பெங்களூர் வன்முறையில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: 12 வயது சிறுவன் சாவு; ஊரடங்கு உத்தரவு அமல்
பெங்களூர், ஜன. 22: பெங்களூரில் நடந்த வன்முறையில் போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர். அதேநேரத்தில் 3 போலீஸôருக்கு கத்திக்குத்து காயமடைந்தனர். இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வன்முறையைத் தொடர்ந்து, 3 நாள்களாக பதற்றத்துடன் இருந்த சிவாஜிநகர், பாரதிநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் விராட் இந்து மாநாட்டையொட்டி மீண்டும் வன்முறை துவங்கியது.
இந்த வன்முறையில் பல பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன. அதேபோல் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியனவும் எரிக்கப்பட்டன. ஏராளமான வாகனங்கள் கல்வீச்சில் சேதமடைந்தன.
இந்த வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால் மாலையில் போலீஸôர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும் கலையாததால் பாரதிநகர் காமராஜர் சாலையில் போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். 3 பேர் குண்டு காயங்களுடன் பெüரிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வன்முறையில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வன்முறையில் 3 போலீஸôருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. பலர் கல்வீச்சில் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். பல்வேறு இடங்களில் சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.