Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Sohrabuddin’ Category

Joy at Sohrabuddin`s home after arrest of three IPS officers

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 26, 2007

3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கைது செய்யவைத்த சோரபுதீன் குடும்பத்தார் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

போலி துப்பாக்கிச் சண்டையில் சோரபுதீன் ஷேக் என்பவரை சுட்டுக் கொன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஆமதாபாத் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை அழைத்துவரப்பட்ட காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா (டி ஷர்ட், கண்ணாடி அணிந்தவர்).

இந்தூர், ஏப். 26: குஜராத் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா, காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆர்.கே. பாண்டியன், எம்.என். தினேஷ்குமார் (ராஜஸ்தான்) என்ற 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை, சோரபுதீன் ஷேக் குடும்பத்தார் தங்களுடைய சொந்த கிராமத்தில் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் ஜிர்னியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சோரபுதீன் ஷேக். ஜிர்னியா கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக சோரபுதீனின் அம்மா ஜெபுன்னிசா பீவி பதவி வகிக்கிறார்.

1995-ம் ஆண்டு சோரபுதீன் பெயர் முதல்முறையாக பத்திரிகைகளில் வந்தது. அந்த கிராமத்து கிணறு ஒன்றிலிருந்து 2 டஜனுக்கும் மேற்பட்ட ஏ.கே.-56 ரக தானியங்கி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அவரை சிபிஐ போலீஸôர் சந்தேகத்தின்பேரில் கைது செய்து அழைத்துச் சென்றனர். பிறகு அவரை நிரபராதி என்று விட்டுவிட்டனர்.

பிறகு அவரை 2005 நவம்பர் 26-ம் தேதி குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்புப்படை போலீஸôரும் ராஜஸ்தான் மாநில சிறப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி எம்.என். தினேஷ் குமாரும் ஆமாதாபாத் நகருக்கு வெளியே சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றனர்.

அவருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அத்வானி மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்களைக் கொலை செய்ய அவர் சதித்திட்டம் தீட்டி, அதை நிறைவேற்ற குஜராத்துக்கு வந்தார் என்றும் கூறப்பட்டது.

பிறகு சோரபுதீனின் சகோதரர் ருபாபுதீன் இச் சம்பவத்தை விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம், குஜராத் போலீஸôருக்கு ஆணையிட்டு இதைத் தீவிரமாக விசாரிக்கும்படி கூறியது. பிறகு உண்மை அம்பலமானது. 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் வேண்டுமென்றே சதி செய்து அவரைக் கொன்றிருப்பதாக, விசாரித்த அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். அதன் பேரில் 3 பேரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மே 1 வரை போலீஸ் காவல்: கைதான 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் ஆமதாபாத் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரிக்க 14 நாள்கள் வேண்டும் என்று அரசு தரப்பில் கோரப்பட்டது. நீதிபதி மே முதல் தேதி வரை மட்டும் அவகாசம் தந்தார்.

3 அதிகாரிகளும் நீதிமன்றத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். நிருபர்கள் ஏதேதோ கேள்விகள் கேட்டும் அவர்கள் யாரும் பதில் அளிக்கவில்லை. கைதான வன்சாரா, முதல்வர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

Posted in Abdul Latif, abuse, anti-terrorist, Courts, Encounter, Fake, Govt, Gujarat, IAS, IPS, Jhirnya, Judge, Jury, Justice, Lashkar-e-Toiba, Law, LeT, Madhya Pradesh, Modi, MP, Narendra Modi, officers, Order, Police, Sohrabuddin, Terrorism, terrorist, Ujjain | 1 Comment »