Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Seashore’ Category

Six tsunami warning centres in TN

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 3, 2007

தமிழகத்தில் 6 இடங்களில் சுனாமி எச்சரிக்கை மையங்கள்

சென்னை, ஏப். 3: தமிழகத்தில் 6 இடங்களில் சுனாமி எச்சரிக்கை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய் மற்றும் சிறைத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறினார்.

பேரவையில் திங்கள்கிழமை உறுப்பினர்கள் வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.), கோவை தங்கம் (காங்.), டி.ஜெயக்குமார் (அதிமுக) ஆகியோரது கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்:

தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேசுவரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சுனாமி எச்சரிக்கை மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் கடலோரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் காடுகள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் முகத்துவார பகுதிகளிளை ஆழப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் பூகம்பம் அளவிடும் மையங்கள் வேலூர் மாவட்டம் காவலூர் மற்றும் திருப்பத்தூரிலும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகள் அனைத்தும் பூகம்பம் ஏற்படும் இடங்களில் 2 மற்றும் 3-ல் இடம்பெற்றுள்ளன.

இதைப் போன்ற கருவிகள் உள்ள மையங்கள் ஏற்கெனவே சென்னை, சேலம், கொடைக்கானலில் இயங்கி வருகிறது. இது தவிர, கடலோரப் பகுதிகளில் சுனாமி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கையேடுகள் அச்சிடப்பட்டு அப்பகுதி மக்களிடம் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றார் பெரியசாமி.


சுனாமி எச்சரிக்கை கருவிகள் உலகெங்கும் தேவை என நிபுணர் கருத்து

சுனாமியால் பாதிக்கப்பட்ட சாலமன் தீவுகள்
சுனாமியால் பாதிக்கப்பட்ட சாலமன் தீவுகள்

சுனாமி அலைகளை கண்டறிந்து எச்சரிக்கை தரக்கூடிய வசதிகள் பலவற்றை பசிபிக் பெருங்கடலில் பொறுத்த வேண்டிய தேவை இருப்பதாக சுனாமி நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட சுனாமியை அடுத்து, பசிபிக் பிராந்தியத்துக்காக ஒதுக்கப்பட்ட பணம் உள் நோக்கம் ஏதுமின்றி தவறுதலாக இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டிருக்காலம் என்று லாரா கிங் என்ற சுனாமி நிபுணர் தெரிவித்துள்ளார்.

அடுத்த முறை பசிபிக் பெருங்கடல் பகுதியில் தான் சுனாமி அலைகளின் பெரிய தாக்கம் ஏற்படும் என்று தான் கருதுவதாகவும் லாரா கிங் கூறியுள்ளார்.

 

——————————————————————————————————

ஆழிப்பேரலை தடுப்புத் திட்டம்

காஞ்சிபுரம், மே 28: சுனாமி போன்ற அவசர கால பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் வனத்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் அவசர கால ஆழிப்பேரலை தடுப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

2004-ம் ஆண்டு டிச.26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் பெருத்த பாதிப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் ஏராளமானோர் இறந்தனர். அதிக பொருள் சேதமும் ஏற்பட்டது.

இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் கடற்கரையில் சதுப்பு நிலக்காடுகளோ, சவுக்குத் தோப்புகளோ இருந்தால் சுனாமி பாதிப்பு மிகக் குறைவாக இருந்திருக்கும் எனத் தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறை சுனாமி தடுப்புத் திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்தது.

தமிழகம் முழுவதும் 2000 ஹெக்டேர் பரப்பில் தாவர அரண் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 550 ஹெக்டேர் பரப்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பாக செங்கல்பட்டு கோட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோயில் பிள்ளை, நிருபரிடம் கூறியது:

சுனாமி தடுப்பு சீரமைப்புத் திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும். சாதாரணமாக சிமென்ட்டாலான தடுப்புச் சுவர் கட்ட 1 கி.மீ. தூரத்துக்கு ரூ.6.5 கோடியும், மண்ணாலான தடுப்புச்சுவர் கட்ட ரூ.1.25 கோடியும் ஆகிறது. ஆனால் இயற்கையாக சவுக்குத் தோப்பு அமைக்க ரூ.5.4 லட்சமே செலவாகும்.

மேலும் 5 ஆண்டுகள் கழித்து இதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். சவுக்கு மரங்களை வெட்டி விட்டு மீண்டும் அதே இடத்தில் கன்றுகளை நடலாம். தற்போது அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் செயல்படுத்தப்படும். சவுக்கு கன்றுகளை வனத்துறை இலவசமாக தருகிறது என்றார் சுகிர்தராஜ் கோயில் பிள்ளை.

Posted in Boat, Capsize, Chennai, Coast, coastal, Cuddalore, Earthquake, Fisherman, fishermen, Forests, Government, I Periasamy, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanchivaram, Kanjeepuram, Kanjeevaram, Kanjipuram, Kanjivaram, Kanyakumari, Kavalore, mangrove, Measure, Measurements, Nagapattinam, Periasamy, Rameswaram, Rasipuram, Revenue Minister, Richter, Scale, Sea, seacoast, Seashore, Tamil Nadu, Thenkanikottai, Tirupattur, TN, Trees, Tsunami, Tuticorin, warning | Leave a Comment »

TN, Bengal MPs clashes over maritime varsity venue – Analysis & Opinion

Posted by Snapjudge மேல் மார்ச் 15, 2007

சிந்தித்து செய்கையை மாற்று

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்னையில் அமைவதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்து வரும் மேற்குவங்க எம்.பி.க்கள், கடந்த இரு தினங்களாக அவையை நடத்தவிடாமல் செய்துவரும் ரகளை ஆரோக்கியமான அரசியலாக இல்லை.

அமைச்சரை கைநீட்டி அடிக்கப் போகும் அளவுக்கு கைகலப்பை உருவாக்கிய இச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் இடதுசாரிகள் என்பது அரசியல் மீதான அவநம்பிக்கையை மேலும் வலுவாக்குகிறது. கடல்சார் பல்கலைக்கழகம் குறித்த விரிவான தகவல்களை அறிந்துகொள்ளாமல் இத்தகைய எதிர்ப்பில் அவர்கள் இறங்கியுள்ளது மற்றொரு வேதனை.

சென்னையில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அமைக்க 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது என்றும் இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கப்படும் என்றும் 2006 ஜூலை மாதத்தில் செய்திகள் வெளியாகின.

இத் தகவலைத் தெரிவித்த கப்பல்துறைச் செயலர் “இப் பல்கலைக்கழகம் சுவிட்சர்லாந்தில் உள்ள உலக கடல்சார் பல்கலைக்கழகத்தைப் போன்றே அமையும்; இதன் துணை வளாகங்கள் மும்பை, விசாகப்பட்டினம், கோல்கத்தா ஆகிய 3 இடங்களில் அமையும்; அமைச்சரவை ஒப்புதலுக்குப் பின்னர் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’ என்றும் தெரிவித்திருந்தார்.

ஆறு மாதங்களுக்கு முன்பே இந்த தெளிவான அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. இதில் கருத்து மாறுபாடுகள் இருந்தால் அதை பிரதமரிடம் தெரிவித்து, சுமுகத் தீர்வு கண்டிருக்க முடியும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தரும் இடதுசாரிகள் எத்தனையோ கோரிக்கைகளுக்காக பிரதமரை பலமுறை சந்திக்கும்போது, இந்த விஷயத்தைப் பற்றியும் முன்னதாகவே பேசித் தீர்த்திருக்கலாம்.

இன்னும் புத்திசாலித்தனமாக இப்பிரச்சினையை அணுகுவதாக இருப்பின், சென்னையில் மட்டுமன்றி கோல்கத்தாவிலும் மற்றொரு பல்கலைக்கழகத்தை ஒரே நேரத்தில் தொடங்க வேண்டும் என்றுகூட கோரியிருக்கலாம்.

ஏனெனில், சர்வதேச கடல்சார் பல்கலைக்கழகங்களின் சங்கத்தில் உலகம் முழுவதும் உள்ள 29 பல்கலைக்கழகங்கள் சேர்ந்துள்ளன. இத்தகைய பல்கலைக்கழகங்கள் ஒன்றுகூட இந்தியாவில் கிடையாது. ஆனால் சீனாவில் 10 பல்கலைக்கழகங்கள் இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளன.

ஆகவே இரு பல்கலைக்கழகங்களை அமைக்கலாம் என்று மேற்குவங்க எம்.பி.க்கள் வலியுறுத்தினால் அது நியாயமானதாகவும் தேவையானதாகவும்கூட இருக்கும்.

கடல்சார் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை ஆண்டுதோறும் 15 சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. படித்து பயிற்சி முடித்து வருவோரின் எண்ணிக்கை, தேவையைவிட 5 சதவீதம் குறைவாக உள்ளது. இந்த இடைவெளி 2010ம் ஆண்டில் 10 சதவீதமாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் இரு பல்கலைக்கழகங்கள் அமைந்தாலும் நன்மையே.

7 ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கடற்கரையைக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஆளுகைக்குள் 23 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கடல் உள்ளது. இந்திய மாணவர்களுக்கு பொதுவாக ஆங்கிலப் புலமையும் உள்ளது. உலக அளவில் கடல்சார் தொழில்நுட்பத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் இந்தியர்களுக்கு கப்பல் துறையில் அதிக அளவு வேலைவாய்ப்புகள் உள்ளன.

சீனாவில் தற்போது வர்த்தகப் பரிவர்த்தனை மற்றும் தொழில்நுட்ப அறிவுக்கான ஆங்கில மொழிப் பயிற்சிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தையும், அவர்களிடம் 10 கடல்சார் பல்கலைக்கழகங்கள் இருப்பதையும் கருத்தில் கொண்டால், உலக கப்பல் துறையில் இந்தியர்களுக்கான வாய்ப்புகளை சீனா தட்டிப் பறிக்கும் நிலை உள்ளதை உணரமுடியும்.

இடதுசாரிகள் இந்த ஆபத்தை உணர்ந்து, இந்தியர்களின் நலனை மனத்தில்கொண்டு, கடல்சார் பல்கலைக்கழகப் பிரச்சினையில் சரியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

Posted in Analysis, Anil Basu, Baalu, Balu, Bengal, Chennai, Communist, Dinamani, DMK, Institute, Left, Madras, maritime, Marxist, MP, Op-Ed, Opinion, Politburo, Prakash Karat, Sea, Seashore, Shipping Minister, Surface Transport Minister, T R Baalu, T R Balu, TN, University, WB, West Bengal | Leave a Comment »

Rs. 330 crore scheme for improving Tourism along Seashore communities

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2007

சுற்றுலாவை மேம்படுத்த ரூ.330 கோடியில் திட்டம்

பா. ஜெகதீசன்

சென்னை, மார்ச் 5: கடலோரச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுமார் ரூ.330 கோடி செலவில் “கடலோரப் பாதுகாப்புத் திட்ட’த்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்கள், மத்திய அரசின் 4 நேரடி ஆட்சிப் பகுதிகள் ஆகியவற்றில் அமைந்துள்ள மொத்தம் 7 ஆயிரத்து 517 கி.மீ. நீளக் கடற்கரைப் பகுதிகள் இதன்மூலம் பலன் பெறும்.

இத்திட்டத்தின் கீழ் படகுகள், வாகனங்கள் வாங்குவது, காவல் நிலையங்களை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவிகளை அளிக்கும்.

குறைந்த செலவில் பொழுது போக்குவதற்கு ஏற்ற இடமாகக் கடற்கரை திகழ்கிறது. எனவே, சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் அங்கு வருகின்றனர். அப்படி வருபவர்களுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகளைச் செய்து தருவது மிக அவசியம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் தெரிவித்தார். தமிழகத்தில் இன்னும் அதிகமாக பிரபலம் ஆகாத கடற்கரைப் பகுதிகள் கண்டறியப்பட்டு, அவை மேம்படுத்தப்படும் என்றார் அவர்.

விபத்துகளில் இருந்து காக்க…: கடற்கரைப் பகுதிகளில் விபத்துகள், எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படும்போது அங்கு உள்ள சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பொது மக்கள் ஆகியோரை எப்பாடுபட்டாவது பாதுகாக்க வேண்டும்.

அதற்கு வசதியாக, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட “உயிர் காக்கும் பாதுகாவலர்’களை முக்கிய கடற்கரைப் பகுதிகளில் நியமிக்க சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் எவ்வித ஆபத்தும் இன்றி நீச்சல் அடிப்பதற்கு உதவும் வகையில் “பாதுகாப்பு வலை’களை அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையோரத்தில் நீந்துபவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவதை இப் பாதுகாப்பு வலைகள் தடுக்கும். அத்துடன் மக்கள் நீந்தும் கடலோரப் பகுதிகளுக்குள் ஆபத்தான கடல் வாழ் உயிரினங்கள் நுழைவதையும் தடுத்து நிறுத்தும்.

பாரம்பரியக் கட்டடங்களைப் பாதுகாக்க…: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பாரம்பரியக் கட்டடங்களைப் பாதுகாக்கவும், அப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு மத்திய அரசின் மானிய உதவியாக ரூ.40 கோடி கிடைக்கும். 4 ஆண்டுகளில் இக்குறிப்பிட்ட திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும்.

Posted in Beach, Beautification, Beauty, Budget, Chennai, Communities, Community, Government, Guide, Harbor, Harbour, improvement, Operator, Plan, Safety, Scheme, Sea, Seashore, Seaside, Security, Ship, Sureshrajan, Tamil Nadu, TN, Tour, Tourism, Visitors | Leave a Comment »

Bharathidasan University’s Professor gets ‘Young Scientist’ award

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

பாரதிதாசன் பல்கலை. விரிவுரையாளருக்கு இளம் விஞ்ஞானி விருது

திருச்சி, பிப். 14: பாரதிதாசன் பல்கலைக்கழக தொலை உணர்வு மைய விரிவுரையாளர் சொ. இலக்குமணனுக்கு மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் “இளம் விஞ்ஞானி’ விருது வழங்கியுள்ளது.

இவருக்கு ஆய்வு நிதியாக ரூ. 10.80 லட்சமும் வழங்கப்படுகிறது.

தமிழக கடலோரப் பகுதிகளில் தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும், சுனாமி பேரழிவு, இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றால் கடலோர வேளாண் நிலங்கள், சதுப்பு நிலங்கள், இறால் வளர்ப்புப் பகுதிகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள் ஆகியன எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இவற்றுக்கான மறுசீரமைப்பு ஏற்பாடுகள் குறித்தும் இவர் ஆய்வு செய்ய இருக்கிறார். இந்த ஆய்வை செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட நுண்ணிய புகைப்படங்களைக் கொண்டும், புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தின் மூலமும் மேற்கொள்ள உள்ளார்.

Posted in Agriculture, Award, Bharathidasan University, Environment, Factory waste, Forest, Global Warming, Impact, Lakshmanan, Pollution, Prize, Recognition, Research, S Lackumanan, scientist, Seashore, So Lakkumanan, Technology | Leave a Comment »

Rameswaram – Eight fishermen missing

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007

மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் மாயம்

ராமேசுவரம், பிப்.5: ராமேசுவரத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவுவரை கரை திரும்பவில்லை.

இதுகுறித்து மீன்துறையினரிடம் படகு உரிமையாளர் புகார் செய்துள்ளார்.

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. இவை அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பின.

இந் நிலையில், ராமேசுவரத்தைச் சேர்ந்த மாரிமுத்து, பாண்டித்துரை ஆகியோருக்குச் சொந்தமான விசைப்படகுகளில் சென்ற 8 மீனவர்கள் கரை திரும்பவில்லை என படகின் உரிமையாளர்கள் ராமேசுவரம் மீன் துறையினரிடம் புகார் செய்தனர்.

Posted in Arabian Sea, Bay of Bengal, Boats, Capsize, Fish, Fisheries, fishermen, Fishery, Indian Ocean, missing, Rameswaram, Sea, Seashore, Trawlers, Welfare | Leave a Comment »