Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Restrooms’ Category

Backward Region Grant Fund: Appraisal of Panchayat Raj by Mani shankar Iyer – Failure of local governments

Posted by Snapjudge மேல் நவம்பர் 15, 2007

மக்களைச் சென்றடையுமா மத்திய அரசின் நிதி?

க. பழனித்துரை

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பாக “”பிற்படுத்தப்பட்ட பகுதி மேம்பாட்டுக்கான நிதி” என்ற தலைப்பில் தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் மணிசங்கர் அய்யர், அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவலைக் கூறினார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில், வறுமையைக் குறைக்கவும் பஞ்சாயத்துகளுக்கு வலுவூட்டவும் தமது அமைச்சகத்தில் ரூ. 4,600 கோடி நிதி உள்ளது என்று அவர் கூறினார்.

இந்த நிதியைப் பயன்படுத்த மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்துத் தரவேண்டும். இத் திட்டத்தில் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஒன்று – வறுமைக் குறைப்பு; மற்றொன்று – ஊராட்சியை வலுப்படுத்துதல். இதுவரை, ஒரு சில மாவட்டங்கள் மட்டும் 220 கோடி செலவு செய்து பணிகளை நிறைவேற்றியுள்ளன. எஞ்சிய தொகை செலவிடப்படாமல் அமைச்சகத்தில் அப்படியே இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

பணமிருந்தும் தேவை இருந்தும் ஏன் செலவிடப்படவில்லை என்றால், மாவட்டத்திற்கான திட்டத்தைத் தயாரித்துத்தர மாவட்டத் திட்டக்குழுக்களால் இயலவில்லை. இந்தப் புதிய திட்டம் பலருக்குப் புரியவுமில்லை. திட்டமிட்டுச் செயலாற்ற நம் பஞ்சாயத்துகள் இன்னும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.

உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து திட்டங்களை வாங்கி மாவட்டத் திட்டக்குழு தொகுத்து மாநில அரசின் உயர்நிலைக் குழுவின் ஒப்புதலுடன் அனுப்பினால் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ. 15 கோடி வரை கிடைக்கும். அதேபோல் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த, தலைவர்களையும் அதிகாரிகளையும் பயிற்சியளித்துத் திறன் கூட்டுவதற்கு ஆண்டுக்கு ஒரு கோடி வீதம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ. 6 கோடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டமும் ஐந்தாண்டுக்கான திட்டத்தைத் தயாரிக்கும்போது மக்களின் தேவைகளையும் அரசாங்கத்தின் திட்டங்களையும் ஒன்றுசேர்த்து இணைத்துவிடலாம். இதன்மூலம் அரசுத்துறைகள், பஞ்சாயத்துக்கு செய்கின்ற பணிகள் அனைத்தையும் இத்துடன் இணைத்து விடும். அதுமட்டுமல்ல, பஞ்சாயத்துடன் சேர்ந்து வேலைசெய்யவேண்டிய கட்டாயத்திற்கு அரசுத்துறை அலுவலர்களும் வந்துவிடுவார்கள்.

வாய்ப்பிருந்தும் மாவட்டத் திட்டக்குழுத் தலைவர்கள் நிதி பெறுவதற்கும் பஞ்சாயத்துகளை வலுப்படுத்தவும் ஏன் பணியாற்றவில்லை என மணிசங்கர் அய்யர் அந்த நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை எழுப்பினார்.

மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு இத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது புலனாகிறது. இந்த நிதியை எப்படியாவது தங்கள் மாவட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற ஆவல் அனைவரது பேச்சிலும் தொனித்தது. பெரும்பாலான மாநிலங்கள் மாவட்டத் திட்டக்குழுக்களை வலுப்படுத்தவில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை,

  • திருவண்ணாமலை,
  • கடலூர்,
  • விழுப்புரம்,
  • திண்டுக்கல்,
  • நாகப்பட்டினம்,
  • சிவகங்கை

ஆகிய மாவட்டங்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுபவை. ஒட்டுமொத்தமாக இந்த ஆறு மாவட்டங்களுக்கும் ரூ. 85.39 கோடி பணிகளுக்காகவும் ரூ. 36 கோடி பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்த ஒதுக்கீட்டில் ரூ. 120 கோடி தமிழகத்துக்கு வரவேண்டும்.
வட மாநிலப் பிரதிநிதிகள் பலர், விரைவில் இதற்கான திட்டத்தினை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்று உறுதியளித்தனர். அப்பொழுது குறுக்கிட்ட மணிசங்கர் அய்யர், இதுவரை 31 மாவட்டங்கள் திட்டங்களைத் தயாரித்து அனுப்பிவிட்டன என்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாவட்டத் திட்டக்குழுக்கள் மிக நல்ல திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இப்படி மத்திய அரசு தரும் நிதியை,

  • பஞ்சாயத்து அலுவலகக் கட்டட விரிவாக்கம்,
  • இந்திரா குடியிருப்புத் திட்ட வீடுகளைப் பழுதுபார்த்தல்,
  • பாலவாடி, அங்கன்வாடி கட்டடங்களைப் பழுதுபார்த்தல்,
  • புதிய கட்டடம் கட்டுதல்,
  • பள்ளிக் கட்டடங்கள் சீரமைப்பு,
  • விளையாட்டு மேம்பாட்டிற்கு வசதிகள்,
  • கழிப்பறை,
  • சுற்றுச்சுவர்,
  • மேஜை, நாற்காலி வாங்குதல்
  • மதிய உணவு சமையலறைக் கட்டடம்

உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என விளக்கினார் அமைச்சர்.
மத்திய அரசு 99 வகையான திட்டங்களின் மூலம் செலவிடும் தொகை ரூ. 81,000 கோடி. இதே திட்டங்களுக்கு வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒதுக்கிய நிதி ரூ. 32,000 கோடி. இன்றைக்கு இந்தத் திட்டங்களில் 10 சிறந்த திட்டங்களின் மூலம் ஊரக வளர்ச்சி அமைச்சகம் கிராம அளவில் மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை ரூ. 65,000 கோடி என்பது குறைவான தொகை அல்ல.

இந்தத் தொகை முழு அளவில் பயனாளிகளைச் சென்றடைய வேண்டும். இந்த நிதி பஞ்சாயத்து மூலமாக மக்களைச் சென்றடைவதில்லை; துறைகள் மூலமாகவே செலவிடப்படுகின்றன. பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு நிதித் திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒரு வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி எல்லா அரசின் திட்டநிதிகளையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டுவந்துவிட்டால், பெருமளவில் ஊழலைக் குறைத்துவிடலாம் என அரசு கருதியதால், இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறது.

பின்தங்கிய மாவட்ட நிதியுதவி திட்டத்தின் நோக்கம் வறுமையைக் குறைப்பது மட்டுமல்ல; பஞ்சாயத்தையும் மாவட்டத் திட்டத்தையும் வலுப்படுத்துவதும்தான்.

கருத்தரங்கில் நிறைவுரை ஆற்றிய திட்டக்குழுத் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா “”இந்தத் திட்டத்தின் அடிப்படையே மாவட்டத்தில் திட்டமிடுதல்” என்ற வழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார். கிடைக்கும் நிதியை முறைப்படி கிராமங்களிலும் நகரங்களிலும் பயன்படுத்தினால் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கமுடியும். இதைத்தான் உள்ளாட்சிகள் செய்யவேண்டும். இதை உணர்ந்து மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தினை உருவாக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசின் நிதியை வாங்க ஏன் தயக்கம் என்று வடமாநிலங்களிலிருந்து வந்த சில தலைவர்களையும், அதிகாரிகளையும் கேட்டபோது, பணம் வாங்கத் தயக்கம் இல்லை; மத்திய அரசு வகுத்த விதிமுறைகளைப் பின்பற்றி, ஒரு மாவட்டத் திட்டம் தயாரிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான வேலை அல்ல என்று கூறினர்.

ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி போன்றவற்றிலிருந்து திட்டங்களைப் பெற்று தொகுத்து மாவட்டத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்குப் புள்ளிவிவரம் தேவை.

அரசின் நலத் திட்டங்களைக் கண்டுபிடித்து தேவைகளுடன் பொருத்தவேண்டும். மத்திய, மாநிலத் திட்டங்கள் மாவட்டத் திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டால், மாவட்ட அரசுத்துறைகள், அதிகாரிகள் நினைத்தபடி செயல்பட முடியாது. இது, நிதிவிரயத்தைப் பெருமளவில் குறைத்துவிடும். அத்துடன் ஊழலையும் குறைத்துவிடும்.

ஆனால் மாவட்டங்களில் உள்ள திட்டக்குழு, கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் வலுவாக – அதிகாரிகள், நிபுணர்கள் அடங்கியதாக இல்லை. மாநில அரசின் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றால் திட்டம் தயாரிப்பது என்பது ஒரு கானல்நீர்தான் என்று பதிலளித்தனர் பலர்.

இந்தத் திட்டத்தை மேலோட்டமாகப் பார்த்தால், மத்திய அரசு ஒரு மாவட்டத்திற்கு அளிக்கும் 20 கோடி ரூபாய்க்கு இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா எனத் தோன்றும். ஆனால் இந்தத் திட்டம் பணத்திற்காக அல்ல. இந்த நிதி பெரும்பாலும் திட்டத்தில் உள்ள இடைவெளியை அடைப்பதற்காகத்தான்.

மாவட்டத் திட்டம் உருவாக்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஒரு சில மாநிலங்கள் தங்களுக்கான நிதியைப் பெற முயன்றுள்ளன. திட்டங்களைச் சமர்ப்பித்து நிதியையும் பெற்றுவிட்டன. தமிழகம் இப்பொழுதுதான் இந்தத் திட்டத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது. நமது பஞ்சாயத்துகள் விரைந்து செயல்பட்டு, திட்டத்தினை உருவாக்கி நமக்குக் கிடைக்கக்கூடிய 120 கோடி ரூபாயைப் பெற்று வறுமையைக் குறைக்க முயல வேண்டும்.

—————————————————————————————————————————————————

ஐந்தாண்டுத் திட்டம்: தமிழகம் சாதித்தது என்ன?

 எம். ரமேஷ்

ஐந்தாண்டுகளுக்கொரு முறை ஐந்தாண்டு திட் டங்கள் பற்றி பேசப்ப டுகிறது. இது என்ன வென்று எத்தனை பேருக்குத் தெரியும்.
ஏதோ செய்தித்தாளில் 11-வது ஐந்தாண்டு திட்டம் என்றும் அறிவிப்பு வெளியானது.
இதற்குத் திட்ட ஒதுக்கீடாக ரூ. 36 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட் டும் தெரியும்.
இந்த ஆண்டு செயல்படத் தொடங்கும் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் தமிழ கத்துக்கு மட்டும் ரூ. 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தில்லியி லிருந்து திரும்பியவுடன் முதல்வர் கருணா நிதி பெருமைபட அறிவித்தார். ஒட்டு மொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 10 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
சுதந்திர இந்தியாவில் 1950-ம் ஆண்டு பல்வேறு இலக்குகளை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட் டதுதான் ஐந்தாண்டு திட்டம்.
அந்த வகையில் பல்வேறு இலக்குகளை முன்னிறுத்தி 11-வது ஐந்தாண்டு திட்டத் துக்கு மாநில முதல்வர்கள் ஒப்புதல் அளித் துள்ளனர். இதில் முக்கியமாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, அனைவருக்கும் கல்வி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்து தல், அனைத்துக் கிராமங்களுக்கும் சுகாதா ரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத் தும் 2013-ம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று 11-வது திட்டக் காலத் தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சரி, புதிய திட்டத்தைச் செயல்படுத்தும் முன் 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எந்த அளவுக்கு எட்டப்பட்டுள் ளது என்பதை, காலச் சக்கரத்தைப் பின் னோக்கிப் பார்ப்பது, தவறுகளைக் களை வதற்குப் பயன்படும். ஒட்டுமொத்த இந்தி யாவைப் பார்ப்பதைவிட தமிழகத்தில் மட் டும் எத்தகைய வளர்ச்சி எட்டப்பட்டது, எட்டாமல் விடப்பட்டது எவை எவை என்று பார்ப்பது சாலப் பொருத்தம்.
10-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் தமிழகத்தில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எட்டப்பட்டதோ 5.9 சதவீத வளர்ச்சியே.
இலக்கை எட்டாததற்குக் காரணம் இயற்கை சீற்றம் என்று கூறப்படுகிறது.
இதேபோல வேளாண் துறையில் 4 சத வீத வளர்ச்சி எட்டவேண்டும் என்று இலக் கும், உணவு உற்பத்தி இலக்கும் எட்டப்பட வில்லை.
தொழில்துறையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 7.12 சதவீதம். ஆனால் எட்டி யதோ 5.37 சதவீதம்தான். சேவைத் துறை யில் அபரிமித வளர்ச்சி எட்டப்பட்டு 9.77 சதவீதத்தைத் தொட்டது.
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட முதலீடு 2,62,502 கோடி. இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ. 40 ஆயிரம் கோடி. மத்திய அரசின் பங்க ளிப்பு ரூ. 48 ஆயிரம் கோடி. எஞ்சிய ரூ. 1,74,502 கோடி தனியார் மற்றும் அன்னிய முதலீடு மூலம் திரட்ட இலக்கு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் இதில் ஓரளவே எட் டப்பட்டது.
மாநில நிதி பற்றாக்குறையை 3.6 சதவீ தத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.
ஆனால் மாநில நிதி பற்றாக்குறை 2006-07-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக இருந்தது.
2007-ம் ஆண்டுக்குள் வறுமை ஒழிப்பு 10 சதவீதமாக இருக்க வேண்டும் என்றும் 2012-க்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டபோதி லும் தமிழகத்தில் ஏழ்மையில் வாடுவோர் நிலை 22 சதவீதம் என்பது வருத்தமளிக்கும் விஷயமே.
பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்திற் குள் அதாவது 2007-க்குள் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் 100 சதவீத கல்வி அளிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. ஆனால் தொடக்கக் கல்வி யைப் பாதியிலேயே கைவிடும் சிறுவர்க ளின் சதவீதம் 3.81 ஆகவும் நடுநிலைக் கல் வியைக் கைவிடுவோர் எண்ணிக்கை 7.58 சதவீதமாகவும் உள்ளதே யதார்த்த நிலை.
22,877 சதுர கிலோமீட்டர் பரப்பள வுள்ள வனப் பகுதியை அதிகரிக்க வேண் டும் என்ற இலக்கும் எட்டப்படவில்லை.
அனைத்துக் கிராமங்களுக்கும் 2007-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அளிக்க வேண்டும் என்ற இலக்கில் 968 கிராமங்கள் விடுபட்டு போயுள்ளன.
தமிழகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியது தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகள் மட்டுமே. ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ துறைகள் அபரிமித வளர்ச்சியை எட்டியதை மறுக்க முடி யாது. தொழில்துறை வளர்ச்சியை முடுக்கி விட பிரத்யேகத் தொழில் கொள்கையை யும் தமிழக அரசு வெளியிட்டது.
இதேபோல மக்கள் தொகை பெருக்கத் தைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு இலக்கை எட்டியுள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை அளித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது தமி ழகம். அதேபோல தனிநபர் சராசரி வருவா யிலும் நான்காவது இடத்தில் தமிழகம் உள் ளது பெருமையான விஷயமே.
அதேசமயம் ஏழ்மையில் வாடும் மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் நான்கா வது இடத்தில் தமிழகம் உள்ளது வருத்தப் பட வேண்டிய விஷயம். தமிழகத்தில் 80 லட்சம் பேர் வறுமையில் வாடுவதாகப் புள் ளிவிவரம் தெரிவிக்கிறது. இது மொத்த மக் கள் தொகையில் 20 சதவீதமாகும். ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்களில் 10 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் அதிர வைக்கும் உண்மைத் தகவல். ஒட்டு மொத்த இந்தியாவில் இது 6.09 சதவீதமே.
முதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத் துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 2,069 கோடி.

ஐம்பது ஆண்டுகளில் இதற் கான ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள் ளது. ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் அதன் இலக்கு எட் டப்பட்டதா என்று திட்டத்தை வகுப்ப வர்கள் அலச வேண்டும். இலக்கு எட்ட வில்லையெனில் அதற்குரிய காரண, காரி யங்களைக் கண்டறிய வேண்டும். வெறு மனே நிதியை ஒதுக்கியதோடு தங்களது கடமை முடிந்து விட்டதாக அரசியல்வா திகளும், கடனே என்று திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளும் முனைந் தால், நூறாண்டுகள் கடந்தாலும் நிர்ண யிக்கப்படும் இலக்கு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அதை எட்டவே முடி யாது.

எம். ரமேஷ்

Posted in 5, Administration, ADMK, Allocation, Appraisal, backward, Biz, BPO, Budget, Buildings, Caste, Census, Center, City, Community, Computer, Control, Council, Development, DMK, Economy, Education, Expenses, Exports, family, Finance, Fund, GDP, Governments, Govt, Grant, Growth, Homes, Housing, Hygiene, Improvements, Inaction, Income, Info, InfoTech, infrastructure, investments, IT, ITIS, JJ, Kalainjar, Karunanidhi, Kids, KK, local, Mani, Mani shankar, ManiShankar, Measures, Metrics, Money, NGO, Outsourcing, Panchayat, Panchayat Raj, Panchayath, parliament, Planning, Plans, Play, Playgrounds, Policy, Poor, Population, Progress, Refer, Reference, Region, Residences, Resources, Restrooms, Rich, Rural, Sanitary, Schools, Sector, Services, Software, Spend, Spending, Sports, Stalin, State, Statistics, Statz, Students, TamilNadu, Teach, Teachers, Technology, Telecom, TN, Toilets, Villages, Zones | Leave a Comment »

New Delhi hosts World Toilet Summit: India’s sanitation struggle

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

தில்லியில் உலக கழிவறை வசதி மாநாடு துவங்கியது

உலக மக்களுக்கு சுகாதாரமான கழிவறை வசதி வழங்கும் சவாலை எப்படி எதிர்கொள்வது, 2015-ம் ஆண்டில் அனைவருக்கும் சுகாதாரமான கழிவறை வசதி செய்து கொடுப்பது என்று ஐ. நா. மன்றம் நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டின் வளர்ச்சி இலக்கை அடைவது எப்படி என்பது குறித்து விவாதிப்பதற்காக, உலக கழிவறை வசதி மாநாடு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் புதன்கிழமை துவங்கியது.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், சீனா, ரஷ்யா, இலங்கை, இந்தியா உள்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன், புதுடெல்லியை மையமாகக் கொண்ட, சுலாப் இண்டர்நேஷனல் என்ற தன்னார்வ அமைப்பு இந்த மாநாட்டை நடத்துகிறது.

உலக அளவில், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது எவ்வளவு பெரிய சவாலாக இருக்கிறதோ, அதே அளவுக்கு அனைவருக்கும் சுகாதாரமான கழிப்பறை வசதி செய்து கொடுப்பதும் பெரிய சவாலாக உள்ளது.

உலக மக்கள் தொகையில் 40 சதவீதம், அதாவது 2.6 பில்லியன் மக்கள், கழிவறை வசதி இல்லாமல், திறந்த வெளிகளிலும் சுகாதாரமற்ற இடங்களிலும் தங்கள் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் மட்டும் 700 மில்லியன் மக்கள் முறையான கழிவறை வசதி இல்லாமல் இருக்கிறார்கள்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ போதிய கழிவறை வசதி உள்ள நிலையில், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில்தான் சுகாதாரமான கழிவறை என்பது பெரும் பிரச்சினையாக உள்ளன. ஆனால், வளரும் நாடுகளில் அனைவருக்கும் கழிவறை வசதி செய்து தருவதற்கு போதிய தொழில்நுட்பமும், நிதி ஆதாரமும் பெரும் பிரச்சினையாக உள்ளது.

Posted in Bathrooms, Clean, Conf, Conference, Crap, Dalit, Delhi, Disease, Disposal, Hygiene, hygienic, India, Infections, Ladies, Morning, Oppressed, Pay, Railway, Railways, Restrooms, sanitation, Scarcity, She, Shit, Shulab, Shulabh, squat, struggle, Sulab, Sulabh, Sulabh International, Summit, Toilet, Trains, Urine, Use, Water, Women | Leave a Comment »

Compact Fluorescent lamp (cfl) & Incandescent Bulb – Global Warming

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 29, 2007

குறு ஒளிர் விளக்குகள் } நல்ல தீர்வா?

என். ரமேஷ்

தொழிற்சாலைகள், போக்குவரத்து உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த அனைத்துப் பிரிவுகளிலும் பயன்படுத்தப்படும் நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட எரிபொருள்களால் உருவாகும் கரியமில வாயு காரணமாக புவி வெப்பம் அதிகரித்து வருகிறது; இதனால் கடல் நீர்மட்டம் உயர்வு, புயல் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள், வறட்சி, உணவு உற்பத்தி குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை உலக சமுதாயம் உணரத் தொடங்கியுள்ளது.

புவி வெப்பத்தால் ஏற்படக் கூடிய பேரழிவிலிருந்து தப்பிக்க, வளர்ச்சியடைந்த நாடுகள் வெளியிடும் கரியமில வாயு அளவைக் குறைக்க வகை செய்யும் கியோட்டோ ஒப்பந்தம் உள்ளிட்ட வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இப் பிரச்னையின் தீர்வுக்கு, உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை நேரடியாக வழங்க வீடுகள், வணிக நிறுவனங்களில் உள்ள டங்ஸ்டன் இழை கொண்ட “குண்டு பல்பு’களை குறு ஒளிர் விளக்குகளாக (compact fluorescent lamp-cfl) மாற்ற வேண்டும் எனப் பெரும் இயக்கமே நடைபெற்று வருகிறது.

பிரேசில், வெனிசுலா போன்ற நாடுகள் “குண்டு பல்பு’களை சிஎஃப்எல்-ஆக மாற்றும் இயக்கத்தைத் தொடங்கிவிட்டன. ஆஸ்திரேலியா 2010-க்குள்ளும், கனடா 2012-க்குள் முழுமையாக சிஎஃப்எல்-லுக்கு மாற முடிவு செய்துள்ளன.

இந்தியாவில் கிரீன் பீஸ் போன்ற தன்னார்வ அமைப்புகளும், தில்லி மாநில அரசு – அங்கு செயல்படும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களும் இந்த இயக்கத்தில் முனைப்புடன் செயல்படுகின்றன.

சென்னை போன்ற பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள பெரும்பாலான மேல்தட்டு, நடுத்தரக் குடும்பங்கள் தற்போது சிஎஃப்எல்-லுக்கு மாறி வருகின்றன. சிஎஃப்எல் எனப்படும் இந்த குறு ஒளிர் விளக்குகள், குண்டு பல்புகளைவிட ஏறத்தாழ ஐந்து மடங்கு குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. 100 வாட் குண்டு பல்பு வழங்கும் ஒளியை 20 வாட் சிஎஃப்எல் விளக்கு வழங்குகிறது. இதன்மூலம் ஐந்தில் ஒரு பங்கு மின்சாரச் செலவையும், அதற்குரிய கட்டணத்தையும் குறைக்க முடியும்.

மேலும், ஒரு குண்டு பல்பு செயலிழக்கும் வரை, சராசரியாக 1,000 மணி நேரம் எரியும் என்றால், சிஎஃப்எல் விளக்குகள் அதைவிடப் பலமடங்கு நேரம் எரியக் கூடியவை. இதனால் ஆண்டுக்கு ஒரு சிஎஃப்எல் பயன்பாடு மூலம், அதற்குக் கொடுக்கும் கூடுதல் விலை உள்ளிட்ட அனைத்துச் செலவும் போக, ரூ. 300-க்கும் அதிகமாகச் சேமிக்க முடியும்.

நுகர்வோருக்கு நேரடியாகக் கிடைக்கும் இந்த லாபம் தவிர்த்து, மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் நிலக்கரி, தண்ணீர் போன்றவற்றின் பயன்பாட்டு அளவும் குறைகிறது. 1,000 மணி நேரம் ஒரு குண்டு பல்பு மின்சாரம் வழங்க 71 கிலோ நிலக்கரி தேவையென்றால், சிஎஃப்எல்லுக்கு 14.2 கிலோ மட்டும் போதுமானது. இதேபோன்று, குண்டு பல்புக்கு 535 லிட்டர், சிஎஃப்எல்லுக்கு 107 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு குண்டு பல்பு 1,000 மணி நேரம் எரிவதற்கான மின் சக்தி உற்பத்தியில் 99.7 கிலோ கரியமில வாயு வெளியிடப்படும். ஆனால், சிஎஃப்எல் எரிவதால் 19.94 கிலோ மட்டும் வெளியிடப்படும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் சல்பர்-டை-ஆக்சைடு, நுண் துகள்கள், எரி சாம்பல் போன்றவையும் சிஎஃப்எல் பயன்பாட்டால் குறையும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் பலர் கூறுகின்றனர்.

ஆனால், “டாக்சிக்ஸ் லிங்’ (Toxics Link) என்ற தன்னார்வ அமைப்பு, சிஎஃப்எல்-லுக்கு மாறுவதற்கு முன் ஆழ்ந்து யோசிக்க வேண்டியுள்ளது என எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது. இதற்குக் காரணம், சிஎஃப்எல், நாம் வழக்கமாக பயன்படுத்தும் குழல் விளக்குகள் போன்ற ஒளிர் விளக்குகளில் பயன்படுத்தப்படும் பாதரசம் மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தது என்பதுதான்.

நமது சூழலில் மிகச் சிறு அளவில் இருந்தாலும் நரம்பு மண்டலம், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் கைகால் அசைவு, நினைவாற்றல் ஆகியவற்றையும் பாதிக்கக் கூடியது பாதரசம்.

ஒரு சராசரி சிஎஃப்எல் விளக்கில் 0.5 மில்லி கிராம் பாதரசம் உள்ளது. இந்த விளக்குகள் உடைந்தால் பாதரச ஆவி வெளிப்பட்டு வீட்டில் உள்ளோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். உடையாமல் செயலிழந்து (ப்யூஸ்) போன பின்னரும் வழக்கமாக இவை மாநகராட்சி, நகராட்சி குப்பைக் கிடங்குகளுக்கே செல்கின்றன. அங்கு இவை உடைக்கப்பட்டாலும் அந்த பாதரச ஆவி நமது சுற்றுச்சூழலில் கலந்து பாதிப்பை உருவாக்கும்.

தற்போது இந்தியாவில் எரியும் விளக்குகளில் 10 சதம் சிஎஃப்எல் விளக்குகள். ஆண்டுதோறும் சிஎஃப்எல் விளக்குகள் தயாரிப்பில் 56 டன் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. முழுவதும் சிஎஃப்எல் விளக்குக்கு மாறினால் இந்த அளவு ஆண்டுக்கு 560 டன்னாக உயரும். எனவே, பசுமைக் குடில் வாயுக்களைக் குறைப்பதற்காக மற்றொரு ஆபத்தை விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை என பாதரசத்தை எதிர்ப்போர் தெரிவிக்கின்றனர்.

சிஎஃப்எல்-லுக்கு மாற்றாக ஒளி உமிழும் டையோடுகளைப் ( Light Emitting Diodes-எல் ஈ டி) பயன்படுத்த முடியும் என இவர்கள் வாதிடுகின்றனர். பாதரசத்தைப் பயன்படுத்தாத இவை சிஎஃப்எல்களைவிடக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதுடன் பல்லாயிரம் மணி நேரத்துக்கு மேல் எரியக் கூடியவை.

ஆனால், நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் போதும் பாதரசம் வெளியாகிறது. சிஎஃப்எல்லைப் பயன்படுத்தும் போது இந்த பாதரசம் வெளியாகும் அளவு குறைய வாய்ப்புள்ளது. ஆனால், மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மட்டும் பாதரசம் வெளியாவதைக் கட்டுப்படுத்துவது எளிதானது. கோடிக்கணக்கான வீடுகளில், குப்பை மேடுகளில் வெளியாகும் போது கட்டுப்படுத்துவது கடினம்.

எனவே, எல்ஈடி போன்ற மாற்றுகள் பரவலான பயன்பாட்டுக்கு வரும் வரை, இடைக்கால ஏற்பாடாக கனடா போன்ற நாடுகளில் சிஎஃப்எல்-களைப் பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாதரசத்தை மீட்டு எடுக்கலாம். செயலிழந்த சிஎஃப்எல்களைத் திரும்பப் பெறுவது, மறுசுழற்சி செய்வது போன்றவற்றுக்கு ஆகும் செலவை சிஎஃப்எல்லைப் பெருமளவு உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஏற்கச் செய்யலாம்.

———————————————————————————————————–
நதியோரம் தேயும் நாகரிகம்!

இரா. சோமசுந்தரம்

வாழ்வின் எல்லா நேரங்களிலும் நாம் ஒருவகையில் அன்றாடம் காய்ச்சிகளின் மனநிலையில்தான் இருக்கின்றோம். அன்றைய தேவை நிறைவடைந்தால் சரி.

அது தேர்தல் என்றாலும், ஊழல் என்றாலும் அல்லது , கொலை, கொள்ளை, விபத்து, மரணங்கள், குண்டுவெடிப்பு – எதுவென்றாலும் சரி, அன்றைய நாளுடன் மறக்கப்படும்.

இந்தப் பட்டியலில் தண்ணீரும் ஒன்று. வீட்டு இணைப்பில் குடிநீர் வந்தது என்றால் அத்துடன் அதை மறந்துவிடுகிறோம். ஆனால் அந்த குடிநீரை வழங்கும் நதிக்கு எத்தகைய கேடுகளைச் செய்து வருகிறோம் என்பதைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது.

இந்திய நதிகள் யாவும், அவை பெரியன என்றாலும் சிறியவை என்றாலும், மழைக்காலத்தில் வெள்ளமும் மற்ற நாட்களில் சாக்கடையும் ஓடும் என்ற நிலைக்கு மாறிவிட்டது. எல்லாக் கழிவுகளும் நதிகளில் கலக்கின்றன.

இது காலங்காலமாக நடந்து வருவதுதானே? இப்போது மட்டும் என்ன புதிதாகத் தீங்கு வந்துவிட்டது?

காலங்காலமாக நதியில் குளித்த மனிதர்கள் வேதிப்பொருள் கலந்த சோப்பைப் பயன்படுத்தவில்லை. அவர்களுக்கு “தோல் வெளுக்க சாம்பலுண்டு. துணி வெளுக்க மண்உண்டு’. அவர்கள் ஆற்றோரம் திறந்தவெளிகளையும், வயல்வரப்புகளையும் கழிப்பிடமாகப் பயன்படுத்தினார்கள். அப்போதெல்லாம் தொழிற்சாலைகள் இல்லை. அன்றைய சாயத் தொழில்கூட மரம், செடி, மலர், மரப்பட்டைகள் என இயற்கைப் பொருள்களைக் கொண்டு நடந்தது. யாருக்கும் பாதிப்பில்லை.

இன்றோ நிலைமை வேறு; இவை யாவும் தலைகீழாக மாறிவிட்டன.

தற்போது நதியில் கலக்கும் மாசுகளில் 80 சதவீதம் மனிதக் கழிவுகள்! ஏனையக் கழிவுகள் தொழில்துறையைச் சேர்ந்தவை.

எல்லா வீடுகளிலும் “ஃபிளஷ் அவுட்’ நவீன கழிப்பறை உள்ளது; இன்று இது தவிர்க்கமுடியாத ஒன்று.

ஒரு குடும்பத்துக்கு சுமார் 1.5 கிலோ மலஜலத்தை “”சாக்கடையில் தள்ளிவிட” குறைந்தது 300 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

இந்தத் தண்ணீரும் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல. பெரும்பாலும், மாநகராட்சி அல்லது நகராட்சி சுத்திகரித்து, வீட்டு இணைப்பில் வழக்கும் குடிநீர்தான்.

சில வெளிநாடுகளில் இத்தகைய ஃபிளஷ் அவுட்களில் பயன்படுத்த மறுசுழற்சி-நீர் விநியோகம் உண்டு. இந்தியாவில் அதற்கு வாய்ப்பே கிடையாது.

உள்ளாட்சி அமைப்புகள், இந்தக் கழிவுகளை ஊருக்கு வெளியே ஒன்றுதிரட்டி, அவற்றை ஓரளவு சுத்திகரித்து பின்னரே நதியில் கலக்கவேண்டும் என்பதற்கு முயற்சிகள் பல எடுக்கப்பட்டன.

அதன் விளைவுதான் நதிகள் பாதுகாப்புத் திட்டம். பல ஆயிரம் கோடி ரூபாயை, இத்திட்டத்திற்காக “ஒதுக்கினார்கள்’.

நகரத்தின் சாக்கடையைச் சுத்திகரித்து இயற்கை உரங்கள் தயாரிப்பு, கீரை காய்கறி வளர்ப்பு – என்றெல்லாம் செய்திகள் வந்தனவே தவிர, நடைமுறையில் எதுவுமே நடக்கவில்லை. சுத்திகரிக்கப்படாத வீட்டுச் சாக்கடைக் கழிவுகள் நேரடியாக நதிகளில் கலந்துகொண்டே இருக்கின்றன. இன்றளவும்!

ஒரு மனிதனின் மல, ஜலத்தில் அவனுக்குத் தேவைப்படும் அளவுக்கு உணவுப் பொருளை விளைவிக்கப் போதுமான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் அனைத்தும் உள்ளன. ஆனால் அவற்றைப் பயன்படுத்த இயற்கை சில விதிமுறைகளை வைத்திருக்கிறது. நீரில் கரைந்து நீர்த்துப்போகிறபோதுதான் சிறுநீர் ஒரு நல்ல உரமாக மாறும். வெயில் காய்ந்து கிருமிகள் அழிந்த உலர்மலம்தான் தீங்கற்ற உரமாக மாறும். ஆனால் இதற்கு மனித நாகரிகம் இடம் இல்லாமல் செய்துவிட்டது. ஆகவே மலக்கிருமிகள் நேரடியாக நதியைச் சென்றடைகின்றன.

ஓடும் நதிக்கு தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்ளும் சக்தி உள்ளது என்பது உண்மையே. நதியில் கலக்கும் உயிர்க்கழிவுகளின் மூலக்கூறுகளைச் சிதைத்து, உருமாற்றம் செய்ய போதுமான அளவு ஆக்சிஜன் நதிநீரில் இருக்க வேண்டும்.

ஆனால் ரசாயன கழிவுகள் நீரை மாசுபடுத்தி, அதன் இயற்கையான சக்தியை ஒடுக்கிவிடுகின்றன. இயற்கையான சுத்திகரிப்புக்கு ஆற்றுமணல் அவசியம். அதுவும் இப்போது பெருமளவில் சுரண்டப்படுகிறது.

நதிநீரைக் காப்பாற்ற ஏதாவது செய்தாக வேண்டும்; இல்லையெனில், குடிநீருக்காகப் பெரும்பணத்தைச் செலவிட நேரும்.

மனிதன் பெரிய அறிவுஜீவிதான்!

அதற்கு ஒரு சின்ன உதாரணம்:

ஒரு மாநகராட்சிப் பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறைகளை இணைத்து, அதிலிருந்து கிடைக்கும் எரிவாயுவை அந்த வளாகத்தில் உள்ள டீ கடைகள், ஹோட்டல்களில் பயன்படுத்தினால் எரிபொருள் செலவு மிகமிகக் குறையும் என்ற திட்டத்தை முன்வைத்தபோது, காது, கண், மூக்கு எல்லாவற்றையும் மூடிக்கொண்டு “அய்யய்யே..எப்படி வியாபாரம் நடக்கும்?’ என்று எதிர்த்தார்கள்.

அதே கழிப்பறைகளின் மலஜலம் அனைத்தையும் பக்கத்தில் உள்ள நதியில் கலந்து, அந்த தண்ணீரைத்தான் மீண்டும் விநியோக்கிறோம் என்று அதிகாரிகள் சொன்னபோது, “சுடுகாடு கூடத்தான் ஆத்தோரம் இருக்குது. எல்லாம் வெள்ளத்துல போறதுதானே’ என்றார்கள்.

Posted in Alternate, Atomic, Biogas, Brazil, Burn, Carbon, Cauvery, CFL, Coal, Conservation, Crap, dead, Degradable, Detergents, Diesel, Disposal, Drill, Drinking, Drought, Earthquake, Electricity, Emission, emissions, energy, Environment, ethanol, Flowers, Flush, Food, Fuel, Ganga, Ganges, Garbage, Gas, Gore, Incandescent, Integration, Interlink, Kyoto, Lamps, Laundry, LED, Lights, Lignite, Lumniscent, Mercury, Mineral, Motor, Nature, Nuclear, Ozone, Petrol, Plants, Pollution, Power, Pump, Purify, Rain, Recycle, Removal, Restrooms, River, Shit, Soaps, Toilets, Toxics, Trash, Trees, Tsunami, Tube, Tubelight, Underground, Urea, Urine, Warming, Waste, Water, Well | 1 Comment »

Double decker trains and ‘Own Your Coach’ schemes in new budget likely

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

இரட்டை அடுக்கு ரயில்கள் அறிமுகமாகின்றன! 2007-08 பட்ஜெட்டில் அறிவிக்கிறார்- லாலு

புது தில்லி, பிப். 12: பயணிகள் நெரிசல் அதிகம் உள்ள மார்க்கங்களில் இரட்டை அடுக்கு ரயில் சேவையை அறிமுகப்படுத்த அமைச்சர் லாலு பிரசாத் திட்டமிட்டிருக்கிறார்.

சரக்கு ரயில்களில், “”உங்கள் பெட்டியைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக, சுற்றுலாத்துறையில் உள்ள தனியார் டூர் ஆபரேட்டர்களும், நிறுவனங்களும் தங்களுக்கென்றே தனியாக பயன்படுத்த “”உங்கள் ரயிலை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள்” என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்துகிறார் லாலு.

அத்துடன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், அவர்கள் பார்க்க விரும்பும் இடங்களை ஒரே டூரில் சேர்ந்தார் போல பார்க்கவும் சிறப்பு திட்டங்கள் அமலாகவிருக்கின்றன.

உள்நாட்டு ரயில் பயணிகளும் வெளிநாட்டு ரயில் பயணிகளும் வாய்க்கு ருசியாகவும் சுகாதாரமாகவும் நல்ல தின்பண்டங்கள், சிற்றுண்டி, உணவு ஆகியவற்றைச் சாப்பிட, “பட்ஜெட் ஹோட்டல்களை’ கட்டி, நிர்வகித்து, சிறிதுகாலம் பொறுத்து ரயில்வே வசம் ஒப்படைக்கும் திட்டத்தை சிறந்த தனியார் நிறுவனங்களைக் கொண்டு நிறைவேற்ற திட்டமிட்டிருக்கிறார் லாலு.

இம் மாதம் 26-ம் தேதி 2007-08-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பிக்கிறார் லாலு பிரசாத். பட்ஜெட் குறித்து ரயில்வே பவன் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

“ரயில்களில் பயணக் கட்டணமோ, சரக்குக் கட்டணமோ, சீசன் கட்டணமோ அதிகரிக்கப்படமாட்டாது. அதே சமயம் சில கட்டண விகிதங்கள் சீரமைக்கப்படலாம்.

சில மார்க்கங்களில் ஆண்டு முழுக்க பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரயில்களில் 24 பெட்டிகளுக்கு மேல் இணைத்து ஓட்ட முடிவதில்லை. எனவே இருக்கும் பெட்டிகளிலேயே படுக்கை, இருக்கை வசதிகளை அதிகப்படுத்த, இரட்டை அடுக்கு ரயில் பெட்டிகளைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

படுக்கை வசதி கீழ் தளத்திலும், உட்கார்ந்தே பயணம் செய்யும் வசதி (சேர்-கார்) மேல் தளத்திலும் இருக்குமாறு பெட்டிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பெüத்த தலங்களுக்கு சிறப்பு ரயில்கள்: புத்தர் பிறந்து 2,500 ஆண்டுகள் ஆனதையொட்டி அவர் பிறந்த இடம், அவருடைய வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்த இடம், அவர் புனிதப்பயணம் சென்ற தலங்கள் போன்றவற்றை ஒரு சேர பார்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

வரலாற்று ரீதியான, கலாசார ரீதியான சுற்றுலாப் பயணங்களுக்கென்று தனித்தனி ரயில்கள் விடப்படும். ரயில்கள் செல்லும் இடங்களுக்கு ஏற்றவாறு ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு, உள் அலங்காரம், பணியாளர்களின் சீருடைகள் போன்றவை இருக்கும்.

தில்லி-ஆக்ரா, தில்லி-ஜெய்பூர், தில்லி-ஸ்ரீநகர் மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் விடப்படும். உத்தரப் பிரதேசத்திலும் பிகாரிலும் உள்ள புத்த தலங்களுக்கு தனி ரயில் விடப்படும். இதில் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ரயில்வேதுறை செயல்படும்.

90 நாள்களுக்கு முன்னதாகவே முன்பதிவு: வெளியூர் பயணம் செய்ய முன்கூட்டியே திட்டமிடுகிறவர்கள் வசதிக்காக, 90 நாள்களுக்கு முன்னதாகவே டிக்கெட் வழங்கும் திட்டம் அமலுக்கு வரவிருக்கிறது. இதில் ரயில்வேதுறைக்கு நல்ல வருவாய் கிடைக்கவிருக்கிறது.

உபரி ரூ.20,000 கோடி: ரயில்வேயின் வருவாய் பெருகியதால் ரூ.20,000 கோடிக்கு உபரி இருக்கிறது. இது மார்ச் 31-ம் தேதிவரை நீடிக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரயில் ஊழியர்களுக்கு ரூ.37 கோடி பரிசு

பாட்னா, மார்ச் 2: இருபதாயிரம் கோடி ரூபாய் உபரி வருமானம் பெற உதவிய ரயில்வே ஊழியர்களைப் பாராட்டி அமைச்சர் லாலு பிரசாத் ஹோலிப் பரிசாக ரூ.37 கோடியை வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார்.

நாலாவது பிரிவு ரயில்வே ஊழியர்களுக்கு தலா 400 ரூபாய் ரொக்கம் தரப்படும். அவர்களுடைய நல நிதியில் (ஸ்டாஃப் பெனிஃபிட் பண்ட்) தலா ரூ.100 சேர்க்கப்படும். இதர அலுவலர்களுக்கும் ரொக்கப் பரிசு உண்டு.

ரயில் பெட்டிகளில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை நிறுவ நடவடிக்கை

புதுதில்லி, மார்ச் 2: சுற்றுச்சூழலைப் பாதிக்காத கழிப்பறைகளை ரயில்களில் நிறுவ உள்ளது ரயில்வே. இதற்காக தற்போதைக்கு ரூ.3 கோடியில் 80 கழிப்பறைகள் நிறுவப்பட உள்ளன. அதற்குரிய ஆர்டர் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது.

மக்களவையில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரயில்வே துணை அமைச்சர் ஆர்.வேலு இதனைத் தெரிவித்தார்.

================================================

முக்கிய நகரங்களை இணைக்க அதிவேக பயணிகள் ரயில் சேவை: ரயில்வே துறை திட்டம்

புதுதில்லி, ஏப். 2: முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக பயணிகள் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள முக்கியமான நகரப்பகுதிகளை இணைப்பதில் இந்திய ரயில்வே முனைப்பு காட்டி வருகிறது. 600 முதல் 1,000 கி.மீ. வரையிலான தூரத்தை இரண்டரை முதல் நான்கு மணி நேரங்களில் கடக்கும் வகையில் அதிக வேக ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்திட்டத்தை அரசும் தனியாரும் இணைந்து செயல்படுத்துதல் உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.

சரக்குப் போக்குவரத்துக்கென முக்கியமான 4 வழித்தடங்களான தில்லி-மும்பை, தில்லி-கோல்கத்தா, சென்னை-கோல்கத்தா, மும்பை-சென்னை ஆகியவற்றை இணைக்கும் வகையில் தனி ரயில்பாதைகளை அமைக்க ரயில்வே ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. அவற்றில் தில்லி-மும்பை, தில்லி-சென்னை ஆகிய தனி சரக்கு ரயில் பாதைகள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்த திட்டங்களுக்கு ஜப்பான் கடனுதவியும், தொழில்நுட்ப உதவியும் வழங்க முன்வந்துள்ளது. இருப்பினும், அரசும் தனியாரும் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றும் சாத்தியக்கூறும் உள்ளது.

ரயிலுக்கு தேவையான என்ஜின்கள், பெட்டிகள், சரக்கு வேகன்கள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகப்படுத்த சிறப்பு திட்டத்தை செயல்படுத்தவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ரயில் பெட்டிகளின் தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள வித்தியாசத்தை குறைக்கும் வகையில் சென்னை பெரம்பூரில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை ஆகிய நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும். மேலும் அரசும் தனியாரும் இணைந்து புதிய ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலை உருவாக்கப்படும்.

ஏப்.06 முதல் பிப். 07 இடைப்பட்ட காலத்தில் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் இலக்கைக் காட்டிலும் 24 பெட்டிகள் கூடுதலாக 1,110 பெட்டிகளும், கபூர்தலாவில் 4 பெட்டிகள் கூடுதலாக 1,164 பெட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டன.

11வது திட்ட காலத்தில் மின்சாரம், டீசலில் இயங்கும் என்ஜின்களின் தேவை 1,800 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 360 என்ஜின்கள் தேவை.

ஆனால் தற்போது ஆண்டுக்கு 150 என்ஜின்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

அதை 200 ஆக அதிகரிக்க முடியும். எஞ்சியுள்ள தேவையை பூர்த்தி செய்ய புதிய தொழிற்சாலையை உருவாக்க வேண்டியது அவசியம்.

கடந்த ஆண்டு டீசல் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலையில் 175 என்ஜின்களும், சித்தரஞ்சனில் உள்ள மின்சார ரயில் என்ஜின் உற்பத்தி நிறுவனத்தில் 133 ரயில் என்ஜின்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

Posted in 2007, Analysis, Bombay, Bonus, Buddhism, Budget, Calcutta, Carriage, Chennai, City, Coach, Crap, Delhi, Double decker, Economy, Engines, Environment, Express, Finance, Freight, Goods, Guide Operator, human waste, Hygiene, ICF, Incentives, Interlink, Japan, Kapurthala, Kolkata, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Loans, Madras, Manufacturing, Ministry, Mumbai, New Delhi, Own Your Coach, passenger, Perambur, Piss, Pollution, Predictions, Preview, Public-Private-Partnership, Railways, Reservation, Restrooms, Safety, Schemes, Security, Shit, Smell, Superfast, Toilets, Tour, Trains, Transportation, Travel, Urin, Urine, Velu, Waste | 1 Comment »