சௌதியில் பயங்கரவாதச் சந்தேக நபர்கள் கைது
![]() |
![]() |
பயங்கரவாதச் சந்தேக நபர்கள் 170க்கும் அதிகமானோரைத் தாம் கைது செய்துள்ளதாக சௌதி அரேபியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் சிலர் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கான விமான ஓட்டிகளாக பயிற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சில வெளிநாட்டவர்கள் உள்ளடங்கலான, இந்தச் சந்தேக நபர்கள், சௌதியின் பெற்றோலிய கிடங்குகள், முக்கியஸ்தர்கள் மற்றும் நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கின்ற இராணுவத் தளங்களைத் தாக்க திட்டமிட்டிருந்தார்கள் என்று சௌதி அரேபிய உள்துறை அமைச்சு கூறியுள்ளது.
இந்த தீவிரவாதிகள் விமான ஒட்டிக்கான பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
ஆயுதங்களும் பல மில்லியன் டொலர்கள் பணமும் கைப்பற்றப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.
தீவிரவாதிகளின் தாக்குதல்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாகக் குறைந்திருக்கின்ற போதிலும், கடந்த பல வருடங்களாக சௌதி அரேபியா அல் கைதாவுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறது.
முக்கிய அல் கைதா சந்தேக நபரைக் கைது செய்ததாக அமெரிக்கப் படைகள் அறிவிப்பு
![]() |
![]() |
இராக்கில் அமெரிக்கப் படையினர் |
இரானில் இருந்து தனது சொந்த நாடான இராக்குக்குத் திரும்பிவர முயற்சித்த, முக்கிய அல் கைதா செயற்பாட்டாளர் ஒருவரைத் தாம் பிடித்துள்ளதாக அமெரிக்க இராணுவ நிர்வாகம் கூறுகிறது.
அப்ட் அல் ஹதி அல் இராக்கி என்னும் அந்த நபரைத் தாம், குவாண்டனாமா தடுப்பு முகாமுக்கு மாற்றியுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.
அவர் பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் ஆப்கானில் உள்ள அமெரிக்கப் படையினர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், பாகிஸ்தானின் அதிபர் முஷாரப்பின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் முயற்சிக்காக திட்டமிட்டார் என்றும் பெண்டகன் அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகத்தின் சார்பில் பேசவல்ல் ஒருவர் தெரிவித்தார்.
இவர் குறித்த தகவல்களுக்காக அமெரிக்கா ஒரு மில்லியன் டொலர்கள் சன்மானமும் அறிவித்திருந்தது.
இராக்கில் அல்கயீதா அமைப்பின் தொடர்புகளை துண்டிக்க அமெரிக்க இராணுவம் நடவடிக்கை
![]() |
![]() |
இராக்கில் தேடுதல் வேட்டைகள் |
இராக்கில் அல்கயீதா அமைப்பின் தொடர்புகளை துண்டிக்க தாம் மிகப்பெரும் நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்திருப்பதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ள்து.
தலைநகரின் வடக்கேயும், மேற்கேயும் நேற்று இரவு நடத்தப்பட்ட திடீர் வேட்டைகளில் வன்மைவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்ட 72 பேர் தடுத்து வைக்கப்பட்டார்கள்.
இன்னொரு வேட்டையில் நைட்ரிக் அமிலம் கொண்ட பெரிய பீப்பாய்கள் இருபதும் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டன.
இராக்கில் உள்ள அல் கைதா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்ததுள்ளது என்று இராக் உள்துறை அமைச்சு கூறுகிறது
இராக்கில் உள்ள அல்கைதா அமைப்பின் தலைவரான, அபு அயூப் அல்-மஸ்ரி அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக, தமக்குத் தகவல்கள் கிடைத்திருப்பதாக இராக்கிய உள்துறை அமைச்சு கூறுகிறது.
இது பற்றி பிபிசியிடம் பேசிய பேச்சாளர் ஒருவர், அமைச்சின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆதாரம் ஒன்று களத்தில் இருந்து இதனை உறுதி செய்கின்ற போதிலும், அமைச்சின் அதிகாரிகள் எவரும் சடலத்தையோ அல்லது ஏனைய ஆதாரங்களுக்கான பொருட்களையோ பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
பாக்தாதிற்கு வடக்கே தீவிரவாதிகளுக்கு இடையிலான மோதல் ஒன்றில் அபு அயூப் அல் மஸ்ரி அவர்கள் கொல்லப்பட்டனர் என் அமைச்சுக்குக் கூறப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தம்மால் உறுதி செய்ய முடியவில்லை என்றும், சடலம் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.
அபு முஸாப் அல்- சர்காவி அவர்கள் கடந்த வருடம் கொல்லப்பட்டதை அடுத்து, அல் கைதாவின் தலைவராக வந்த அபு அயூப் அல்-மஸ்ரி அவர்கள் பற்றிய தகவல்களுக்கு அமெரிக்கா 50 லட்சம் டொலர்கள் சன்மானம் அறிவித்திருந்தது.