Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Serial’ Category

Makkal TV serial on sandalwood smuggler ‘Veerappan’

Posted by Snapjudge மேல் ஜனவரி 3, 2008

மணம் பரப்பும் “சந்தனக்காடு’

மக்கள் தெலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “சந்தனக்காடு’ தொடர், நேயர்களின் ஏகோபித்த ஆதரவோடு ஐம்பதாவது பகுதியைக் கடந்துள்ளது. இந்தத் தொடரின் அனைத்துப் பகுதிகளும் ஒருசேர செவ்வாய்க்கிழமை (ஜன.1) ஒளிபரப்பானது. சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை ஒப்பனையில்லாமல் வெளிப்படுத்தி வரும் இந்தத் தொடரை ஒரு தேர்ந்த திரைப்படத்துக்குரிய நேர்த்தியோடு இயக்கியிருக்கிறார் வ.கெüதமன். இந்தத் தொடருக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, தொடரைப் பார்த்துவிட்டு தொடருக்கு எதிராகத் தான் போட்ட வழக்கையும் வாபஸ் பெற்றிருக்கிறார்.

“சந்தனக்காடு’ குறித்து இயக்குநர் பாலா… “”நான் கடவுள்’ படப்பிடிப்பில் இருந்தாலும் என்னுடைய கடுமையான வேலைப் பளுவிற்கு இடையே இந்தத் தொடரைப் பார்த்து வருகிறேன்.

சில சமயம் அதனுடைய தொடர்ச்சியைப் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது எதையோ இழந்ததைப் போல உணர்ந்தேன். ஒரு சிறந்த திரைப்படத்துக்கான கதைக் களத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், பல உண்மைகளை வெளிப்படுத்தி வருகிறது” என்கிறார்.

பல தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்று வரும் “சந்தனக்காடு’ தொடர், மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Posted in Makkal, Media, Sandalwood, Serial, Soaps, TV, Veerappan | Leave a Comment »

Tamil Actress Latha in TN Politics – ADMK, Thirunavukkarasu & BJP

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2007

திரைப்பட வரலாறு 789
அரசியலில் லதா


சினிமாவில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, நடிகை லதாவை அரசியலுக்கு அழைத்தார், எம்.ஜி.ஆர். ஆனால், அப்போது அரசியலைத் தவிர்த்த லதா, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அதில் சேர்ந்தார்.

எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. சந்தித்த முதல் பொதுத்தேர்தலில், நடன நிகழ்ச்சி மூலம் கட்சிக்கு நிதி திரட்டிக் கொடுத்தார் லதா.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த திருநாவுக்கரசின் அழைப்பின் பேரில், அப்போது அவர் தொடங்கிய “எம்.ஜி.ஆர். அ.தி.மு.க”வில் இணைந்தார்.

எம்.ஜி.ஆருடனான அரசியல் அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

ஆர்வம் உண்டா?

“எம்.ஜி.ஆர். படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் அவர் என்னிடம், “லதா! உனக்கு அரசியலில் ஆர்வம் உண்டா?” என்று கேட்டார். “ஆர்வம் இல்லை. அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்றேன்.

”அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதானே தேர்தலின்போது சரியானவர்களை தேர்ந்தெடுக்க முடியும்” என்றார்.

ஆனால் காலச்சூழலில் அவரே அ.தி.மு.க.வை தொடங்க வேண்டியதாயிற்று. கட்சியில் நானும் சேர்ந்தேன். கட்சியில் சேரும்படி என்னை அவர் கேட்கவில்லை. என்றாலும், சினிமாவில் என்னை இந்த அளவுக்கு உருவாக்கியவருக்கு காட்டும் நன்றிக்கடனாக, அவர் கேட்காமலே கட்சியில் சேர்ந்து விட்டேன்.

நடன நிகழ்ச்சி

எம்.ஜி.ஆர். கட்சி, முதல் பொதுத்தேர்தலை சந்தித்த நேரத்தில், “தேர்தலுக்கு நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்?” என்று கேட்டேன். “உனக்கு எது சரியாக இருக்குமோ, அதைச் செய்தால்தான் சிறப்பாக வரும்” என்றார், எம்.ஜி.ஆர். பிறகு அவரே “லதா! நீ முக்கிய நகரங்களில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள். கட்சிக்கு நிதி திரட்டிய மாதிரியும் இருக்கும்” என்றார்.

உடனே தாமதமின்றி நான் உருவாக்கிய நாட்டிய நாடகம்தான் “சாகுந்தலம்.” முப்பதுக்கும் மேற்பட்ட நடனக்குழுவினருடன் நான் கட்சிக்கூட்டம் நடக்கும் இடங்களில் இந்த நாட்டிய நாடகத்தை நடத்துவேன். மக்கள் திரண்டு வந்து, இந்த நிகழ்ச்சியை ரசித்தார்கள். திருச்சியில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் அதுவரை நடன நிகழ்ச்சிக்கு வசூலான தொகையை எம்.ஜி.ஆரிடம் அளித்தேன்.

இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று முதல்-அமைச்சரானார். தேர்தலில் நேரம் காலம் பார்க்காமல் விடிய விடிய நாட்டிய நாடகம் நடத்தியதை அவர் மறக்காமல் மனதில் வைத்திருந்தார். ஒருநாள் என்னை அழைத்துப் பேசியவர், “லதா! மக்களின் அன்பு எத்தகையது என்பதை நேரில் காண, இந்த தேர்தல் உனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. நீ முழுநேர அரசியலுக்கு வரலாம் என்று எண்ணுகிறேன். உன் விருப்பம் என்ன?” என்று கேட்டார்.

நான் அவரிடம், “அரசியலிலும் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்காகவே நடன நிகழ்ச்சியையும் உற்சாகமாக செய்தேன். மற்றபடி அரசியலில் ஈடுபடும் அளவுக்கு இன்னமும் எனக்கு பக்குவம் இல்லை” என்று கூறினேன்.

எம்.ஜி.ஆர். என்னைப் புரிந்து கொண்டார். அதன்பிறகு என்னை அரசியலுக்கு அழைக்கவில்லை.”

இவ்வாறு லதா கூறினார்.

சந்திரபாபு நாயுடு

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரின் அழைப்பு தவிர, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும் லதாவை அரசியலுக்கு அழைத்தார்.

அதுபற்றி லதா கூறியதாவது:-

ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல்தான் எங்கள் பூர்வீகம். அங்குள்ள அம்மன் கோவில் பிரபலம். ஊர் எல்லையில் இருக்கிற இந்த கோவிலை என் அம்மா விருப்பப்படி 1977-ல் நான் புதுப்பித்தேன். இப்போதும் தம்பி ராஜ்குமார் இந்த கோவிலை பராமரிக்கும் பொறுப்பில் இருக்கிறான்.

தெலுங்கில் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தது மூலமாக தெலுங்கு ரசிகர்களிடமும் நான் பிரபலமாகியிருந்தேன். இப்போது கோவிலை புதுப்பித்ததன் மூலம் அந்தப் பகுதி மக்களிடமும் நல்லவிதமாக அறியப்பட்டிருந்தேன்.

இதனால் சந்திரபாபு நாயுடு என்னை தனது கட்சி சார்பில் இந்த தொகுதியில் நிற்கச்சொன்னார். அப்போது அவர் போட்ட ஒரே கண்டிஷன், “தேர்தலுக்குப்பிறகு, ஆந்திராவிலேயே செட்டிலாகி விடவேண்டும்” என்பதுதான்.

நான் அவரிடம், “நான் பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான். அங்கேதான் நடிகையாக அறிமுகமானேன். எம்.ஜி.ஆர். மட்டும் அவரது ஜோடியாக படங்களில் என்னை அறிமுகப்படுத்தாமல் இருந்திருந்தால், `லதா’ என்ற பெண்ணை யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். எனவே எனக்கு புகழ் தேடித்தந்த தமிழ்நாட்டில், தமிழ் மக்களிடையே இருக்கவே விரும்புகிறேன்” என்று சொல்லி, நாயுடு தந்த அரசியல் வாய்ப்பை தவிர்த்து விட்டேன்.

இவ்வாறு கூறினார், லதா.

திருநாவுக்கரசு

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர். காலமான பிறகு “எம்.ஜி.ஆர். அ.தி.மு.க” என்றொரு கட்சியை தொடங்கினார். இதில் சேரும்படி நடிகை லதாவை கேட்டுக்கொண்டார். லதாவும் இந்தக் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார்.

1998-ல் நடந்த “எம்.பி” தேர்தலில், திண்டுக்கல்லில் தனது கட்சி சார்பில் போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் 60 ஆயிரத்துக்கு மேல் ஓட்டு வாங்கி, அரசியல் வட்டத்தை ஆச்சரியப்படுத்தினார்.

திருநாவுக்கரசு, தனது கட்சியை பாரதீய ஜனதாவுடன் இணைத்த நேரத்தில் லதாவும் பாரதீய ஜனதாவில் ஐக்கியமானார். கட்சியில் அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

லதா இப்போது சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த பிஸி நிலை, அவருக்கும் அரசியலுக்கும் ஒரு இடைவெளி இருப்பதுபோல் காட்டுகிறது. தொடர்ந்து அரசியலில் நீடிக்கும் எண்ணம் லதாவுக்கு உண்டா? அவரே கூறுகிறார்:-

“திருநாவுக்கரசரின் `எம்.ஜி.ஆர். அ.தி.மு.க‘ சார்பில் நான் திண்டுக்கல் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டபோது, கட்சிக்கென்று அங்கீகார சின்னம் எதுவும் தரவில்லை. அப்போது சுயேச்சை சின்னங்களில் ஒன்றாக இருந்த மாம்பழம் சின்னம் ஒதுக்கினார்கள். பிரசாரத்தின்போது மக்களை சந்தித்தேனே அந்த
30 நாட்கள்தான் என் வாழ்க்கையில் திருப்பம். “தலைவர்
(எம்.ஜி.ஆர்) கூட நடிச்ச பொண்ணு” என்று சொல்லி என்னைக் கொண்டாடினார்கள். “உங்க முகத்துல தலைவரைப் பார்க்கிறோம்மா” என்றார்கள்.

வயதானவர்கள்கூட என் காலில் விழ வந்தார்கள். அவர்களை தடுத்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதெல்லாம் எம்.ஜி.ஆர். மீது அவர்கள் வைத்திருந்த அன்பைத்தான் எடுத்துக்காட்டின.

சிலர் என்னிடம், தங்கள் ஊரில் உள்ள “குழாயில் தணணீர் வரவில்லை” உள்ளிட்ட பல குறைகளை உரிமையுடன் சொல்லத் தொடங்கி விட்டார்கள். எம்.ஜி.ஆருடன் நடித்தவள் என்ற உரிமையில், அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையாகவே அது எனக்குப் பட்டது. சிலர், “மதியம் சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்கு வாங்க”, “இரவு சாப்பாட்டுக்கு எங்க வீட்டுக்குத்தான் வரணும்” என்றெல்லாம் அன்போடு கேட்டு, அழைத்துப்போய் சாப்பாடும் கொடுத்தார்கள். சூதுவாது தெரியாத அன்பை மட்டுமே பொழியத் தெரிந்த இந்த மக்களுக்காக அவர்களுக்கு நல்லது செய்யும் அரசியலில் நான் நீடிப்பதுதான் சரியாக இருக்கும்.

இந்த பிரசாரத்தில் ஒரு வேடிக்கையும் நடந்தது. நான் எங்கள் “எம்.ஜி.ஆர். அ.தி.மு.க” கட்சி வேட்பாளராக போட்டியிட்ட அதே தொகுதியில், தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்டு என் தோழி ராதிகா பிரசாரம் செய்தார். அரசியலுக்கு அப்பாற்பட்ட தோழிகள் என்பதால், பிரசாரத்தில் எதிரும் புதிருமாக சந்தித்துக்கொண்டபோதுகூட மறக்காமல் “ஹாய்! ஹலோ” சொல்லிக்கொண்டோம். நட்பு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது அல்லவா?

இப்போது படங்களிலும், தொடர்களிலும் நடிப்பதை தொடர்ந்தாலும், அரசியல் ஈடுபாடும் இருக்கவே செய்கிறது. அரசியலில் முழு மூச்சாக இறங்கும் காலம் வரும்போது நிச்சயம் அதில் என்னை முழுவீச்சில் வெளிப்படுத்தவே செய்வேன். தேசியக்கட்சியில் (பா.ஜ.க) இருந்தாலும் எனது அரசியல் தமிழ்நாட்டில் இருக்கும்.

மக்கள் தந்த ஆதரவில் வளர்ந்த நான், மக்கள் பிரச்சினைக்காக என்னை அர்ப்பணிப்பேன்.”

Posted in Actress, ADMK, AIADMK, Biosketch, BJP, Cinema, Faces, Films, History, Jaya, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeyalalitha, JJ, Latha, Leaders, MGR, MGRADMK, Movies, people, Politics, Serial, Sun, Tamil, TamilNadu, Thirunavukkarasar, Thirunavukkarasu, TV | Leave a Comment »

Coimbatore blasts: Top accused Madani acquitted; Al-Umma founder S A Basha, 72 others convicted

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 1, 2007

கோவை குண்டு வெடிப்பு – குற்றவாளிகள் யார்-யார்? தனிக்கோர்ட்டு அறிவிப்பு

கோவை, ஆக. 1-

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அரசு ஆஸ்பத்திரி, ஆர்.எஸ்.புரம், சிவானந்தா காலனி, பா.ஜ.க. அலுவலகம், ரெயில் நிலையம், சர்சண்முகம் ரோடு, கனிராவுத்தர் வீதி என கோவை நகரமே குண்டு வெடித்ததில் நிலை குலைந்தது. அடுத்த 2 நாட்களில் மேலும் குண்டு வெடித்தது. இதனால் குண்டு வெடித்த இடங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது.

இந்த குண்டு வெடிப்பில் ரூ.18 கோடி சொத்துக்கள் சேதம் அடைந்தன. விசாரணையில் அல்- உம்மா இயக்கத்தை சேர்ந்த வர்கள்தான் குண்டு வைத்தனர் என்று தெரிய வந்தது.

இதையடுத்து அல்-உம்மா இயக்க தலைவர் பாட்சா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்பட 168 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் இறந்து விட்டார். ஒருவர் அப்ரூவராக மாறி விட்டார். இந்த வழக்கில் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் சாட்சி யாக சேர்க்கப்பட்டனர். வழக்கை விசாரிக்க தனிக் கோர்ட்டு அமைக்கப்பட்டது.சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து அரசு தரப்பு, எதிர்தரப்பு வாதங்கள் நடந்து முடிந்தது.

ஆகஸ்டு 1-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்திராபதி அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 166 பேரில் பாட்சா, மதானி, அன்சாரி உள்பட 65 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் களின் மீதான குற்றச்சாட்டு களை வாசித்து யார்-யார் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.

பிற்பகலில் 36 பேர் ஆஜர் படுத்தப்படுகிறார்கள். கோர்ட்டு தீர்ப்பை யொட்டி தனிக்கோர்ட்டில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த வழியாக போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஜெயில் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு யாரும் அனுமதிக்கப்பட வில்லை. நகரில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

—————————————————————————————————–
மதானி விடுதலை: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வரவேற்பு

புதுதில்லி, ஆக. 2: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கேரள முஸ்லிம் தலைவர் அப்துல் நாசர் மதானி விடுவிக்கப்பட்டதை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.

கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரமேஷ் சென்னிதலா: மதானி விடுதலை செய்யப்பட்டதை மகிழ்வுடன் வரவேற்கிறோம். ஈ.கே. நாயனார் அரசுதான் 1998-ல் மதானியை தமிழக போலீஸôரிடம் ஒப்படைத்தது. இதைத் தங்கள் ஆட்சியின் சாதனையாகவும் அது தம்பட்டம் அடித்துக்கொண்டது. இப்போது மதானி குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரள மக்களிடம் நாயனாரும் அவரது மார்க்சிஸ்ட் கட்சியும் மன்னிப்பு கேட்குமா? கேரளத்தில் தற்போது மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியைச் சேர்ந்த முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனும் மதானி விடுதலை செய்யப்பட்டதை வரவேற்றுள்ளார். மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக கொள்கைகளை உறுதியாகப் பற்றிக்கொண்டு மதானி தனது அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். கோவை சிறையில் மதானிக்கு தகுந்த மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கு எமது அரசின் முயற்சிகளே காரணமாக அமைந்தன என்றார் அவர்.

பாஜக அதிருப்தி

கேரள பாஜக பொதுச் செயலர் எம்.டி. ரமேஷ்: மதானி வழக்கை விசாரித்த தமிழக போலீஸôர், குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ, நிரூபிக்கவோ தவறிவிட்டதாகவே தோன்றுகிறது.

“பிரார்த்தனை பலித்துவிட்டது’

கொல்லம் கருநாகப்பள்ளியில் இருந்து மதானியின் தந்தை டி.ஏ. அப்துல் சமத் தனது மகன் விடுதலை செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். “”கடவுளுக்கு நன்றி. எனது மகன் குற்றமற்றவன் என்று எங்களுக்குத் தெரியும். எங்களது பிரார்த்தனைகளுக்கு கடவுள் செவி சாய்த்துவிட்டார்,” என்றார்.

மதானியின் சொந்த ஊரான கொல்லத்தில் வெற்றி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
———————————————————————————————————————–

5 பேர் மீதான குற்றச்சாட்டு திங்கள்கிழமை தெரியும்

கோவை, ஆக.2: ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய விவரம் வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.

குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட சர்புதீன், சிக்கந்தர், மிர் சபீர் அகமது, ஐயப்பன், உபைதுல் ரகுமான் ஆகியோர் மீது அரசு தரப்பில் சுமத்திய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.

ஆனால், விசாரணையில் இவர்கள் வேறு குற்றங்களை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் திருத்தப்பட்டு, நிரூபணம் ஆகியுள்ளதா? இல்லையா? என்பது தெரிவிக்கப்படும் என நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.

இந்த ஐந்து பேர் மீது சுமத்தப்பட்ட கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
———————————————————————————————————————–
மதானி மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

கோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டது. இவை எதுவும் அரசுத் தரப்பால் நிரூபிக்கப்படவில்லை என தனி நீதிமன்றம் அறிவித்தது.

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனரான அப்துல் நாசர் மதானி, கோவையில் 1997-ல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்குப் பழி தீர்ப்பதற்காக எஸ்.ஏபாஷாவுடன் தொடர்பு கொண்டார்.

இதற்காக பல முறை தொலைபேசியில் அவர் பாஷாவுடன் பேசி உள்ளார். மேலும் கோவை குண்டு வெடிப்புக்காக ஆயுதங்களையும், வெடிபொருள்களையும் ஆர்மி ராஜூ என்பவர் மூலம் அனுப்பி உள்ளார். இதற்காக பாஷா நியமித்த அல்-உம்மாவைச் சேர்ந்த தாஜுதீன் பலமுறை கேரளத்துக்கு சென்று வந்துள்ளார். அவர் மூலம் தான் வெடிபொருள்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் வெடிபொருள்களை சந்தேக பாஷையில், ஆடியோ காஸட், விடியோ காஸட் எனத் தெரிவித்துக் கொண்டனர்.

தற்கொலைப் படைத் தாக்குதலுக்காக பாக்ஸ் வெடிகுண்டுகள் கொண்டு வந்ததற்கும் மதானி உதவினார் என்று அரசுத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இவை தொடர்பாக கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், மதக் கலவரத்தைத் தூண்டுதல் என 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டு இருந்தது. இதை விசாரித்த தனி நீதிமன்றம் மதானி மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என அறிவித்தது.

வெடிபொருள்களை அல்-உம்மாவினருக்கு வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்மி ராஜூ, குண்டு வெடிப்புக்கு உதவியதாக வழக்கில் சேர்க்கப்பட்ட முகமது அஸ்ரப், சுபேர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் மூவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

———————————————————————————————————————–

சிறு குற்றம் மட்டுமே நிரூபணம்: 84 பேர் விடுதலை?

கோவை, ஆக.2: குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 153 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், மதக் கலவரத்தைத் தூண்டுதல் ஆகியன முக்கியக் குற்றச்சாட்டுகள்.

இவற்றில், கூட்டுச் சதி, கலவரத்தைத் தூண்டுதல் போன்றவை 84 பேர் மீது நிரூபிக்கப்படவில்லை.

இவர்கள் மீதான பிற குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டு உள்ளன. இவற்றுக்கு வழங்கப்படும் தண்டனை 10 ஆண்டுகளுக்கும் குறைவாகத் தான் இருக்கும்.

இந்நிலையில், இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைக் காலம், 9 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் இருந்த காலத்தில் கழிக்கப்படும் என்பதால், இந்த 84 பேரும் விடுதலை செய்யப்படுவர்.

எனவே, இவர்கள் உடனடியாக ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான விசாரணை வரும் திங்கள்கிழமை நடக்கும். அப்போது, இவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

அவர்கள் விவரம்:

சம்சுதீன், அபுதாகீர், ஜாபர் அலி, விடியோ ரபி, சயத் (எ) பக்ரூதின், அப்பாஸ் (எ) சின்ன அப்பாஸ், யாகூப், புஷ் (எ) அபுதாகீர், சுருட்டை முடி அப்பாஸ், யாகூப் கான் (எ) பர்கத், ஹக்கிம் (எ) காஜா, சம்ஜித் அகமது, அசிபுல்லா, அப்துல் நயீன், பாவா, காஜா ஹூசைன், முத்தலிப், சயத் ஹரூன், ஜபருல்லா, முகமது ரசூல், முகமது ரபீக், அமானுல்லா.

யூசப் ஹூசைன், புஷ்பராஜ், அப்துல் ரஹீம், வெள்ளை அபாஸ், அன்வர் பாட்ஷா, அப்துல் காதர், சிக்கந்தர் பாஷா, கிச்சன் (எ) புகாரி, சப்பை பாபு, அம்மான், வெல்டிங் சிக்கந்தர், வெல்டிங் அபுசலி, அப்துல் சலீம், உமர், சதீசன், சம்சுதீன், பஷீர் அகமது, அப்துல் ரகுமான், அப்துல் அஜீஸ், அகமது பஷீர், சித்திக் அலி.

கே.கே.நகர் கலவரத்தில் குற்றம் சுமத்தப்பட்டோர்: இலியாஸ், அப்துல்லா, ஜெ.அப்பாஸ், நவாப்ஜான், எச்.இஸ்மாயில், எம்.சாதிக் பாட்ஷா, பாபு (எ) முகமது ரபீக், அன்சார் பாட்ஷா, இப்ராகிம், எச்.அப்துல் சலாம், எம்.அப்துல் சுக்கூர், காதர், ஜம்ஷா, அப்பாஸ், ஹாசின், பர்கரத், ஜாபர், எம்.பஷீர், அப்துல் சர்தார், எம்.பாட்ஷா, சாதிக்பாட்ஷா, அபுதாகீர், ஜாபர், அக்பர் பாட்ஷா, அஸ்ரப் அலி, கலந்தக் பாட்ஷா, ஜெ.சயத் அபுதாகீர், முஸ்தபா, முகமது அலி, அப்பாஸ் அலி, ஏ.அக்பர், முகமது பிலால், சீராஜுதீன், லியாகத் அலி, அபுபக்கர் சித்திக், நசீர் (எ) ஆட்டோ நசீர்.

———————————————————————————————————————–

பலத்த பாதுகாப்பில் தனி நீதிமன்றம்

கோவை, ஆக. 2: தனி நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. அப் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அவிநாசி சாலை – எல்ஐசி சந்திப்பு முதல் டாக்டர் நஞ்சப்பா சாலை – பார்க் கேட் சந்திப்பு வரை சாலை வெறிச்சோடிக் கிடந்தது. சிறைக்கு அருகில் உள்ள வஉசி பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலை ஆகியனவும் மூடப்பட்டு இருந்தன.

தனி நீதிமன்றம் அமைந்துள்ள சாலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இச் சாலையில் போலீஸôர், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நீதிமன்றம் அமைந்துள்ள சிறை வளாகத்தைச் சுற்றிலும் காமிரா பொருத்திய போலீஸ் வேன்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.

காலை 8 மணியில் இருந்தே பாதுகாப்பு பணியில் போலீஸôர் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 9 மணிக்கு நீதிமன்றப் பணிகள் தொடங்கின.

கோவை மாநகரக் காவல் ஆணையர் சி.கே.காந்திராஜன், துணை ஆணையர் சுகுமாரன், சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி (பொறுப்பு) மகேஸ்வரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகளைப் பார்வையிட்டனர்.

காலை 9.15 முதல் பத்திரிக்கையாளர்கள் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 9.40-க்கு தனி நீதிமன்ற நீதிபதி போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு வந்தார்.

காலை 10.10-க்கு எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் வந்தனர். நீதிமன்ற வாசலில் அவர்களைச் சோதனையிட்ட போலீஸôர், செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீஸ் -வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர், செல்போன் எடுத்துச் செல்ல வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

காலை 10.30-க்கு நீதிமன்ற வாயிலுக்கு வந்த ஆணையர் காந்திராஜன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

காலை 10.45-க்கு சிபிசிஐடி ஏடிஜிபி நரேந்திர பால் சிங் நீதிமன்றத்துக்கு வந்தார்.

காலை 10.50-க்கு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மதானியின் வழக்கறிஞர்களில் ஒருவரான அக்பர் அலி, மதானியின் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை. அவர் விடுதலையாவது உறுதி என செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

பகல் 1.30 மணிக்குள் 102 பேர் மீதான குற்றச்சாட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 4 மணிக்குள் எஞ்சியவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் அறிவிக்கப்பட்டன.

குண்டு வெடிப்பு வழக்கு செய்திகளைச் சேகரிப்பதற்காக பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு வாகனங்களை நீதிமன்றம் அருகே நிறுத்தியிருந்தன. உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் என 200 பேர் நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தனர்.

———————————————————————————————————————–

69 பேருக்கு கடும் தண்டனை?

கோவை, ஆக.2: கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் போன்ற முக்கியக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 69 பேர் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட 167 பேர் மீதான குற்றச்சாட்டில், 69 பேர் மீதுதான் கூட்டுச் சதி நிரூபிக்கப்பட்டு உள்ளது. சம்பவத்தின் முக்கிய நபர்களாக இவர்கள் மட்டுமே கருதப்படுகின்றனர்.

எனவே, இவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவர்கள் விவரம்:

எஸ்.ஏ.பாஷா, முகமது அன்சாரி, தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் குட்டி, சித்திக் அலி (பாஷா-வின் மகன்), ஊம்பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ், சபூர் ரகுமான், கீழக்கரை அப்பாஸ், ஜப்ரூ, கத்திக்குத்து இஸ்மாயில், அம்ஜத் அலி, அமானுல்லா, சுருட்டை முடி ஜமீஸô, மக்கான் ஷாஜகான், பல் நாசர், ஹைடெக் அமானுல்லா, ஜகாங்கீர், முத்தப்பா, சர்புதீன், எல்.எம்.ஹக்கிம், அபுதாகீர், முகமது ரபீக். ஒசீர் பாஷா, அடிபட்ட பாபு, எம்.ஹக்கிம், என்.எஸ்.ஹக்கிம், முன்னப்பா, அஸ்ரப், குண்டு ரசாக், முகமது அஸôம், சையத் முகமது, ரியாஷ் அகமது, அபுதாகீர், கண்சிமிட்டி ரபீக், அப்துல் ரவூப், பெல்ட் இப்ராகிம், அப்துல் ரகுமான், யாகூப், வளர்ந்த சலீம், அப்துல் கரீம், சாக்கு பரூக், சர்தாஜ், சலாவுதீன், ஷெரீப், முகமது சபீ, ரபீக், நெல்லிசேரி அப்துல் பஷீர், காஜாஹுசைன், தடா மூசா, யூசப், ஹக்கிம், முகமது சுபேர், தடா புகாரி, இதயத் அலிகான், பக்ருதீன் அலி அகமது, முஜிபுர் ரகுமான், சாகுல் அமீது, முகமது அலி, முஜிபுர் ரகுமான்.

இவர்களில், 38 பேர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.

———————————————————————————————————————–

“கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பாழாய் போன 120 பி முடிவுக்கு வந்தது’

கோவை, ஆக.2: “பாழாய் போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.

தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கோவை கருணாநிதி நகரில் நடந்த கலவரம் தொடர்பாக 37 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கூட்டுச் சதியும் (120 பி) சுமத்தப்பட்டது.

இதனால், இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்க இப்பிரிவில் தொடரப்பட்ட வழக்குதான் காரணம். “இது முடிவுக்கு வந்தால் தான் நீங்கள் விடுதலை ஆகமுடியும்’ என நீதிமன்ற விசாரணையின் போது இவர்களிடம் நீதிபதி தெரிவித்துவந்தார்.

குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதா? என்பதைத் தெரிவிக்க இவர்களை அழைத்த நீதிபதி, “உங்கள் மீதான பாழாய்போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ எனக் கூறினார்.

———————————————————————————————————————–

பாஷா, அன்சாரி உள்பட 153 பேர் குற்றவாளிகள்: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு

கோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 153 பேர் குற்றவாளிகள் என தனிநீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.

கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் அப்துல் நாசர் மதானி உள்பட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளை வரும் திங்கள்கிழமை (ஆக.6) அறிவிப்பதாக நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.

கோவையில் 1998 பிப்.14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் கலவரங்களில் 58 பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர். ரூ.4.37 கோடி மதிப்புள்ள தனியார் மற்றும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

இது தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 167 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமது தஸ்தகீர் இறந்து விட்டார்.

மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனிநீதிமன்ற நீதிபதி கூறியது:

முக்கியக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அல்-உம்மா நிறுவனர் எஸ்.ஏபாஷா, செயலர் முகமது அன்சாரி மற்றும் தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் (எ) குட்டி, சித்திக் அலி, ஊம் பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ் உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்கிறது.

அப்துல் நாசர் மதானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றார் நீதிபதி.

நெüசாத், சர்தார், முகமது அஸ்ரப், சுபேர், ஆர்மி ராஜூ, அகோஜி (எ) சிவக்குமார், அப்துல் ஹமீது ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 153 பேரில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக 69 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 84 பேருக்கு கூட்டுச் சதியில் தொடர்பில்லை. ஆனால், இவர்கள் மீது சுமத்தப்பட்ட பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன என்றும் நீதிபதி அறிவித்தார்.

காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.

கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம். குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.

காலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.

கூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம்.

குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி ருத்ராபதி.

———————————————————————————————————————–

கடவுள் அருளால் நியாயம் கிடைத்தது: மதானி

கோவை, ஆக.2: கடவுள் அருளால் நியாயம் கிடைத்தது என அப்துல் நாசர் மதானி தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மதானி, கோவை சிறையிலிருந்து வெளியே வந்தபோது கூறியது:

கோவை குண்டு வெடிப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை. கடவுள் அருளால் நியாயம் கிடைத்துள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக சிறையில் உள்ள மற்றவர்களையும் விடுவிக்க சட்ட உதவிகளைச் செய்வேன். என்னை விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளது, அவரது கருத்து. இதற்கு பதில் கூற விரும்பவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்துள்ளேன். தமிழக உணவை உட்கொண்டு, தமிழக மக்களின் பண்பாடு, கலாசாரத்துடன் இணைந்து இருந்துள்ளேன். தமிழக- கேரள நல்லுறவுக்குத் தொடர்ந்து பாடுபடுவேன். இரு மாநிலத்துக்கும் இடையே தூதுவனாகச் செயல்படுவேன். எனது, அரசியல் நிலை பற்றி இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுப்பேன் என்றார்.

———————————————————————————————————————–

மதானிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு மனைவி தகவல்

கோவை, ஆக.2-
வழக்கில் விடுதலையான எனது கணவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வோம் என்று மதானியின் மனைவி கூறினார்.

தனிகோர்ட்டு தீர்ப்பு

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தனிக்கோர்ட்டில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில்கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதி அவரை விடுவித்தார். வழக்கின் தீர்ப்பை கேட்க கோவை குண்டு வெடிப்பு சிறப்பு கோர்ட்டு அருகே உள்ள கிரே டவுன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மதானியின் மனைவி ஷோபியா, அவருடைய மகன்கள் உமர்முக்தர் (வயது 13), சலாவூதீன் (வயது 10) மற்றும் உறவினர்கள் தங்கி இருந்தனர்.

இது குறித்து மதானியின் மனைவி ஷோபியா நிருபர்களிடம் கூறியதாவது:-

நிம்மதி அளிக்கிறது

எந்த ஒரு தவறும் செய்யாமல் என்னுடைய கணவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இப்போது நீதி கிடைத்து உள்ளது. அவர் கைது செய்யும் முன்பு 90 கிலோ இருந்தார். சிறையில் அடைக்கப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது 48 கிலோவாக உள்ளார்.

அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. நிரபராதி என்று 100 சதவீதம் உறுதியாகி விட்டது. இது எனக்கும், என் குடும்பத்துக்கும் மிகவும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. அவருடைய விடுதலைக்காக பிரார்த்தனை செய்தோம். கடவுள் கருணையால் இந்த நல்ல தீர்ப்பு கிடைத்து உள்ளது.

சிகிச்சைக்கு ஏற்பாடு

அவர் நிரபராதி என்பது 9 ஆண்டுக்கு பிறகு தான் கோர்ட்டு மூலமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. முதலில் அவரை நல்ல ஒரு டாக்டரிடம் காண்பிக்க உள்ளோம். அவருக்கு பொருத்தி உள்ள செயற்கை காலை அகற்றி விட்டு மாற்று சிகிச்சை அளிக்க முடிவு செய்திருக்கிறோம். அவர் விடுதலைக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதானியின் குழந்தைகள் இது குறித்து கூறுகையில், எங்கள் தந்தை கைதாகும் போது நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தோம். இனி அவருடன் விளையாடி மகிழ்வோம் என்றனர்.
———————————————————————————————————————–

ஜாமீனா? விடுதலையா?

கோவை, ஆக.7: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்புரிந்தவர்கள் விவரத்தை தனி நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அரசுத் தரப்பும், எதிர்த் தரப்பும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளன.

தீர்ப்பை இரு கட்டங்களாக அறிவிப்பது புதிய நடைமுறை என்கிறது எதிர்த்தரப்பு. குற்றவாளிகள் தங்கள் தரப்பை கூறுவதற்கு இரு கட்டங்களாகத் தீர்ப்பு அளிப்பது கூடுதல் வாய்ப்பு என அரசுத் தரப்பு கூறுகிறது.

குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 158 பேரில் 89 பேர் சிறு குற்றங்களைப் புரிந்தவர்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, இவர்கள் சிறையில் இருந்த காலத்தை விடக் குறைவு. எனவே, இவர்களுக்கு ஜாமீன் அளிப்பதை விட, விடுதலை செய்யலாம் என்பது எதிர்த் தரப்பின் வாதம்.

சிறு குற்றம் புரிந்தவர்களுக்கு சிறை தண்டனை அளிப்பதோடு, அவர்கள் மீது தொடரப்பட்ட சட்டப் பிரிவுக்கு ஏற்ப அபராதமும் விதிக்க முடியும். அபராதத்தை நேரடியாக செலுத்த வேண்டும். இதற்காக, சிறை தண்டனை அனுபவிக்க முடியாது என்றும் தீர்ப்பளிக்கலாம்.

பல குற்றவாளிகளால் அபராதம் செலுத்த முடியாமல் போகலாம். அப்போது, தண்டனை விதிக்கப்படும் முன்பாக, தனது நிலையை விளக்குவதன் மூலம், அபராதத்தை குறைக்க நிதீமன்றத்தில் முறையிடலாம். இந்நிலையில், சிறு குற்றம் புரிந்தவர்களை தண்டனை அளிப்பதற்கு முன்பே விடுதலை செய்ய முடியாது என்பது அரசுத் தரப்பின் பதில்.

குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில், விடுதலை செய்யாமல், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். குற்றமே இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஒருவேளை, ஜாமீன் பெற அவர் விரும்பவில்லை என்றால், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் சிறையில் அடைக்கப்படுவாரா? என்பது எதிர்த் தரப்பின் மற்றொரு கருத்து.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்குவது போல, குற்றச்சாட்டு உறுதி செய்யப்படாதவர்களுக்கு விடுதலை அளிக்கும் தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும். அப்போது தான் அவர் விடுதலை பெறுவர்.

இந்த சட்டநடைமுறை நிறைவேறும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு முன் சிறையிலிருந்து வெளியேற வேண்டும் என்றால் ஜாமீனில் தான் செல்ல வேண்டும் எனக் கூறுகிறது அரசுத் தரப்பு.

மேலும், இதற்கு முன்பெல்லாம் தீர்ப்பளிக்கும்போது, இந்த சட்டப் பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், உங்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி அறிவிப்பார்.

ஆனால், தற்போது இந்நடைமுறை மாற்றப்பட்டு உள்ளது. தண்டனை அளிப்பதற்கு முன், நீங்கள் குற்றம் செய்துள்ளது இந்த சட்டப் பிரிவில் நீரூபிக்கப்பட்டு உள்ளது என முதலில் அறிவித்துவிட்டு, அதற்குப் பின் எதிர்த் தரப்பு மற்றும் அரசுத் தரப்பின் கருத்தை அறிந்து தண்டனை வழங்குவது புதிய நடைமுறை.

இதன்மூலம், குற்றவாளிகளுக்குத் தண்டனை பற்றி தங்கள் கருத்தைக் கூற கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், அரசுத் தரப்பு கருத்தை எதிர்த் தரப்பு முழுமையாக மறுக்கிறது. குற்றவாளி எனச் சொல்லிவிட்டால், அதற்கான தண்டனையை ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ சொல்லிவிடலாம். ஆனால், இங்கு காலம் நீட்டிக்கப்படுகிறது.

இரு தரப்பு கருத்துகளைக் கூற வாய்ப்பு என்பதும் ஏற்புடையதல்ல. சாட்சிகள் விசாரணையின் போதும், இரு தரப்பின் வாதத்தின்போதும் முன்வைத்த வாதங்களைத் தவிர புதிதாக எதையும் தற்போது கூற முடியாது.

மேலும், இந்த சட்டப் பிரிவில் குற்றவாளி எனக் கூறும்போது, அதற்கான காரணத்தையும், அடிப்படையையும் தெரிவிக்க வேண்டும்.

கிரிமினல் சட்டம் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டதுதான். இந்நிலையில், அரசியல் சட்டம் கூறும் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்கின்றனர் எதிர்த் தரப்பு வழக்கறிஞர்கள்.
———————————————————————————————————————–

கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்பு – BBC

 

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர்
குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சிலர்

ஒலி

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பிரச்சாரம் செய்வதற்காக அப்போது தமிழகத்தின் கோவை நகருக்கு வந்திருந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எல் கே அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் ஆகஸ்டு மாதம் ஒன்றாம் தேதி வழங்கப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 158 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவிலுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் அப்துல் நசார் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையின் போது ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.

பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு குறித்த தகவல்களை இப்பகுதியில் கேட்கலாம்

Posted in 1997, 1998, Abdul Nasser Madani, acquit, Advani, Al-Umma, AlUmma, Ansari, Arms, Assassination, Baasha, Baatcha, Baatchaa, Basha, Bharatiya Janata Party, BJP, Blast, Blasts, Bombs, Campaign, case, CBI, chairman, Coimbatore, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Community, Congress, consipiracy, constable, Convict, conviction, Courts, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, CPM, dead, Extremism, Extremists, founder, Guilty, Hindu, Hinduism, Hindutva, Investigation, ISI, Islam, Judge, Justice, Kerala, Kovai, L K Advani, Law, Leader, LK Advani, Madaani, Madani, Madhani, Malayalam, minority, Mogammad, Mohammad, Mohammed, Mohammed Ansari, Muhammad, Murder, Muslim, Order, PDP, People's Democratic Party, policeman, RAW, Religion, retaliation, RSS, SA Basha, Selvaraj, Serial, SIT, Terrorism, Terrorists, THIRUVANANTHAPURAM, Trivandrum, Weapons | Leave a Comment »

Raj TV’s ‘Kalainjar Television’ Launch – Is it against Maran brothers’ Sun TV?

Posted by Snapjudge மேல் மே 22, 2007

ராஜ் டிவியில் “கலைஞர் டிவி’

சென்னை, மே 22: சன் டிவி நிறுவனத்தாருடன் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து, தனியாக ஒரு தமிழ் டிவி சானலைத் தொடங்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

ராஜ் டிவி மூலமாக இத்திட்டத்தை நிறைவேற்றுகிறது திமுக. “கலைஞர் டிவி’ என்ற பெயரில் இந்த சானல் விரைவில் தொடங்கப்படும் என்று ராஜ் டிவி நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறினார்.

புதிய சானலை தொடங்குவதில் தி.மு.க.வுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ராஜேந்திரன் மறுக்கிறார். எனினும் இந்த சானலுக்கு “கலைஞர் டிவி’ என்று பெயர் வைத்ததில் இருந்தே இதற்குப் பின்னணியைத் தெரிந்து கொள்ளலாம் என்று டிவி வட்டாரங்கள் தெரிவித்தன.

கலைஞர் என்ற பெயர் திமுக தலைவரைக் குறிக்கவில்லை. கலை உலகத்தைச் சேர்ந்த கலைஞர்களைக் குறிப்பிடும் வகையில்தான் கலைஞர் டிவி என்று பெயர் வைத்திருப்பதாக ராஜேந்திரன் கூறுகிறார்.

இந்த டிவி சானலுக்காக தி.மு.க. தரப்பில் இருந்து முதலீடு இருக்கக் கூடும் என்றும் பங்குகள் மூலமாக இந்த முதலீடு இருக்கலாம் என்றும் பங்கு வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.

ராஜ் டிவி உரிமையாளர் இதையும் மறுக்கிறார். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பங்கு விற்பனையில் திரட்டப்பட்ட பணத்தில் இப்புதிய சானலைத் தொடங்குகிறோம் என்றார் அவர்.
புதிதாக டிவி நிறுவனத்தை உடனே தொடங்கும் அளவுக்கு தி.மு.க.வுக்கு அனுபவம் இல்லை. எனவேதான் ராஜ் டிவி உதவியோடு புதிய சானலை திமுக தொடங்குவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கலைஞர் டிவி தொடங்கப்படுவது குறித்து முதல்வர் கருணாநிதியின் 84-வது பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஆகஸ்ட் 15 ம் தேதியிலிருந்துதான் முழுமையான ஒளிபரப்புத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக 11 டிவி சானல்களை தொடங்கப்போவதாக ராஜ் டிவி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதில் 2 சானல்களையாவது உடனே தொடங்குவதற்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற முதல்வர் கருணாநிதி மூலம் முயற்சிப்பதாகவும் தெரிகிறது.

திமுக தரப்பு செய்திகளையும் தமிழக அரசின் செய்திகளையும் உடனுக்குடன் ஒளிபரப்ப சன் டிவியை திமுக நம்பியிருக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் கலாநிதி, சன் டிவியையும், தினகரன் பத்திரிகையையும் நடத்தி வருகிறார். அவரது குடும்பத்தாருடன் கருணாநிதி குடும்பத்தினருக்கு சமீபத்தில் மோதல் ஏற்பட்டுவிட்டது.

எனவே இனிமேல் சன் டிவியை சார்ந்திருக்காமல் இருக்கவே கலைஞர் டிவி தொடங்கப்படுவதாகவும், இந்த சானல், செய்திக்கு முக்கியத்துவம் தரும் சானலாக இருக்கும் என்றும் தெரிகிறது. அதே நேரத்தில் 24 மணி நேர செய்தி சானலைத் தொடங்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் ராஜ் டிவி நிறுவனத்திடம் தற்போது இல்லை.

புதிதாக வர இருக்கும் கலைஞர் டிவிக்கு நிகழ்ச்சிகளை தருமாறு, சன் டிவியில் மாலை நேரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் இரு தனியார் நிறுவனங்களிடம், பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
================================================================

ஏறுமுகத்தில் ராஜ் டி.வி. பங்குகள்

சென்னை, மே 22: ராஜ் டிவி நிறுவனத்தின் பங்குகள் சில நாள்களாக ஏறுமுகத்தில் உள்ளன.

மே 14-ம் தேதி ராஜ் டி.வி.யின் பங்கு விலை ரூ. 188.65 ஆக இருந்தது. அடுத்த நாளில் ரூ. 226.40-க்கு உயர்ந்தது. மே 16-ம் தேதி ரூ. 250.40 ஆனது.

ஆனால் அடுத்த நாளே பங்கின் விலை சற்று குறைந்து ரூ. 239.15 என விற்பனையானது. வாரத்தின் இறுதி நாளான மே 18-ம் தேதி ராஜ் டி.வியின் பங்கு ரூ. 248.45-க்கு விலை போனது.

மே 12-ம் தேதியன்று சட்டப் பேரவையில் நடைபெற்ற முதல்வர் பொன்விழா நிகழ்ச்சிகளை ராஜ் டி.வி. நேரடியாக ஒளிபரப்பியது. அதைத் தொடர்ந்து தீவுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு ராஜ் டி.வியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

ராஜ் டி.வி.யின் பங்கு விலை உயர்வுக்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் திமுகவின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ராஜ் டி.வி.யின் பங்குகளை வாங்கிவிட்டதாக சந்தை வட்டாரத்தில் பேச்சு எழுந்ததும் பங்கு விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

திங்கள்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் சரிவைச் சந்தித்த முன்னணி நிறுவனப் பங்குகளில் சன் டி.வி. நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சன் டி.வி. குழுமத்தின் பங்குகளில் 90 சதவீதம் அதன் தலைவர் கலாநிதி மாறன் வசமே உள்ளது.

மே 14-ம் தேதியன்று சன் டி.வி. பங்குகளின் விலை கிடுகிடுவென சரிந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 1,603-லிருந்து ரூ. 1,534.50 ஆகக் குறைந்தது. ஒரு பங்கின் விலை ரூ. 68.50 குறைந்தது.

அதைத் தொடர்ந்து மே 16-ம் தேதி ரூ. 1474.20 ஆகவும் மே 17-ம் தேதி ரூ. 1,477 ஆகவும் குறைந்தது. மே 18-ம் தேதி பங்கின் விலை சற்று அதிகரித்து ரூ. 1,521.50-ஐ எட்டியது. இந்த வாரம் திங்கள்கிழமை சந்தையில் சன் டி.வி. பங்குகள் ரூ. 1,471.50 விலைக்கு விற்பனையானது.

———————————————————————————————————

கருணாநிதி- ராதிகா “திடீர்’ சந்திப்பு: கலைஞர் டி.வி.யில் ராடான் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு?

சென்னை, மே 23: அதிக தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து முன்னணியில் உள்ள ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் ஆக.15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்கு கலைஞர் டி.வி. என பெயர் சூட்டப்படும் என தெரிகிறது.

ராஜ் டி.வி.யுடன் இணைந்து கலைஞர் டி.வி. செயல்படும் என்றும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய அதிக தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து அவற்றை சன் நெட்வொர்க்கில் ஒளிபரப்பி “டி.ஆர்.பி ரேட்’ எனப்படும் அதிக விளம்பர வருவாய் ஈட்டும் நிறுவனமாக விளங்கும் ராடான் நிறுவனத்தை ஈர்க்க கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டுள்ளது.

கருணாநிதி-ராதிகா சந்திப்பு: முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ராடான் நிறுவன உரிமையாளர் நடிகை ராதிகா, செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தார்.

சுமார் 45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது, கலைஞர் டி.வி.யில் ராடான் டி.வி. யின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ராதிகா பேட்டி: இச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா கூறியது:

சன் டி.வி.யில் இருந்து ராடான் வெளியேறவோ அல்லது வெளியேற்றப்படவோ இல்லை. புதிய தொலைக்காட்சி தொடங்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளதால் அதுகுறித்து தான் அவருடன் பேசினேன்.

நீண்ட நாள்களாக முதல்வரை நான் சந்திக்கவில்லை. எனது தந்தை நடிகர் “எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு விழா’ விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அதுகுறித்து தான் முதல்வரிடம் அதிக நேரம் ஆலோசனை நடத்தினேன் என்றார்.

இருப்பினும், கலைஞர் டி.வி.யில் ராடான் நிறுவன நிகழ்ச்சிகளை மாற்றவே இந்த சந்திப்பு நடந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருபவர் ராதிகா. கருணாநிதியை “அப்பா’ என்றே அழைக்கக் கூடியவர். தனது கணவர் சரத்குமார், திமுகவில் இருந்து வெளியேறி அதிமுக சென்றபிறகும் கருணாநிதியுடன் நல்ல நட்பை தொடர்ந்து வருகிறார் ராதிகா.

அதனால், கலைஞர் டி.வி.யில் தனது தயாரிப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் வியாபார நோக்கில் முன் யோசனை உள்ள ராதிகா, சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இந்த புதிய டி.வி.க்கு மாற்றினால், மற்ற சன் நெட்வொர்க் டி.வி. களில் ஒளிபரப்பாகும் தனது நிகழ்ச்சிகள் நிச்சயம் பாதிக்கப்படும் என்பதையும் உணர்ந்து வைத்துள்ளார்.

அதனால், கலைஞர் டி.வி.க்கு தனியாக புதிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் டி.வி.யின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கலைஞர் டி.வி.யில் சேர்ந்துள்ளதாகவும், மேலும் சன் டி.வி.வில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை ஈர்க்கவும் கலைஞர் டி.வி. முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
———————————————————————————————————

“கலைஞர் டிவி’: கருணாநிதி அறிவிப்பு

சென்னை, மே 23: புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 15 முதல் ஒளிபரப்பை தொடங்கும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

புதிய டிவி “கலைஞர் டிவி’ என்று அழைக்கப்படும் என்பதையும் அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

சன் டிவி குழுமத்துடன் மோதல் ஏற்பட்டதை அடுத்து திமுகவின் கொள்கைகளை, செயல்பாடுகளை, அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இந்த புதிய டிவி தொடங்கப்படுகிறது.

புதிய டிவி திமுக சார்பில் நடத்தப்படாது என்பதை கருணாநிதி தெளிவுபடுத்தி உள்ளார். இருப்பினும் திமுகவின் பிரசார பீரங்கியாகவே புதிய டிவி செயல்படும் என்று தெரிகிறது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்காக ஆகஸ்ட் 15 முதல் புதிய தொலைக்காட்சி தொடங்கப்படும். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 3-ம் தேதி வெளியிடப்படும். புதிய தொலைக்காட்சியில் பணிபுரிய நல்ல அனுபவம் பெற்றவர்கள் முன்வந்துள்ளனர். அந்த தொலைக்காட்சி கட்சியின் (திமுக) சார்பில் நடத்தப்படுவதல்ல. அந்த தொலைக்காட்சிக்கு என்னுடைய பெயர் சூட்டப்படுகிறதா என்று என்னிடம் கேட்டபோது, பல பேர் அவ்வாறு விருப்பப்படுகிறார்கள் என்று நான் கூறினேன்.

சன் டிவிக்கு நெருக்கடியா?

சன் டிவியை வேறு இடத்துக்கு மாற்றிச் செல்லும்படி யாரும் எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் சில பத்திரிகைகள்தான் அவ்வாறு இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு வருகின்றன என்றார் கருணாநிதி.

————————————————————————————————

உதறலெடுக்கிறது சன் டிவிக்கு!!!


தனது அறுபதாண்டுகால பொது வாழ்க்கையில் துரோகிகளையும், எதிரிகளையும் உரிய நேரத்தில் அடையாளம் கண்டு, எதிர்கொண்டு, வீழ்த்தி வெற்றிவாகைசூடிய கலைஞர், கடந்த சில நாட்களாக சொந்த பந்தங்களிடமிருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் கலங்கி நிற்கிறார்.’ _கலைஞருக்கு நெருக்கமான மூத்த அமைச்சரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவை!

இதை உறுதிப்படுத்தும் விதமாக கலைஞர் எழுதிய, விரக்தியும், ஆதங்கமும் நிறைந்த கவிதைகள் முரசொலியில் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. என்ன நடக்கிறது தி.மு.க.வுக்குள்ளும், கலைஞரைச் சுற்றியும்….?

‘தினகரன்’ நாளிதழ் விவகாரத்தைத் தொடர்ந்து தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் கட்சியிலிருந்தும் நீக்கப்படும் நிலையில் இருக்கிறார். சர்ச்சைக்குரிய சர்வே வெளிவந்ததற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், கலாநிதி மாறன் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நேரடித் தொடர்பில்லாத தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை நியாயப்படுத்தும் வகையில், தமிழக அரசின் உள்துறைச் செயலாளரை தயாநிதி மாறன் மிரட்டியதாகக் காரணமும் சொல்லப்பட்டது.

‘உண்மையான காரணம் அதுவல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது உள்ளூர நடந்து வந்த நிழல் யுத்தத்தின் முடிவுதான் இது’ என்ற முன்னுரையோடு சில பின்னணித் தகவல்களை விளக்குகிறார்கள், கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமான தி.மு.க. முன்னோடிகள் சிலர்.

தி.மு.க. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர்களுக்குக் கணிசமான பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கட்சி நிதி தவிர, இதில் கணிசமான பணத்தை தயாநிதி மாறனே தன் சொந்த முயற்சியில் திரட்டி விநியோகித்தார் என்றொரு தகவலும் உண்டு. அத்தோடு நிற்காமல், யதார்த்தமான பேச்சு வழக்கோடும், சிரித்த முகத்தோடும் மேடைகளில் வலம் வந்த தயாநிதி, தி.மு.க.வின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார் என்பதை, எந்த தி.மு.க. தொண்டனும் மறுக்க மாட்டான்.

தயாநிதியின் இந்தச் செயல்பாடுகள் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற இலக்கோடு அமைந்ததால், கலைஞர் மட்டுமல்ல.. மாறன் சகோதரர்களை ஒருவித சந்தேகக் கண்ணோடு பார்த்து வந்த ஸ்டாலின், அழகிரி ஆகியோரும் கூட ரசித்து, ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள். இதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்தன.

தேர்தல் முடிந்து, ஆட்சி அமைந்த சில மாதங்களில் சில மாவட்டச் செயலாளர்களைத் தொடர்பு கொண்ட தயாநிதி மாறன், மாவட்டம் தோறும், கட்சி அலுவலகங்களை நவீன வசதிகளுடன் அமைத்துத் தர தான் தயாராக இருப்பதாகச் சொன்னார். அத்துடன் மாவட்டச் செயலாளர்களுக்கு வாகன வசதியும், ஒன்றியம் தோறும் சிறிய அளவிலான கட்சி அலுவலகங்கள் அமைக்கவும் அவர் திட்டம் வைத்திருந்தார்.

சில மாவட்டச் செயலாளர்கள் மூலம் ஸ்டாலினுக்கு இந்த விஷயம் தெரியவர… ஒரு கட்டத்தில் கலைஞரின் காதுகளுக்கும் இந்த விஷயம் எட்டியதாகத் தெரிகிறது. ஓர் அவசர ஆலோசனைக்குப் பின் தயாநிதி மாறன் அளிக்க முன்வந்த உதவியையும் வசதியையும் புறக்கணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள் மாவட்டச் செயலாளர்கள். ‘இது கட்சிக்கு உதவி செய்வதற்கான யோசனை அல்ல…. கொஞ்சம் கொஞ்சமாக கட்சியையே கைப்பற்றுவதற்கான திட்டம்’ என்று ரத்த உறவுகளிடம் இருந்து வந்த கருத்துக்களைத் தொடர்ந்தே தயாநிதியின் உதவி ஏற்க மறுக்கப்பட்டது.

இதுதவிர, கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலர், ஆட்சி அமைந்த பின்பு தங்களின் வருத்தத்தை வெளியிட அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்த தயாநிதி, ‘உரிய’ உதவிகளை அவர்களுக்குச் செய்து தந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் தயாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடுகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தது அறிவாலய வட்டாரம். அதே நேரம் தயாநிதியின் செல்வாக்கு கட்சிக்குள் வேகமாகப் பரவி வருவதையும் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.

‘இதன் தொடர்ச்சியான நடவடிக்கையாகத்தான் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி, அதன் மூலம் பலனடையும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்’ என்ற வாதத்தை கலைஞர் ஏற்றுக் கொண்டதுதான் தயாநிதியின் தடாலடி நீக்கத்திற்குக் காரணம்!’ என்கிறார்கள் அந்தத் தலைவர்கள்.

தயாநிதியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட கணத்தில் இருந்தே… கலைஞருக்குப் பிறகு யார் என்ற கேள்வியும், அதற்கான பதிலும் உரக்க ஒலிக்கத் தொடங்கிவிட்டது. கலைஞரின் குடும்பத்திற்குள் ‘ஸ்டாலினை உங்கள் இடத்தில் அமர வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் தாமதிக்க வேண்டாம். உடனடியாக அதை நிறைவேற்றுங்கள்’ என்று கலைஞருக்கு குடும்பத்தின் விஸ்வரூப நெருக்கடிகள் அதிகமாக ஆரம்பித்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்.

அதற்குக் காரணமும் இருந்தது. சமீபத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசிய பொன்முடி, பழனிமாணிக்கம் போன்றவர்கள், கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான் தலைமையேற்க வேண்டும். அவர்தான் தகுதியான தலைவர் என்கிற ரீதியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். ஆனால், கடைசியாகப் பேசிய பேராசிரியர் அன்பழகன், ‘கலைஞரை வைத்துக் கொண்டு, அவருக்குப் பிறகு யார் என்று பேசக்கூடாது. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று, ஒருவித விரக்தியில் பேசினார்.

பேராசிரியரின் இந்தப் பேச்சுத்தான் கோபாலபுரத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி விட்டது என்கிறார்கள், அந்த வட்டாரத்தில். ‘நீங்கள் இருக்கும்போதே ஸ்டாலினை முழுமையாக ஏற்கமாட்டார்கள் போல் தெரிகிறது. உங்களுக்குப் பின்னால் பிரச்னையின்றி ஸ்டாலின் ஆட்சிப்பீடத்தில் அமர முடியுமா என்பது சந்தேகமே. எனவே, உங்கள் பிறந்தநாளான வரும் ஜூன் 3 அன்றே அதிகார மாற்றத்திற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்’ என்று தயாளு அம்மாள், அழகிரி உள்ளிட்ட கலைஞரின் ரத்த உறவுகள் நெருக்கடி தந்திருப்பதாகச் சொல்கிறார்கள், கோபாலபுரம் வட்டாரத்தில்.

‘ஒட்டுமொத்த கட்சியே தளபதியின் பின்னால் நிற்பது மாதிரிதான் தெரிகிறது. பிறகு ஏன் வீண் சந்தேகம் எழுகிறது?’ என்று நம்மிடம் இந்த விவரங்களைச் சொன்னவர்களிடம் கேட்டால், ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் பதில் சொல்கிறார்கள்.

‘‘தலைவரின் மகன் என்ற அடிப்படையில் இயல்பாகவே தளபதியின் பின்னால் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு நின்றார்கள், நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது என்பது சாதாரணமான விஷயமில்லை. அதுவும் தயாநிதி மாதிரியான வசீகரமும், பணபலமும் உள்ள ஒருவர் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும்போது, எவ்வளவோ உஷாராக இருக்க வேண்டிய ஸ்டாலின், அதைப்பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறோம். தலைவருக்கு வயது 84 ஆகிறது. இந்த வயதிலும் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வணக்கம் வைத்தால், வலது கையைத் தூக்க முடியாவிட்டாலும், இடது கையையாவது பாதி தூக்கி பதில் வணக்கம் சொல்வார் தலைவர். ஆனால் ஸ்டாலினுக்கு வணக்கம் சொன்னால், மாவட்டச் செயலாளர்களுக்கே கூட பல நேரங்களில் பதில் வணக்கம் கிடைப்பதில்லை. இதனால் உள்ளுக்குள்ளேயே வெந்து, நொந்து போனவர்கள் அனேகம் பேர்!

ஆனால் தயாநிதியின் பார்வையும், பழகும் விதமும் இதற்கு நேர்மாறானது. ஓராண்டுக்கு முன்பு தேர்தல் பிரசாரம் செய்யப் போனபோது முதன் முறையாக ஓர் ஒன்றியச் செயலாளரின் அறிமுகம் கிடைத்து, அவருடைய வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார் தயாநிதி. கடந்த மாதம் தலைவர் வீட்டிற்கு வந்திருந்தார் அந்த ஒன்றியச் செயலாளர். தலைவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தயாநிதி, இந்த ஒன்றியச் செயலாளரைப் பார்த்ததும் நினைவுபடுத்திக் கொண்டு அவரே வலியச் சென்று பெயரைச் சொல்லி அழைத்து நலம் விசாரித்தார். நெகிழ்ந்து போய் கண்ணீரே விட்டுவிட்டார் அந்த ஒன்றியச் செயலாளர். அதிகாரம், பதவி, பணம் இவற்றைவிட உண்மையான கட்சிக்காரன் விரும்புவது இதுபோன்ற பாச உணர்வைத்தான். இப்படித் தனது அன்பால் தமிழ்நாடு முழுக்கவுள்ள பலநூறு நிர்வாகிகளை இப்போதும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் தயாநிதி. தலைவருக்குப் பிறகு இவர்கள் என்ன நிலை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.

சமீபத்தில் கூட பாருங்கள். நாகப்பட்டினம் நகர சபைத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வுக்கு அதிக கவுன்சிலர்கள் இருந்தார்கள். ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் அந்த கவுன்சிலர்கள் கவனிக்கப்பட்டு, ‘கட்சியின் பெயர் உங்களின் செயல்பாடுகளில்தான் உள்ளது. தி.மு.க. ஜெயிக்க வேண்டும்’ என்று ஸ்டாலினே கேட்டுக் கொண்டார். ஆனால், சில தி.மு.க. கவுன்சிலர்கள் மாற்றி ஓட்டைப் போட்டுவிட, அங்கே அ.தி.மு.க. ஜெயித்துவிட்டது. ஸ்டாலினின் கட்டுப்பாடு இந்த அளவில்தான் இருக்கிறது. இது கலைஞருக்கும் தெரியும்.

‘தலைவருக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்ற எங்கள் தளபதியைத் தவிர வேறு எந்த நாதிக்கும் தகுதி கிடையாது’ என்று மேடையில் முழங்கிவிட்டு, அன்று இரவே ‘தயாநிதி ஊட்டியில் இருக்கிறாரா, சென்னை திரும்பிவிட்டாரா?’ அவரை எந்தச் சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்? என்று விசாரிக்கும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்த நிஜங்களை உணர்ந்துதான் இப்போதே அதிகாரத்தை மாற்றித் தரும்படி தலைவரை நிர்ப்பந்திக்கிறார்கள்!’’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இந்த நெருக்கடிகளுக்கிடையேதான் கடந்த 14_ம் தேதியன்று காலை, மகாபலிபுரம் புறப்பட்டுப் போனார் கலைஞர். அன்று இரவுவரை அங்கிருந்த கலைஞருடன் ஆற்காட்டார், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரும் உடனிருந்திருக்கிறார்கள்.

அங்கேதான், தனது உணர்வை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் கலைஞர். ‘நான் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை. ஏன்யா… நான் பதவியில் இல்லைன்னா என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வருவியா நீ?’ என்று துரைமுருகனைப் பார்த்துக் கேட்டாராம் கலைஞர். ஆனாலும் ஸ்டாலினுக்கு ஓர் அங்கீகாரம் தரும் வகையில் அவரை துணை முதல்வர் பதவியில் அமர வைக்கும் முடிவுக்கும் வந்திருக்கிறார் கலைஞர்.

ஸ்டாலின் துணை முதல்வரானால், பேராசிரியர், வெறும் அமைச்சராக இருப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால்தான், ‘அன்பழகனை துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க ஆவன செய்ய வேண்டும். குறைந்தபட்சம் கவர்னர் பதவியிலாவது அவரை அமர்த்த வேண்டும்’ என்று கேட்டு பிரதமருக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதி அதை ஆற்காட்டார் மூலமாகக் கொடுத்தனுப்பினாராம் கலைஞர். தனது பிறந்த நாளன்று ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கும் வகையில் கலைஞர் அறிவிப்புகளை வெளியிடலாம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

ஆனால், துணை ஜனாதிபதி, கவர்னர் என்ற இரண்டு யோசனையையும் நிராகரித்துவிட்டாராம் அன்பழகன். வேண்டுமானால் தர்மசங்கடத்தைத் தவிர்க்க, அமைச்சரவையிலிருந்து விலகவும்கூட அவர் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் கலைஞர் தரப்பில் தொடர்ந்து பேராசிரியரை வற்புறுத்தி வருகிறார்கள்.

இதன் பிறகுதான் ‘கழகம் எனும் காதலியைத் தேடி ஓடுகிறேன். காலமெல்லாம் காத்திருந்து கைபிடித்துவிட்டு, நள்ளிரவில் அவளைக் (கட்சியை) கைவிட்டுச் செல்வதற்கு நான் என்ன நளனா? அவள்தான் என்னை நம்பி ஏமாந்த தமயந்தியா?’ என்று கேட்டு கவிதை எழுதியிருக்கிறார் கலைஞர். கவிதைக்காக ‘காதலி’ என்ற போர்வையில் கட்சியைக் குறிப்பிடும் கலைஞர், மறைமுகமாகச் சொல்ல வந்தது, ஆட்சியைத்தான். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் ஆட்சியைவிட்டு இறங்கமாட்டேன்’ என்று இதன் மூலம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் கலைஞர்!’’ என்கிறார்கள்.

ஸ்டாலின் துணை முதல்வரானதும் பெங்களூர், கோவா போன்ற இடங்களில் அவ்வப்போது நீண்ட ஓய்வெடுக்கும் திட்டமும் கலைஞரிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.. இதன் மூலம் கட்சியும் ஆட்சியும் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் இருப்பதுடன் ஸ்டாலினும் பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறாராம் கலைஞர். ‘இதுதான் தி.மு.க.வின் இன்றைய நிலையும், கலைஞரின் மனநிலையும்’ என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

குமுதத்திலிருந்து.

—————————————————————–

குமுதம் ரிப்போர்ட்டர் –  10.06.07

திருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைந்த திகில் படத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது, கலைஞர்_மாறன் குடும்பத்தினரிடையே நடக்கும் மோதல். அந்தளவுக்கு மோதலும் சமாதானமும் மாறி மாறி தொடர்ந்து, இப்பிரச்னையை உயிரோட்டமாக வைத்திருக்கின்றன.

மே_29 அன்று டெல்லியிலிருந்து திரும்பிய கலைஞர், மாறனின் மகள் அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலினின் மகன், மற்றும் மகள் ஆகியோரைக் கடிந்து கொண்டதாகக் கடந்த இதழ் குமுதம் ரிப்போர்ட்டரில் குறிப்பிட்டிருந்தோம். மாறன் சகோதரர்களுடனான சமாதான முயற்சிகளை, கலைஞர் எந்த வகையிலும் விரும்பவில்லை என்பதைக் காட்டும் வகையிலேயே இந்தச் சம்பவத்தை எடுத்துக் கொண்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

ஆனால், கலைஞர் குடும்பத்துடன் மாறன் சகோதரர்களுக்கு முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்த நாள் முதலாக அதைச் சரிப்படுத்த முயன்றுவரும், கலைஞரின் மகள் செல்வி மட்டும் மனம் தளரவில்லை. தயாநிதி மீதான கட்சி நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பிருந்தே, தான் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியபோதும், செல்வி தனது முயற்சிகளைக் கைவிடவில்லை.

இதன் ஒரு கட்டமாக, எந்த அன்புக்கரசியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்குப் போனவர்களை கலைஞர் கண்டித்தாரோ…. அதே அன்புக்கரசியை, கடந்த வியாழன்று கோபாலபுரம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் செல்வி. முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் கலைஞரைச் சந்தித்துவிட்டுப் போனபிறகு, அன்புக்கரசி சகிதம் கலைஞரைச் சந்தித்துப் பேசினார் செல்வி. உணர்ச்சிபூர்வமாக நடந்த அந்த சந்திப்பைத் தொடர்ந்து கொஞ்சம் உற்சாகமாகவே வெளியேறியிருக்கிறார்கள் செல்வியும், அன்புக்கரசியும். மாறன் குடும்பத்தினரிடையேயும் ஒருவித திருப்தி அலைகளை ஏற்படுத்தியிருந்தது இந்தச் சந்திப்பு.

ஆனால், தயாளு அம்மாள், அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞர் குடும்பத்தினர் யாருக்கும் இந்தச் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் அவர்களை (கலாநிதி, தயாநிதி) மீண்டும் சேர்க்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள் இவர்கள். கடந்த சனிக்கிழமையன்று மாலை கோபாலபுரத்திற்கும், சி.ஐ.டி. காலனிக்கும் வரவழைக்கப்பட்ட பிரபல ஜோதிடர்கள் இருவரிடம் கலைஞர் வீட்டு பெண்மணிகள் ‘‘எல்லாம் நல்லபடியாகப் போகும்தானே…?’’ என்று விளக்கம் கேட்டுப் பெற்றதாகவும் ஒரு தகவல் உண்டு. அவர்கள் எதிர்பார்க்கும் ‘நல்லது’ என்பது சமாதானம் ஆகிவிடக்கூடாது என்பதுதானாம்!

இதற்கிடையில் சமாதான முயற்சிகளின் தூதுவராக வெளிப்படையாகவே களமிறங்கியிருக்கிறார் முரசொலி செல்வம். இவருடைய முயற்சிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பாக, இவரைப் பற்றியும், கலைஞருக்கு இவர் எந்த அளவுக்கு நெருக்கமானவர் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

திருவாரூர் மண்ணில் பிறந்த நீதிக்கட்சியின் தளபதிகளில் ஒருவரான ஏ.டி. பன்னீர்செல்வம் 1940_ல் நடைபெற்ற ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார். அவர் மீது பற்றுக்கொண்ட கலைஞர், அதே ஆண்டில் தனது சகோதரிக்கு (முரசொலி மாறனின் தம்பியாக) பிறந்த ஆண் குழந்தைக்கு பன்னீர்செல்வம் என்று பெயரிட்டார். பின்னாளில் ‘செல்வம்’ என்று சுருக்கி அழைத்தார்கள். ‘உனக்கு ஒரு மகள் பிறந்தால் இவனுக்கு திருமணம் செய்து கொடு’ என்று தனது தாய் அஞ்சுகம் சொன்ன வார்த்தைக்கேற்ப தனக்குப் பிறந்த மகளுக்கு செல்வி என்று பெயரிட்டு, செல்வத்திற்கே பின்னாளில் மணமுடித்து வைத்தார் கலைஞர்.

அண்ணன் முரசொலி மாறன் வெளிப்படையாக அரசியலில் இறங்கி, கலைஞருக்குத் துணையாக இருந்தார் என்றால், வெளிப்படையாக வராமல் கலைஞரின் அரசியல் தொடர்புகளுக்குப் பாலமாக விளங்கியவர் செல்வம்தான். முரசொலி ஆசிரியரான பின்பு ‘முரசொலி செல்வம்’ ஆனார்.

கலைஞருடன், நெருங்கிப் பழகும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்து, நெருக்கத்தை ஏற்படுத்தித் தந்தவர் முரசொலி செல்வமாகத்தான் இருப்பார். டி.ஆர்.பாலு, துரைமுருகன் பொன்முடி என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

‘அண்ணா மறைந்தபோது அவர் முகத்தைக் காண ஆவலுடன் இருந்த என்னை, உள்ளே அழைத்துச் சென்று அண்ணாவின் முகம் காணச் செய்தவர் செல்வம்தான்’ என்று வைகோ கூட ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

இப்படி இரண்டாம் தலைமுறைத் தலைவர்களுக்கும், கலைஞருக்கும் பாலமாக இருந்ததாலேயே, தான் நினைத்ததையும், மற்றவர்கள் கலைஞரிடம் சொல்ல நினைக்கும் விஷயங்களையும் தயங்காமல், உரிமையுடன் சொல்லும் சுதந்திரத்தைப் பெற்றார் செல்வம். இவருடைய வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் பல நேரங்களில் கலைஞர் மதிப்பளித்ததுண்டு!

உரிமைமீறல் பிரச்னை ஒன்றுக்காக 1992_ல் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்பட்டார், முரசொலி ஆசிரியர் பதவியிலிருந்த செல்வம். (இப்போதும் அதே பொறுப்பில் தொடர்கிறார்) சிரித்த முகத்துடன் அவர் கூண்டில் நின்ற போட்டோக்களை அடுத்த நாள் தினசரிகளில் பார்த்த கலைஞர், செல்வத்தை உச்சிமோந்து பாராட்டினார். ‘கூண்டு கண்டேன்; குதூகலம் கொண்டேன், என்று முரசொலியிலும்கூட எழுதினார் கலைஞர்.

இந்த நெருக்கமும், உரிமையும் தந்த இடத்தை வைத்துத்தான் மே_9 அன்று தி.மு.க. நிர்வாகக்குழு கூடுவதற்கு முன்பாக கலைஞருக்குக் கடிதம் எழுதிய செல்வம், ‘தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்’, என்று கேட்டுக் கொண்டார். கொஞ்சம் கடுமையான வார்த்தைகளுடன் அந்தக் கடிதம் இருந்தபோதும், அதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை கலைஞர். (செல்வத்தின் வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டு தயாநிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது வேறு விஷயம்!)

அந்த செல்வம்தான் கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும்தனது சமாதான முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறார். கலைஞரைச் சந்தித்து தனது தரப்பு விளக்கத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று, கடந்த சில வாரங்களாகவே முயற்சித்து வருகிறார் தயாநிதி. ஆனால் அதற்கான வாய்ப்பும், அனுமதியும் கிடைக்கவேயில்லை.

இந்த நிலையில், கலைஞரின் பிறந்த நாளையட்டி அவரைச் சந்தித்து வாழ்த்திவிட வேண்டும். முடிந்தால் தனது விளக்கத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுத்த தயாநிதி, ஜூன் 2_ம் தேதியன்று செல்வத்தை அனுப்பி கலைஞரிடம் பேச வைத்திருக்கிறார். ‘தயாநிதி உங்களைச் சந்திக்க விரும்புகிறான்’ என்று செல்வம் சொல்ல… அதற்குப் பதிலளித்த கலைஞர், ‘நான் சந்திக்கத் தயார். ஆனால், அதற்கு முன்பாக அவர்களை (கலாநிதி_தயாநிதி) அழகிரியைப் போய்ப் பார்க்கச் சொல். அழகிரி சம்மதித்தால், நான் அவர்களைச் சந்திக்கிறேன்!’ என்றாராம்.

கலைஞரின் இந்த வார்த்தைகள்தான் இரண்டு தரப்பையும் இரண்டு விதமாகப் பேச வைத்திருக்கிறது. ‘‘அவனை (அழகிரி) யாரென்று நினைத்தீர்கள்? அவன் என் மகன்! என் ரத்தம்!!’’ என்று தயாநிதிமாறனிடமே ஒருமுறை நேரடியாகச் சீறியவர் கலைஞர். அதே கோபம் இப்போதும் இருந்திருந்தால், ‘யார் நினைத்தாலும், யார் ஏற்றுக் கொண்டாலும் நான் சமாதானம் ஆகமாட்டேன்’, என்று சொல்லியிருப்பார். ஆனால் ‘அழகிரி சம்மதித்தால் நான் சந்திக்கத் தயார்’ என்று இப்போது இவர் சொல்லியிருப்பதே சமாதானத்தைக் கலைஞர் விரும்புகிறார் என்றுதான் அர்த்தம்’’, என்று சொல்லி சந்தோஷப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் மாறன் குடும்பத்தினர் தரப்பில்.

இவர்களின் சந்தோஷத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சமீப காலங்களில் சமாதானப் பேச்சுப் பேச வந்த அனைவரிடமும் கோபத்தைக் காட்டிய கலைஞர், ‘இத்தகைய முயற்சிகளை இனியும் மேற்கொள்ள வேண்டாம்’, என்றும் சொல்லியனுப்பினார். ஆனால், இந்த முறை தயாநிதிக்காக செல்வம் பேசியபோது இந்த வார்த்தைகளைச் சொன்ன கலைஞர், அதன்பிறகும் செல்வத்துடன் பழைய பாச உணர்வுடனேயே இருந்தார்.

அடுத்த நாள் கோபாலபுரத்தில் கலைஞர் பிறந்த நாள் கேக் வெட்டியபோது செல்வமும் உடனிருந்தார். அன்று மாலை நடைபெற்ற பிறந்தநாள் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார் செல்வம். இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர். பாலு, செல்வத்தின் பெயரையும் குறிப்பிட்டு வரவேற்றுப் பேசினார்.

‘‘இதே செல்வத்தை விமர்சித்து நட்பை விட கட்சிதான் பெரிது என்று நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசினார், செல்வத்தின் நண்பரும் அமைச்சருமான பொன்முடி. அன்றைய சூழ்நிலையில் அதையும் கலைஞர் ரசித்தார். இப்போது வழக்கத்தில் இல்லாத வகையில் செல்வத்தின் பெயரை தனியாகக் குறிப்பிட்டு பாலு சொன்ன போதும் அதை கலைஞர் ரசித்தார். இன்று சூழ்நிலை மாறியிருப்பதைத்தானே இது காட்டுகிறது?’’ என்று ஒரு வித திருப்தியோடு கேட்கிறார்கள் தயாநிதி தரப்பில்.

ஆனால், கலைஞர் குடும்பத்தினரின் கருத்துக்கள் வேறு மாதிரி இருக்கின்றன. ‘‘உணர்ச்சி வேகத்தில் நடைபெற்ற மதுரைச் சம்பவத்தை வைத்து அழகிரியைக் கொலைகாரன், ரவுடி, என்றெல்லாம் சன் டி.வி.யில் மாறி மாறிச் சொன்னதை கலைஞர் இன்னும் மறக்கவில்லை. இந்த வார்த்தைகள் அழகிரியை எந்தளவுக்கு பாதித்தன என்பதையும் கலைஞர் உணராமலில்லை.

கடந்த காலங்களை மறந்துவிட்டு, பின் விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல் மாறன் சகோதரர்கள் செய்த சில விஷயங்களை அழகிரியும் ஸ்டாலினும், ஏன்… தயாளு அம்மாள் உள்ளிட்ட எல்லோருமே மறக்கத் தயாராக இல்லை. இந்தப் பிளவுக்கு ஒரு அங்கீகாரம் தரும் வகையிலும் பழைய உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும்தான் சன் டி.வி.க்கு எதிராக கலைஞர் டி.வி. தொடங்கவும், தனியாக கேபிள் நெட் வொர்க் ஒன்றைத் தொடங்கவும் தீவிரமாக இருக்கிறார்கள் கலைஞர் குடும்பத்தினர்!’’ என்கிறார், இவர்களுக்கு நெருக்கமான கட்சி முன்னோடி ஒருவர்.

‘‘இந்தப் பின்னணியில் அழகிரி சமாதானம் ஆவதே நடக்காத காரியம் என்பதால்தான், ‘அழகிரி சம்மதித்தால் நான் தயாநிதியைச் சந்திக்கத் தயார்’ என்று நம்பிக்கையில்லாமல் சொன்னார் கலைஞர்’’ என்றும் சொல்கிறார் அந்தப் பிரமுகர்.

‘‘இப்போதைக்கு இந்த சமாதான முயற்சிக்கான லகானை அழகிரியிடம் தந்திருக்கிறார் கலைஞர். அதை வைத்து அவர் சமாதானத்தை எட்டிவிட வேண்டும் என்பதற்காக அல்ல இது. இப்போதுள்ள மனநிலையிலேயே, மாறன் சகோதர்களுக்கு எதிரான யுத்தத்தை சுதந்திரமாகவும் உறுதியாகவும் நடத்த கலைஞர் தந்திருக்கும் அனுமதிதான் அது!’’ என்றும் சொல்கிறார்கள் அழகிரி தரப்பில்.

அப்படியே அழகிரியுடன் சமாதானமாகப் போக நினைத்தாலும், தயாநிதியை அரசியல் ரீதியாக முடக்கிப்போடும் வகையில் சில நிபந்தனைகளை விதிப்பார்கள் என்பதால், அதைச் செய்ய மாறன் குடும்பத்தினர் ரொம்பவே தயங்குவார்கள் என்றும் சொல்கிறார்கள். தவிர, மதுரை வன்முறைச் சம்பவம் தொடர்பாக அழகிரிக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டுப்பெற்று, விசாரணையும் தொடங்கிவிட்ட நிலையில், அதே அழகிரியுடன் நாளை சமாதானமாகச் சென்றுவிட்டால், தினகரன் ஊழியர்களும், பொதுமக்களும் அதை எப்படிப் பார்ப்பார்கள் என்ற யோசனையும் தயாநிதி தரப்பில் இருக்கிறது.

இத்தனை சந்தேகங்கள், தயக்கங்களைத் தாண்டி செல்வத்தின் முயற்சிகள் எந்தளவுக்குக் கை கொடுக்கும்? அந்த முயற்சிகளை அழகிரியும் ஸ்டாலினும் எந்தளவுக்கு அனுமதிப்பார்கள் என்பதை இனிவரும் நாட்களில் நடக்கவுள்ள சம்பவங்கள்தான் உலகிற்கு உணர்த்தும்! ஸீ

கலைஞர் _ மாறன் குடும்பத்தினரிடையே மோதலும், சமாதான முயற்சிகளும் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க… சத்தமில்லாமல் ஒரு புத்தகத்தைப் படிக்கிறாராம், இந்த சர்ச்சைகளில் தொடர்புடைய ஒருவர். புத்தகத்தின் தலைப்பு ‘‘உறவுகள் மேம்பட!’’

உறவுகளுக்கிடையே நெருக்கமும், சிநேகமும் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது.. என்பதை விளக்கும் புத்தகம் இது. ‘நானே பெரியவன் என்ற அகந்தையை விட வேண்டும்… பின்விளைவுகளை அறியாமல் எதையும் பேசக்கூடாது… சில நேரங்களில் சில சங்கடங்களைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணரவேண்டும்… பிரச்னைகள் ஏற்படும்போது அடுத்தவர்தான் இறங்கி வரவேண்டும் என்று நினைக்காமல், நீங்கள் முதலில் பேச்சைத் தொடங்கவேண்டும்…’ என்றெல்லாம் பத்திபத்தியாக ஆலோசனை சொல்கிறதாம் அந்தப் புத்தகம்.

சரி…. இதைப் படிப்பது யார் என்று கேட்டால், ‘ஏப்பு… ஏதோ படிக்கிறார்… படித்துத் தெளிந்து நல்லது நடந்தால் சரிதானே? ஆள் யாருன்னு கேட்டு ஏன் இன்னொரு பிரச்னையைக் கிளறுரீக….’’ என்று யதார்த்தமாகச் சொன்னார், இத் தகவலை நமக்குச் சொன்ன வி.ஐ.பி.!

ஸீ எஸ்.பி. லட்சுமணன்

Posted in ADMK, Ads, Arts, Assets, AVM, Bribery, Bribes, BSNL, Campaign, Dayaalu Ammal, Dayalu Ammaal, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, Dinakaran, District Secretary, Districts, DMK, Elections, family, Feud, Government, Governor, Govt, Influence, Investment, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, Ka Anbalagan, Ka Anbhazhagan, Kalainjar, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kannada, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, kickbacks, Launch, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Malayalam, Maran, Market, Media, MR Radha, MSM, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, News, News Channel, Palani Manikkam, PalaniManikkam, Pazhani Manikkam, PazhaniManikkam, Polls, Power, Preach, Radaan, radan, Radhika, Raj, Raj TV, Rajendran, Rating, revenue, Sarathkumar, Secretary, Serial, Sharathkumar, Shares, Soap Opera, Soaps, Stalin, Stocks, Sun, Sun Network, Sun TV, Survey, Surya, Suryaa, Tamil News, TeleSerial, Television, Telugu, Thalapathi, thalapathy, Thayanidhi, Thayanidhy, Thayanithi, Thayanithy, TRP, TV, vice-president, VP | 1 Comment »

Tamil nadu Government’s Kalaimamani Award Recipients – Announcement (2007-08)

Posted by Snapjudge மேல் மே 10, 2007

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள்: பாலகுமாரன், இயக்குநர் பாலா, சிம்பு, த்ரிஷா உள்பட 60 பேருக்கு விருது அறிவிப்பு

சென்னை, மே 11: தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் பாலகுமாரன், இயக்குநர் பாலா, நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷா உள்பட 60 பேர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  1. கோவைத் தம்பி-திரைப்படத் தயாரிப்பாளர்
  2. சீமான்-திரைப்பட இயக்குநர்
  3. சிம்பு-திரைப்பட நடிகர்
  4. “ஜெயம்’ ரவி-திரைப்பட நடிகர்
  5. ஜீவா-திரைப்பட நடிகர்
  6. விஷால்-திரைப்பட நடிகர்
  7. த்ரிஷா-திரைப்பட நடிகை
  8. நவ்யா நாயர்-திரைப்பட நடிகை
  9. கஞ்சா கருப்பு-நகைச்சுவை நடிகர்
  10. ஆர்த்தி-நகைச்சுவை நடிகை
  11. வினித்-குணசித்திர நடிகர்
  12. பாலகுமாரன்-இயற்றமிழ் கலைஞர்
  13. வண்ணதாசன்-இயற்றமிழ் கலைஞர்
  14. கவிஞர் கலாப்பிரியா-இயற்றமிழ் கலைஞர்
  15. சுப.வீரபாண்டியன்-இலக்கியப் பேச்சாளர்
  16. மரபின் மைந்தன் முத்தையா-இலக்கியப் பேச்சாளர்
  17. கீதா ராஜசேகர்-இசை ஆசிரியர்
  18. சஞ்சய் சுப்ரமணியம்-குரலிசைக் கலைஞர்
  19. ஸ்ரீவத்சவா-மிருதங்கக் கலைஞர்
  20. சரஸ்வதி ராஜகோபாலன்-வீணைக் கலைஞர்
  21. டாக்டர் இரா.செல்வகணபதி-சமயச் சொற்பொழிவாளர்
  22. இறையன்பன் குத்தூஸ்-இறையருட்பாடகர்
  23. இஞ்சிக்குடி சுப்ரமணியன்-நாதஸ்வர கலைஞர்
  24. மலைக்கோட்டை எஸ்.சுப்ரமணியன்-தவில் கலைஞர்
  25. கிரிஜா பக்கிரிசாமி-பரதநாட்டிய ஆசிரியர்
  26. திவ்யா கஸ்தூரி-பரதநாட்டிய கலைஞர்
  27. சிந்தூரி-பரதநாட்டிய கலைஞர்
  28. திருநங்கை நர்த்தகி நடராஜ்-நாட்டிய நாடகக் கலைஞர்
  29. ஆர்.முத்தரசி-நாட்டிய நாடகக் கலைஞர்
  30. கவிஞர் இன்குலாப்-நாடக ஆசிரியர்
  31. பேராசிரியர் இரா.ராஜு-நவீன நாடக இயக்குநர்
  32. தங்கராஜ் என்ற எம்எல்ஏ தங்கராஜ்-நாடக நடிகர்
  33. வி.மூர்த்தி-நாடக நடிகர்
  34. தேவிப்பிரியா என்ற ரமணதேவி-நாடக நடிகை
  35. வி.ஆர்.திலகம்-பழம்பெரும் நாடக நடிகை
  36. சி.ஐ.டி.சகுந்தலா-பழம்பெரும் திரைப்பட நடிகை
  37. பா.விஜய்-திரைப்பட பாடலாசிரியர்
  38. நா.முத்துக்குமார்-திரைப்பட பாடலாசிரியர்
  39. கபிலன்-திரைப்பட பாடலாசிரியர்
  40. இயக்குநர் பாலா-திரைப்பட கதாசிரியர்
  41. வித்யாசாகர்-திரைப்பட இசையமைப்பாளர்
  42. மது பாலகிருஷ்ணன்-திரைப்பட பின்னணி பாடகர்
  43. திப்பு-திரைப்பட பின்னணி பாடகர்
  44. பாம்பே ஜெயஸ்ரீ-திரைப்பட பின்னணி பாடகி
  45. எம்.வி.பன்னீர்செல்வம்-திரைப்பட ஒளிப்பதிவாளர்
  46. விட்டல்-திரைப்பட எடிட்டர்
  47. நேஷனல் செல்லையா-திரைப்பட புகைப்படக் கலைஞர்
  48. அதிவீர பாண்டியன்-திரைப்பட பத்திரிகை ஆசிரியர்
  49. கே.அம்மச்சி விராமதி-நாட்டுப்புற இசைக் கலைஞர்
  50. ஆக்காட்டி ஆறுமுகம்-நாட்டுப்புற இசைக் கலைஞர்
  51. டாக்டர் கே.ஏ.குணசேகரன்-நாட்டுப்புற இசை ஆய்வாளர்
  52. டிராட்ஸ்கி மருது-ஓவியக் கலைஞர்
  53. சி.ஜெ.பாஸ்கர்-சின்னத்திரை இயக்குநர்
  54. விடுதலை-சின்னத்திரை கதை வசனகர்த்தா
  55. வேணு அரவிந்த்-சின்னத்திரை நடிகர்
  56. போஸ் வெங்கட்-சின்னத்திரை நடிகர்
  57. மௌனிகா-சின்னத்திரை நடிகை
  58. தீபா வெங்கட்-சின்னத்திரை குணச்சித்திர நடிகை
  59. டி.ஜி.தியாகராஜன்-சின்னத்திரை தயாரிப்பாளர்
  60. அலெக்ஸ்-தந்திரக்காட்சி கலைஞர்

Posted in Actor, Actress, Affiliation, Alex, Announcement, Arasi, Arts, Authors, Award, Awards, Bala, Balakumaran, Balu Mahendira, Balu mahendra, Bombat Jayashree, Bombat Jayashri, Bombat Jayasree, Bombat Jayasri, Bombat Jeyashree, Bombat Jeyashri, Bose Venkat, Campaign, Cinema, CJ Baskar, CJ Bhaskar, Comedian, Culture, Devipriya, Director, DMK, Dratski, Dratsky Maruthu, Financier, Government, Govt, Inquilab, Jayam, Jeeva, Jeyam, Kabilan, Kalaimamani, Kalapriya, Madhu Balakrishnan, Magician, Marudhu, Marudu, Maruthu, Maunika, Movies, music, MV Paneerselvam, Na Muthukumar, Nandha, Narthaki, Narthaki Nataraj, Narthaki Natraj, National Chellaia, National Chellaiah, Navya, Navya Nayar, Pa Vijai, Pa Vijay, Paa Vijai, Paa Vijay, Party, Pithamagan, Pithamakan, Poet, Producer, Radhika, Ravi, Recipients, Recognition, Sanjai Subramaniam, Sanjay Subramaniam, Seeman, Selvi, Serial, Sethu, Silambarasan, Simbu, Soaps, Stars, Suba Veerapandiyan, SubaVee, SubaVeerapandiyan, SubaVi, Sun TV, Tamil Nadu, Television, TG Thiagarajan, TG Thiakarajan, TG Thyagarajan, TG Thyakarajan, Thrisha, Tippu, Tratski, Tratsky, Trisha, TV, Vannadasan, Vannadhasan, Venu Aravind, Venu Aravindh, Venu Aravinth, Vidhyasagar, Vidyasagar, Vineet, Vineeth, Vishaal, Vishal, Vittal, VR Thilagam, Writer | Leave a Comment »

Vijay TV – What to watch at 8:30?

Posted by Snapjudge மேல் மே 3, 2007

எட்டரை மணிக்கு என்ன பார்க்கலாம்?

விஜய் டி.வி. அறிமுகப்படுத்தியுள்ள புதிய நிகழ்ச்சியின் பெயர்தான் “8.30 மணிக்கு என்ன பார்க்கலாம்?’. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாள்களுக்கு ஒரு கதை ஒளிபரப்பாகும். ஆறு வாரங்கள் கழித்து எந்தக் கதைக்கு அதிக எதிர்பார்ப்பும், ஆதரவும் உள்ளதோ அந்தக் கதை, மெகா தொடராக விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும். அதே சமயம், இந்த கதைகளைப் பற்றி வெவ்வேறு பார்வையாளர்களுடன் நடிகை சுஹாசினி விவாதிக்கும் பகுதியும் ஒளிபரப்பாகிறது. அத்துடன் பிரபல இயக்குநர்கள் பாலுமகேந்திரா, அமீர், வசந்தபாலன், ராதாமோகன், வசந்த், எழில் ஆகியோரும் நேயர்களுடன் தொடர் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

ஒளிபரப்பாகும் தொடர்கள்:

  1. ஆயிரம் ஜன்னல் வீடு (01),
  2. மீண்டும் ஒரு காதல் கதை (02),
  3. சொல்லத்தான் நினைக்கிறேன் (03),
  4. மதுரை (04),
  5. தேவர் கோயில் ரோஜா (05) ,
  6. மென்பொருள் (06) .

வாக்களிக்கும் முறை: நேயர்கள் தங்களுக்குப் பிடித்த தொடருக்கு எஸ்.எம்.எஸ்., டெலிவோட்டிங் மற்றும் இணையதளம் மூலம் வாக்களிக்கலாம். தொடர் எண் “ஒன்று’ பிடித்திருந்தால் உங01 என்றும், “மூன்று’ பிடித்திருந்தால் உங03 என்றும் டைப் செய்து 7827 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

இணையதளத்தில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய விரும்புவோர் http://www.indya.com க்கு சென்று வாக்களிக்கலாம். டெலிவோட்டிங் செய்ய விரும்புபவர்கள் 505782727 மற்றும் 12782727 என்ற எண்களுக்குத் தங்கள் மொபைல் மூலம் தொடர்புகொள்ளலாம்.

Posted in Ameer, Balu mahendra, Ezhil, Indya, Program, Programmes, Radhamohan, Serial, SMS, Star, Suhasini, Tamil TV, Television, TV, Vasanth, Vasanthabalan, Vijai, Vijay, Vijay TV, Watch | Leave a Comment »

TV & Cinema actress Saritha seeks divorce from Mukesh

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

கணவர் முகேஷ் கொடுமைப்படுத்துவதாக புகார்: நடிகை சரிதா விவாகரத்து மனு

சென்னை, மார்ச். 16-

“தப்புத் தாளங்கள்,” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சரிதா தொடர்ந்து நூல்வேலி, மவுனகீதங்கள், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, நெற்றிக்கண், ஜுலி கணபதி உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

சில வருடங்களுக்கு முன் மலையாள நடிகர் முகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். முகேஷ் தமிழில் “ஜாதிமல்லி” உள்பட சில படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பின் சரிதா கணவர் முகேசுடன் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வந்தார்.

இவர்களுக்கு 17 வயது, 15 வயதில் 2மகன்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சரிதா மீண் டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பாலமகேந்திரா டைரக்ஷ னில் “ஜுலி கணபதி” படத்திலும், ஜோதிகாவுடன் “ஜுன்-ஆர்” படத்திலும் டி.வி. சீரியல்களிலும் நடித்தார். சரிதா கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இதற்கிடையே கணவரிடம் இருந்து விவகாரத்து கேட்டு நடிகை சரிதா சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தன்னை கணவர் முகேஷ் கொடுமைப்படுத்துவதாகவும், எனவே அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றுத் தருமாறும் கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் இன்று விசார ணைக்கு வந்தது.

அப்போது நடிகை சரிதா கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆனார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதே போல் சரிதாவின் கணவர் முகேஷ் கொச்சி கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது 2 மகன்களும் சரிதா வசம் உள்ளனர். மகன்களை மாதத் துக்கு ஒரு முறை பார்க்கவும், சந்தித்து பேசவும், அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

Posted in abuse, Affair, Alimony, Allegation, Balachandar, Balachander, Blackmail, Divorce, Husband, Jaathimalli, Jathimalli, KB, Marriage, Money, Mukesh, Rumour, Salary, Sarita, Saritha, Selvi, Serial, Sun TV, Tamil Actress, Torture, TV, Wedding | 1 Comment »

TV serial on Sandalwood smuggler Veerappan gets stay order

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 13, 2007

வீரப்பன் பற்றிய டிவி தொடருக்குத் தடை

சென்னை, பிப்.13:சந்தனக் கடத்தல் வீரப்பன் பற்றி தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பக் கூடாது என்று தமிழன் டிவிக்கு சென்னை சிவில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தொடர்ந்த வழக்கில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவீரன்‘ என்ற தலைப்பில் வீரப்பனின் கதையை படமாக்கி பிப்ரவரி 14 முதல் ஒளிபரப்ப தமிழன் டிவி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. என் அனுமதியில்லாமல் என் கணவரின் கதையை தொலைக்காட்சியில் ஒளிபரப்பக் கூடாது. அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை 8-வது சிவில் நீதிமன்றத்தில் முத்துலட்சுமி வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிப்ரவரி 13-ம் தேதி வரை தமிழன் டிவிக்கு இடைக்காலத் தடை விதித்தது. அன்றைய தினம் இவ்வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்.

Posted in Ban, Biography, Fiction, Maaveeran, Maveeran, Muthulakshmi, rights, Sandalwood, Serial, smuggler, stay order, Tamilan TV, Television, Thamizh, Thamizhan TV, TV, Veerappan | Leave a Comment »

‘Selvi’ actress Devi Priya Marriage – Allegations & dispelling the arguments

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

4 பெண்களை ஏமாற்றிய டி.வி.நடிகையின் காதலன் கேரளாவுக்கு தப்பி ஓட்டம்

சென்னை, பிப்.12-

டி.வி. நடிகை தேவி பிரியா கோழிப்பண்ணை அதிபர் வில்லியம் ஐசக்கை காதலித்தார். இருவரும் வருகிற 19-ந் தேதி பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

தேவிபிரியாவின் காதலன் ஐசக் ஏற்கனவே பல பெண் களை ஏமாற்றி திரு மணம் செய்தவர். அவரது முதல் மனைவி ஸ்டெல்லா ஐசக்கின் லீலைகளை உணர்ந்து கொடுமை தாங்காமல் பிரிந்து சென்று விட்டார். 2004-ம் ஆண்டு அவருக்கு ஐகோர்ட்டு விவாகரத்து வழங்கியது.

திருமணத்தின் போது வரதட்சணையாக வழங்கப் பட்ட 46 சவரன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்க பணத்தை ஸ்டெல்லாவுக்கு ஐசக் திருப்பி தரவில்லை. இது பற்றி மீண்டும் ஸ்டெல்லா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். உடனடியாக அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தர விட்டது. அதன்பேரில் அடையாறு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா வழக்கு பதிவு செய்தார்.

ஐசக்கின் தாய் குளோரியை போலீசார் கைது செய்தனர். போலீஸ் தேடி வருவதை முன் கூட்டியே அறிந்து கொண்ட ஐசக் தப்பி ஓடி விட்டார். அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. தனிப்படை ஒன்று கேரளாவுக்கு விரைந் துள்ளது.

போலீசார் ஐசக் பற்றி விசாரித்த போது அவரது காம களியாட்டங்கள் அம்பல மானது.

அடையாறு வள்ளுவர் நகரில் வசித்து வந்த ஐசக்கின் குடும்பம் அரசியல்ë தொடர் புடையது. தாயார் குளோரி சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலராக இருந்தவர். அரசியல் செல்வாக் கால் ஐசக் மனம் போல் ஆட்டம் போட்டார்.

கால்கட்டு போட்டால் மகன் திருந்தி விடுவான் என்று குளோரி ஸ்டெல்லாவை திரு மணம் செய்து வைத்தார்.

மனைவி வந்த பிறகும் ஐசக் திருந்தவில்லை. திருமணத் திற்கு முன்பே இருந்த பெண் தொடர்புகளை மீண்டும் தொடர்ந்தார். இதுவே அவர்கள் குடும்பத்தில் புயலாக வீசி ஸ்டெல்லா பிரிந்து செல்லும் அளவுக்கு வந்தது.

முன்னாள் கணவரின் செக்ஸ் லீலைகள் பற்றி ஸ்டெல்லா விரக்தியுடன் போலீசில் கூறியதாவது:-

எங்கள் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே செல் போனில் பல பெண்கள் அவருடன் மணிகணக்கில் பேசுவார்கள். நான் ஆரம் பத்தில் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.

அவருடன் நான் வாழ்ந்தது 3 மாதம்தான். அப்போது அனுபவித்த கொடுமைகள் ஏராளம். ஸ்டார் வீடியோ விஷன் என்ற பெயரில் சி.டி.விற்பனை கடை நடத்தினார்.

வீட்டில் வேலை இல்லாத நேரத்தில் கடைக்கு செல்வேன். கடையில் வேலை பார்த்த பிரேமா என்ற விதவை பெண் ணை என் கண் எதிரிலேயே காலால் உரசி சில்மிஷன் செய்வார்.

இரவில் வீட்டுக்கு வந்ததும் டி.வி.யில் புளூபிலிம் ஓட விட்டு என்னை பார்க்க சொல்வார். அதே போல் நீயும் நடந்து கொள் என்று படாத பாடு படுத்துவார். தினமும் மது குடிக்க சொல்லி வற்புறுத்துவார். அவரும் மது அருந்தி விட்டு செக்ஸ் டார்ச்சர் பண்ணுவார்.

மதுவின் மயக்கத்தில் தள்ளாடும் ஐசக் இரவில் தூங்கிவிடுவார். காலையில் 6 மணிக்கு எழுந்து வருவார். காலையில் மனதுக்கு இனிமையான பக்தி பாடல்கள்தான் எல்லோர் வீடு களிலும் ஒலிக்கும். ஆனால் எங்கள் வீட்டில் அப் போது புளூ பிலிம் ஓடவிட்டு படம் தெரியா மல் ஆப் செய்து விட்டு ஆடியோவில் முனகல் சத்தத்தை மட்டும் கேட்டு ரசிப்பார்.

மாம்பலத்தை சேர்ந்த கிருஷ்ணகுமாரின் மனைவி ஹேம்மாலினியுடன் கள்ள தொடர்பு வைத்தார். அவரது கணவர் விரட்டி விட்டதால் தனி வீடு எடுத்து ஹேமமாலி னியை தங்க வைத்தார். ஐசக் மூலமாக ஹேமமாலினிக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.

மனைவி அடுத்தவருடன் இருந்து குழந்தை பெற்றதும் ஆத்திரம் அடைந்த கிருஷ்ண குமார் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். ஹேமமாலி னியை அனுபவித்த ஐசக் அவளிடம் இருந்து நைசாக கழன்று விட்டார்.

அதன் பிறகு நடிகை தேவிபிரியாவின் தங்கை பிரியாவுடன் சுற்றி திரிந்தார். அவளே கிதி என்று அவள் வீட்டிலேயே கிடந்தார். ஒரு கட்டத்தில் கோவிலில் வைத்து அவளை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு அவளையும் கழட்டிவிட்டு தேவிபிரியாவை பிடித்து கொண்டார் என்றார்.

தலைமறைவாக இருக்கும் ஐசக்கிற்கு புளூ பிலிம் கும்பலுடன் தொடர்வு இருப்பதாக கூறப்படுகிறது. புளூபிலிம் தயாரித்து விற்பனை செய்ததில் லட்ச லட்சமாய் பணம் கொட்டி உள்ளது. இதனால் கழுத்து நிறைய தங்கசங்கிலி, ஆடம்பர கார், தினமும் நட்சத்திர ஓட்டல்களில் விரும்பிய பெண்ணை அனுபவித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

அவர் பிடிபட்டால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

4 பெண்களுடன் காமகளியாட்டம் போட்ட கில்லாடி ஐசக் என்பது தெரிந்தும் அவர் மீது கொண்ட மோகத்தால் என் காதலன் பத்தரை மாற்று தங்கம் கோர்ட்டில் வழக்குகளை சந்தித்து புடம் போட்ட தங்கமாக வெளியே வருவார். அவரை நான் மணப்பது உறுதி என்று தேவிபிரியா பிடிவாதமாக இருக்கிறார்.

ஐசக்கின் லீலைகளை போலீசார் ஒன்றுவிடாமல் தேவிபிரியாவிடம் கூறினார்கள். அதை கேட்டதும் எல்லாம் எனக்கு தெரியும். என்று ஒரே போடாக போட்டார்.

இதற்கு பிறகுமா அவரை கட்டிக்க போகிறீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு `ஆமாம்’ என்று ஆணித்தர மாக கூறிவிட்டார்.

தேவிபிரியாவை 19-ந் தேதி பதிவு திருமணம் செய்ய ஐசக் திட்டமிட்டுள்ளார். எனவே அதற்குள் அவரை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளார்கள்.

தேவிபிரியா போனில் யார் யாருடன் பேசுகிறார் என்பதையும் அவர் எங்கு போகிறார் என்பதையும் போலீ சார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

என் திருமணத்தை தடுக்க சதி: நடிகை தேவிபிரியா பரபரப்பு பேட்டி

தொழில் அதிபர் வில்லியம் ஐசக் திருமண விஷயத்தில நடந்தது என்ன என்பது பற்றி நடிகை தேவிபிரியா “மாலைமலர்” நிருபரிடம் கூறியதாவது:-

என் சொந்த ஊர் மதுரை சொக்கிக்குளம். அங்கு தான் நான் பிறந்தேன். பிறகு என் குடும்பத்தினர் சென்னை வந்து விட்டனர். சென்னையில் படித்த நான் முதலில் ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றினேன்.

பிறகு சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் எனக்கு வில்லியம் ஐசக் அறிமுகமானார். 11 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் முதல் சந்திப்பு நடந்தது.

வில்லியம் ஐசக் பார்ப்பதற்கு பயங்கரமானவர் போல தெரிந்ததால் முதலில் எனக்கு அவரை கண்டாலே பயமாக இருக்கும். ஆனால் நாளடைவில்தான் அவர் மிகவும் நல்லவர் என்று தெரிய வந்தது.

ஐசக் முதலில் அடையாறில் சி.டி. கடை வைத்திருந்தார். சினிமாவில் நடிக்கும் ஆசையிலும் இருந்தார். இதற்காகவே ஒரு டெலிபிலிம் தயாரித்தார். அந்த டெலிபிலிமில் அவருடன் நானும் நடித்தேன்.

டெலிபிலிமில் சேர்ந்து நடித்ததால் ஐசக் குடும்பத்தினருக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் இடையே நட்பு மேலும் அதிகரித்தது. ஐசக்கின் தாய் குளோரி அப்போது காங்கிரஸ் கவுன்சிலராக இருந்தார். அரசியலில் இருக்கிறார்களே, இவர்களுடன் பழகலாமா என்று என் தாய் கூட முதலில் மிகவும் பயந்தார்.

ஆனால் ஐசக்கும் அவர் தாயும் நன்கு பழகியதால் எங்கள் நட்பில் நெருக்கம் ஏற் பட்டது. இந்த நிலையில்தான் ஐசக்குக்கு தாம்பரத்தில் உள்ள ஸ்டெல்லா என்ற பெண்ணை பேசி திருமணத்துக்கு நிச்சயம் செய்து இருப்பதாக அவர் தாய் குளோரி கூறினார்.

அப்போது ஐசக்குக்கு 25 அல்லது 26 வயது தான் இருக்கும். “என்ன இவ்வளவு சின்ன வயதில் திருமணம் செய்கிறீர்கள்” என்று கேட்டதற்கு “நல்ல காரியத்தை சீக்கிரம் நடத்தி விட வேண்டும்” என்றனர்.

தாம்பரத்தில் தான் ஐசக்- ஸ்டெல்லா திருமணம் நடந் தது. தி.மு.க.-காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரு மணத்துக்கு வந்திருந்தனர். மிகப் பிரமாண்டமாக அந்த திருமணம் நடந்தது.

இதுபற்றி நான் ஐசக்கிடம், “டேய் எனக்கே பொறாமையாக இருக்கிறது” என்று கிண்டலடித்தேன். திருமணத்தில் பங்கேற்று அவரை வாழ்த்தி விட்டு வந்தோம். அதன் பிறகு அவருடன் இருந்த நட்பு எனக்கு குறைந்து விட்டது.

நீண்ட நாட்கள் கழித்து ஐசக் குடும்பத்தினருடன் எனக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. அப்போது தான் ஐசக்-ஸ்டெல்லா இருவரும் சரியாக வாழவில்லை. திரு மணமான 3மாதத்திலேயே பிரிந்து விட்டனர் என்பது எனக்குத் தெரிய வந்தது.

ஐசக் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்று நான் கூட வருத்தப்பட்டேன். விசாரித்த போது ஸ்டெல்லா குணம் சரி இல்லாதவர் என்று தெரிந்தது. ஐசக்கை அவர் சந்தேகத்துடன் பார்த்துள்ளார்.

தினம், தினம் ஐசக்கை ஸ்டெல்லா டார்ச்சர் செய்து இருக்கிறார். சூட்டிங் சமயத்தில் மற்றவர்களுடன் ஐசக் எடுத்துக் கொண்ட போட்டோக்களை எடுத்து வைத்து கொண்டு “இவளுடன் தொடர்பு வைத்து இருக்கிறீர்களாப” என்பாராம்.

ஐசக்கிடம் எப்போதுமே சந்தேகத்துடன் பழகி உள்ளார். 24 மணி நேரமும் தேள் மாதிரி கொட்டினால் எந்த புருஷனுக்குத்தான் கோபம் வராதுப ஸ்டெல்லா சந்தே கப்புத்தியால் அவர் மீது ஐசக் கிற்கு எரிச்சல், வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனாலே அவர்கள் பிரிந்து விட்டனர்.

4 ஆண்டுக்கு முன்பே அவர்கள் கோர்ட்டில் முறைப்படி விவாகரத்து பெற்று விட்டனர். இது தெரிந்த பிறகே ஐசக்கை நான் திருமணம் செய்ய நினைத்தேன். ஸ்டெல்லா வாழ்க்கையை நான் கெடுக்கவில்லை. அவர் வாழ்க்கையை அவரே கெடுத் துக் கொண்டார்.

கிராமங்களில் திமிர் பிடித்த பெண்ணை “ராங்கிப் பிடித்தவள்” என்பார்கள். ஸ்டெல்லா அந்த ரகத்தை சேர்ந்தவர். ஐசக் பல தடவை சமரசம் செய்தும் மனம் இரங்காதவர்.

“ஐசக்கை வாழ விடக்கூடாது, அவரை ஜெயிலில் தள்ளியே தீருவேன் என்று அவர் சவால் விட்டுள்ளதாக தெரிகிறது. எனவேதான் அவர் விவாகரத்து பெற்ற பிறகும் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

நானும், ஐசக்கும் 19-ந் தேதி திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்பதை அறிந்ததும் அவருக்கு தாங்க முடியவில்லை. எனவேதான் ஐசக் மீது இல்லாத புகார்களை எல்லாம் வாரி இறைத்துள்ளார். ஏதாவது ஒரு காரணம் வேண்டுமே என்பதற்காக வரதட்சணை பொருட்களை திருப்பி தரு மாறு மீண்டும் கதை விட் டுள்ளார்.

கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்த போதே ஐசக்- ஸ்டெல்லா இடையே எந்த கொடுக்கலும் வாங்கலும் இல்லை என்று தீர்ப்பாகி இருக்கிறது. இது ஸ்டெல்லாவுக்கும் நன்கு தெரியும். என்றாலும், எங்கள் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சதி செய்து பொய் புகார்களை அள்ளி விட்டுள்ளார்.

ஐசக்கும் அவர் குடும்பத்தினரும் நல்லவர்கள், கடவுளுக்கு பயந்தவர்கள். ஞாயிறு தோறும் தேவால யத்துக்குச் சென்று பிரார்த் திக்கும் பழக்கம் உடையவர்கள்.

அப்படிப்பட்டவர்கள் மீது ஸ்டெல்லா புழுதியை வாரி இறைத்துள்ளார். நிர்வாண படத்தை ஓட விட்டு செக்ஸ் சித்ரவதை செய்ததாக கூறி இருக்கிறார். ஐசக் சி.டி. கடை நடத்தியவர். வீட்டில் ஆங்கில சி.டி. படங்களை போட்டுப் பார்ப்பார். இது பெரிய தவறா?

என் தங்கை பிரியா என்றும் அவளை ஐசக் முதலில் திருமணம் செய்ததாக மற்றொரு அபாண்டமான பழி சுமத்தப்பட்டுள்ளது. என் பெயர் தான் பிரியா. என் தங்கை பெயர் பிரியா அல்ல. மீனா குமாரி, என்னை விட அவள் 8 வயது இளையவள்.

அதிகம் படிக்காத அவள் என்னுடன் சூட்டிங் நடக்கும் இடங்களுக்கு வருவாள். ஐசக் டெலிபிலிம் தயாரித்தபோதும் அவள் என்னுடன் இருந்தாள். சூட்டிங் முடிந்த பிறகு அவள் ஜாலியாக நீச்சல் குளத்தில் எங்களுடன் குளித்தாள்.

அப்போது அவளையும், என்னையும் சேர்த்து போட்டோ எடுத்தனர். சாதாரணமாக நடந்த அந்த நிகழ்வை கொச்சைப்படுத்தலாமா அந்த போட்டோவை வெளியிட்டு பழி சுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது.

ஐசக் கெட்டவர் என்றால் ஸ்டெல்லா ஒதுங்கிப் போய் இருக்கலாமே? ஆனால் ஸ்டெல்லா வேண்டும் என்றே 4 வருடங்கள் கழித்து எங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார். 4 ஆண்டாக சும்மா இருந்து விட்டு இப்போதே ஐசக்கை நான் திருமணம் செய்யப் போகிறேன் என்றதும் குறுக்கிடுகிறார்.

இது போல எத்தனை தடைகள் வந்தாலும் நான் கவலைப்பட போவதில்லை. நிராயுதபாணியாக நான் இப்போது நிற்கிறேன். எனக்கு அமைதி தேவை. எனவே எனக்கும் ஐசக்குக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும்.

இதில் ஒளிவு மறைவே இல்லை. எங்கள் திருமணம் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்துவேன்.

நான் பணத்துக்காக ஐசக்கை விரும்பவில்லை. நான் நினைத்தால் கோடீசுவரர்களை கூட வளைத்துப் போடமுடியும். ஆனால் நான் அப்படிப்பட்ட பெண் அல்ல. ஐசக்கை திருமணம் செய்து அமைதியான வாழ்க்கை வாழவே விரும்புகிறேன்.

விரைவில் ஐசக் மீதான புகார்கள் ஆதாரம் இல்லாதது என நிரூபமனமாகும். கடவுள் நல்ல வழி காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் காத்து இருக்கிறேன்.

இவ்வாறு நடிகை தேவிபிரியா கூறினார்.

டி.வி. நடிகை தேவிப்ரியா காதலர் விவகாரம்: தலைமறைவாக உள்ள விடியோ கடை உரிமையாளர் மீது 2-வது மனைவி புகார்

சென்னை, பிப். 14: வரதட்சிணை கொடுத்த நகைகளை திருப்பி தராத வழக்கில் தலைமறைவாக உள்ள விடியோ கடை உரிமையாளர் மீது அவரது 2-வது மனைவி போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

போனில் தொந்தரவு செய்து வரும் ஐசக் வில்லியம்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சென்னை அடையாறு திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த குளோரி ஜெயராஜின் மகன் ஐசக் வில்லியம்ஸ். 1999-ல் தாம்பரத்தை அடுத்த மெப்பேடு பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லாவை திருமணம் செய்தார்.

பின்னர், 2004-ல் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர். ஆனால், திருமணத்தின்போது வரதட்சிணையாகப் பெற்ற 47 சவரன் நகைகளை திருப்பித் தரவில்லை.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வரதட்சிணை பெற்ற நகைகளை திருப்பித் தரும்படி உத்தரவிட்டது. ஆனாலும் ஐசக் அவற்றைத் திருப்பித் தரவில்லை.

இதையடுத்து அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், ஸ்டெல்லா புகார் செய்தார்.

புகாரின்பேரில் முன்னாள் வார்டு கவுன்சிலரான குளோரி ஜெயராஜை போலீஸôர் கைது செய்தனர். ஐசக் வில்லியம்ஸ் தலைமறைவானார். மேலும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

இந்நிலையில் ஸ்டெல்லா தரப்பினர், ஐசக் வில்லியம்ஸýக்கு முன்ஜாமீன் தரக்கூடாது என்று கோரி நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு செய்ய உள்ளனர்.

டி.வி. நடிகையுடன் தொடர்பு: தலைமறைவாக உள்ள ஐசக் வில்லியம்ஸ் டிவி நடிகை தேவிப்ரியா மற்றும் அவரது தங்கையுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்நிலையில் ஐசக் வில்லியம்ûஸ திருமணம் செய்யப் போவதாக தேவிப்ரியா கூறியுள்ளார்.

2-வது மனைவி புகார்: இதற்கிடையில் ஐசக் வில்லியம்ஸின் இரண்டாவது மனைவி ஹேமாமாலினி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், தனக்கு போனில் தொந்தரவு செய்து வரும் வில்லியம்ûஸ கைது செய்யும்படி குறிப்பிட்டுள்ளார். இல்லையெனில் தீக்குளிக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேவிப்பிரியா ஆபாச சிடி சிக்கியது?முன் ஜாமீன்

4 பெண்களை மணந்த ஐசக்குடன் காதல், அரைகுறை உடையில் தங்கைஐசக் சகிதமாக கும்மாளம், புளு பிலிம் என சர்ச்சை பல்வேறு சிக்கல்களில் மாட்டி தங்கை, அம்மாவுடன் தலைமறைவாகிவிட்ட டிவி நடிகை தேவிப்பிரியாவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

19ம் தேதி ஐசக்கை கல்யாணம் செய்யப் போவதாக தேவிப்பிரியா அறிவித்த மறு நிமிடமே ஸ்டெல்லா, ஹேமமாலினி, பிரேமா உள்பட பல பெண்கள் பொங்கி எழுந்து ஐசக் என் கணவர், என்னை ஏமாற்றியவன் என புகார்களை அடுக்கினர்.

மேலும் தான் நடத்திய வீடியோ கடையில் வேலை பார்த்த பெண்களையும் கெடுத்துள்ளான், பல நடிகைகளை வைத்து ப்ளு பிலிம் எடுத்துள்ளான் என புகார் கூறினர்.

அத்தோடு தேவிப்பிரியா, அவரது தங்கை ப்ரியா என்ன மீனா குமாரி ஆகியோரோடும் ஐசக்குக்கு தவறான தொடர்பு உள்ளது, ப்ளு பிலிம் விஷயத்தில் இவர்களுக்கும் தொடர்புண்டு என்றனர்.

இதையடுத்து முதலில் ஐசக் தலைமறைவாக அடுத்ததாக தேவிப்பிரியாவும் அவரது தங்கையும் ஹேமமாலினியை ஆள் வைத்து மிரட்டிய வழக்கில் கைதாக இருந்த நிலையில் தலைமறைவாகிவிட்டனர்.

மாட்டியிருப்பது ஐசக்கின் தாயார் குளோரி மட்டுமே. இவர் சிறையில் உள்ளார். ஐசக்கின் முன் ஜாமீன் மன தள்ளுபடியாகிவிட்டது. இந் நிலையில் தேவிப்பிரியாவும் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். போலீஸார் தன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாலும், கைதாக வாய்ப்புள்ளதாலும் முன் ஜாமீன் தர வேண்டும் என்று தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.

முன்னதாக ஹேமமாலினி கொடுத்த புகாரின் பேரில் தேவிப்பிரியா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏகப்பட்ட ப்ளு பிலிம் விசிடிக்கள் சிக்கியுள்ளன. அந்த சிடிக்களைப் போட்டுப் பார்த்தபோது அதில் நடித்திருந்தவர் தேவிப்பி>யா என்பது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை அதிகாரி ஒருவ>டம் கேட்டபோது, தேவிப்பி>யா வீட்டிலிருந்து நிறைய ஆபாசப் பட சிடிக்களைக் கைப்பற்றியுள்ளோம். அதில் சில சிடிக்களில் தேவிப்பிரியா முழு நிர்வாணத்தில் ஆபாசமாக நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு சிடியில் ஐசக், தேவிப்பிரியா, அவரது தங்கை மீனாகுமாரி ஆகியோர் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர். இன்னொரு சிடியில் இவர்கள் தவிர வேறு சில பெண்களும் நிர்வாணமாக படுத்துக் கிடக்கின்றனர்.

இந்த ஆபாச சிடிக்களை விபச்சாரத் தடுப்பு பிரிவிடம் கொடுத்துள்ளோம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் விபச்சாரத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றார் அவர்.

இதனால்தான் தேவிப்பிரியா, தனது தங்கையைக் கூட்டிக் கொண்டு தலைமறைவானார்.

முன்னதாக தேவிப்பிரியாவை நக்கீரன் வார இதழின் நிருபர் செல்போனில் தொடர்பு கொண்டு நீங்கள் ப்ளு பிலிமில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, நான் நடிச்சா என்ன தப்பு, இதனால சமூகத்துக்கு என்ன கேடு என்று கேட்டாராம்.

சூப்பர்ர்ர்ர் கேள்வி…

முன் ஜாமீன்:

இந் நிலையில் தேவிப்பிரியாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. அவரது மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி,

உடனடியாக எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் பெறலாம். அடையாறு காவல் நிலையத்தில் 3 நாட்களுக்கு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

டி.வி. நடிகையின் ஆபாசக் காட்சிகள்

தற்போது விடியோ கடை அதிபர் ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள அந்த டி.வி. நடிகை தொடர்பான சில சி.டி.,க்கள் போலீசார் வசம் சிக்கியுள்ளதாம்.

அதில், தனது காதலர் மற்றும் மேலும் சில நடிகைகளுடன் அந்த பிரபல டி.வி. நடிகை ஆதிகாலத்துப் பெண்ணாக காட்சியளிக்கிறாராம்.

‘இது கிராபிக்ஸ் வேலை தான்’ என்று நடிகை தரப்பிலிருந்து எப்போதும் அறிக்கை வரலாம்.

எனினும், அதில் எந்த மாயஜாலங்களும் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

நடிகை தேவிபிரியா நீதிமன்றத்தில் ஆஜர்

கொலை மிரட்டல் புகார் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்த நடிகை தேவிபிரியா.

சென்னை, பிப். 24: நடிகை தேவிபிரியா நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினார்.

சென்னையைச் சேர்ந்தவர் ஐசக். இவரது முதல் மனைவி ஸ்டெல்லா, வரதட்சிணை வழக்கில் தனது நகைகளை ஒப்படைக்காதது தொடர்பாக போலீஸôரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து ஐசக் தலைமறைவானார். ஆனால், ஐசக்கின் தாய் குளோரியை போலீஸôர் கைது செய்தனர்.

இந் நிலையில் ஐசக்கின் 2-வது மனைவி ஹேமமாலினி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக ஐசக் மற்றும் நடிகை தேவிபிரியா மீது அடையாறு காவல்நிலையத்தில் 2 முறை புகார் கொடுத்தார்.

இப் புகார்களின்பேரில், தன்னை போலீஸôர் கைது செய்யக்கூடும் என்பதால் உயர் நீதிமன்றத்தில் தேவி பிரியா முன்ஜாமீன் கோரினார்.

இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தேவிபிரியா ஆஜராகி, ஜாமீன் தொகையை செலுத்தினார்.

அவருக்கு நீதிபதி காயத்ரி முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஐசக்கும், நானும் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதுதொடர்பாக என் மீது சுமத்தப்பட்ட புகார்களில் உண்மை இல்லை. சட்ட ரீதியாக இதைச் சந்திப்பேன். இந்த வழக்கு விவகாரம் முடிந்த பின் நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார் தேவிபிரியா.

Posted in Actress, Adyar, CD Sales, Congress, Congress (I), Devipriya, Divorce, Glamour, Glory, Images, Marriage, MLC, Nakkeeran, Nakkiran, Prema, Prostituition, Rumour, Selvi, Sensational, Serial, Sex Abuse, Star Video Vision, Stella, TV, Valluvar Nagar, VCD, Videos, Wedding, William Issac, XXX | 15 Comments »

Radhika to continue Sun TV’s ‘Selvi’ episodes without Sarita’s presence

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2006

புதிய தாமரை கிடையாது
செல்வி தொடரில் இருந்து சரிதா திடீரென விலகியதால் தாமரை கேரக்டருக்கு வேறு ஒரு பிரபல நடிகையை ஒப்பந்தம் செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் தாமரை கேரக்டரையே திருப்திகரமாக முடித்து விட தீர்மானித்துள்ளார்கள்.

இதையடுத்து செல்வி கதையை வேறு விதமாக கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதன் மூலம் செல்விக்கு கூடுதல் விறுவிறுப்பு கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Posted in Episode, Radaan, Radhika, Sarita, Saritha, Selvi, Serial, Sun TV, Television | Leave a Comment »