Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Singur’ Category

Bengal shuts down to protest violence in Nandigram, Singur

Posted by Snapjudge மேல் மார்ச் 16, 2007

கறுப்பு நாள்

மேற்கு வங்கத்தின் நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சினையில் வன்முறை ஏற்பட்டு போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் இறந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இடதுசாரி முன்னணியின் 29 ஆண்டுகால ஆட்சியில் இதற்கு முன் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்ததில்லை என்பதால் இது ஒரு கறுப்பு நாள் என்று மாநில அமைச்சர் ஒருவரே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள் போராட்டத்தை ஒடுக்க போலீûஸப் பயன்படுத்துவதற்கு தாங்கள் எதிரானவர்கள் என்று கூறிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இச் சம்பவம் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.

கோல்கத்தாவுக்கு தென்மேற்கில் 150 கிலோ மீட்டர் தொலைவில் நந்திகிராமம் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் இந்தோனேசியாவின் சலீம் குழுமத்துக்கும் மாநில அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அரசும், அந்த நிறுவனமும் தலா 50 சதவீத முதலீட்டில் 10 ஆயிரம் ஏக்கரில் ரசாயனத் தொழில் பூங்கா அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதற்கான நிலத்தை நந்திகிராமம் பகுதியில் கையகப்படுத்தப்போவதாக கடந்த டிசம்பரில் தகவல் வெளியானது. இதையடுத்து பிரச்சினை உருவானது. எனினும், உள்ளூர் மக்கள் சம்மதம் தெரிவித்தாலன்றி எந்த நிலமும் கையகப்படுத்தப்படமாட்டாது என்று முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறிவந்தார். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் இத் திட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதற்கிடையே, விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியானதை அடுத்து அரசுக்கு எதிராக கடந்த ஜனவரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது 6 பேர் இறந்தனர்.

இந்த நிலையில் நந்திகிராமத்தின் முதல் பிளாக்கில் உள்ள 5 கிராமங்கள், நிர்வாகத்துடன் கடந்த இரண்டரை மாதங்களாக எவ்விதத் தொடர்பும் இன்றி இருந்தன. நிலம் கையகப்படுத்தப்படலாம் என்ற ஊகத்தில் அன்னியர் எவரும் கிராமப் பகுதியில் நுழைவதைத் தடுக்க சிலர் சாலைகளின் குறுக்கே பள்ளங்கள் தோண்டினர். பாலங்களை உடைத்தனர். நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்தப்பட்ட பின்னரும் போலீஸôர் அல்லது அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

எனவே சாலைகள், பாலங்களைச் சீரமைக்க புதன்கிழமை பெரும் எண்ணிக்கையில் அக் கிராமப்பகுதியில் போலீஸôர் நுழைந்தனர். அவர்கள் மீது கற்கள், கையெறிகுண்டுகள் சகிதம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் போட்டியிடும் தன்மையை உருவாக்கவும், ஏற்றுமதிக்குச் சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தவும் நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க வகை செய்யும் கொள்கை 2000-ம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மண்டலங்களில் உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் முழுக்க முழுக்க அன்னியச் செலாவணிக்காகவும், ஏற்றுமதியை நோக்கமாகவும் கொண்டவை. ஆண்டுதோறும் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அன்னியச் செலாவணி பெருகி நாட்டின் பொருளாதாரம் மேம்பட இது உதவிகரமாக இருக்கலாம். ஆனால் அதற்காக விளை நிலங்களை அழித்து அதன் மீது தொழிற்சாலைகளை அமைக்கக்கூடாது. அது வேளாண் பொருள் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தி, அவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்துவிடுவதோடு மட்டுமன்றி அத் தொழிலை நம்பியுள்ள பல கோடி மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதை அரசுகள் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் இதுபோன்ற முக்கியமான பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட பகுதி மக்களுடன் ஆலோசனை செய்த பின்பே முடிவு எதையும் மேற்கொள்ள வேண்டும்.

————————————————————————————————————————–
Monday November 26 2007

மதிப்பை இழந்த மார்க்சிஸ்ட்

நீரஜா சௌத்ரி

மேற்கு வங்க மாநிலம், மிதுனபுரியில் உள்ள ஏதோ ஓர் இடம் என்பதைவிட கூடுதல் அர்த்தத்தைப் பெற்றுவிட்டது நந்திகிராமம்.

சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக நிலத்தைக் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கைக்கு எதிரான “போராட்டத்தின் மறுபெயர்’ என்பதைவிட விரிவான அர்த்தத்தைப் பெற்றுவிட்டது நந்திகிராமம்.

இத்தகைய சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. 1984-ல், சீக்கியரான தனது பாதுகாவலராலேயே இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்களின் தூண்டுதலின்பேரில் அப்பாவி சீக்கியர்கள் மீது அராஜகக் கும்பல்கள் தாக்குதல் நடத்தியதுடன் அவர்களை உயிரோடு எரித்துக் கொன்றனர். மூன்று நாள்களாக இந்த அராஜகம் தொடர்ந்துகொண்டு இருந்தபோதிலும் அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்தன.

2002-ல் கோத்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த கரசேவகர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிதீர்க்கும் வகையில் குஜராத்தில் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்க தளம், பாஜக ஆகிய அமைப்புகள் வன்முறையில் இறங்கின. இச்செயல்களுக்கு குஜராத் முதல்வரின் ஆதரவும் தூண்டுதலும் இருந்தன என்பது, அண்மையில் “தெஹல்கா’ பத்திரிகை நடத்திய புலனாய்விலிருந்து தெரியவந்துள்ளது.

நந்திகிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் பல கிராமங்களை மீண்டும் கைப்பற்றச் சென்ற ஆயுதம் தாங்கிய குண்டர்கள் பல பெண்களைக் கற்பழித்ததுடன், அப்பாவி மக்களைக் கொலை செய்து, அவர்களது வீடுகளையும் தீயிட்டுக் கொளுத்தியிருக்கின்றனர் என்பது அப் பகுதிக்குச் சென்று வந்த நிருபர்களின் செய்திகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேற்கண்ட மூன்று சம்பவங்களிலுமே “எதிர்ப் பிரிவினரு’க்குப் பாடம் புகட்டுவதற்காக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அரசும் துணைபோயிருக்கிறது அல்லது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அத் தாக்குதல்களுக்கு உதவி செய்திருக்கிறது.

ஆனால், நந்திகிராமத்தில் அரசு மேலும் ஒரு படி மேலே சென்றுவிட்டது. “”தார்மிக ரீதியில் சரியானது; நியாயமானது” என்று கூறி, அந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பகிரங்கமாக வக்காலத்து வாங்கியிருக்கிறது அரசு.

எதிர்க்கட்சியினருக்கு அவர்களது “”மொழியிலேயே பதிலடி” கொடுத்திருக்கின்றனர் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் என்று கூறியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா.

எந்தக் கட்சியையும் சாராதவரும், இடதுசாரிக் கட்சிகளின் ஒப்புதலுடன், அரசியல் சட்டப்படி நியமிக்கப்பட்ட நிர்வாகியுமான மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, “நந்திகிராமம் யுத்தகளமாகிவிட்டது’ என்று கூறிய பிறகும் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார் முதல்வர். மாநில உள்துறைச் செயலரும் ஆளுநரைப் போலவே கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

நந்திகிராமத்தில் அப்புறப்படுத்தும் வேலைகள் நடந்துகொண்டு இருந்தபொழுது, எந்த நிருபரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. 1984-ல் தில்லியிலோ அல்லது 2002-ல் குஜராத்திலோ இந்த நிலை இருக்கவில்லை.

“நந்திகிராமத்தில் உள்ள கிராமங்களின் கட்டுப்பாட்டை மாவோயிஸ்டுகள் தமது கைகளில் எடுத்துக்கொண்டுவிட்டனர்; ஒரு மாநிலத்துக்குள்ளேயே அப் பகுதியில் தனி அரசை அவர்கள் ஏற்படுத்தியிருந்தனர்; மார்ச் மாதம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்ப அவர்கள் அனுமதிக்கவில்லை’ என்று கூறி, இப்போது நடந்திருக்கும் சம்பவங்களை மார்க்சிஸ்ட் தலைவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

நந்திகிராமத்தில் வேதியியல் தொழில்பேட்டையை அமைப்பதை எதிர்த்து முதன்முதலில் கட்சி ஆதரவாளர்களைத் திரட்டி போராட்டத்தைத் தொடங்கியது மார்க்சிஸ்ட் கட்சிதான். முதலில் மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு எதிரான மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டமாகத்தான் அது இருந்தது. பிறகுதான் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ், ஜமாத்-இ-உலேமா ஹிந்த், எஸ்யுசிஐ மற்றும் மாவோயிஸ்டுகள் ஆகியோர் நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து போராடிக்கொண்டு இருந்தவர்களுடன் இணைந்தனர்.

ஒரு பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இரு குழுக்கள் மோதிக்கொண்டதல்ல இங்கு பிரச்னை. ஒரு ஜனநாயக அமைப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் ஓர் அரசு செயல்பட்டு இருப்பதுதான் இங்கு பிரச்னை. சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தை நசுக்க மார்ச் மாதம் மாநில போலீûஸ மார்க்சிஸ்ட் அரசு பயன்படுத்தியபோது, துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியாயினர்; அது உயர் நீதிமன்றத்தால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.

எனவே, இப்போது போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸýக்குப் பதிலாகத் தனது கட்சித் தொண்டர்களையும் சமூகவிரோத சக்திகளையும் ஈடுபடுத்திவிடலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துவிட்டதுபோலும். போலீஸ் அதில் நேரடியாக ஈடுபடவில்லையென்றபோதிலும், வன்முறைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டவர்களுக்கு ஆதரவாக பகிரங்கமாக முதல்வரே பேசிய பிறகு, நிராயுதபாணியான அப்பாவி மக்களைக் காக்க வேண்டிய கடமையிலிருந்து முற்றிலுமாகத் தவறிவிட்டது போலீஸ்.

அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், தனது கட்டுப்பாட்டை அப் பகுதியில் மீண்டும் நிலைநாட்ட மார்க்சிஸ்ட் கட்சி நினைத்திருந்தாலும் சரி, கட்சிக்கு எதிராகச் சென்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்த்த நினைத்திருந்தாலும் சரி, அது இப்போது அக் கட்சிக்கு எதிர்விளைவை ஏற்படுத்திவிட்டுவிட்டது.

நந்திகிராமத்தில் உள்ள கிராமங்களை மீண்டும் கைப்பற்றி, அங்கு மார்க்சிஸ்ட் கட்சி தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டிவிட்டால், இப்போதைக்கு அதற்கு எதிர்ப்புக் குரல் எழுந்தாலும், இறுதியில் யதார்த்த நிலையை அனைவரும் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று அக் கட்சி கருதியிருக்கக்கூடும்.

நந்திகிராம வன்முறை குறித்து எதுவும் கூறாமல் மெüனமாக இருக்கிறது காங்கிரஸ். பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி போன்றவர்களின் வற்புறுத்தலால்தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இந்த வன்முறை குறித்து ஒரு தீர்மானம், அதுவும் மார்க்சிஸ்ட் பற்றி குறிப்பிடாமல் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆதரவாளராக இடதுசாரிகள் இல்லாதிருந்திருந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது தாக்குதல் தொடுப்பதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் விட்டிருக்காது, மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ்.

கோல்கத்தாவில் ஒரு லட்சம் பேர் நடத்திய மெüன ஊர்வலத்தில் எழுத்தாளர்களும் ஓவியர்களும் திரைப்பட நட்சத்திரங்களும் பங்கேற்று இருப்பதிலிருந்தே மக்களின் கோபம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர முடியும்.

இடதுசாரி முன்னணியில் இருந்து விலகிவிடவில்லையெனினும், மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணிக் கட்சிகளேகூட அதன் நடவடிக்கையை விரும்பவில்லை. புரட்சிகர சோசலிஸ்ட் சிறிய கட்சியாக இருந்தபோதிலும், ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களைத் திரும்பப் பெறப் போவதாக எச்சரித்தது.

நந்திகிராம கறையைக் கழுவ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீண்ட காலம் ஆகும். தேர்தலில் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 30 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கிறது அக் கட்சி. ஆனால், அதற்கு எதிராக உருவாகிக்கொண்டு இருக்கும் எதிர்ப்புக்கு ஒரு புதிய கோணத்தைக் கொடுத்திருக்கிறது நந்திகிராமம்.

ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் மீது அக்கறை கொண்ட கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி இனம் காணப்பட்டு இருந்தபோதிலும், அதுவும் தனது சொந்த குறுகிய நலனைக் கருத்தில் கொண்டு செயல்படக்கூடியதே என்பதைக் கடந்த இரு வாரங்களாக நடந்துவரும் சம்பவங்கள் காட்டிவிட்டன.

அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் அக் கட்சி எடுத்த நிலையை இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையையும் முடிவெடுக்கும் இறையாண்மை அதிகாரத்தையும் உறுதி செய்வதற்கான போராட்டமாகப் பலர் கருதினர்; அது மக்களில் குறிப்பிட்ட பகுதியினரிடம் அக் கட்சிக்கு நற்பெயரையும் பெற்றுத் தந்திருக்கும் நேரத்தில் இச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது அக் கட்சி.

தனது அதிகாரத்தை நிலைநாட்ட எந்த அளவுக்கு அக் கட்சி தரம்தாழ்ந்து செல்லும் என்பதை நந்திகிராம நடவடிக்கை காட்டிவிட்டது. அதைவிட முக்கியமாக, சட்டத்தின் ஆட்சிக்கும் ஜனநாயக முறைகளுக்கும் அக் கட்சி என்ன மதிப்பு கொடுக்கிறது என்பதையும் அச் சம்பவம் அம்பலப்படுத்திவிட்டது.

Posted in acquisition, Ashim Dasgupta, Ban, Bengal, Bharatiya Janata Party, BJP, Buddhadeb Bhattacharya, Calcutta, Centre for Indian Trade Union, CITU, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), CPI, CPI (M), CPI(M), CPI-ML, dead, Dinajpur, Exports, Finance, Government, Howrah, Kolkata, Land, Law, Left, Mamata, Mamata Banerjee, Mamta, Mamtha, Mamtha bannerjee, Marxism, Marxist, Marxist Communist, Marxist Leninist, Nandhigram, Nandigram, Natives, Oppression, Order, Panchla, Police, Property, Protest, Sealdah, SEZ, Singur, Socialism, Socialist Unity Centre of India, SUCI, TATA, TMC, tribal, Tribal People, Tribals, Trinamool, Trinamool Congress, Trinamul, Uttar Dinajpur, Violence, WB, West Bengal | 3 Comments »

CPI & Tribals protest against Tata steel plant in Chhattisgarh

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

பழங்குடியினர் பகுதியில் டாடா உருக்காலை: இந்திய கம்யூ. எதிர்ப்பு

ராய்ப்பூர், பிப். 27: சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் பகுதியில் டாடா நிறுவனம் உருக்காலை அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பஸ்தார் மாவட்டம் லோஹனிகுன்டா பகுதியில் டாடா நிறுவனம் உருக்காலை அமைக்க தங்கள் நிலத்தை தரவிரும்பாத மக்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது.

Posted in Bastar, Chhattisgar, Chhattisgarh, Communist, Communist Party of India, CPI, CPI(M), Industry, Marxist, Protest, Singur, TATA, Tata Steel, Tribals, WB, West Bengal | Leave a Comment »

India’s Tata Steel wins Corus with $12 bln offer

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

கோரஸ் நிறுவனத்தை வாங்குவதில் இந்தியாவின் டாடா வெற்றி

இந்தியாவின் மாபெரும் நிறுவனங்களில் ஒன்று டாடா
இந்தியாவின் மாபெரும் நிறுவனங்களில் ஒன்று டாடா

ஐரோப்பாவின் மிகப் பெரிய எஃகு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோரஸ் என்கிற நிறுவனத்தை வாங்கும் போட்டியில் இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான டாடா எஃகு நிறுவனம் வெற்றி கண்டுள்ளது.

பிரிட்டிஷ் எஃகு நிறுவனம் மற்றும் ஹீகுவென்ஸ் என்ற பிரிட்டிஷ்-டச்சு நிறுவனங்கள் இணைந்ததினால் உருவாக்கப்பட்ட கோரஸ் நிறுவனத்தை வாங்க டாடா நிறுவனத்திற்கும், பிரேசில் நாடின் சி எஸ் என் நிறுவனத்திற்கும் கடுமையான போட்டி இருந்தது.

கோரஸ் நிறுவனத்தை 11.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு வாங்க டாடா நிறுவனம் முன்வந்துள்ளது. உலக அளவில் ஒப்பிடுகையில், டாடா எஃகு நிறுவனம் ஒரு சிறிய எஃகு தயாரிக்கும் நிறுவனம்தான். இருந்த போதும் இதற்கு பெரிய டாடா வர்த்தக நிறுவனக் கூட்டமைப்பின் பின்புலம் இருக்கிறது.

இந்தியாவின் நான்கு மிகப் பெரிய நிறுவனங்களில் டாடாவும் ஒன்று, தவிர இந்தியாவில் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு வர்த்தகப் பெயரும் கூட.

எங்கும் டாடா என்பதே பேச்சு

உலக அளவிலான எஃகு வர்த்தகத்தில் ஈடுபடும் முயற்சியாக ஆங்கிலோ டச்சு நிறுவனமான கோரஸ் நிறுவனத்தை வாங்கியிருப்பதன் மூலம் இந்தியத் தொழில்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளது டாடா நிறுவனம்.

வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கிய நிகழ்வுகள் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன. ஜெர்மனி மருந்து நிறுவனம் பீட்டாபார்ம், பெல்ஜிய நிறுவனம் ஈவ்ஹோல்டிங் ஆகியவை இந்தியத் தொழிலதிபர்களால் முன்பு வாங்கப்பட்டன என்றாலும் அவற்றின் மதிப்பு ஏறக்குறைய 50 கோடி அமெரிக்க டாலர்கள்தான். ஆனால், கோரஸ் நிறுவனப் பங்குகளை மொத்தம் 1130 கோடி அமெரிக்க டாலர்களுக்கு இந்திய நிறுவனம் ஒன்று வாங்குவது இதுவே முதல்முறை. இதனால் டாடா நிறுவனம் இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு தகுதி பெற்றுள்ளது.

உலக எஃகு வர்த்தகத்தில் 56-வது இடத்தில் உள்ள டாடா நிறுவனம் (இதன் ஆண்டு உற்பத்தி 53 லட்சம் டன்), கோரஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் 5வது இடத்துக்கு வந்துள்ளது. இதனால் உலக அளவில் மிகப்பெரிய எஃகு நிறுவனமாக உருவெடுப்பதுடன், கோரஸ் நிறுவனத்தின் அதிநுட்ப உருக்கு தொழில்நுட்பத்தையும் டாடா நிறுவனம் பெறுகிறது. உலகச் சந்தையில் விற்பனையை அதிகரிப்பதுடன், மூலப்பொருள் வாங்குதல், சந்தைப்படுத்துதல் ஆகிய நடைமுறைச் செலவுகள் டாடா நிறுவனத்துக்குப் பெருமளவு குறைந்துவிடுகின்றன.

உலக எஃகு வர்த்தகத்தில் சென்ற ஆண்டு 9-வது இடத்தில் இருந்த கோரஸ் நிறுவனம் (ஆண்டு உற்பத்தி 182 லட்சம் டன்) தன்னை டாடா நிறுவனத்துக்கு விற்றுக்கொள்வதன் மூலம் உலக அளவில் அதிவேகமாக வளர்ந்துவரும் இந்தியச் சந்தையில் வெகு எளிதாக நுழைய முடியும்.

இந்த நிறுவனத்தை வாங்கியிருப்பதன் மூலம் டாடா நிறுவனத்துக்கு வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டாலும், சில தவிர்க்க முடியாத சுமைகளும் உண்டு. கோரஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 47,300 தொழிலாளர்களையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். மேலும் கோரஸ் ஓய்வூதிய நிதியம் மூலம் 1.65 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்த ஓய்வூதிய நிதி நல்ல நிலையில் இருப்பதால் இப்போதைக்கு டாடாவுக்கு பிரச்சினை கிடையாது.

கோரஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் சர்வதேச சந்தையில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியது மட்டுமன்றி, உள்நாட்டுச் சந்தையில் டாடா நிறுவனத்தின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ளது.

இந்தியச் சந்தையில் டாடா குழுமத்தின் 96 நிறுவனங்கள் அனைத்து வகையான நுகர்பொருள்களையும் விற்பனை செய்து வருகின்றன. இனி இந்தப் பொருள்களுக்கு உள்நாட்டுச் சந்தையில் அதிக வரவேற்பு இருக்கும். விற்பனை அதிகரிக்கும்.

மேற்கு வங்க மாநிலத்தில் குறைந்த விலை கார் தயாரிப்புத் தொழிற்சாலை தொடங்கும் பிரச்சினையில் டாடா நிறுவனத்துக்கு எதிராக கிளர்ச்சிகள் நடந்தன. டாடா நிறுவனத்தின் பொருள்களைப் புறக்கணிக்கும்படி திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி கூறினார். ஆனால் எதையெல்லாம் புறக்கணிப்பது? டாடா நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களின் பட்டியல் விரிவானது. தேயிலை, கைக்கடிகாரம், அணிகலன்கள், கார், பேருந்து, கணிப்பொறித் தொழில்நுட்பம், செல்போன், மருந்து உற்பத்தி என நீண்டுகொண்டிருந்த பட்டியலில் புறக்கணிக்கக் கூடிய பொருள்கள்-தங்களுக்குத் தேவை இல்லாதவை என்பதாக மட்டுமே இருக்க முடியும்.

டாடா நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் மதிப்பு 2,100 கோடி அமெரிக்க டாலர்கள். அதாவது இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதம்.

டாடா நிறுவன புகழ் கிரீடத்தில் வேறு சில முத்துகளும் உண்டு. தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் விடுப்பு வழங்குவது, தொழிலாளர் சேம நலநிதி ஆகியன சட்ட வடிவம் பெறுவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பாகவே அவற்றை 1920ல் நடைமுறைப்படுத்திய நிறுவனம் டாடா.

Posted in ABN AMRO, acquisition, Arcelor, Benjamin Steinbruch, Brazil, Companhia Siderurgica Nacional, Corus, Credit Suisse Group, CSN, Deutsche Bank, Esmark, Goldman Sachs, Hoogovens, India, Industry, Iron, J.P. Morgan, Lazard, M&A, Mamtha bannerjee, Minerals, Mittal Steel, MNC, Muthuraman, Rothschild, Singur, Standard & Poor's, Steel, steel maker, TATA, Tata Steel, TISCO, TMC, Trinamool Congress | Leave a Comment »

Car Wars: Maruti takes on Tata Motors

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

சிங்குரில் போராட்டத்தைத் தூண்டிவிடும் போட்டி நிறுவனத்தின் பெயரை வெளியிடத் தயாரா?: டாடாவுக்கு மாருதி சவால்

புது தில்லி, ஜன. 25: மேற்கு வங்க மாநிலம் சிங்குரில், டாடா கார் தொழிற்சாலைக்கு விளைநிலங்களை கையகப்படுத்தியதற்கு எதிரான போராட்டத்தை, எந்த போட்டி நிறுவனம் தூண்டி விடுகிறது என பெயரை வெளியிடத் தயாரா என்று டாடா நிறுவனத்துக்கு மாருதி கார் நிறுவனம் சவால் விடுத்துள்ளது.

டாடா நிறுவனஅதிபர் ரத்தன் டாடா எழுப்பிய இந்தப் புகார் குறித்து, மாருதி உத்யோக் நிறுவன நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜகதீஷ் கத்தர் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

டாடா எந்தப் போட்டி நிறுவனத்தைக் குறிப்பிடுகிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவருக்குத் தெரிந்திருப்பதால், அதை அவர் வெளியில் சொல்ல வேண்டும்.

போட்டியாளர்களின் திட்டங்களைக் குலைக்கும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபடுவது இல்லை. ஆரோக்கியமான போட்டியில்தான் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் என்றார்.

சிங்குர் ஆலையில் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ரூ.1 லட்சம் விலையிலான மக்கள் கார் சந்தைக்கு வந்தால் அது மாருதி நிறுவனத்தின் எம்-800 கார் விற்பனையை பாதிக்கும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஏனெனில், எம்-800 கார்தான் தற்போது நாட்டிலேயே மிகவும் விலை குறைவாக சுமார் ரூ.2 லட்சத்துக்குக் கிடைக்கிறது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜகதீஷ் கத்தார் கூறியதாவது: எம்-800 விற்பனைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இரு சக்கர வாகனங்களுக்கும் கார்களுக்கும் உள்ள இடைவெளியை, ரூ.1 லட்சம் விலையிலான கார், குறைக்கும் என்பதால், எம்-800-க்கு அது உதவிகரமாகவே இருக்கும் என்றார்

Posted in Auto Industry, Automotive, Business, Cars, Competition, Fights, Maruthi, Maruti, Maruti Udyog, Marutih, Ratan Tata, Singur, Suzuki Motor Corp, TATA, Tata Motors, Wars, WB, West Bengal | Leave a Comment »

Mamata’s hunger strike enters eleventh day over TATA car project Singur issue

Posted by Snapjudge மேல் திசெம்பர் 15, 2006

திசைமாறும் போராட்டம்

மம்தா பானர்ஜி 11 வது நாளாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் ஹூப்ளி மாவட்டத்தில் சிங்குர் என்ற இடத்தில் டாடா நிறுவனம் தொடங்கவுள்ள சிறு கார் தொழிற்சாலைக்காக விவசாயிகளை மாநில அரசு கட்டாயப்படுத்தி நிலத்தைக் கையகப்படுத்துகிறது என்பது மம்தாவின் குற்றச்சாட்டு.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய அரசின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அக்கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் 12,000 விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி 1000 ஏக்கர் நிலத்தை வாங்குவது நியாயமா? என்பது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கேள்வி.

இதனை மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ய மறுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் விரிவான “கட்டுரை-பதில்’ கொடுத்துள்ளார். “”மம்தாவின் குற்றச்சாட்டு உண்மையல்ல. அனைவரும் நிலத்தை விற்க ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர். சுமார் 9000 விவசாயிகள் ரூ.131 கோடி இழப்பீடு பெற்றுள்ளனர். இந்த நிலம் ஒரு போகம் விளையும் பூமிதான். சிங்குரில் விவசாய நிலங்கள் விற்கப்படுவது புதிதல்ல. கடந்த ஆண்டில் 572 பேர், 300 ஏக்கர் நிலத்தை விற்றிருக்கிறார்கள். சிங்குரில் நிலத்தை விற்க யாரும் விரும்பவில்லை, நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பது பொய்” என்று விரிவான ஆதாரங்களுடன், புள்ளிவிவரங்களுடன் பதில் கொடுத்துள்ளார். இனி, சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அனுமதிக்கப் போகும் மாநிலங்கள், பிருந்தா காரத்தின் பதில்களை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால் ஆச்சரியமில்லை.

மாநில அரசுக்கு எதிரான போராட்டத்திலிருந்து இப்போது பிரச்சினை வர்த்தக திசைக்குப் பாய்ந்துள்ளது. டாடா பொருள்களைப் புறக்கணிப்போம் என்று கூறியுள்ளார் மம்தா.

விவசாயிகளுக்கு ஆதரவாக, மாநில அரசுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், ஒரு மாநிலத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனத்துக்கு எதிரான போராட்டமாக மாறியிருப்பது யாரும் எதிர்பார்க்காதது. இந்த போராட்டத்துக்கு முன்பே, நிருபர்களிடம் பேட்டி அளித்த மம்தா, தாங்கள் டாடா நிறுவனத்தையோ தொழில்மயமாக்கலையோ எதிர்க்கவில்லை என்றார்.

டாடா நிறுவன பொருள்களைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்படும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு டாடா கார் தொழிற்சாலையின் பங்குகளைத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் அது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

சிங்குர் பகுதியில் நிலத்தை இழப்போர், வேலையிழக்கும் விவசாயத் தொழிலாளர்கள் என சுமார் 35000 பேர் வேறு இடங்களுக்குச் செல்ல நேரிடும். விவசாயத்தை மட்டுமே அறிந்த, வேறு தொழில் தெரியாத இந்த ஏழை மக்களின் கைகளில் இழப்பீட்டுத் தொகை வெகுசீக்கிரத்தில் கரைந்துவிடும். மீண்டும் வறுமையில் வாடுவார்கள்.

டாடா நிறுவனம் பல தொழில்களில் முன்னணியில் உள்ள பெரிய நிறுவனம். இரும்புத் தொழிலை உலக அளவில் விரிவு செய்யவுள்ளது. நிலத்தை விற்கும் மற்றும் வேலைவாய்ப்பை இழக்கும் விவசாயிகளின் இழப்பீட்டுத் தொகையில் 75 சதவீதத்தை சம-பங்குகளாக டாடா நிறுவனம் வழங்க வலியுறுத்தினால், அது உண்ணாவிரதம், புறக்கணிப்பு இவற்றைவிட உண்மையான காந்தியமாக அமையும்.

1000 ஏக்கரில் சிங்குர் கார் தொழிற்சாலை நில குத்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது டாடா நிறுவனம்

கோல்கத்தா, மார்ச் 10: மேற்கு வங்க மாநிலம் சிங்குரில், ரூ. 1 லட்சம் சிறிய கார் தொழிற்சாலை அமைப்பதற்கான 997 ஏக்கர் நில குத்தகை ஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டது.

ஒப்பந்தத்தில் டாடா நிறுவனம் சார்பில் அதன் துணைத் தலைவர் (நிதி) ஆர்.எஸ். தாக்குர், மேற்கு வங்க தொழில் வளர்ச்சிக் கார்ப்பரேஷன் சார்பில் மாநில தொழில்துறைச் செயலர் சபியாசச்சி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

நிலக்குத்தகை ஒப்பந்த விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இந்தக் கார் தொழிற்சாலைத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக பயிர் செய்யும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறி திரிணமூல் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, 25 நாள்களுக்கு மேல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

உண்ணாவிரதத்தை மம்தா பானர்ஜி ஜனவரி 25-ம் தேதி கைவிட்ட ஒரு வாரத்தில், கார் தொழிற்சாலை அமைக்க நிலத்தை சமன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் டாடா நிறுவனத்தை மேற்கு வங்க அரசு அனுமதித்தது.

திரிணமூல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் போராட்டம் படிப்படியாக வலுவிழந்த நிலையில், நில குத்தகை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

கையகப்படுத்தப்பட்ட 997.11 ஏக்கர் நிலத்துக்காக ரூ. 120 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு மத்தியில் ரூ. 1 லட்சம் கார் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Posted in Agriculture, Communism, Communists, CPI, CPI (M), deal, Displaced, Economy, Factory, Farmers, Farming, Industrialization, Kolkata, Mamata Banerjee, Mamtha, Marxist, Marxist Communist, Medha Patkar, peasants, Pozhichaloor, Protest, residents, Singur, Strikes, Tamil, TATA, TMC, Trinamool Congress, Trinamul, WB, West Bengal, workers | 1 Comment »

Medha Patkar likens Left and Tata Motors Project with Bush and Iraq

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006

சமூக சேவகி மேதா பட்கர் கைது

கோல்கத்தா, டிச. 3: மேற்குவங்க மாநிலம், சிங்குரில் டாடா கார் நிறுவனத்துக்காக நிலம் கையகப்படுத்தும் இடத்தைப் பார்வையிட சனிக்கிழமை சென்ற சமூக சேவகி மேதா பட்கர் கைது செய்யப்பட்டார்.

சிங்குரில் கார் நிறுவனத்துக்காக 1000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், நிலங்களை அரசு கட்டாயப்படுத்தி கையகப்படுத்துவதாகவும், அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை போலீஸôர் துன்புறுத்துவதாகவும் தகவல்கள் வந்தன.

இதனால், நிலைமையை ஆராய்வதற்காக மேதா பட்கர், மனித உரிமைக்காக போராடும் தீபங்கர் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் சிங்குருக்கு சென்றுகொண்டிருந்தனர். காசர்பேரி அருகே சென்றபோது அவர்களை போலீஸôர் தடுத்துநிறுத்தினர்.

இதையும் மீறி செல்ல முயன்ற அவர்களை கைதுசெய்தனர்.

———————————————————————————————-

டாடா கார் ஆலைக்கு எதிர்ப்பு: கிராமத்தினர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு

சிங்குர் (மேற்குவங்கம்), டிச. 3: டாடா நிறுவனத்தின் சிறிய கார் தயாரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மீது போலீஸôர் ரப்பர் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் காயமடைந்தனர்.

மேற்குவங்க மாநிலம் சிங்குர் பகுதியில் ஜாய்மொல்லா கிராமத்தில் டாடா சிறிய கார் தயாரிப்பு ஆலைக்காக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் ஆலையைத் தொடங்குவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி திரிணமூல் காங்கிரஸ் தலைமையில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சனிக்கிழமை முள்வேலி அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கிராம மக்கள் சிலர் போலீஸôர் மீது கற்களை வீசினர். அவர்களைக் கலைக்க போலீஸôர் தடியடி நடத்தினர். இதில் 5 பேர் காயமடைந்தனர். இதனால் பதற்றம் அதிகமாகி மேலும் பலர் அங்கு வரத்தொடங்கினர். இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸôர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர், ரப்பர் குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கியால் சுட்டனர்.

போலீஸôர் தங்களின் வீடுகளுக்குள் புகுந்து அடித்ததாகவும், வைக்கோல் போருக்கு தீ வைத்ததாகவும் கிராமத்தினர் சிலர் கூறினர். டிஐஜி தலைமையில் பெரும் போலீஸ் படை அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.

———————————————————————————————-

மேற்குவங்க பேரவையில் திரிணமூல் வன்முறை: ‘ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’ – சோம்நாத் சட்டர்ஜி

கோல்கத்தா, டிச. 3: மேற்கு வங்க சட்டப்பேரவைக்குள் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அரங்கேற்றிய வன்முறைகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும் என மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் சிங்குரில் டாடா கார் தொழிற்சாலை அமைக்கிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு கார் தயாரித்து விற்பனை செய்ய டாடா முடிவெடுத்துள்ளது. இந்தத் தொழிற்சாலைக்கு மேற்கு வங்க மாநில அரசு நிலம் கையகப்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்திற்கு விளைநிலத்தை கையகப்படுத்தக் கூடாது என திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் தவிர்க்க முடியாமல் சிறிதளவு விளைநிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது என மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்துள்ளது. பெருமளவு வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்தத் திட்டத்தை மக்கள் ஆதரிப்பதாகவும் விவசாயிகளை தூண்டிவிட்டு குளிர்காய திரிணமூல் காங்கிரஸ் முயற்சி செய்வதாகவும் மாநில அரசு கூறியது.

இந்நிலையில் வியாழக்கிழமை பேரவைக்குள் அத்துமீறி மம்தா நுழைந்தார். அதைத் தொடர்ந்து அவரது கட்சி உறுப்பினர்கள் பயங்கர வன்முறையை அரங்கேற்றினர். மைக்குகளை பிடுங்கி தாக்கினர். நாற்காலிகள் பெஞ்ச்சுகளை உடைத்து நொறுக்கினர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலை நேரில் பார்வையிட வரும்படி மக்களவைத் தலைவருக்கு மேற்கு வங்கப் பேரவைத் தலைவர் ஹாசிம் அப்துல் ஹலீம் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று சனிக்கிழமை பேரவையை சோம்நாத் சட்டர்ஜி பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது:

பேரவைக்குள் நடந்துள்ள தாக்குதல் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். காட்டுமிராண்டித்தனமாக செயல்படும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றுவது அனுமதிக்கக் கூடியதுதான்.

ஆனால் சம்பந்தப்பட்ட பேரவைகளின் தலைவர்கள்தான் இதுகுறித்து முடிவு செய்யவேண்டும். பேரவைத் தலைவர்களின் அமைப்பில் இதுகுறித்து விவாதித்து முடிவெடுப்போம்.

மேற்கு வங்க பேரவைக்கு பெருமைமிகு வரலாறும் பாரம்பரியமும் உண்டு. பேரவை என்பது மக்களுக்கு சொந்தமானது. அரசுக்கு சொந்தமானதல்ல என்பதை தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசுக்கு எதிராக குறைகள் இருக்கலாம். ஆனால் பேரவைமீது தாக்குதல் நடத்தி அதை நியாயப்படுத்த முடியுமா? பேரவையை பாதுகாக்க முடியாவிட்டால் மேற்கு வங்க ஜனநாயகத்தின்மீது கறைபடிந்து விடாதா?

பேரவை நடத்தை விதிகளை கடைப்பிடிக்காத உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களின் நம்பிக்கையை அவமதிக்கிறார்கள். உறுப்பினர்களின் இத்தகைய நடவடிக்கைகள்தான் சாதாரண கிரிக்கெட் பயிற்சியாளர்கூட மக்கள் பிரதிநிதிகளை நோக்கி குறைகூறும் நிலையை உருவாக்குகிறது என்றார் சோம்நாத்.

Medha Patkar Interview in Kalki (March first week issue)

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க அண்மையில் கன்னியாகுமரிக்கு வந்திருந்த சமூகப் போராளி மேதாபட்கர். நமது கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்தார்…

நாடு முழுவதும் ஏற்கெனவே எட்டு அணு உலைகள் உள்ள
நிலையில் கூடங்குளத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

‘‘இந்தியாவில் எங்கெல்லாம் அணு உலைகள் இயங்குகின்றனவோ, அங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கூடங்குளத்தை மட்டுமல்ல, அனைத்து அணு உலை நிலையங்களையும் தடைசெய்ய வேண்டும் என்பதே எங்கள் போராட்டத்தின் நோக்கம். அதன் தொடர்ச்சியாக, வரும் மார்ச் 19ஆம் தேதி புதுதில்லி ஜந்தர் மந்திரில் அணு உலை எதிர்ப்பு நடவடிக்கை ஒரு தொடர் போராட்டமாக நடக்க உள்ளது. அதற்கு முன்பான அடையாள எதிர்ப்புதான் கூடங்குளத்தில் நடைபெறுகிறது. அணு ஆயுதங்களும், அணுசக்தியும் நாட்டுக்குப் பெரும் ஆபத்து. ஜார்க்கண்ட் மாநிலம் சடுகுடாவில் யுரேனியம் எடுப்பதால் அங்குள்ள ஆதிவாசி மக்கள் புற்றுநோய், வாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் பலவும் அணு ஆயுத ஒப்பந்தத்தைப் புறக்கணித்து வரும் நிலையில்
அமெரிக்காவுடன் நாம் கையெழுத்துப் போட்டுள்ளது தவறு. அதைத் தவிர்த்து, ‘அணு உலை’ என நினைவுச் சின்னமாக்குவதற்கு ஆவன செய்யலாமே!’’

சிங்கூர் பிரச்னையில் உங்கள் போராட்டமும், அரசின் அணுகுமுறையும் எதிரெதிர் திசைகளில் உள்ளனவே?

‘‘மேற்கு வங்காளத்தின் தொழில் துறை அமைச்சர் நிரூபன்சென்கூட எங்கள் தரப்பு நியாயத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் என்ன செய்வது? அதை அமல்படுத்தும் அதிகாரம் அவரிடம் இல்லையே. காரணம், அரசுக்குப் பெரும் பணக்காரர்களின், ஒப்பந்தக்காரர்களின் பணம் தேர்தல் நேரத்தில் தேவைப்படுகிறதே!

சிங்கூர் பிரச்னையின்போது மேற்கு வங்கக் காவல்துறை என்னை ஒரு சமூக விரோதியைப் போல் நடத்தியது. அன்றைய ஜெயலலிதாவின் காவல்துறையையும், நரேந்திர மோடியின் காவல்துறையையும் விட புத்ததேவின் காவல்துறை நடவடிக்கை மோசமானது. ஒரே வாரத்தில் என்னை மூன்று முறை கைது செய்தார்கள். கொல்கத்தாவுக்கு உள்ளே வரக்கூடாது என்றார்கள். கொல் கத்தாவுக்கு வெளியே என் நண்பர் இல்லத்தில் இருந்தேன். அங்கேயும் வந்து கைது செய்தார்கள். நான் நீதிமன்றத்தை நாடினேன். என்னைக் கைது செய்தது தவறு என்றது நீதிமன்றம். மேற்கு வங்காளத்தில் நான் எங்கும் சுதந்திரமாகச் செல்லலாம் என்றது.

சிங்கூரில் தினம்தோறும் மோதல்கள் ஏற்படுகின்றன. நிலத்தை
விற்றவர்கள், நிலத்தை விற்காதவர்கள் எனப் பிளவுபட்டுக்
கிடக்கிறார்கள். புத்த தேவ் பட்டாச்சாரியாவை அவர் கட்சியினரே சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். அவர்களே போராட்டத்தில் ஈடுபட்டது, தொழிற்சங் கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது,
மாநிலத்தில் ஐ.டி. துறை உட்பட பல்வேறு துறைகளை ஸ்தம்பிக்கச் செய்தது எல்லாம் எங்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றிதான்.’’

இன்றைக்கு, பெரும் நகரம் முதல் சிற்றூர் வரை விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்படுகின்றனவே…

‘‘இது ஒரு சமூகக் கொடுமை. எதிர்கால விளைவு பற்றித் தெரியாமல் நடக்கும் அக்கிரமம். நம்முடைய விவசாய விளைநிலங்கள் அரசின், அதிகாரவர்க்கத்தின், ஒப்பந்தக்காரர்களின் வேட்டைக் காடுகளாக மாறி வருகின்றன. ஒரு விவசாயியின் விவசாயத்தில் முதலீடு அதிகம். ஆனால், விளைபொருட்களுக்கு அதற்கான விலை இல்லை. கொள்ளை வியாபாரிகள் விவசாயிகளின் வறுமைச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அவர்களுடைய நிலத்தைக் குறைந்த விலைக்கு வாங்கிவிடுகின்றனர். விவசாயியின் ஏழ்மை நிலையைப் போக்க வேண்டிய அரசு, அதிகாரத் தரகர்களுக்கு ஆதரவாகக் செயல்படுகிறது.’’

Posted in Agriculture, Automotive, Becharam Manna, Cars, Communism, Communist, Communist parties, Communists, CPI, CPI (M), CPI(M), Dankuni, Factory, Farming, Farmlands, Hooghly, Industry, Interview, Kalki, Koodangulam, Koodankulam, Mamata Banerjee, Medha Patkar, Narmada Bachao Andolan, Nuclear, peasants, Rabindranath Bhattacharya, Singur, Singur Krishijami Bachao Committee, Somnath, Somnath Chatterjee, Tata Motors Project, TMC, Trinamool Congress, West Bengal | Leave a Comment »