பாகிஸ்தானில் பெண் அமைச்சர் சுட்டுக்கொலை
![]() |
![]() |
பாகிஸ்தான் வரைப்படம் |
பாகிஸ்தானில் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு எதிரான, சந்தேகத்துக்குரிய இஸ்லாமிய தீவிரவாதிகள், அங்கு பஞ்சாப் மாகாணத்தில் பெண் அமைச்சர் ஒருவரைச் சுட்டுக்கொன்றுள்ளார்கள்.
பஞ்சாப் மாகாண அரசின், சமூக நல அபிவிருத்தி அமைச்சர், ஷில் இ ஹுமா உஸ்மான் அவர்கள், தனது கட்சி அலுவலகத்தில் உரையாற்றத் தயாரான வேளையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சந்தேக நபர் ஒருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் இஸ்லாமிய குழுவைச் சேர்ந்தவர் அல்ல என்றும், அவர் விசாரணைகளின் போது, தான், பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு எதிரானவர் என்று கூறியதாகவும் பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் கூறியுள்ளார்.