Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Sheikh Hasina’ Category

Bangladesh’s controversial election commission members resign en masse

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

வங்கதேச தேர்தல் ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்கள் ராஜினாமா

வங்கதேசம்
வங்கதேசம்

வங்காளதேசத்தில் பிரதான அரசியல் கூட்டணிகளில் ஒன்றின் பல மாத கால அழுத்தத்திற்குப் பிறகு அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்களும் தங்களது பதவியினை ராஜினாமா செய்து விட்டார்கள்.

இந்த ஐந்து பேரும் தேர்தல் ஆணைய உறுப்பினர்களாக இருக்கும் வரை தாங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பிரதான கூட்டணி ஒன்றின் தலைவியும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

இன்றைய ராஜினாமாக்கள், புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ஒரு தேர்தல் ஆணையத்தின் கீழ் பொதுத் தேர்தல்கள் நடைபெற வழி வகை செய்யும். வாக்குப் பதிவில் மோசடி செய்தனர் என்கின்ற குற்றச்சாட்டை இந்த ஐந்து ஆணையர்களும் எதிர்நோக்கியிருந்த நிலையில், ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


வங்காளதேசத்துக்கு தேர்தல் ஜனநாயகம் பொருந்தாது என்கிறார் அந்த நாட்டு இராணுவத் தளபதி

வங்காளதேசத்தை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கம் இல்லை என்கிறது இராணுவம்
வங்காளதேசத்தை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கம் இல்லை என்கிறது இராணுவம்

வங்காளதேசத்தில் மோசமான நிர்வாகத்தைச் சமாளிப்பதற்கு புதிய பாணியிலான ஜனநாயகம் ஒன்று தேவை என்று அந்த நாட்டின் இராணுவத் தளபதி, லெப்டினண்ட் ஜெனரல் மூயின் அஹ்மட் கூறியுள்ளார்.

தேர்தல் மாதிரியிலான ஜனநாயகத்தில் ஊழல் பரவி, அதனால் ஆட்சி பாதிக்கப்படும் என்று கூறிய அவர் அப்படியான ஒன்றை தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இராணுவ ஆதரவிலான இடைக்கால அரசாங்கத்தின் முக்கிய நோக்கம், அங்கு ஒரு நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்துவதே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குறித்த கால எல்லை குறித்துக் கருத்துக் கூற அவர் மறுத்துவிட்டார்.


Posted in Army, autocrat, Awami League, Bangladesh, Bangladesh Nationalist Party, CEC, Chief Election Commissioner, defence, Defense, Democracy, Democratic, election commission, executive, Fakhruddin Ahmed, Govt, Iajuddin Ahmed, interim government, Judiciary, Khaleda Zia, Legislature, M A Aziz, Mahfuzur Rahman, Military, President, Republic, Rule, Sheikh Hasina | Leave a Comment »

Sheikh Hasina vs Khaleda Zia – Bangladesh Politics: Iajuddin Ahmed

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

வங்கதேசத் தேர்தல்

வங்கதேசத்தில் பொருளாதார நிபுணர் ஃபக்ருதீன் அகமது தலைமையில் புதிய இடைக்கால நடுநிலை அரசு பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து அந்நாட்டில் அமைதி திரும்பி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு புதிய தேதியை இந்த அரசு விரைவில் அறிவிக்கலாம். அதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டியுள்ளது.

வங்கத்தேசத்தை ஆண்டு வந்த காலிதா ஜியா அரசின் பதவிக்காலம் கடந்த அக்டோபரில் முடிவடைந்தது. அப்போதிருந்தே அந்நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. வங்கதேச அரசியல் சட்டப்படி அரசின் பதவிக்காலம் முடிவடைந்ததும் அந்த அரசு பதவி விலகி, நடுநிலை அரசு அமைக்கப்பட்டாக வேண்டும். இடைக்கால நடுநிலை அரசின் கீழ்தான் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், வங்கத்தேச அதிபர் இயாஜுதின் அகமது கடந்த அக்டோபரில் தம்மையே அந்த நடுநிலை அரசின் தலைவராக அறிவித்துக் கொண்டார். இயாஜுதின் அதுவரை பிரதமராக இருந்த காலிதா ஜியாவுக்கு மிகவும் நெருக்கமானவர். ஆகவே அவர் தலைமையிலான அரசை நடுநிலை அரசாக ஏற்க முடியாது என்று எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவரான ஷேக் ஹசீனா அறிவித்தார். ஜன.22-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட தேர்தலில் பங்கு கொள்ள மாட்டோம் என்று ஹசீனா தலைமையிலான 15 கட்சிகள் கூட்டணி அறிவித்தது. அத்துடன் போராட்டத்தையும் துவக்கியது.

வாக்காளர் பட்டியலிலிருந்து போலி வாக்காளர்களை நீக்க வேண்டும். புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிக் கூட்டணி கோரியது.

கடந்த இரண்டரை மாதங்களாக எதிர்க்கட்சிக் கூட்டணியினர் வேலை நிறுத்தம், முற்றுகைப் போராட்டம் என அடுத்தடுத்து கிளர்ச்சிகளை நடத்தினர். ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினரிடையே நடந்த மோதலில் 40-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

தேர்தல்கள் முறையாக நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன், கனடா முதலான நாடுகள் வங்கதேச அதிபர் மீது நிர்பந்தம் செலுத்தின. ஆரம்பத்தில் அசைந்து கொடுக்காமல் இருந்த அதிபர், நடுநிலை அரசின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அடுத்து, நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தேர்தல் ஒத்திப் போடப்பட்டது. பல அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்துதான் புதிய நடுநிலை அரசு பதவி ஏற்றுள்ளது.

ஷேக் ஹசீனாவின் கோரிக்கைகளில் பலவும் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் அமைதி திரும்பி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் விவேகம் காட்டி, தேர்தல்கள் அமைதியாக நடைபெற ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய நிலைமையை ஷேக் ஹசீனா வரவேற்றுள்ளார். இதுவரை பிரதமராக இருந்த காலிதா ஜியா, மேலை நாடுகள் வீணாக வங்கதேச அரசியல் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

வங்கதேச அரசியல் சட்டப்படி முந்தைய அரசின் பதவிக்காலம் முடிந்ததிலிருந்து அதாவது அக்டோபரிலிருந்து மூன்று மாதங்களுக்குள்ளாக தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஜன.22-ம் தேதி நடப்பதாக இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்த அரசியல் சட்டவிதி எவ்விதம் சமாளிக்கப்படும் என்று தெரியவில்லை.

வங்கதேச நிலைமையை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வந்தது. சாதாரண நாள்களிலேயே அந்நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் கள்ளக் குடியேற்றம் நடைபெறுவது உண்டு. ஆகவே அங்கு தோன்றிய குழப்ப நிலை காரணமாக கள்ளக் குடியேற்றம் அதிகரிக்கலாம் என்ற கருத்தில் இந்தியாவின் எல்லைகளில் ரோந்து அதிகரிக்கப்பட்டது. நல்லவேளையாக இப்போது நிலைமை மாறியுள்ளது.

Posted in Bangladesh, Bangladesh Nationalist Party, Fakhruddin Ahmed, Fakrudhin Ahmad, Iajuddin Ahmed, Jamiruddin Sarkar, Khaleda Zia, Politics, Rezakul Haider Chowdhury, Sheikh Hasina, Tareq Rahman | Leave a Comment »

Bangladesh Elections – Kudos to the bipartisan system

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006

வங்கதேசத்தில் தேர்தல்

சில சமயங்களில் சிறிய நாடுகள் மற்ற பல பெரிய நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருப்பது உண்டு. வங்கதேசம் ஒருவகையில் இவ்விதம் வழிகாட்டுகிறது. அதாவது அந்நாட்டில் ஆட்சியில் உள்ள அரசின் பதவிக்காலம் முடிந்தவுடன் அந்த அரசு ராஜிநாமா செய்து விடுகிறது. உடனே தாற்காலிக அடிப்படையில் நடுநிலை அரசு அமைக்கப்படுகிறது. அந்த நடுநிலை அரசின் கீழ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. பதவியில் உள்ள அரசு மறுபடி ஆட்சியைப் பிடிக்கத் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துவிட்டதாகப் புகார் எழும் வாய்ப்பு இதன் மூலம் தவிர்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில் வருகிற ஜனவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் இதுவரை பேகம் காலிதா ஜியா தலைமையில் இருந்த அரசு வங்கதேச அரசியல் சட்டப்படி பதவி விலகிவிட்டது. புதிதாக நடுநிலை அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் யார் தலைமையில் நடுநிலை அரசு அமைய வேண்டும் என்பதில் ஆளுங்கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது தொடர்பாக, கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டு, கட்சி ஊழியர்களிடையே மோதல்கள் மூண்டன. இதில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். இறுதியில் வங்கதேச அதிபர் தலைமையில் நடுநிலை அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா தலைமையிலான எதிர்க்கட்சிக்கு இந்த ஏற்பாடு பிடிக்கவில்லைதான். இதுவரை ஆண்டு வந்த வங்கதேச தேசியக் கட்சி இந்த ஏற்பாட்டை வரவேற்றுள்ளது. வங்கதேசத்தில் “நடுநிலை’ அரசின்கீழ் தேர்தல் நடப்பதென்பது இது நான்காவது தடவை.

வங்கதேசத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த இடங்கள் 300. அவையில் பெண்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு தனி ஏற்பாடு பின்பற்றப்படுகிறது. அதாவது தேர்தல் முடிந்த பின்னர் 45 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். தேர்தலில் வென்ற கட்சிகள் தங்களது கட்சி பலத்துக்கு ஏற்ப பெண் உறுப்பினர்களை நியமிக்கின்றனர். பெண் பிரதமர்களே மாறி மாறி ஆண்டு வருகின்ற நாட்டில் இதுகூடச் செய்யப்படவில்லை என்றால் எப்படி?

வருகிற தேர்தலில் பேகம் ஜியா தலைமையிலான வங்கதேச தேசியக் கட்சிக்கும் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கும்தான் பிரதான போட்டி. முன்னாள் அதிபர் எர்சாத் தலைமையிலான ஜாதியக் கட்சிக்கு மக்களிடையே அவ்வளவாக ஆதரவு கிடையாது. 1991 தேர்தலிலும் 2001 தேர்தலிலும் பேகம் ஜியா கட்சி வென்றது. 1996 தேர்தலில் ஷேக் ஹசீனா கட்சி வென்றது.

வங்கதேசத்தில் முன்னர் ஜெனரல் ஜியா தலைமையிலும் பின்னர் ஜெனரல் எர்சாத் தலைமையிலும் ராணுவ ஆட்சி நடந்தது. ஆனாலும் கடந்த 15 ஆண்டுகளாக அந்நாட்டில் ஜனநாயக சக்திகள் நன்கு வேரூன்றி உள்ளதாகச் சொல்லலாம். கடந்த மூன்று தேர்தல்கள் இதற்குச் சான்று. வங்கதேசத்தில் மக்கள்தொகை 14 கோடி. நிலப்பரப்புடன் ஒப்பிட்டால் மக்கள்தொகை அதிகமே.

ஒருசமயம் இது மிக ஏழ்மையான நாடு என்று கருதப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக மெச்சத்தக்க வகையில் பொருளாதார வளர்ச்சி காணப்படுகிறது. அந்நாட்டில் மிக அதிக அளவுக்கு எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயுவை இந்தியாவுக்கு விற்க வங்கதேசம் முற்பட்டால் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும். ஆனால் குறுகிய நோக்குக் கொண்ட இந்திய எதிர்ப்பு சக்திகளின் நிர்பந்தம் காரணமாக இதுவரை ஆண்டு வந்த பேகம் ஜியா அரசு இதற்கு உடன்படவில்லை. தேர்தலுக்குப் பிறகு ஏற்படும் அரசு இது விஷயத்தில் கொள்கையை மாற்றிக் கொண்டால் இரு நாடுகளும் நல்ல பயன் பெற முடியும்.

Posted in Awami League, Bangladesh, Bangladesh Nationalist Party, Bipartisan, BNP, election commission, Elections, Iajuddin Ahmed, impartial, Khaleda Zia, MA Aziz, Political Science, Polls, President, Sheikh Hasina, Tamil | 2 Comments »

President Iajuddin Ahmed intervenes in crisis in Bangladesh

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006

வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் அந்நாட்டின் அதிபர்

வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக அந்நாட்டு அதிபர் இஜாவூதின் அஹமது பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

வங்கதேசத்தின் பிரதான அரசியல் கட்சிகள், வேட்பாளர் ஒருவரை ஏற்க மறுத்தத்தினை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சர்ச்சையினை நீக்கும் முயற்சியாக அதிபர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

வங்கதேசத்தின் தேர்தல் சட்டங்களின்படி, ஜனவரி மாதம் நடைபெறும் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்கு, கட்சி சார்பில்லாத ஒருவர் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை ஏற்க வேண்டும்.

முன்னதாக அரசாங்கம் தெரிவித்த வேட்பாளரை எதிர்கட்சிகள் ஏற்காத காரணத்தினால், வேறு ஒரு வேட்பாளரை நிறுத்த நான்கு பிரதான கட்சிகளுக்கும், அதிபர் இன்று வரை கால அவகாசத்தினை கொடுத்திருந்தார்.

இந்நிலையில் வங்கதேச அதிபர் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்று இருப்பதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான அவாமி லீக், தொடர்ந்து போராட்டம் நடத்த போவதாக கூறியுள்ளது.

அரசியல் சர்ச்சையினால் வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி பதினெட்டுப் பேர் பலியாகியுள்ளனர்.

Posted in Bangladesh, caretaker, Chief Justice K.M. Hasan, Crisis, Government, Iajuddin Ahmed, President, Sheikh Hasina, South Asia, Zia | Leave a Comment »