Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Special’ Category

Margazhi Carnatic Music Concert Season special updates – Dinamani: Charukesi

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

“சீசன்’ சிந்தனைகள்

சாருகேசி

தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்து வெளியே செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மையே. அதற்குப் பல கலைஞர்களும் அவ்வப்போது விடுத்த வேண்டுகோள்கள் (அல்லது நாசூக்கான மிரட்டல்கள்) ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் உமையாள்புரம் சிவராமன், மன்னார்குடி ஈசுவரன், திருச்சி சங்கரன் ஆகியோர் வாசிக்கும் “தனி’ போல மற்ற மிருதங்க வித்துவான்களின் வாசிப்பு இதமாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை.

சம்பர் சங்கீத மழை ஒரு வழியாக ஓய்ந்துபோய்விட்டாலும், மழைச்சிதறல் போல இங்கேயும் அங்கேயுமாக நடன நிகழ்ச்சிகள் ஜனவரியில் சில சபாக்களில் தொடரும்.

கிருஷ்ண கான சபாவில் பொங்கல் நாதசுர இசைவிழா மட்டும்தான் இனி குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சி. நாலு நாளைக்குத் தொடர்ந்து நாதசுர இசை இங்கே மட்டும்தான் கேட்க முடியும். இந்த நாதசுர இசை விழாவில், ஒரு சிறந்த நாதசுர மேதைக்கு “சங்கீத சூடாமணி’ விருது கூடக் கொடுக்கத் தொடங்கினார்களே, பிறகு நிறுத்திவிட்டார்களோ? அப்படி நிறுத்தப்பட்டிருந்தால் அது வருத்தத்துக்குரியதுதான்.

நாதசுர இசை என்னும்போது, எல்லாச் சபா இசைவிழா துவக்க நாளிலும் நாலு மணி சுமாருக்கு நாதசுர வித்துவான் ஒருவரின் மங்கள இசை நிகழ்ச்சி கட்டாயம் இருக்கும். (பெரும்பாலும் இதில் நாதசுர வித்துவான்கள் சோரம்பட்டி சிவலிங்கமோ, மாம்பலம் சிவாவோதான் பங்கு கொள்வார்கள்.) மங்கள இசை வாசிக்கிற நாதசுர வித்துவான், ஐந்தரை அல்லது ஆறு மணி வரை மேடையில் வாசித்துக் கொண்டிருப்பார். விழாவுக்குத் தலைமை வசிக்கும் பிரமுகர் வந்து சேர்ந்ததும் ஒரு வினோத பரபரப்பு உண்டாகும். மேடையில் நாதசுர இசை வழங்கிய வித்துவானுக்கு பாட்டை முடித்துக் கொள்ள சைகை மூலம் குறிப்பாக உணர்த்தப்படும். அவரும் நிறுத்திக் கொண்டுவிடுவார். அதற்குப் பிறகு அவர் அவசரமாக மேடையிலிருந்து வெளியேறுவார். (அல்லது மேடைக்குள் மறைந்து போவார்.) “அன்செரிமோனியஸ்’ என்பதற்குக் கண்கூடாக ஒரு நிகழ்ச்சியை உதாரணம் காட்ட வேண்டுமென்றால், இதைவிட வேறு ஒன்று இருக்க முடியாது. சில நாதசுர ரசிகர்கள் அரங்கிலிருந்து எழுப்பும் கரவொலியோடு அந்த நிகழ்வு நிறைவடையும். அத்தனை நேரம் மங்கள இசை வாசித்தாரே, அவருக்கு மேடையில் மரியாதை செய்து, முறையாக அனுப்பி வைத்தால் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது.

தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்து வெளியே செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பது உண்மையே. அதற்குப் பல கலைஞர்களும் அவ்வப்போது விடுத்த வேண்டுகோள்கள் (அல்லது நாசூக்கான மிரட்டல்கள்) ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் உமையாள்புரம் சிவராமன், மன்னார்குடி ஈசுவரன், திருச்சி சங்கரன் ஆகியோர் வாசிக்கும் “தனி’ போல மற்ற மிருதங்க வித்துவான்களின் வாசிப்பு இதமாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. சிகை கலைந்து, நிலை குலைந்து, கிட்டத்தட்ட ஒருவித ரயில் அல்லது விமான விபத்துபோல ஒரு பயங்கர சத்தத்தை அந்தத் “தனி’யின் போது உண்டாக்கிவிட்டால், அது “தனி’யே அல்ல என்று நினைக்கிறார்களோ என்னவோ? ஆனால், உப-பக்கவாத்தியமான கஞ்சிரா அல்லது கடம் அல்லது மோர்சிங் வாசிக்கிறவருக்கு அந்தத் “தனி’யின் போதுதான் ஏதோ கொஞ்சம் வாய்ப்புக் கிடைக்கிறது. இல்லை என்றால், வயலின் கலைஞர் வாசிக்கும்போதுகூட உப பக்கவாத்தியக் கலைஞர்களை வாசிக்க பெரும்பாலான மிருதங்க வித்துவான்கள் பெருந்தன்மையோடு இடம் கொடுப்பதில்லை. சில இளம் வித்துவான்கள் உரிமை எடுத்துக் கொண்டு ஒரு கை பார்ப்பது வேறு விஷயம்.

ரசிகர்களுக்கு நாகரிகம் கருதி சில கட்டுப்பாடுகள் வலியுறுத்தப்படுவது போல், மேடை நாகரிகம் கருதி சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வரலாம். குறிப்பாக, ஒரு ட்ரேயில் நாலு காபியை காண்டீனிலிருந்து எடுத்துக்கொண்டு ஒருவர் வருவது. ஏதோ அந்த இரண்டு மணி நேரத்தில் மேடையில் குடிக்கிற காபியில்தான் அவர்களுக்கு உயிரே இருப்பது போலவும், அது இசை வழங்கிக்கொண்டிருக்கிற முக்கிய கலைஞருக்குத் துளியும் இடைஞ்சல் இல்லை என்பது போலவும் நடந்து கொள்வது வருத்தத்துக்குரியது. இசை நிகழ்ச்சியின் கவுரவத்தைப் பாதிக்கிறது என்பதைப் பக்கவாத்தியக் கலைஞர்கள் உணர்ந்தால் சரி.

கச்சேரி தொடங்கிவிட்டால், மைக் அறை நோக்கிக் கலைஞர்கள் காண்பிக்கும் சைகைகள், புதிய பரதநாட்டிய முத்திரை வகையைச் சேர்ந்தவை. ஒழுங்கான ஃபீட்பேக் வசதி செய்து கொடுக்கப்பட்டுவிட்டால், பாதி பிரச்னை தீர்ந்துவிடலாம்.

ஒரு பாட்டு முடிந்த பிறகுதான் எழுந்துசெல்ல வேண்டும் என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டாலும், நிரவலின்போதோ, சுவரப் பிரஸ்தாரத்தின்போதோ எழுந்து போவதையும் சிலர் ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுப்பது சிரமம்தான்.

சீசனின் விழா நடக்கும் சபாக்களுக்கு வருகிற ரசிகர்கள் பிற மாதங்களில் கச்சேரிகளுக்கு வரும் வழக்கமான ரசிகர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். ஊர் முழுக்க ஓர் உற்சவம்போல நடத்தப்படும்போது உண்டாகிற உத்வேகம் உந்தித் தள்ளுவது போன்று, ரசனையைப் பிற மாதங்களில் வெளிக் காட்டிக் கொள்ள விரும்பாத ரசிகர்கள் சீசனில் மட்டும் சபாக்களில் வந்து இசைவிழாவை ரசிக்கிறார்கள். வருடத்துக்கு ஒரு முறை கர்நாடக இசை கேட்டு, தங்களை சார்ஜ் செய்து கொண்டால் போதும் என இவர்கள் நினைக்கலாம்!

இந்த ராகம்-தாளம்-பல்லவியை எப்போது “மேன்மேமரி’ (கட்டாயம்) என்று சீசன் கச்சேரிகளுக்கு வலியுறுத்தினார்களோ அப்போது அதன் தனித்தன்மையும் போய்விட்டது. 20,30 நிமிடத்தில் ராகம்-தாளம்-பல்லவி பாடிவிட்டு, “அப்பாடா, பல்லவி பாடியாகிவிட்டது!’ என்று கடனை நிறைவேற்றுகிற அளவுக்கே இசைக்கலைஞர்கள் இதற்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். நொம்தனம் நொம் என்று என்னவோ ஒரு பதத்தை வைத்துக்கொண்டு சரியான இம்சையாக்கி விடுகிறார்கள். (அதிலும் பல்லவிக்கு அதிகபட்சம் முருகா வா, சண்முகா வா, வடிவேலவா வாதான். வேறு எந்தக் கடவுளும் இவர்கள் ஏவலுக்கு வரமாட்டார்கள் போலும்!) ராகம்-தாளம்-பல்லவியை சோலோ வயலின் அல்லது வீணைக்கு விட்டுவிடலாம்.

பாட்டை ஆரம்பித்தவுடன் ரசிகர்களிடையே அது என்ன ராகம் என்று அறிந்துகொள்ளும் ஆவல் தோன்றியிருப்பது நல்ல அறிகுறி. எஸ்.கண்ணன் தொகுத்து, “நல்லி’ வெளியிட்டிருக்கும் இந்தக் குட்டிப் புத்தகம் கிட்டத்தட்ட எல்லா ஹேன்ட்பேக்கிலிருந்தும் பாட்டுத் தொடங்கியவுடன் வெளிப்பட்டு, அலசப்படுவது இயல்பாகிவிட்டது.

சஞ்சய் சுப்பிரமணியம், டி.எம்.கிருஷ்ணா நிகழ்ச்சிகள் சம்பிரதாய சுத்தமாகவும், கனமான கச்சேரிகளாகவும் எல்லா வகையிலும் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும்படியாகவும் இருந்தது என்று நண்பர்களின் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி நாரத கான சபாவில் எல்லா மாலை நேரக் கச்சேரிகளுக்கும் தவறாமல் வந்திருந்து கேட்டார். வெளிநாட்டில் வசிக்கும் இரா.முருகன், நித்யஸ்ரீயின் கச்சேரி கேட்ட கையோடு, ஞானானாம்பிகா கான்டீனில் சூடாக அடை சுவைத்துக் கொண்டிருந்தார். பாம்பே ஜெயஸ்ரீயின் கச்சேரியை (அதிலும் சுனாதவினோதினி ராகம்-தாளம்-பல்லவியையும் துக்கடாக்களையும்) ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார் இயக்குநர் வசந்த்.

இத்தனை கச்சேரிகளையும் ஊர் முழுக்கப் போய்க் கேட்டுவிட்டு, ஆங்கில விமர்சனங்களைப் படித்தீர்களானால் “இதுக்குத்தானா இத்தனை பாடு!’ என்று கேட்கத் தோன்றும். அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது!

Posted in Arts, Carnatic, Chaarukesi, Charukesi, Classical, Concert, Culture, Dinamani, Heritage, Margazhi, music, Musicians, Performances, Performers, Saarukesi, Saba, Sabha, Sarukesi, Season, Shows, Singers, Special, Stage | 1 Comment »

SG Kittappa & Kunjaan Kadai Pakoda – Taste of the native land

Posted by Snapjudge மேல் நவம்பர் 5, 2007

எஸ்.ஜி. கிட்டப்பாவும் குஞ்சான் கடை பக்கோடாவும்..!

தஞ்சை மாவட்டத்தின் ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு ரசனைக்குப் பேர் போனது. அந்த வகையில் நாக்குக்கே முழு அடிமையான ஒரு கூட்டம் இருக்கி றதென்றால் அது மன்னார்குடிதான். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாத ஊர் மன் னார்குடி. ஊர் மட்டுமல்ல இங்குள்ள சாப்பாட்டு சமாச்சாரங்களும் அப்படிதான். உல கம் முழுக்க பிரபலமான ஐட்டங்கள் இங்கு கிடையாது. ஆனால், இங்குள்ள ஐட்டங் களை ருசி பார்த்தவர்களை வேறெங்கும் திருப்தி செய்ய முடியாது.

அப்படி ஒரு நூற் றாண்டுக்கும் மேலாக இந்த வட்டாரத்தையே கட்டிப்போட்டிருக்கும் ஒரு ஐட்டம் குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை பக்கோடா. சும்மாவா, கர்நாடக இசை மேதை கிட்டப்பாவையே சொக்க வைத்த ருசியல்லவா அது! மன்னார்குடி கடை வீதியில் கொஞ்சமும் பழைமை மாறாமல் இன்றும் இருக்கிறது குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை. தவிர, சுற்று வட்டார கோயில் திருவிழாக்களில் எந்த இடத்தில் பலகாரங்கள் மலைபோல குவித்து வைக்கப்பட்டிருக்கின்றனவோ அந்தக் கடைகளெல்லாமும் குஞ்சான் கடைதான்.

கோயில்களுக்கு முன் சொந்தமாக இடம் வாங்கி, அந்த இடத்தில் திருவிழாக் கடை போடுமளவுக்குக் கடை பிரபலம். ஆனாலும், மன்னார்குடியில் குஞ்சான் செட்டியார் தொடங்கிய அதே சிறிய பெட்டிக் கடையில் தொடர்கிறது கடை.

“குஞ்சான் கடையில் பக்கோடா போட்டால் தெருவுல போறவனெல்லாம் சுவத்துல மூக்கைத் தேய்பான்’ என்றொரு சொலவடை. வெங்காயத்தை நல்லெண்ணெய்யில் வதக்கும்போது அப்படியே விழுந்து கடிக்க வேண்டும்போல் முதலில் எழுமே ஒரு மணம், அது குஞ்சான் கடை பக்கோடாவில் எப்போதும் குடி கொண்டிருக்கிறது.

முதல் கடிக்கு மொறுமொறுப்பு; அடுத்த கடிக்குப் பதம்; மூன்றாம் கடிக்கு கரையும்.

அப்படி ஒரு பதம் இந்தப் பக்கோடாவில் இருக்கிறது. பக்கோடா மட்டுமல்ல; சுட்டது முதல் வாய்க்குள் போகும் வரை ஒரே ருசியில் இருக்கும் இந்தக் கடையின் மெதுவ டையும் பிரபலம்தான்.

தலைமுறைகளைக் கடந்த பக் கோடா, வடை பற்றி இந்தத் தலைமு றையில் கடையை நடத்திக்கொண்டிருக் கும் எஸ். லட்சுமிகாந்தன் கூறுகிறார்: “”எங்களுக்குப் பூர்வீகம் மகாதேவப் பட்டணம். குஞ்சான் செட்டியார் ஆரம் பித்த இந்தக் கடையை அடுத்தத் தலை முறையில் அவருடைய மகன் துரை சாமி செட்டியார் பிரபலமாக்கினார்.

அவருடைய காலத்தில்தான் வடைக் கென தனி ருசி வந்தது. இது ஐந்தாவது தலைமுறை. இன்றும் அந்த ருசி அப் படியே தொடர காரணம் அவர்கள் சொல்லிக் கொடுத்த கைப்பக்குவத் தையும் தரத்தையும் மாற்றாதது தான்.

இன்றும் ஆட்டுக்கல்லில்தான் மாவு அரைக்கிறோம். விறகு அடுப் பைத்தான் எரிக்கிறோம். சரியான வேக்காட்டுக்குத் தீ பக்குவம் முக்கி யம் தெரியுமா? அதேபோல், மாவு பதமும் முக்கி யம். மாவு பிசையும்போது சொட்டு சொட்டாக நீர் விட்டு பிசைந்தால்தான் மாவுக்கேற்ற பதம் கிடைக்கும். மற்றபடி, பொருளோடு தரம்தான் பலகாரத்தில் ருசிக் கும். நாங்கள் எந்தப் பொருளிலும் மலிவானதைச் சேர்ப்பதில்லை. சோடா உப்பு சேர்ப்பதில்லை.

பெரிய வெங்காயம் வந்தவுடனே எல்லோரும் அதுக்கு மாறிட்டாங்க. ஆனால், என்ன விலை விற்றாலும் எங்கக் கடையில் இன்னமும் சின்ன வெங்காயம்தான்.

சின்ன வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்த்தால் அதன் ருசியே தனி தான். எங்கக் கடை பக்கோடா, வடையின் தனி ருசிக்குக் காரணமே அதுதான்” என் றார் லட்சுமிகாந்தன்.

கர்நாடக இசை மேதை எஸ்.ஜி. கிட்டப்பா தஞ்சை மாவட்டத்தில் எங்கு நாடகம் போட்டாலும் அவருடைய ஆள்கள் குஞ்சான் கடைக்கு வந்து பக்கோடா கட்டிச் செல் வார்களாம். அந்தப் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. ஆம், தேச எல்லைகளைக் கடந்து மன்னார்குடிக்காரர்கள் இருக்கும் இடங்களுக்கெல்லாம் பொட்டலமாகப் பய ணிக்கிறது குஞ்சான் கடை பக்கோடா, தலைமுறைகளைத் தாண்டி.

ஸ்டாலின்

Posted in cook, Cooking, Kittappa, Pakoda, Pakora, Special, Specials, Taste | Leave a Comment »

Tamil Nadu to set up electronics export center, TIDEL-III Park

Posted by Snapjudge மேல் மே 9, 2007

மேலும் 3 ஐ.டி. பூங்காக்கள்: முதல்வர் அறிவிப்பு

சென்னை, மே 9: தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ரூ. 1,400 கோடியில் தமிழகத்தில்

  • சென்னை தரமணி,
  • ஸ்ரீபெரும்புதூர்,
  • அம்பத்தூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காங்கள் அமைக்கப்படுகின்றன.

இதுபற்றிய தகவல்களைப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்தபோது முதல்வர் கருணாநிதி அறிவித்தார். விவரம்:

மூன்றாவது டைடல் பூங்கா: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காகச் சென்னை தரமணியில் மூன்றாவது டைடல் பூங்கா ரூ. 800 கோடியில் அமைக்கப்படும்.

ஏற்கெனவே அறிவித்தபடி, தரமணியில் 2-வது டைடல் பூங்கா அமைக்கும் பணி நடந்துவருகிறது. தற்போது சர்வதேச கருத்தரங்கு மையம், தங்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்சார் சேவைகளுக்கான 3-வது டைடல் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

தரமணியில் 25 ஏக்கரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான ஏற்றுமதி மையமாக இது செயல்படும். 21 லட்சம் சதுர அடி பரப்பில், தனியாருடன் கூட்டு முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் 12 ஆயிரம் மென்பொருள் வல்லுநர்களுக்கு வேலை கிடைக்கும்.

சென்னை கோட்டூரில் தமிழ் இணைய பல்கலைக்கழகத்துக்கு 2 ஏக்கரில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

தரமணி டைசல் உயிரியல் பூங்கா, ரூ. 250 கோடியில் விரிவுபடுத்தப்படும். இதனால் கூடுதலாக 2 ஆயிரம் உயிரியல் தொழில்நுட்ப -மருந்துத் துறை விஞ்ஞானிகளுக்கு வேலை கிடைக்கும்.

  • காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர்,
  • பெரும்பாக்கத்தில் 213 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பவியல் நகர் அமையும்.
  • கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 33 ஏக்கரிலும்
  • சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் 100 ஏக்கரிலும்
  • திருச்சி மாவட்டம், நவல்பட்டு கிராமத்தில் 50 ஏக்கரிலும்
  • மதுரையில் வடபழஞ்சி, கிண்ணிமங்கலத்தில் 50 ஏக்கரிலும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் அமையும்.
  • நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 100 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். மேலும் 400 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகம் நிறுவப்படும்.

தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம்: தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடத்திட்ட மேம்பாடு, பயிற்றுநர் உருவாக்கம், கல்விசார் சாதனங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக மாணவர் பொதுத் திறன் பயிற்சியளிக்கும் பொருட்டும் தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம் நிறுவப்படும்.

ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 500 கோடி பூங்கா: சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் ரூ. 500 கோடியில் உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (பயோ ஐ.டி. பார்க்) அமைக்கப்படும்.

இந்திய மென்பொருள் தொழில் பூங்கா, சிங்கப்பூரில் உள்ள அசெண்டாஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இந்தப் பூங்காவை 100 ஏக்கரில் அமைக்கும்.

இத்திட்டத்துக்கான முதலீட்டில் 11 சதவீதம் பங்கேற்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்குத் தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக அமைகிறது என்ற சிறப்பை இந்த உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பெறும். இதனால் 8000 பேருக்கு வேலை கிடைக்கும்.

ரூ. 80 கோடியில் அம்பத்தூர் பூங்கா: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்குச் சொந்தமான காலியிடத்தில் 4 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ. 80 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.

காகித நிறுவனத்தால் அமைக்கப்படும் இந்த பூங்காவின் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்” என்றார் கருணாநிதி.

———————————————————————————–

புதிய ஜமீன்தார்கள்!

கல்கி – Kalki 10.06.2007 (தலையங்கம்)

நந்தி கிராமில் டாடா நிறுவனத்துக்கு விவசாய நிலங்களை ஒதுக்கித் தந்து, பலத்த எதிர்ப்புக்கு உள்ளாயிற்று மேற்கு வங்க அரசு. கலவரம், உயிர்ச் சேதம் என்று பிரச்னை வளர்ந்து, கடைசியில் திட்டம் ரத்தாயிற்று.

உ.பி.யில் அதே விதமான நில ஒதுக்கீட்டை ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக முலாயம்சிங் அரசு செய்திருந்தது. மாயாவதி ஆட்சிக்கு வந்ததும் அதை ரத்து செய்துவிட்டு, “தொழிலதிபர்கள் வேண்டுமானால் சந்தை விலைக்கு நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளட்டும்; அரசு கையகப்படுத்தி சலுகை விலையில் அவர்களிடம் விற்காது” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.

ஆனால், தமிழ்நாட்டில் விஷயம் நேர்மாறாக இருக்கிறது.

இராணிப்பேட்டையில் இரண்டு கொரிய நிறுவனங்களுக்கு ஆற்காடு வீராசாமி நூறு ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக வாக்களித்திருக்கிறார். இதற்காக அரசு மக்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தும்! காஞ்சிபுரம் அருகே ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ, ஒரு துபாய் நிறுவனம் ஒன்று, 350 ஏக்கர் நிலம் வாங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது!

ஐம்பதாயிரம் பேருக்கு இந்த மண்டலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்கிறார்கள். ஆனால், அதற்கு 350 ஏக்கர் நிலம் என்பது மிக மிக அதிகம். ஐ.டி. சார்ந்த தொழிலகங்கள் ஐம்பது ஏக்கர் நிலத்தில் மட்டுமே அமைக்கப்படும் என்றும் மீதி நிலம் வாழிடம், பள்ளி, ஷாப்பிங் மால் போன்றவற்றுக்கு என்றும் விவாரிக்கிறார்கள்!

பெரிய தொழிலதிபர்கள் சலுகை விலையில் அரசிடமிருந்து நிலம் பெறும் ஏற்பாட்டை இரு தரப்பினரும் துஷ்பிரயோகம் செய்வது வழக்கமாகிவிட்டது. அதிகார வர்க்கம் இலஞ்ச – ஊழலில் ஈடுபடுகிறது. தொழிலதிபர்களோ, தேவைக்கதிகமான நிலத்தை வாங்கிக்கொண்டு, பிற்காலத்தில் அதன் விலை உயரும்போது, லாபம் சம்பாதிக்கிறார்கள். நிலத்தின் விலை கட்டுக்கடங்காமல் உயரவும் இவர்கள் காரணமாகிறார்கள். இது ஏழைகளையும் சராசாரி மக்களையும்தான் வதைக்கிறது.

‘உணவு உற்பத்தி, விவசாயப் பெருக்கம் நோக்கி அரசின் திட்டப் பணிகள் திசை திரும்ப வேண்டும்’ என்று தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர், தமிழகத்தில் என்ன செய்கிறார்…? விவசாயம் சார்ந்த பகுதியில், அதற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு தொழில்நுட்ப நிறுவனம் கிளை பரப்ப வழி செய்து, பொருளாதார ஏற்றத்தாழ்வுக்குப் பலமான அஸ்திவாரம் அமைக்கிறார்.

ஒரு குடிசை அமைத்துக்கொள்ளக்கூட நிலமின்றி அவதிப்படும் இலட்சக்கணக்கானோர் வாழும் நாடு இது. இங்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலம் பொதுமக்களின் சொத்து. அதைக் கண்ணை மூடிக்கொண்டு உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழிலதிபர்களுக்கு வாரி வழங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! தனியார் நிலமாயினும் பெரிய தொழிலதிபர்கள் 300 ஏக்கர் 500 ஏக்கர் என்று தேவைக்கு அதிகமாக வாங்கி, வளைத்துப் போட அனுமதிப்பது பெரும் அநீதி!

பெரிய தொழிலதிபர்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஏராளமான வேறு பல சலுகைகளையும் பெறுகிறார்கள். மொத்தத்தில், விவசாய ஜமீன்தாரி முறையையும் பெரிய மிராசுதாரர்களையும் ஒழிக்கப் போராடி சட்டமும் இயற்றிய நமது ஆட்சியாளர்கள், இன்றைக்குப் புதிய சலுகைகள் மூலம் நவீன ஜமீன்தாரி தொழிலதிபர்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

Posted in 3, Ambathur, Ambattoor, Ambattur, Biotech, Chennai, Coimbatore, College, computers, Development, Education, Electronics, Employment, Export, Factory, Industry, InfoTech, IT, ITES, Jobs, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanjipuram, Karunanidhi, Kottoor, Kottur, Kovai, Madras, Madurai, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MNC, multinational, Nellai, Orgadam, Paper, Perumpakkam, Research, Salem, Science, scientist, SEZ, SIPCOT, Software, Special, Sriperumputhoor, Sriperumputhur, Students, Tamil Nadu, TamilVU, Tax, Tech, Technology, Tharamani, Thiruchi, Thiruchy, Thirunelveli, Three, Thruchirappalli, TIDEL, TIDEL-III, TN, Trichirappalli, Trichy, University, Virtual, Virtual University, VU | Leave a Comment »

Special Rajini post cover to help Gujarat Orphanage

Posted by Snapjudge மேல் ஜனவரி 5, 2007

ஆதரவற்றோர் இல்லத்துக்கு உதவ ரஜினி பெயரில் சிறப்பு தபால் உறை

பா. ஜெகதீசன்


சென்னை, ஜன. 4: ரஜினிகாந்த் பெயரைச் சொன்னால் திரை உலகில் மட்டும் அல்ல, அறப் பணிகளுக்கும் பணம் வந்து கொட்டும்.

இதை நிரூபிக்கும் சம்பவம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே உள்ள அம்பவாடி பகுதியில் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் ஆதரவற்றோருக்கான இல்லத்தை அம்பவாடி அறக்கட்டளை நடத்தி வருகிறது.

ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி இந்த இல்லத்துக்குத் தேவைப்படும் நிதியை அம்பவாடி அறக்கட்டளை திரட்டி வருகிறது. இவ்வாண்டு நிதியைத் திரட்ட புதுமையான முறையை அந்த அறக்கட்டளை கடைப்பிடித்துள்ளது. ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி, 200 சிறப்புத் தபால் உறைகளை அஞ்சல் துறையின் அனுமதியுடன் அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அதன் விலை தலா ரூ.250.

உறையின் பின் பக்கத்தில் அகில இந்திய அளவில் நம்பர்-1 நடிகராகவும், எல்லா நடிகரைக் காட்டிலும் அதிக சம்பளம் பெறுபவராகவும் ரஜினி திகழ்வதாக அச்சிடப்பட்டுள்ளது.

இந்த உறைகளில் 50-ஐ சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த நீல்கமல் மகேஸ்வரி என்கிற ஆயத்த ஆடைத் தொழில் அதிபருக்கு அம்பவாடி அறக்கட்டளை அனுப்பி உள்ளது. ஏராளமான பிரமுகர்களின் ஆட்டோகிராபுகளைச் சேகரித்து தொகுத்து வைத்துள்ளார் நீல்கமல்.

Posted in Ahmedhabad, Donation, Gujarat, Mail, Orphanage, post cover, Post stamps, Postage, Premium, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Special, Stamp | 1 Comment »