சர்ச்சைக்குரிய மதக் கல்வி நிறுவனங்களை மூட பாக். அரசுக்கு கோரிக்கை
இஸ்லாமாபாத், ஏப். 25: இஸ்லாமிய சட்டத்தை வலியுறுத்தும் மதக் கல்வி நிறுவனங்களை மூடவேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு பாகிஸ்தானில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இத்தகைய கல்வி நிறுவனங்கள் ஷிரியா சட்டம் (முஸ்லிம்கள் பின்பற்றவேண்டிய மதச்சட்டங்கள்) என்ற போர்வையில் பயங்கரவாதத்தை பரப்பி வருவதாகவும் அந்த அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன.
இது தொடர்பாக மகளிர் உரிமை அமைப்புகள், சிவில் சமூக அமைப்பு ஆகியவற்றின் ஆதரவாளர்கள் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் இஸ்லாமாபாதில் திங்கள்கிழமை நடந்த பேரணியில் பங்கேற்றனர். மகளிருக்கான ஜமியா ஹப்சா மதறஸô தீவிரவாதம், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும அதை மூடவேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தியதாக டான் பத்திரிகை வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.
ஜமியா ஹப்சா மதறஸô மாணவர்கள் சில வாரங்களுக்கு முன் 3 பெண்களை கடத்தியதுடன் விடியோ கடை ஒன்றுக்கும் தீவைத்துள்ளனர். இந்த மாணவர்கள் பொதுச் சொத்துகளையும் சேதப்படுத்துகின்றனர்.
பொது நூலகம் ஒன்றையும் இந்த மதறஸôவைச் சேர்ந்த மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்றும் பேரணியில் பங்கேற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.