Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2007
மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை: டி.வி.கோபாலகிருஷ்ணன் நெகிழ்ச்சி
“மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை’ என்று இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணனின் 70 ஆண்டு இசை வாழ்க்கையை பாராட்டும் வகையில் அவரது சிஷ்யர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பில், “குரு சேவா 70′ நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் “ஸ்கார்ப்’ அமைப்பிற்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். “யுவர் வாய்ஸ்’ நுõலினை டி.வி.கோபாலகிருஷ்ணன் வெளியிட இசையமைப்பாளர் இளையராஜா பெற்றுக் கொண்டார். “தி கிங் ஆப் பெர்கூசன்மிருதங்கம்’ புத்தகத்தை மியூசிக் அகடமி தலைவர் என்.முரளி வெளியிட கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா பெற்றுக் கொண்டார். “மகிமா’ இசை “சிடி’யை இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா வெளியிட கலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன் பெற்றுக் கொண்டார்.
கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா பேசுகையில், “இசையின் அடிப்படையை தெரிந்து கொண்டால் எல்லா இசையும் ஒன்று தான். தென்னிந்திய இசையிலிருந்தே எல்லா இசைகளும் வருகின்றன. டி.வி.கோபாலகிருஷ்ணன் பல இளம் இசைக் கலைஞர்களை உருவாக்கியிருக்கிறார்’ என்றார். இசை அறிஞர் வி.வி.ஸ்ரீவத்சவா பேசுகையில், “தனது திறமையால் முன்னேறி, பல்வேறு திறமையான இசைக் கலைஞர்களை உருவாக்கி வருகிறார். அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகம்’ என்றார்.
சென்னை சபாக்கள் கூட்டமைப்பின் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில், “நாரதகான சபா ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் பல வித்வான்களை அறிமுகப்படுத்தி, அவர்களுடன் உட்கார்ந்து வாசித்து, அவர்களையும், எங்கள் சபாவையும் வளர்த்த பெருமை டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு உண்டு. அவர் இசை உலகிற்கு செய்த பணி மகத்தானது’ என்றார்.
இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில், “கம்ப்யூட்டர், கிரிக்கெட் உள்ளிட்டவற்றை வைத்துக் கொண்டு, இசையை மட்டும் எடுத்து விட்டால் உலகில் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். நான் சினிமாவில் பிரபலமாக இருந்தபோது, இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரையும், மீண்டும் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எனக்கு டி.வி.கோபாலகிருஷ்ணன் சங்கீதம் கற்றுத் தந்திருக்கிறார். சங்கீத உலகிற்கு அவர் போல ஒருவர் கிடைப்பது அபூர்வம்’ என்றார்.
கலாஷேத்ரா இயக்குனர் லீலா சாம்சன், கர்நாடக கலாசார அமைச்சர் பேபி, மியூசிக் அகடமியின் தலைவர் என்.முரளி ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். ஏற்புரையாற்றிய இசை வித்வான் டி.வி.கோபாலகிருஷ்ணன், “மனிதனுக்கு புத்தி தான் வழிகாட்டி. மனது நல்லபடியாக இருக்க வேண்டும். அதற்கு இசை அவசியம். மனதிற்கு நிம்மதி, ஆனந்தம் தருவது இசை. ஒரு பாடலை கேட்கும் போது, அதோடு உங்கள் குரலில் பாடி வருகிறீர்கள். உங்கள் உள்ளத்தில் என்றும் இசை பாடிக் கொண்டிருக்க வேண்டும்’ என்றார்.
Posted in Audio, Bala murali krishna, Balamurali krishna, Balamuralikrishna, BGM, Carnatic, CD, Chennai, Cinema, City, Classical, Events, Films, Gopalakrishnan, Guru, Guru Seva 70, Ilaiyaraja, ilayaraja, Instructor, IR, Kalakshethra, Kalasethra, Kalasetra, Kalashethra, Kalashetra, Live, Madras, MD, Movies, music, NGO, Performance, Raja, release, SCARF, service, Shows, Stage, Teacher, Theater, Theatre, TV Gopalakrishnan, TVG, Your voice | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006
மன நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னையில் சர்வதேச திரைப்பட விழா
சென்னை, அக். 4: மனநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச திரைப்பட விழா சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 3 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் 9 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அனுமதி இலவசம். ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
மனச்சிதைவு நோய் குறித்து ஆராய்ச்சி செய்துவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான “ஸ்கார்ஃப்,’ இந்தத் திரைப்பட விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் இயக்குநர் டாக்டர் ஆர்.தாரா, சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
இந்தியாவில் 90 லட்சம் பேர் மனச் சிதைவு உள்ளிட்ட மனநலம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் 37 மட்டுமே உள்ளன.
தமிழகத்தில் ஏர்வாடியில் உள்ள மனநலக் காப்பகத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் இறந்தனர். சரியான விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம்.
மனநலம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். இப் பணியில் ஊடகங்களுக்கு அதிகப் பங்கு இருக்கிறது என்றார் டாக்டர் தாரா. திரைப்பட விழா: மன நோய்களின் பல்வேறு தன்மைகளை மையமாகக் கொண்ட, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. சஞ்சய் தத் நடித்து, தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “லகே ரஹோ முன்னாபாய்‘ என்ற இந்தித் திரைப்படம் நிறைவு நாளில் திரையிடப்படுகிறது.
திரைப்பட விழாவை ஒட்டி அறிவிக்கப்பட்ட குறும்பட போட்டிக்கு 40-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 15 பேரின் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் படங்கள் நடுவர் குழு முன் திரையிடப்படும். அவற்றில் சிறந்த மூன்று படங்களுக்கு தலா ரூ.1 லட்சம், ரூ.75,000 மற்றும் ரூ.50,000 பரிசு வழங்கப்படும்.
செய்தியாளர் சந்திப்பில் நடிகர் பார்த்திபன், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் பேசினர். “பொய் முகங்கள்’ என்ற தலைப்பிலான மனநோய் குறித்த விளக்கப் படமும் திரையிடப்பட்டது.
Posted in Awareness, Chennai, Events, Festival, Films, Madras, Movies, Poi Mugangal, SCARF, Tamil | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006
குறும்பட போட்டியில் பங்கேற்க வாய்ப்பு
திரைப்படங்கள், அதிலும் குறும்படங்கள் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சென்னையில் உள்ள மனச்சிதைவு ஆராய்ச்சி மையம் (SCARF) ஒரு போட்டியை அறிவித்துள்ளது.
மனநோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி தவறான, எதிர்மறையான எண்ணங்கள் சித்திரிக்கப்பட்டு அவை நம் மனதில் பதிந்துவிட்டன. இவற்றை மாற்றுவதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும்.
மனநலம் மற்றும் மனநோய் சம்பந்தப்பட்ட மிக நுண்ணிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் வகையில் குறும்படங்களை உருவாக்கி இந்த மையத்துக்கு அனுப்ப வேண்டும்.
இந்தப் போட்டியில் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள், மாணவர்கள், மருத்துவர்கள் மட்டுமின்றி மனநலம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் கொண்ட யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். 3 முதல் 5 நிமிடங்கள் கொண்ட குறும்படங்கள்தான் போட்டியில் பங்கேற்க முடியும்.
இப்படங்கள் கற்பனை கதை வடிவமாகவோ, செய்திப் படமாகவோ, இரண்டும் கலந்ததாகவோ இருக்கலாம். திரைப்படங்கள் எந்த வடிவமைப்பில் எடுக்கப்பட்டிருந்தாலும் டி.வி.டி.யாகத்தான் போட்டிக்கு அனுப்பப்பட வேண்டும்.
படங்கள் ஆங்கில மொழியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஆங்கில மொழிமாற்றம் செய்யப்பட்டதாக (Subtitles்) இருக்க வேண்டும். நுழைவுக்கட்டணம் எதுவும் இல்லை.
தேர்ந்தெடுக்கப்படும் படங்கள் அக்டோபர் 6, 7 தேதிகளில் சென்னையில் நடைபெறும் திரைப்பட விழாவின் போது திரையிடப்படும்.
போட்டிக்கான கடைசி நாள்: 30.09.2006.
Address: SCARF (INDIA), R/7A, North Main Road, Anna Nagar (West Extn.), Chennai -600 101.
Posted in Challenged, Chennai, Cine Festival, Contest, Disabled, Docu Dramas, Documentary, Movies, SCARF, Short Films, Tamil | Leave a Comment »