Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Scheme’ Category

Corruption & Kickbacks Charge on Congress (I) – Job opportunity plan implementation in Indian states

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2007

ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில்… மெகா ஊழல்! * பல மாநிலங்களிலும், பல கோடி “சுவாகா’

Dinamalar.Com

மத்திய அரசின், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், மெகா ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம், அரசியல்வாதிகள், அதிகாரிகள் பாக்கெட்டில் போய்க் கொண்டிருக்கிறது.

மத்தியில், 2004ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிக முக்கிய திட்டம், கிராம மக்களுக்கு வேலை தரும், “ஊரக வேலை உத்தரவாத திட்டம்!’

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, மிகவும் பின்தங்கிய 200 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கு பல கோடி பணத்தை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஒதுக் கியது.அந்த பணத்தை வைத்து, கிராமங்களில் வேலையின்றி உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சம் வருடத்துக்கு 100 நாட்களாவது வேலை தர ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த திட்டத்தை இந்தாண்டு இறுதிக்குள் மேலும், 150 மாவட்டங்களுக்கு விரிவுப் படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டத்தில் ஊழல், நிர்வாக குளறுபடி, விழிப்புணர்வு ஏற்படுத்தாதது போன்றவை குறித்து புகார்கள் வந்ததால், மத்திய நிதிக்கமிஷன், இதற்கு நிதி ஒதுக்க மறுத்தது.பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், அரசியல் வாதிகள் முதல் பஞ்சாயத்து உறுப்பினர்கள் வரை, பணத்தை சுருட்டுவதாக, தன்னார்வத் தொண்டு அமைப்புகள், அரசு ஆய்வு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்ததால், நிதிக்கமிஷன், இதுபற்றி ஆலோசிக்க விரும்பியது.எனினும், இந்த விஷயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு, இந்தாண்டு 130 மாவட்டங்களை கூடுதலாக இந்த திட்டத்தில் சேர்க்கும்படி உத்தரவிட்டார்.காங்கிரஸ் பொதுச்செயலராக ராகுல் பொறுப்பேற்றதும், அடுத்த திருப்பம் ஏற்பட்டது.”ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். குறிப்பிட்ட மாவட்டங்கள் மட்டும் பயனடையும் வகையில் நிறைவேற்றுவது பாரபட்சமானது’ என்று பிரதமரிடம் கூறினார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்க முடிவு செய்துள்ளார்.பல்வேறு ஆய்வுகளின் மூலம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர்பான மாத அறிக்கைகள் மூலம் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. திட்டத்தை அறவே அமல்படுத்துவதில்லை என்பது இந்த மாத அறிக்கையை பார்த்தாலே தெரியும்.ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர் பான ஆய்வுகளில் கிடைத்த சில தகவல்கள்:

மேற்கு வங்கம்:

எல்லா மட்டங்களிலும் திட்டப்பணத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. பல கிராமங்களில் தொழிலாளர்களுக்கு “வேலை அட்டை’ தருவதில்லை. அப்படியே தந்தாலும், பதிவு எண் தரவில்லை. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர் எழுதி, பணம் சுரண்டப்படுகிறது.

ஆந்திரா:

இந்த மாநிலத்தில், “வேலை அட்டை’ தந்து, வேலை தந்தாலும், குறைந்தபட்ச கூலி தரப்படுவதில்லை. சம்பள பணம் பிடித்துக்கொண்டுதான் தரப்படுகிறது.

சட்டீஸ்கர்:

திட்டத்தில் பலரும் ஊழல் செய்கின்றனர்; சரிவர வேலை தரப்படுவதில்லை; சரியான நிர்வாகமும் இல்லை.

ஜார்க்கண்ட்:

கிராம மக்களுக்கு வேலை தந்ததாக எழுதி விட்டு, பணம் சுரண்டப் படுகிறது. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர்களை பட்டியல் எடுத்து, பணத்தை பஞ்சாயத்து மட்டத்தில் மோசடி செய்கின்றனர். எதிர்த்து கேட்ட கிராம மக்கள் மிரட்டப்படுகின்றனர். பெண்கள் சித்ரவதைக்கு ஆளாகின்றனர்.

மத்தியப்பிரதேசம்:

பயனாளிகளுக்கு மிகக்குறைந்த பணத்தை தந்துவிட்டு, கான்ட்ராக்டர்கள் அதிக பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு அதிகாரிகள் உடந்தை. லஞ்சம் தந்து தான் சம்பளத்தையே கிராம மக்கள் பெற வேண்டியிருக்கிறது.

ஒரிசா:

கிராம மக்களில் பலருக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியவில்லை. அதை மறைத்து, அதிகாரிகள், அரசியல்வாதிகள், பணத்தை சுரண்டுகின்றனர்.

உத்தரப்பிரதேசம்:

மிக அதிக ஊழல் என்றால், இந்த மாநிலத்தில் தான். பல மாவட்டங்களில், இந்த திட்டத்தை அமல்படுத்தியதாக சொல்லி, பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.”இப்படி பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில் மெகா ஊழல் நடந்து வருகிறது. இதை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதால், கிராம மக் களுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை. மாறாக, திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப் படலாம்’ என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.இவ்விவகாரம் பூதாகாரம் அடையும் நிலையில் உள்ளதால், மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Posted in Andhra, AP, Bengal, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Compensation, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Contractors, Corruption, Employment, Females, Guarantee, Implementation, India, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jobs, kickbacks, Lady, MadhyaPradesh, Madyapradesh, Manmohan, Metro, MNC, MP, NGO, Orissa, Party, Planning, Politics, Poor, Private, Public, Rahul, Reddy, Rural, Scheme, Sonia, State, Suburban, UP, Utharpradesh, UttarPradesh, Villages, WB, Women, YSR | Leave a Comment »

Reserve Bank of India’s Loan Policy – Updates, Analysis, Options

Posted by Snapjudge மேல் மே 7, 2007

ரிசர்வ் வங்கியின் புதிய கடன் கொள்கை

எஸ். கோபாலகிருஷ்ணன்

நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டுக்கான நிதி மற்றும் கடன் கொள்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி. ரெட்டி ஏப்ரல் 24-ம் தேதி அறிவித்தார்.

நிதித்துறையில் மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு அடுத்தபடியாக மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுவது ரிசர்வ வங்கியின் கடன் கொள்கையே. இது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கியின் நடைமுறையில் வரவேற்கத்தக்க மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தொழில் துறையினரின் தேவைகள், விலைவாசி நிலவரம், பணவீக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப, கடன் கொள்கையில் உடனுக்குடன் சிறு, சிறு மாற்றங்களை அறிவித்து விட்டு, தொலைநோக்கு மாற்றங்களை மட்டுமே அரையாண்டு நிதி மற்றும் கடன் கொள்கையில் அறிவிக்கத் தொடங்கியுள்ளது ரிசர்வ் வங்கி. இதனால், இப்போது நிதிக் கொள்கை அறிவிப்பில் பரபரப்பான அம்சங்கள் இடம்பெறுவதில்லை.

நிதி மற்றும் கடன் கொள்கையின் முக்கிய நோக்கங்கள் இரண்டு. ஒன்று, விலைவாசியையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவது. இரண்டு, தொழில், விவசாயம், சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான வங்கிக் கடன் தங்கு தடையின்றி கிடைக்கச் செய்து, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது.

தற்சமயம், உயர்ந்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே அவசரத் தேவை. எனினும் அண்மையில் அறிவிக்கப்பட்ட கடன் கொள்கையில் ரிசர்வ் வங்கியின் பிரதானமான விகிதங்கள் மாற்றப்படவில்லை.

ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டிவிகிதம் 6 சதவிகிதமாகவே தொடர்கிறது. சி.ஆர்.ஆர். எனப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு 6.5 சதவிகிதமாகவே இருக்கும்.

அதேபோல், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால அவசரக் கடன்களுக்கு வட்டி விகிதம் 7.75 சதவிகிதமாகவே உள்ளது.

மாறாக, இந்த விகிதங்கள் உயர்த்தப்பட்டிருந்தால் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கு வட்டி உயர்த்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். சி.ஆர்.ஆர். எனப்படும் ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தில் அரை சதவிகிதம் உயர்த்தி இருந்தாலும், வங்கிகளின் நிதி ஆதாரத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முடக்கப்பட்டிருக்கும்.

அதே அளவுக்கு பொது மக்களுக்குக் கடன் கொடுப்பது குறைந்திருக்கும். ஆக, கடன்களுக்கு வட்டி விகிதம் உயராமலும், கடன்தொகை குறையாமலும் புதிய கடன் கொள்கை பார்த்துக் கொண்டது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், வளர்ச்சியின் வேகம் தடைபட்டுவிடக் கூடாது என்பதில் ரிசர்வ் வங்கி உறுதியாக இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, சி.ஆர்.ஆர். மற்றும் ரெப்போ விகிதம் (வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால அவசரக் கடனுக்கான வட்டி விகிதம்) கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உயர்த்தப்பட்டது. எனவே அவற்றை மேலும் உயர்த்திக் கடன் பெறுவோர்களின் சுமையை இன்னும் அதிகரிக்க ரிசர்வ் வங்கி விரும்பவில்லை என்பது கண்கூடு.

அப்படியானால், இந்தப் புதிய நிதிக் கொள்கையில் என்னதான் சிறப்பு அம்சம்? நிதிக் கொள்கையில் அனைவரும் முக்கியமாக எதிர்பார்ப்பது ஒன்று உண்டு. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை குறித்து ரிசர்வ வங்கியின் கணிப்பு என்ன என்று அறிந்து கொள்வதுதான் அது. அந்தவகையில், ஜி.டி.பி. எனப்படும் நாட்டின் மொத்த உற்பத்தியின் மதிப்பு 2007 – 08-ஆம் ஆண்டில் 8.5 சதவிகிதமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. அத்துடன், தற்சமயம் 6 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ள பணவீக்கம், 5 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதே ரிசர்வ் வங்கியின் குறிக்கோள்.

பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதலாண்டு தற்போது நடந்து வருகிறது. இந்த நிதி ஆண்டில் ஜி.டி.பி. 9 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும் என்பது இலக்கு. எனினும், ரிசர்வ் வங்கி 8.5 சதவிகிதமாக இருக்கும் என்று அடக்கி வாசிப்பதற்கு காரணம் என்ன?

உலக அளவில், நடப்பாண்டு வளர்ச்சி விகிதம் சற்று குறைவாகவே இருக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அடுத்து, இந்தியாவில் பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகளின் பலன் வெளிப்பட கொஞ்சம் கால அவகாசம் தேவை.

கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வங்கி டெபாசிட்டுகள் 20 சதவிகிதமாகவும், வங்கிக் கடன்கள் 30 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளன. ஏற்கெனவே இப்படி அதிகரித்துள்ள விரிவான அடித்தளத்தில், மேலும் இதே அளவு வங்கி டெபாசிட்டுகள் அதிகரிக்கும் என்றும், வங்கிக் கடன்கள் 30 சதவிகிதம் உயரும் என்றும் எதிர்பார்க்க முடியாது. வங்கிக்கடன் 24 அல்லது 25 சதவிகிதமே உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிக் கடன் வட்டி விகிதம் உயர்ந்துள்ளதும் இதற்கு ஒரு காரணம். நல்லவேளையாக, ரூ. 20 லட்சத்துக்குக் குறைவான வீட்டுக் கடன்களுக்கு வட்டி உயராது. மாறாக, குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும், முதல்முறையாக, ரூ. 20 லட்சத்துக்குக் குறைவான வீட்டுக்கடன்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவு ரூபாயின் மதிப்பு வலுவடைந்துள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும்போது நாம் இதற்காக பெருமிதம் கொள்ளக்கூடும்.

கச்சா எண்ணெய் உள்ளிட்ட நமது இறக்குமதிப் பொருள்களுக்குக் குறைந்த ரூபாய் கொடுத்தால் போதுமானது. ஆனால், இன்னொரு பக்கம், ரூபாயின் மதிப்பு வலிவடைவதால், நமது ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையும். காரணம், அவர்களுக்குக் கிடைக்கும் டாலர்களின் மதிப்பு குறைகிறதல்லவா?

இது நமது ஏற்றுமதியை இரண்டு வகையில் பாதிக்கக் கூடும். ஏற்றுமதியாளர்களுக்கு லாபம் குறையும். இரண்டாவதாக, நஷ்டப்பட்டுக் கொண்டு ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற மனநிலை ஏற்படக்கூடும். இதனால் ஏற்றுமதி அளவு சரியும். ஏற்றுமதி குறைந்தால், தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும். இது தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும்.

இன்னொரு பக்கம், ஏற்றுமதியாகும் ஒரு பகுதி பண்டங்களின் மூலப்பொருள்கள் இறக்குமதி செய்தவை. இவற்றின் விலை குறைவதால் ஏற்றுமதியாளருக்கு வேறு ஒருவகையில் ஆதாயம் கிடைக்கத்தான் செய்கிறது. ஆகவே, ஏற்றுமதியையும், இறக்குமதியையும் இருவேறு கூறுகளாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்று வாதிடுபவர்களும் உண்டு.

எப்போது ரூபாயின் மதிப்பு ஓர் அளவுக்கு மேல் உயரும்போது, மேற்கூறிய காரணங்களுக்காக, ரிசர்வ் வங்கி தலையிட்டு, அதனைச் சீர்படுத்த முனைவது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படிச் செய்வதற்கு இதுவரை முன் வரவில்லை. இன்னும் காலம் கனியவில்லை என்று ரிசர்வ் வங்கி கருதுகிறதுபோலும்.

அன்னியச் செலாவணி தளத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் வங்கி டெபாசிட்டுகளுக்கு வட்டி குறைக்கப்பட்டுள்ளது போன்ற மிகச் சிறிய அளவிலான செயல்பாடுகளை காண முடிகிறது. அதேபோல், இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

அதிவேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா ஒன்று. இந்நிலையில் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இல்லாமல், விலைவாசியையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவதே புதிய நிதிக் கொள்கையின் நோக்கம் என்பது வெளிப்படை.

(கட்டுரையாளர்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் துணைப் பொது மேலாளர் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னாள் செனட் உறுப்பினர்.)

================================================

ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம்: குருமூர்த்தி வலியுறுத்தல்

திருப்பூர், மே 9: டாலர் வீழ்ச்சியால் பாதிப்பு ஏற்படுவதால், ஏற்றுமதியாளர்கள் ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை திருப்பூரில் ஏற்றுமதியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்தார். டாலர் வீழ்ச்சி காரணமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதுடன், தொடர்ந்து இந்நிலையில் ஏற்றுமதி செய்வதில் ஏற்றுமதியாளர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில், ஏற்றுமதியாளர்கள் கையாளவேண்டிய உத்திகள் குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், எஸ்.குருமூர்த்தி ஆலோசனை வழங்கினார்.

குருமூர்த்தி கூறியது: டாலர் வீழ்ச்சியை எதிர்பார்க்கவில்லை என ஏற்றுமதியாளர்கள் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. நம்நாட்டில், கடந்த ஒரு ஆண்டாக விலைவாசி உயர்ந்துள்ளது. இதற்கு பெட்ரோல் விலை உயர்வும் காரணமாக உள்ளது. நமது தேவையில் முக்கால் பங்கு பெட்ரோல் இறக்குமதி செய்கிறோம். பஸ் கட்டணம், உரம் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் பெட்ரோல் விலை உயர்வு பாதிக்கிறது.

ஆதாரமான பொருளாக இருக்கும் பெட்ரோல் விலை அதிகரிக்கும்போது, அது பொருளாதாரத்தை முழு அளவில் பாதிக்கிறது. பெட்ரோல் விலை 5% உயர்ந்தால், மற்ற பொருள்களின் விலை 10% வரை உயர்ந்துவிடுகிறது. பெட்ரோல் விலை உயர்ந்த நிலையிலும், நமது பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை இருந்தது. ஆனாலும் அரசு சரியாக நிர்வாகிக்காத காரணத்தால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. விலைவாசி உயரும் என ரிசர்வ் வங்கிக்கு முன்கூட்டியே தெரியும்.

கடந்த 2 மாதங்களில் டாலர் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் நம்நாட்டில் முதலீடு செய்வதும், ஏற்றுமதி அதிகரித்துள்ளதும், வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பும் பணத்தாலும் அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகமாக உள்ளது.

ரிசர்வ் வங்கி அதிக அளவில் டாலரை வாங்கியதன் காரணமாக நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்தது. தொழிலுக்கு தேவையான பணத்திற்கும் கூடுதலாக பணம் வரும்போது, அதை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கின்றனர். இப்படி, ரூ.2.60 லட்சம் கோடி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி அதிகம் இருப்பதால், அதை அமெரிக்காவிற்கு 2% அல்லது 2.5% என மிகக் குறைந்த வட்டிக்கு கடனாக தருகிறோம். இதனால் ரிசர்வ் வங்கிக்கு நஷ்டம்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அரசை சார்ந்திருக்கும் நிலை இனி இருக்கக்கூடாது. ஏற்றுமதியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடும் நிலை மாறி, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அரசுக்கு ஆலோசனை சொல்கின்ற நிலைக்கு வரவேண்டும். இதற்காக, ஏற்றுமதியாளர்கள் சிந்தனைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். ஏற்றுமதி வர்த்தகத்தை டாலர் மதிப்பில் நிர்ணயித்து வர்த்தகம் செய்வதைவிட ரூபாய் மதிப்பில் நிர்ணயம் செய்து ஏற்றுமதியாளர்கள் வர்த்தகம் செய்ய வேண்டும் என்றார்.

Posted in Agriculture, Analysis, Banking, Banks, Biz, Bonds, Business, Central Bank, Commerce, Commodity, CRR, Currency, Deflation, Deposits, Dollar, Economy, Employment, Exchange, Export, Exports, FDI, Finance, Foreign, GDP, Growth, House, Housing, Imports, Industry, Inflation, Insurance, Interest, job, Loans, markets, MNC, Money, NRI, Planning, Policy, RBI, Real Estate, Recession, Reserve Bank, Rupee, Rupees, Scheme, SEZ, Shares, Stagflation, Stocks, Thiruppoor, Thiruppur, Thirupur, Tirupoor, Tirupur, Value, workers | Leave a Comment »

Rs 11000 cr outlay for rural roads under Bharat Nirman scheme

Posted by Snapjudge மேல் மார்ச் 28, 2007

புதிய ஊரக சாலைகள் அமைக்க ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கீடு

புது தில்லி, மார்ச் 28: நடப்பு நிதியாண்டில், நாட்டில் புதிய ஊரக சாலைகள் அமைக்க ரூ.11,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமரின் கிராம முன்னேற்ற திட்டத்தின் கீழ், மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ், ஆயிரம் மக்கள் வசிக்கும் அனைத்து கிராமங்களிலும் அனைத்துப் பருவநிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய தரமான புதிய சாலைகள் அமைக்கப்படும்.

மலைக் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களில் புதிய சாலைகள் அமைக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் நாட்டில் 66,802 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 1.46 லட்சம் கி.மீ. புதிய சாலைகள் அமைக்கப்படும். மேலும், 1.94 லட்சம் கி.மீ. பழைய சாலைகளும் புதுப்பிக்கப்படும்.

இத்திட்டம் 2005-06-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்ட இரு ஆண்டுகளில் 10,303 கிராமங்களுக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. 36,341 பழைய சாலைகள் மேம்படுத்தப்பட்டன. 2005-06 ஆம் நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ.4,219.98 கோடியும், 2006-07-ம் நிதியாண்டில் ரூ.5,376.28 கோடியும் செலவழிக்கப்பட்டதாக ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங் தெரிவித்தார். சாலை அமைப்புப் பணிகளில் தரத்தைப் பாதுகாக்க, மூன்றடுக்கு தரக் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் கூறினார்.

இப்பணிகளில் மக்களின் பங்களிப்பை உறுதிசெய்ய பணி நடைபெறும் இடங்களில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பணிகளின் நிதி நிர்வாகங்கள், தொழில்நுட்ப ஆய்வு ஆகியவை ஆன்லைன் மூலமாக கண்காணிக்கப்படுகிறது என அமைச்சர் ரகுவம்ச பிரசாத் சிங் தெரிவித்தார்.

========================================================
தமிழகத்தில் சாலை மேம்பாட்டுக்கு ரூ.77 கோடி: டி.ஆர். பாலு அனுமதி

புதுதில்லி, மார்ச் 29: மறுசீரமைக்கப்பட்ட மத்திய சாலை நிதித் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் சாலை ரூ.77.70 கோடி செலவில் சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு அனுமதியளித்துள்ளார்.

தமிழகத்தில், மாநில நெடுஞ்சாலைகள், முக்கிய மாவட்ட சாலைகள் மற்றும் இதர மாவட்டச் சாலைகளில் 26 சாலைகளில் விரிவாக்கப் பணிகளும் வலுப்படுத்தும் பணிகளும் நடைபெறும்.

முக்கியத் திட்டங்கள் விவரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம் -சோமங்கலம் சாலை மேம்பாட்டுக்கு ரூ.9 கோடி.

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி -பட்டுக்கோட்டை -செங்கப்பட்டி சாலை ரூ.4.56 கோடியில் விரிவுபடுத்தப்பட்டு, மேம்படுத்தப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யார்-வந்தவாசி-போளூர் சாலை சதார்ரங்கல் சாலையுடன் இணைக்க ரூ.3.84 கோடி செலவிடப்படும்.

ஆற்காடு -விழுப்புரம் சாலைக்கு ரூ. 4.19 கோடி செலவிடப்படும்.

செய்யூர் -வந்தவாசி -போளூர் சாலையை மேம்படுத்தி, விரிவுபடுத்த ரூ.3.71 கோடி.

வேலூர் மாவட்டத்தில் திருவாளம் -காட்பாடி -வேங்கடகிரி கோட்டா சாலையில் பழுதுநீக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.4.10 கோடி செலவிடப்படும்.

சித்தூர் -திருத்தணி சாலையை மேம்படுத்த ரூ.4 கோடி செலவிடப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் பெண்ணாகரம் -நாதன்முறை சாலை மேம்பாட்டுக்கு ரூ.3.50 கோடி.

சேலம் மாவட்டத்தில் பொன்னம்மாபேட்டை முதல் வலசையூர் வீராணம் சாலை வழியாக சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.3.50 கோடி செலவிடப்படும்.

சென்னையில் ரூ.3 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கப்படும்.

திருவாரூர் மாவட்டத்தில் உளிக்கோட்டி -தளிக்கோட்டை-வடசேரி சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.5 கோடி செலவிடப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை -திருத்தணி -ரேணிகுண்டா சாலை மற்றும் இச் சாலையில் இடம் பெற்றுள்ள மேம்பாலத்தைப் புதுப்பிக்க ரூ.2.50 கோடி.

கரூர் மாவட்டத்தில் தோகமலைப்பட்டி சாலையில் பாலம் அமைக்க ரூ.1 கோடி செலவிடப்படும்.

திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சேலம், சிவகங்கை, கோவை, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திண்டுக்கல், சென்னை, தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, திருவள்ளூர், கரூர், ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் சிதம்பரத்திலும் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

Posted in Arcot, Artery, Auto, Balu, Bharat Nirman, Budget, Bus, car, Chengalpattu, Commerce, Development, Dharmapuri, DMK, Finance, infrastructure, Kanchipuram, Kanjeepuram, Karur, Pattukottai, Plan, PMGSY, Pradhan Mantri Gram Sadak Yojana, Raghuvansh Prasad Singh, Roads, Rural, Rural Development, Salem, Scheme, Suburban, Tambaram, Thiruvannamalai, Thiruvaroor, TR Balu, Transport, Transportation, Vandhavasi, Vellore, Village, Vizhuppuram | Leave a Comment »

Krishna Canal project farmland acquisition – Poonamallee Taluk office furniture as compensation

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2007

அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு 16 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்காததால் பூந்தமல்லி தாலுகா அலுவலகம் ஜப்தி

கிருஷ்ணா கால்வாய்க்காக அரசால் நிலம் கையகப்படுத்தப்பட்டதில் 16 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்கப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருள்களுடன் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

சென்னை, மார்ச் 27: அரசு கையகப்படுத்திய விளைநிலங்களுக்கு உரிய தொகை வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி பூந்தமல்லி தாலுகா அலுவலகம் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

கிருஷ்ணா நதி நீர் கால்வாய் பணிக்காக திருவள்ளூர் அருகே 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளை நிலங்களை அரசு 1990-ல் கையகப்படுத்தியது. இதில் புள்ளரம்பாக்கம், பொத்தூர், ஆலத்தூர், பாக்கம், பூண்டி அருகே உள்ள மயிலாப்பூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இதில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களான விவசாயிகளுக்கு சென்டுக்கு ரூ.200 வீதம் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த தொகை மிகவும் குறைவாக இருப்பதாகவும், அதிக தொகை வழங்கவும் கோரி நில உரிமையாளர்கள் பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கினை விசாரித்த நீதிபதி, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என 2003-ல் உத்தரவிட்டார்.

இதையடுத்து அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை இழப்பீட்டுத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டும் என 2004-ல் உத்தரவிட்டனர்.

ஆனாலும் 16 ஆண்டுகள் ஆகியும் இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவும் செயல்படுத்தப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி 3-வது விரைவு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி கே. அசோகன், பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தை ஜப்தி செய்ய கடந்த பிப்ரவரி 20-ல் உத்தரவிட்டார். இழப்பீட்டுத்தொகை வழங்க மார்ச் 23 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

ஆனால் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் 200க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் பூந்தமல்லி தலுகா அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

அங்கிருந்த மேசை, நாற்காலி, கம்ப்யூட்டர், இயங்காத ஜீப் உள்ளிட்டவற்றை நீதிமன்ற அமீனா, பாதிக்கப்பட்ட விவசாயிகள், வழக்கறிஞர் அருள் சுப்பிரமணியன் ஆகியோர் ஜப்தி செய்தனர்.

ஜப்தி செய்யப்பட்ட பொருள்களை லாரியில் ஏற்றி நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.

தாலுகா அலுவலகம் ஜப்தி செய்யப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்த தாலுகா அலுவலக ஊழியர்கள், அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட முக்கியமான பொருட்களை தனி அறையில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தனர். தாசில்தாரும் அலுவலகத்தில் இல்லை. இதையடுத்து நில உரிமையாளர்களுக்கும் அங்கிருந்த அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக நில உரிமையாளர்கள் கோஷமிட்டனர்.

Posted in Aalandhoor, Aalandhur, acquisition, Agriculture, Alandoor, Alandur, Asset, Canal, Collector, Compensation, Court, Dam, encroachment, Farmer, Farming, Farmlands, Finance, Government, Govt, Irrigation, Judge, Justice, Krishna, Lake, Land, Law, Local Body, Municpality, Mylapore, Officer, Order, Poonamallee, Poondi, Poonthamallee, Poonthamalli, Poovirunthavalli, Property, Ransack, revenue, River, Scheme, SEZ, Taluk, Thiruvalloor, Thiruvallur, Water, Weird | Leave a Comment »

Rs. 330 crore scheme for improving Tourism along Seashore communities

Posted by Snapjudge மேல் மார்ச் 6, 2007

சுற்றுலாவை மேம்படுத்த ரூ.330 கோடியில் திட்டம்

பா. ஜெகதீசன்

சென்னை, மார்ச் 5: கடலோரச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுமார் ரூ.330 கோடி செலவில் “கடலோரப் பாதுகாப்புத் திட்ட’த்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்கள், மத்திய அரசின் 4 நேரடி ஆட்சிப் பகுதிகள் ஆகியவற்றில் அமைந்துள்ள மொத்தம் 7 ஆயிரத்து 517 கி.மீ. நீளக் கடற்கரைப் பகுதிகள் இதன்மூலம் பலன் பெறும்.

இத்திட்டத்தின் கீழ் படகுகள், வாகனங்கள் வாங்குவது, காவல் நிலையங்களை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவிகளை அளிக்கும்.

குறைந்த செலவில் பொழுது போக்குவதற்கு ஏற்ற இடமாகக் கடற்கரை திகழ்கிறது. எனவே, சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் அங்கு வருகின்றனர். அப்படி வருபவர்களுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகளைச் செய்து தருவது மிக அவசியம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் தெரிவித்தார். தமிழகத்தில் இன்னும் அதிகமாக பிரபலம் ஆகாத கடற்கரைப் பகுதிகள் கண்டறியப்பட்டு, அவை மேம்படுத்தப்படும் என்றார் அவர்.

விபத்துகளில் இருந்து காக்க…: கடற்கரைப் பகுதிகளில் விபத்துகள், எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படும்போது அங்கு உள்ள சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பொது மக்கள் ஆகியோரை எப்பாடுபட்டாவது பாதுகாக்க வேண்டும்.

அதற்கு வசதியாக, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட “உயிர் காக்கும் பாதுகாவலர்’களை முக்கிய கடற்கரைப் பகுதிகளில் நியமிக்க சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் எவ்வித ஆபத்தும் இன்றி நீச்சல் அடிப்பதற்கு உதவும் வகையில் “பாதுகாப்பு வலை’களை அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையோரத்தில் நீந்துபவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவதை இப் பாதுகாப்பு வலைகள் தடுக்கும். அத்துடன் மக்கள் நீந்தும் கடலோரப் பகுதிகளுக்குள் ஆபத்தான கடல் வாழ் உயிரினங்கள் நுழைவதையும் தடுத்து நிறுத்தும்.

பாரம்பரியக் கட்டடங்களைப் பாதுகாக்க…: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பாரம்பரியக் கட்டடங்களைப் பாதுகாக்கவும், அப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு மத்திய அரசின் மானிய உதவியாக ரூ.40 கோடி கிடைக்கும். 4 ஆண்டுகளில் இக்குறிப்பிட்ட திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும்.

Posted in Beach, Beautification, Beauty, Budget, Chennai, Communities, Community, Government, Guide, Harbor, Harbour, improvement, Operator, Plan, Safety, Scheme, Sea, Seashore, Seaside, Security, Ship, Sureshrajan, Tamil Nadu, TN, Tour, Tourism, Visitors | Leave a Comment »

New scheme from Tamil Nadu Government named after Dhayalu Ammal

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006

தயாளுஅம்மாள் – கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பு திட்டம்: குறைந்த செலவில் சிகிச்சை

கரூர், டிச. 3: கரூரில், தயாளுஅம்மாள் கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்புத் திட்டம் எனும் புதிய திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்தார் கே.சி. பழனிசாமி எம்பி.

இது தொடர்பாக அவர் கூறியது:

உதயம் அறக்கட்டளை மற்றும் ஜி.சி. மருத்துவமனை ஆகியவை இத்திட்டத்தைச் செயலாக்கும். ஏழை, நடுத்தர கர்ப்பிணிப் பெண்கள் 4-வது மாதத்திலிருந்து உதயம் அறக்கட்டளையில் ரூ. 2000 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். இதில், தனிப்பட்ட எனது பங்களிப்பு ரூ. 500. எனவே, பெண்கள் ரூ. 1,500 செலுத்தினால் போதுமானது.

இவர்களுக்கு 6-வது மாதம் முதல், ஸ்கேன், பரிசோதனை, சிகிச்சை என அனைத்தும் இலவசமாக கிடைக்கும். சுகப்பிரசவம் எனில் இத்தொகையே போதுமானது.

அறுவை சிகிச்சை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அதற்கு ரூ. 5000 ஆயிரம் செலவாகும். இதில், ஏற்கெனவே பெற்ற 1,500 போக, கூடுதலாக ரூ. 3,500 செலுத்த வேண்டும். இந்த ரூ. 3,500லும் எனது சொந்த தொகை ரூ. 1000 பங்களிப்பாக அளிக்கப்படும் என்றார்.

Posted in abuse, Dayaalu Ammal, Dayalu Ammaal, Dhayaalu Ammaal, Dhayalu Ammal, Government, Govt, Karur, KC Pazhanisami, misuse, Naming, Palanichaamy, Pazhanisaamy, Pregnancy, Pregnant Ladies Protection, Scheme, Spouse, Tamil Nadu, TN, Wife | Leave a Comment »