Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘RM Veerappan’ Category

‘I have no difference of opinion with writer Jeyaganthan’ – Karunanidhi

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

ஜெயகாந்தனுடன் எனக்கு முரண்பாடு கிடையாது: முதல்வர்

சென்னையில் முரசொலி அறக்கட்டளையின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விருது பெற்ற சிலம்பொலி செல்லப்பன், ஜெயகாந்தன், மனோரமா, முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் க.அன்பழகன், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை, ஜன. 24:எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் தனக்கு ஒருபோதும் முரண்பாடு ஏற்பட்டதே கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

முரசொலி அறக்கட்டளை சார்பில் கலைஞர் விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

தலா ரூ. 1 லட்சம் பொற்கிழி, பாராட்டுப் பத்திரம், கேடயம் ஆகியவற்றை உள்ளடக்கிய “கலைஞர் விருது’ எழுத்தாளர் ஜெயகாந்தன், சிலம்பொலி செல்லப்பன், நடிகை மனோரமா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவற்றை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியது:

எனக்கும் ஜெயகாந்தனுக்கும் இருந்த பகை தற்போது ஓடி ஒளிந்துவிட்டது போல பலரும் பேசினர். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்ததே அன்றி முரண்பாடு ஏற்பட்டது கிடையாது. அவருக்கும் எனக்கும் இடையிலான நட்பு பாலும் தண்ணீரும் போன்றது. இரண்டும் சேர்ந்தால் அதைப் பிரிப்பது கடினம். இதுதான் வேறுபாடு. ஆனால் எங்களுக்குள் தண்ணீரும் எண்ணெயும் போல முரண்பாடு ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

1980-ம் ஆண்டு எனது பிறந்த நாளன்று ஜெயகாந்தன் ஒரு புத்தகத்தை பரிசாக அளித்தார். 1980-ம் ஆண்டிலேயே நண்பர்களாக இருந்தவர்கள், இப்போதா மாறியிருக்கப் போகிறோம். ஜெயகாந்தனின் எழுத்துகளை எந்த நிலையிலும் நேசிப்பவன். இன்னும் ஒருபடி மேலே சொல்வதானால் காதலிப்பவன்.

தற்போது நடைபெறும் சட்டப் பேரவை தொடரிலே, ஆளுநர் உரையில் கூட காலத்துக்கேற்ற வகையில் அரசியல் சாசனத்தில் மாறுதல் செய்ய வேண்டும், தேவைப்பட்டால் முழுமையாக திருத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம்.

இதேகருத்தை ஜெயகாந்தன் தனது நூலான “வாக்குமூலத்தில்’ பல ஆண்டுகளுக்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளார்.

“”மத்திய அரசு யாருடைய பிரதிநிதி. மாநிலங்களுக்கு சுய நிர்ணய சாசனம் இல்லாத நிலையில் அது வெறும் அடிமைச் சாசனமே” என்று குறிப்பிட்டுள்ளதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அரசியல் ரீதியாக ஒன்றுபடக்கூடிய எழுத்து மற்றும் கருத்துகளை எப்போதும் ஆணித்தரமாக வெளிப்படுத்தக் கூடியவர் ஜெயகாந்தன்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியபோது, அதை எதிர்த்து பொதுக்கூட்டங்களில் முழங்கியவர் ஜெயகாந்தன். அப்படிப்பட்டவர் இந்த விருதை ஏற்றுக் கொண்டதிலிருந்தே எங்களுக்கிடையே உள்ள நட்பு புரியும் என்றார் கருணாநிதி.

நிதியமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார். விருது பெற்ற சிலம்பொலி செல்லப்பன், ஜெயகாந்தன், மனோரமா ஆகியோர் ஏற்புரை வழங்கினர். திராவிடர் கழக பொதுச் செயலர் கி. வீரமணி, எம்.ஜி.ஆர். கழக தலைவர் இராம. வீரப்பன், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் விருது பெற்றவர்களை பாராட்டிப் பேசினர்.

Posted in Jeyagandhan, Jeyaganthan, Jeyakanthan, K Anbalagan, K Anbalakan, K Anbazhagan, K Anbazhakan, K Veeramani, Ka Anbalagan, Ka Anbhazhagan, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, manorama, MK Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Murasoli, RM Veerappan, Silamboli Chellappan, Silamboli Sellappan | Leave a Comment »

Karunanidhi vs MGR – RM Veerappan Birthday Politics

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 10, 2006

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிவதை தவிர்க்கத் தயாராக இருந்தேன்: ஆர்.எம்.வீ. பிறந்தநாள் விழாவில் கருணாநிதி பேச்சு

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம். வீரப்பனின் 81-வது பிறந்த நாளையொட்டி, 5 தமிழறிஞர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் (அமர்ந்திருப்பவர்களில் இடமிருந்து) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் தா. பாண்டியன், தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி, மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், முதல்வர் மு. கருணாநிதி, ஆர்.எம். வீரப்பன், அவரது துணைவியார் ராஜம்மாள், ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனத் தலைவர் ஜெகத்ரட்சகன். (பரிசு பெற்றவர்கள் இடமிருந்து) சாமி பழனியப்பன், நாராயணசாமி, விக்கிரமன், நன்னன், திருநாவுக்கரசு.

சென்னை, செப்.10: திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரியும் சூழ்நிலையைத் தவிர்க்க தயாராக இருந்தபோதிலும், அப்போதிருந்த சூழ்நிலைகள் அதை அனுமதிக்கவில்லை என்றார் முதல்வர் மு. கருணாநிதி.

எம்.ஜி.ஆர். கழகம் கட்சியின் நிறுவனர் ஆர்.எம். வீரப்பனின் 81-வது பிறந்த நாள் விழா சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இந்த விழாவில் 5 தமிழறிஞர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுகளை வழங்கி அவர் பேசினார்.

முதல்வர் பேசியதாவது:

1972-ல் எம்.ஜி.ஆர். பிரியும் சூழ்நிலை ஏற்பட்டபோது, என் வீட்டுக்கு வந்த வீரப்பன், கட்சியைக் காப்பாற்றுமாறு என் கையைப் பிடித்துக் கேட்டார்.

அதற்கு நானும் தயாராகத் தான் இருந்தேன். ஆனால், அங்கு இருந்தவர்கள் என்னையும், வீரப்பனையும் காப்பாற்றும் வகையில் இல்லை. வீரப்பனை கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அங்கிருந்து வெளியே போகச் செய்தனர்.

அப்போது வீரப்பனை யார் கடுமையாகப் பேசினாரோ அவரே அடுத்த 3 மாதங்களில் எம்.ஜி.ஆரிடம் போய் சேர்ந்துவிட்டார் என்பது தான் வேடிக்கை.

திராவிட இயக்கம் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர் ஆர்.எம். வீரப்பன். அதனால் தான் இப்போதும் அவருடைய எம்.ஜி.ஆர். கழகம் கட்சி திமுகவுடன் நட்பு கொண்டுள்ளது.

தன்னுடைய கொள்கையில் எப்போதும் உறுதியாக இருந்தவர் வீரப்பன் என்றார் முதல்வர்.

“”யாரை நாம் நேசிக்கிறோமோ அவர்களுக்கு நம்பிக்கை உள்ளவர்களாக நாம் வாழ வேண்டும்” என்று ஆர்.எம். வீரப்பன் பேசும்போது கூறினார்.

ஆழ்வார் ஆராய்ச்சி மையத்தை ஒரு நிறுவனமாக உருவாக்க ரூ.1 கோடி வைப்பு நிதி ஏற்படுத்தும் வகையில் ரூ.10 லட்சம் நன்கொடையை தன்னுடைய பிறந்த நாளில் அளிப்பதாக வீரப்பன் அறிவித்து, காசோலையை முதல்வர் மூலமாக, ஆய்வு மையத்தின் நிறுவனச் செயலாளர் சா. ஜெகத்ரட்சகனிடம் வழங்கினார்.

ஆர்.எம். வீரப்பன் போன்ற மூத்த அரசியல் தலைவர்கள் தங்களுடைய காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளையும், வாழ்வியல் முன்னேற்றங்களையும் “வாய்மொழி வரலாறாக’ பதிவு செய்தால், எதிர்கால இளைய சமுதாயத்தினருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் யோசனை தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர் தா. பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.

தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி தலைமை உரை நிகழ்த்தினார்.

ஜெகத்ரட்சகன் வரவேற்றார்.

பரிசுகள்: தமிழறிஞர்கள் நன்னன், நாராயணசாமி, விக்கிரமன், சாமி பழனியப்பன், திருநாவுக்கரசு ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுகளை முதல்வர் வழங்கினார்.

Posted in 1972, Aazhvaar, ADMK, Azhvaar Research Center, Dravidian, Karunanidhi, Karunanidi, MAM Ramasamy, MGR, RM Veerappan, RMV, Tamil | 1 Comment »

RM Veerappan Birthday Celebrations – Tamil Scholars felicitation

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

ஆர்.எம்.வீ. 81-வது பிறந்த நாள் விழா- தமிழ் அறிஞர்கள் ஐவருக்கு விருது

சென்னை, செப். 7: எம்.ஜி.ஆர். கழகம், கம்பன் கழகம் ஆகியவற்றின் தலைவர் ஆர்.எம். வீரப்பனின் 81-வது பிறந்த நாள் விழா தமிழ் அறிஞர்களைக் கெüரவிக்கும் நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ் அறிஞர்கள் 5 பேருக்கு தலா ரூ.10,000 கொண்ட பொற்கிழி, தமிழ் செம்மல் விருது ஆகியவற்றை சனிக்கிழமை சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் கருணாநிதி வழங்குகிறார்.

இதுதொடர்பாக ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனச் செயலர் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆர்.எம்.வீ. பிறந்தநாள் விழாக் குழுச் செயலர் எம். ஜெகதீசன் ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு:

ஆர்.எம்.வீ. பிறந்த நாள் விழா 9.9.2006-ல் எழும்பூர் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

பொற்கிழி பெறுவோர்: காலை 10.30 மணிக்குப் பிறந்த நாள் மங்கலம் இலக்கிய விழா நடைபெறுகிறது. தமிழ் அறிஞர் நன்னன், எழுத்தாளர் விக்கிரமன், திருக்குறள் ஆராய்ச்சியாளர் காரைக்குடி லெ. நாராயணசாமி, கவிஞர் சாமி பழனியப்பன், பத்திரிகையாளர் க. திருநாவுக்கரசு ஆகிய 5 பேருக்கும் பொற்கிழி -விருதுகளை முதல்வர் வழங்குகிறார்.

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சார்பில் நினைவுப் பரிசை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வழங்குகிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றுகின்றனர்.

Posted in Jagathratchagan, Jegadeesan, K Thirunavukarasu, Kaaraikkudi, Kamban, Karunanidhi, L Narayanasamy, MGR, MK, Nannan, P Chidambaram, RM Veerappan, RMV, Saami Pazhaniappan, Tamil, Thaa Pandiyan, Vikraman | Leave a Comment »