Posted by Snapjudge மேல் பிப்ரவரி 21, 2007
இராக்கில் இருந்து பிரிட்டன் படைகள் திரும்ப அழைப்பு
இராக்கில் இருந்து பெருந்தொகையான துருப்புக்களை திரும்ப அழைத்துக் கொள்வது குறித்து பிரிட்டானியப் பிரதமர் டோனி பிளேயர் முதல் முறையாக அறிவித்துள்ளார்.
இராக்கின் தென் பகுதி நகரான பாஸ்ராவில் உள்ள 7 ஆயிரத்துக்கும் அதிகமான பிரிட்டிஷ் துருப்புக்கள் அடுத்த சில மாதங்களில் 5 ஆயிரத்து ஐநூறாக குறைக்கப்படுவார்கள் என்று டோனி பிளேயர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இராக்கில் பிரிட்டிஷ் துருப்புக்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் இருக்கும் வரை அடுத்த ஆண்டிலும் அவர்கள் அஙக்கு தங்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஸ்ராவில் உள்ள பாதுகாப்பு நிலை பாக்தாத்தை விட மிகவும் வேறுபட்டது என்றும், கட்டுக்கடங்காத பயங்கரவாத வெறியாட்டத்தில் பாக்தாத் சிக்கியுள்ளது என்றும் பிரதமர் விவரித்தார்.
பாஸ்ராவின் இன்றைய நிலைமை தனது விருப்பப்படி இல்லாவிட்டாலும், பாஸ்ராவின் வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை எழுதவேண்டிய பொறுப்பு, இராக்கியர்களையே சாரும் என்றும் பிரதமர் டோனி பிளேயர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இராக்கில் இருந்து டென்மார்க்கும் படைகளை திரும்ப பெறுகிறது
 |
 |
இராக்கில் டென்மார்க் துருப்புகள் |
இராக்கிலிருந்து தனது தரைப்படை துருப்புக்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் திருப்பி அழைத்துக் கொள்ளப் போவதாக டென்மார்க் அறிவித்துள்ளது. செய்தி மாநாடு ஒன்றில் இந்த அறிவிப்பை டென்மார்க் பிரதமர் வெளியிட்டார்.
அடுத்த மே மாதத்திற்குள் டென்மார்க்கின் 460 இராணுவத்தினரும் திருப்பி அழைக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனாலும் ஹெலிகாப்டர் படைப் பிரிவு அங்கு தொடர்ந்து தங்கியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பிரிட்டிஷ் தலைமையில் டென்மார்க் படையினர் பணியாற்றிவரும் தெற்கு இராக்கில் உள்ள பாஸ்ராவின் நிலைமை சீரடைந்து இருப்பதாகவும் டென்மார்க் பிரதமர் குறிப்பிட்டார்.
Posted in Al-Queda, Anbar, Anders Fogh Rasmussen, Army, Australia, Baghdad, Basra, Britain, dead, Denmark, Fight, Georgia, Iran, Iraq, Islam, London, Moslem, Muqtada al-Sadr, Muslim, Navy, Nouri al-Maliki, Peace, PM, Poland, Romania, Saddam, Shia, Soldiers, South Korea, Sunni, Terrorism, Tony Blair, troops, UK, UN, US, USA, Violence, War | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006
ஐரோப்பிய ஒன்றியத்தில் மேலும் இரு நாடுகள்
 |
 |
இணைவதற்கு இருநாடுகளுக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது |
ரொமானியா மற்றும் பல்கேரியா ஆகிய இரு நாடுகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் என்று ஐரோப்பிய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இவை முன்னர் சேர்ந்த நாடுகளுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை விட, மேலும் கடுமையான நிபந்தனைகளுடன் ஒன்றியத்தில் சேரும் என்று அது கூறியிருக்கிறது.
இந்த இரு நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்குத் தகுதி உள்ளவைதான் என்று காட்டும் குறிப்பிடத்தகுந்த சீர்திருத்த வழிமுறையை நிறைவேற்றியிருப்பதாக, ஆணையத்தின் தலைவர், ஜோஸ் மானுவல் பரோசோ, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் பேசுகையில் கூறினார்.
ஆனால் நீதித்துறை சீர்திருத்தம், ஊழல், மற்றும் கட்டமைக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகள் போன்றவற்றை எதிர்ப்பதில் மேலும் முன்னேற்றம் காணப்படவேண்டும் என்று அவர் கூறினார்.
புதிய உறுப்பு நாடுகள் பெற உள்ள நிதி உதவிக்குச் சரியான கணக்கு-வழக்கு அமைப்புகளை உருவாக்கவில்லை என்றால், அவைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நிதி உதவிகள் கூட நிறுத்திவைக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கென ஒரு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்காமல், ஐரோப்பிய ஒன்றியத்தை மேலும் விரிவுபடுத்துவதற்குத் தான் எதிராக இருப்பதாக பரொசோ மீண்டும் வலியுறுத்தினார்.
Posted in Add, Bulgaria, EU, Euro, Europe, European Union, Finance, Inductions, New, Romania, Tamil | Leave a Comment »