Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘rivalry’ Category

Kumudam Reporter – Interview with Don ‘Vellai’ Ravi

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

07.06.07 
குமுதம் ரிப்போர்ட்டர்

வெள்ளை ரவி என்ன சொல்கிறார்?

தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம். ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாகவும், நிதானமாகவும் அவர் பதிலளித்தார்.

‘வெள்ளை ரவி’ என்ற பிரபல தாதா உருவானது எப்படி?

‘‘வியாசர்பாடி பகுதியில் பர்மா அகதிகளாக எங்கள் குடும்பமும், சேரா குடும்பமும் குடியேறினோம். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். சேரா தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் எங்களுக்குள் ஏற்பட்ட பகை உணர்வு நாளடைவில் ஜாதி வெறியாகவே உருவெடுத்தது. எனவே நான் சேராவின்ஆட்களைக் கொலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் எத்தனையோ கொலைகள் நடந்து, சாதாரண வெள்ளை ரவியான நான் ஒரு தாதாவாக ஆக்கப்பட்டேன்.’’

ராஜ்குமாரை நீங்கள் கடத்தியது உண்மையா?

‘‘உண்மைதான். நான் ராஜ்குமார் என்ற தொழிலதிபரை கடத்தவில்லை. சாதாரண வீரய்யாவாகத்தான் ராஜ்குமாரின் அப்பா, செங்குன்றத்தில் குடியேறினார். அதன்பிறகு என்னுடன் ஏற்பட்ட தொடர்பை பயன்படுத்தி வீரய்யாவின் குடும்பம் மணல் கடத்தல், அதன்பிறகு ஹெராயின் கடத்தல் பின்னர் சந்தன மரம், மற்றும் செம்மரக் கடத்தல், தொழிலில் இறங்கி, கோடிகோடியாக பணம் சம்பாதித்தனர். இன்று அந்தக் குடும்பத்திடம் சுமார் ஆயிரம்கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.

இந்த சொத்துக்கள் அனைத்துமே எனது பெயரைப் பயன்படுத்தி என் மூலமாகவே அவர்கள் சம்பாதித்தது. இதை செங்குன்றத்தில் உள்ள யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். செங்குன்றம் போலீஸாருக்கும் இது தெரியும். எனக்கு அவர்கள் தரவேண்டிய பணத்தைத்தான் பலமாதங்களாக கேட்டுவந்தேன். அவர்கள் இன்று, நாளை என இழுத்தடித்து Êஏமாற்றப் பார்த்தார்கள். எனவேதான் ராஜ்குமாரை கடத்தினேன்.’’

ராஜ்குமார் குடும்பத்திடம் அறுபது லட்ச ரூபாய் வாங்கியது உண்மையா?

‘‘உண்மைதான். எனக்கு இரண்டு கோடி ரூபாய் தருவதாக வீரய்யாவும், ராஜ்குமாரும் சொல்லியிருந்தார்கள். அதைத் தரவேயில்லை என்பதால்தான் ராஜ்குமாரைக் கடத்தி அறுபது லட்ச ரூபாய் வாங்கினேன்.’’

நீங்கள் சென்னையில் பல கொலைகள் செய்துள்ளதாகவும், ரவுடிகளுக்கு உதவி செய்ய ஆட்களை அனுப்பி வைப்பீர்கள் என்றும் சொல்கிறார்களே?

‘‘நான் தாதாவாக உருவெடுத்தபிறகு சென்னையில் வளரும் ரவுடிகள் பலரும் எனது உதவியை நாடுவார்கள். அவர்களுக்கு எனது ஆட்களை அனுப்பி அவர்களின் உயிரை பலமுறை காப்பாற்றி இருக்கிறேன். என்னால் எத்தனை ரவுடிகள் இறந்தார்கள் என்பதைவிட, எத்தனை ரவுடிகள் உயிர் பிழைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

நான் இதுவரை எத்தனையோ கொலைகளைச் செய்திருந்தாலும், எனது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் கொன்றதில்லை.’’

இந்தியாவிலேயே எந்த ரவுடிக்கும் இல்லாத சிறப்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஒன்றுக்கு உங்கள் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாமே?

‘‘ஆரம்பத்தில் எனக்கும் சேராவுக்கும் ஏற்பட்ட பகையில் நடந்த தொடர் கொலைகளை விசாரிக்க அந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டது. எனது வழக்குகளை விசாரிக்கத் தொடங்கப்பட்டதால் அந்த நீதிமன்றத்துக்கு ‘வெள்ளை ரவி கோர்ட்’ என்று பெயர் வைத்தார்கள். இன்றுவரை அந்தப் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.’’

போதைப் பொருள் கடத்தல் தொழில் செய்தீர்களா?

‘‘ஹெப்பிட்ரின் ஹைட்ரோகுளோரைட் என்ற ஒரு பவுடர்தான் ஹெராயின் தயாரிக்க மூலப்பொருள். இதன் விலை இந்திய மார்க்கெட்டில் ஒரு கிலோ இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய். இதே பவுடர் சர்வதேசச் சந்தையில் சிங்கப்பூரில் பதினெட்டாயிரம் ரூபாய், மலேசியா, பர்மாவில் இருபத்தைந்தாயிரம் ரூபாய்.

இந்த பவுடர் கடத்தலைத்தான் ராஜ்குமார் குடும்பம் ஆரம்பத்தில் செய்தது. அசாம் மாநிலம் எல்லையில் உள்ள மோரே பகுதியில் இருந்து பர்மாவுக்கு இந்த பவுடரை எளிதாகக் கடத்தி விற்று, இன்று சென்னையில் பலகோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இன்று வரை சத்தியமாக நான் அந்த பவுடரை தொட்டதும் கிடையாது. கடத்தியதும் கிடையாது.’’

நீங்கள் ரவுடியிசத்தில் பல கோடி ரூபாய்களைச் சம்பாதித்திருக்கிறீர்களாமே?

‘‘என்னால் எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாக வளர்ந்திருக்கிறார்கள். இதுவரை எனக்கென்று நான் ஒரு இடத்தைக் கூட வாங்கியது இல்லை. ஆயிரம் ரூபாய் கூட சேர்த்து வைக்கவில்லை. வியாசர்பாடி ஆஞ்சநேயர் கோயில் அருகே தொடங்கப்பட்ட எனது வீடு பல வருடங்களாக இன்னும் கட்டி முடிக்கப்படாமலேயே பாழடைந்து கிடக்கிறது.’’

எப்போது போலீஸில் சரண்டர் ஆவீர்கள்?

‘‘நான் எந்தச் சூழ்நிலையிலும் சரண்டராக மாட்டேன். சரண்டரானால் போலீஸ் என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடும். என்கவுன்ட்டர் என்றால் ‘திருப்பித்தாக்குதல்’ என்றுதான் அர்த்தம். ஆனால் தமிழக போலீஸ§க்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. ரவுடிகளைப் பிடித்து சுட்டுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்? இரண்டரை வருடங்களாக சிறையில் இருந்த மணல்மேடு சங்கர், முட்டை ரவி, பங்க் குமார், இப்படி ரவுடியிசத்தில் இருந்து ஒதுங்கியவர்களைப் பிடித்து சுட்டு வருகின்றனர் காவல்துறையினர். இந்தப் பட்டியலில் நான் சேரத் தயாராக இல்லை. நான் சரண்டராக மாட்டேன் என்ற விவரத்தை சென்னை நகர முக்கிய போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சொல்லிவிட்டேன்.’’

நீங்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்திருக்கிறீர்களா?

‘‘எனது மனைவி பெயர் பாக்கியலட்சுமி.. தஞ்சாவூரைச்சேர்ந்த சுத்த தமிழ்ப்பெண். அவர்கள் இங்கிருந்துச் சென்று கர்நாடக மாநிலத்தில் செட்டிலானவர்கள்.’’

உங்களுக்கும் துணை நடிகை சானியாவுக்கும் என்ன தொடர்பு?

‘‘உண்மையிலேயே சொல்கிறேன். சபியுல்லாவின் காதலியான அந்தப் துணை நடிகையை நான் இரண்டுமுறை பார்த்திருக்கிறேனே தவிர, சரியாகக் கூடப் பேசியதில்லை. தேவையில்லாமல் என்னையும், அந்தப் பெண்ணையும் சேர்த்து அசிங்கமான செய்திகளை போலீஸார் பரப்பி வருகிறார்கள்.’’

– புஷ்கின் ராஜ்குமார்

Posted in Abscond, Arms, Blasts, Bombs, bootlegging, Capture, Cera, Chennai, Chera, Cocaine, Corruption, Courts, Crime, Criminal, Dacoit, Dada, Dalit, Death, Don, Drugs, Encounter, fraud, Gamble, gambler, Gambling, gang, Godfather, Heroin, Hitman, Illegal, informers, Interview, Judge, Justice, Kidnap, kidnapping, Kumudam, Law, law-enforcement, Leader, Loan-sharking, LSD, Madras, mafia, maphia, Marijuana, Murder, Narcotics, nexus, Order, organized-crime, Police, Politics, prostitution, Rajkumar, ransom, Ravi, Reporter, rival, rivalry, Robber, Robbery, Rowdy, Rowdyism, Sandal, Sandalwood, secrecy, Sera, smuggler, Sopranos, Substance, Surrender, Theft, Thief, traffickers, Trafficking, Veerappan, Vellai Ravi, Violence, Weapons | 3 Comments »

Samuels accused of liaison with bookmaker – Underworld rivalry in cricket betting

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

தாவூத் இப்ராகிம் கூட்டாளியிடம் சூதாட்டம்: சாமுவேல்ஸ் லஞ்சம் வாங்கினாரா?

நாக்பூர், பிப்.8-

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே நாக்பூரில் கடந்த மாதம் 21-ந் தேதி நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்று இருக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் சாமுவேல்சிடம் நாக்பூர் போட்டிக்கு முந்தைய இரவில் தாவூத் இப்ராகிம் கூட்டாளியும், சூதாட்டக்காரருமான முகேஷ் கொச்சார் டெலிபோனில் பேசியது அம்பலமாகி உள்ளது.

முகேஷ் கொச்சார்- சாமுவேல்ஸ் இடையே நடந்த டெலிபோன் உரையாடலை நாக்பூர் போலீசார் டேப் செய்து உள்ளனர். பேட்டிங் வரிசை, பந்து வீச்சு வரிசை உள்பட பல்வேறு தகவல்களை சூதாட்டக்காரரிடம் சாமுவேல்ஸ் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக நாக்பூர் போலீஸ் உதவி கமிஷனர் அமிதேஷ்குமார் கூறியதாவது:-

அணியில் இடம் பெறும் வீரர்கள், யார் யார் பந்து வீசுவார்கள் உள்பட பல விவரங்களை சாமுவேல்ஸ் சூதாட்டக்காரர் முகேஷ் கொச்சரிடம் பேசியதை டேப் செய்துள்ளோம். இது மேட்ச் பிக்சிங் (வெற்றி-தோல்வி நிர்ணயம்) அல்ல. அணியின் நம்பிக்கைக்குரிய சில விஷயங்கள் பரிமாறப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சூதாட்டக்காரரிடம் சாமுவேல்ஸ் பணம் வாங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. துணை போலீஸ் கமிஷனர் கூறும் போது இருவருக்கும் இடையே பணம் ஒப்பந்தம் நடந்ததா என்ற விவரம் இல்லை என்றார்.

சாமுவேல்ஸ் சூதாட்டக்காரருடன் தொடர்பு வைத்திருப்பது தொடர்பான அறிக்கை தங்களுக்கு வந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.), சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஆகியவை இன்று தெரிவித்தன.

இது தொடர்பாக சாமுவேல் சிடம் கேட்டபோது முகேஷ் கொச்சாரை எனக்கு தெரியும். ஆனால் அவர் சூதாட்டக்காரர் என்பது தெரியாது என்றார்.

இந்த தகவல் அறிந்ததும் சாமுவேல்ஸ் தாயார் லூனன் அதிர்ச்சி அடைந்துள்ளார். தன்னால் இதை நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.

இதே போல இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சந்தீப்பட்டீல், சாந்து போர்டே ஆகியோரும் அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

சூதாட்டக்காரரிடம் தொடர்பு கொண்டதன் மூலம் சாமுவேல்ஸ் ஐ.சி.சி. நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். விரைவில் அவரிடம் ஐ.சி.சி. விசாரணை நடத்தும். இதற் காக அவருக்கு சில போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்படலாம்.

நாக்பூர் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 3 விக் கெட்டுக்கு 338 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 324 ரன் எடுத்தது. இதனால் 14 ரன்னில் வெஸ்ட் இண்டீஸ் தோற்றது.

இந்த ஆட்டத்தில் சாமுவேல்ஸ் 10 ஓவர் வீசி 53 ரன் விட்டுக்கொடுத்தார். விக்கெட் கைப்பற்றவில்லை. பேட்டிங் கில் 60 பந்துகளில் 40 ரன் எடுத்தார்.

கிரிக்கெட் சூதாட்டத்துக்கு ஆதாரம் கிடைக்கவில்லை: விசாரணையை கைவிட முடிவு

மும்பை, பிப்.11-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நாக்பூரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் இந்திய கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர் முகேஷ் கோச்சாருடன் டெலிபோனில் ரகசியமாக பேசியதால் சூதாட் டம் நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இதுபற்றி நாக்பூர் போலீசில் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் இருவரும் பேசிய டெலிபோன் உரையாடலில் சூதாட்டம் நடந்ததற்கான எந்த தகவலும் இல்லை. விளையாட்டை பற்றியும், வீரர்களை பற்றியும் விவாதித்த வார்த்தைகள் தான் இடம் பெற்று உள்ளன. இதை வைத்து சூதாட்டம் நடந்ததாக தீர்மானிக்க முடியவில்லை.

பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி னார்கள். ஆனாலும் எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. யாரும் இது சம்பந்தமாக புகாரும் கொடுக்கவில்லை. எனவே மேற்கொண்டு விசார ணையை தொடராமல் இந்த பிரச்சினையை கைவிட போலீசார் முடிவு செய்துள்ள னர்.

இந்த பிரச்சினை குறித்து ஏற்கனவே கிரிக்கெட் சங்கத் திடம் தெரிவித்து விட்டனர். எனவே அவர்களும் விசார ணையை தொடங்கி உள்ளனர். இதனால் போலீசார் விசா ரணை தேவை இல்லை என் றும் கருதுகிறார்கள்.

உலக கோப்பை போட்டி தொடங்க போகிற நேரத்தில் பிரச்சினையை கிளப்பினால் அது வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும், மராட்டிய போலீசார் மவுனம் காக்க முடிவு செய்துள்ளனர்.

கிரிக்கெட் சூதாட்டம்: ராபின்சிங்- சாமுவேல்ஸ் ரகசிய தொடர்பா?

சென்னை, பிப். 9-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த 3 தொடரில் முதல் போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று இப்போது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்ட ஏஜெண்டாக செயல் பட்டவர் சுரேஷ் கோச்சார். இவர் போட்டி நடப்பதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமு வேல்ஸ்சிடம் பலமுறை டெலிபோனில் பேசி உள்ளார்.

அப்போது மைதானங்கள் நிலைமை எந்தெந்த வீரர்கள் எந்த வரிசைப்படி இறங்குவார்கள். வெஸ்ட் இண்டீஸ் என்ன திட்டங்களை வைத்துள்ளது போன்ற விவரங்களை எல்லாம் கூறி இருக்கிறார். இதையடுத்து கிரிக்கெட் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சாமுவேல்ஸ் – முகேஷ் கோச்சார் இருவருக்கும் இடையே இடம் பெற்ற உரையாடலில் பல தடவை ராபின்சிங் என்ற பெயர் உச்சரிக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் குறிப்பிட்ட ராபின்சிங் யார்ப என்று தெரியவில்லை. ஆனால் தமிழக கிரிக்கெட் வீரர் ராபின்சிங்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது பற்றி ராபின்சிங்கிடம் கேட்டபோது எனக்கும் சாமுவேல்ஸ்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சூதாட்டத்தில் எனக்கு பங்கும் இல்லை என்று கூறினார்.

கிïபா நாட்டில் புதிதாக கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பயிற்சியாளராக ராபின்சிங் நியமிக்கப்பட்டு இருந்தார். இதற்காக கிïபா சென்றிருந்த அவர் நேற்று தான் சென்னை திரும்பி இருக்கிறார்.

ஆனால் ராபின்சிங்குக்கும் சாமுவேல்ஸ்க்கும் ரகசிய தொடர்பு இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ராபின்சிங் சென்னையில் வசித்தாலும் அவர் வெஸ்ட் இண்டீசில் தான் பிறந்தார். இந்தியாவில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்ற ஏராளமான குடும்பங்கள் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் வசிக்கின்றன.

அதில் ராபின்சிங் குடும்ப மும் ஒன்று. இடையில் அவர்கள் குடும்பம் சென்னை வந்து விட்டது. இப்போதும் ராபின்சிங்கின் உறவினர்கள், நண்பர்கள் அங்கு வசிக்கின்றனர்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கும் ராபின்சிங்குக்கும் தொடர்பு இருக்கலாம். இதில் சாமு வேலுடன் அவர் ரகசிய தொடர்பு வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மராட்டிய போலீசார் சூதாட்டம் நடந்ததாப என்று தீவிர விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். அவர்கள் ராபின்சிங்கிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது உண்மை வெளிச் சத்துக்கு வரும்.

சூதாட்ட தரகரை சந்திக்க 4 நாட்கள் ஓட்டலில் காத்திருந்த சாமுவேல்ஸ்: போலீசார் தகவல்

நாக்பூர், பிப். 10-

நாக்பூரில் கடந்த மாதம் 21-ந்தேதி நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாவூத் இப்ராகிம் கூட்டாளியும், சூதாட்ட தரகருமான முகேஷ் கோச்சர் போனில் தொடர்பு கொண்டு சாமுவேல்சிடம் பேசியதை போலீசார் டேப் செய்துள்ளனர்.

இதில் அவர் அணியின் நிலவரம் குறித்த பல்வேறு தகவல்களை பரிமாறி இருக்கிறார். சாமுவேல்ஸ் தங்கி இருந்த பிரைட் ஓட்டலில் 206 நம்பர் அறையில் தனது மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு 3 முறை பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட சாமுவேல்ஸ் லஞ்சமாக பணம் வாங்கினாரா? என்ற ஆதாரம் எதுவும் சிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நாக்பூர் போலீஸ் கமிஷனர் யாதவ் கூறும்போது, பண பரிவர்த்தனை நடந்ததா என்பது பற்றி விசாரிக்க நாங்கள் அமலாக்க பிரிவினருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் பண பரிவர்த்தனை நடந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது என்றார்.

இதற்கிடையே சாமுவேல்ஸ் பற்றி புதிய தகவல்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர். வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் அனைவரும் புறப்பட்ட நேரத்தில் அவர் செல்லவில்லை. சில நாட்கள் இந்தியாவில் தங்கி இருந்த பிறகே சென்று உள்ளார்.

மும்பையில் உள்ள ஹியத் ரிஜன்சி ஓட்டலில் சூதாட்ட தரகர் முகேஷ் கோச்சரை சந்திக்க 4 நாட்கள் காத்திருந்தார்.

ஆனால் அவரை சந்திக்க சூதாட்ட தரகர் வரவில்லை. சாமுவேல்ஸ் தான் போனில் பேசியதை போலீசார் டேப் செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக அவரை சந்திப்பதை முகேஷ் கோச்சர் தவிர்த்தார் என்று நாக்பூர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவு வருகிற 12-ந் தேதி நாக்பூர் வருகிறது. சாமுவேல்ஸ் தங்கி இருந்த ஓட்டலில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை செய்வார்கள்.

சாமுவேல்ஸ் பெட்டிங்கில் ஈடுபட்டாரா அல்லது மேட்ச் பிக்சிங்கில் (வெற்றி- தோல்வி நிர்ணயம்) ஈடுபட்டாரா என்பது தெரியவில்லை. இதுவரை அவருக்கு சாதகமாக இருந்த வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தற்போது விசாரணை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர் பாக அந்த வாரியத்தின் செய்தி தொடர்பாளர் மோரிடெயல் கூறியதாவது:-

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வரைமுறைக்கு உட்பட்டு விசாரணை நடைபெறும். வீரர்கள் சங்கத்தில் அவர் உறுப்பினராக உள்ளார். இதனால் விசாரணை உள்மட்டத்தில்தான் இருக்கும். கிரிக்கெட் வாரிய கமிட்டிதான் இந்த விசாரணையை மேற்கொள்ளும் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு சாமுவேல்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் கெய்லேவுக்கும் தொடர்பு: நேரில் விசாரிக்க ஐ.சி.சி.குழு வருகிறது

நாக்பூர் பிப். 9-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் சங்கம் உஷார் அடைந்துள்ளது.

இது தொடர்பாக நாக்பூர் போலீசார் இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு அனுப்பிய புகாரை அவர்கள் சரவதேச கிரிக்கெட் சங்கத்துக்கு அனுப்பினார்கள். எனவே இது தொடர்பான விசாரணையை சர்வதேச கிரிக்கெட் சங்கம் உடனடியாக தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக ஆலோ சனை நடத்த அவசர கூட்டம் இன்று துபாயில் நடக்கிறது. அதில் எந்த முறையில் விசாரணை நடத்தலாம் என்று முடிவு எடுக்க உள்ளனர்.

இந்தியா வந்து நேரில் விசாரிப்பதற்காக ஒரு குழு வையும் அமைக்க உள்ளனர். சூதாட்டம் நடத்திருப்பது தெரிந்தால் வீரர்களுக்கு உடனடியாக தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

சூதாட்டத்தில் சாமுவேலுடன் தமிழக வீரர் ராபின் சிங்குக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இப்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்லே மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய சுற்றுப் பயணம் முடிந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவரும் கடந்த 1-ந்தேதி நாடு திரும்பி விட்டார்கள். ஆனால் சாமுவேல்ஸ் 4-ந்தேதி வரை மும்பையிலேயே இருந்தார். அவருடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்லேவும் சாமு வேலுடன் மும்பையிலேயே தங்கி இருந்தார். எனவே அவருக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இருவரும் சூதாட்டக்காரர்கள் கொடுத்த விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

எனவே சாமுவேல்ஸ், கெய்லே இருவரும் மும்பையில் தங்கியிருந்த போது என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர் என்பது பற்றி விரிவாக விசாரிக்க உள்ளனர். அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் செல்லும் நேரடியாக வீரர்களிடம் விசாரிக்க திட்டமிட்டு உள்ளது.

கிரிக்கெட் சூதாட்டம் நடப்பது எப்படி?

கிரிக்கெட் என்ற மந்திரச் சொல்லுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கட்டுப்பட்டு, அதே சிந்தனையில் மயங்கி கிடக்கிறார்கள். இந்த விளையாட்டில் கோடிக்கணக்கில் பணம் புரளுகிறது.

மற்ற நாடுகளை விட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோர் கிரிக் கெட் பைத்தியமாகவே இருக்கி றார்கள். எனவே மற்ற விளை யாட்டுகளை விட கிரிக்கெட் போட்டிகளுக்கு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.

இதை பயன்படுத்திக் கொண்டு கிரிக்கெட் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்கும் மறைமுகமாக `பெட்டிங்’ வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

இரண்டு அணிகளின் வெற்றி தோல்வியை முன்ன தாகவே முடிவு செய்வது `மேட்ச் பிக்சிங்’. இது நடை பெறுவது அபூர்வம். மிகப் பெரிய சூதாட்டக்காரர்கள் இரு அணி கேப்டன்களுடன் தொடர்பு கொண்டு பேசி முடிவு செய்தால் தான் இது சாத்தியமாகும். இந்த பிரச்சினையில் சிக்கியதால்தான் இந்திய அணி யின் முன்னாள் கேப்டன் அசாருதீன், தென்னாப் பிரிக்க அணி முன்னாள் கேப்டன் ஆன்சி குரோனே ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இந்திய அணியில் விளையாடிய அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர் ஆகியோரும் அணியில் இருந்து நீக்கப்பட்டு பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, தற்போது `மேட்ச் பிக்சிங்’ நடக்க வாய்ப்பில்லை.

ஆனால் `பெட்டிங்’ ஒவ்வொரு முக்கிய போட்டிக்கும் நடந்து வருகிறது. போட்டியின் அந்தரங்கம் சூதாட்டம் ஆக்கப்பட்டு அதற்காக பணம் கட்டப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் பணம் கொடுக்கப்படுகிறது. இதிலும் கோடிக்கணக்கான பணம் புரளுகிறது. இதற்காக முக்கிய நகரங்கள் அனைத்திலும் `பெட்டிங் சென்டர்’கள் மறை முகமாக செயல்பட்டு வரு கின்றன. `கம்ப்ïட்டர்’ மூலம் இந்த சூதாட்டம் நடக்கிறது.

ஒரு கிரிக்கெட் அணியில் யார் யார் விளையாடுவார்கள் என்ற விவரம் கொண்ட 11 பேர் அணி போட்டி தொடங்குவதற்கு முன்புதான் அறிவிக்கப்படும். இது குறித்தும் `பெட்’ கட்டப்படுகிறது.

இது போல `டாஸ்’ ஜெயித்தால் எந்த அணி `பேட்டிங்’ செய்யும், எந்த அணி பந்து வீசும்ப யார் யார் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள்? யார் யார் அதிக `ரன்’ எடுப்பார்கள்? யார் அதிக விக்கெட் எடுப்பார்? என்பது போன்ற விவரங்களை சரியாக சொன்னால் பல மடங்கு பணம் கிடைக்கும். இந்த `பெட்டிங்’ சூதாட்டத்தில் மிகப்பெரிய பணக்காரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சூதாட்டத்தில் பங்கேற்பவர்கள் சரியாக கணித்து சொல்லாவிட்டால் சூதாட்டம் நடத்துவோருக்கு கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும். சூதாட்ட ஏஜண்டுகளும் லட்சக் கணக்கில் சம்பாதிக்க முடியும்.

எனவே `பெட்டிங்’ சூதாட்டம் நடத்துபவர்களும், அவர்களுடைய ஏஜெண்டுகளும் கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பு கொண்டு அணியின் விïகம், களம் இறங்கும் வீரர்களின் வரிசை போன்றவற்றை தெரிந்து கொள்வார்கள்.

வீரர்களிடம் பேசி, தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும்படி கூறுவார்கள். இதற்கு உடன்படும் வீரர்களுக்கு பெரும் தொகை சன்மானமாக கொடுக்கப்படும். எனவே, ஒருசில கிரிக்கெட் வீரர்கள் சூதாட்ட ஏஜெண்டுகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் மறைமுகமாக வைத்திருக்கும் தொடர்பு, அவர்களையும் அறியாமல் வெளியே கசிந்துவிடுகிறது. போன் மூலம் பேசுவது, முக்கிய இடங்களில் ஏஜெண்டுகளை சந்திப்பது போன்றவை ரகசிய ஏஜெண்டுகளுடன் வைத்தி ருக்கும் தொடர்பை வெளிச்சம்போட்டு காட்டி விடுகின்றன.

மேற்கிந்திய அணி வீரர் சாமுவேல்ஸ் நாக்பூரில் நடந்த போட்டியின் போது பிரபல கிரிக்கெட் சூதாட்டக்காரன் தாவூத் இப்ராகிம் கூட்டாளி முகேஷ் கொச்சார் என்ற சூதாட்ட புரோக்கரிடம் 4 முறை பேசி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சு, சாமுவேல்ஸ் எப்போது பந்து வீசுவார் என்பது பற்றியும் கூறி இருக்கிறார். நள்ளிரவிலும் ஏஜெண்டிடம் பேசியுள்ளார். இதன் மூலம் சாமுவேல்ஸ்க்கு பெருந்தொகை கிடைத் திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கும் சாமுவேல்ஸ் சுடன் டெலிபோனில் பேசியுள்ளார். இவருடைய பங்கு என்ன என்பதும் புதிராக உள்ளது. விசாரணை முடிவில் உண்மை தெரியவரும்.

சாமுவேல்ஸ்- ஏஜெண்டு டெலிபோன் உரையாடல்

வெஸ்ட்இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ்- முகேஷ் கோச்சார் இருவரும் டெலிபோனில் என்ன பேசினார்கள் என்பதில் சிலவரிகள் வெளியே கசிந்துள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

சாமுவேல்ஸ்:- பிட்ச்சை பார்த்து விட்டுதான் காலையில் பேட் செய்வதா? என்று முடிவு செய்வார்கள்.

முகேஷ்:- மாலையில் என்றால் நீங்கள் கடைசியில்தான் இறங்குவீர்களா?

சாமுவேல்ஸ்:- கடைசிக்கு கொஞ்சம் முந்தி இறங்குவேன்.

முகேஷ்:- யார் பேட் செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

சாமுவேல்ஸ்:- தெரியும்.

முகேஷ்:- யார்- யார்?

சாமுவேல்ஸ்:- டேவன் அவரைதான் நாளை ஆட அனுப்புவார்கள்.

முகேஷ்:- புது பேட்ஸ்மேனா? அல்லது பந்து வீச்சாளரா?

சாமுவேல்ஸ்:- இல்லை. அவர் ஆல் ரவுண்டர்.

முகேஷ்:- அவர் சிறப்பாக ஆடுவாரா?

சாமுவேல்ஸ்:- ஆமாம், அதற்காகத்தான் இறக்குகிறோம்.

முகேஷ்:- ஓகோ எனக்கு எல்லாம் புரிகிறது. கிறிஸ் பார்மில் இருக்கிறார்.

ராபின்சிங் பற்றி நாங்கள் பேச வில்லை: சூதாட்ட ஏஜெண்டு மறுப்பு

மும்பை, பிப். 9-

சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள ஏஜண்டு முகேஷ் கோச்சார் வெஸ்ட்இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ்யிடம் பேசியதை ஒத்துக் கொண்டுள்ளார். சாமுவேல்ஸ் எனது நீண்ட கால நண்பர் என்ற முறையில் அவரிடம் பேசினேன் என்று கூறியுள்ளார்.

இருவரும் ராபின்சிங் பற்றி பேசியதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே ராபின் சிங்குக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

ஆனால் முகேஷ் கோச்சார், “நாங்கள் இருவரும் ராபின்சிங் பெயரை உச்சரிக்கவில்லை” என்று கூறினார்.

நாக்பூர் போலீசார் இது குறித்து விரிவான விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுபற்றி போலீஸ் கமிஷனர் எஸ்.பி.எஸ். யாதவ் கூறும்போது, “இதுவரை நடந்த விசாரணையில் மேட்ச்பிக் சிங் நடந்ததை கண்டுபிடிக்கவில்லை. இந்த உரையாடல் மூலமாக சூதாட்டம் நடந்தததா? என்றும் தெரியவில்லை” என்றார்.

வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் லாராவிடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் இப்போது லண்டனில் இருக்கிறேன். எனவே முழு விவரமும் என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதுபற்றி கேள்விபட்டதும் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் சங்கத்திடம் பேச முயன்றேன். முடியவில்லை. சாமுவேலிடமும் பேச முயற்சித்தேன். தொடர்பு கிடைக்கவில்லை. சாமுவேஸ்யிடம் பேசி முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

சாமுவேலை பொறுத்தவரை எனக்கும் மற்ற வீரர்களுக்கும் மிகவும் உதவியாக இருந்தார். உலக கோப்பை போட்டிக்கு அவர் எங்களுக்கு தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாட்டில் இருந்து இந்திய சூதாட்ட காரர்களை இயக்கிய தாவூத் இப்ராகிம்

மும்பை, பிப். 9-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே முதல் ஒரு நாள் போட்டியின் போது கிரிக்கெட் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. போட்டி நடப்பதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ்சும், கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர் முகேஷ் கோச்சார் ஆகியோரும் டெலிபோனில் ரகசியமாக பேசி உள்ளனர். எனவே சூதாட்டம் நடந்திருக்கலாம் என கருதி விசாரணை நடந்து வருகிறது.

புரோக்கர் முகேஷ் கோக்சாருக்கும் மும்பை குண்டு வெடிப்பு தாதாவான தாவூத் இப்ராகிமுக்கும், நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. அவன்தான் முகேஷ் கோச்சாரை இயக்கி உள்ளார்.

தாவூத் இப்ராகிம் வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்தே இந்திய சூதாட்ட புரோக்கர்களை இயக்கி உள்ளான்.

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே 2005-ம் ஆண்டு ஷோபன் மேத்தா என்பவரை கைது செய்தனர். அவர் தாவூத் இப்ராகிம் கிரிக்கெட் சூதாட்டகாரர்களை எப்படி இயக்குகிறான் என்ற விவரங்களை விரிவாக கூறி இருந்தான்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாÖமுவேல்ஸ்சுக்கும், முகேஷ் கோச்சாருக்கும் தொடர்பு இருந்த விவரத்தையும் அப்போதே ஷோபன் மேத்தா மும்பை போலீசில் கூறி இருந்தார்.

தாவூத் இப்ராகிம்- ஷோபன் மேத்தா இருவரும் முன்பு சூதாட்ட தொழிலில் எதிரெதிர் திசையில் இருந்தனர். 1999 சார்ஜா கோப்பை போட்டி நடந்தபோது ஷோபன் மேத்தா சூழ்ச்சியால் தாவூத் இப்ராகிம் ரூ.17 கோடியை சூதாட்டத்தில் இழந்தான்.

எனவே தாவூத் இப்ராகிம் ஷோபன் மேத்தா இந்தியாவில் உள்ள சூதாட்ட புரோக்கர்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். இவர்களை அனைவரையும் நிர்வாகிப்பதற்காக ஷரத் ஷெட்டி என்பவனை நியமித்தான்.

முகேஷ் கோச்சாரும் தாவூத்தின் கீழ் இயங்கும் புரோக்கர்களில் ஒருவர் ஆனார். கிரிக்கெட் சூதாட்டத்தின் போது ஒவ்வொரு `பெட்’டுக்கும் தகுந்த மாதிரி புள்ளிகளை நிர்ணயம் செய்வது உண்டு. அதை தாவூத் இப்ராகிம்தான் வெளிநாட்டில் இருந்து நிர்ணயம் செய்வான். அதன் பின்னர் இணைய தளம் மூலம் சூதாட்ட பரிமாற்றங்கள் நடைபெறும்.

Posted in Abu Salem, Antiguay, Azhar, Azharuddin, Bahamas, Barbados, BCCI, betting, bookie, bookmaker, Chennai, Coach, Connections, Corruption, Cricket, Cuba, Dawood Ibrahim, Don, Enforcement, Gaekwad, Gamble, gang, Gavaskar, Hansie Cronje, ICC, India, Jadeja, Kapil Dev, kickbacks, Law, Madras, Manager, Manoj Prabhakar, Marlon Samuel, Match fixing, Mukesh Kocchar, Mumbai, Nagpur, ODI, One day, One Day International, Operations, Order, phone, Police, revenge, rivalry, Robin Singh, Samuels, Shobhan Mehta, Test Match, Trinidad & Tobago, Underworld, Wadekar, West Indies | Leave a Comment »