Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Soft Drinks’ Category

Organic Foods & Soft Drinks – Harmful chemicals in Drinking Water, Milk, Rice

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

தரநிர்ணய அளவுகோல்

மக்கள் சீக்கிரத்தில் மறந்து போகிறார்கள். அரசியல் என்று மட்டுமல்ல. எல்லா விஷயங்களிலும் இதே நிலைதான்!

கோக-கோலா, பெப்ஸி பானங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் நச்சுப்பொருள் எச்சம் உள்ளது என்று 2003-ல் அறிவியல்-சுற்றுச்சூழல் மையம் அறிக்கை வெளியிட்டது. அப்போது அந்த மென்பானங்களுக்கு எதிராகப் பலத்த போராட்டங்கள் நடந்தன; எல்லாரும் மென்பானங்களை உடைத்தனர். பின்னர் மீண்டும் நினைவுபடுத்தியது. மீண்டும் உடைத்தார்கள். மீண்டும் மறந்தார்கள்.

கோக-கோலா பானத்துக்கு கேரள அரசு விதித்த தடையை நீக்கிய கேரள உயர்நீதிமன்றம்,””தயாரித்து விற்பனைக்குத் தயாராக உள்ள பொருள்களில் (ஃபினீஷ்டு புராடக்ட்) நச்சுப்பொருள் எச்சத்தைச் சோதிக்கும் தரநிர்ணய அளவுகோல்களை இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (பி.ஐ.எஸ்.) சொல்லியிருக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.

2003-ல், இப்பிரச்சினை எழுந்தபோது, மென்பானங்கள், ஜூஸ் மற்றும் இதர பானங்களில் நச்சுப்பொருள் மற்றும் பாதுகாப்புத் தரநிர்ணயம் குறித்து பரிந்துரைக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பரிந்துரையின்படியே அறிவியலாளர் குழுவும் பி.ஐ.எஸ் அதிகாரிகளும் பங்கேற்ற பல அமர்வுகளுக்குப்பின் அக்டோபர் 2005-ல் மைசூரில் நடந்த கூட்டத்தில் மென்பானங்களுக்கான (கார்பனேட்டட் பீவரேஜ்) தரநிர்ணயம் இறுதிவடிவம் பெற்றது. ஆனால், “வேறுபல தகவல்களையும் சேகரிக்க வேண்டும் என்பதால் முடிவைத் தள்ளிப்போடுங்கள்’ என மத்திய அரசு கூறியதால் தரநிர்ணயம் தீர்மானிக்கப்படவில்லை.

முடிவுகளை ஏன் தள்ளிப்போட வேண்டும்? இது மக்களின் உடல்நலன் குறித்தது அல்லவா! இதைப் போராட்டம் நடத்திய எவரும் கேட்டதாகத் தெரியவில்லை. மக்களுக்கு விஷயங்களை நுட்பமாகப் பார்க்கத் தெரிவதில்லை. இந்த வரிசையில், நம் உணவுப் பொருள்களில் உள்ள நச்சு பற்றியும்கூட யாரும் கவனிப்பதில்லை.

வெண்ணெய் நீக்கப்பட்ட பால் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பால் நிறுவனங்கள் கலக்கும் ரசாயனப் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது என்று ஆய்வுத் தகவல்கள் எச்சரித்தன. ஆனால் அதுபற்றி யாரும் பேசுவதில்லை.

அரிசி, பருப்பு, காய்கறிகளிலும் பூச்சிமருந்து எச்சங்கள் இருக்கின்றன. அதற்காக ஒரே நாளில் இயற்கை வேளாண்மைக்குத் திரும்ப முடியாது என்று வாதிடலாம். ஆனால் அதை நோக்கிய முயற்சிகளில் முனைப்பும் ஊக்கமும் நிச்சயம் வேண்டும். இடையில், பூச்சி மருந்துகளைக் கட்டுப்படுத்தவும், நஞ்சின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் முடியும்.

தமிழகத்தில் பவானியிலும் பாலாற்றிலும் சாயப்பட்டறை மற்றும் தோல் தொழிற்கூடங்களால் நீரே நஞ்சாகிக் கிடக்கிறது. மென்பானங்களைவிட அதிக நச்சுப்பொருள் இந்த ஆற்று நீரில் உள்ளது. இதைத்தான் குளோரின் கலந்து குடிநீராகத் தருகிறது நம் அரசு.

குடிநீர், அரிசி, பருப்பு, பால் ஆகிய இன்றியமையா உணவுப் பொருள்களில் அனுமதிக்கப்பட்ட நச்சுப்பொருள் எச்சம் எவ்வளவு இருக்கலாம் என்கிற தரநிர்ணயம் இன்றைய அவசியத் தேவை. இத்தகைய தர நிர்ணயத்தால் விலை அல்லது வரி கூடுதலாகலாம். ஆனால் நச்சுப்பொருள் எச்சத்தால் ஏற்படும் நோய்களுக்காக நாம் செலவிடுவதைக் காட்டிலும் குறைவாகத்தான் இருக்கும்.

மென்பானங்களை எப்போதும் எந்நேரமும் நாம் குடித்துக் கொண்டிருப்பதில்லை என்று சமாதானம் கூறிக் கொள்வோர் இருக்கலாம். ஆனால், குடிநீர், அரிசி, பால், பருப்பு இவை நம் அன்றாட வாழ்வாதாரம் என்பதை மறந்துவிடக் கூடாது.

Posted in chemicals, Coke, Dhal, Grams, milk, organic, Pepsi, pesticides, rice, Soft Drinks, Tamil, Water | Leave a Comment »

Coke & Pepsi bottles are destroyed in Kerala as part of Soft Drinks Ban Agitations

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

கேரளத்தில் 2-ம் நாளாக கோக், பெப்சி பாட்டில்கள் அழிப்பு போராட்டம்

திருவனந்தபுரம், செப். 25: கோக கோலா, பெப்சி பான பாட்டில்களை அழிக்கும் போராட்டம் கேரளத்தில் இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு இளைஞர் அமைப்பான அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த தொண்டர்கள், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கடையில் புகுந்து, கோக், பெப்சி பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டிகளைத் தூக்கி தெருவில் வீசி, பாட்டில்களை உடைந்து அழித்தனர் என்று போலீஸôர் கூறினர்.

வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸôர் தெரிவித்தனர்.

கேரளத்தில் கோக், பெப்சி உற்பத்தி, விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது.

எதிர்ப்பு இயல்பானதே – அச்சுதானந்தன்: கோலா கம்பெனிகளால் தண்ணீர் பிரச்சினையை எதிர்நோக்கும் மக்கள் இது போல எதிர்ப்பு தெரிவிப்பது இயல்பானதே என கேரள முதல்வர் அச்சுதானந்தன் தில்லியில் நிருபர்களிடம் கூறினார்.

Posted in Achuthananthan, Agitation, Ban, Coke, Communist, CPI, destroy, High Court, Kerala, Pepsi, Soft Drinks, Tamil | Leave a Comment »

Coke did not exceed EU Standards

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 11, 2006

கோக-கோலா பானங்களில் நச்சுப்பொருள் வரம்பளவு மீறப்படவில்லை: கோக் தகவல்

புதுதில்லி, ஆக. 12: ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்துள்ள தரமுறைகளின்படி பார்த்தால் கோக-கோலா பானங்களில் நச்சுப் பொருள்களின் வரம்பளவு மீறப்படவில்லை என கோக் கூறியுள்ளது.

கோக், பெப்சி உள்ளிட்ட 14 வகையான பானங்களில் நச்சுப்பொருள்களின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து ராஜஸ்தான், பஞ்சாப், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் இந்த பானங்களுக்கு தடை விதித்தன. கேரளத்தில் உற்பத்தி, விற்பனை இரண்டுக்குமே தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து கோக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஐரோப்பிய ஒன்றிய தரநிர்ணயத்தின் படி, தனியே ஆய்வகங்களில் நடத்திய சோதனைகளில் இந்திய மென் பானங்களில் கண்டறியத்தக்க அளவு நச்சுப் பொருள்கள் இல்லை’ எனக் கூறியுள்ளது.

“பிரிட்டிஷ் அரசின் ஆய்வகமான மத்திய அறிவியல் ஆய்வகத்தில் (சிஎஸ்எல்) மென்பானங்கள் தொடர்ச்சியாகப் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப் படுகின்றன’.

“உலகம் முழுவதும் பின்பற்றுவதைப் போலவே இந்தியாவிலும் எங்களது பானங்களில் பாதுகாப்பு, தரம் விஷயத்தில் சமரசத்துக்கு இடமில்லாமல் செயல்படுவதாக’ கோக் கூறியுள்ளது.

Posted in Ban, Coca cola, Coke, Dinamani, Drink, FDA, India, Pesticide, Poison, Soft Drinks, Tamil | Leave a Comment »