Archive for the ‘Sonia Gandhi’ Category
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 1, 2007
வாரிசு மீன்கள்
லாலு குடும்பம்: ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில், மனைவி ராப்ரி தேவி, மைத்துனர்கள் சாது, சுபாஷ் என ஒரு பெரும் பட்டாளமே இருக்கிறது.
ராஜஸ்தான் முதல்வர் (பா.ஜ) வசுந்தரா ராஜேவின் மகன் எம்.பி.யாக உள்ளார்.
பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் வாரிசும் அரசியல் களத்தில் உள்ளார் என்கிறார் தேசியவாத காங்கிரஸின் பொதுச்செயலாளர் டி.பி.திரிபாதி.
Posted in Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), DMK, dynasty, Examples, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Jasvanth, Jaswanth, King, Kingdom, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, LalooY, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Leaders, Monarchy, Politics, Rahul, Rahul Gandhi, Rajeev, Rajeev Gandhi, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Rulers, Samples, Sonia, Sonia Gandhi, Sonia Gandi, VasundaraRaje, Vasundhara, Vasundhara Raje, VasundharaRaje, Vasundhra, Vasundhra Raje, Vasunthara, VasuntharaRaje, Yadav | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2007
துணை ஜனாதிபதி தேர்தல் மனு தாக்கல் தொடங்கியது: காங்.கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரி
துணை ஜனாதிபதி பைரோன்சிங் செகா வத்பதவிக் காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி முடிகிறது.
புதிய துணை ஜனாதிபதி தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற இரு சபை எம்.பி.க்கள் ஓட்டுப் போட்டு துணை ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள்.
துணை ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது. காங்கிரஸ் கூட்டணி, பாரதீய ஜனதா கூட்டணி, 3-வது அணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். 3-வது அணி சார்பில் சமாஜ் வாதி கட்சியைச் சேர்ந்த ரஷீத் மசூத் வேட்பாளராக அறி விக்கப் பட்டார்.
துணை ஜனாதிபதி தேர் தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. முதல் நாளான இன்று 3-வது அணி வேட்பாளர் ரஷீத் மசூத் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், தெலுங்கு தேசம் கட்சித் தலை வர் சந்திரபாபு நாயுடு, அ.தி.மு.க. எம்.பி. மலைச்சாமி, மதி.மு.க. எம்.பி.க்கள் பொள்ளாச்சி கிருஷ்ணன், சிப்பிபாறை ரவிச்சந்திரன் உடன் இருந்தனர்.
காங்கிரஸ் கூட்டணியில் துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் பொறுப்பை இடது சாரி கட்சிகளிடம் விட்டுள் ளனர். எந்த கட்சியையும்சேராத ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய இடது சாரி கட்சித் தலைவர்கள் தீர்மானித் துள்ளனர். இதற்காக அவர்கள் நேற்று டெல்லியில் கூடி விவா தித்தனர்.
வரலாற்று பேராசிரியர் இர்பான் ஹபீப், பேராசிரியர் முஷ்ரூல் ஹசன், மேற்கு வங்க சபாநாயகர் ஹாசீம் அப்துல் ஹாலீம், தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்பட சுமார் 10 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் எந்த இறுதி முடிவும் நேற்று எட்டப்படவில்லை.
வேட்பாளர் பெயரை விரைவில் அறிவிக்க இடது சாரி கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இன்று காலை நடந்த ஆலோசனை யில் இடது சாரி கட்சி தலைவர் கள் ஹமீத் அன்சாரி பெயரை ஏகமனமதாக தீர்மானித்தனர். இதுபற்றி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் அவர்கள் முறைப்படி தெரி வித்தனர்.
எனவே ஹமீத் அன்சாரி துணை ஜனாதிபதி ஆவார் என்று உறுதியாகியுள்ளது.ஹமீத் அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் ஹமீத் அன்சாரி பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதீய ஜனதா கூட்டணி யும், துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த உறுதியாக உள்ளது. வேட்பாளரை தேர்வு செய் யும் அதிகாரத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் யிடம் விட்டுள்ளனர். 22-ந் தேதி வேட்பாளர் பெயர் அறிவிக்கப் படும் என்று சுஷ்மாசுவராஜ் தெரிவித்தார்.
வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான 23-ந் தேதி பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் மனுத் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் நஜ்மாஹெப்துல்லா, துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.
———————————————————————————————————
Hamid Ansari: a diplomat, an academic and a writer
New Delhi, July. 20 (PTI): Mohammad Hamid Ansari, who was today named the UPA-Left candidate for the post of Vice President, brings with him a wealth of experience as a distinguished diplomat, academic and a writer in a career spanning over four decades.
Considered an intellectual with Left-of-the-Centre inclination, Ansari has carved out a distinct place for himself as a diplomat, academician and a writer specialising in international issues.
Born in Calcutta in 1937, Ansari studied at Shimla’s St Edwards High School and St Xavier’s College in the West Bengal capital and Aligarh Muslim University.
Joining the Indian Foreign Service in 1961, Ansari has served as Indian ambassador to the United Arab Emirates, Afghanistan, Iran and Saudi Arabia.
He was also the Indian High Commissioner to Australia and New Delhi’s Permanent Representative to the United Nations in New York.
Awarded Padma Shree in 1984, Ansari was the Vice-Chancellor of Aligarh Muslim University before he was appointed chairman of the National Commission for Minorities (NCM) in March this year.
———————————————————————————————————
தெற்கு தேய்கிறதே, தெரிகிறதா?
முதன்முறையாக ஒரு பெண்மணி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது பின்னணி நமக்குப் பல சந்தேகங்களை எழுப்புகிறது என்றாலும், மக்களாட்சியில் இறுதி முடிவெடுப்பது வாக்குப்பெட்டிதான் என்பதால் வெற்றியை வரவேற்கிறோம்.
பிரதிபா பாட்டீலின் வெற்றியைப் பெரியாரின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்றெல்லாம் வர்ணிக்கும்போதுதான் நகைப்புக்குரியதாகத் தோன்றுகிறது. ஆவியுடனும் சாமியுடனும் பேசுவதுதான் பெரியாரின் கொள்கைகள் என்பது மிகவும் காலதாமதமாக இப்போதுதான் வெளிச்சத்துக்கு வருகிறது. மகிழ்ச்சி.
குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த நிலையில் அனைவரது பார்வையும் அடுத்து நடக்க இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் நிலைகொண்டிருப்பதில் வியப்பில்லை. மூன்று அணிகளுமே அவரவர் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், அடுத்த குடியரசுத் துணைத் தலைவர் யார் என்பதும், வேட்பாளர்களில் யாருக்கு அதிகத் தகுதி என்பதும் நியாயமான கேள்விகள்.
ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரியும் சரி, பிரதான எதிரணியின் வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லாவும் சரி, அவரவருக்கென தனித்துவம்மிக்க மரியாதைக்குரிய நபர்கள். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ரஷீத் மசூத் அனுபவம்மிக்க அரசியல்வாதி. மூன்று அணியினருமே களத்தில் இருக்கிறார்கள் என்பதால், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் முகம்மது ஹமீத் அன்சாரியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
ஹமீத் அன்சாரியும் நஜ்மா ஹெப்துல்லாவும் இரண்டு மரியாதைக்குரிய சுதந்திரப் போராட்டகாலத் தலைவர்களின் வாரிசுகள். ஹமீத் அன்சாரி, 1927-ல் சென்னையில் நடந்த வரலாற்றுப் புகழ்பெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்த முக்தர் அஹ்மத் அன்சாரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். நஜ்மா ஹெப்துல்லாவோ அபுல்கலாம் ஆசாதின் குடும்பத்தவர்.
நஜ்மா ஹெப்துல்லாவுக்கு பல ஆண்டுகள் மாநிலங்களவையை நடத்திய அனுபவம் உண்டு என்பது உண்மை. மாநிலங்களவையில் துணைத் தலைவராகச் செயல்பட்டவர் என்கிற பெருமையும், எல்லா கட்சியினரிடமும் நட்புப் பாராட்டுபவர் என்கிற நற்பெயரும் அவருக்கு உண்டு. அதேநேரத்தில், பதவிக்காகக் கட்சி மாறியவர் என்கிற அவப்பெயரை நஜ்மா சுமந்து கொண்டிருப்பதும், பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் ஒரு சந்தர்ப்பவாதி என்ற சாயம் பூசிக் கொண்டவர் என்பதும் அவரது மிகப் பெரிய பலவீனங்கள்.
ஹமீத் அன்சாரியைப் பொருத்தவரை அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பைப் பெற்றவர். தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவராக இருப்பவர் என்பதாலேயே இவர் மதவாதி என்றோ, ஒரு சார்பாகச் செயல்படுவார் என்றோ சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால், இவருடைய கருத்துகளில் பல, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குச் சாதகமாக இல்லை, இருக்காது என்பதுதான் நிஜம். மேற்காசியப் பிரச்னையிலும் சரி, ஈரான், இராக் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலும் சரி, அன்சாரியின் கருத்துகள் அரசின் கண்ணோட்டத்திற்கு எதிராக இருப்பவை என்பது ஊரறிந்த உண்மை.
வெளிவிவகாரத் துறை அதிகாரியாக இருந்த அனுபவம், ஹமீத் அன்சாரியின் பலம். அதிலும், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த அனுபவமும் உள்ளவர். அன்சாரியா, நஜ்மாவா என்கிற கேள்வி எழுந்தால் அன்சாரிதான் என்று கண்ணை மூடிக்கொண்டு அடித்துச் சொல்லிவிடலாம். அன்சாரி போன்ற ஓர் அனுபவசாலி குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியக் குடியரசுக்குப் பெருமை சேரும்.
ஒரு சின்ன வருத்தம். இந்தியா குடியரசானது முதல் கடந்த தேர்தல் வரை, குடியரசுத் தலைவர் பதவியோ அல்லது குடியரசுத் துணைத் தலைவர் பதவியோ தென்னகத்துக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த சம்பிரதாயம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தவுடன் அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு ஒரு வேண்டுகோளே விடுத்ததாக ஞாபகம்.
வேட்பாளர் தேர்தலில் நம்மவர்கள் பங்குதான் அதிகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தென்னகம் வஞ்சிக்கப்பட்டதா, இல்லை இவர்கள் கோட்டை விட்டார்களா? தெற்கு தேய்கிறதே, தெரிகிறதா?
——————————————————————————————-
August 10, 2007
இந்தியாவின் புதிய குடியரசுத் துணை தலைவர் ஹமீத் அன்சாரி
இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவராக, ஹமீத் அன்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தூதராக பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்ற அவர், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும் இருந்தவர்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நாடாளுமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஹமீத் அன்சாரி, 455 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லா, 222 வாக்குகளைப் பெற்றார். அதிமுக, தெலுங்குதேசம், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மூன்றாவது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்ட ரஷீத் மசூர் 75 வாக்குகளைப் பெற்றார்.
மொத்தமுள்ள 783 வாக்குகளில் 762 வாக்குகள் பதிவாயின. 10 வாக்குகள் செல்லாதவை.
இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் தேர்தல் மிகவும் பரபரப்பு நிறைந்ததாக இருந்தது. அதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது வெற்றியைப் பெற்றிருக்கிறோம். அதற்காக, கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
வெற்றி பெற்ற ஹமீத் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வெற்றி குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு மிகப்பெரிய பொறுப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை சிறப்பாகச் செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்றார்.
Posted in academic, ADMK, Aligar, Aligarh, Anbalagan, Anbalakan, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Ansari, APJ, Aristocrat, Author, BJP, BSP, candidate, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), diplomat, Divide, DMK, Education, Elections, Hameed, Hamid, Iran, Kalam, Left, Marxist, Masood, minority, Mulayam, Muslim, Najma, National Commission for Minorities, NCM, NDA, Party, Politics, Poll, Polls, President, Rajya Saba, Rajya Sabha, Rajyasaba, Rajyasabha, Rasheed, Rashid, Religion, Reservation, Right, Samajvadi, Samajvadi Party, Samajwadi, Samajwadi Party, Sex, Sonia, Sonia Gandhi, Sonia Gandi, South, University, UNPA, UPA, vice-president, VicePresident, VP, Writer | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2007
சய்யீத் பின்வாங்கினால்…
காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் தலைமையிலான அரசு கவிழும் ஆபத்து அகன்றுவிட்டதாகக் கூறலாம். ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சி அமைச்சர்கள் இனி அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கு கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் சட்டமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸýம் முப்தி முகம்மது சய்யீத் தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சியும் கூட்டணி அரசு அமைத்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு உள்ள நிலையில் முப்தி முகம்மது சய்யீத் மத்திய அரசைக் குறி வைத்து ஏற்க முடியாத சில கோரிக்கைகளை எழுப்பி நெருக்குதலை ஏற்படுத்த முற்பட்டார். காஷ்மீரில் உள்ள துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். அங்கு ராணுவத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரங்களை அகற்ற வேண்டும் என்பன அவற்றில் முக்கியமானவை.
காஷ்மீரில் எல்லைக்கு அப்பாலிருந்து எப்போதும் ஆக்கிரமிப்பு ஆபத்து உள்ளது. தவிர கடந்த பல ஆண்டுகளாகப் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். பயங்கரவாதிகள் எந்த நேரத்தில், எங்கு தாக்குவர் என்பது தெரியாத நிலையில் மக்களின் பாதுகாப்புக்காக ஆங்காங்கு துருப்புகளை நிறுத்தி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. முன்னர் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகம்மது சய்யீதுக்கு இதெல்லாம் தெரியும். தவிர துருப்புகளை எவ்விதம் ஈடுபடுத்துவது என்பது ராணுவத் தலைமை முடிவு செய்கிற விஷயம் என்பதையும் சய்யீத் அறிவார். ஆனாலும் சய்யீத் இதை அரசியலாக்க முற்பட்டார். இந்த விஷயத்தில் அவரது பிரசாரம் கிட்டத்தட்ட “படைகள் வெளியேற வேண்டும்’ என்று கூறுகிற தொணியில் இருந்தது. தங்களது கொள்கைத் திட்டத்தை சய்யீத் அபகரித்துக் கொண்டுவிட்டார் என்று ஹுரியத் மாநாட்டுக் கட்சி கூறுகிற அளவுக்கு சய்யீதின் பிரசாரம் அமைந்திருந்தது. அவரது இப் பிரசாரத்தின் பின்னணியில்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் கடந்த ஒருமாதமாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கினர்.
சய்யீதின் பிரசாரத்துக்கு அரசியல் நோக்கம் உண்டு. 2002-ல் நடந்த தேர்தலைத் தொடர்ந்து சய்யீத் முதல் மூன்று ஆண்டுகள் காஷ்மீர் முதல்வராக இருந்தார். அடுத்த மூன்று ஆண்டுகள் காங்கிரûஸ சேர்ந்தவர் முதல்வராக இருக்க வேண்டும் என்பது உடன்பாடு. இதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குலாம் நபி ஆசாத் முதல்வரானார். அப்போதே சய்யீத் மீதி மூன்று ஆண்டுகளும் தாமே முதல்வராக நீடிக்க விரும்பி பல வாதங்களை முன்வைத்தார். ஆனால் அவை ஏற்கப்படவில்லை. ஆசாத்தின் ஆட்சியில் காங்கிரஸýக்கு நல்ல பெயர் ஏற்பட்டுவிட்டால் தமது கட்சி பின்னுக்குத் தள்ளப்படலாம் என்பது சய்யீதின் அச்சமாகும். தங்கள் கட்சிதான் காஷ்மீர் மக்களின் நலன்களைப் பற்றி அதிக அக்கறை காட்டுகிறது என்று பிரசாரப்படுத்தும் நோக்கில்தான் அவர் படைக் குறைப்பு விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.
கடந்த பல வாரங்களாக சய்யீத் எவ்வளவோ நிர்பந்தித்தும் படைக் குறைப்பு விவகாரத்தில் மத்திய அரசு உறுதியாக நின்றது. கடைசியில் ஒரு கமிட்டியை நிர்ணயித்து அக் கமிட்டியிடம் இந்த விவகாரத்தை விடுவது என்று சமரச உடன்பாடு உருவாக்கப்பட்டது. இக் கமிட்டியில் தங்களது கட்சிப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்று சய்யீத் வற்புறுத்தினார். இது முற்றிலும் நிபுணர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்று மத்திய அரசு எடுத்துக் கூறியபோது சய்யீத் மேலும் இறங்கி வந்து வேறு வழியின்றி இதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
சய்யீத் இப்போதைக்கு திருப்தி அடைந்துவிட்டதுபோல காட்டிக் கொள்ளலாம். எப்போதுமே ஆளும் கூட்டணியில் அடங்கிய கட்சிகள் தங்களது தனித்தன்மையைக் காட்டிக்கொள்ள தேர்தல் சமயத்தில் விலகிக் கொள்வது உண்டு. கூட்டணி அரசிலிருந்து விலகிக் கொள்வதை சய்யீத் இப்போதைக்கு ஒத்தி வைத்துள்ளதாகவே கூறலாம்.
Posted in Army, Azad, Border, Congress, defence, Defense, Extremism, Ghulam, Ghulam Nabi Azad, Govt, Gulam, Gulam Hussain Mir, Gulam Nabi Azad, J&K, Jammu, Kashmir, Manmohan Singh, Military, Mufti, PDP, People's Democratic Party, Sayeed, Sayid, Security, Sonia Gandhi, Srinagar, Terrorism, troops | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007
குவாத்ரோச்சி சிக்குவாரா?
போபர்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான குவாத்ரோச்சியை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென மத்திய அரசை பாஜகவும் இடதுசாரிக் கட்சிகளும் வற்புறுத்தியுள்ளன.
மோசடி, ஏமாற்று வேலை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தென்அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவில் சர்வதேச போலீஸôரால் கைது செய்யப்பட்டுள்ள குவாத்ரோச்சி இப்போது அந்நாட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது இரண்டு அம்சங்களைப் பொறுத்தது. முதலாவதாக, இந்திய அரசு இதில் தீவிர முனைப்புக் காட்டியாக வேண்டும். இரண்டாவதாக, இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய அளவுக்கு குவாத்ரோச்சி குற்றங்களைப் புரிந்துள்ளதாக ஆர்ஜென்டீனா திருப்தி அடைந்தாக வேண்டும்.
இந்தியாவை உலுக்கிய ஊழல் விவகாரங்களில் போபர்ஸ் விவகாரம் மிகப் பிரபலமானது. 1980களில் இந்திய அரசு சுவீடனைச் சேர்ந்த போபர்ஸ் என்னும் நிறுவனத்திடமிருந்து பெரிய பீரங்கிகளை வாங்கியது. இந்தப் பீரங்கிகளை வாங்கும்படி செய்ய இந்திய அரசியல்வாதிகளுக்கு ரூ. 64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சுவீடனின் வானொலி 1987ல் செய்தி ஒலிபரப்பியபோது இந்த விவகாரம் வெடித்தது. இதில் சிலர் இடைத்தரகர்களாகச் செயல்பட்டதாகவும் அப்போது கூறப்பட்டது.
போபர்ஸ் விவகாரத்தின் விளைவாக 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றது. இந்த ஊழலில், யார் யார் பணம் பெற்றார்கள் என்பது தொடர்பாகப் பலரின் பெயர்கள் அடிபட்டன. வழக்குகளும் போடப்பட்டன. ராஜீவ் காந்தியின் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என வர்ணிக்கப்பட்ட இத்தாலியரான குவாத்ரோச்சி அந்த இடைத்தரகர்களில் ஒருவர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் கடந்த பல ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டனர். சிலர் காலமாகிவிட்டனர். எஞ்சி நிற்கிற ஒருவர் குவாத்ரோச்சியே.
குவாத்ரோச்சி இந்தியாவில் இருந்தபோதே அவரைக் கைது செய்திருக்க முடியும். ஆனால் 1993 ஜூலையில் அவர் இந்தியாவிலிருந்து மலேசியாவுக்குத் தப்பினார். வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடித்து ஒப்படைக்க நாடுகள் இடையே பரஸ்பர உடன்பாடுகள் செய்து கொள்வது உண்டு. மலேசியாவுடன் இந்தியாவுக்கு அப்போது அவ்வித உடன்பாடு இல்லை. இப்போது ஆர்ஜென்டீனாவுடனும் இந்தியாவுக்கு அப்படிப்பட்ட உடன்பாடு கிடையாது.
குவாத்ரோச்சியை பிடித்து ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கை மலேசிய உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இந்திய அரசு தகுந்த ஆதாரங்களை அளிக்கவில்லை என்று அது கூறியது. இத் தீர்ப்பின் மீது இந்திய அரசு மேல் முறையீடு செய்ய இருந்த சமயத்தில் குவாத்ரோச்சி அங்கிருந்தும் தப்பினார்.
இது ஒருபுறமிருக்க, பிரிட்டிஷ் வங்கிகளில் குவாத்ரோச்சி போட்டிருந்த ரூ. 21 கோடி பணத்தை இந்திய அரசு கோரியதன் பேரில் பிரிட்டிஷ் அரசு முடக்கி வைத்தது. ஆனால் வேடிக்கையான வகையில் இப் பணம் போபர்ஸ் ஊழலில் தொடர்புடைய பணம் என்று நிரூபிக்க ஆதாரம் இல்லையென இந்திய அரசு கடந்த ஆண்டில் தெரிவித்ததன் பேரில் குவாத்ரோச்சியின் பணம் விடுவிக்கப்பட்டது.
குவாத்ரோச்சி ஆர்ஜென்டீனாவில் இம்மாதம் 6-ம் தேதி பிடிபட்டார். இருந்தாலும் இந்திய ஊடகங்கள் இதுபற்றி பெரிதாகச் செய்தி வெளியிட்டதற்குப் பிறகே இந்திய அரசு அதுபற்றி வாய் திறந்துள்ளது. மார்ச் 5-ம் தேதிக்குள் ஆர்ஜென்டீனா அரசிடம் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றால் குவாத்ரோச்சி விடுதலை செய்யப்படுவார் என்பதுதான் இப்போதுள்ள நிலைமையாகும்.
“சட்டம் தனது கடமையைச் செய்யும்’ என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் குவாத்ரோச்சி விஷயத்தில் இதுவரை நடந்துள்ளவை அவ்விதமாக இல்லை என்றே கூறியாக வேண்டும்.
Posted in Analysis, Argentina, BJP, Bofors, Congress, Corruption, Defense, Dinamani, Editorial, extradition, kickbacks, Military, Op-Ed, Opinion, Quattrocchi, Sonia Gandhi | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 13, 2007
பாகிஸ்தான், ஈரான் பயணத்தில் பிரணப் சாதித்தது என்ன?
நீரஜா செüத்ரி
தமிழில்: சாரி.
வெளியுறவுக் கொள்கையில் மீண்டும் நடுநிலைப் பாதைக்குத் திரும்பியிருக்கிறார் பிரணப் முகர்ஜி.
சமீபத்தில் தெஹ்ரானுக்கும் இஸ்லாமாபாதுக்கும் சென்று திரும்பிய அவர், “”உள்நாட்டு அரசியல் தேவைகளுக்கு ஏற்ப” வெளிநாட்டுக் கொள்கையை வழிநடத்தும் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார்.
இன்றைய உலகில் ஒரெயொரு வல்லரசுதான் (அமெரிக்கா) ஆதிக்கம் பெற்றுத் திகழ்கிறது. அத்தோடு ஒத்திசைவாகச் செல்வதால் எத்தனை ஆதாயங்கள் கிடைக்கும் என்ற உண்மை காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும்; எனினும் உள்நாட்டில் 15 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் காங்கிரûஸயே எப்போதும் ஆதரிக்கும் வாக்கு வங்கிகளாகத் திகழ்கிறார்கள் என்பதை அதனால் ஒதுக்கித்தள்ள முடியாது.
உள்நாட்டு முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியைவிட்டு விலக ஆரம்பித்துள்ளனர்; “”இந்தியா இப்போது அமெரிக்காவுக்குச் சாதகமாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டது” என்ற எண்ணம் முஸ்லிம் நாடுகளிடையே எழ ஆரம்பித்திருக்கிறது. இந்த இரண்டையும் சரி செய்யத்தான் அவருடைய இஸ்லாமாபாத், தெஹ்ரான் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
பிரணப் முகர்ஜியின் பாகிஸ்தான் பயணத்தால் அசாதாரணமான முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டுவிடாது என்று அனைவருக்குமே தெரியும் என்றாலும், அது ஏதோ அதிமுக்கியமான பயணம் என்ற பிரமை ஊட்டப்பட்டது. பிரதமருடன் செல்வதைப் போல தில்லியிலிருந்தே 30 சிறப்பு நிருபர்கள் இஸ்லாமாபாத் சென்றனர். ஒரே நாளில் போய்த் திரும்ப வேண்டிய பயணம் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
பாகிஸ்தானுடனான பேச்சில் ஏதேனும் முக்கிய திருப்பம் நேரிட்டுவிட்டால் ஹிந்து-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான பதற்றம் கணிசமாகக் குறைந்துவிடும்; மக்கள் மத அடிப்படையில் அணி திரள்வது தடுக்கப்பட்டுவிடும். ஆனால் சியாச்சின் உள்பட எந்த விஷயத்திலும் அப்படி அதிரடியாக சுமுகத் தீர்வு காண நிலைமை இடம் தரவில்லை. அப்படி ஏதும் முயற்சி செய்யக்கூடாது என்பதை நமது ராணுவ தலைமை தளபதி ஜே.ஜே. சிங் ஏற்கெனவே எச்சரித்திருக்கிறார். வெளியுறவு அமைச்சரான பிரணப் முகர்ஜியும் படிப்படியாகத் தீர்வு காண்பதையே விரும்புகிறார். எனவே இப்பயணம் முஸ்லிம்களைச் சமாதானப்படுத்தவே என்பது தெளிவு.
அடுத்தது, ஈரானுக்கு பிரணப் மேற்கொண்ட பயணம். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பாரம்பரிய உறவையும், பாகிஸ்தான் வழியாக பெட்ரோலிய எரிவாயுவை இந்தியா வாங்கும் சாத்தியத்தையும் பற்றி பிரணப், தெஹ்ரானில் சுட்டிக்காட்டினார். அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்குப் பயன்படுத்த ஈரானுக்கு எல்லா உரிமையும் உண்டு என்று கூட அடித்துப் பேசினார். அதே வேளையில், அணு ஆயுதப் பரவல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை ஈரானும் மதித்து நடக்க வேண்டும் என்று அடிக்குரலில் கூறி முடித்தார்.
இவை அத்தனையையும் அமெரிக்கா உற்று கவனித்துக் கொண்டிருந்தது. அதை இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் மல்போஃர்டு தில்லியில் ஒளிவுமறைவில்லாமல் தெரிவித்தார். “”பயங்கரவாதத்துக்கு துணை போவதாகக் கருதப்படும் ஈரானுடன் பெட்ரோலிய எரிவாயுவுக்கான உடன்பாட்டை இந்தியா செய்துகொள்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை” என்று மென்று விழுங்காமல் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
சரி அதனால் என்ன, அடுத்த மாதம் வாஷிங்டனுக்குச் சென்று அமெரிக்கத் தலைவர்களையும் வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்து, “”இரு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த” ஏதாவது பேசி சமாதானப்படுத்தினால் ஆயிற்று என்றுகூட பிரணப் நினைத்திருக்கலாம்.
வெளியுறவுக் கொள்கையில் இடைப்பாதையை பிரணப் எடுத்ததற்குக் காரணம் சோனியா காந்தியாகவும் இருக்கலாம். பிரணப் கூறி சோனியா கேட்கிறாரா, சோனியா சொல்வதை பிரணப் கேட்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் தெஹ்ரானுக்கும் இஸ்லாமாபாதுக்கும் செல்வதற்கு முன், தனியாக சோனியாவுடன் அவர் நீண்ட நேரம் பேசிவிட்டுத்தான் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுடன் சுமுக உறவுக்காக, எதையாவது விட்டுக்கொடுத்து உடன்பாடு செய்து கொண்டால், அதையே ஒரு பெரிய பிரச்சினையாக்கி, அரசியல் ஆதாயம் அடைய பாரதீய ஜனதா தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டிய கட்டாயம் காங்கிரஸýக்கு இருக்கிறது. அதேசமயம் உத்தராஞ்சல், உத்தரப்பிரதேசம், கோவா, குஜராத் போன்ற முக்கிய மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற வேண்டியிருக்கிறது. அங்கு கணிசமான எண்ணிக்கையில் வாழும் முஸ்லிம்களைக் கவர வேண்டிய கட்டாயமும் காங்கிரஸýக்கு இருக்கிறது.
முக்கிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவிருப்பதாலும், பிறகு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நெருங்குவதாலும் ஏழைகளுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் நெருக்கமான கட்சியாக காங்கிரûஸ சித்திரிக்க வேண்டிய கடமை சோனியாவுக்கு இருக்கிறது.
அதனாலேயே, சிறப்புப் பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்துவதிலும், சில்லரை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்களை அனுமதிப்பதிலும் எச்சரிக்கை தேவை என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். பிரணப் முகர்ஜியின் இடைப்பாதை என்பதும் இதை அடியொற்றித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில்: சாரி.
Posted in Congress, Congress (I), Defense, Digniatry, energy, External Affairs, Foreign Relations, Gas, Indira Congress, Iran, Islam, Islamabad, JJ Singh, Kashmir, Liquefied Natural Gas, LNG, Mani Shankar Aiyar, Military, Muslim, natural gas, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Niraja Chowdhry, NPT, Nuclear, oil, Pakistan, Petrol, Petroleum, petroleum and natural gas, pipeline, Prana, Pranab Mukherjee, Siachen, Sonia Gandhi, Tehran, United States, US, US ambassador, USA, Visit | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: நடுநிலைப் பாதையே சோனியாவின் கருத்து
புது தில்லி, பிப். 8: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய நடுநிலைப் பாதையை பின்பற்ற வேண்டும் என்றுதான், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் சோனியா காந்தி வலியுறுத்தி இருப்பதாகக் கருத வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் பார்தி -வால் மார்ட் கூட்டு தொழில் முயற்சியின் பின்னணியில், மன்மோகன் சிங்குக்கு எச்சரிக்கையுடன் செயல்படுமாறு ஆலோசனை கூறி சோனியா காந்தி கடிதம் எழுதியதாகக் கூறப்படுவது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி இவ்வாறு பதில் அளித்தார்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தடை செய்ய வேண்டும் என்றோ அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளே இல்லாமல் அதை அனுமதிக்க வேண்டும் என்றோ இரு வேறு அதீதங்களை அந்தக் கடிதம் வலியுறுத்துவதாகக் கருதக் கூடாது.
சாதாரண மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் கொண்டுள்ளது. ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்புகளுடன் கூடிய நடுநிலைப் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலை என்றார் அபிஷேக் சிங்வி.
சோனியா காந்திக்கும் மன்மோகன் சிங்குக்கும் இடையில் கலந்துரையாடல் இல்லை என்ற பாஜக குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.
சில்லறை வியாபாரத்துக்கு பாதிப்பு
சில்லறை வியாபாரத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கும் முன் அது குறித்து முழுமையாக அலசி ஆராய வேண்டும், நாட்டையும் சாதாரண மனிதனையும் பாதுகாப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இதைப் பரிசீலனை செய்த பிரதமர் மன்மோகன் சிங் இவ் விஷயத்தை வர்த்தக அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு வெளிநாட்டினர் முதலீடு தேவை என்பதால் பல்வேறு பெரிய தொழில்களில் முதலீடு செய்ய அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் சிறிய தொழில்களில் கூட அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.
சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கும் சில்லறை வியாபாரிகளுக்குப் போட்டியாக சில இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கறி முதல் பருப்பு, உளுந்து வரை பல்வேறு பொருள்களை விற்பனை செய்யும் மையங்களைத் தொடங்கியுள்ளன. இத்தகைய மையங்களில் விற்கப்படும் பொருள்களின் விலை சந்தை விலையை விட சற்றே குறைவாக உள்ளது. காரணம் பொருள்களை உற்பத்தியாகும் இடத்துக்கே சென்று கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும் விற்பனை மையங்கள் அதி நவீன வசதியுடன் உள்ளன.
இது தவிர, ஒரு குறிப்பிட்ட தொகைக்கு பொருள்கள் வாங்கினால் அவற்றை வீட்டுக்கே அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தொடர்ந்து வாங்கினால் சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. இத்தகைய கவர்ச்சிகரமான திட்டங்களால் மக்கள் சாதாரண வியாபாரிகளைப் புறக்கணிக்கும் போக்கு காணப்படுகிறது.
நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான சில்லறை வியாபாரிகள் உள்ளனர். தமிழகத்தில் சென்னையில் மட்டும் லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். பெரிய நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் சிறு வியாபாரிகள் திணறுகின்றனர். இந்த நிறுவனங்கள் இப்போது பெரிய நகரங்களில் மட்டுமே தங்கள் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளன. காலப்போக்கில் சிறிய நகரங்களுக்கும் அவை விரிவுபடுத்தப்படலாம்.
இதனால் வட்டிக்கு வாங்கி சில ஆயிரங்கள் அல்லது சில லட்சங்கள் முதலீடு செய்து தொடங்கப்பட்ட சிறு கடைகள் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து விடும் என்று வணிகர் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் காலப்போக்கில் சிறு கடைகள் அழிந்தபிறகு, பெரிய நிறுவனங்கள்தான் சந்தை விலையை நிர்ணயம் செய்யும். அப்போது மக்கள் நலன் புறந்தள்ளப்பட்டு லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும். இதனால் விலைவாசி அதிகரிப்பதுடன், இந்த விற்பனையகங்களிலேயே பொருள்கள் வாங்க மக்கள் நிர்பந்திக்கப்படுவார்கள். இதன் காரணமாக, பல லட்சம் பேர் வேலையை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும். வணிகம், விவசாயம், நெசவு போன்ற தொழில்கள் பெருமளவு பாதிக்கப்படக்கூடும் என்றும் வணிகர் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே ஆன் லைன் என்ற ஊக வர்த்தகம் மூலம் பல்வேறு பொருள்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன.
எனவே, பல லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாக இது உள்ளது. இதில் அரசு துரிதமாகத் தலையிட்டு, பல்வேறு அமைப்புகளைக் கொண்ட குழு அமைத்து, இதன் பாதிப்பைக் கண்டறிந்து, சிறு வியாபாரிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஏழைகள் நிறைந்த நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும். அது பல்வேறு தொடர் பிரச்சினைகளுக்கு வழி வகுத்துவிடும்.சில்லறை வியாபாரத்துக்கு பாதிப்பு
Posted in Analysis, Assets, Background, Bharti, Big Box, Biz, Business, Commerce, Cong(I), Congress, Congress (I), Congress Party, Dinamani, Economics, Economy, FDI, Finance, Foreign investment, Indira Congress, Indra Congress, Interest, Investment, Loans, Manmohan Singh, Market, Monopoly, Op-Ed, Opinion, PM, Protection, retail, Retailer, Safeguards, Small Business, Sonia Gandhi, Sonia Gandi, Sudeshi, Swades, Wal-Mart, Walmart | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2007
புகைப்படத்தில் விஷமம்: சோனியாவுக்கு களங்கம் ஏற்படுத்த அற்பமான சதி?
ஆமதாபாத், பிப். 4: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு புகைப்படத்தில் தில்லுமுல்லு செய்து, அதை சூரத் நகரின் முன்னணி நாளிதழுக்கு யாரோ அனுப்பிவைத்துள்ளனர்.
இது குறித்துப் போலீஸôரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. இது பெரிய அரசியல் விவகாரமாக உருவெடுத்து வருகிறது.
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள மாலைப் பத்திரிகை ஒன்று அச்சாகும் அச்சகத்தில் இருந்து அப் படம் அனுப்பப்பட்டிருக்கிறது. உண்மையில் அப்படத்தில் சோனியா காந்தியே இல்லை. அவரைப் போல இருப்பவரைக் கொண்டு, அந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்த படத்தை அனுப்பிய அச்சகத்துடன் பாபுபாய் ரைகியா என்ற சூரத் காங்கிரஸ் தலைவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே போலீஸôர் அவரையும் விசாரித்தனர். இதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, என் பெயரைக் கெடுக்க நினைக்கும் அரசியல் போட்டியாளர்களின் விஷமச் செயலே இது’ என்று அவர் போலீஸôரிடம் தெரிவித்துள்ளார்.
இது “”சைஃபர் கிரைம்” எனப்படும் கணினி-இணையதளம் சார்ந்த குற்றமாகும்; தவறு இழைத்தவர்களுக்குத் தண்டனை வாங்கித் தராமல் ஓயமாட்டோம் என்று குஜராத் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் அர்ஜுன் மோட்வாடியா எச்சரித்திருக்கிறார்.
Posted in Ahmedabad, Allegation, Congress, Congress (I), Cyber Crime, Indira Congress, Investigations, Photoshop, Sonia Gandhi, Sonia Gandi, Surat | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007
அப்துல்கலாம் பற்றி விமர்சித்த பால்தாக்கரே மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் வற்புறுத்தல்
மும்பை, ஜன. 31- மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரம் நடந்து வருகி றது. சிவசேனா தலைவர் பால் தாக்கரே தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சலை தூக்கில் போடாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் ஜனாதிபதியை விமர்சித்தார்.
`அப்சல் கருணை மனுவை ஜனாதிபதி இதுவரை தள்ளுபடி செய்யவில்லை. அவருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அவருடைய நீண்ட தலைமுடி கண்ணை மறைக்கிறது. நில வையும், நட்சத்திரத்தையும் மட்டும் பார்க்க முடிகிறது’ என்று அவர் கூறினார்.
சோனியா காந்தி பற்றி கூறும் போது, வெளிநாட்டு காரரால் இந்த நாடு ஆளப்படுகிறது. மன்மோகன் சிங் என்ற பொம்மை பிரத மராக இருக்கிறார்என்று கூறினார்.
பொதுவாக ஜனாதிபதியை அரசியல் தலைவர்கள் யாரும் விமர்சிப்பது இல்லை. ஆனால் பால்தாக்கரே விமர்சித்து இருப்பது அரசியல் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்களும் வந்துள்ளன.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபன் கூறியதாவது:-
அரசியல் விவகாரத்தில் ஜனாதிபதியை இழுப்பது தவறானது. மும்பை மாநக ராட்சி தேர்தல் உள்ளூர் பிரச்சினைக்கு தொடர் பானது. எனவே இங்குள்ள பிரச்சினையை பேச வேண்டும். அப்சÛலை குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. அவருடைய கருணை மனு முறைப்படியான நடைமுறை ஆய்வில் உள்ளது. இதை விமர்சிக்க பால்தாக்கரேக்கு உரிமை இல்லை’ என்றார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர் கூறும்போது, `ஜனாதிபதி பற்றி விமர்சித்தது நாட்டையே அவமானபடுத்துவதற்கு சம மாகும்’ ஜனாதிபதி என்பவர் தனி மனிதர் அல்ல. அது ஒரு அமைப்பு. பால்தாக்கரே கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.
பாரதீய ஜனதா தலைவர் வினோத் திவாதே கூறும்போது, `பால் தாக்கரே ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையில் பேசவில்லை, நிலவு மற்றும் நட்சத்திரங்களை ஒப்பிட்டு பேசவில்லை பாராளுமன்ற தாக்குதல் விவகாரம் பெரிய சம்பவம் என்பதால் தனது ஆதங்கத்தை தனக்கே உரித்தான பாணியில் சொன்னார்’ என்றார்.
Posted in Abdul Kalam, Afsal, Bal Thackeray, BMC, Bombay, Capital punishment, Elections, Hairstyle, Life sentence, Manmohan Singh, Mumbai, parliament, President, Shiv Sena, Sonia Gandhi, Terrorism, terrorist | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2006
மகளிர்க்கு “இடம்’ கொடுப்போம்
பி. சக்திவேல்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரமும் இடம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்குவது, அவர்களை சமூக, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.
நாடு சுதந்திரம் பெற்று இதுவரை 14 பொதுத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 1952-ம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலிலேயே பெண்கள் வாக்குரிமை பெற்றுத் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.
ஆனால் பிரிட்டன், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்ற மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமையானது அந் நாடுகள் சுதந்திரம் பெற்றுப் பல ஆண்டுகள் ஆன பிறகு, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தான் கொடுக்கப்பட்டது.
உதாரணமாக, பிரிட்டனில் 1918 மற்றும் 1928-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் மூலம் தான் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. அமெரிக்காவில் 1922-ம் ஆண்டும், சுவிட்சர்லாந்தில் 1971-ம் ஆண்டும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஒரு சில வளைகுடா நாடுகளில் 21-ம் நூற்றாண்டில்தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் நம் நாட்டில் ஜனவரி 26, 1950-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அரசியலமைப்புச் சட்டத்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு, அரசியல் சமத்துவம் நிலைநாட்டப்பட்டது. இது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய விஷயமாகும்.
நமது நாடாளுமன்றத்துக்கு இதுவரை நடைபெற்றுள்ள 14 பொதுத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்து வருகிறது. அதிகபட்சமாக 2004-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 355 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டு 45 பேர் (8.3 சதவீதம்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஜெனீவாவிலிருந்து செயல்படும் நாடாளுமன்றங்களின் ஒருங்கிணைந்த அமைப்பு “”உலக அரசியல் வரைபடத்தில் பெண்கள் – 2005” என்ற தலைப்பில், 186 நாடுகளில் நாடாளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் பற்றி ஆராய்ந்து ஓர் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அதிக அளவு பிரதிநிதித்துவம் அளித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 104-வது இடத்தில்தான் உள்ளது. பாகிஸ்தான் 21.3 சதவீதம் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளித்ததன் மூலமாக 42-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ருவாண்டா 48.8 சதவீதமும், சுவீடன் 47.3 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. பெல்ஜியம் போன்ற நாடுகளில் ஏற்கெனவே பெண்களுக்கு 33.3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மகளிர் பிரதிநிதித்துவம் இவ்வாறு இருக்கையில், தமிழக சட்டப்பேரவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பார்த்தோமேயானால் நிலைமை திருப்தி அளிக்கக்கூடியதாக இல்லை. அதிகபட்சமாக 1991-ம் ஆண்டு 31 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 22 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழகத்தில் திருத்தி அமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களை (2,32,35,167) விட பெண் வாக்காளர்கள் (2,39,72,873) அதிகம் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். அதேபோல் பல தேர்தல்களில், குறிப்பாக கிராமப்புறங்களில், பெண்களின் வாக்கு சதவீதம் அதிக அளவில் பதிவானது நிதர்சனமான உண்மையாகும்.
பெண்கள் அதிக அளவில் சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படாமைக்கு முக்கியக் காரணம் உள்ளது. கட்சியில் பெரும் அளவில் பெண் உறுப்பினர்கள் இருந்தபோதிலும் கட்சியின் பல்வேறு பதவிகளுக்குப் பெண்கள் நியமனம் செய்யப்படாததும், பெரும் அளவில் பெண்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அளிக்கப்படாததுமே காரணம் ஆகும். ஒரு சில கட்சிகள் ஒரு பெண் வேட்பாளரைக்கூட தேர்தலில் போட்டியிட வைக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
சென்ற ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படாமைக்கு முக்கியக் காரணம்: 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படக் கூடாது. 10-லிருந்து 15 சதவீதம் மட்டும் அளிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு இந்த 33 சதவீதத்தில் உள் ஒதுக்கீடு வழங்கலாமா அல்லது வழங்கக் கூடாதா. நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதா அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்திய பிறகு இட ஒதுக்கீடு வழங்குவதா?
மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்று கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட பிறகு மேற்கூறிய பிரச்சினைகளை விவாதித்து ஒருமனதான கருத்து எட்டப்படலாம்.
மகளிர் இட ஒதுக்கீடு விஷயமானது 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தீர்வு காணப்படாத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இன்றைய சமுதாயத்தில் பெரும்பான்மையான மக்களின் விருப்பம் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும். இதை வலியுறுத்திதான் பல மகளிர் அமைப்புகள் போராடி வருகின்றன. பெண்களை சமூக, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக மேம்படுத்தவும், அவர்களின் அரசியல் பங்கேற்பு அதிகரிக்கப்படவும் வேண்டுமென்றால் மகளிர் இட ஒதுக்கீடு மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் மக்களாட்சித் தத்துவம் முழுமை பெறுவதோடு மட்டுமல்லாமல் ஜனநாயகம் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகள் உருவாகும்.
மகளிர் பெரும் அளவில் நாடாளுமன்றத்துக்கும் சட்டப்பேரவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் இட ஒதுக்கீடு ஒன்றே தீர்வாகும். சர்வதேச அளவில் மகளிருக்குப் பிரதிநிதித்துவம் அளித்த பட்டியலில் 104-வது இடத்தைத்தான் இந்தியா பெற முடிந்தது. இந்த நிலை மாற வேண்டும்.
(கட்டுரையாளர்: துணை பேராசிரியர், அரசியல் அறிவியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்).
Posted in Cong (I), Congress, Female, Manmohan Singh, MP, parliament, Representation, Reservation, Sonia Gandhi, Women | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006
சரத் பவார் பிரதமர் ஆக முடியுமா?
நீரஜா செüத்ரி – தமிழில்: லியோ ரொட்ரிகோ
கடந்த வாரம் பிரிட்டனின் பிபிசி வானொலிக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார். அதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை வெகுவாகப் புகழ்ந்திருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு சோனியா ஆற்றியுள்ள சேவையையும், அவரது துணிச்சலையும் இந்திய நாட்டின் பிரச்சினைகளை அவர் புரிந்துகொண்டிருப்பதையும் பவார் பெரிதும் பாராட்டியிருந்தார். அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறியதால் தான் “ஒரு விலையைக் கொடுக்க’ நேர்ந்தது என்று அவர் ஒப்புக்கொண்டுமிருந்தார்.
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பவாரின் கட்சியும் அங்கம் வகிக்கிறது; மத்திய வேளாண் துறை அமைச்சராகவே இடம்பெற்றுள்ளார் பவார். எனவே, சோனியாவை அவர் புகழ்ந்து பேசியிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்த வேண்டிய காரணம் ஏதும் இல்லை. ஆனால், அதற்கு மாறாக, அவரது பேட்டிக்குப் பலப்பல அர்த்தங்கள் கூறப்படுகின்றன.
நேரு ~ காந்தி குடும்பத்தினருடன் பவாருக்கு அவ்வளவு சுமுக உறவு இருந்ததில்லை. வெளிநாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சோனியா எப்படி நமது நாட்டின் பிரதமர் ஆகலாம் என்று கேள்வி எழுப்பியதன் காரணமாக காங்கிரûஸ விட்டு வெளியேறியவர் பவார். இருந்தபோதிலும் மகாராஷ்டிரத்திலும் தேசிய அளவிலும் மக்கள் அளித்த தீர்ப்பைப் புரிந்துகொண்டு பக்குவத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார். இந் நிலையில், சோனியாவைப் புகழ்ந்து பவார் பேசியிருப்பது பல ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
ஒன்று: காங்கிரஸ் கட்சியில் அவர் மீண்டும் இணைவதற்கான அடித்தளத்தை அமைக்கவே அவர் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது முற்றிலும் ஏற்புடையதாக இல்லை. மகாராஷ்டிரத்தில் சிவ சேனைக் கட்சி பிளவுபட்டு, பால் தாக்கரேயின் செல்வாக்கு சரிந்துகொண்டு இருக்கும் நிலையில், மாநிலத்தின் தனிப் பெரும் தலைவராக உயர்ந்து நிற்பவர் சரத் பவார் மட்டுமே ஆவார். தேசியவாத காங்கிரஸ் என்றாலே சரத் பவார்தான். மிகப் பெரும் செல்வாக்குடனும் தனித்துச் செயல்படும் சுதந்திரத்துடனும் இருக்கும் அவர், மீண்டும் காங்கிரஸில் இணைய வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.
இரண்டு: மும்பை மாநகராட்சித் தேர்தல் வரவிருப்பதால், அதை மனத்தில் கொண்டு சோனியாவை அவர் புகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கேரளத்தின் பட்ஜெட்டுக்குச் சமமான வரவு ~ செலவுகளைக் கொண்டதாக மும்பை மாநகராட்சி இருக்கலாம்; ஆனால், மாநகராட்சி அரசியலைக் கடந்த பெரிய தலைவராகிவிட்டார் பவார்; எனவே, சிவசேனை ~ பாஜக கூட்டணியிடமிருந்து மும்பை மாநகராட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸிடமிருந்து ஒருசில சீட்டுகளை அதிகம் பெறுவதற்காக பவார் அவ்வாறு பேசியிருப்பார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம்.
மூன்று: அண்மையில் மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது மகள் சுப்ரியா சுலேவின் அரசியல் எதிர்காலத்தை மனத்தில் வைத்து சோனியாவை பவார் புகழ்ந்து பேசியிருக்கலாம் என்னும் கருத்து. தேசியவாத காங்கிரஸ் போன்ற பிராந்தியக் கட்சிக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்வது சுப்ரியாவுக்குப் பெரும் சவாலான பிரச்சினை. அதோடு, இத்தனை ஆண்டுகளாக சரத் பவாரால் வளர்த்து உருவாக்கப்பட்டுள்ள அவரது சகோதரர் மகன் அஜீத் பவாருக்கும் கட்சியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. அதிகாரத்துக்காக அவருடன் போட்டியிட வேண்டிய நிலைகூட சுப்ரியாவுக்கு ஏற்பட்டுவிடலாம். மேலும், பல ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்ததால் உலக நடப்புகளை நன்கு அறிந்துவைத்திருப்பவர் சுப்ரியா சுலே; ஆங்கிலத்தில் நல்ல திறமை உடையவர்; ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றில் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் உடையவர்; தொண்டர்கள் எளிதில் அணுகக்கூடியவராக இருப்பவர்; இந்த அனுபவங்களால், இப்பொழுதே அவரிடம் நல்ல அரசியல் முதிர்ச்சி தெரிகிறது. எனவே, தேசிய அரசியலுக்கே அவர் மிகவும் ஏற்றவராக இருப்பார் என சரத் பவார் கருதியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஆனால், மகாராஷ்டிர அரசியலில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவருக்குத்தான் தில்லியிலும் செல்வாக்கு இருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதோடு, மகாராஷ்டிரத்தில் ஒருவர் ~ தில்லியில் ஒருவர் என கட்சியின் அதிகாரத்தை மகளுக்கும் சகோதரர் மகனுக்கும் இடையே பங்கு போடுவதும் நடைமுறையில் சாத்தியமில்லாதது என்பதை அறியாதவரல்லர் சரத் பவார்.
நான்கு: பவார் ஒன்றைச் சொல்கிறார் என்றால், அதற்கு நேர் எதிரானதையே அவர் மனத்தில் நினைத்திருக்கிறார் என்று பொருள் என்று இன்னொரு விளக்கத்தை அளிக்கின்றனர் அவரது அதிருப்தியாளர்கள். சோனியா காந்தியை அவர் புகழ்ந்து பேசுகிறார் என்றால், அவருக்கு எதிரான தாக்குதலை அவர் தீவிரப்படுத்தத் திட்டமிடுகிறார் என்று அர்த்தம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு எத்தனையோ விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஆனால் அதிகம் பேசாதவரான பவார், தனது உள்ளத்தில் இருப்பதை அவ்வளவு சுலபமாக வெளிப்படுத்திவிடக் கூடியவரல்லர். பலவிதத் திட்டங்கள் அவர் சிந்தனையில் இருக்கக்கூடும். 2009ம் ஆண்டிலோ அல்லது தேர்தல் நடக்கும் பொழுதோ என்னென்ன நிகழக்கூடும் என்பதை அவர் இப்பொழுதே கூறுவார் என எதிர்பார்க்க முடியாது. எத்தகைய சாத்தியக்கூறானாலும் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே அது அமையும்; என்றபோதிலும் சிறிது வாய்ப்புக் கிடைத்தால்கூட அதைப் பயன்படுத்தி நாட்டின் பிரதமர் பதவியை அடைய முடியுமா என்ற முயற்சியில் இறங்காமல் விடமாட்டார் பவார்.
அவ்வாறு அவர் பிரதமர் ஆக வாய்ப்பு இருக்கிறதா? பிராந்தியக் கட்சிகளின் ஒட்டுமொத்த பலம் கணிசமாக அதிகரித்து, பாஜகவும் பலவீனமான நிலையில் இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலை தேர்தலுக்குப் பின்பு ஏற்பட்டால், நிச்சயமாக பிரதமர் ஆவதற்கான ஒரு வாய்ப்பு பவாருக்குக் கிடைக்கக்கூடும்; ஒருவேளை, காங்கிரஸýக்கும் பாஜகவுக்குக்கும் தலா 100 இடங்களுக்குக் குறைவாகக் கிடைத்து, பிராந்தியக் கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் சேர்ந்து ஓர் அரசை அமைக்கக்கூடிய சூழ்நிலை உருவானாலோ; அல்லது, மிகவும் பலவீனமான நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டு, பாஜகவை அதிகார பீடத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாக பிராந்தியக் கட்சிகள் அரசு அமைக்க ஆதரவு கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலோகூட சரத் பவாருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
இன்றைய நிலையில், பிராந்தியக் கட்சித் தலைவர்களிலேயே பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தலைவராக இருப்பவர் அனேகமாக பவாராகத்தான் இருக்கக்கூடும். முலாயம் சிங் யாதவ், ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு ஆகியோரிடையே ஒரு புதிய கூட்டணி ஏற்பட்டு இருப்பது தொடர்பான செய்திகள் அண்மை நாள்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு “மூன்றாவது அணி’க்கு வாய்ப்பு இல்லை என்று பவார் கூறினாலும்கூட, அந்தப் புதிய கூட்டணியுடன் பவாரின் பெயரும் சேர்த்தே பேசப்படுகிறது. நிர்வாகத் திறன் மிக்கவரான பவாருக்கு, பல்வேறு கட்சித் தலைவர்களுடனும் நல்லுறவு உண்டு. எனவே, மேற்கூறிய சூழ்நிலைகள் உருவானால், பாஜகவுக்கும்கூட அவர் ஏற்புடையவராகவே இருப்பார். எனவே, சோனியா காந்தியுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள அவர் விரும்புவார் என்று கூறுவது வியப்பளிப்பதாக இருக்கிறது.
நரசிம்மராவ் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்திலிருந்தே அவர் ஒரு தேசியத் தலைவராக உருவெடுத்துவிட்டார். மகாராஷ்டிரத்தை அங்குலம் அங்குலமாக அறிந்த, மாநிலத்தின் மக்கள் தலைவராக இருக்கும் அதே நேரத்தில், அவரது அரசியல் பாணியானது மேல்நிலைக்குச் சென்றுவிட்டது.
பிரதமர் பதவி தனக்குக் கிட்டாமல் போய்விட்டால்கூட பரவாயில்லை; தனது மகளின் அரசியல் பாதை வலுவானதாக அமைக்கப்பட்டுவிட வேண்டும் என்று சரத் பவார் விரும்பக்கூடும். கட்சியில் அடுத்த தலைமுறைத் தலைவர்களை வளர்த்து உருவாக்குவதுதான் தனது முக்கிய கடமை என்று பிபிசி வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியை பவார் பாராட்டியிருப்பதை எந்தக் கோணத்தில் பார்த்தாலும், அதை நல்லுறவு நடவடிக்கையாகவும் பவாரின் பண்பட்ட அரசியலின் அடையாளமாகவுமே கருத முடியும்.
Posted in Agriculture, Bal Thackeray, BJP, Cabinet, Chandrababu Naidu, Civic Polls, Cong (I), Congress, Dinamani, Foreigner, Indira Congress, Jayalalitha, Lalloo, Lalu prasad Yadav, local body elections, maharashtra, Minister, Mulayam Singh Yadav, Mumbai, Narasimha Rao, NCP, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Nehru, New Delhi, Op-Ed, PM, Politics, Prime Minister, Sharad Pavaar, Sharad Pawar, Shiv Sena, Sonia Gandhi, Supriya Sule, Tamil | 1 Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 5, 2006
சோனியா பிறந்தநாள்; பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட்டம்
புதுடெல்லி, டிச. 5-
மறைந்த முன்னாள் பிரத மர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ந்தேதி குழந்தை கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண் சிசுக்கொலை, பெண் குழந்தைகள் கல்வியில் புறக்கணிப்பு போன்ற சமூக புறக்கணிப்புகள் பெண் குழந் தைகள் மீது நடந்துவருவதால் பெண்குழந்தைகள் மீது மக் கள் கவனம் அதிகம்விழ வேண் டும் என்பதற்காக பெண்குழந் தைகளுக்கான தனிநாள் ஒன்றை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மனைவி சோனியாகாந்தி காங்கிரஸ் என்ற மிகப்பெரிய கட்சியை வழிநடத்தி சென்று பல்வேறு வெற்றிகளைபெற்றுள்ளார். இந்திய பெண்களுக்கு அவர் ஒரு ரோல் மாடலாக விளங் குகிறார்.
எனவே அவரின் பிறந்த தினமான டிசம்பர் 9-ந்தேதியை `பெண் குழந்தைகள் தினமாக’ கொண்டாட மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசு முடிவு செய்துள்ளது.
வருகிற 9ந்தேதி “பெண்குழந் தைகள்” தினத்தின் முதல் கொண்டாட்டம் என்பதால் வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் பெண் குழந்தைகளின் நலனுக்காக பாடுபடுபவர்களுக்கு ராணி ருத்ரமாதேவி பெயரில் விருது வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த பத்தாண்டு களை பெண்குழந்தைகளின் பத்தாண்டாக அறிவித்துள்ளது.
மேற்கண்ட தகவல்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிதுறை அமைச்சர் ரேணுகாசவுத்ரி தெரிவித்துள்ளார்.
Posted in Childrens Day, Girl Kids Day, Rajeev Gandhi, Rajiv Gandhi, Sonia, Sonia Gandhi, Sonia Gandi | 4 Comments »
Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புயல் வீசுமா?
புதுதில்லி, நவ. 20: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் புதன்கிழமை (நவ. 22) தொடங்க இருக்கிறது.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தனது ஆட்சிக் காலத்தில் பாதியை முடித்துள்ள நிலையில், உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்தக் கூட்டத்தொடர் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரிக் கட்சிகளும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப உள்ளன.
இதையடுத்து மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் கூட்டத் தொடரில் காரசார விவாதங்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அப்சல் விவகாரம்: பாஜக எழுப்பும்
நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட முகமது அப்சலுக்கு உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுந்துள்ளது. ஆனால் பாஜக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் முதல் நாளன்று இந்த விவகாரத்தை பாஜக எழுப்பலாம் என்று தெரிகிறது.
- உள்நாட்டு பாதுகாப்பு,
- பயங்கரவாதம் ஆகியவற்றில் அரசின் மெத்தனம்,
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் இருக்கும் மத்திய அரசின் போக்கு ஆகியவை குறித்து பிரச்சினை எழுப்புவோம் என்று பாஜக துணைத் தலைவர் வி.கே.மல்ஹோத்ரா தெரிவித்தார்.
அணுவிசை உடன்பாடு பிரச்சினையை முன்வைக்க இடதுசாரிகள் திட்டம்: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள் அன்றே நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி நடத்த இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளன.
இடதுசாரிக் கட்சிகள், இந்தியா-அமெரிக்கா அணுவிசை உடன்பாடு, சர்ச்சைக்குரிய சிறப்பு பொருளாதார மண்டலம், ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் ஆகிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையிலான அணுவிசை உடன்பாடு தொடர்பாக சில நிபந்தனைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த உடன்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். இந்த விவகாரத்தை அவையில் எழுப்புவோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
Posted in Afsal, BJP, Communists, Congress (I), Government, India, Indira Congress, Issues, Lok Sabha, Manmohan Singh, parliament, Punjab, Sonia Gandhi, UDA, UP | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2006
ரேபரேலி தொகுதியில் ரெயில் பெட்டி தொழிற்சாலை: லல்லுவின் திட்டத்துக்கு நிதி அமைச்சகம் தடை
இந்தியாவில் 2 இடங்களில் ரெயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலைகள் உள்ளன. ஒன்று சென்னை ஐ.சி.எப். மற்றொன்று பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் உள்ளது. இந்த இரண்டு இடங்களில் இருந்தும் ஆண்டுக்கு 2,300 பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது.
3-வதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தொகுதியான ரேபரேலியில் ரெயில்பெட்டி தொழிற்சாலை அமைக்க லல்லுபிரசாத் திட்டமிட்டார்.
ரேபரேலியில் ரெயில் பெட்டி தொழிற்சாலையை அமைப்பதன் மூலம் ஆண்டுக்கு மேலும் 1,200 பெட்டிகளை தயாரிக்க முடியும் என்று ரெயில் அமைச்சகம் கருதியது. முதலில் இந்த திட்டத்துக்கு ரூ. 1,000 கோடி ஆகும் என்று கணக்கு காட்டப்பட்டது. தற்போது இதற்கான திட்டச் செலவு ரூ.1685 ஆகும்என்று தெரியவந்துள்ளது. இதற்கான அனுமதியை ரெயில்வே அமைச்சகம், நிதி அமைச்சகத்திடம் கேட்டது.
ரேபரேலியில் ரெயில் பெட்டி தொழிற்சாலை திட்டத்தை நிதி அமைச்சகம் நிராகரித்து உள்ளது. திட்டச்செலவு அதிகமாக இருப்பதாலும், தற்போது ரெயில் பெட்டி தொழிற்சாலை தேவை இல்லை என்று கருதுவதாலும் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
இதேபோல லல்லுவின் தொகுதியான சாப்த்ராவில் டீசல் ரெயில் என்ஜீன் உற்பத்தி தொடர்பான திட்டத்துக்கு நிதி அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
Posted in Ambathur, Business, Cabinet, Chapra, Coach, Economy, Factory, Finance, Five-Year Plan, Freight, ICF, India, Industry, Kapurthala, Laloo Prasad Yadav, Lalu, locomotives, Lok Sabha, Manufacturing, MP, North Block, parliament, passenger, Politics, Punjab, Rae Bareli, Railways, Sonia Gandhi, Trains | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006
காங்கிரஸில் காத்திருக்கும் இளந்தலைவர்கள்
நீரஜா சௌத்ரி
தமிழில்: லியோ ரொட்ரிகோ
காங்கிரஸ் கட்சியில் உள்ள இளம் தலைவர்கள் பதவிகளைப் பெறுவதற்கு முன், இன்னும் கொஞ்சம் அதிகமாக உழைக்க வேண்டும்; இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும்; இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டார் அக் கட்சித் தலைவர் சோனியா காந்தி.
ஆனால் 2004-ல் மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த இளைஞர் படையைச் சரியான முறையில் கட்சி பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதைப் பலரும் ஒப்புக்கொள்கின்றனர். காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகளை ஏற்க புதிய தலைமுறை தயாராகிவிட்டதாகக் கூறப்பட்டபோதிலும், எதிர்பார்த்தபடி கட்சி அதைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.
- ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட்,
- முரளி தேவ்ராவின் மகன் மிலிந்த் தேவ்ரா,
- ஜிதேந்திர பிரசாத்தின் மகன் ஜிதின் பிரசாத்,
- ஜிண்டாலின் மகன் நவீன் ஜிண்டால்,
- ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்,
- ஹரியாணா முதல்வர் பி.எஸ். ஹுடாவின் மகன் ரந்தீப் ஹுடா,
- ஜோதிர் ஆதித்ய சிந்தியா… என பலரும் மூத்த தலைவர்களின் வாரிசுகளாகவே இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தகுதியும் திறமையும் உடையவர்களாகவே கருதப்படுகின்றனர்.
மூத்த தலைவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் தலைமுறையின் கையில் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என்று வாதிடப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை விரிவாக்கத்தின்போது இளைய தலைமுறையினருக்கு இடம் அளிக்கப்படவில்லை என்று பத்திரிகைகள் விமர்சித்தபோது, ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றவர்களைக் கருத்தில் கொண்டே அவை குறிப்பிடப்பட்டன.
இப்போதைய மத்திய அமைச்சரவையின் சராசரி வயது 64 ஆக இருக்கக்கூடும். ஆனால் நாட்டு மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் 35 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்கும்போது, அதை அரசு பிரதிபலிக்க வேண்டாமா என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அனுபவசாலிகளோடு இளம் தலைமுறையினரையும் கொண்டதாக அமைச்சரவை இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இளைஞர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறினால், “பிரச்சினைகளைக் கையாள்வதற்கான பக்குவம்’ அவர்களுக்கு இருக்காது என்று எதிர்ப்புக் குரல்கள் எழக்கூடும். கட்சியில் அனுபவம் மிக்க தலைவர்கள் பலர் இருக்கும்போது அவர்களது அனுபவத்தை ஏன் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது?
முதல் முறையாக எம்.பி. ஆகியிருப்பவர்களுக்கோ, 30 வயதுகளில் இருப்போருக்கோ அமைச்சர் பதவி கொடுக்காததைப் பெரும் தவறு என்று கூற முடியாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிக்கு வந்த பொழுதே, ராகுல் காந்திக்கு அமைச்சர் பதவி கொடுக்க முன்வந்தார் மன்மோகன் சிங். ஆனால், துதிபாடிகளைக் கொண்ட ஒரு கட்சியில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்காதது சரியான நடவடிக்கைதான். அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருந்தால், அது அரசு நிர்வாகத்தில் போட்டி அதிகார மையத்தை உருவாக்குவதில் போய் முடிந்திருக்கும்.
இளம் எம்.பி.க்கள் பகிரங்கமாக என்ன பேசினாலும், உள்ளூர அவர்களுக்கு வருத்தம்தான். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் குறித்து சில கேள்விகளை அவர்கள் எழுப்புகின்றனர். மிகுந்த தயக்கம் காட்டிய பிரணப் முகர்ஜியை பாதுகாப்புத் துறையிலிருந்து வெளியுறவுத் துறைக்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன? காங்கிரஸ் வசமிருந்த கேரளம் கைநழுவிப் போய்விட்டது; அதற்குப் “பரிசா’க ஏ.கே. அந்தோனிக்கு அமைச்சர் பதவியா என்று அவர்கள் கேட்கின்றனர். ராணுவத்துக்குப் பலநூறு கோடி மதிப்புக்குத் தளவாடங்கள் வாங்கவிருக்கும் நிலையில், கை சுத்தமானவர் என்பதால் பாதுகாப்புத் துறை அந்தோனியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினால், 40-க்கு மேற்பட்ட அமைச்சர்கள் குழுவுக்குத் தலைமை வகித்துவருபவரான பிரணப் முகர்ஜிக்கு இழுக்கு ஏற்படுத்துவதாகும் அது.
வட இந்திய மாநிலங்களில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் வரவிருக்கும் நேரத்தில் தென் மாநிலங்களைச் சேர்ந்த மூவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டிருப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை.
2004-லேயே அந்த இளம் எம்.பி.க்களை உத்தரப் பிரதேசத்தில் களம் இறக்கி, கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு, தமது திறமையை நிரூபிக்குமாறு அவர்களைப் பணித்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அது காங்கிரஸýக்கு பலன் அளிப்பதாக இருந்திருக்கும். 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, இப்போதுகூட அவர்களைக் களத்தில் இறக்கலாம்.
அமைச்சரவையில் அவர்களுக்கு இடம் அளிக்காவிட்டாலும்கூட, கட்சிப் பணிகளுக்கு அவர்களைப் பயன்படுத்தி இருக்கலாம். ஹிந்தி பேசும் மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்தவில்லையெனில், அடுத்து வரும் தேர்தலில் முக்கிய இடத்தை காங்கிரஸ் பிடிக்க முடியாது என்பது திண்ணம்.
தமிழில்: லியோ ரொட்ரிகோ
Posted in Cabinet, Cong(I), Congress(I), Jithin Prasad, Jyothir Aathithya Scindia, Leo Rodrigo, Manmohan Snigh, Milind Deora, Ministers, Naveen Jindal, Neeraja Chowdhury, Randheep Huda, Sachin Pilot, Sandeep Dixit, Sonia Gandhi, Youth Congress | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006
ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையில் பங்கேற்க ம.பி. அரசு ஊழியர்களுக்கு அனுமதியை ஆட்சேபித்து கலாமுக்கு சோனியா கடிதம்
புதுதில்லி, செப்.29:ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையில் மத்தியப் பிரதேச அரசு ஊழியர்கள் பங்கேற்க அந்த மாநில அரசு அனுமதியளித்துள்ளதை எதிர்த்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். ம.பி. அரசின் இது தொடர்பான உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
சோனியா காந்தியின் இக்கடிதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா தலைமையிலான குழு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் வியாழக்கிழமை அளித்தது.
கடிதத்தில் சோனியா கூறியிருப்பதாவது:
மத்தியப் பிரதேச அரசின் நடவடிக்கை அரசமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. மாநில ஆளுநருக்கு தெரியாமலேயே அரசு இந்த விஷயத்தில் முடிவு எடுத்துள்ளது.
இது தேசநலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு அல்ல. முறையற்ற சட்டவிரோதமான ம.பி.அரசின் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
குஜராத் மாநில அரசும் இதே போன்ற உத்தரவை கடந்த 2000-ம் ஆண்டில் பிறப்பித்தது. காங்கிரஸ் முறையீட்டை அடுத்து அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் தலையீட்டின் பேரில் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது என்று சோனியா கூறியுள்ளார்.
கலாமை சந்தித்த காங்கிரஸ் உயர்நிலைக் குழுவில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மார்க்ரெட் ஆல்வா, அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், எதிர்க்கட்சித் தலைவர் ஜமுனா தேவி மற்றும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள் இடம் பெற்றனர்.
Posted in APJ Abdul Kalam, BJP, Congress, employee, Government, Govt, Gujarat, KR Narayanan, Madhya Pradesh, Motilal Vohra, MP, President, RSS, Sonia Gandhi, Tamil | Leave a Comment »