Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Roopavahini’ Category

Lankan jets bomb LTTE naval headquarters, 20 killed: military; LTTE refutes Air Force claims of air strike on Tiger leadership

Posted by Snapjudge மேல் ஜனவரி 26, 2008

கடற்புலி தலைமை அலுவலக தளம் மீது தாக்குதல் – இலங்கை பாதுகாப்பு அமைச்சு – விடுதலைப் புலிகள் மறுப்பு

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள கைவேலி என்னுமிடத்திற்கு 800 மீட்டர் தெற்காக அமைந்திருக்கும் கடற்புலித் தலைமை அலுவலகத் தளத்தின் மீது சனிக்கிழமை பிற்பகல் விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி அந்தத் தளத்தை அழித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.

தாக்குதல் நடைபெற்ற வேளை, கடற்புலிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

இந்த விமானத் தாக்குதல் நடைபெற்றதை உறுதிப்படுத்தியிருக்கும் விடுதலைப் புலிகள் கைவேலி பகுதியில் அமைந்துள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீதும், புதுக்குடியிருப்பில் உள்ள வெண்புறா நிறுவனத்தின் மீதும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றார்கள்.

இதற்கிடையில் அனுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிகொல்லாவ பகுதியில் உள்ள கிரிகெட்டுவௌ கிராமத்தின் காட்டுப்பகுதியில் இரண்டு புதைகுழிகளில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட 16 சடலங்களும் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ரூபவாஹினி ஊடகவியலாளருக்கு கத்திக் குத்து

குத்தப்பட்ட ஊடகவியலாளர்
குத்தப்பட்ட ஊடகவியலாளர்

இலங்கை ரூபவாஹினி நிறுவனத்தைச் சேர்ந்த முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு அடையாளந்தெரியாத நபர்களினால் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

லால் ஹேமந்த மாவலகே என்ற அப்பத்திரிகையாளர் தான் காரில் சென்று கொண்டிருக்கையில் காரை நிறுத்தி இரண்டு பேர் கத்தியால் குத்தியதாக பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 27ஆம் தேதி ரூபவாஹினி ஊழியர்கள் அமைச்சர் மர்வின் சில்வாவுக்கு எதிராக நடத்தியப் போராட்டத்தில் மாவலகே முக்கியப் பங்காற்றியிருந்தார் என்று கூறப்படுகிறது .

கத்திக் குத்துக் காயங்களுக்காக இன்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர் பிபிசி செய்தியாளரிடம் பேசிய மாவலகே, தான் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் கூறினார்.

இந்தக் காயங்கள் காரணமாக மாவலகேவின் உயிருக்கு ஆபத்தில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.


Posted in Air Force, Eelam, Eezham, LTTE, Military, Roopavahini, Roopawahini, Rupavahini, Rupawahini, SLAF, Sri lanka, Srilanka, Tiger, Tigers | Leave a Comment »

Newspaper vehicle distributing ‘Thina Murasu’ of EPDP attacked

Posted by Snapjudge மேல் திசெம்பர் 27, 2007

அரச தொலைக்காட்சி நிறுவனத்தினுள் கலகம் விளைவித்த அமைச்சர் தாக்கப்பட்டார்

இலங்கை அரசாங்கத்தின் தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் இன்று உள்நுழைந்து கலகம் விளைவித்த அமைச்சர் மேர்வின் சில்வா மீதும் அவரது குழுவின் மீதும் அந்த நிறுவனத்தின் ஊடகவியலாளர்களும், ஊழியர்களும் மேற்கொண்ட தாக்குதலில் அமைச்சர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தின்போது அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர் ஒருவரும் தாக்கப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்ட இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், அந்த அமைப்பின் செய்திப்பணிப்பாளர் டி.எம்.ஜீ. சந்திரசேகர என்பவரை அமைச்சரின் குழுவினர் தாக்கியதாகவும், அதன்பின்னர் அமைச்சர் மேர்வின் சில்வா நிறுவனத்தலைவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது ஆத்திரமடைந்த நிறுவன ஊட்கவியலாளர்களும், பணியாளர்களும் அந்த அறையினுள் பணயக் கைதியாக பூட்டி வைத்திருந்ததாகவும் தெரிவித்தது.

அத்துடன் அவர்கள் அமைச்சரும் அவரது குழுவினரும் மன்னிப்புக் கோரினால் மாத்திரமே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் நிபந்தனை விதித்ததாகவும் தெரிவித்தது.

இவ்வாறு நிலைமை மோசமடைந்துவரும்வேளை, கலகம் அடக்கும் துருப்பினரும், இராணுவத்தினரும் தொலைக்காட்சி நிறுவனத்தினுள் உள்நுழைந்து சுமார் இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் அமைச்சரை விடுவித்தனர். இவரை விடுவித்துக்கொண்டு செல்லும்போதே பணியாளர்கள் சூழ்ந்து தாக்கியதாகவும் அதன் போது அவர் காயமடைந்ததாகவும் தெரியவருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து இலங்கை ஜனாதிபதி விசேட விசாரணையொன்றுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.


விடுதலைப்புலிகளின் தாக்குதலில் தினமுரசு பத்திரிகை விநியோகித்தவர்கள் பலி

சம்பவத்தில் கொல்லப்பட்ட சிறுவனின் சடலத்தின் முன்பாக கதறியழும் உறவினர்கள்
சம்பவத்தில் கொல்லப்பட்ட சிறுவனின் சடலத்தின் முன்பாக கதறியழும் உறவினர்கள்

இலங்கையின் வடக்கே வவுனியாவின் புறநகரப்பகுதியாகிய குருமண்காடு கடைவீதிச் சந்தியில் இன்று பிற்பகல் விடுதலைப் புலிகள் நடத்திய கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி அதாவது ஈபிடிபி அமைப்பின் உறுப்பினர்கள் மூவரும், இடையிலகப்பட்ட ஒரு சிறுவனும் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், வாகன சாரதி, ஈபிடிபி அமைப்பின் மேலும் 3 உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 8 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

பொதுமக்களில் ஒருவர் மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவன் என்றும், ஒருவர் கட்டிடத் திணைக்கள ஊழியர் என்றும் இன்னுமொருவர் தனியார் அஞ்சல் முகவர் நிலையத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமுரசு பத்திரிகையின் விற்பனைக்காகச் சென்ற ஈபிடிபி அமைப்பினரின் வேன் ஒன்றை இலக்கு வைத்து, சைக்கிளில் பொருத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடியைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன், இறந்தவர்களின் சடலங்களையும், காயமடைந்தவர்களையும் வவுனியா வைத்தியசாலையில் பார்வையிட்டு சம்பவம் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தார்.

ஈபிடிபி கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர், கொல்லப்பட்ட தமது அமைப்பினரின் சடலங்களை நீதிபதிக்கு அடையாளம் காட்டினார். இறந்த சிறுவன் வவுனியா மகாவித்தியாலய மாணவன் என அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.


மர்வின் சில்வா விவகாரம்: பொலிஸ் விசாரணைகள் மீது நீதிமன்றம் அதிருப்தி

இலங்கை அமைச்சர் மர்வின் சில்வா அவர்களால், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செய்தியாளர் ஒருவர் வியாழன்று தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பற்றிய பொலிஸ் புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து இலங்கை நீதிமன்றம் ஒன்று அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இலங்கை எங்கிலும் உள்ள மக்களால் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்க்கப்பட்டது என்பதால், அது குறித்து பொலிஸார் மிகவும் கரிசனையுடன் செயற்பட வேண்டும் என்று கொழும்பு குற்றவியல் நீதிபதி மக்கி முகமட் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் ஒருவரை மாத்திரமே பொலிஸார் குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர்.

ஆனால், இப்படியான ஒரு பெரிய சம்பவம் நடைபெற்ற நிலையில், ஏன் ஒருவர் மாத்திரம் இவ்வாறு பொலிஸாரால், கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று கேள்வியெழுப்பிய நீதிபதி, பொலிஸாரின் இது குறித்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்காது என்றும் கூறிவிட்டார்.

நடந்த சம்பவம் குறித்து பொலிஸ் அளிக்கும் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றால், நீதிமன்றத்தின் மீது பொதுமக்கள் கல் வீசுவார்கள் என்று நீதிமன்றத்தில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிபதி, அனைத்து சந்தேக நபர்களையும் பொலிஸார் கைதுசெய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின்போது செய்தியாளர்களை அமைச்சர் துஷ்பிரயோகம் செய்ததாகவும், எச்சரித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதனையடுத்து செய்தியாளர்களால் சில மணிநேரம் அமைச்சர் அங்கு பிடித்து பணயமாக வைக்கப்பட்டிருந்தார்.

இவை குறித்த தகவல்கள் வியாழனன்று ரூபவாஹினி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பட்டன.

ஆயினும், இந்தத் தொலைக்காட்சி நாடாக்கள் சி.ஐ.டி. பொலிஸாரால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதால், இந்த விடயத்தில் தாம் பலிக்கடாக்கள் ஆக்கப்படலாம் என்று கூறி செய்தியாளர்கள், இன்று ரூபவாஹினி நிறுவனத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


வட இலங்கை மோதல்கள் குறித்து முரண்பட்ட தகவல்கள்

 

யாழ்ப்பாணம், மன்னர் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் வியாழனன்றும் வெள்ளியன்றும் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடந்ததாக இருதரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

ஆயினும், இழப்புகள் குறித்து இருதரப்பின் தகவல்களும் முரண்படுகின்றன.

குறிப்பாக முகமாலை, குறிசுட்டகுளம், பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய இடங்களில் கடும் சண்டை நடைபெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

அதேவேளை கிளாலி பகுதியில் நேற்றைய மோதலில் கொல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று செஞ்சிலுவைச் சங்கத்தினரின் ஊடாக விடுதலைப்புலிகளால் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கடற்சமரில் கொல்லப்பட்ட மேலும் ஒரு சிப்பாயின் சடலத்தையும் இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.


திருகோணமலையில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தோருக்கு உணவு உதவி

திருகோணமலையில் வெள்ளம் – பழைய படம்

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பிரதேசத்தின் வெருகல் ஆறு பெருக்கெடுத்ததால் அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்த மக்கள்
கடந்த நான்கு தினங்களாக உணவுப் பற்றாக்குறையால்
தவித்துவந்தனர்.

இந்த நூற்று எழுபத்து ஏழு குடும்பங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை,
மாவட்ட அரச அதிபர் சில்வா விடுத்த பணிப்புரையின் பேரில், ஈச்சிலம்பற்று பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினூடாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மூன்று தினங்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பண்டங்களான அரிசி பருப்பு கோதுமை மாவு என்பன வழங்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பல நோக்கக் கூட்டுறவுச் சங்க தலைவர் சுப்பிரமணியம் அரசரெட்ணம்
தெரிவித்திருக்கின்றார்.

இதன் பிரகாரம் மூன்று தினங்களுக்குப் போதுமான அளவில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தலா நூற்று ஐம்பது ரூபா பெறுமதியான உணவுப் பண்டங்களும், பத்து வயதுக்கு மேற்பட்டோருக்கு இருநூற்றுப் பத்து ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பண்டங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

தற்போது வெள்ளம் படிப்படியாக வடிந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Anura Priyadharshana Yapa, Batticaloa, bodyguards, Claymore, Commandos, Dhina Murasu, DhinaMurasu, Distribution, Eelam, Eezham, EPDP, Freedom, Independence, Journal, Journalists, Kalavanchchikuddi, Kurumankadu, Liberty, LTTE, Mannaar, Mannar, Media, Mervyn Silva, MSM, News, Newspaper, Newspapers, Oppression, Reporters, Roopavahini, Roopawahini, Rupavahini, Rupawahini, Sri lanka, Srilanka, Tamil, Thina Murasu, ThinaMurasu, TV, Vavuniya, Vehicles, wavuniya | 4 Comments »

Raj TV To Export Content To Singapore’s TV12 For Rs. 3 Cr.

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 8, 2007

சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனத்துடன் ராஜ் டி.வி. புதிய ஒப்பந்தம்

சென்னை, ஏப். 8: ராஜ் டி.வி. நிறுவனம் சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனத்துடன் புதிய தொழில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ராஜ் டி.வி. சிங்கப்பூர் அரசின் தொலைக்காட்சியான டி.வி.12 நிறுவனத்துடன் இரண்டு வருடங்களுக்கு புதிய தொழில் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் தனது பல்வேறு நிகழ்ச்சிகளை டி.வி.12 நிறுவனத்தின் பிரபல தமிழ்ச் சேனலான வசந்தம் சென்ட்ரலில் ஒளிபரப்புகிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் தங்களது செய்திகள், திரைப்படங்கள், தொடர்கள், கேம் ஷோ போன்ற நிகழ்ச்சிகளை ராஜ் டி.வி. வசந்தம் சென்ட்ரலுடன் பகிர்ந்துகொள்ளும். இதுகுறித்து ராஜ் டி.வி.யின் செயல் இயக்குநர் ரவீந்திரன் கூறியதாவது: சிங்கப்பூரின் பிரபல சேனலான வசந்தம் சென்ட்ரலுக்கு அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பல இந்திய நிகழ்ச்சிகளும், தமிழ் நிகழ்ச்சிகளும் இதில் ஒளிபரப்பாகி வருகின்றன.

கட்டணம் இல்லாமல் தெரியும் வசந்தம் சென்ட்ரல் சேனலை சுமார் 10 லட்சம் நேயர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். ராஜ் டி.வி. ஏற்கெனவே இலங்கையின் ரூபவாஹினி, இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழ்ச் சேனல்கள், தீபம் டி.வி. மற்றும் சி.ஐ.இ.இ. சேனல்களுக்கு தனது நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது.

இந்த ஒப்பந்தம் மூலம் நேயர்களின் விருப்பங்களையும், தேவைகளையும் அறிந்து அதற்கேற்றவாறு நிகழ்ச்சிகளின் தரத்தை மேம்படுத்துவோம். 1500 மணி நேர டி.வி. நிகழ்ச்சிகளை வசந்தம் சென்ட்ரலில் ஒளிபரப்புவதன் மூலம் வருடத்துக்கு சுமார் 3 கோடி ரூபாய் வருவாயை ராஜ் டி.வி. பெறும் என்றார்.

Posted in channel, CIEE, CIEE TV, Commerce, Company, Deepam, Deepam TV, Economy, Industry, Programmes, Raj, Raj TV, Roobavahini, Roopavahini, Rubavahini, Rupavaahini, Rupavahini, Shares, Singapore, Sri lanka, Srilanka, Stocks, Sun, Tamil channels, Television, TV, TV12, Vasantham, Vasantham Central | 3 Comments »