Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Simbhu’ Category

Did Simbu went to Hyderabad to meet Nayanthara for Valentines Day?

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

தேடி வந்த சிம்பு: தவிர்த்த நயன்தாரா

சென்னை, பிப். 15: ஹைதராபாத்திற்கு தன்னை பார்க்க வந்த சிம்புவை பார்க்காமல் இருக்க படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டு கேரளா சென்றார் நயன்தாரா.

நடிகர் சிலம்பரசனுக்கும் நயன்தாராவுக்கும் வல்லவன் படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காதல் படம் வெளியாகி நூறு நாளை தொடுவதற்குள் முறிந்து விட்டது. தற்போது தமிழ் படங்களில் நடிக்காமல் தெலுங்கில் கவனம் செலுத்தும் நயன்தாரா ‘துளசி’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிம்புவுடன் நெருக்கமாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வந்தது. இது நயன்தாராவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என வதந்தி பரவியது. ஆனால் வதந்தி வந்த போது அவர் படப்பிடிப்பில் இருந்தார்.

இந்நிலையில் காதலர் தினத்திற்கு முதல்நாள் சிம்பு நயன்தாராவை தேடி ஹைதராபாத் சென்றார். சிம்பு வந்திருக்கும் செய்தி அறிந்து பார்க்க மறுக்க, நயன்தாரா தங்கியிருக்கும் ஓட்டலுக்கே சென்று காத்திருந்தார் சிம்பு. ஆனால் நயன்தாராவோ படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு கேரளா பறந்து விட்டார்.

சிம்புவை தவிர்ப்பதற்கே நயன்தாரா கேரளா சென்று விட்டதாக தெலுங்கு திரையுலகத்தில் பேசப்படுகிறது. ஆனால் நயன்தாரா இது பற்றி கூறும் போது ”தமிழ் ரசிகர்களிடம் எனக்கு இருக்கும் மதிப்பை கெடுக்க ஒரு சிலர் சதி செய்கிறார்கள். என்னோட குடும்பத்தாருடன் சந்தோஷமாக இருக்கவே கேரளா வந்துள்ளேன். என்னைப் பற்றி வரும் வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.” என்றார்.

சிம்புவோ ”நயன்தாராவை பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அமெரிக்காவிலிருந்து வந்த உடன் போயிருப்பேன். இப்போது ஹைதராபாத் சென்று பார்க்க வேன்டிய அவசியம் எனக்கு இல்லை” என்றார்.

Posted in Heroine, Intimate, Kisu Kisu, Kollywood, Love, Manmadhan, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Pictures, Rejection, Rumour, Silambarasan, Simbhu, Simbu, Suicide Attempt, Tamil Actors, Tamil Actress, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Tamil Stars, Telugu, Tollywood, Tualsi, Valentines Day, Vallavan, Vambu | 2 Comments »

Reema Sen refuses to act with Jeyam Ravi in ‘Dham Thoom’

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

“தாம் தூம்” படத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்க ரீமாசென் மறுப்பு

சென்னை, ஜன. 31-

வல்லவன் படத்தில் சிம்புவுடன் நடித்து சர்ச்சை ஏற்படுத்தியவர் ரீமாசென். பாடல்காட்சியில் ஆபாசமான ஆடையை உடுத்த மறுத்து படப்பிடிப்பில் இருந்து வெளியேறினார். பிறகு சமரசப்படுத்தி நடிக்க வைத்தார்கள்.

படம் ரிலீசான பிறகும் தனது முக்கியத்துவத்தை குறைத்து விட்டதாக குறைப்பட்டார். அது போல் தற்போது அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள “தாம்தூம்” படத்திலும் பிரச் சினை கிளப்பியுள்ளார்.

இந்த படத்தில் ஜெயம்ரவி கதாநயாகனாக நடிக்கிறார். ஜீவா இயக்குகிறார். இதில் ஜெயம்ரவிக்கு டாக்டர் வேடம்.

இதில் ஜெயம்ரவியுடன் நடிக்க ரீமாசென் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு சம்பளத்தில் அட்வான்ஸ் தொகையும் வழங்கப்பட்டது. வக்கீல் வேடத்தில் அவர் நடிப் பதாக இருந்தது.

இதற்காக படப்பிடிப்பு நடத்த வேண்டிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டன. போட்டோ ஷூட்டும் முடிந் துள்ளது.

இந்த நிலையில் தாம்தூம் படத்தில் நடிக்க மறுத்து ரீமாசென் விலகிக் கொண்டார். அட்வான்ஸ் தொகையையும் திருப்பி கொடுத்து விட்டார்.

தாம்தூம் படத்தில் ரீமாசென் தவிர இன்னொரு கதாநாயகியும் நடிக்கிறார். பாடலுக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

ரீமாசென்னுக்கு சீரியஸ் வேடம் என்பதால் அவருக்கு பாடல் காட்சி ஒதுக்கப்படவில்லை. ஒரு பாடலாவது தனக்கு ஒதுக்க வேண்டும் என்று ரீமாசென் வற்புறுத்தினார். கதாபாத்திரத்தின் சீரியஸ் அடிபட்டு விடும் என்று டைரக்டர் மறுத்து விட்டார். கோபம் அடைந்த ரீமாசென் படத்தில் இருந்து விலகிக் கொண்டாராம்.

Posted in Dhaam Thoom, Gossip, Harris Jeyaraj, Jayam Ravi, Jeeva, Jeyam Ravi, Kisu Kisu, Nayanthara, Raiyma Sen, Reema Sen, Rumour, Silambarasan, Simbhu, Simbu, Tamil Actress, Tamil Cinema, Tamil Movies, Vallavan | Leave a Comment »

‘Why did we split’ – Nayan Thara chats about Simbu

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

`கதறி அழுதேன், கத்தியால் கிழித்தேன் என்று களங்கப்படுத்துவதா?’ நடிகர் சிம்புவுக்கு நயன்தாரா கண்டனம்

நயன்தாராவும், சிம்புவும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஒன்றாக சுற்றினார்கள். விரைவில் திருமணம் செய் வார்கள் என்றும் பேசப்பட்டது.

ஆனால் திடீரென்று காதல் முறிந்தது. இருவரும் பிரிந்து விட்டதாக நயன்தாரா கூறினார். சிம்புவுக்கு நயன் தாரா முடிவு அதிர்ச்சி அளித்தது.

அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வரும் அவர் இதுபற்றி கூறுகையில், “நயன்தாராவிடம் இரண்டு முறை பேச முயற்சித் தேன். முடியவில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்று தெரிவித்தார். நீ இல்லை என்றால் உயிரை விட்டு விடுவேன் என்று கையை கிழித்துக் கொண்டதையும் கட்டிப்பிடித்து கதறியதையும் நயன்தாரா வேண்டுமானால் மறந்து இருக்கலாம். நான் மறக்கவில்லை என்றும் சிம்பு கூறினார்.

ஐதராபாத்தில் படப்பிடிப் பில் இருக்கும் நயன்தாராவிடம் மாலைமலர் நிருபர் இன்று செல்போனில் தொடர்பு கொண்டு சிம்பு பேட்டி குறித்து கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:-

சிம்பு பேட்டி பற்றி செல் போனில் என்னிடம் தெரி வித்தனர். அவரைப் போல் நானும் நிறைய விஷயம் சொல்லலாம். ஆனால் சொல்ல விரும்பவில்லை.

சிம்புவும் நானும் பிரிந்து விட்டோம் என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன். இது தவிர அவருக்கு எதிராக அவமரியாதையான வார்த்தை எதையும் கூறவில்லை.

அவருடன் பழகியதால் பட வாய்ப்புகள் குறைந்தது என்று நான் சொன்னதாக கூறியுள்ளார். அப்படி நான் சொல்லவே இல்லை. அவராக அப்படி நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பாக முடியாது.

தேவை என்றால் நானும் அழுது இருக்கலாம். அவர் அப்படி செஞ்சிருக்கார் இப்படி பேசியிருக்கார் என்று பத்திரிகைகளில் சொல்லி இருக்கலாம். அது மாதிரி சொல்லவே இல்லை. சிம்பு வும் நீங்களும் பிரிந்து விட்டீர்களா என்று நிருபர்கள் கேட்டனர். ஆமாம் பிரிந்து விட்டோம் என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன்.

பிரிவதற்கு நிறைய விஷ யங்கள் இருக்கிறது. அதை யெல்லாம் சொல்வது மரியாதை அல்ல என்று கருதி னேன். இன்று அவர் என்ன வெல்லாமோ சொல்லி இருக் கிறார். நானும் அது போல் மரியாதையை விட்டு பேச மாட்டேன்.

நானும் அவரும் என் னென்ன பேசினோம் எங்கள் இருவருக்குள்ளும் என்னென்ன நடந்தது என்பதை பொது ஜனங்களுக்கு தெரிவிக்க அவசியம் இல்லை.

இருவரும் சேர்ந்து நடித் தோம். பழகினோம். பிரிந் தோம். பிரிவதற்கு 1001 கார ணம் இருக்கலாம். ஒவ்வொன் றையும் சொல்ல முடியாது.

நான் கதறி அழுதேன். கத்தியால் கையை கீறிக் கொண்டேன் என்று சிம்பு கூறியுள்ளார். அவரைப் பற்றி சொல்லவும் என்னிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது.

இருவர் காதலிக்கும் போது நல்ல விஷயங்களும் நடக்கும். சண்டையும் நடக்கும். அது எனக்கும் சிம்புவுக்கும் உள்ள விஷயம். கத்தியால் கிழித்து இருக்கலாம் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம். அவற்றை வெளிப் படுத்துவது நாகரீகமாகாது.

சிம்புவை பிரிந்ததற்கு 1000 பேர் காரணம் கேட்டனர். நான் ஒரு பொண்ணு. ஒரு பொண்ணு சொன்னால் நம்புவார்கள். எல்லாவற்றையும் சொல்லி இருக்கலாம். ஆனால் சொல் லாமல் தவிர்த்தேன். அதுதான் எனக்குள்ள மரியாதை.

இவ்வாறு நயன்தாரா கூறினார்.

சிம்பு மீது நயன்தாரா பாய்ச்சல்

சென்னை, பிப். 9: நடிகை நயன்தாராவும் நடிகர் சிம்புவும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் வெளியானதால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  “சிம்புதான் இதை வெளியிட்டிருப்பார்; அவரது தவறான புத்தியை இது வெளிப்படுத்துகிறது“ என நயன்தாரா கூறியிருக்கிறார்.

Ôவல்லவன்Õ படத்தில் நடிக்கும்போது சிம்புவும் நயன்தாராவும் நெருக்கமாக பழகினர். அதில் ஒரு முத்தக்காட்சியிலும் நடித்தனர். வெளிநாடுகளுக்கு ஜோடியாக சென்று வந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் வல்லவன் படம் வெளியான சில நாட்களில் அவர்களுக்குள் மன வேறுபாடு ஏற்பட்டது.

Ôசிம்புவுடன் உறவு முறிந்தது. இனி அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்Õ என்று நவம்பர் மாதம் நயன்தாரா ஒரு பேட்டியில் அறிவித்தார். அப்போது அமெரிக்கா சென்றிருந்த சிம்பு, சென்னை திரும்பியதும், Ôஇனி நயன்தாரா வாழ¢க்கையில் குறுக்கிடமாட்டேன். அவர் எங்கிருந்தாலும் வாழ்கÕ என்றார்.

இந்த முறிவுப் பிரகடனம் முடிந்து ஒரு மாதமான நிலையில் இப்போது இன்டர்நெட்டில் இந்த நட்சத்திர ஜோடியின் அன்னியோன்யமான படங்கள் வெளியாகியுள்ளன. இருவரும் கன்னத்துடன் கன்னம் வைத்து சிரிப்பது போலவும், இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடுவது போலவும் படங்கள் உள்ளன.

இது குறித்து கேட்க சிம்புவை தொடர்பு கொண்டபோது அவர் மொபைலை  எடுக்கவில்லை. அவரது தந்தை டி.ராஜேந்தர், Ôபோலிப் படங்களை நிஜம்போல காட்டும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லைÕ என்றார்.

நயன்தாரா கூறியதாவது:

சிம்பு எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொண்ட பிறகுதான் அவரை விட்டு விலகினேன். இருவரும் பழகியபோது அடிக்கடி என்னை போட்டோ எடுப்பார். பேப்பர் படிப்பது போல, பல் துலக்குவது போல, சோபாவில் அமர்ந்திருப்பது போல என்று பல கோணங்களில் படங்கள் எடுத்திருக்கிறார். அதையெல்லாம் அவ்வப்போது அழித்துவிட்டதாக கூறுவார்.

அது பொய் என்று இப்போது தெரிகிறது. அவர்தான் இந்த படங்களை வெளியிட்டிருக்க முடியும். முத்தம் போட்டோ எங்கே எப்போது எடுத்தார் என்று தெரியவில்லை. ஒரு பெண் என்றும் பாராமல் என் படத்தை இப்படி உலவ விட்டிருப்பது அவரது தவறான புத்தியை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு நயன்தாரா கூறினார்.

Posted in Allegation, Camera, Cellphone, Gossip, Hotel, Kiss, Manmadhan, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Photos, Pictures, Room, Rumor, Rumour, Sex, Silambarasan, Simbhu, Simbu, T Rajendar, T Rajendhar, Tamil Cinema, Tamil Movies, Usha Rajenthar, Vallavan, Vijaya T Rajendar | 12 Comments »