Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Sorry’ Category

‘Uyir’ & ‘Mirugam’ director Sami vs Tamil Actress Padmapriya

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2007

டைரக்டருக்கு கீழ் பணியாதவர்
“பத்மப்ரியா நல்ல நடிகை-ஆனால் நல்ல குணம் கிடையாது”
டைரக்டர் சாமி சொல்கிறார்


“பத்மப்ரியா நல்ல நடிகை. ஆனால் நல்ல குணம் கிடையாது. டைரக்டருக்கு கீழ் பணியாதவர், அவர்” என்று டைரக்டர் சாமி கூறினார்.

கணவன்-மனைவி கதை

`உயிர்’ படத்தை டைரக்டு செய்தவர், சாமி. மைத்துனரை, அண்ணி காதலிப்பது போலவும், அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவது போலவும் கதை அம்சம் உள்ள படம், `உயிர்.’ அந்த படத்தில், காமவெறி பிடித்த அண்ணியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார், சங்கீதா.

அந்த படத்தை அடுத்து டைரக்டர் சாமி, `மிருகம்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் புதுமுகம் ஒருவர் கதாநாயகனாக நடிக்கிறார். கொடூர குணமும், ரவுடித்தனமும் கொண்ட அவர், கொடூர நோயினால் பாதிக்கப்படுவது போலவும், அவருடைய வக்கிரங்களையும், அக்கிரமங்களையும் தாங்கிக்கொண்டு கடைசிவரை கணவருக்கு பணிவிடை செய்யும் பரிதாபத்துக்குரிய மனைவியாக பத்மப்ரியா நடிக்கிறார்.

தகராறு

இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றது. அப்போது பத்மப்ரியா படப்பிடிப்புக்கு தினமும் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. கதைக்கு ஏற்ப, டைரக்டர் சாமி சொல்லிக்கொடுத்தபடி பத்மப்ரியா நடிக்க மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பொறுமை இழந்த டைரக்டர் சாமி, பத்மப்ரியாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த பிரச்சினை, பெரும் விவகாரமானது. பத்மப்ரியா நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளில் புகார் செய்தார். மூன்று சங்கங்களும் சேர்ந்து டைரக்டர் சாமியிடம் விசாரணை நடத்தினார்கள்.

தடை

அப்போது டைரக்டர் சாமி, பத்மப்ரியாவிடம் மன்னிப்பு கேட்டார்.

சாமி, புதிய படங்களை டைரக்டு செய்வதற்கு, ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.

`மிருகம்’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அந்த படத்தின் பாடல் காட்சிகளையும், `டிரைலரை’யும் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெய், டைரக்டர் சாமி ஆகிய இருவரும் நிருபர்களுக்கு திரையிட்டு காண்பித்தார்கள்.

அதன்பிறகு டைரக்டர் சாமி `தினத்தந்தி’ நிருபருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“மிருகம் படம், டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. படம் திரைக்கு வந்தபின், என் மீது விதிக்கப்பட்டு இருந்த தடை தானாகவே விலகிவிடும் என்று நம்புகிறேன். அடுத்து இதே படத்தை நான் தெலுங்கில் டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன். `மிருகம்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவரே, தெலுங்கு படத்திலும் கதாநாயகனாக நடிப்பார்.

கதாநாயகி மாற்றம்

கதாநாயகி மட்டும் மாறுவார். பத்மப்ரியாவுக்கு பதில் வேறு ஒரு கதாநாயகி நடிப்பார். பத்மப்ரியா நல்ல நடிகை என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அவரிடம் நல்ல குணம் கிடையாது. டைரக்டரின் `ஸ்கிரிப்ட்’ (திரைக்கதை)க்கு கீழ் பணியாத ஒரு நடிகை.

`மிருகம்’ படத்தின் முதல் பிரதியை, தமிழ் சினிமாவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் பார்த்துவிட்டு, “இந்த வருடத்தின் சிறந்த படம்” என்று பாராட்டினார். படத்தின் கடைசி மூன்று ரீல்கள் மிரட்டலாக இருக்கும்.”

இவ்வாறு டைரக்டர் சாமி கூறினார்.

Posted in abuse, Action, Actress, AIDS, Allegations, Andhra, AP, Apology, Ban, Callsheet, Cinema, Condemn, Director, Faces, Films, Hero, Heroine, Hit, HIV, Hype, Interview, Investigation, journalism, Kerala, Kisu Kisu, Kisukisu, Malayalam, Media, Mirugam, Mirukam, Mollywood, Movies, News, Padma priya, Padmapriya, Pathma priya, Pathmapriya, people, Product, Promotions, Protest, Reel, release, Reports, Rumor, Rumors, Rumour, Saami, Saamy, Sami, Samy, Sangeetha, Sangitha, Screenplay, Sex, Slap, Sorry, Strike, Telugu, Theater, Theaters, Theatres, Tollywood, Torture, Uyir, video | Leave a Comment »

‘I am Sorry’ PM to Pakistan Human Rights Activist Asma Jehangir

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2006

பாக். மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீரிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர்

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் மனித உரிமை ஆர்வலர் அஸ்மா ஜஹாங்கீர் தில்லியில் தங்கியுள்ள ஹோட்டல் அறையை போலீஸôர் சோதனை செய்தது தொடர்பாக அவரிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர் மன்மோகன் சிங். மன்மோகன் சிங்குக்கு தனிப்பட்ட முறையில் நன்கு அறிமுகமானவர் அஸ்மா ஜஹாங்கீர். அவருக்கு ஏற்பட்ட அசெüகரியத்துக்கு மன்னிப்பு கோருவதாக மன்மோகன் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

பிரதமரின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் பாரு இத் தகவலைத் தெரிவித்தார். தில்லியில் நடைபெறும் மனித உரிமைக் கருத்தரங்கில் கலந்துகொள்ள பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழு உறுப்பினராக அஸ்மா ஜஹாங்கீர் இந்தியா வந்துள்ளார். இதனிடையே, அஸ்மா ஜஹாங்கீர் தங்கியுள்ள ஹோட்டல் அறையை சோதனை செய்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு தில்லி போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

Posted in Activist, Apology, Asma Jehangir, Dinamani, Human Rights, India, Manmohan Singh, New Delhi, Pakistan, PM, Prime Minister, Sorry, Tamil | Leave a Comment »