Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Selvi’ Category

Tamil nadu Government’s Kalaimamani Award Recipients – Announcement (2007-08)

Posted by Snapjudge மேல் மே 10, 2007

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள்: பாலகுமாரன், இயக்குநர் பாலா, சிம்பு, த்ரிஷா உள்பட 60 பேருக்கு விருது அறிவிப்பு

சென்னை, மே 11: தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் பாலகுமாரன், இயக்குநர் பாலா, நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷா உள்பட 60 பேர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  1. கோவைத் தம்பி-திரைப்படத் தயாரிப்பாளர்
  2. சீமான்-திரைப்பட இயக்குநர்
  3. சிம்பு-திரைப்பட நடிகர்
  4. “ஜெயம்’ ரவி-திரைப்பட நடிகர்
  5. ஜீவா-திரைப்பட நடிகர்
  6. விஷால்-திரைப்பட நடிகர்
  7. த்ரிஷா-திரைப்பட நடிகை
  8. நவ்யா நாயர்-திரைப்பட நடிகை
  9. கஞ்சா கருப்பு-நகைச்சுவை நடிகர்
  10. ஆர்த்தி-நகைச்சுவை நடிகை
  11. வினித்-குணசித்திர நடிகர்
  12. பாலகுமாரன்-இயற்றமிழ் கலைஞர்
  13. வண்ணதாசன்-இயற்றமிழ் கலைஞர்
  14. கவிஞர் கலாப்பிரியா-இயற்றமிழ் கலைஞர்
  15. சுப.வீரபாண்டியன்-இலக்கியப் பேச்சாளர்
  16. மரபின் மைந்தன் முத்தையா-இலக்கியப் பேச்சாளர்
  17. கீதா ராஜசேகர்-இசை ஆசிரியர்
  18. சஞ்சய் சுப்ரமணியம்-குரலிசைக் கலைஞர்
  19. ஸ்ரீவத்சவா-மிருதங்கக் கலைஞர்
  20. சரஸ்வதி ராஜகோபாலன்-வீணைக் கலைஞர்
  21. டாக்டர் இரா.செல்வகணபதி-சமயச் சொற்பொழிவாளர்
  22. இறையன்பன் குத்தூஸ்-இறையருட்பாடகர்
  23. இஞ்சிக்குடி சுப்ரமணியன்-நாதஸ்வர கலைஞர்
  24. மலைக்கோட்டை எஸ்.சுப்ரமணியன்-தவில் கலைஞர்
  25. கிரிஜா பக்கிரிசாமி-பரதநாட்டிய ஆசிரியர்
  26. திவ்யா கஸ்தூரி-பரதநாட்டிய கலைஞர்
  27. சிந்தூரி-பரதநாட்டிய கலைஞர்
  28. திருநங்கை நர்த்தகி நடராஜ்-நாட்டிய நாடகக் கலைஞர்
  29. ஆர்.முத்தரசி-நாட்டிய நாடகக் கலைஞர்
  30. கவிஞர் இன்குலாப்-நாடக ஆசிரியர்
  31. பேராசிரியர் இரா.ராஜு-நவீன நாடக இயக்குநர்
  32. தங்கராஜ் என்ற எம்எல்ஏ தங்கராஜ்-நாடக நடிகர்
  33. வி.மூர்த்தி-நாடக நடிகர்
  34. தேவிப்பிரியா என்ற ரமணதேவி-நாடக நடிகை
  35. வி.ஆர்.திலகம்-பழம்பெரும் நாடக நடிகை
  36. சி.ஐ.டி.சகுந்தலா-பழம்பெரும் திரைப்பட நடிகை
  37. பா.விஜய்-திரைப்பட பாடலாசிரியர்
  38. நா.முத்துக்குமார்-திரைப்பட பாடலாசிரியர்
  39. கபிலன்-திரைப்பட பாடலாசிரியர்
  40. இயக்குநர் பாலா-திரைப்பட கதாசிரியர்
  41. வித்யாசாகர்-திரைப்பட இசையமைப்பாளர்
  42. மது பாலகிருஷ்ணன்-திரைப்பட பின்னணி பாடகர்
  43. திப்பு-திரைப்பட பின்னணி பாடகர்
  44. பாம்பே ஜெயஸ்ரீ-திரைப்பட பின்னணி பாடகி
  45. எம்.வி.பன்னீர்செல்வம்-திரைப்பட ஒளிப்பதிவாளர்
  46. விட்டல்-திரைப்பட எடிட்டர்
  47. நேஷனல் செல்லையா-திரைப்பட புகைப்படக் கலைஞர்
  48. அதிவீர பாண்டியன்-திரைப்பட பத்திரிகை ஆசிரியர்
  49. கே.அம்மச்சி விராமதி-நாட்டுப்புற இசைக் கலைஞர்
  50. ஆக்காட்டி ஆறுமுகம்-நாட்டுப்புற இசைக் கலைஞர்
  51. டாக்டர் கே.ஏ.குணசேகரன்-நாட்டுப்புற இசை ஆய்வாளர்
  52. டிராட்ஸ்கி மருது-ஓவியக் கலைஞர்
  53. சி.ஜெ.பாஸ்கர்-சின்னத்திரை இயக்குநர்
  54. விடுதலை-சின்னத்திரை கதை வசனகர்த்தா
  55. வேணு அரவிந்த்-சின்னத்திரை நடிகர்
  56. போஸ் வெங்கட்-சின்னத்திரை நடிகர்
  57. மௌனிகா-சின்னத்திரை நடிகை
  58. தீபா வெங்கட்-சின்னத்திரை குணச்சித்திர நடிகை
  59. டி.ஜி.தியாகராஜன்-சின்னத்திரை தயாரிப்பாளர்
  60. அலெக்ஸ்-தந்திரக்காட்சி கலைஞர்

Posted in Actor, Actress, Affiliation, Alex, Announcement, Arasi, Arts, Authors, Award, Awards, Bala, Balakumaran, Balu Mahendira, Balu mahendra, Bombat Jayashree, Bombat Jayashri, Bombat Jayasree, Bombat Jayasri, Bombat Jeyashree, Bombat Jeyashri, Bose Venkat, Campaign, Cinema, CJ Baskar, CJ Bhaskar, Comedian, Culture, Devipriya, Director, DMK, Dratski, Dratsky Maruthu, Financier, Government, Govt, Inquilab, Jayam, Jeeva, Jeyam, Kabilan, Kalaimamani, Kalapriya, Madhu Balakrishnan, Magician, Marudhu, Marudu, Maruthu, Maunika, Movies, music, MV Paneerselvam, Na Muthukumar, Nandha, Narthaki, Narthaki Nataraj, Narthaki Natraj, National Chellaia, National Chellaiah, Navya, Navya Nayar, Pa Vijai, Pa Vijay, Paa Vijai, Paa Vijay, Party, Pithamagan, Pithamakan, Poet, Producer, Radhika, Ravi, Recipients, Recognition, Sanjai Subramaniam, Sanjay Subramaniam, Seeman, Selvi, Serial, Sethu, Silambarasan, Simbu, Soaps, Stars, Suba Veerapandiyan, SubaVee, SubaVeerapandiyan, SubaVi, Sun TV, Tamil Nadu, Television, TG Thiagarajan, TG Thiakarajan, TG Thyagarajan, TG Thyakarajan, Thrisha, Tippu, Tratski, Tratsky, Trisha, TV, Vannadasan, Vannadhasan, Venu Aravind, Venu Aravindh, Venu Aravinth, Vidhyasagar, Vidyasagar, Vineet, Vineeth, Vishaal, Vishal, Vittal, VR Thilagam, Writer | Leave a Comment »

TV & Cinema actress Saritha seeks divorce from Mukesh

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

கணவர் முகேஷ் கொடுமைப்படுத்துவதாக புகார்: நடிகை சரிதா விவாகரத்து மனு

சென்னை, மார்ச். 16-

“தப்புத் தாளங்கள்,” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சரிதா தொடர்ந்து நூல்வேலி, மவுனகீதங்கள், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, நெற்றிக்கண், ஜுலி கணபதி உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

சில வருடங்களுக்கு முன் மலையாள நடிகர் முகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். முகேஷ் தமிழில் “ஜாதிமல்லி” உள்பட சில படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பின் சரிதா கணவர் முகேசுடன் கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வந்தார்.

இவர்களுக்கு 17 வயது, 15 வயதில் 2மகன்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சரிதா மீண் டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பாலமகேந்திரா டைரக்ஷ னில் “ஜுலி கணபதி” படத்திலும், ஜோதிகாவுடன் “ஜுன்-ஆர்” படத்திலும் டி.வி. சீரியல்களிலும் நடித்தார். சரிதா கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இதற்கிடையே கணவரிடம் இருந்து விவகாரத்து கேட்டு நடிகை சரிதா சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தன்னை கணவர் முகேஷ் கொடுமைப்படுத்துவதாகவும், எனவே அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றுத் தருமாறும் கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் இன்று விசார ணைக்கு வந்தது.

அப்போது நடிகை சரிதா கோர்ட்டில் நேரில் ஆஜர் ஆனார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதே போல் சரிதாவின் கணவர் முகேஷ் கொச்சி கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது 2 மகன்களும் சரிதா வசம் உள்ளனர். மகன்களை மாதத் துக்கு ஒரு முறை பார்க்கவும், சந்தித்து பேசவும், அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

Posted in abuse, Affair, Alimony, Allegation, Balachandar, Balachander, Blackmail, Divorce, Husband, Jaathimalli, Jathimalli, KB, Marriage, Money, Mukesh, Rumour, Salary, Sarita, Saritha, Selvi, Serial, Sun TV, Tamil Actress, Torture, TV, Wedding | 1 Comment »

‘Selvi’ actress Devi Priya Marriage – Allegations & dispelling the arguments

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

4 பெண்களை ஏமாற்றிய டி.வி.நடிகையின் காதலன் கேரளாவுக்கு தப்பி ஓட்டம்

சென்னை, பிப்.12-

டி.வி. நடிகை தேவி பிரியா கோழிப்பண்ணை அதிபர் வில்லியம் ஐசக்கை காதலித்தார். இருவரும் வருகிற 19-ந் தேதி பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

தேவிபிரியாவின் காதலன் ஐசக் ஏற்கனவே பல பெண் களை ஏமாற்றி திரு மணம் செய்தவர். அவரது முதல் மனைவி ஸ்டெல்லா ஐசக்கின் லீலைகளை உணர்ந்து கொடுமை தாங்காமல் பிரிந்து சென்று விட்டார். 2004-ம் ஆண்டு அவருக்கு ஐகோர்ட்டு விவாகரத்து வழங்கியது.

திருமணத்தின் போது வரதட்சணையாக வழங்கப் பட்ட 46 சவரன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்க பணத்தை ஸ்டெல்லாவுக்கு ஐசக் திருப்பி தரவில்லை. இது பற்றி மீண்டும் ஸ்டெல்லா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். உடனடியாக அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தர விட்டது. அதன்பேரில் அடையாறு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா வழக்கு பதிவு செய்தார்.

ஐசக்கின் தாய் குளோரியை போலீசார் கைது செய்தனர். போலீஸ் தேடி வருவதை முன் கூட்டியே அறிந்து கொண்ட ஐசக் தப்பி ஓடி விட்டார். அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. தனிப்படை ஒன்று கேரளாவுக்கு விரைந் துள்ளது.

போலீசார் ஐசக் பற்றி விசாரித்த போது அவரது காம களியாட்டங்கள் அம்பல மானது.

அடையாறு வள்ளுவர் நகரில் வசித்து வந்த ஐசக்கின் குடும்பம் அரசியல்ë தொடர் புடையது. தாயார் குளோரி சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலராக இருந்தவர். அரசியல் செல்வாக் கால் ஐசக் மனம் போல் ஆட்டம் போட்டார்.

கால்கட்டு போட்டால் மகன் திருந்தி விடுவான் என்று குளோரி ஸ்டெல்லாவை திரு மணம் செய்து வைத்தார்.

மனைவி வந்த பிறகும் ஐசக் திருந்தவில்லை. திருமணத் திற்கு முன்பே இருந்த பெண் தொடர்புகளை மீண்டும் தொடர்ந்தார். இதுவே அவர்கள் குடும்பத்தில் புயலாக வீசி ஸ்டெல்லா பிரிந்து செல்லும் அளவுக்கு வந்தது.

முன்னாள் கணவரின் செக்ஸ் லீலைகள் பற்றி ஸ்டெல்லா விரக்தியுடன் போலீசில் கூறியதாவது:-

எங்கள் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே செல் போனில் பல பெண்கள் அவருடன் மணிகணக்கில் பேசுவார்கள். நான் ஆரம் பத்தில் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.

அவருடன் நான் வாழ்ந்தது 3 மாதம்தான். அப்போது அனுபவித்த கொடுமைகள் ஏராளம். ஸ்டார் வீடியோ விஷன் என்ற பெயரில் சி.டி.விற்பனை கடை நடத்தினார்.

வீட்டில் வேலை இல்லாத நேரத்தில் கடைக்கு செல்வேன். கடையில் வேலை பார்த்த பிரேமா என்ற விதவை பெண் ணை என் கண் எதிரிலேயே காலால் உரசி சில்மிஷன் செய்வார்.

இரவில் வீட்டுக்கு வந்ததும் டி.வி.யில் புளூபிலிம் ஓட விட்டு என்னை பார்க்க சொல்வார். அதே போல் நீயும் நடந்து கொள் என்று படாத பாடு படுத்துவார். தினமும் மது குடிக்க சொல்லி வற்புறுத்துவார். அவரும் மது அருந்தி விட்டு செக்ஸ் டார்ச்சர் பண்ணுவார்.

மதுவின் மயக்கத்தில் தள்ளாடும் ஐசக் இரவில் தூங்கிவிடுவார். காலையில் 6 மணிக்கு எழுந்து வருவார். காலையில் மனதுக்கு இனிமையான பக்தி பாடல்கள்தான் எல்லோர் வீடு களிலும் ஒலிக்கும். ஆனால் எங்கள் வீட்டில் அப் போது புளூ பிலிம் ஓடவிட்டு படம் தெரியா மல் ஆப் செய்து விட்டு ஆடியோவில் முனகல் சத்தத்தை மட்டும் கேட்டு ரசிப்பார்.

மாம்பலத்தை சேர்ந்த கிருஷ்ணகுமாரின் மனைவி ஹேம்மாலினியுடன் கள்ள தொடர்பு வைத்தார். அவரது கணவர் விரட்டி விட்டதால் தனி வீடு எடுத்து ஹேமமாலி னியை தங்க வைத்தார். ஐசக் மூலமாக ஹேமமாலினிக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.

மனைவி அடுத்தவருடன் இருந்து குழந்தை பெற்றதும் ஆத்திரம் அடைந்த கிருஷ்ண குமார் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். ஹேமமாலி னியை அனுபவித்த ஐசக் அவளிடம் இருந்து நைசாக கழன்று விட்டார்.

அதன் பிறகு நடிகை தேவிபிரியாவின் தங்கை பிரியாவுடன் சுற்றி திரிந்தார். அவளே கிதி என்று அவள் வீட்டிலேயே கிடந்தார். ஒரு கட்டத்தில் கோவிலில் வைத்து அவளை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு அவளையும் கழட்டிவிட்டு தேவிபிரியாவை பிடித்து கொண்டார் என்றார்.

தலைமறைவாக இருக்கும் ஐசக்கிற்கு புளூ பிலிம் கும்பலுடன் தொடர்வு இருப்பதாக கூறப்படுகிறது. புளூபிலிம் தயாரித்து விற்பனை செய்ததில் லட்ச லட்சமாய் பணம் கொட்டி உள்ளது. இதனால் கழுத்து நிறைய தங்கசங்கிலி, ஆடம்பர கார், தினமும் நட்சத்திர ஓட்டல்களில் விரும்பிய பெண்ணை அனுபவித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

அவர் பிடிபட்டால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

4 பெண்களுடன் காமகளியாட்டம் போட்ட கில்லாடி ஐசக் என்பது தெரிந்தும் அவர் மீது கொண்ட மோகத்தால் என் காதலன் பத்தரை மாற்று தங்கம் கோர்ட்டில் வழக்குகளை சந்தித்து புடம் போட்ட தங்கமாக வெளியே வருவார். அவரை நான் மணப்பது உறுதி என்று தேவிபிரியா பிடிவாதமாக இருக்கிறார்.

ஐசக்கின் லீலைகளை போலீசார் ஒன்றுவிடாமல் தேவிபிரியாவிடம் கூறினார்கள். அதை கேட்டதும் எல்லாம் எனக்கு தெரியும். என்று ஒரே போடாக போட்டார்.

இதற்கு பிறகுமா அவரை கட்டிக்க போகிறீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு `ஆமாம்’ என்று ஆணித்தர மாக கூறிவிட்டார்.

தேவிபிரியாவை 19-ந் தேதி பதிவு திருமணம் செய்ய ஐசக் திட்டமிட்டுள்ளார். எனவே அதற்குள் அவரை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளார்கள்.

தேவிபிரியா போனில் யார் யாருடன் பேசுகிறார் என்பதையும் அவர் எங்கு போகிறார் என்பதையும் போலீ சார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

என் திருமணத்தை தடுக்க சதி: நடிகை தேவிபிரியா பரபரப்பு பேட்டி

தொழில் அதிபர் வில்லியம் ஐசக் திருமண விஷயத்தில நடந்தது என்ன என்பது பற்றி நடிகை தேவிபிரியா “மாலைமலர்” நிருபரிடம் கூறியதாவது:-

என் சொந்த ஊர் மதுரை சொக்கிக்குளம். அங்கு தான் நான் பிறந்தேன். பிறகு என் குடும்பத்தினர் சென்னை வந்து விட்டனர். சென்னையில் படித்த நான் முதலில் ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றினேன்.

பிறகு சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் எனக்கு வில்லியம் ஐசக் அறிமுகமானார். 11 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் முதல் சந்திப்பு நடந்தது.

வில்லியம் ஐசக் பார்ப்பதற்கு பயங்கரமானவர் போல தெரிந்ததால் முதலில் எனக்கு அவரை கண்டாலே பயமாக இருக்கும். ஆனால் நாளடைவில்தான் அவர் மிகவும் நல்லவர் என்று தெரிய வந்தது.

ஐசக் முதலில் அடையாறில் சி.டி. கடை வைத்திருந்தார். சினிமாவில் நடிக்கும் ஆசையிலும் இருந்தார். இதற்காகவே ஒரு டெலிபிலிம் தயாரித்தார். அந்த டெலிபிலிமில் அவருடன் நானும் நடித்தேன்.

டெலிபிலிமில் சேர்ந்து நடித்ததால் ஐசக் குடும்பத்தினருக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் இடையே நட்பு மேலும் அதிகரித்தது. ஐசக்கின் தாய் குளோரி அப்போது காங்கிரஸ் கவுன்சிலராக இருந்தார். அரசியலில் இருக்கிறார்களே, இவர்களுடன் பழகலாமா என்று என் தாய் கூட முதலில் மிகவும் பயந்தார்.

ஆனால் ஐசக்கும் அவர் தாயும் நன்கு பழகியதால் எங்கள் நட்பில் நெருக்கம் ஏற் பட்டது. இந்த நிலையில்தான் ஐசக்குக்கு தாம்பரத்தில் உள்ள ஸ்டெல்லா என்ற பெண்ணை பேசி திருமணத்துக்கு நிச்சயம் செய்து இருப்பதாக அவர் தாய் குளோரி கூறினார்.

அப்போது ஐசக்குக்கு 25 அல்லது 26 வயது தான் இருக்கும். “என்ன இவ்வளவு சின்ன வயதில் திருமணம் செய்கிறீர்கள்” என்று கேட்டதற்கு “நல்ல காரியத்தை சீக்கிரம் நடத்தி விட வேண்டும்” என்றனர்.

தாம்பரத்தில் தான் ஐசக்- ஸ்டெல்லா திருமணம் நடந் தது. தி.மு.க.-காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரு மணத்துக்கு வந்திருந்தனர். மிகப் பிரமாண்டமாக அந்த திருமணம் நடந்தது.

இதுபற்றி நான் ஐசக்கிடம், “டேய் எனக்கே பொறாமையாக இருக்கிறது” என்று கிண்டலடித்தேன். திருமணத்தில் பங்கேற்று அவரை வாழ்த்தி விட்டு வந்தோம். அதன் பிறகு அவருடன் இருந்த நட்பு எனக்கு குறைந்து விட்டது.

நீண்ட நாட்கள் கழித்து ஐசக் குடும்பத்தினருடன் எனக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. அப்போது தான் ஐசக்-ஸ்டெல்லா இருவரும் சரியாக வாழவில்லை. திரு மணமான 3மாதத்திலேயே பிரிந்து விட்டனர் என்பது எனக்குத் தெரிய வந்தது.

ஐசக் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்று நான் கூட வருத்தப்பட்டேன். விசாரித்த போது ஸ்டெல்லா குணம் சரி இல்லாதவர் என்று தெரிந்தது. ஐசக்கை அவர் சந்தேகத்துடன் பார்த்துள்ளார்.

தினம், தினம் ஐசக்கை ஸ்டெல்லா டார்ச்சர் செய்து இருக்கிறார். சூட்டிங் சமயத்தில் மற்றவர்களுடன் ஐசக் எடுத்துக் கொண்ட போட்டோக்களை எடுத்து வைத்து கொண்டு “இவளுடன் தொடர்பு வைத்து இருக்கிறீர்களாப” என்பாராம்.

ஐசக்கிடம் எப்போதுமே சந்தேகத்துடன் பழகி உள்ளார். 24 மணி நேரமும் தேள் மாதிரி கொட்டினால் எந்த புருஷனுக்குத்தான் கோபம் வராதுப ஸ்டெல்லா சந்தே கப்புத்தியால் அவர் மீது ஐசக் கிற்கு எரிச்சல், வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனாலே அவர்கள் பிரிந்து விட்டனர்.

4 ஆண்டுக்கு முன்பே அவர்கள் கோர்ட்டில் முறைப்படி விவாகரத்து பெற்று விட்டனர். இது தெரிந்த பிறகே ஐசக்கை நான் திருமணம் செய்ய நினைத்தேன். ஸ்டெல்லா வாழ்க்கையை நான் கெடுக்கவில்லை. அவர் வாழ்க்கையை அவரே கெடுத் துக் கொண்டார்.

கிராமங்களில் திமிர் பிடித்த பெண்ணை “ராங்கிப் பிடித்தவள்” என்பார்கள். ஸ்டெல்லா அந்த ரகத்தை சேர்ந்தவர். ஐசக் பல தடவை சமரசம் செய்தும் மனம் இரங்காதவர்.

“ஐசக்கை வாழ விடக்கூடாது, அவரை ஜெயிலில் தள்ளியே தீருவேன் என்று அவர் சவால் விட்டுள்ளதாக தெரிகிறது. எனவேதான் அவர் விவாகரத்து பெற்ற பிறகும் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

நானும், ஐசக்கும் 19-ந் தேதி திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்பதை அறிந்ததும் அவருக்கு தாங்க முடியவில்லை. எனவேதான் ஐசக் மீது இல்லாத புகார்களை எல்லாம் வாரி இறைத்துள்ளார். ஏதாவது ஒரு காரணம் வேண்டுமே என்பதற்காக வரதட்சணை பொருட்களை திருப்பி தரு மாறு மீண்டும் கதை விட் டுள்ளார்.

கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்த போதே ஐசக்- ஸ்டெல்லா இடையே எந்த கொடுக்கலும் வாங்கலும் இல்லை என்று தீர்ப்பாகி இருக்கிறது. இது ஸ்டெல்லாவுக்கும் நன்கு தெரியும். என்றாலும், எங்கள் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சதி செய்து பொய் புகார்களை அள்ளி விட்டுள்ளார்.

ஐசக்கும் அவர் குடும்பத்தினரும் நல்லவர்கள், கடவுளுக்கு பயந்தவர்கள். ஞாயிறு தோறும் தேவால யத்துக்குச் சென்று பிரார்த் திக்கும் பழக்கம் உடையவர்கள்.

அப்படிப்பட்டவர்கள் மீது ஸ்டெல்லா புழுதியை வாரி இறைத்துள்ளார். நிர்வாண படத்தை ஓட விட்டு செக்ஸ் சித்ரவதை செய்ததாக கூறி இருக்கிறார். ஐசக் சி.டி. கடை நடத்தியவர். வீட்டில் ஆங்கில சி.டி. படங்களை போட்டுப் பார்ப்பார். இது பெரிய தவறா?

என் தங்கை பிரியா என்றும் அவளை ஐசக் முதலில் திருமணம் செய்ததாக மற்றொரு அபாண்டமான பழி சுமத்தப்பட்டுள்ளது. என் பெயர் தான் பிரியா. என் தங்கை பெயர் பிரியா அல்ல. மீனா குமாரி, என்னை விட அவள் 8 வயது இளையவள்.

அதிகம் படிக்காத அவள் என்னுடன் சூட்டிங் நடக்கும் இடங்களுக்கு வருவாள். ஐசக் டெலிபிலிம் தயாரித்தபோதும் அவள் என்னுடன் இருந்தாள். சூட்டிங் முடிந்த பிறகு அவள் ஜாலியாக நீச்சல் குளத்தில் எங்களுடன் குளித்தாள்.

அப்போது அவளையும், என்னையும் சேர்த்து போட்டோ எடுத்தனர். சாதாரணமாக நடந்த அந்த நிகழ்வை கொச்சைப்படுத்தலாமா அந்த போட்டோவை வெளியிட்டு பழி சுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது.

ஐசக் கெட்டவர் என்றால் ஸ்டெல்லா ஒதுங்கிப் போய் இருக்கலாமே? ஆனால் ஸ்டெல்லா வேண்டும் என்றே 4 வருடங்கள் கழித்து எங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார். 4 ஆண்டாக சும்மா இருந்து விட்டு இப்போதே ஐசக்கை நான் திருமணம் செய்யப் போகிறேன் என்றதும் குறுக்கிடுகிறார்.

இது போல எத்தனை தடைகள் வந்தாலும் நான் கவலைப்பட போவதில்லை. நிராயுதபாணியாக நான் இப்போது நிற்கிறேன். எனக்கு அமைதி தேவை. எனவே எனக்கும் ஐசக்குக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும்.

இதில் ஒளிவு மறைவே இல்லை. எங்கள் திருமணம் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்துவேன்.

நான் பணத்துக்காக ஐசக்கை விரும்பவில்லை. நான் நினைத்தால் கோடீசுவரர்களை கூட வளைத்துப் போடமுடியும். ஆனால் நான் அப்படிப்பட்ட பெண் அல்ல. ஐசக்கை திருமணம் செய்து அமைதியான வாழ்க்கை வாழவே விரும்புகிறேன்.

விரைவில் ஐசக் மீதான புகார்கள் ஆதாரம் இல்லாதது என நிரூபமனமாகும். கடவுள் நல்ல வழி காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் காத்து இருக்கிறேன்.

இவ்வாறு நடிகை தேவிபிரியா கூறினார்.

டி.வி. நடிகை தேவிப்ரியா காதலர் விவகாரம்: தலைமறைவாக உள்ள விடியோ கடை உரிமையாளர் மீது 2-வது மனைவி புகார்

சென்னை, பிப். 14: வரதட்சிணை கொடுத்த நகைகளை திருப்பி தராத வழக்கில் தலைமறைவாக உள்ள விடியோ கடை உரிமையாளர் மீது அவரது 2-வது மனைவி போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

போனில் தொந்தரவு செய்து வரும் ஐசக் வில்லியம்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சென்னை அடையாறு திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த குளோரி ஜெயராஜின் மகன் ஐசக் வில்லியம்ஸ். 1999-ல் தாம்பரத்தை அடுத்த மெப்பேடு பகுதியைச் சேர்ந்த ஸ்டெல்லாவை திருமணம் செய்தார்.

பின்னர், 2004-ல் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர். ஆனால், திருமணத்தின்போது வரதட்சிணையாகப் பெற்ற 47 சவரன் நகைகளை திருப்பித் தரவில்லை.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வரதட்சிணை பெற்ற நகைகளை திருப்பித் தரும்படி உத்தரவிட்டது. ஆனாலும் ஐசக் அவற்றைத் திருப்பித் தரவில்லை.

இதையடுத்து அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், ஸ்டெல்லா புகார் செய்தார்.

புகாரின்பேரில் முன்னாள் வார்டு கவுன்சிலரான குளோரி ஜெயராஜை போலீஸôர் கைது செய்தனர். ஐசக் வில்லியம்ஸ் தலைமறைவானார். மேலும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

இந்நிலையில் ஸ்டெல்லா தரப்பினர், ஐசக் வில்லியம்ஸýக்கு முன்ஜாமீன் தரக்கூடாது என்று கோரி நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு செய்ய உள்ளனர்.

டி.வி. நடிகையுடன் தொடர்பு: தலைமறைவாக உள்ள ஐசக் வில்லியம்ஸ் டிவி நடிகை தேவிப்ரியா மற்றும் அவரது தங்கையுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்நிலையில் ஐசக் வில்லியம்ûஸ திருமணம் செய்யப் போவதாக தேவிப்ரியா கூறியுள்ளார்.

2-வது மனைவி புகார்: இதற்கிடையில் ஐசக் வில்லியம்ஸின் இரண்டாவது மனைவி ஹேமாமாலினி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், தனக்கு போனில் தொந்தரவு செய்து வரும் வில்லியம்ûஸ கைது செய்யும்படி குறிப்பிட்டுள்ளார். இல்லையெனில் தீக்குளிக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேவிப்பிரியா ஆபாச சிடி சிக்கியது?முன் ஜாமீன்

4 பெண்களை மணந்த ஐசக்குடன் காதல், அரைகுறை உடையில் தங்கைஐசக் சகிதமாக கும்மாளம், புளு பிலிம் என சர்ச்சை பல்வேறு சிக்கல்களில் மாட்டி தங்கை, அம்மாவுடன் தலைமறைவாகிவிட்ட டிவி நடிகை தேவிப்பிரியாவுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

19ம் தேதி ஐசக்கை கல்யாணம் செய்யப் போவதாக தேவிப்பிரியா அறிவித்த மறு நிமிடமே ஸ்டெல்லா, ஹேமமாலினி, பிரேமா உள்பட பல பெண்கள் பொங்கி எழுந்து ஐசக் என் கணவர், என்னை ஏமாற்றியவன் என புகார்களை அடுக்கினர்.

மேலும் தான் நடத்திய வீடியோ கடையில் வேலை பார்த்த பெண்களையும் கெடுத்துள்ளான், பல நடிகைகளை வைத்து ப்ளு பிலிம் எடுத்துள்ளான் என புகார் கூறினர்.

அத்தோடு தேவிப்பிரியா, அவரது தங்கை ப்ரியா என்ன மீனா குமாரி ஆகியோரோடும் ஐசக்குக்கு தவறான தொடர்பு உள்ளது, ப்ளு பிலிம் விஷயத்தில் இவர்களுக்கும் தொடர்புண்டு என்றனர்.

இதையடுத்து முதலில் ஐசக் தலைமறைவாக அடுத்ததாக தேவிப்பிரியாவும் அவரது தங்கையும் ஹேமமாலினியை ஆள் வைத்து மிரட்டிய வழக்கில் கைதாக இருந்த நிலையில் தலைமறைவாகிவிட்டனர்.

மாட்டியிருப்பது ஐசக்கின் தாயார் குளோரி மட்டுமே. இவர் சிறையில் உள்ளார். ஐசக்கின் முன் ஜாமீன் மன தள்ளுபடியாகிவிட்டது. இந் நிலையில் தேவிப்பிரியாவும் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். போலீஸார் தன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாலும், கைதாக வாய்ப்புள்ளதாலும் முன் ஜாமீன் தர வேண்டும் என்று தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.

முன்னதாக ஹேமமாலினி கொடுத்த புகாரின் பேரில் தேவிப்பிரியா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏகப்பட்ட ப்ளு பிலிம் விசிடிக்கள் சிக்கியுள்ளன. அந்த சிடிக்களைப் போட்டுப் பார்த்தபோது அதில் நடித்திருந்தவர் தேவிப்பி>யா என்பது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை அதிகாரி ஒருவ>டம் கேட்டபோது, தேவிப்பி>யா வீட்டிலிருந்து நிறைய ஆபாசப் பட சிடிக்களைக் கைப்பற்றியுள்ளோம். அதில் சில சிடிக்களில் தேவிப்பிரியா முழு நிர்வாணத்தில் ஆபாசமாக நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு சிடியில் ஐசக், தேவிப்பிரியா, அவரது தங்கை மீனாகுமாரி ஆகியோர் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர். இன்னொரு சிடியில் இவர்கள் தவிர வேறு சில பெண்களும் நிர்வாணமாக படுத்துக் கிடக்கின்றனர்.

இந்த ஆபாச சிடிக்களை விபச்சாரத் தடுப்பு பிரிவிடம் கொடுத்துள்ளோம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் விபச்சாரத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்றார் அவர்.

இதனால்தான் தேவிப்பிரியா, தனது தங்கையைக் கூட்டிக் கொண்டு தலைமறைவானார்.

முன்னதாக தேவிப்பிரியாவை நக்கீரன் வார இதழின் நிருபர் செல்போனில் தொடர்பு கொண்டு நீங்கள் ப்ளு பிலிமில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, நான் நடிச்சா என்ன தப்பு, இதனால சமூகத்துக்கு என்ன கேடு என்று கேட்டாராம்.

சூப்பர்ர்ர்ர் கேள்வி…

முன் ஜாமீன்:

இந் நிலையில் தேவிப்பிரியாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. அவரது மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி,

உடனடியாக எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் பெறலாம். அடையாறு காவல் நிலையத்தில் 3 நாட்களுக்கு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

டி.வி. நடிகையின் ஆபாசக் காட்சிகள்

தற்போது விடியோ கடை அதிபர் ஒருவரை திருமணம் செய்ய திட்டமிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள அந்த டி.வி. நடிகை தொடர்பான சில சி.டி.,க்கள் போலீசார் வசம் சிக்கியுள்ளதாம்.

அதில், தனது காதலர் மற்றும் மேலும் சில நடிகைகளுடன் அந்த பிரபல டி.வி. நடிகை ஆதிகாலத்துப் பெண்ணாக காட்சியளிக்கிறாராம்.

‘இது கிராபிக்ஸ் வேலை தான்’ என்று நடிகை தரப்பிலிருந்து எப்போதும் அறிக்கை வரலாம்.

எனினும், அதில் எந்த மாயஜாலங்களும் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

நடிகை தேவிபிரியா நீதிமன்றத்தில் ஆஜர்

கொலை மிரட்டல் புகார் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்த நடிகை தேவிபிரியா.

சென்னை, பிப். 24: நடிகை தேவிபிரியா நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினார்.

சென்னையைச் சேர்ந்தவர் ஐசக். இவரது முதல் மனைவி ஸ்டெல்லா, வரதட்சிணை வழக்கில் தனது நகைகளை ஒப்படைக்காதது தொடர்பாக போலீஸôரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து ஐசக் தலைமறைவானார். ஆனால், ஐசக்கின் தாய் குளோரியை போலீஸôர் கைது செய்தனர்.

இந் நிலையில் ஐசக்கின் 2-வது மனைவி ஹேமமாலினி, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக ஐசக் மற்றும் நடிகை தேவிபிரியா மீது அடையாறு காவல்நிலையத்தில் 2 முறை புகார் கொடுத்தார்.

இப் புகார்களின்பேரில், தன்னை போலீஸôர் கைது செய்யக்கூடும் என்பதால் உயர் நீதிமன்றத்தில் தேவி பிரியா முன்ஜாமீன் கோரினார்.

இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தேவிபிரியா ஆஜராகி, ஜாமீன் தொகையை செலுத்தினார்.

அவருக்கு நீதிபதி காயத்ரி முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஐசக்கும், நானும் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதுதொடர்பாக என் மீது சுமத்தப்பட்ட புகார்களில் உண்மை இல்லை. சட்ட ரீதியாக இதைச் சந்திப்பேன். இந்த வழக்கு விவகாரம் முடிந்த பின் நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார் தேவிபிரியா.

Posted in Actress, Adyar, CD Sales, Congress, Congress (I), Devipriya, Divorce, Glamour, Glory, Images, Marriage, MLC, Nakkeeran, Nakkiran, Prema, Prostituition, Rumour, Selvi, Sensational, Serial, Sex Abuse, Star Video Vision, Stella, TV, Valluvar Nagar, VCD, Videos, Wedding, William Issac, XXX | 15 Comments »

AIADMK encouraging dynasty politics by appointing personalities in the hierarchy

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

காளிமுத்து- தமிழ்குடிமகன் மகன்களுக்கு அ.தி.மு.க.வில் பதவி: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, ஜன. 14-

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  • முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை மதுரை மாநகர் மாவட்ட ஜெயலதா பேரவை செயலாளராகவும்,
  • முன்னாள் சபாநாயகர் தமிழ்க்குடிமகன் மகன் பாரிதமிழ்க்குடி மகன் மாவட்ட இலக்கிய அணி செயலாளராகவும் நியமிக்கப் பட்டு உள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக தலைமை கழகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாள ராக ராஜன் செல்லப்பா மீண்டும் நியமிக்கப் பட்டுள்ளார். அவைத்தலை வராக கே.துரைப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. பொதுக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

1. பி.தனம்(சமயநல்லூர் தொகுதி), 2.ஜெ.அனிதா (திருப்பரங்குன்றம் தொகுதி), 3. பிச்சைமணி (சேடப்பட்டி தொகுதி), 4. கே.நாகராஜன் (சோழவந்தான் தொகுதி), 5. பி.ஜாபர் (மேலூர் தொகுதி), 6. வி.குணசேகரன் (உசிலம்பட்டி தொகுதி), 7. பெருமாள் (திருமங்கலம் தொகுதி) இவர்களை அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.

Posted in ADMK, AIADMK, J Jayalalitha, Jeyalalitha, JJ, Kalimuthu, Madurai, Party Leaders, Selvi, Tamil Kudimagan, Thamizh kudimakan, Thamizhkudimagan | Leave a Comment »

Radhika to continue Sun TV’s ‘Selvi’ episodes without Sarita’s presence

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2006

புதிய தாமரை கிடையாது
செல்வி தொடரில் இருந்து சரிதா திடீரென விலகியதால் தாமரை கேரக்டருக்கு வேறு ஒரு பிரபல நடிகையை ஒப்பந்தம் செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் தாமரை கேரக்டரையே திருப்திகரமாக முடித்து விட தீர்மானித்துள்ளார்கள்.

இதையடுத்து செல்வி கதையை வேறு விதமாக கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதன் மூலம் செல்விக்கு கூடுதல் விறுவிறுப்பு கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Posted in Episode, Radaan, Radhika, Sarita, Saritha, Selvi, Serial, Sun TV, Television | Leave a Comment »

Who will be the next Mayor of Chennai?

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் யார்?- 3 பேர் பெயர் அடிபடுகிறது

சென்னை, அக்.23-

சென்னை மாநகராட்சி தேர்தல் கடந்த 13 மற்றும் 15 தேதிகளில் நடந்து முடிந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை கடந்த 20-ந்தேதி நடந்தது. மொத்தம் 155 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில்

  • 90 இடங்களில் தி.மு.க.வும்,
  • 38 இடங்களில் காங்கிரசும்,
  • 17 இடங்களில் பா.ம.க.வும்,
  • அ.தி.மு.க. 4 இடங்களிலும்,
  • இந்திய கம்ïனிஸ்டு,
  • விடுதலை சிறுத்தைகள் தலா 2 இடங்களிலும்,
  • ம.தி.மு.க.,
  • பகுஜன்சமாஜ் தலா ஒரு இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளன.

கடந்த 2001- ம் ஆண்டு மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. 67 இடங்களை கைப்பற்றியது. இதன் பின்பு மற்ற கட்சியில் இருந்து விலகி சில கவுன்சிலர்கள் அ.தி.மு.க.வில் சேர்ந்ததால் அதன் பலம் 77 ஆக உயர்ந்தது.

மாநகராட்சி மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தின் காரணமாக அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த தேர்தலில் 54 வார்டுகளை கைப்பற்றிய தி.மு.க. இந்த தேர்தலில் 90 வார்டுகளை கைப்பற்றி தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர்பதவி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மேயர், துணைமேயர் ஆகியோர் தி.மு.க. கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களால் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

மேயர்பதவி தென்சென்னையை சேர்ந்த கவுன்சிலர் ஒருவருக்கும், துணைமேயர் பதவி வடசென்னையை சேர்ந்த கவுன்சிலருக்கும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேயர் பதவிக்கு

  • மா.சுப்பிரமணியம்,
  • தனசேகரன்,
  • சுரேஷ்குமார் ஆகியோர் பெயர் அடிபடுகிறது.

மேயர் பதவிக்கு பெயர் அடிபடும் மா.சுப்பிரமணியம் தென்சென்னை மாவட்டத்தில் 140-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இவர் கடந்த முறை மாநகராட்சி மண்டலக்குழு தலைவராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். சைதாப்பேட்டை சட்டமன்றத்திற்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ராதாரவியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அந்த தேர்தலில் இவரை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்தபோது மா.சுப்பிரமணி மாசற்றவர் என்று பாராட்டி பேசினார். மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக பணியாற்றியபோது அவருடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியவர். எனவே சென்னை மாநகராட்சி மேயராக இவரை தேர்ந்தெடுக்க அதிகவாய்ப்புகள் இருப்பதாக தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இது பற்றி மா.சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, “மேயர் பதவி பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் முடிவு செய்வார்” என்றும் கூறினார்.

இதேபோல் 130-வது வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தனசேகரன் மேயராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. தனசேகரன் தி.மு.க. வுக்கு சோதனைஏற்பட்ட காலத்தில் எல்லாம் களத்தில் இறங்கி கட்சிக்காக தீவிரமாக பணியாற்றுபவர். தி.மு.க. பகுதிகழக செயலாளராக இருந்து வருகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சியில் மழைக்காலத்தில் எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு தனசேகரன் தான் காரணம் என்று கூறி போலீசார் அவரை கைதுசெய்தனர். இவர் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது என்று கூறி கருணாநிதி போராட்டம் நடத்தினார். உச்சநீதிமன்றம் வரை சென்று, இவர் மீது போடப்பட்டது பொய்வழக்கு என்பதை நிரூபித்து காட்டினார். கே.கே.நகர் பகுதியில் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக அரும்பாடு பட்டவர். ஆகவே இவர் மேயராக தேர்ந்தெடுக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் 86-வது வார்டில் இருந்து கவுன்சிலராக தேர்தெடுக்கப்பட்ட சுரேஷ்குமார் பெயரும் மேயர்பதவிக்கு அடிபடுகிறது. காரணம் அவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றிபெற்ற சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பகுதிகழக செயலாளராக இருந்து பொதுமக்களின் பல்வேறு பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு உதவினார்.

சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்னும் 2 நாட்களில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் மேயர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று தி.மு.க. தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

துணைமேயர் பதவிக்கு

  • 111-வது வார்டு கவுன்சிலர் செல்வி,
  • 69-வது வார்டு சாந்திபாய்,
  • 68-வது வார்டு கவுன்சிலர் வசந்தி

ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 25-ந்தேதி சென்னை மாநகராட்சி கவுன்சிலராக தேர்வுசெய்யப்பட்ட 155 பேரும் பதவியேற்றுக்கொள்கிறார்கள்.
29-ந்தேதி காலை சென்னை மாநகராட்சி மன்றத்தில் மேயர்தேர்தல் நடைபெறுகிறது.

Posted in Chennai, Chepauk, Civic Polls, Dhanasekaran, Elections, KK Nagar, Local Body election, Ma Subramaniam, Madras, Mayor, Radha Ravi, Saidapet, Santhi bai, Selvi, South Madras, Sureshkumar, Tamil Nadu, Vasanthi | Leave a Comment »