கடத்தப்பட்ட ஐவரி கோஸ்ட் சிறார்கள் மீட்கப்பட்டனர்
![]() |
![]() |
ஐவரி கோஸ்ட் சிறார்கள் |
ஐரோப்பாவில் அதிக பணம் ஈட்டக் கூடிய கால்பந்து ஒப்பந்தங்களை பெற்று தருவதாகக் கூறி ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 34 சிறுவர்களை புலம் பெயந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பு தமது வீடுகளுக்கு திருப்பியனுப்பியுள்ளது .
அந்தச் சிறார்கள் ஐரோப்பாவில் ரோம், மட்ரிட் அல்லது லண்டனுக்கு அழைத்து செல்லப்படுவதாகக் கூறப்பட்டு அவர்களை, அண்டை நாடான மாலிக்கு கொண்டு சென்று, அங்கு அவர்களது விருப்பத்திற்கு விரோதமாக அவர்கள் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட சிறுவர்களை மீண்டும் ஒப்படைக்க, பயணச் செலவுகளுக்காக நூற்றுக் கணக்கான டாலர்களை போலி முகவர்கள் அவர்களின் பெற்றோரிடம் கேட்டதாக புலம் பெயர்ந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.
இந்தச் சம்பவம், தொழில் ரீதியல்லாத வகையில் ஆப்ரிக்க முழுவதும் செயல்படும் கால்பந்து கழகங்களுக்கு, பரிச்சயமில்லாத முகவர்களை நம்பி ஏமாறாமல் இருக்க ஒரு எச்சரிக்க்கை எனவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.