Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘scheduled castes’ Category

Caste-related violence in Madurai – Dalit Lawyer gets abused by PMK Secretary

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

தலித் வழக்கறிஞரின் வாயில் மலம் திணிப்பு – மதுரையில் கொடுமை

மதுரையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரின் வாயில் மலம் திணிக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது. இந்த மகா பாதகச் செயலைச் செய்த பாமக செயலாளர் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை சமயநல்லூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளவனுக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின்போது மோதல் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் சுரேஷ் தனியே சென்றபோது அவரை வழிமறித்த கிள்ளிவளவன் மற்றும் மதுரை பாமக மாவட்ட செயலாளர் கிட்டு ஆகியோர் கொண்ட கும்பல் அவரை அடித்து உதைத்துள்ளது. அத்தோடு விடாமல் அவரது வாயில் மலத்தையும் திணித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சுரேஷ் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பஞ்சாயத்து தலைவர் கிள்ளிவளன் மற்றும் அவரது அடியாட்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் பாமக மாவட்ட செயலாளர் கிட்டுவை போலீசார் கைது செய்யவில்லை. இந் நிலையில் பாமக தலைவர் ஜிகே மணி மதுரை வந்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அவர் பாமக செயலாளரை கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டார்.

Posted in Anbumani, Attorney, backward, BC, Caste, Community, Dalit, Discrimination, DPI, Elections, GK Mani, Harijan, Hindu, Hinduism, Law, Lawyer, Madurai, Mani, MBC, MLC, Mob, OBC, Oppression, Order, Panchayat, Panchayath, Panjayat, Panjayath, Party, PI, PMK, Police, Polls, Ramadas, Ramadoss, Religion, Reservations, Reserved, Samaianalloor, Samaianallur, Samayanalloor, Samayanallur, SC, scheduled castes, Supremacy, untouchable, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Viduthalai Siruthaikal, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »

OBCs make up 41% of India’s population

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்டோர் 41 சதவீதமே!

சாம்பிள் சர்வே தகவல்

புதுதில்லி, நவ. 2: இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 41 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பு (என்எஸ்எஸ்ஓ) நடத்திய மாதிரிக் கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.

மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அறிவித்தார்.

அது முதற்கொண்டு நாட்டில் இதர பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகை தொடர்பான பொது விவாதம் நடைபெற்று வந்தது. இதர பிற்படுத்தப்பட்டோர் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் உள்ளனர் என்று கூறப்பட்டு வந்தது. அதற்கு பலதரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

கிராமப்புறங்களில் 79,306 வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 45,374 வீடுகளிலும் இந்த மாதிரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்டோர் 20 சதவீதமும் பழங்குடியினர் 8 சதவீதமும் உள்ளதாக மாதிரிக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27.5 சதவீதம் வழங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனுக்களை கடந்த மாதம் 16ம் தேதி விசாரித்த நீதிபதிகள் அரிஜித் பசாயத், எல்.எஸ். பாண்டா ஆகியோரடங்கிய பெஞ்ச், “1930ம் ஆண்டுக்குப் பிறகு இதர பிற்படுத்தப்பட்டோரைக் கண்டறிய சிறப்புக் கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை; இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கை எவ்வாறு அறிவிக்கப்பட்டது’ என்று கேள்வி எழுப்பியது.

“இட ஒதுக்கீடு தொடர்பான முழு விவரங்களைக் கையில் வைத்திராமல் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அறிவிக்கலாமா? இது விதிகளை அறிவிக்காமல் விளையாட்டில் இறங்கியது போன்றது’ எனவும் நீதிபதிகள் அப்போது தெரிவித்தனர்.

இதர பிற்படுத்தப்பட்டோரில் 65 சதவீதம் பேரும் பழங்குடியினரில் 52 சதவீதம் பேரும் இதர வகுப்புகளைச் சேர்ந்த 78 சதவீதம் பேரும் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 34 சதவீதம் பேர் கல்வியறிவு இல்லாதவர்களாக உள்ளதாகவும் மாதிரிக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

Posted in Creamy Layer, India, Literacy, Mandal Commission, National Sample Survey Organisation, NSSO, OBC, Other Backward Classes, Population, Reservation, SC/ST, scheduled castes, scheduled tribes, Statistics, VP Singh | Leave a Comment »

‘SC Opinion on Creamy Layer is unfortunate’ – CPI(M)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

இட ஒதுக்கீட்டில் “கிரீமி லேயர்’: உச்ச நீதிமன்ற ஆணை பிற்போக்கானது -இந்திய கம்யூனிஸ்ட்

புதுதில்லி, அக். 21: தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினர் மத்தியில் உள்ள உயர் வருவாய் பிரிவினருக்கு (கிரீமி லேயர்) இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணை மிகவும் பிற்போக்குத்தனமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இதை மாற்றுவதற்கு நாடாளுமன்றம் தலையிட வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை வருமாறு;

நமது சமுதாயத்தில் உள்ள மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீது நீதித்துறை தொடுத்துள்ள தாக்குதல் இது.

இதை மாற்றவில்லை என்றால், அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்ற லட்சியத்தையே இது தகர்த்துவிடும்.

இடஒதுக்கீட்டுக் கொள்கையையும், அதன் அமலாக்கத்தையும் மறுவரையறை செய்திருப்பதன் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் அத்துமீறி பிரவேசித்துள்ளது.

இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்துக்கு இருக்க வேண்டும் என்பதை, பாரபட்சமற்ற மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டியது நாட்டின் கொள்கை வகுப்பாளர்களே தவிர, உச்ச நீதிமன்றம் அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இப்போதைய நிலையே நீடிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு: எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் மத்தியில் உள்ள உயர் வருவாய் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்பது சரியான நடவடிக்கை அல்ல; இப்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று தெலுங்கு தேச கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தில்லியில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறினார்.

Posted in Affluent, AP, Chandrababu Naidu, Communist, CPI(M), Creamy Layer, Judgement, Marxist, Oppression, Reservations, Rich, SC/ST, scheduled castes, scheduled tribes, Second generation, Supreme Court, Telugu, Telugu Desam | Leave a Comment »