Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Social’ Category

Tamil Nadu Reservations for the Minority – Benefit Analysis by Dinamalar

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 23, 2007

.யாருக்கு பாதிப்பு?

தமிழக மக்கள் தொகையில் 11 சதவீதம் உள்ள முஸ்லிம், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஏழு சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பார்கள். ஆனால், தமிழக அரசு ஏழு சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி மொத்தம் ஆறு கோடியே 24 லட்சத்து ஐந்தாயிரத்து 679 மக்கள் உள்ளனர்.

  1. இதில், இந்துக்கள் ஐந்து கோடியே 49 லட்சத்து 85 ஆயிரத்து 79 பேர். அதாவது மொத்த மக்கள் தொகையில் 88.1 சதவீதத்தினர் இந்துக்கள்.
  2. முஸ்லிம்கள் மக்கள் தொகை 34 லட்சத்து 70 ஆயிரத்து 647. மொத்த மக்கள் தொகையில் 5.5 சதவீதம்.
  3. கிறிஸ்தவர்கள் மக்கள் தொகை 37 லட்சத்து 85 ஆயிரத்து 60. இது 6.06 சதவீதம்.

தற்போது தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில்,

  • ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு 19 சதவீதமும்,
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும்,
  • பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதமும்

பிரித்து வழங்கப்படுகிறது.

இந்த பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீதத்தில் இருந்து

  • ஏழு சதவீதத்தை பிரித்து முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும்,
  • கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு

அளிக்க தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது

.தற்போதுள்ள 37 லட்சம் கிறிஸ்தவர்களில் 65 முதல் 75 சதவீதம் பேர் மதம் மாறிய ஆதிதிராவிடர்கள். இவர்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தேசிய அளவில் போராடி வருகின்றனர். இதற்கான கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளும் பிரதமரிடம் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பிரிவினரை ஒதுக்கிவிட்டு பார்த்தால், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மொத்த மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் கூட இருக்க மாட்டார்கள். எனவே, மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில், தற்போது வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீடு மிகவும் அதிகமானதாகி விடும்.

இதேபோல, முஸ்லிம்களிலும் பல்வேறு பிரிவினர் உள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 5.5 சதவீதத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் என பிரித்து அவர்களுக்கு 3.5 சதவீத ஒதுக்கீடு வழங்கியிருப்பது, அந்த மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் இடஒதுக்கீடு வழங்குவது போலாகும்.

அதன்படி பார்த்தால், இந்துக்கள் 88.1 சதவீதத்தினர் உள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 23 சதவீத இடஒதுக்கீடு தான் கிடைக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இந்துக்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

தற்போதைய தமிழக அரசின் அவசரச் சட்டத்தால் இந்துக்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது போல, இந்துக்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும் என்பதே பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.

Posted in AA, AathiDravidar, ADMK, Affirmative, Affirmative Action, Analysis, Anthropology, BC, Benefit, Brahmins, Calculations, Caste, Castes, Census, Christianity, Christians, Community, Demography, Dinamalar, DMK, Dravidian, Education, Employment, FC, Islam, Jobs, MBC, minority, Muslims, OBC, Observations, OC, Op-Ed, Opportunity, Percentage, Population, Reservation, Reservations, SC, Social, Sociology, ST, Stats, Tamil Nadu, TamilNadu, TN | Leave a Comment »

Narayana Guru – Ezhavas liberation movement

Posted by Snapjudge மேல் மே 11, 2007

ஈழவாஸ் என்பது ஒரு புரட்சிகர மார்க்கம்
வழக்குரைஞர் எஸ்.இளங்கோவன்

நூலிலிருந்து :
கேரள மண்ணில் ஈழவ மக்களிடம் உதை பெற்ற பார்ப்பனியம் தனது முந்தைய பலத்தை இழந்திருந்தது. இந்த காலகட்டத்தில் சவர்ணர்-கள் அவர்ணர்கள் போராட்டம் கேரள மண்-ணில் தீவரமடைந்திருந்தது.

ஸ்ரீநாராயணகுரு நெய்யாற்றின் கரை எனும் ஊரில் உள்ள ஊரூட்டம்பலத்தில் இருந்து பள்ளிக் கூடத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த புலயர்களையும் பள்ளியில் சேர்த்து கல்வி அளிக்க வேண்டுமென்று கோரி-யிருந்தார். அதனை மறுத்த சவர்ணர்கள் புலயர்-களை அடித்து மிகவும் துன்புறுத்தினார்கள். தாக்குதலுக்குள்ளான புலயர் மக்களை அருவி-புறம் வரவழைத்து அவர்களை சமாதானப்-படுத்தினார்.

அய்யன்காளிப்படை என்றோர் மக்கள் குடிப்படை (People Millitia) என்றோர் படை உருவானது. பாடசாலை அனுமதி மறுக்கப்-படும் இடங்களில் இப்படை திருப்பி தாக்குதல் தொடுத்தது. கேரளத்து ஈழவ மக்கள் புலயர்களுக்கு ஆதரவாய் களமிறங்க கேரள பார்ப்பனியம் குலை நடுங்கிப் போனது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்டோர் உறவு கேரள மண்ணில் வளர்த் தெடுத்தது ஸ்ரீநாராயணகுருவின் முற்போக்கு பார்வை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கேரளத்தில் “தலித் விடுதலை” என்ற முழக்கம் எழுவதில்லை. ஏனென்றால் ஈழவர்கள் அங்கு தலித்துகளை பாதுகாத்த-தோடு பார்ப்பனி-யத்தை பாடையில் ஏற்றினார்கள்.

Posted in backward, Brahmin, Brahmins, Caste, Casteism, Dalit, Equality, Ezhava, Ezhavas, Guru, hierarchy, Jathi, Jati, Kerala, Liberation, Madam, Matham, Movement, Narayana, Narayana Guru, NarayanaGuru, ostracism, People Millitia, Pulaya, Pulayas, Reform, reformer, SC, Social, Sri lanka, Srilanka, ST, untouchable, Upliftment | Leave a Comment »

Other backward castes – Information & Statistics on various Indian State Population

Posted by Snapjudge மேல் மே 8, 2007

உ.பி.யில் 7 கோடி பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்

புதுதில்லி, மே 8: உத்தரப்பிரதேச மாநில மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 7 கோடி என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பிகார்,
  • ஆந்திரம் மற்றும் கர்நாடகம்
  • ஆகிய மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை தலா 3 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்த தகவலின்படி இந்த புள்ளிவிவரம் தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநில பஞ்சாயத்து ராஜ் அமைப்பு 2001-ம் ஆண்டு மேற்கொண்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநில மக்கள்தொகையில் 7 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 83 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூகநீதி, அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் மீரா குமார் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஆந்திரத்தில் 1986-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 58 ஆயிரத்து 924 என அவர் தெரிவித்தார்.

பிகாரில் 1994-ம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் இயக்குநரகம் மாவட்டவாரியாக மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 3 கோடியே 13 லட்சத்து 3 ஆயிரத்து 226.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 88 லட்சத்து 7 ஆயிரத்து 652, கர்நாடகத்தில் 3.61 கோடி, மத்தியப் பிரதேசத்தில் 1.84 கோடி பேர் இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

மேற்கு வங்க மாநிலத்தில் 1.21 கோடி, அந்தமான் நிகோபர் தீவுகள், தாத்ரா- நாகர் ஹவேலி மற்றும் திரிபுரா ஆகியவற்றில் முறையே 1.54 கோடி, 2966 மற்றும் 6.74 லட்சம் பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.

  • அருணாசல பிரதேசம்,
  • மிஜோரம்,
  • நாகாலாந்து,
  • லட்சத்தீவுகள் ஆகியவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இல்லை.

மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அளிக்கவில்லை என்றும் அவர் அந்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Andaman, Andhra, Andhra Pradesh, AP, Arunachal, Arunachal Pradesh, backward, Bengal, Bihar, Castes, Census, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Community, Dadra Nagar Haveli, Demographics, Demography, Empowerment, Goa, Information, Justice, Karnataka, Lakshadweep, MBC, Mizoram, Nagaland, Nicobar, OBC, Panchayat, Population, Reservation, SC, Social, ST, State, Statistics, Stats, Tripura, Union Terrirtory, UP, UT, Uttar Pradesh, Welfare, West Bengal | 1 Comment »

Experienced Intelligence – Basis, Facts, Research, Analysis, Observations

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 27, 2007

அறிவுத்திறனுக்கு எது அடிப்படை?

ஜி.எஸ். பூர்ண சந்திரக்குமார்


எப்போது பார்த்தாலும் ஏதாவது ஏடாகூடமாகச் செய்யும் ஆசாமிகளைப் பார்த்து, “”உனக்கு மூளையில மசாலா ஏதாவது இருக்கா, இல்லையா?” என்று நாம் கிண்டலாகக் கேட்பது வழக்கம். சுமார் 1.5 கிலோகிராம் எடையுள்ள நம் மூளையில் மசாலா இருக்கிறதோ, இல்லையோ, நிறைய சாம்பல் இருக்க வேண்டும் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

சாம்பல் என்றதும் பயப்பட வேண்டாம். மூளையிலுள்ள சாம்பல்நிறத் திட்டுகளைதான். நமது மூளையில் உள்ள நரம்பு செல்கள் அனைத்தும் நூடுல்ஸ் மாதிரி கொத்து கொத்தாகக் காணப்படும். அவற்றின் எண்ணிக்கை ஏறக்குறைய 100 பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி அளவு. அதன் துணைத் திசுக்களையும் சேர்த்தால் எண்ணிக்கை ஒரு லட்சம் கோடியையும் தொட்டுவிடும். இவைகளே சாம்பல்நிறத் திட்டுகள் என்றழைக்கப்படுகின்றன.

நினைவுகளை ஒருமுகப்படுத்தி மூளையில் நன்கு பதிய வைக்கவும், அந்நினைவுகளைப் பயன்படுத்தி வேலையை ஒழுங்காகச் செய்யவும் மேற்சொன்ன சாம்பல் நிறப்பகுதிகள் மூளையில் நிறைய வேண்டும். அப்படிப்பட்ட சாம்பல்நிறப் பகுதிகளை அதிகம் பெற்றிருப்பவர்கள்தான் கிராண்ட் மாஸ்டர்களாக எல்லா இடங்களிலும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். எப்படி?

பொதுவாக ஐம்புலன்களின் மூலமாக ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான தகவல்கள் நரம்புத்தூண்டல் வடிவில் நமது மூளையை அடைந்து பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் புதுப்புதுத் தகவல்களைக் கிரகித்துக் கொள்ளும்போதும் மூளையானது அதற்கேற்றாற்போல் புதுப்புது நரம்புச் சந்திகளை உருவாக்கி, அந்நரம்புச் சந்திகள் மூலமாக தாம் பெற்ற தகவல்களை அனுபவங்களாகப் பதிவு செய்து கொள்கிறது. அவ்வனுபவங்களைக் கொண்டுதான் ஒவ்வொரு மனிதனும் வெற்றிகரமான மனிதனாக உலகில் பவனி வருகிறான்.

பிரிட்டிஷ் மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நம்முடைய மூளையை ஸ்கேன் செய்து மேலும் பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளைச் சொன்னபோது மூளையில் அம்மொழிக்கான நரம்புப் பகுதிக்குள் மட்டும் ரத்த ஓட்டம் பாய்ந்து அப்பகுதி வெளிச்சமானதைக் கண்டார்கள். புதிய செய்திகள், செயல்கள் முதலியவற்றை விரைவில் நினைவு வைத்துக் கொண்டு தேவைப்படும் போது விரைவில் பிரதிபலிக்கவும் கூடியதான சிறப்பு நியூரான்கள் நமது மூளையில் இருப்பதே இதற்குக் காரணம் என்று கண்டறிந்துள்ளனர். சரி. மூளையில் நினைவு எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது?

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல அறிவியல் அறிஞர்கள் மூளையின் இயல்பு பற்றியும், பட்டறிவும் படிப்பறிவும் மூளையில் எவ்வாறு நினைவாகப் பதிவு செய்யப்படுகிறது என்பது பற்றியும் பல ஆய்வுகளை மேற்கொண்டனர்.

யூரி ஒவ்சினிகோவ் எனும் அறிவியல் அறிஞர் 1965-ம் ஆண்டு ஒரு விளக்கத்தை வெளியிட்டார். பெப்டைடுகள் தான் நினைவிற்கு அடிப்படையாக விளங்குகின்றன என்பதே இவருடைய கருத்து. இந்த பெப்டைடுகள் அமினோ அமிலங்களால் ஆனவை. சுமார் 20 அமினோ அமிலங்கள் பல்வேறு விதங்களில் இணைந்து பல்வேறு வகைப் புரதங்களை உண்டாக்குகின்றன. இவற்றின் 15 அமினோ அமிலங்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்த 15 அமினோ அமிலங்களும் பல்வேறு விகிதங்களில் இணைந்து உருவாகும் புரதங்கள் எத்தனை மனிதர்களின் நினைவாற்றலுக்கு போதுமானதாய் இருக்கும் தெரியுமா? சுமார் 10 ஆயிரம் மனிதர்கள்.

அதாவது நம் வாழ்நாளில் நாம் இன்னும் எத்தனை கோடி புதிய தகவல்களைப் பெற்றுக் கொண்டாலும் அவற்றை மூளையில் பதிவு செய்வதற்குத் தேவையான புரதங்கள் தீர்ந்து போகாது. அத்தகைய சிறப்பு வாய்ந்த பெப்டைடுகளை சில ரசாயன மாற்றங்களால் மூளையில் சிதையாமல் பார்த்துக் கொண்டால் போதும், நம் வாழ்நாளில் நினைவுப்பஞ்சமே இராது.

மேற்சொன்ன பெப்டைடுகளைப் பற்றி ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானிகள் மேற்கொண்ட சில ஆய்வு முறைகளைப் பார்த்தால் “”இப்படியும் இருக்குமா” என்று நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும். ஒரு பரிசோதனையில் ஒரு குறிப்பிட்ட அனுபவமுடைய ஒரு பிராணியின் மூளைச்சாற்றை எடுத்து அதை அந்த அனுபவம் துளியுமில்லாத வேறொரு பிராணியின் மூளையில் செலுத்திப் பார்த்தனர். விளைவு என்ன தெரியுமா? மூளைச்சாறு செலுத்தப்பட்ட பிராணியானது, அம்மூளைச்சாறுக்குச் சொந்தமான முந்தைய பிராணியின் அனுபவம் முழுமையும் பெற்று அதைப்போலவே செயல்பட ஆரம்பித்துவிட்டது.

இப்போது நமக்கு ஒன்று தெளிவாகிவிட்டது. மூளையில் நினைவாகப் பதிவாகும் தகவல்கள் அனைத்தும் பெப்டைடுகளாகவே பதிவாகின்றன என்பதே அது. இந்தத் தகவல்களை ஒத்துப்பார்ப்பதில்தான் விலங்குகளுக்கும் நமக்கும், நமக்கும் கிராண்ட் மாஸ்டர்கள் போன்ற அறிவுஜீவிகளுக்கும் வித்தியாசம் ஏற்படக் காரணமாய் அமைந்து விடுகிறது. அறிவுஜீவிகளின் அறிவிற்குக் காரணம் இந்த பெப்டைடுகளை நிரம்பப் பெற்றிருக்கும் அவர்களின் மூளையிலுள்ள சாம்பல்நிறப் பகுதியானது அதிக அடர்த்தியைப் பெற்றிருப்பதே.

ஆக, அறிவுத்திறன் என்பது தனிப்பட்ட ஓர் இனத்திற்கோ, ஒரு குழுவிற்கோ சொந்தமில்லை என்பது உறுதியாகிவிட்டது. சரிவிகித உணவும், முறையான பயிற்சியும், வள்ளுவர் கூறும் அசைவிலா ஊக்கமும் இருந்தால் வாழ்வில் வெற்றிக்குத் தடையேதுமில்லை.

(கட்டுரையாளர்: சித்த மருத்துவர், எஸ்.கே. சித்த மருத்துவமனை, கோபி).

Posted in Analysis, Ayurveda, Ayurvedha, Brain, Doctor, EQ, Experience, Intellectual, Intelligence, Intelligent, Medicine, Research, Science, Siddha, Social | Leave a Comment »

MySpace Generation – R Venkatesh

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

இளையவர்களின் இணைய சாதனை!

ஆர்.வெங்கடேஷ்

கனவுகள் கோலம் போடும் காலம் ஒன்று உண்டென்றால், அது டீன்ஏஜ் பருவம்தான். நமக்குத் தெரிந்த அத்தனை சாகசங்களையும் செய்து காட்டி, மிரட்டிவிட வேண்டும் என்ற உற்சாகம் கொப்பளிப்பதும் அப்போதுதான்.

எதற்கு இப்படி ஓர் இளமைப் பிரசங்கம் என்று கேட்கிறீர்களா? விஷயத்துக்கு வருகிறேன்…

இன்றைக்கு இணைய உலகத்தையே கலக்கிக் கொண்டிருப்பது யார் தெரியுமா? இளைஞர்கள்தான்! ‘யாஹ¨’, ‘கூகுள்’, ‘எம்.எஸ்.என்.’ போன்ற பெரிய பிஸ்தா வலைதளங்களையே பின்னால் தள்ளிவிடும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருப்பது, இளைஞர்களின் வலைதளங்கள் தான். இதுநாள்வரை இருந்த பார்வையையே புரட்டிப் போட்டுவிடும் வளர்ச்சி இது.

‘மைஸ்பேஸ் டாட் காம்’… (லீttஜீ://ஷ்ஷ்ஷ்.விஹ்ஷிஜீணீநீமீ.நீஷீனீ) இதுதான் இன்றைய இளைஞர்களின் சரணாலயம். கொஞ்சம் இந்த விவரங்களைப் பாருங்கள்… இதுவரை இந்த வலைதளத்தில் பதிவுசெய்து கொண்டவர்கள் ஒன்பதரை கோடி பேர். ஒவ்வொரு மாதமும் ஐந்து லட்சம் புது பயனர்கள் இந்த வலைதளத்தில் பதிவுசெய்து கொள்கிறார்கள். அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஆங்கில மொழி வலைதளங்களில், ‘மைஸ்பேஸ்’ வலைதளத்துக்கு நான்காவது இடம். அதுவும் எத்தனை ஆண்டுகளில்… மூன்றே ஆண்டுகளில்! 2003&ல்தான் இந்த வலைதளமே உருவாக்கப்பட்டது. பத்தாண்டுகள், பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் கொட்டை போட்ட சர்வீஸ்காரர்களான ‘யாஹ¨’, ‘கூகுள்’, ‘எம்.எஸ்.என்.’ வலைதளங்களுக்கே இன்னும் கொஞ்சம் மாதங்களில் பெப்பே காட்டிவிட்டு ‘மைஸ்பேஸ்’ முதலிடத்தைப் பிடித்துவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இதையெல்லாம் விட ஆச்சர்யம், சென்ற வாரம் ‘யாஹ¨’ நிறுவனம் 2006&ல் தனது காலாண்டு வருமானத்தை வெளியிட்டது. அதன் வருமானத்தில் சரிவு. நிபுணர்கள் சொல்லும் ஒரு காரணம் என்ன தெரியுமா? ‘மைஸ்பேஸி’ன் அபாரமான வளர்ச்சி திக்குமுக்காட வைக்கிறது என்பதுதான்.

‘மைஸ்பேஸி’ல் அப்படி என்ன இருக்கிறது? மிகவும் எளிமையான ஒரு கருத்தை ஒட்டி உருவாக்கப்பட்ட வலைதளம் அது. நட்பு மற்றும் தொடர்புகளைப் பேணுதல், வளர்த்தல், மேம்படுத்துதல் என்பவைதான் அதன் நோக்கம். இதுபோன்ற தொடர்புகளைப் பேணும், வளர்க்கும் வலைதளங்களுக்கு ‘சமூக வலைப்பின்னல் வலைதளங்கள்’ (ஷிஷீநீவீணீறீ ழிமீtஷ்ஷீக்ஷீளீவீஸீரீ ஷிவீtமீs) என்று பெயர்.

‘சோஷியல் நெட்வொர்க்கிங்’ என்பது ஒன்றும் புதிய கருத்து இல்லை. சொல்லப்போனால் ‘ஜியோசிட்டீஸ் டாட் காம்’, ‘ஏஞ்சல்பையர் டாட் காம்’ போன்ற வலைதளங்கள் இந்த வேலையைத்தான் செய்தன. ஒவ்வொருவரும் தமக்கான ஒரு வலைப்பக்கத்தை இலவசமாக வடிவமைத்துக் கொள்ளவும், நண்பர்களிடையே அதைப் பரிமாறிக்கொள்ளவுமே அந்த வலைதளங்கள் உருவாயின. இன்று ‘மைஸ்பேஸ§’ம் அதையேதான் செய்கிறது. ஆனால், இன்னும் மேம்பட்டதாக, உபரி வசதிகளுடன்.

இணையத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து ஒரு போக்கு இருந்து வருகிறது. அதாவது ஒரு பதிப்பாளர் இருப்பார். அவர்தான் எல்லாவற்றையும் சொல்வார். செய்திகள், கட்டுரைகள், கருத்துக்கள் என்று எல்லாமே ஒரே திசையில் இருந்து வாசகர்களான உங்களை நோக்கியே வரும். வாசகர்கள் வெறுமனே பார்வையாளராக மட்டுமே இருக்க வேண்டும்.

இணையம் என்பது இருவழித் தொடர்புக்கான மீடியா. அதில், ‘நான் மட்டுமே பேசிக்கொண்டே இருப்பேன். நீ கேட்க வேண்டும்’ என்ற சங்கதியே உதவாது. சொல்லப்போனால், அது ஒரு அராஜகம் என்று வெகுண்டெழுந்தவர்கள் பலர். அவர்கள்தான் இணையத்தின் சாத்தியத்தை மேம்படுத்தியவர்கள். இன்று நாம் சொல்லும் வலைப்பதிவுகள், விவாத அரங்கம், உடனடி தூதுவன் (மிஸீstணீஸீt விமீssமீஸீரீமீக்ஷீ) எல்லாமே இதுபோன்ற ஜனநாயகவாதிகளின் கைவண்ணம். இளைஞர்களுக்கும் இந்த ஜனநாயகம்தானே வேண்டும்! இந்த பரிமாற்றம்தானே வேண்டும்!

‘மைஸ்பேஸ்’ செய்த முதல் வேலை, இணையத்தில் சாத்தியமாக உள்ள அத்தனை இன்டர்ஆக்டிவிட்டியையும் ஒரே இடத்தில் குவித்தது. நீங்கள் ஒருமுறை ‘மைஸ்பேஸி’ல் பதிவுசெய்து கொண்டால் போதும். உடனே உங்களுக்கு ஒரு இ&மெயில் ஐடி கிடைக்கும். கூடவே, நீங்கள் வலைப்பதிவுகள் தொடங்கி உங்கள் எண்ணங்களை எழுதலாம், பாட்டுக்களைப் பதிவு செய்து ஒலிபரப்பலாம், வீடியோ காட்சிகளை இணைக்கலாம். அதோடு, உங்களுக்கு விருப்பமான நண்பர்களை உங்கள் வலைஇல்லத்துக்கு அழைத்து வந்து காட்டலாம். அவர்களுடைய கருத்துக் களை அங்கேயே எழுதச் சொல்லலாம். பின்னர் அவர்களோடு தூதுவன் மூலம் பேசி உரையாடலாம். மேலும் உங்களுக்குப் பிடித்த நண்பர்களின் ‘மைஸ்பேஸ் வலைஇல்லங்களை உங்களுடைய இல்லத்தோடு இணைக்கலாம். நண்பர்களோடு குழுத் தொடங்கி, உரையாடலாம்.

ஓர் இளைஞனுக்கு வேறு என்ன வேண்டும், சொல்லுங்கள்! அப்படியே ஆணி அடித்தாற்போல், ‘மைஸ்பேஸோ’டு கட்டுண்டு கிடக்கிறான் ஆன்லைன் இளைஞன். தனக்கு விருப்பமான குழுவோடு இணைந்துகொண்டு, தனக்குப் பிடித்த நண்பர்களோடு அளவளாவிக் கொண்டு, தனக்குப் பிடித்த பாடலைக் கேட்டுக்கொண்டு, தான் பார்த்து ரசித்த வீடியோ காட்சிகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டு, வெளியுலகில் அவன் செய்த அனைத்தையும் ஆன்லைனிலும் செய்ய… சைட் சூப்பர்ஹிட்!

இதன் இன்னொரு வளர்ச்சிதான் இன்னும் சூப்பர். என் வலை இல்லத்தின் முகப்பு எனக்குப் பிடித்த மாதிரி இல்லையே? மாற்றிக்கொள்ளலாமா? தாராளமாக. இது உங்கள் வீடு எனும்போது, அது உங்கள் விருப்பப்படி இருக்க வேண்டியது அவசியம் அல்லவா…. அப்புறமென்ன? இணையத்தில் இன்றைக்கு எண்ணற்ற மாடல் டெம்பிளேட்டுகள் கிடைக்கின்றன. அதை அப்படியே சுட்டுவந்து, தன் வலைஇல்ல முகப்பையே மாற்றி அமைத்துக்கொள்கிறான்.

இதெல்லாம் செய்தபின், உங்கள் விருப்பமான நண்பர்களிடம் காட்ட வேண்டுமல்லவா? அவர்களை அழைத்து வருவதையும் நீங்களே செய்யுங்கள். தெருமுனையில் உருவான நட்புவட்டம், இப்போது அப்படியே ஆன்லைனுக்கு இடம்பெயர்ந்துவிட்டது.

இன்றைக்கு ‘மைஸ்பேஸ்’ மூலம் பல இசைக்குழுக்கள் புகழ்பெற்றுவிட்டன. பல அழகிகள் உருவாகிவிட்டார்கள். பல்துறைப் பிரபலங்கள் உருவாகிவிட்டார்கள். தங்களை ‘மைஸ்பேஸ்’ புகழ் பிரபலங்கள் என்று பறைசாற்றிக்கொள்வதில் அவர்களுக்கு எல்லாம் அளவில்லா மகிழ்ச்சி.

வளர்ச்சி என்றால், உங்கள் வீட்டு, எங்கள் வீட்டு வளர்ச்சி இல்லை. அசுரத்தனமான வளர்ச்சி. விளைவு, Ôஸ்டார் டி.வி.Õ அதிபர் ரூபர்ட் முர்டாக்குக்கு மூக்கு வியர்த்துவிட்டது. சர்வதேச மீடியா சக்ரவர்த்தியான முர்டாக், நல்லதொரு முகூர்த்த நாளில், வெற்றிலை பாக்கோடு, 580 மில்லியன் டாலர் கொடுத்து இந்த ‘மைஸ்பேஸ்’ வலைதளத்தை வாங்கிவிட்டார். சட்டென அப்போதுதான் சர்வதேச சந்தை தலையை உதறிக்கொண்டு விழித்துக்கொண்டது.

அதுவரை இணையம் என்றால் போணியாகாது, இனி கடையைக் கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான் என்று நினைத்தவர்கள் எல்லாம் ஒரு வினாடி நின்று நிதானமாகப் பார்த்தார்கள். தங்கள் மூக்குக் கீழேயே ஒரு அபாரமான வாய்ப்பு, திமுதிமுவென வளர்ந்து நிற்பதைப் பார்த்தார்கள். ‘சோஷியல் நெட்வொர்க்கிங்’ என்பதன் உண்மையான வீச்சை அப்போதுதான் உணர்ந்துகொண்டார்கள்.

இன்றைக்கு ‘மைஸ் பேஸி’ன் வளர்ச்சி புதிய பரிமாணங்களைப் பெற்றி ருக்கிறது. வேலைக்கு ஆள் வேண்டுமா? ‘மைஸ்பேஸி’ல் போய்த் தேடு. புதிய எழுத் தாளன் வேண்டுமா? ‘மைஸ்பேஸி’ல் தேடு. புதிய இசையமைப்பாளன் வேண் டுமா? ‘மைஸ்பேஸி’ல் எட்டிப் பார். கண்ணுக்கு அழகான நடிகை வேண்டுமா? ‘மைஸ் பேஸ§’க்கு ஒரு விசிட் அடி. இளைஞர்களின் கூட்டம் அங்கேதான் மொய்க் கிறது. எந்தத் திறமை வேண்டு மானாலும் அங்கேதான் கொட்டிக் கிடக்கிறது.

நல்லது இருந்தால், கூடவே கொஞ்சம் கெட்டதும் இருக்கத்தானே வேண்டும்! ‘மைஸ்பேஸ்’ பற்றிய விமர்சனங்களில் முக்கியமானது, டீன்ஏஜ் பார்ட்டிகள் கெட்டுப் போகிறார்கள். சகவாசம் கெட்டுப் போகிறது என்று குமுறும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இன்னொரு குற்றச்சாட்டு, நட்பு என்று உருவாகி பின்னர் பாலியல் பலாத்காரம் வரை போய்விடுவதாகச் சொல்கிறார்கள்.

இதையெல்லாம் மீறி ‘மைஸ்பேஸி’ல் திமுதிமுவென இளைஞர் கூட்டம் சேர்ந்துகொண்டே இருக்கிறது!

Posted in Blogdom, Blogworld, Bookmarks, myspace, Networking, R Venkatesh, Social, Tamil, Vikadan, Young, Youth | Leave a Comment »