Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Rowdyism’ Category

Chennai’s new Commissioner of Police Nanjil Kumaran

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

காசிப்ஸ்: கூடுதல் கமிஷனரை காப்பாற்றிய தாதா

சென்னை மாநகரில் புதிய கமிஷனராக நாஞ்சில் குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் என்ன விஷேசம் என்று நீங்கள் கேட்கலாம். இவர் கோவை மாநகர் கமிஷனராக இருந்த போதுதான், தீவிரவாதிகள் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தினர். அந்த சம்பவத்துக்கு தண்டனை கடந்த 1ம் தேதி வழங்கப்பட்டது. அதே நாளில் நாஞ்சில் குமரன் சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். என்ன ஒரு பொருத்தம்.

கமிஷனர் லத்திகாவை மாற்றும் போதே, கூடுதல் கமிஷனர் ஜாங்கிட்டையும் மாற்ற அரசு நினைத்தது. இதை எப்படியோ அறிந்து கொண்ட ஜாங்கிட், வெள்ளை ரவியை சுட்டு தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார். முதல் நாள் தூத்துக்குடியில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள சென்று இருந்தார். ஆனால் வெள்ளை ரவி சுட்டுக் கொன்ற போது, அவர் அங்கு இருந்ததாக கமிஷனர் லத்திகா சொல்லவில்லை. ஆனால் பத்திரிகைகளில் அவருக்கு காயம் இருந்ததாக செய்திகள் வந்தது. தூத்துக்குடியிலும் ஓசூரிலும் ஓரே நபர் எப்படி இருந்திருக்க முடியும். இது மெடல் பெறுவதற்காக போட்ட நாடகம் என்று ஜாங்கிட்டுக்கு எதிர் தரப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஜான்கிட்டுக்கும் குமரனுக்கும் அவ்வளவாக ஆகாது. எனவே அவர் விரைவில் மாற்றப்படுவார். வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருக்கும், ராதாகிருஷ்ணன் கூடுதல் கமிஷனராக பதவி ஏற்க கூடும் என்றும் சொல்லப் படுகிறது.


சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன்சென்னை, ஆக. 2:சென்னை நகர போலீஸ் கமிஷனராக ஜி. நாஞ்சில் குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ். மாலதி பிறப்பித்துள்ளார்.உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் ஜி. நாஞ்சில் குமரன், தற்போது சென்னை நகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை நகர கமிஷனராக இருந்து வந்த லத்திகா சரண் தற்போது கூடுதல் டிஜிபியாக நிர்வாகத் துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல நிர்வாகத் துறையில் ஏடிஜிபியாக பணியாற்றி வந்த கே. ராமானுஜம் தற்போது தமிழ்நாடு 3-வது போலீஸ் கமிஷனின் முழுநேர உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நிர்வாகத் துறையுடன் 3-வது போலீஸ் கமிஷனின் உறுப்பினர் செயலர் பதவியை கூடுதல் பொறுப்பாக இவர் கவனித்து வந்தார். தற்போதைய உத்தரவின்படி, இவர் முழுநேர உறுப்பினர் செயலராக பணியாற்றுவார்.—————————————————————————————————–

சென்னை கமிஷனர் இன்று பதவி ஏற்றார்: பதவி சவாலானது- நாஞ்சில் குமரன் பேட்டி

சென்னை, ஆக. 2-

சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள நாஞ்சில் குமரன் இன்று பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் மாறுதலாகி செல்லும் கமிஷனர் லத்திகாசரண் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

புதிய கமிஷனராக பொறுப்பேற்றதும் நாஞ்சில் குமரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது:-

தமிழக அரசும், முதல்- அமைச்சரும் என் மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பொறுப்பான கமிஷனர் பதவியை வழங்கி உள்ளனர். சவாலான இந்த பணியை பொதுமக்கள் திருப்திபடும் அளவுக்கு உழைத்து நிறைவேற்றுவேன்.

பொதுமக்களுக்கு சேவை செய்ய கிடைத்த நல்ல வாய்ப்பாக கருகிறேன். சட்டத்துக்கு உட்பட்டு குற்றங்களை தடுக்க நிலுவையில் உள்ள வழக்கு களை விரைந்து முடிக்க தீவிர கவனம் செலுத்துவேன்.

குறிப்பாக சென்னை மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சிக்கி திணறும் சூழ்நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய அனைத்து முயற்சி களையும் எடுப்பேன். சென்னையில் குற்றங்களை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த தனிப்படைகள் விரிவாக்கப்பட்டு வலுவூட்டப்படும்.

கேள்வி: போலீஸ் நிலையங்களில் அரசியல் குறுக்கீடு அதிகமாக உள்ளதே?

பதில்: இது பொதுப்படையான கேள்வி. போலீஸ் நிலையங்களுக்கு அனைத்து தரப்பினரும் வருவார்கள். இதில் குறுக்கீடு என்பது பணிகள் செய்யாதே என்று தடுப்பதாகும். ஆனால் போலீஸ் நிலையத்துக்கு வந்து பொதுமக்களுக்கு பயன் தரும் விஷயங்களை செய்யுங்கள் என்று சொல்வது வேறு. பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அனைவரும் தேடி வரும் இடமாகத்தான் போலீஸ் நிலையங்கள் இருக்கிறது.

கேள்வி: லஞ்ச ஊழல் அதிகரித்துள்ளதே?

பதில்: லஞ்சம் உலகளாவியது. தனிப்பட்ட முறையில் யார் மீது புகார் செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி: போலீஸ் பொது மக்கள் நல்லுறவு எப்படி உள்ளது?

பதில்: ரவுடிகள் அட்டகாசம் இல்லை. பொதுமக்கள் இரவு நேரங்களிலும் பயமில்லாமல் நடமாடும் சூழ்நிலை நிலவுகிறது. பொதுமக்களுடனான உறவுக்கு இதுவே சாட்சி.

கேள்வி: மத்திய குற்றப்பிரிவு போலீசில் நில மோசடி வழக்குகள் ஏராளமாக நிலுவையில் உள்ளது. நில மோசடியை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

பதில்: இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் ஒரு நிருபர் எல்லோரும் கமிஷனர் பதவிக்கு வர ஆசைப்படுவார்கள். இந்த பதவிக்கு நீங்கள் வந்துள்ளீர்கள். என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த நாஞ்சில்குமரன், போலீஸ் வேலையை செய்ய போகிறேன் என்றார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுனில்குமார், இணைகமிஷனர்கள் ரவி, பாலசுப்பிரமணியம், துரைராஜ், சந்தீப்ராய் ரத்தோர், உளவுபிரிவு போலீஸ் துணை கமிஷனர் நல்லசிவம், உதவி கமிஷனர்கள் இளங்கோ, பன்னீர் செல்வம் மற்றும் துணை கமிஷனர்கள் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள்.—

———————————————————————————————-
புதிய டிஜிபி ராஜேந்திரன்

சென்னை, ஆக. 30: தமிழக காவல்துறை தலைவராக பி.ராஜேந்திரன் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை, தமிழக உள்துறை செயலர் எஸ்.மாலதி புதன்கிழமை பிறப்பித்துள்ளார்.

தமிழக காவல்துறை தலைவராக உள்ள டி.முகர்ஜியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் (யுஎஸ்ஆர்பி) தலைவராக உள்ள பி.ராஜேந்திரன், புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கிறார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பயோ-டேட்டா: 7.12.1947-ல் திருநெல்வேலியில் பிறந்த பி.ராஜேந்திரன், இந்தியக் காவல் பணியில் (ஐபிஎஸ்) 1973-ம் ஆண்டு தமிழக பிரிவில் தேர்ச்சி பெற்றார். இவர் ஏஎஸ்பியாக வேலூரில் பணிக்குச் சேர்ந்தார். பின்னர் ராமநாதபுரம் எஸ்பியாகப் பணியாற்றியுள்ளார். அதைத்தொடர்ந்து கியூ பிரிவு எஸ்பியாகவும் இருந்துள்ளார்.

சிவில் சப்ளை பிரிவில் டிஐஜி ஆகவும், கடலோரப் பாதுகாப்பு பிரிவு டிஐஜி ஆகவும் இருந்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவில் ஐ.ஜி.யாகப் பணிபுரிந்துள்ளார். கோவை நகர கமிஷனராகவும், தலைமை அலுவலகத்தில் கூடுதல் டிஜிபியாகவும் (நிர்வாகம்) பணிபுரிந்துள்ளார்.

Posted in Action, Additional Director General of Police, Arms, Bombs, Bribery, Bribes, CB-CID, CBI, Charan, Chat, Chennai, CID, Citizen, Commissioner, Common, Congestion, CoP, Correctional, Corrections, Corruption, CP, Dada, DGP, Force, IAS, Intelligence, Interview, Investigation, IPS, Jaangid, Jaangit, Jaangittu, Jangid, Jangittu, Jankittu, Karunanidhi, kickbacks, Kumaran, Lathika, Latika, Law, Lethika, Letika, Letika Saran, Madras, Naanjil, Nanjil, Nanjil Kumaran, Official, Opinions, Order, Plan, Police, Rajendhiran, Rajendhran, Rajendran, Rajenthiran, Rajenthran, Ravi, Rowdyism, Saran, Traffic, Uniform, USRB, Vellai, Vellai Ravi, Violence, Weapons | Leave a Comment »

Kumudam Reporter – Interview with Don ‘Vellai’ Ravi

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

07.06.07 
குமுதம் ரிப்போர்ட்டர்

வெள்ளை ரவி என்ன சொல்கிறார்?

தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம். ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாகவும், நிதானமாகவும் அவர் பதிலளித்தார்.

‘வெள்ளை ரவி’ என்ற பிரபல தாதா உருவானது எப்படி?

‘‘வியாசர்பாடி பகுதியில் பர்மா அகதிகளாக எங்கள் குடும்பமும், சேரா குடும்பமும் குடியேறினோம். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். சேரா தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் எங்களுக்குள் ஏற்பட்ட பகை உணர்வு நாளடைவில் ஜாதி வெறியாகவே உருவெடுத்தது. எனவே நான் சேராவின்ஆட்களைக் கொலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் எத்தனையோ கொலைகள் நடந்து, சாதாரண வெள்ளை ரவியான நான் ஒரு தாதாவாக ஆக்கப்பட்டேன்.’’

ராஜ்குமாரை நீங்கள் கடத்தியது உண்மையா?

‘‘உண்மைதான். நான் ராஜ்குமார் என்ற தொழிலதிபரை கடத்தவில்லை. சாதாரண வீரய்யாவாகத்தான் ராஜ்குமாரின் அப்பா, செங்குன்றத்தில் குடியேறினார். அதன்பிறகு என்னுடன் ஏற்பட்ட தொடர்பை பயன்படுத்தி வீரய்யாவின் குடும்பம் மணல் கடத்தல், அதன்பிறகு ஹெராயின் கடத்தல் பின்னர் சந்தன மரம், மற்றும் செம்மரக் கடத்தல், தொழிலில் இறங்கி, கோடிகோடியாக பணம் சம்பாதித்தனர். இன்று அந்தக் குடும்பத்திடம் சுமார் ஆயிரம்கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.

இந்த சொத்துக்கள் அனைத்துமே எனது பெயரைப் பயன்படுத்தி என் மூலமாகவே அவர்கள் சம்பாதித்தது. இதை செங்குன்றத்தில் உள்ள யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். செங்குன்றம் போலீஸாருக்கும் இது தெரியும். எனக்கு அவர்கள் தரவேண்டிய பணத்தைத்தான் பலமாதங்களாக கேட்டுவந்தேன். அவர்கள் இன்று, நாளை என இழுத்தடித்து Êஏமாற்றப் பார்த்தார்கள். எனவேதான் ராஜ்குமாரை கடத்தினேன்.’’

ராஜ்குமார் குடும்பத்திடம் அறுபது லட்ச ரூபாய் வாங்கியது உண்மையா?

‘‘உண்மைதான். எனக்கு இரண்டு கோடி ரூபாய் தருவதாக வீரய்யாவும், ராஜ்குமாரும் சொல்லியிருந்தார்கள். அதைத் தரவேயில்லை என்பதால்தான் ராஜ்குமாரைக் கடத்தி அறுபது லட்ச ரூபாய் வாங்கினேன்.’’

நீங்கள் சென்னையில் பல கொலைகள் செய்துள்ளதாகவும், ரவுடிகளுக்கு உதவி செய்ய ஆட்களை அனுப்பி வைப்பீர்கள் என்றும் சொல்கிறார்களே?

‘‘நான் தாதாவாக உருவெடுத்தபிறகு சென்னையில் வளரும் ரவுடிகள் பலரும் எனது உதவியை நாடுவார்கள். அவர்களுக்கு எனது ஆட்களை அனுப்பி அவர்களின் உயிரை பலமுறை காப்பாற்றி இருக்கிறேன். என்னால் எத்தனை ரவுடிகள் இறந்தார்கள் என்பதைவிட, எத்தனை ரவுடிகள் உயிர் பிழைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

நான் இதுவரை எத்தனையோ கொலைகளைச் செய்திருந்தாலும், எனது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் கொன்றதில்லை.’’

இந்தியாவிலேயே எந்த ரவுடிக்கும் இல்லாத சிறப்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஒன்றுக்கு உங்கள் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாமே?

‘‘ஆரம்பத்தில் எனக்கும் சேராவுக்கும் ஏற்பட்ட பகையில் நடந்த தொடர் கொலைகளை விசாரிக்க அந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டது. எனது வழக்குகளை விசாரிக்கத் தொடங்கப்பட்டதால் அந்த நீதிமன்றத்துக்கு ‘வெள்ளை ரவி கோர்ட்’ என்று பெயர் வைத்தார்கள். இன்றுவரை அந்தப் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.’’

போதைப் பொருள் கடத்தல் தொழில் செய்தீர்களா?

‘‘ஹெப்பிட்ரின் ஹைட்ரோகுளோரைட் என்ற ஒரு பவுடர்தான் ஹெராயின் தயாரிக்க மூலப்பொருள். இதன் விலை இந்திய மார்க்கெட்டில் ஒரு கிலோ இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய். இதே பவுடர் சர்வதேசச் சந்தையில் சிங்கப்பூரில் பதினெட்டாயிரம் ரூபாய், மலேசியா, பர்மாவில் இருபத்தைந்தாயிரம் ரூபாய்.

இந்த பவுடர் கடத்தலைத்தான் ராஜ்குமார் குடும்பம் ஆரம்பத்தில் செய்தது. அசாம் மாநிலம் எல்லையில் உள்ள மோரே பகுதியில் இருந்து பர்மாவுக்கு இந்த பவுடரை எளிதாகக் கடத்தி விற்று, இன்று சென்னையில் பலகோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இன்று வரை சத்தியமாக நான் அந்த பவுடரை தொட்டதும் கிடையாது. கடத்தியதும் கிடையாது.’’

நீங்கள் ரவுடியிசத்தில் பல கோடி ரூபாய்களைச் சம்பாதித்திருக்கிறீர்களாமே?

‘‘என்னால் எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாக வளர்ந்திருக்கிறார்கள். இதுவரை எனக்கென்று நான் ஒரு இடத்தைக் கூட வாங்கியது இல்லை. ஆயிரம் ரூபாய் கூட சேர்த்து வைக்கவில்லை. வியாசர்பாடி ஆஞ்சநேயர் கோயில் அருகே தொடங்கப்பட்ட எனது வீடு பல வருடங்களாக இன்னும் கட்டி முடிக்கப்படாமலேயே பாழடைந்து கிடக்கிறது.’’

எப்போது போலீஸில் சரண்டர் ஆவீர்கள்?

‘‘நான் எந்தச் சூழ்நிலையிலும் சரண்டராக மாட்டேன். சரண்டரானால் போலீஸ் என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடும். என்கவுன்ட்டர் என்றால் ‘திருப்பித்தாக்குதல்’ என்றுதான் அர்த்தம். ஆனால் தமிழக போலீஸ§க்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. ரவுடிகளைப் பிடித்து சுட்டுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்? இரண்டரை வருடங்களாக சிறையில் இருந்த மணல்மேடு சங்கர், முட்டை ரவி, பங்க் குமார், இப்படி ரவுடியிசத்தில் இருந்து ஒதுங்கியவர்களைப் பிடித்து சுட்டு வருகின்றனர் காவல்துறையினர். இந்தப் பட்டியலில் நான் சேரத் தயாராக இல்லை. நான் சரண்டராக மாட்டேன் என்ற விவரத்தை சென்னை நகர முக்கிய போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சொல்லிவிட்டேன்.’’

நீங்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்திருக்கிறீர்களா?

‘‘எனது மனைவி பெயர் பாக்கியலட்சுமி.. தஞ்சாவூரைச்சேர்ந்த சுத்த தமிழ்ப்பெண். அவர்கள் இங்கிருந்துச் சென்று கர்நாடக மாநிலத்தில் செட்டிலானவர்கள்.’’

உங்களுக்கும் துணை நடிகை சானியாவுக்கும் என்ன தொடர்பு?

‘‘உண்மையிலேயே சொல்கிறேன். சபியுல்லாவின் காதலியான அந்தப் துணை நடிகையை நான் இரண்டுமுறை பார்த்திருக்கிறேனே தவிர, சரியாகக் கூடப் பேசியதில்லை. தேவையில்லாமல் என்னையும், அந்தப் பெண்ணையும் சேர்த்து அசிங்கமான செய்திகளை போலீஸார் பரப்பி வருகிறார்கள்.’’

– புஷ்கின் ராஜ்குமார்

Posted in Abscond, Arms, Blasts, Bombs, bootlegging, Capture, Cera, Chennai, Chera, Cocaine, Corruption, Courts, Crime, Criminal, Dacoit, Dada, Dalit, Death, Don, Drugs, Encounter, fraud, Gamble, gambler, Gambling, gang, Godfather, Heroin, Hitman, Illegal, informers, Interview, Judge, Justice, Kidnap, kidnapping, Kumudam, Law, law-enforcement, Leader, Loan-sharking, LSD, Madras, mafia, maphia, Marijuana, Murder, Narcotics, nexus, Order, organized-crime, Police, Politics, prostitution, Rajkumar, ransom, Ravi, Reporter, rival, rivalry, Robber, Robbery, Rowdy, Rowdyism, Sandal, Sandalwood, secrecy, Sera, smuggler, Sopranos, Substance, Surrender, Theft, Thief, traffickers, Trafficking, Veerappan, Vellai Ravi, Violence, Weapons | 3 Comments »

Dadaism, Tamil Nadu, Politics, Rowdy, MLAs, Election Violence – Kalki

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 1, 2007

Kalki 01.04.2007

தாதாக்களின் பிடியில் தமிழ்நாடு

சென்னைக்கு அருகே உள்ளது மதுரவாயல். கடந்த வருடம் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அந்த ஏரியாவில் நடந்த ரவுடித்தனத்தின் காரணமாக, இரண்டு நாட்கள் மக்கள் யாரும் சுதந்திரமாகத் தெருவில் நடமாட முடியவில்லை. கடைகள் மூடப்பட்டு, பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. அந்த அளவுக்கு மக்கள் பயமுறுத்தப்பட்டனர்.

மற்றொரு சம்பவம். சென்னையின் வடக்குப் பகுதியில்
திருவொற்றியூரையொட்டியுள்ள மீனவர் கிராம மக்கள், தேர்தல் முடிந்தவுடன் நடந்த வன்முறை வெறியாட்டத்தில், உயிருக்குப் பயந்து வெளியூர்களுக்கு ஓடினார்கள். ‘‘தி.மு.க. அமைச்சரும் அவரது சகோதரர்களும் எங்களை மிரட்டுகிறார்கள்’’ என்று அந்த ஊர் சார்பாக, வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றக் கதவைத் தட்டினார். அண்மையில் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் தூத்துக்குடியில் நடத்திய கடை அடைப்பில் வியாபாரிகள் ஆதரவு கொடுக்காததால் கடைகள் உடைக்கப்பட்டன. ரவுடித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பதினைந்தே நாட்களில் அம்பத்தூர் அ.தி.மு.க. செயலாளர் ரவி என்பவர் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அடுத்து, திருவள்ளூரில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் வெட்டப்பட்டார். தி.மு.க.வைச் சேர்ந்த ஜோதி ராஜேந்திரன் என்பவர் நெய்வேலியில் படுகொலை செய்யப்பட்டார்.

தென்காசியில் இந்து முன்னணிப் பிரமுகர் குமார் பாண்டியன் வெட்டிக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அதே இடத்தில் த.மு.மு.க.
பிரமுகர் மைதீன் சேட் வெட்டப்பட்டார். இப்போது தென்காசி பதற்றமாக ஆகிவிட்டது.

அரசியல் விரோதம் காரணமாக சில கொலைகள் நடந்திருந்தாலும், இந்தக் கொலைகளைச் செய்வதற்கு ரவுடிப் படைகளையே நாடுகிறார்கள்
அரசியல்வாதிகள். இந்த ரவுடிப் படைகளுக்கு அரசியல்வாதிகளின் தயவும் அவ்வப்போது தேவைப்படுவதால், இரு தரப்பினருக்கும் நெருக்கம் உண்டாகி நட்பு ஏற்படுகிறது. இது பல சமூக விரோதச் செயல்களுக்கு வழி வகுக்கிறது. குற்றங்கள் அதிகரிக்கின்றன.

இதுபோன்ற கொலைகள் ஒரு பக்கம் இருக்க, ‘தொழில் போட்டி’ காரணமாக ரவுடிகள் பழிக்குப் பழியில் ஈடுபடுவதால் பல மோதல்கள். அம்பத்தூர் ரவுடி செந்தில்குமார் என்பவர் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். துரைப்பாக்கம் ரவுடி அசோக் வெட்டப்பட்டான். மண்ணிவாக்கம் சுகுமாரைப் போட்டுத் தள்ளிவிட்டார்கள். காவல் துறையும் தன் பங்குக்கு என்கவுண்ட்டர் நடத்தி நாகூர் மீரான், கொர கிருஷ்ணன், உருண்டை ராஜன், பங்க் குமார் போன்ற தாதாக்களைச் சுட்டுத் தள்ளியது.

‘‘தி.மு.க. ஆட்சியில், அதிக அளவில் குற்றங்கள்
கண்டுபிடிக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக நடைபெறும் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீடியாவில் வருவதால், ஏதோ இப்போதுதான் நடந்தது போன்ற தோற்றம் உருவாகிறது. ஜெ. ஆட்சியில் ஸ்டேஷனில் வழக்கே பதிவு செய்யாத நிலைதான் இருந்தது. திருவொற்றியூர் குப்பம் விவகாரத்தில் தி.மு.க. அமைச்சருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று உயர்நீதிமன்றம் நியமித்த குழு சொல்லியிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வினர் 36 பேர் வன்முறையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். ஜெ.ஆட்சியில் தி.மு.க. பேரணியின்போது ரவுடிகள் மூலம் தாக்குதல் நடத்தியதை மறக்க முடியுமா?’’ என்று கேட்கிறார் தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.

அக்டோபர் உள்ளாட்சித் தேர்தலில் அரங்கேறிய வன்முறைக் காட்சிகள், கலைஞர் அரசுக்கு மிகுந்த அவப்பெயரைக் கொண்டு சேர்த்தது. உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து தமிழகமெங்கும் சங்கிலித் தொடராக வன்முறைகள்.

‘‘தி.மு.க. ஆட்சியில் அதிகாரத்தில் உள்ளவர்களின் வீட்டு வேலைக்காரர்கள் கூட போலீஸைத் தாக்குகிறார்கள். சமீபத்தில் ‘குடி’மகன் ஒருவரை ராயப்பேட்டை பெண் சப்-இன்ஸ்பெக்டர் பிடித்து ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றார். ஆனால், அரசியல் தலைவர் ஒருவரின் மகன் வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர், போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அந்தப் பெண் சப்-இன்ஸ்பெக்டரை அடித்து, குடிமகனை விடுதலை செய்ய
முயன்றிருக்கிறார்! நிலைமை இப்படி இருக்கும்போது, தி.மு.க.வினர் தமிழ்நாடு முழுவதும் ரவுடித்தனம் செய்வதிலோ அல்லது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதிலோ என்ன ஆச்சர்யம் இருக்கிறது?’’
என்கிறார் அ.தி.மு.க. பிரமுகரான க.சுப்பு. அம்மா ஆட்சியில் கட்சிக்காரர்கள் காவல் நிலையத்துக்குச் செல்லவே பயந்தார்கள் என்கிறார் இவர்!

தமிழகமெங்கும் கடந்த பத்து மாதங்களில் நடந்த கொலைகள், வன்முறைகள் ஆகியவற்றைப் பட்டியல் போடத் துவங்கினால், அது முடிவற்று நீண்டுகொண்டே போகும்.

சமூக விரோதிகளின் மோதல்களுக்குக் கள்ளச் சாராயமும் ஒரு காரணம். காய்ச்சுதல், விற்பது ஆகியவற்றைப் பொருத்த அளவில், நாட்டிலேயே மூன்றாவது மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது.

ஒரு பக்கம் பாலியல் தொடர்பான குற்றங்களும் பெருகி வருகின்றன. அண்மையில் கன்னட பிரசாத் பிடிபட்டு தினந்தோறும் செய்திகளில் அடிபட்டு வருகிறார். தவிர, தேச விரோதச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு இரும்பு உருளைகள் அனுப்ப முயன்றது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

அம்பத்தூரில் இருந்து ஆந்திர நக்ஸலைட்டுகளுக்கு ராக்கெட் லான்ச்சர்கள் அனுப்பிக் கொண்டிருந்தது அம்பலமானது.

ஏதேனும் ஓர் இடத்தில் ரவுடிகளுக்குள் மோதலோ அல்லது கொலையோ நடக்கும் பட்சத்தில் அந்த ஏரியாவின் அமைதி
பாதிக்கப்படுகிறது. மக்கள் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள். இவற்றில் தலை நுழைக்கும் ஆளும் கட்சிப் பிரமுகர்களால் மீடியாவுக்கு நல்ல தீனி கிடைக்கிறது! ‘‘ரவுடிகள் முன் கைகட்டி நிற்கிறது காவல்துறை’’ என்று அறிக்கை விடுகிறார் ஜெ.

‘‘காவல்துறை இன்னமும் தொழில் ரீதியாக மாற வேண்டும். அதில் உள்ள கறுப்பு ஆடுகள் வெளியேற்றப்பட வேண்டும். தமிழகம்
ஸ்ரீலங்காவின் அருகிலேயே இருப்பதால் தேச விரோத சக்திகளுக்குத் துணை போகும் நிலையும் இங்கே இருக்கிறது’’ என்று சொல்கிறார் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ்.

தமிழக காவல்துறை இயக்குநரான முகர்ஜி, இதற்கெல்லாம் என்ன
பதில் சொல்கிறார்?

‘‘2005-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2006-ல் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது மட்டுமல்லாமல் கண்டுபிடிப்பதும்
அதிகரித்திருக்கிறது. சில மீடியாக்கள்தான் சின்ன விஷயங்களைக் கூட ஊதிவிடுகின்றன.

2005-ல் 1365 கொலைகள் நடந்தன; 2006-ல் 1274 கொலைகள்தான் நடந்தன. நடந்த குற்றங்களில் கண்டுபிடிப்பு விகிதம் 88 சதவிகிதத்தைத் தொட்டிருக்கிறது. திருட்டு, கொள்ளையில் மீட்ட சொத்துக்களின் விகிதம் 78 சதவிகிதத்திலிருந்து 81 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. 2005-ல் 571 பாலியல் பலாத்காரங்கள்; 2006-ல் 457. இப்படிப் பார்த்தால் பெண்களுக்கெதிரான குற்றங்கள், சிறு திருட்டுக்கள், கொள்ளைகள் ஆகியவையும் குறைந்திருக்கின்றன. ரவுடித்தனம் முழுவதுமாக அடக்கப்பட்டிருக்கிறது. குண்டர்கள் சட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளே போடப்பட்டிருக்கிறார்கள். சமூக உரசலை உசுப்பிவிட்டு, அமைதிக்கு வேட்டு வைக்கும் பல பிரச்னைகளை தமிழக போலீஸ் மிக நுட்பமாகக் கையாண்டு சமாளித்திருக்கிறது. கன்னட பிரசாத் உட்பட பாலியல் ரீதியான குற்றங்களில் தொடர்புள்ள போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்திருக்கிறோம். இஸ்லாமியத் தீவிரவாதமும் கட்டுக்குள் இருக்கிறது. காவல்துறையின் இமேஜை உயர்த்தும் வகையில் அடிமட்டம் வரை உள்ள காவலர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. அரசியல் தலையீடு என்பது கீழ் மட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாமே தவிர, மேல் மட்டங்களில் சிறிதும் கிடையாது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது’’ என்று ஒரேயடியாக மறுக்கிறார் டி.ஜி.பி. முகர்ஜி.

– ப்ரியன்

Posted in booth capturing, Dadaism, Election, Kalki, Law, MLA, MP, Order, Police, Politics, Rowdy, Rowdyism, Tamil Nadu, TN, Violence, voter, Votes | Leave a Comment »

The Fisheries Minister, KPP Sami in Ennore & DMK MLA AVS Babu in Ayanavaram abuse their power

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2007

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபரை ஆதரவாளர்களுடன் விடுவித்த திமுக எம்எல்ஏ

சென்னை, ஜன. 5: சென்னை அயனாவரத்தில் உள்ள காவல் நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்த திமுக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவும், அவரது ஆதரவாளர்களும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபரை விடுவித்து சென்றனர்.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி அளவில் நடந்துள்ளது. இது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடக்கும் இரண்டாவது சம்பவமாகும்.

இதுபற்றிய விவரம்:

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிகேசவன். இவருக்கு வாசுதேவன், உதயகுமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஆதிகேசவனுக்குச் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டைப் பிரித்து தருவது தொடர்பாக சகோதரர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆதிகேசவன், அம்பத்தூருக்கு சென்று வசித்து வருகிறார்.

இந்நிலையில் வாசுதேவன், அந்த வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றார். இதனால், உதயகுமாருக்கு கோபம் ஏற்பட்டது.

2006 டிசம்பர் 21-ல் வாசுதேவன் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இந்த வழக்கில், புளியந்தோப்பைச் சேர்ந்த தீனா (எ) தினகரன் கைது செய்யப்பட்டார். அவர் தனது வாக்குமூலத்தில் ராஜா என்பவர் தான், வாசுதேவனை அடிக்கும்படி கூறியதாகக் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து ஜன.2-ல் ராஜாவிடம் விசாரணை நடத்துவதற்காக, அயனாவரம் போலீஸôர் அழைத்து சென்றனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி அளவில் சுமார் 100 ஆதரவாளர்களுடன் சென்ற புரசைவாக்கம் எம்எல்ஏ வி.எஸ்.பாபு, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த ராஜாவை விடுவித்துச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இச்சம்பவத்தை போலீஸôர் மறுத்துள்ளனர். காவல் நிலையம் வந்த எம்எல்ஏ வி.எஸ்.பாபு, சட்ட நடைமுறைகளுக்கு உள்பட்டே ராஜாவை அழைத்து சென்றார் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2-வது சம்பவம்: எண்ணூர் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை, திமுக அமைச்சர் கே.பி.பி.சாமியின் சகோதரர்கள் விடுவித்துச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in AVS Babu, Ayanavaram, Cabinet, DMK, Ennore, FIR, Fisheries Minister, KPP Sami, Law, Ministry, MLA, Order, Rowdyism, Tamil Nadu, TN | Leave a Comment »