Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Samajvadi’ Category

Vice President poll – Sonia announces Hamid Ansari: a diplomat, an academic and a writer

Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2007

துணை ஜனாதிபதி தேர்தல் மனு தாக்கல் தொடங்கியது: காங்.கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரி

துணை ஜனாதிபதி பைரோன்சிங் செகா வத்பதவிக் காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி முடிகிறது.

புதிய துணை ஜனாதிபதி தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற இரு சபை எம்.பி.க்கள் ஓட்டுப் போட்டு துணை ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள்.

துணை ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது. காங்கிரஸ் கூட்டணி, பாரதீய ஜனதா கூட்டணி, 3-வது அணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். 3-வது அணி சார்பில் சமாஜ் வாதி கட்சியைச் சேர்ந்த ரஷீத் மசூத் வேட்பாளராக அறி விக்கப் பட்டார்.

துணை ஜனாதிபதி தேர் தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. முதல் நாளான இன்று 3-வது அணி வேட்பாளர் ரஷீத் மசூத் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், தெலுங்கு தேசம் கட்சித் தலை வர் சந்திரபாபு நாயுடு, அ.தி.மு.க. எம்.பி. மலைச்சாமி, மதி.மு.க. எம்.பி.க்கள் பொள்ளாச்சி கிருஷ்ணன், சிப்பிபாறை ரவிச்சந்திரன் உடன் இருந்தனர்.

காங்கிரஸ் கூட்டணியில் துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் பொறுப்பை இடது சாரி கட்சிகளிடம் விட்டுள் ளனர். எந்த கட்சியையும்சேராத ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய இடது சாரி கட்சித் தலைவர்கள் தீர்மானித் துள்ளனர். இதற்காக அவர்கள் நேற்று டெல்லியில் கூடி விவா தித்தனர்.

வரலாற்று பேராசிரியர் இர்பான் ஹபீப், பேராசிரியர் முஷ்ரூல் ஹசன், மேற்கு வங்க சபாநாயகர் ஹாசீம் அப்துல் ஹாலீம், தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்பட சுமார் 10 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் எந்த இறுதி முடிவும் நேற்று எட்டப்படவில்லை.

வேட்பாளர் பெயரை விரைவில் அறிவிக்க இடது சாரி கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இன்று காலை நடந்த ஆலோசனை யில் இடது சாரி கட்சி தலைவர் கள் ஹமீத் அன்சாரி பெயரை ஏகமனமதாக தீர்மானித்தனர். இதுபற்றி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் அவர்கள் முறைப்படி தெரி வித்தனர்.

எனவே ஹமீத் அன்சாரி துணை ஜனாதிபதி ஆவார் என்று உறுதியாகியுள்ளது.ஹமீத் அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் ஹமீத் அன்சாரி பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதீய ஜனதா கூட்டணி யும், துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த உறுதியாக உள்ளது. வேட்பாளரை தேர்வு செய் யும் அதிகாரத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் யிடம் விட்டுள்ளனர். 22-ந் தேதி வேட்பாளர் பெயர் அறிவிக்கப் படும் என்று சுஷ்மாசுவராஜ் தெரிவித்தார்.

வேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான 23-ந் தேதி பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் மனுத் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் நஜ்மாஹெப்துல்லா, துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.

———————————————————————————————————
Hamid Ansari: a diplomat, an academic and a writer

New Delhi, July. 20 (PTI): Mohammad Hamid Ansari, who was today named the UPA-Left candidate for the post of Vice President, brings with him a wealth of experience as a distinguished diplomat, academic and a writer in a career spanning over four decades.

Considered an intellectual with Left-of-the-Centre inclination, Ansari has carved out a distinct place for himself as a diplomat, academician and a writer specialising in international issues.

Born in Calcutta in 1937, Ansari studied at Shimla’s St Edwards High School and St Xavier’s College in the West Bengal capital and Aligarh Muslim University.

Joining the Indian Foreign Service in 1961, Ansari has served as Indian ambassador to the United Arab Emirates, Afghanistan, Iran and Saudi Arabia.

He was also the Indian High Commissioner to Australia and New Delhi’s Permanent Representative to the United Nations in New York.

Awarded Padma Shree in 1984, Ansari was the Vice-Chancellor of Aligarh Muslim University before he was appointed chairman of the National Commission for Minorities (NCM) in March this year.

———————————————————————————————————

தெற்கு தேய்கிறதே, தெரிகிறதா?

முதன்முறையாக ஒரு பெண்மணி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது பின்னணி நமக்குப் பல சந்தேகங்களை எழுப்புகிறது என்றாலும், மக்களாட்சியில் இறுதி முடிவெடுப்பது வாக்குப்பெட்டிதான் என்பதால் வெற்றியை வரவேற்கிறோம்.

பிரதிபா பாட்டீலின் வெற்றியைப் பெரியாரின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்றெல்லாம் வர்ணிக்கும்போதுதான் நகைப்புக்குரியதாகத் தோன்றுகிறது. ஆவியுடனும் சாமியுடனும் பேசுவதுதான் பெரியாரின் கொள்கைகள் என்பது மிகவும் காலதாமதமாக இப்போதுதான் வெளிச்சத்துக்கு வருகிறது. மகிழ்ச்சி.

குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த நிலையில் அனைவரது பார்வையும் அடுத்து நடக்க இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் நிலைகொண்டிருப்பதில் வியப்பில்லை. மூன்று அணிகளுமே அவரவர் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், அடுத்த குடியரசுத் துணைத் தலைவர் யார் என்பதும், வேட்பாளர்களில் யாருக்கு அதிகத் தகுதி என்பதும் நியாயமான கேள்விகள்.

ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரியும் சரி, பிரதான எதிரணியின் வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லாவும் சரி, அவரவருக்கென தனித்துவம்மிக்க மரியாதைக்குரிய நபர்கள். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ரஷீத் மசூத் அனுபவம்மிக்க அரசியல்வாதி. மூன்று அணியினருமே களத்தில் இருக்கிறார்கள் என்பதால், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் முகம்மது ஹமீத் அன்சாரியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

ஹமீத் அன்சாரியும் நஜ்மா ஹெப்துல்லாவும் இரண்டு மரியாதைக்குரிய சுதந்திரப் போராட்டகாலத் தலைவர்களின் வாரிசுகள். ஹமீத் அன்சாரி, 1927-ல் சென்னையில் நடந்த வரலாற்றுப் புகழ்பெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்த முக்தர் அஹ்மத் அன்சாரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். நஜ்மா ஹெப்துல்லாவோ அபுல்கலாம் ஆசாதின் குடும்பத்தவர்.

நஜ்மா ஹெப்துல்லாவுக்கு பல ஆண்டுகள் மாநிலங்களவையை நடத்திய அனுபவம் உண்டு என்பது உண்மை. மாநிலங்களவையில் துணைத் தலைவராகச் செயல்பட்டவர் என்கிற பெருமையும், எல்லா கட்சியினரிடமும் நட்புப் பாராட்டுபவர் என்கிற நற்பெயரும் அவருக்கு உண்டு. அதேநேரத்தில், பதவிக்காகக் கட்சி மாறியவர் என்கிற அவப்பெயரை நஜ்மா சுமந்து கொண்டிருப்பதும், பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் ஒரு சந்தர்ப்பவாதி என்ற சாயம் பூசிக் கொண்டவர் என்பதும் அவரது மிகப் பெரிய பலவீனங்கள்.

ஹமீத் அன்சாரியைப் பொருத்தவரை அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பைப் பெற்றவர். தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவராக இருப்பவர் என்பதாலேயே இவர் மதவாதி என்றோ, ஒரு சார்பாகச் செயல்படுவார் என்றோ சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால், இவருடைய கருத்துகளில் பல, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குச் சாதகமாக இல்லை, இருக்காது என்பதுதான் நிஜம். மேற்காசியப் பிரச்னையிலும் சரி, ஈரான், இராக் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலும் சரி, அன்சாரியின் கருத்துகள் அரசின் கண்ணோட்டத்திற்கு எதிராக இருப்பவை என்பது ஊரறிந்த உண்மை.

வெளிவிவகாரத் துறை அதிகாரியாக இருந்த அனுபவம், ஹமீத் அன்சாரியின் பலம். அதிலும், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த அனுபவமும் உள்ளவர். அன்சாரியா, நஜ்மாவா என்கிற கேள்வி எழுந்தால் அன்சாரிதான் என்று கண்ணை மூடிக்கொண்டு அடித்துச் சொல்லிவிடலாம். அன்சாரி போன்ற ஓர் அனுபவசாலி குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியக் குடியரசுக்குப் பெருமை சேரும்.

ஒரு சின்ன வருத்தம். இந்தியா குடியரசானது முதல் கடந்த தேர்தல் வரை, குடியரசுத் தலைவர் பதவியோ அல்லது குடியரசுத் துணைத் தலைவர் பதவியோ தென்னகத்துக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த சம்பிரதாயம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தவுடன் அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு ஒரு வேண்டுகோளே விடுத்ததாக ஞாபகம்.

வேட்பாளர் தேர்தலில் நம்மவர்கள் பங்குதான் அதிகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தென்னகம் வஞ்சிக்கப்பட்டதா, இல்லை இவர்கள் கோட்டை விட்டார்களா? தெற்கு தேய்கிறதே, தெரிகிறதா?

——————————————————————————————-

August 10, 2007

இந்தியாவின் புதிய குடியரசுத் துணை தலைவர் ஹமீத் அன்சாரி

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவராக, ஹமீத் அன்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தூதராக பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்ற அவர், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும் இருந்தவர்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நாடாளுமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஹமீத் அன்சாரி, 455 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லா, 222 வாக்குகளைப் பெற்றார். அதிமுக, தெலுங்குதேசம், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மூன்றாவது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்ட ரஷீத் மசூர் 75 வாக்குகளைப் பெற்றார்.

மொத்தமுள்ள 783 வாக்குகளில் 762 வாக்குகள் பதிவாயின. 10 வாக்குகள் செல்லாதவை.

இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் தேர்தல் மிகவும் பரபரப்பு நிறைந்ததாக இருந்தது. அதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது வெற்றியைப் பெற்றிருக்கிறோம். அதற்காக, கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

வெற்றி பெற்ற ஹமீத் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வெற்றி குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு மிகப்பெரிய பொறுப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை சிறப்பாகச் செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்றார்.


Posted in academic, ADMK, Aligar, Aligarh, Anbalagan, Anbalakan, Anbazagan, Anbazhagan, Anbazhakan, Ansari, APJ, Aristocrat, Author, BJP, BSP, candidate, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), diplomat, Divide, DMK, Education, Elections, Hameed, Hamid, Iran, Kalam, Left, Marxist, Masood, minority, Mulayam, Muslim, Najma, National Commission for Minorities, NCM, NDA, Party, Politics, Poll, Polls, President, Rajya Saba, Rajya Sabha, Rajyasaba, Rajyasabha, Rasheed, Rashid, Religion, Reservation, Right, Samajvadi, Samajvadi Party, Samajwadi, Samajwadi Party, Sex, Sonia, Sonia Gandhi, Sonia Gandi, South, University, UNPA, UPA, vice-president, VicePresident, VP, Writer | Leave a Comment »

‘Why did Jaya bachan hide her asset details while competing for Rajya Sabha?’

Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007

சொத்து விவரங்களை மறைத்தது ஏன்? ஜெயாபச்சனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

புதுடெல்லி, மார்ச். 18-

ஆதாயம் தரும் பதவி வகிக்கும் சர்ச்சை தொடர்பாக இந்தி நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயாபச்சன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் அவர் சமாஜ் வாடி கட்சி சார்பில் உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது எம்.பி. பதவிக்கு மீண்டும் இப்போது ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பாராபாய்கி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் அமீர் ஹைதர் தேர்தல் கமிஷ னரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில் அவர், “கடந்த ஜுன் மாதம் நடந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிட்ட ஜெயாபச்சன் தனது வேட்புமனுவில் கணவர் அமிதாப்பச்சனுக்கு தவுலத் பூரில் 2 நிலங்கள் இருப்பதை தெரிவிக்காமல் மறைத்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தேர்தல் கமிஷன் ஏற்கனவே இதுபற்றி பதில் அளிக்கும்படி ஜெயாபச்சனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு அவர் பதில் அனுப்பவில்லை. இப்போது அவருக்கு மேலும் ஒரு நோட்டீசை தேர்தல் கமிஷன் அனுப்பி உள்ளது.

ஏப்ரல் 15-ந்தேதிக்குள் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும். பதில் வரா விட்டால் நீங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை என கருதி தேர்தல் கமிஷன் தன் னிச்சையாக முடிவு எடுக்கும் என்று தேர்தல் அதிகாரி பாண்டே அந்த நோட்டீசில் கூறியுள்ளார். ஜெயாபச்சன் பதில் அளிக்காவிட்டால் அவரது எம்.பி. பதவி பறிபோகும் அபாயம் ஏற்படும்.

===================================================
முலாயம் சொத்து மதிப்பு ரூ. 2.25 கோடி

புடாவன் (உ.பி.), மார்ச் 29: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கைச் சந்தித்து வரும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவ், தமது மொத்த சொத்தின் மதிப்பு ரூ. 2.25 கோடி எனத் தெரிவித்துள்ளார்.

குனார் சட்டப்பேரவைத் தொகுதி வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

Posted in ABCL, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Assets, Bachchans, case, Corruption, Declaration, Declare, Disproportionate, Election, Hid, Hide, Jaya Bachan, Jayabachan, Jeya Bachan, Jeyabachan, kickbacks, Law, lies, MP, Mulayam, Order, Polls, Rajya Saba, Rajya Sabha, RS, Samajvadi, Samajvadi Party, Samajwadi, Samajwadi Party, UP, Uttar Pradesh, voter | Leave a Comment »

Uttar Pradesh Elections – Anlaysis: BSP, BJP, Congress, SP

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

உ.பி. மாநிலத் தேர்தல்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. எனினும் இம் மாநிலத்தில் கட்சிகளிடையே பெரிய கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு பிரதானக் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரியாகக் கருதுவதே இதற்குக் காரணம். மிஞ்சிப் போனால் இக் கட்சிகள் மாநில அளவிலான சிறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம்.

பாஜக இந்த வகையில் ஏற்கெனவே நடவடிக்கையில் ஈடுபட்டு அப்னா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடுகளைச் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அப்னா தளம் என்பது அடிப்படையில் “குர்மிக்கள்’ எனப்படும் பிரிவினரின் கட்சியாகும். மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும் மத்திய பகுதியிலும் இப் பிரிவினர் பெருவாரியாக உள்ளனர். வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த சிறு கட்சியுடனும் பாஜக தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பினரின் கட்சி என்ற முத்திரையைத் தாங்கிய பாஜக, இந்த ஏற்பாடுகள் மூலம் பிற்பட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற முடியும் என்று கருதுகிறது. 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 88 இடங்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது.

மற்றொரு அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ், உ.பி. தேர்தலில் யாருடனும் கூட்டணி சேரும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் அக் கட்சி அதே மூச்சில் தொகுதி உடன்பாட்டுக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ஒருவேளை வி.பி.சிங்கின் ஆதரவு பெற்ற ஜனமோர்ச்சாவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம். அஜீத் சிங்கின் கட்சி, லாலு கட்சி ஆகியவற்றுடனும் இவ்விதம் தொகுதி உடன்பாடு காணப்படலாம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 25 இடங்களை அதாவது மொத்த இடங்களில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களையே பெற்றது. இந்தத் தடவை காங்கிரஸýக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்ல முடியாது.

இப்போது ஆளும் கட்சியாக உள்ள சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் இம் மாநிலத்தில் இரு பெரும் சக்திகளாக விளங்குகின்றன. இந்த இரு கட்சிகளுமே ஒன்றையொன்று பரமவைரிகளாகக் கருதுகின்றன. யாதவ் சமூகத்தினரிடையே செல்வாக்குப் பெற்ற முலாயம் சிங் அண்மைக்காலமாக மற்ற பல சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் முனைப்புக் காட்டி வந்துள்ளார். மாநிலத்தில் “வாட்’ வரித் திட்டம் அமலாக்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக முலாயம் சிங் கட்சியின் தோழமைக் கட்சியாக விளங்கி வந்த மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் முலாயம் சிங்குக்கு எதிரான எந்தக் கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும்.

மாயாவதியின் கட்சியானது தலித்துகளின் கட்சி என்று அறியப்பட்டதாகும். ஆனால் அண்மைக் காலமாக மாயாவதி தமது கட்சியானது அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். உயர் வகுப்பினர் பலரைத் தமது கட்சியில் சேர்த்துக் கொண்ட அவர், இப்போதைய தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் தமது கட்சி சார்பில் உயர் வகுப்பினரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது அவரது நோக்கமாகும்.

உ.பி. மாநிலம் மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் நிலையான ஆட்சி நிலவியதாகச் சொல்ல முடியாது. 2002 தேர்தல் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. இப்போதைய தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிவுகள் மே மாத இரண்டாவது வாரத்தில்தான் தெரிய வரும்.

===========================================================
உ.பி.யில் மாயாவதி போட்டியில்லை; மேல் சாதியினருக்கு அதிக தொகுதிகள்

லக்னெü, மார்ச் 14: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 பேரவைத் தொகுதிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேல் சாதியினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடையே மாயாவதி கூறியது:

உ.பி.யில் எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.

நான் போட்டியிட்டால் சுற்றிலும் உள்ள தொகுதிகளில் இருக்கும் தொண்டர்கள் அங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். இதனால் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நான் இப்போது போட்டியிடப் போவதில்லை. கட்சி வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு உறுப்பினர் எனக்காக விட்டுக்கொடுப்பார். பின்னர் இடைத்தேர்தல் மூலம் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார்.

அவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின்படி

  • 139 தொகுதிகள் மேல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்
  • 86 தொகுதிகள் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
  • 110 தொகுதிகள் பிற்பட்ட வகுப்பினருக்கும்,
  • 93 தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும்,
  • 61 முஸ்லிம்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது இறுதி செய்யப்பட்ட பட்டியலாகும். அதே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை பிற கட்சிகள் நிறுத்தினாலும் எங்கள் வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்காது. எங்கள் கட்சி பெரும்பான்மை பலம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.

முலாயம் சிங் போட்டியிடுவார் என கருதப்படும் குன்னார் தொகுதியில் முகம்மது ஆரிப் என்பவரை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

================================================

உ.பி.யில் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு அலசப்படுகிறது: தேர்தல் கமிஷன் சிறப்பு நடவடிக்கை

புது தில்லி, ஏப். 2: உத்தரப் பிரதேசத்தின் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு தொகுக்கப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கள்ள வாக்கு போடச் சொல்வது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுப்பது, வாக்குச் சாவடிக்குள் புகுந்து வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களையும், தேர்தல் அலுவலர்களையும் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி இஷ்டப்படி கள்ள வாக்குப் போடுவது என்று அனைத்துவித தேர்தல் முறைகேடுகளையும் தொகுதி வாரியாக பட்டியலிட்டுத் தருமாறு மத்திய தலைமை தேர்தல் ஆணையும் உத்தரப்பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் இப்போது முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. இக் கட்சி பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே தோழமைக் கட்சியாக இல்லை.

இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தியே தீருவது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்மானித்துவிட்டதையே இந்தப்புதிய நடவடிக்கை தெரிவிக்கிறது.

403 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி வாரியாக பல தகவல்களைத் திரட்டுமாறு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

பணம்-பொருள் கொடுத்து வாக்கு சேகரிக்கப்படும் வாக்குச் சாவடிகள், பிற மத, சாதிக்காரர்களை அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுக்கும் வாக்குச் சாவடிகள், தேர்தல் அதிகாரிகளையும் வாக்குச் சாவடி முகவர்களையும் மிரட்டிவிட்டு தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் வாக்குச் சாவடிகள் என்று முந்தைய வரலாற்றின் அடிப்படையில் அடையாளம்காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சராசரி வாக்குப்பதிவைவிட 15% அதிகம் வாக்குகள் பதிவாகும் தொகுதிகள், சராசரியை விட 15% குறைவாக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிகள் போன்றவற்றை அடையாளம் காணவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வழக்கமான தேர்தல் நடைமுறைகளைவிட இவையெல்லாம் புதுமையாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில்கூட முறைகேட்டை அனுமதிக்காமல் தடுப்பது என்ற உறுதி தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுவிட்டதைப் போலத் தெரிகிறது. தேர்தல் நாள் நெருங்க, நெருங்கத்தான் இதையெல்லாம் தேர்தல் கமிஷனால் சாதிக்க முடிந்ததா என்று தெரிந்து கொள்ளமுடியும். இப்போதைக்கு இது ஆரம்பம்தான்.

தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மத்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக மிகப் பெரும் பொறுப்புகளை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.

=================================================================
ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி: முலாயம் சிங் தேர்தல் வாக்குறுதி

எட்டா, ஏப். 3: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் வாக்குறுதி அளித்தார்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மைன்புரி, பெரோஸôபாத், எட்டா ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணிகளில் பங்கேற்று முலாயம் சிங் பேசியதாவது:

சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு எதிராக பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டு சேர்ந்து நிற்கின்றன.

சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பட்ட மேற்படிப்பு வரை மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

அதிகாரிகளை கூண்டோடு மாற்றியதுதான் லக்னெü, கான்பூர் வன்முறைக்கு காரணம்: தேர்தல் ஆணையம், மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரிகளை கண்மூடித்தனமாக கூண்டோடு இடமாற்றம் செய்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு அந்தந்தப் பகுதிகளின் நிலவரமே இன்னும் தெரியவில்லை.

லக்னெüவிலும், கான்பூரிலும் முஸ்லிம்களில் இரு பிரிவினருக்கு இடையிலான வன்முறையை அதிகாரிகளால் தடுக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.

முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவி செய்ய வேண்டும் என்றார் முலாயம் சிங்.
=================================================================
அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கீடு: உ.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி

லக்னெü, ஏப். 3: உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படும்; பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் 50% பதவிகள் பெண்களுக்கே தரப்படும் என்று அக் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பெண்கள், முதியோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நல திட்டங்களை கட்சி அறிவித்துள்ளது.

சட்டம், ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும், விலைவாசி உயராமல் கண்காணிக்கப்படும், பதுக்கல், கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் நடமாடமுடியாதபடி “பொடா’வுக்கு இணையான பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்படும், வங்கதேசத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஊடுருவியவர்கள் கண்டுபிடித்து அகற்றப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

கட்சியின் அனைத்திந்திய துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மாநிலத் தலைவர் கேசரிநாத் திரிபாடி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

“கிரிமினல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு முறிக்கப்படும். மாநிலத்தில் “சிமி’, “ஐஎஸ்ஐ’ ஆகியவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.

பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.30,000 வளர்ச்சிப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். 21 வயதுவரை அப் பெண்குழந்தையின் படிப்புச் செலவுக்கு அதிலிருந்து பணம் எடுத்துதரப்படும்.

அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கப்படும்.

விதவையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.

மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும்.

அரசு இடங்களில் உள்ள வீட்டு மனை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

சுகன்யா விவாஹ யோஜனா, கன்யாதான் யோஜனா போன்ற திருமண திட்டங்கள் தொடரும்.

அங்கன்வாடி (பெண்) ஊழியர்களின் பணி வரன்முறைப்படுத்தப்படும்.

வேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி அளிக்கப்படும்.

இளைஞர் நலனுக்காக தனி கமிஷன் ஏற்படுத்தப்படும்.

மகளிர் சுய உதவி குழுக்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் பெண்கள் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

முதியோருக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சலுகைக் கட்டணத்தில் அவர்கள் பயணம் செய்யலாம். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம். எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் கட்டித்தரப்படும்.

விலைவாசியைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர், கள்ளச் சந்தையில் விற்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக முறை வலுப்படுத்தப்படும்.

பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம், வந்தே மாதரம் ஆகியவை கட்டாயமாக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

பாஜக வெற்றி பெற்றால் கல்யாண் சிங் முதல்வர் பதவியை ஏற்பார் என்று இரு தலைவர்களும் நிருபர்களிடம் அறிவித்தனர்.

=================================================================

Posted in abuse, Alliances, Allocation, Amar Singh, Amitabh, Anlaysis, Apna Dal, Apna Dhal, Assembly, Ayodhya, Backgrounder, BJP, booth capturing, Boothcapturing, Brahmins, BSP, candidates, Caste, Chief Minister, CM, Communist, Congress, Corruption, CPI, EC, Elections, Electorate, Employment, FC, Females, Filmfare, History, Janata Dal, Jats, Jobs, Kalyan, Kalyan Singh, Kanshiram, Lucknow, Manifesto, Marxist, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MLA, Mulayam, Mulayam Singh Yadav, Muslim, Natwar, OBC, Opinion, Party, pension, Perspectives, Polls, Religion/Politics, Reservation, Samajvadi, Samajwadi, SC, School, seats, Sonia, SP, ST, Surya Namaskar, Tiwari, UP, Uttar Pradesh, Vajpayee, Vande Mataram, Vandhe Mataram, Varanasi, VAT, voters, Votes, VP Singh, Women, Yadav, Yoga, Yogasana, Youth | Leave a Comment »