறந்து காப்பாற்றுகிறார். ரவுடிகளை ஒழித்து கட்டுகிறார். அவரை ஆதாரத்தோடு பிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது.

முதல்- மந்திரி பதவியை குறுக்கு வழியில் பிடிக்க முயலும் நாச்சியார் வழிபாட்டு தலங்களில் குண்டு வைக்க அர்ஜ×ன் உதவியை நாட அவர் மறுக்க விறுவிறுப்பான அடிதடி கிளைமாக்ஸ்.

வாத்தியார் கெட்டப்பில் அர்ஜ×ன் கச்சிதம். பள்ளியில் சாராயம் காய்ச்சும் ரவுடி வீராவை வீழ்த்தும் அறிமுகம் தூள்..

பள்ளி கூரை எரிந்து குழந்தைகள் பலியாகக் காரணமான கல்வி அதிகாரிகள், என்ஜினீயர்களை தோல் உரிப்பது நச்…

கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்காத தோல் கம்பெனி முதலாளிக்கு எதிராக தொழிலாளர்களை தூண்டுவது நறுக்…

மகளை பழித்த ரவுடியை தந்தையை விட்டு கொல்ல வைப்பது திடுக்…. சவக்குழிக்குள் இருந்து அர்ஜ×ன் மீள்வது ஹாலிவுட் மிரட்டல்.

அர்ஜ×ன் காதலியாக வரும் மல்லிகா கபூர் அன்னை இல்லத்தில் புகுந்து கல கலப்பூட்டுகிறார். அன்னையாக வரும் சுஜாதா ஜீவன்.

வில்லத்தன போலீஸ் அதிகாரி சாயலில் வந்து இறுதியில் நல்ல அதிகாரி என்ற உண்மையை வெளிப்படுத்தும் பிரகாஷ்ராஜ் பாத்திரம் திருப்பம்….

வடிவேலு காமெடி ஆரவாரம். மல்லிகா கபூர் தன்னை காதலிப்பதாக ஏங்குவது…. பஸ்சில் கண்டக்டரிடம் மீதி கேட்டு ரவுடிகளிடம் சிக்கி அடிவாங்குவது ரகளை….

பிரதீப் ராவன், மணிவண்ணன், தலைவாசல் விஜய் கேரக்டர்கள் கச்சிதம்.

தெளிவான கதை… அழுத்தமான சீன்கள்… வித்தியாசமான கதை களத்தில் படத்தை விறு விறுப்பாக்கியுள்ளார். இயக்குனர் வெங்கடேஷ்… கும்பகோணம் பள்ளி விபத்து, ரேஷன் கடை தில்லு முல்லு… அரசியல் சாக்கடை, நோய் பரப்பும் ஆலைகள் என சமூக அவலங்களை பொறுக்கி பிரமிப்பான கதையாக்கியுள்ள வெங்கடேஷ் முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்துள்ளார்.

இமான் இசை, கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு பலம். `என்னடி முனியம்மா ரீ மிக்ஸ் பாடல் தாளம்.

சபாஷ் வாத்தியார்!

கிழக்கு கடற்கரை சாலை
சுனாமியில் சொந்தங்களை இழந்து அனாதையான இளைஞனின் கதை.

பெட்ரோல் பங்கில் வேலை செய்பவன் கணேஷ். தனது சக கூட்டாளிகளுடன் ஊர் சுற்றி திரிகிறான். அப்போது வக்கீல் வி.டி.ஆரின் தங்கை பிரியாவை சந்திக்க நேரிடுகிறது. அந்த பெண்ணை காதலிக்க வை பார்க்கலாம் என்று நண்பர்கள் சபதம் போடுகிறார்கள். இதை ஏற்கும் கணேஷ் அவள் காதலை பெற கடும் போராட்டம் நடத்துகிறான்.

நம்மால் ஒரு உயிர் போககூடாது என்ற பரிதாபத்தில் தினமும் பத்து நிமிடம் கணேசை சந்தித்து பேசுகிறாள் பிரியா. அப்போது அவளுக்கு காதல் பற்றி கொள்கிறது. இருவர் திருமணத்துக்கும் பிரியா அண்ணன் சம்மதிக்கிறான். பிறகு அவனே பிரியாவை கடத்தி நாடகமாடுகிறான்.

இந்த உண்மையை கணேஷ் வெளி கொண்டு வருகிறான். இறுதியில் இருவரையும் கொலை செய்ய முடிவு செய்து காதல் ஜோடிகளை கடலுக்குள் தள்ளி விடுகிறான் பிரியா அண்ணன். இருவரும் உயிர் பிழைத்தார்களா என்பது கிளைமாக்ஸ்.

கணேசனாக ஸ்ரீகாந்த் கச்சிதம். அப்பா அம்மாவை நினைத்து கடல் அலைகளுடன் உரையாடுவது உருக்கம். கடலில் தள்ளிவிட்ட பிறகும் காதலியை விடாமல் துரத்துவது வேகம். காதலியின் கனவுகளை நிறைவேற்ற செய்யும் சில்மிஷம் ரசிப்பு.

பிரியாவாக பாவனா. அழகு பதுமையாக கண்களை குளிர வைக்கிறார். கைதேர்ந்த நடிப்பை பாவனாவிடம் பார்க்க முடிகிறது. கிரிமினல் வக்கீல் பாத்திரத்தில் சுரேஷ் வில்லத்தனம் பளிச்.

முத்துக்காளை, கஞ்சா கருப்பு நகைச்சுவை கூட்டணி களை கட்டுகிறது. பால்ஜே இசையில் பாடல்கள் இனிமை.

முரட்டு காதலை சொல்லியவிதம் அருமை. காதல் காட்சிகளை ரசிக்க வைத்துள்ளார், இயக்குனர் ஸ்டான்லி. கதையில் அழுத்தம் குறைவு பன்னீர்செல்வத்தின் கேமரா கடலோர அழகை அள்ளியுள்ளது.

வல்லவன்
நிஜக் காதல் அழகு பார்க்காது என்பதை பதிவு செய்யும் படம்.

மனசுக்கு பிடித்த பெண்ணை காதலித்து மணக்க லட்சியம் வைத்துள்ள வள்ளுவன் கண்ணில் அழகான சுவப்னா பட காதல்… நீண்ட பல்லுடன் முகத்தை விதார மாக்கி சுவப்னாவிடம் காதல் யாசி என்றான் அவளே அவனை அழகற்றவன் என்று வெறுக்கிறாள். பிறகு அவளுக்காக சிறு சிறு உதவிகள் செய்து மனதை தொடுகிறான். காதலிக்க சம்மதிக்கிறாள். அதன் பிறகு கோர பல்லை அகற்றி உண்மை உருவத்தை வெளிப்படுத்துகிறான்.

காதலர்கள் சந்தோஷத்தில் திளைக்கும்போது வள்ளுவன் தன்னை விட வயது குறைந்தவன் என்றும் தனது கல்லூரி மாணவன் என்றும் சுவப்னாவுக்கு தெரிய அதிர்ச்சியாகிறாள்.

அதன் பிறகு கதையில் வேகம்…. வள்ளுவனை உதறி விட்டு வெளிநாட்டு மாப்பிள்ளையை மணக்கத் தயாராகிறாள்.

இருவரும் இணைந்தார்களா? என்பது பிற்பகுதி விறுவிறுப்பு…

வள்ளுவனாக சிம்பு, துடுக்கத்தனம், காதல், அழுகை, ஆத்திரம் அத்தனையிலும் முத்திரை….

போடு ஆட்டம் போடு என குழந்தைகளுடன் நடனத் தோடு அறிமுகமாகும் ஆரம்பம் நச்… நீண்ட பல் சோடா புட்டி கண்ணாடியுடன் ஜோக்கர் உருவத்துக்கு மாறி காதலிக்காக ரவுடிகளிடம் அடிவாங்குவது… சுவப்னா விரும்பிய செருப்பை திருடி போலீசிடம் மாட்டி சித்திரவதைப்படுவது… மனதை பிழிபவை…

காதலியுடன் நடத்தும் முதலிரவு கிளு கிளு…. அந்த நேரம் இருவரும் பேசிக் கொள்ளும் வசனம் “ஏ” ரகம்…

காதலி வெறுத்து ஒதுக்கிய பின் வரும் சிம்பு, ரீமாசென் `பிளாஸ்பேக்’ பள்ளிக் காதல் சரவெடி…. சைக்கோவான ரீமாசென்னிடம் செருப்படி வாங்குவது… வாந்தியை அள்ளுவது… மனதை தொடுபவை.

சுவப்னா பாத்திரத்தில் நயன்தாரா ஜொலிக்கிறார். மாணவனை காதலித்து விட்ட தவறை உணர்ந்து அவன் மீது ஆவேசப்பட்டு கதறுவது சபாஷ். `பல்லன்’ தோற்றத்தை பார்த்த உடனே சிம்புவிடம் ஒட்டுவது மனதில் ஒட்டவில்லை.

காதல் சைக்கோ’ பாத்திரத்தில் ரீமாசென் நிஜமாய் கச்சிதம். காதலன் வீட்டு போன் துண்டிக்கப்பட்ட நிலையிலும் விடிய விடிய காத்திருந்து போன் நம்பரை சுழற்றுவது திக்…. திக்… ஷுவை கழற்றி காதலன் மேல் வீசுவது… காலில் விழுந்து கெஞ்ச வைப்பது… திகில் காதல்..

சிம்புவின் தோழியாக சந்தியா வந்து போகிறார். எஸ்.வி.சேகர், சந்தானம், சுகுமார், கொட்டாச்சி கலகலப்பு…

கதையில் `லாஜிக்’ நெருடல்கள் இருந்தாலும் காட்சிகளின் பிரமாண்டம் மறக்கச் செய்கிறது.

யுவன் சங்கர்ராஜா இசையில் `லூசுப் பெண்ணே’, `வல்லவா’ யம்மாடி ஆத்தாடி பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. ப்ரியன் ஒளிப்பதிவு அபாரம்..

காதல் “வல்லவன்”

வட்டாரம்
முழு நீள ஆக்ஷன் படம்…

லாஜிக் பார்க்காமல் இருந்தால் பெரிய துப்பாக்கிகளின் மேஜிக்.

சின்ன வயதில் தன்னையும் தன் தந்தையையும் அவமானப்படுத்தி தன் தந்தையின் தற்கொலைக்கு காரணமான அமைந்த குருபாதத்தை பழி வாங்கி அவர் இருக்கும் இடத்தில்தான் இருக்க வேண்டும் எனும் எண்ணம் ஹீரோ பர்மாவிற்கு!

வளர்ந்து பெரியவன் ஆனதும் பெரிய மனிதர், பெரிய பிஸினஸ்மேன் போர்வையில் வலம் வரும் ஆயுத வியாபாரி தாதா குருபாதத்திடம் வேலைக்கு சேருகிறான்.

குருபாதத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி ஒரு கட்டத்தில் அவரது கூட்டாளிகள், அடியாட்கள் என்று சகலரையும் போட்டுத் தள்ளிக்கொண்டே மற்றொரு பக்கம் குருபாதத்தின் எதிராளி என்.கே.சாமி எனும் கருப்புசாமிக்கும் ஆயுத சப்ளை செய்து அந்த கேங்கையும் குருபாதத்திற்கு எதிராக தூண்டிவிடுகிறான் பர்மா.

குருபாதத்தின் ஆட்களை தீர்த்து கட்டி அந்த கொலைகளை கருப்பசாமி குரூப் செய்ததாக கதை கட்டி இரண்டு குரூப்பையும் மோத விடுகிறான்.

எதிர்பாராமல் குருபாதத்தின் மகளுக்கும், கருப்பசாமியின் மகனுக்கும் திருமண பேச்சு வார்த்தை எழுந்து இரு குரூப்பும் சமாதானமாகிறது. இதை விரும்பாத பர்மா குருபாதத்தின் மூத்த மகனோடு சென்று கருப்பசாமியின் மகனை தீர்த்து கட்டி விட்டு குருபாதத்தின் மூத்த மகன், உன் பிள்ளையை தீர்த்து கட்டி விட்டான் என்று கருப்பசாமிக்கு தகவல் அனுப்புகிறான். அதில் கடுப்பாகும் கருப்பசாமி குருபாதத்தின் மூத்த மகனை போட்டுத்தள்ளுகிறான்.

இப்படி பழிக்கு பழி வாங்கியபடி துப்பாக்கி சப்தம் கேட்க செல்லும் கதையில் பர்மா, குருபாதத்தை ஒழித்துக்கட்டிவிட்டு அவரது இடத்திற்கு வந்தனா? இல்லையா? என்பது கிளைமாக்ஸ்.

ஹீரோ பர்மாவாக ஆர்யா, குருபாதமாக நெப்போலியன் இருவரும் தங்கள் பாத்திரங்களில் கச்சிதம்.

துப்பாக்கிகளும் கையுமாக ஆர்யா, ஆக்ஷனில் ஜேம்ஸ்பாண்டு ரேன்ஜ×க்கு அசத்தல். நெப்போலியனும் கலக்கல். அரிவாள், கம்பு என்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இதுவரை திரிந்து நெப்போலியனுக்கு இந்தப் படம் மூலம் வித்தியாச `கெட்அப்’.

கதாநாயகியாக கீரத், அவரது தோழியாக அதிசயா என்று இரண்டு புதுமுகங்கள் இருவருமே வலுவாக காலூன்றும் தன்மை. கீரத்தின் நடை, உடை பாவனை அதிசயாவின் வித்தியாசமான குருல் மைனஸ். தண்டபாணி, ரமேஷ்கண்ணா, வையாபுரி, ராம்ஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.

வட்டாரம் எனும் பெயரில் பெரிய தொழில் அதிபர்கள் போர்வையில் இருக்கும் தாதாக்களின் `வட்டாரங்களை டச் பண்ணியிருக்கும் சரண் காட்சியமைப்புகளில் சபாஷ். கதை விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை.

பரத்வாஜின் இசையில் வைர முத்துவின் பாடல்களையும் ஏ.வெங்கடேசனின் ஒளிப்பதிவையும், சரணின் இயக்கத்தையும் ரசிக்கலாம்.

தலைமகன்
சரத்குமாரின் நூறாவது படம்…

பத்திரிகை, அரசியல், தண்ணீர் பிரச்சினை மூன்றிலும் சவாரி செய்கிறது கதை.

மினரல் வாட்டர் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு எதிர்கால சமுதாயத்தை தண்ணீர் தட்டுப்பாடு உலுக்கும் என்ற கருவை ஆக்ஷன் கலந்து பதிய செய்துள்ளனர்.

வெளிநாட்டு நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கி நெடுங்குளம் கிராமத்தில் தண்ணீர் பேக்டரி, திறக்க அனுமதி கொடுக்கிறார் மந்திரி சண்முக வடிவேலு. இத்திட்டத்தால் வறட்சி உருவாகி மக்கள் பாதிக்கப்படுவர் என்று சரத்குமார் எதிர்க்கிறார்.

பத்திரிகையிலும் கட்டுகரை எழுதுகிறார். சரத் மீது எரிச்சல் ஆகும் மந்திரி போலீசை ஏவி பத்திரிகை ஆபீசில் வெடி குண்டுகளை பதுக்கச் செய்கிறார். சரத்குமாருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக பொய் வழக்கை பதிவாக்கி கைது செய்ய வைக்கிறார்.

கோர்ட்டில் ஆஜர்படுத்த சரத்குமாரை அழைத்து போகும் போலீஸ் நடுவழியில் அவரை கொல்லத் துணிகிறது. சரத்குமார் தப்பினாரா? தண்ணீர் கம்பெனி தடுக்கப்பட்டதா? என்பதை விறு விறுப்பாக சொல்லியுள்ளனர்…

பத்திரிகை நிருபர் பாத்திரத்தில் சரத்குமார் கச்சிதம். மந்திரி அக்கிரமத்துக்கு துணை போகும் போலீஸ் அதிகாரி, ரவுடிகள் என மூன்று தரப்பினரிடமும் மோதுவதில் வேகம்…

பத்திரிகை எடிட்டர் விஜயகுமாரை சித்ரவதை செய்தும் அவர் மகளை கற்பழித்து கொல்வது கொடூரம்… அதுவரை மெதுவாக நகரும் கதை பின் சூடு பிடிக்கிறது.

சரத்குமாரை ஏற்றி வந்த வேனை தண்டவாளத்தில் நிறுத்தி ரெயிலை மோதச் செய்வது பயங்கரம்….

சரத்குமார் உடல் முழுவதும் ரத்த காயம் ஆகி கேரள மூலிகை சிகிச்சை எடுத்துக் கொண்டு பழைய விஷயங்களை நினைப்பது போல் கதையை பிளாக் பேக்கில் நகர்த்தியது. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டெக்னிக்…

சிகிச்சைக்குப் பின் நீண்டமுடி, உருக்குலைந்த முகம், தெத்தும் பேச்சு, நொண்டும் நடை என வித்தியாசமான தோற்றத்தில் நெடுங்குளம் கிராமத்தில் ஆஜராவது அபாரம்.

மந்திரி, போலீஸ் அதிகாரியை வீழ்த்த சரத்குமார் தொழிற்சாலைக்குள் கம்ப்ïட்டரை இயக்கி விïகம் அமைப்பது… மயானத்தில் கல்லறையை பெயர்த்து ஊழல் பைல்களை தோண்டி எடுப்பது… திக்… திக்… மந்திரியுடன் மோதும் கிளைமாக்ஸ் சண்டை அனல்…

சரத்குமார் காதலியாக நயன்தாரா. குறைவாக வந்தாலும் நிறைவு. தீன் தேனா பாடலில் திறமை காட்டுகிறார்…

போலீஸ் டி.ஜி.பி.யாக வரும் சீமா பிஸ்வாஸ் வில்லன்களுடன் சேர்ந்து மிரட்டுகிறார். மந்திரி கேரக்டரில் வரும் முகேஷ் தீவாரிக்கு சத்தத்தில் மட்டும் வேகம்… கதாபாத்திரங்களின் வசன உச்சரிப்பின் போது சில இடங்களில் பின்னணி இசை கோர்க்காதது வேகத்தடை…

படத்தின் பிற்பகுதியை விறுவிறுப்பாக இயக்கி உள்ளார் சரத்குமார்.

வடிவேலு ஒளியும் வில்லன்களை காட்டி கொடுத்து மாட்டும் காமெடி ரகளை…

விஜயகுமார், சங்கிலிமுருகன், அலெக்ஸ், டெல்லி கணேஷ் ஆகியோரும் உள்ளனர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், குஷ்பு ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுகிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவா, பால் இசையில் `நூறு நூறு’ பேனாகாரன் பாடல் முணு முணுக்க வைக்கிறது. டைரக்டர் சேரன் திரைக்கதையமைத்துள்ளார்.

வரலாறு
அஜீத்குமார் நடிப்பை பறைசாற்றும் படம்… மூன்று பாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

விபத்தில் கால் இழந்ததாக சொல்லி சக்கர நாற்காலியில் வலம் வரும் கோடீஸ்வர தொழில் அதிபர் சிவனுக்கு மகன் விஷ்ணு மீது பிரியம். மனைவியும் அதே விபத்தில் பலியாகி விட்டதாக மகனிடம் சொல்லி வளர்க்கிறார்.

விஷ்ணுவுக்கு கல்லூரி மாணவி திவ்யா மீது காதல். அவன் ஆசைப்பட்ட பெண்ணை மணமுடித்து வைக்க பேசி நிச்சயம் செய்கிறார். நிச்சயதார்த்தம் முடிந்ததும் திருப்பம். பூனைக் கண்களோடு வெறி பிடித்தவனாக விஷ்ணு தோற்றத்தில் ஜீவா என்பவன் ஆஜர்ஆக படம் படுவேகம்.

விஷ்ணுவாக திவ்யா வீட்டுக்குள் போதையில் நுழைந்து ரகளை, அடி-தடி செய்து திருமணத்தை நிறுத்துகிறான். திவ்யா தோழியை கற்பழிக்க முயன்று அவள் வெறுப்பை விஷ்ணு மீது திருப்புகிறான். சிவனை கத்தியுடன் பாய்ந்து கொல்லத் துணிகிறான்… மொத்த பழியும் விஷ்ணு மீது விழ அவனை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்கின்றனர்.

விஷ்ணு தோற்றத்தில் வந்த ஜீவா யார்? சிவனை பழி வாங்க துடிப்பது ஏன் என்பது பிளாஸ்பேக்கில் ஜெட் வேகத்தில் நகர்கிறது.

வயதான சிவன், அப்பாவி விஷ்ணு, பழிவாங்கும் வெறியில் அலையும் ஜீவா என முன்று கேரக்டரில் வெளுத்துள்ளார் அஜீத்.

செய்யாத தப்புக்கு தந்தையிடம் அடி வாங்குவது… பைத்தியக்காரன் என முத்திரைகுத்தி மனநல ஆஸ்பத்திரியில் மின்சார அதிர்ச்சி சிகிச்சைக்குள் மாட்டி அலறுவது… அனுதாபத்தை நிறைய அள்ளகிறார் விஷ்ணு அஜீத். தந்தை சிவனாக வரும் கேரக்டரில் உச்சத்தை தொட்டுள்ளார்.

மகன் தன்னை கொலை செய்ய வந்ததை பார்த்து அதிர்வது… அவனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுப்பதை சகிக்காமல் பதறுவது அபாரம்.

ஜீவா கேரக்டர் தன்னை கொல்ல பாய்வதை பார்த்து ஆவேசமாக சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நின்று கால்களை லாவகமாக சுழற்றி சண்டைக்கு தயாராவது படுபயங்கர திருப்பம்… இருபத்தைந்து வருடமாக கால் ஊனமாக சிவன் நடித்தது ஏன்? அதிலிருந்து பிளாஸ்பேக் விரிகிறது.

இளம் பரத நாட்டிய கலைஞராக சிவன் வரும் காட்சிகள் நச்…நச்…

இடையை குலுக்கி தலையை ஆட்டி, கைகளை பரதக்கலை முத்திரையில் அசைத்து பெண்மைத்தனமாய் நடக்கையில் நடிப்புலகை குலுக்குகிறார்.

மணமேடைக்கு மாப்பிள்ளையாக அன்ன நடையில் வரும் லாவகம்… மணப்பெண் கனிகா ஆண்மையில்லாதவன் என்று தன்னை பழித்ததும் கூட்டத்தினர் மத்தியில் அவமானப்பட்டு கூனி குறுகும் தன்மை… தாய் அதிர்ச்சியில் இறந்ததும் ஆவேசமாக வீட்டுக்குள் போய் பெண்மைக்கான நளினம் ஆண்மை வேகம் கலந்த பாத்திரமாகவே மாறி கற்பழிக்கும் ஆவேசம் என அத்தனையும் அவார்டு பெற்றுத்தருபவை.

ஜீவா பாத்திரத்தில் கொலை வெறியனாக பளிச்.. தந்தை பாத்திரத்தோடு மோதும் கிளைமாக்ஸ் சண்டை அனல்.. பைத்தியகாரத் தாயிடம் காட்டும் பாசம் ஜீவன்.

அஜீத்தின் மூன்று கேரக்டர்களை கச்சிதமாக செதுக்கி விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியுள்ளார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

திவ்யாவாக வரும் அசின் விஷ்ணுவிடம் விலைமாது என ஏமாற்றி பரிதாபப்பட வைப்பது பளிச்…

கனிகா கொஞ்சம் ஆவேசம். கொஞ்சம் அமைதி. ராஜேஷ், சந்தானபாரதி, சுமன்ஷெட்டி, ராஜலட்சுமி, ரமேஷ்கன்னா, பாண்டு, விஜயன், பொன்னம்பலம், மன்சூர் அலிகான், சுஜாதா ஆகியோரும் உள்ளனர்.

இருபத்தைந்து வருடமாக நொண்டியாக நடிக்க அழுத்தமான காரணம் சொன்னாலும் அது சாத்தியமா என்பது போன்ற சில லாஜிக்- தொய்வுகள் இருந்தாலும் அஜீத்தின் வலுவான கேரக்டர்கள் அவற்றை மறக்கடிக்கச்செய்கின்றன. ஏ.ஆர்.ரகுமான் இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு பலம்.

அஜீத் “வரலாறு” படைத்துள்ளார்…


புதுமையான கதை களம்.

`ஈ’ என்கிற பெயரில், தனது முழுப்பெயர் ஈஸ்வர் என்பதுக் கூட தெரியாமல் ஒட்டுமொத்த திருட்டு தனமும் நிறைந்த குப்பத்து ராஜாவாக சுற்றித் திரிகிறான் ஹீரோ.

காசுக்காக எதையும் செய்யும் `ஈ’க்கு கையாளாக டோனி. சின்ன அளவில் பிக்பாக்கெட், செயின் பறிப்பு வழக்குகளுக்காக உள்ளே போய் வரும் `ஈ’க்கு பெரிய அளவில் கடத்தல், கத்திக்குத்து நடத்தி ஏரியா தாதா ஆக வேண்டும் என்பது ஆசை.

அதற்கான வாய்ப்பு அமையும்போது மும்பையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து ஸ்டார் ஹோட்டல் பார்களில் டான்ஸ் ஆடிப் பிழைக்கும் ஜோதி குறுக்கிடுகிறாள். `ஈ’ மீது காதல் கொள்கிறாள். `ஈ’ யை திருத்த முயற்சிக்கிறாள்.

அந்த ஏரியாவிலேயே பிரபலமான மருத்துவராக இருக்கும் டாக்டர் ராமகிருஷ்ணனின் கையாளாக இருக்கிறான் `ஈ’. அவர் என்ன செய்கிறார் என்பதே தெரியாமல் அவர் சொல்வதை செய்து வருகிறான். ராமகிருஷ்ணன் சட்டத்திற்கு புறப்பாக செய்யும் மருந்து பரிசோதனைக்கு எதிரியாகி அவரை தீர்த்துகட்ட சபதம் பூண்டிருக்கும் நெல்லைமணியை ஒருகட்டத்தில் கடத்தி டாக்டரிடம் பல லட்சங்களை சம்பாதிக்க திட்டம் போடுகிறான் `ஈ’.

திட்டமிட்டபடியே நெல்லை மணியை கடத்தினானா. ஜோதியும் `ஈ’யும் விரும்பியபடி திருமணம் செய்து கொண்டார்களா? டாக்டர் ராமகிருஷ்ணன் சமூக விரோதி என்பதை மக்கள் புரிந்து கொண்டார்களா என பல முடிச்சுகளுக்கு விடை சொல்லும் எதிர்பாராத கிளைமாக்ஸ். வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் படமாக்கியுள்ளார் இயக்குனர் ஜனநாதன்.

`ஈ’ என்கிற ஈஸ்வர் பாத்திரத்தில் ஜீவா வாழ்ந்திருக்கிறார். கறைபடிந்த `பற்கள்’, குளிக்காத முகம், எண்ணையே பார்க்காத பரட்டை தலை என்று ஒரு சேரிப்பையனாக பிரமாதம். மார்வாடிக்கடையில் டூப்ளிகேட் செயினை வைத்துபணம் கேட்பது, புரோக்கர் சிலர் ஜீவாவின் காதலி ஜோதியை விபச்சாரத்திற்கு கூட்டி வரச்சொன்னதும் கூசாமல் போய் அவளை விபச்சாரத்திற்கு அழைப்பது இது மாதிரி பல காட்சிகளில் ஜீவாவின் நடிப்பில் குப்பத்து படிக்காதவர்கள் குறும்பு பழக்க வழக்கங்கள் பிளிச்.

`ஈ’யின் காதலி ஜோதியாகவும், `பார் டான்ஸராகவும் நயன்தாரா பட்டையை கிளப்புகிறார். `ஈ’ யை எடுத்த எடுப்பிலேயே சிக்கலில் மாட்டிவிடும் நயன்தாரா, அந்த காரணத்திற்காகவே அவன் மீது காதல் கொள்வதும், காதலன் தன் பேச்சை மீறி விட்டான் என்று `ஈ’யை பிரிந்து செல்வதும் நெருடல்.

டாக்டர் ராமகிருஷ்ணனாக ஆஷிஸ்வித்யார்த்தியின் வில்லத்தனம் கொடூரம், தனக்கு நெருக்கமான அடியாளாக இருக்கும் `ஈ’ யின் பாட்டியையே தன் மருந்து பரிசோதனைகள் மூலம் பலி கொள்வது படுபயங்கரம். நெல்லை மணியாக வரும் பசுபதி பிரமாதம்.

`ஈ’யின் நண்பராக வரும் கருணாஸ் நடிப்பு உருக்கமாக உள்ளது. அஜய்ரத்னம், அசினா, ஆரியா, சேரன்ராஜ், மாதவி, வானி என்று இன்னும் பலரும் நடித்திருக்கின்றனர். என்.கே. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு ஸ்ரீகாந்த்தேவா இசை படத்திற்கு பெரிய பக்க பலம். மிரட்டலான படம் `ஈ’.

தர்மபுரி
விஜயகாந்த் `இமேஜை’ உயர்த்த அவரைச் சுற்றிப் பின்னப்பட்ட அரசியல் நெடி படம்.

மண்பாண்ட தொழில் செய்யும் ஒரு கிராமம். படத்தின் களம். அந்த ஊரையும் மண்ணையும் நேசிப்பவராக விஜயகுமார். ஊர் மக்கள் மண் எடுத்து தொழில் செய்ய தனக்கு சொந்தமான இரு நூறு ஏக்கர் நிலத்தை எழுதி கொடுக்கிறார். ஊர் கோவிலுக்கு மண் குதிரைகள் வாங்கியதில் ஊழல் செய்ததாக அவர் மீது பழி விழ குடும்பத்தோடு ஊரை விட்டு வெளியேறி ராமேஸ்வரத்தில் குடியÚறுகிறார்.

ஊருக்கு அவர் இலவசமாக கொடுத்த நிலத்தை சிவந்தி கருப்பு, பெருச்சாளி கருப்பு என்ற அண்ணன்- தம்பி தாதாக்கள் பறித்துக் கொள்ள ஊரால் தவிக்கின்றனர்.

ராமேஸ்வரத்துக்கு போய் மெய்யப்பன் மகன் சிவராமிடம் நிலத்தை மீட்டுத்தர வேண்டுகின்றனர். சிவராம் கிராமத்துக்கு வந்து ரவுடிகளை வீழ்த்தி நிலத்தை பிடுங்கி ஊராருக்கு கொடுப்பது பின் பகுதி கதை…

மக்களுக்கு நன்மை செய்யும் சிவராம் பாத்திரத்தில் விஜயகாந்த் கச்சிதம். சிறு வயது போட்டோவை கம்ப்ïட்டரில் கொடுத்து அவரை அறிமுகப்படுத்தும் இடம் அமர்க்களம். திருமண வீட்டில் தனது நாற்காலிகளுக்கு வாடகையாக தரும் பணத்தை திருப்பி கொடுப்பது, ரவுடிகள் ஆக்கிரமித்து மதுக்கடையாக்கிய பள்ளியை மீண்டும் திறப்பது, சூதாட்ட விடுதிÖக்கிய பிரசவ ஆஸ்பத்திரியை மீண்டும் திறப்பது என வாக்காளர்களை வசியப்படுத்தும் காட்சிகள் நிறைய….

இவன் தமிழன், தமிழ் நாட்லேதான் இருப்பான். ஏ போலீசு இப்ப இவர் முன்ன நிக்கிறீங்க சீக்கிரம் பின்னால் வரப்போறீங்க. இவர் பின்னால் இந்த காலத்துல இவ்வளவு கூட்டம் கூடுது என்று விஜயகாந்தை தலைவராக சித்தரிக்கும் வசனங்கள். `இவர் கோட்டையிலே கொடு பறக்குமோ வந்துட்டாரு வந்துட்டாரு வாத்தியாரு என்பன போன்ற பாராட்டு பாடல்களும் நிறைய… உன்கிட்ட இருப்பது கூலிப்படை என்கிட்ட இருப்பது மக்கள் படை. கள்ள ஓட்டு, குறுக்கு வழியில் அரசியல் நடத்துறே என்று ரவுடி எம்.எல்.ஏ.வை பார்த்து விஜயகாந்த் கர்ஜிப்பது ஆவேசம்.

வேலைக்காரனை தன் உருவில் மாற்றி அவனுக்கு வேலைக்காரன் வேடத்தில் விஜயகாந்த் கிராமத்தில் நுழையும் உத்தி பளிச்.

விஜயகாந்த் வேலைக்காரனாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் காமெடி ரசனை. மெய்யப்பன் மகன் நான்தான் என்று கிராமத்தில் ஆஜராகி ரவுடிகளிடம் மாட்டி தவிப்பது, விஜயகாந்த் முறைப்பெண்ணை விரும்பி நிச்சயதார்த்தத்தில் தட்டு மாற்றுவது என கல கலப்பூட்டுகிறார்.

மணிவண்ணன், பாபி, ராஜ்கபூர், ஜெயபிரகாஷ் ரெட்டி மூவரும் வில்லத்தனத்தில் மிரட்டல். லட்சுமிராய் அழகாய் ஜொலிக்கிறார். நடனம் பளிச்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் படல்கள் துள்ளல் ரகம். சரவணன் ஒளிப்பதிவு மண்மேடு கிராமத்தை கண்ணில் பதிக்கிறது.

கட்சிகளில் விறுவிறுப்பு காட்டியுள்ளார் இயக்குனர் பேரரசு. கதையில் அழுத்தம் குறைவு.

விஜயகுமார், சுமித்ரா, ராஜேஷ், பீலிசிவம், மனோ பாலா ஆகியோரும் உள்ளனர்.

விஜயகாந்த் புகழ் பாடும் தர்மபுரி.

துள்ளுற வயசு
இளசுகளின் காதல் கதை…

பள்ளியில் ஒன்றாய் படிப்பவர்கள் ராகவ், தீபிகா. நட்பாய் பழகும் அவர்கள் மனதில் காதல்…

இருவருக்கும் காதலை வெளிப்படுத்த தயக்கம். பள்ளி முடியும் நாளில் ஆட்டோ கிராப் எழுத நோட்டை மாற்றும்போது ஒருத்தருக்கு தெரியாமல் ஒருத்தர் கடிதம் எழுதி வைக்கின்றனர்.

கடிதம் தீபிகா அண்ணன் கைக்கு போகிறது. ராகவின் காதல் கடிதத்தை படித்து அவனுக்கு அதிர்ச்சி.

தீபிகாவுக்கு மயக்க ஊசி போட்டு செத்து விட்டதாக ராகவை நம்ப வைத்து பிரிக்கிறான்.

காதலியை இழந்த தூக்கத்தில் ராகவ் பட்டினத்தில் படிக்க வர திருப்பம்.

அதே ஊரில் மருத்துவக்கல்லூரி மாணவியாக தீபிகா…

காதலை பிரிக்க அண்ணன் செய்த சூழ்ச்சி இருவருக்கும் புரிகிறது. ராகவை தீர்த்துக் கட்ட தீபிகா அண்ணன் ரவுடிகளை ஏவுகிறான். தீபிகாவையும் வெளிநாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறான். இருவரும் சேர்ந்தார்களா? என்பது விறுவிறுப்பான கிளைமாக்ஸ்.

பள்ளி மாணவனாக அமைதியாக வரும் ராகவ் பிற்பகுதியில் ஜொலிக்கிறார். காதலி செத்து விட்டதாக அழுது புலம்புவது உருக்கம். ரவுடிகளிடம் அடிபட்டு ரத்த சகதியாவது அனுதாபம். காதலியை பார்க்க விடாமல் தடுப்பவர்களுடன் கிளைமாக்ஸ் சண்டை வேகம்…

தீபிகா குருத்தோலை மாதிரி வருகிறார். `மிடி’யில் கைப்பந்து ஆடுவது இளமை நச்…

தீபிகா அண்ணனாக வரும் பிரணவா மிரட்டல்… தங்கையை மயக்கமடைய வைத்து செத்து விட்டதாக ஒப்பாரி வைத்து நடிப்பது, தங்கைக்கு உளவு சொன்ன வேலைக்காரியை தீர்த்து கட்டுவது வில்லத்தனத்தில் கச்சிதம்… ஷர்மிலி, ஆசிரியையாக வந்து கிறங்கடிக்கிறார்.

`டீன் ஏஜ்’களின் இளமைப் படையல் பாதி… காதல் வலி மீதி என தெவிட்டாமல் கொடுத்துள்ளார் இயக்குனர் கோபால்… இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன.

கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் தாளம்.

இளமை துள்ளல்…

Posted in Aashish Vithiyaarthy, Aavani Thingal, Ajeeth, Ajith, Anushka, Aparna, Arjun, Arya, Ashish Vithyarthi, Asin, Bharadhwaj, Bhardvaaj, Bhardwaj, Bhavna, Bhawana, By2, Captain, Clips, Comedy, Dharmapuri, Director, Dwaragi Ragavan, Dwaraki Raghavan, E, ECR, Imaan, Irandu, Iruvar Mattum, Jananathan, Jeeva, Jenanathan, Kanika, Karthk Raja, Karu Palaniappan, Karu Pazhaniyappan, Kizhakku Kadarkarai Saalai, Kollywood, KS Ravikumar, KSR, Maadavan, Madhavan, Manivannan, Mayilsaamy, Mayilsami, Navdeep, Nayanthara, Nenjil, Nepolean, Pasupathy, Raghuvaran, Reema Sen, Rendu, Reviews, Sandhiya, Sandhya, Santhanam, Saran, Sarathkumar, Selva, Silambarasan, Simbu, Sivappathigaram, Sivappathikaram, Srikanth, Sundar C, Tamil Cinema, Tamil Movies, Thala, Thalai Makan, Thalaimagan, Thullara Vayasu, Vaathiyaar, Vaathiyar, Vadivelu, Vallavan, Varalaaru, Vattaaram, Vijay Antony, Vijayakanth, Vijayganth, Vimarsanam, Vishal, YSR, Yuvan Shankar Raja | Leave a Comment »

New Tamil Movie releases – 2006 end of year Tamil Cinema Updates

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

தீபாவளி போட்டியில் இருந்து விலகிய 8 புதுப்படங்கள் இம்மாதம் ரிலீஸ்

தீபாவளிக்கு விஜயகாந்த் சரத்குமார், அஜீத், ஆர்யா படங்கள் ரிலீசாயின. இந்த படங்களுடன் மோதாமல் சில படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டன. அதன்படி இம்மாதம் 8 படங்கள் ரிலீசாகின்றன. வாத்தியார், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்கள் இன்று ரிலீசாயின.

`வாத்தியார்‘ தீபாவளிக்கு வர இருந்தது. சில பிரச்சினைகளால் கடைசி நேரத்தில் வெளிவராமல் நின்றது. பேச்சுவார்த்தைக்கு பின் சமரசம் ஏற்பட்டு ரிலீசாகியுள்ளது.

இந்த படத்தில் அர்ஜ×ன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மல்லிகா கபூர் நடித்துள்ளார். அநியாயங்களை எதிர்க்கும் பள்ளிக்கூட ஆசிரியர் கதைதான் வாத்தியார். ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.

கிழக்கு கடற்கரை சாலை படத்தில் ஸ்ரீகாந்த், பாவனா ஜோடியாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகாந்த் பெட்ரோல் பங்க் ஊழியராக நடிக்கிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு பாடலை வெளிநாட்டில் எடுக்க விரும்பினர். பாவனா கால்ஷீட் இல்லாததால் எடுக்க முடியவில்லை. ஸ்டான்லி இயக்கியுள்ளார்.

விஷால் நடித்த சிவப்பதிகாரம் படமும் இம்மாதம் ரிலீசாகிறது. ஏற்கனவே விஷால் நடித்த செல்லமே, சண்டைக்கோழி, திமிரு படங்கள் தொடர்ச்சியாக வென்றதால் இப்படமும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. ஜோடியாக மம்தா நடித்துள்ளார்.

குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள ரெண்டு படம் 17-ந் தேதி ரிலீசாகிறது. மாதவன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ரீமாசென், அனுஷ்கா என இரு நாயகிகள். சென்னையில் தீவுத்திடலில் `செட்’ போட்டு படப்பிடிப்பை நடத்தினர். இதில் ரீமாசென் கடல் கன்னியாக நடிக்கிறார்.

பரத் கதாநாயகனாக நடித்த வெயில் படமும் அதே 17-ந் தேதி ரிலீசாகிறது. ஜோடியாக பாவனா நடித்துள்ளார்.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்துக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இப்படத்தை தயாரித்துள்ளார். வசந்தபாலன் இயக்கியுள்ளார். விருதுநகர் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. ஸ்ரேயா ரெட்டி, பசுபதி போன்றோரும் நடித்துள்ளனர்.

குழந்தை நட்சத்திரமான கல்யாணி கதாநாயகியாக நடித்த பிரதி ஞாயிறு 9 முதல் 10.30 வரை படமும், புதுமுகங்கள் நடித்துள்ள ஆவணி திங்கள் படமும் இம்மாதம் ரிலீசாகிறது.

பாலச்சந்தர் இயக்கியுள்ள `பொய்‘ படமும் இம்மாத ரிலீஸ் படங்கள் பட்டியலில் உள்ளது. இதில் உதய்கிரண், விமலாராமன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Posted in Aavani Thingal, Arjun, Balachander, Bhawana, Deepavali, Diwali, East Coast Road, ECR, Imsai Arasan, izhakku Kadarkarai Salai, K Balachandar, KB, Movie Previews, New Films, Pasupathy, Poi, Prakashraj, Reema Sen, Rendu, Shreya Reddy, Sivappathigaram, Sivappathikaram, Srikanth, Sundar C, Sunday 9 to 10:30, Tamil, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Thamizh padam, Vaathiyaar, Vasanthabalan, Veyyil, Vishal | Leave a Comment »