Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Religion/Politics’ Category

Uttar Pradesh Elections – Anlaysis: BSP, BJP, Congress, SP

Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007

உ.பி. மாநிலத் தேர்தல்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் இந்த வாரம் தொடங்க இருக்கிறது. எனினும் இம் மாநிலத்தில் கட்சிகளிடையே பெரிய கூட்டணி எதுவும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் சமாஜவாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய நான்கு பிரதானக் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரியாகக் கருதுவதே இதற்குக் காரணம். மிஞ்சிப் போனால் இக் கட்சிகள் மாநில அளவிலான சிறு கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம்.

பாஜக இந்த வகையில் ஏற்கெனவே நடவடிக்கையில் ஈடுபட்டு அப்னா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் தொகுதி உடன்பாடுகளைச் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. அப்னா தளம் என்பது அடிப்படையில் “குர்மிக்கள்’ எனப்படும் பிரிவினரின் கட்சியாகும். மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும் மத்திய பகுதியிலும் இப் பிரிவினர் பெருவாரியாக உள்ளனர். வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த சிறு கட்சியுடனும் பாஜக தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பினரின் கட்சி என்ற முத்திரையைத் தாங்கிய பாஜக, இந்த ஏற்பாடுகள் மூலம் பிற்பட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற முடியும் என்று கருதுகிறது. 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 88 இடங்களுடன் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது.

மற்றொரு அகில இந்தியக் கட்சியான காங்கிரஸ், உ.பி. தேர்தலில் யாருடனும் கூட்டணி சேரும் திட்டமில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் அக் கட்சி அதே மூச்சில் தொகுதி உடன்பாட்டுக்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ஒருவேளை வி.பி.சிங்கின் ஆதரவு பெற்ற ஜனமோர்ச்சாவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம். அஜீத் சிங்கின் கட்சி, லாலு கட்சி ஆகியவற்றுடனும் இவ்விதம் தொகுதி உடன்பாடு காணப்படலாம். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்த மாநிலத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 25 இடங்களை அதாவது மொத்த இடங்களில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களையே பெற்றது. இந்தத் தடவை காங்கிரஸýக்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்ல முடியாது.

இப்போது ஆளும் கட்சியாக உள்ள சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டும் இம் மாநிலத்தில் இரு பெரும் சக்திகளாக விளங்குகின்றன. இந்த இரு கட்சிகளுமே ஒன்றையொன்று பரமவைரிகளாகக் கருதுகின்றன. யாதவ் சமூகத்தினரிடையே செல்வாக்குப் பெற்ற முலாயம் சிங் அண்மைக்காலமாக மற்ற பல சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் முனைப்புக் காட்டி வந்துள்ளார். மாநிலத்தில் “வாட்’ வரித் திட்டம் அமலாக்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக முலாயம் சிங் கட்சியின் தோழமைக் கட்சியாக விளங்கி வந்த மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அதேநேரத்தில் முலாயம் சிங்குக்கு எதிரான எந்தக் கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும்.

மாயாவதியின் கட்சியானது தலித்துகளின் கட்சி என்று அறியப்பட்டதாகும். ஆனால் அண்மைக் காலமாக மாயாவதி தமது கட்சியானது அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். உயர் வகுப்பினர் பலரைத் தமது கட்சியில் சேர்த்துக் கொண்ட அவர், இப்போதைய தேர்தலில் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் தமது கட்சி சார்பில் உயர் வகுப்பினரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளார். இத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிப்பது அவரது நோக்கமாகும்.

உ.பி. மாநிலம் மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தில் நிலையான ஆட்சி நிலவியதாகச் சொல்ல முடியாது. 2002 தேர்தல் மூன்று கட்டங்களில் நடைபெற்றது. இப்போதைய தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிவுகள் மே மாத இரண்டாவது வாரத்தில்தான் தெரிய வரும்.

===========================================================
உ.பி.யில் மாயாவதி போட்டியில்லை; மேல் சாதியினருக்கு அதிக தொகுதிகள்

லக்னெü, மார்ச் 14: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 பேரவைத் தொகுதிகளுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேல் சாதியினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் மாயாவதி போட்டியிடவில்லை.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடையே மாயாவதி கூறியது:

உ.பி.யில் எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை.

நான் போட்டியிட்டால் சுற்றிலும் உள்ள தொகுதிகளில் இருக்கும் தொண்டர்கள் அங்கு வந்து பணியாற்ற விரும்புகிறார்கள். இதனால் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நான் இப்போது போட்டியிடப் போவதில்லை. கட்சி வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு உறுப்பினர் எனக்காக விட்டுக்கொடுப்பார். பின்னர் இடைத்தேர்தல் மூலம் நான் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார்.

அவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலின்படி

  • 139 தொகுதிகள் மேல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில்
  • 86 தொகுதிகள் பிராமணர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
  • 110 தொகுதிகள் பிற்பட்ட வகுப்பினருக்கும்,
  • 93 தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும்,
  • 61 முஸ்லிம்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது இறுதி செய்யப்பட்ட பட்டியலாகும். அதே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை பிற கட்சிகள் நிறுத்தினாலும் எங்கள் வேட்பாளர் தேர்வில் மாற்றம் இருக்காது. எங்கள் கட்சி பெரும்பான்மை பலம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மாயாவதி.

முலாயம் சிங் போட்டியிடுவார் என கருதப்படும் குன்னார் தொகுதியில் முகம்மது ஆரிப் என்பவரை பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

================================================

உ.பி.யில் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு அலசப்படுகிறது: தேர்தல் கமிஷன் சிறப்பு நடவடிக்கை

புது தில்லி, ஏப். 2: உத்தரப் பிரதேசத்தின் 403 பேரவைத் தொகுதிகளிலும் வன்செயல்கள் வரலாறு தொகுக்கப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கள்ள வாக்கு போடச் சொல்வது, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுப்பது, வாக்குச் சாவடிக்குள் புகுந்து வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களையும், தேர்தல் அலுவலர்களையும் துப்பாக்கி முனையில் வெளியேற்றிவிட்டு வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி இஷ்டப்படி கள்ள வாக்குப் போடுவது என்று அனைத்துவித தேர்தல் முறைகேடுகளையும் தொகுதி வாரியாக பட்டியலிட்டுத் தருமாறு மத்திய தலைமை தேர்தல் ஆணையும் உத்தரப்பிரதேச தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் இப்போது முலாயம் சிங் தலைமையிலான சமாஜவாதி கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறது. இக் கட்சி பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டுக்குமே தோழமைக் கட்சியாக இல்லை.

இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தியே தீருவது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தீர்மானித்துவிட்டதையே இந்தப்புதிய நடவடிக்கை தெரிவிக்கிறது.

403 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச் சாவடி வாரியாக பல தகவல்களைத் திரட்டுமாறு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

பணம்-பொருள் கொடுத்து வாக்கு சேகரிக்கப்படும் வாக்குச் சாவடிகள், பிற மத, சாதிக்காரர்களை அச்சுறுத்தி வாக்குச் சாவடிக்கே வராமல் தடுக்கும் வாக்குச் சாவடிகள், தேர்தல் அதிகாரிகளையும் வாக்குச் சாவடி முகவர்களையும் மிரட்டிவிட்டு தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் வாக்குச் சாவடிகள் என்று முந்தைய வரலாற்றின் அடிப்படையில் அடையாளம்காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சராசரி வாக்குப்பதிவைவிட 15% அதிகம் வாக்குகள் பதிவாகும் தொகுதிகள், சராசரியை விட 15% குறைவாக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடிகள் போன்றவற்றை அடையாளம் காணவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

வழக்கமான தேர்தல் நடைமுறைகளைவிட இவையெல்லாம் புதுமையாக இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில்கூட முறைகேட்டை அனுமதிக்காமல் தடுப்பது என்ற உறுதி தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுவிட்டதைப் போலத் தெரிகிறது. தேர்தல் நாள் நெருங்க, நெருங்கத்தான் இதையெல்லாம் தேர்தல் கமிஷனால் சாதிக்க முடிந்ததா என்று தெரிந்து கொள்ளமுடியும். இப்போதைக்கு இது ஆரம்பம்தான்.

தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மத்திய தேர்தல் ஆணையம் நியமிக்கும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு இது தொடர்பாக மிகப் பெரும் பொறுப்புகளை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது.

=================================================================
ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி: முலாயம் சிங் தேர்தல் வாக்குறுதி

எட்டா, ஏப். 3: மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாணவர்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உ.பி. முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் வாக்குறுதி அளித்தார்.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மைன்புரி, பெரோஸôபாத், எட்டா ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணிகளில் பங்கேற்று முலாயம் சிங் பேசியதாவது:

சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சிக்கு எதிராக பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டு சேர்ந்து நிற்கின்றன.

சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரின் நலனுக்காகவும் எங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பட்ட மேற்படிப்பு வரை மாணவ, மாணவியருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

அதிகாரிகளை கூண்டோடு மாற்றியதுதான் லக்னெü, கான்பூர் வன்முறைக்கு காரணம்: தேர்தல் ஆணையம், மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரிகளை கண்மூடித்தனமாக கூண்டோடு இடமாற்றம் செய்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு அந்தந்தப் பகுதிகளின் நிலவரமே இன்னும் தெரியவில்லை.

லக்னெüவிலும், கான்பூரிலும் முஸ்லிம்களில் இரு பிரிவினருக்கு இடையிலான வன்முறையை அதிகாரிகளால் தடுக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.

முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் தங்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவி செய்ய வேண்டும் என்றார் முலாயம் சிங்.
=================================================================
அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கீடு: உ.பி.யில் பாஜக தேர்தல் வாக்குறுதி

லக்னெü, ஏப். 3: உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படும்; பஞ்சாயத்துகள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்றங்களில் 50% பதவிகள் பெண்களுக்கே தரப்படும் என்று அக் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

பெண்கள், முதியோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நல திட்டங்களை கட்சி அறிவித்துள்ளது.

சட்டம், ஒழுங்கு கட்டுப்படுத்தப்படும், விலைவாசி உயராமல் கண்காணிக்கப்படும், பதுக்கல், கள்ளச் சந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் நடமாடமுடியாதபடி “பொடா’வுக்கு இணையான பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டு வரப்படும், வங்கதேசத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஊடுருவியவர்கள் கண்டுபிடித்து அகற்றப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

கட்சியின் அனைத்திந்திய துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மாநிலத் தலைவர் கேசரிநாத் திரிபாடி ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

“கிரிமினல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு முறிக்கப்படும். மாநிலத்தில் “சிமி’, “ஐஎஸ்ஐ’ ஆகியவற்றின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும்.

பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் ரூ.30,000 வளர்ச்சிப் பத்திரத்தில் முதலீடு செய்யப்படும். 21 வயதுவரை அப் பெண்குழந்தையின் படிப்புச் செலவுக்கு அதிலிருந்து பணம் எடுத்துதரப்படும்.

அரசு வேலையில் பெண்களுக்கு 20% ஒதுக்கப்படும்.

விதவையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.

மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் கட்டித்தரப்படும்.

அரசு இடங்களில் உள்ள வீட்டு மனை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

சுகன்யா விவாஹ யோஜனா, கன்யாதான் யோஜனா போன்ற திருமண திட்டங்கள் தொடரும்.

அங்கன்வாடி (பெண்) ஊழியர்களின் பணி வரன்முறைப்படுத்தப்படும்.

வேலை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி அளிக்கப்படும்.

இளைஞர் நலனுக்காக தனி கமிஷன் ஏற்படுத்தப்படும்.

மகளிர் சுய உதவி குழுக்களில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் பெண்கள் சேர்க்கப்படுவர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

முதியோருக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தப்படும். அரசு போக்குவரத்துக் கழகங்களில் சலுகைக் கட்டணத்தில் அவர்கள் பயணம் செய்யலாம். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம். எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லங்கள் கட்டித்தரப்படும்.

விலைவாசியைத் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்புக் குழு ஏற்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குவோர், கள்ளச் சந்தையில் விற்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக முறை வலுப்படுத்தப்படும்.

பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம், யோகாசனம், வந்தே மாதரம் ஆகியவை கட்டாயமாக்கப்படும்’ என்று தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

பாஜக வெற்றி பெற்றால் கல்யாண் சிங் முதல்வர் பதவியை ஏற்பார் என்று இரு தலைவர்களும் நிருபர்களிடம் அறிவித்தனர்.

=================================================================

Posted in abuse, Alliances, Allocation, Amar Singh, Amitabh, Anlaysis, Apna Dal, Apna Dhal, Assembly, Ayodhya, Backgrounder, BJP, booth capturing, Boothcapturing, Brahmins, BSP, candidates, Caste, Chief Minister, CM, Communist, Congress, Corruption, CPI, EC, Elections, Electorate, Employment, FC, Females, Filmfare, History, Janata Dal, Jats, Jobs, Kalyan, Kalyan Singh, Kanshiram, Lucknow, Manifesto, Marxist, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MLA, Mulayam, Mulayam Singh Yadav, Muslim, Natwar, OBC, Opinion, Party, pension, Perspectives, Polls, Religion/Politics, Reservation, Samajvadi, Samajwadi, SC, School, seats, Sonia, SP, ST, Surya Namaskar, Tiwari, UP, Uttar Pradesh, Vajpayee, Vande Mataram, Vandhe Mataram, Varanasi, VAT, voters, Votes, VP Singh, Women, Yadav, Yoga, Yogasana, Youth | Leave a Comment »

Periyar statue damaged in Srirangam

Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2006

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைப்பு

பெரியார் சிலை உடைப்பை தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்பட்டது
உடைக்கப்பட்ட சிலை

தமிழ்நாட்டில் திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் கோவிலுக்கு முன் நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலை இன்று வியாழக்கிழமை காலை இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுபவர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.

இன்று விடியற்காலை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகத்தினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட இடத்திற்கு அருகே ராமர் படத்தை பகிரங்கமாக அடித்து சேதப்படுத்தியதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1976ம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கோபுரத்திலிருந்து சுமார் 100 அடி தூரத்தில் சாலை ஓரம் பெரியார் சிலையை நிறுவ திராவிடர் கழகம் முடிவு செய்தது. இதற்கு அரசின் சம்பந்தப்பட்ட துறைகள் முறையாக அனுமதி அளித்திருந்த நிலையிலும், இந்த சிலை கடந்த 30 ஆண்டுகளாக அங்கே நிறுவப்படவில்லை.

சமீபத்தில் இந்த சிலையை அங்கே நிறுவும் முயற்சியை திராவிடர் கழகம் வேகப்படுத்தியதோடு கடந்த சில நாட்களுக்கு முன் பெரியார் சிலையை அதற்கான பீடத்தில் நிறுவியது. இன்னும் சில நாட்களில் சிலையின் திறப்பு விழா நடத்தப்படுவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன.

பெரியாரின் சிலையை ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்திற்கு அருகே நிறுவுவதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

கடவுள், மத நம்பிக்கை ஆகியவற்றுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக இந்து மதத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நாத்திகரான பெரியாரின் சிலையை, இந்துக்களின் தொன்மையான கோவில்களில் ஒன்றான ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன் 100 அடி தூரத்தில் நிறுவுவது, இந்த கோவிலுக்கு வழிபாட்டுக்காக வரும் ஆயிரக்கணக்கான இந்து மத பக்தர்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் செயல் என்று இந்த அமைப்புகள் கருத்து தெரிவித்து வந்தன.

சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலைக்கு பதில் புதிய வெண்கல சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டு டிசம்பர் 16 ஆம் தேதி திறக்கப்படும்

 

திராவிடர் கழகம்

பெரியாரின் சிலையை இந்த இடத்தில் நிறுவுவதற்கு தடை விதிக்கும்படி, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 பேர் சிலையை சுத்தியலால் உடைத்ததில் சிலையின் கழுத்து பகுதி துண்டானது. சிலை உடைக்கும் சத்தம் கேட்டதும் அருகில் இருந்த காவல்நிலையத்தில் இருந்து காவலர்கள் இதில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

அதேசமயம் சிலைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவலர்கள் நான்குபேர் சிலை உடைப்பை தடுக்காமல் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலைக்கு பதில் புதிய வெண்கல சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டு டிசம்பர் 16 ஆம் தேதி திறக்கப்படும் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைப்பு: புதிய வெண்கல சிலை நள்ளிரவில் நிறுவப்பட்டது

திருச்சி, டி.ச8-

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் முன்பு 100 அடி தூரத்தில் நிறுவப்பட்ட 8 அடி உயர பெரியார் சிலையை நேற்று இந்துமக்கள் கட்சியை சேர்ந்த 5 பேர் உடைத்தனர். இது தொடர்பாக கோவை மாவட்ட இந்து மக்கள் கட்சியை சேர்ந்த மாணிக்கம், சுஜித், ராஜேந்திரன் ஸ்ரீரங்கம் ராகவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரியார் சிலை உடைக் கப்பட்டதை கண்டித்து திராவிடர் கழகம் தி.மு.க., புரட்சிகர மாணவர் இளைஞர் அணி, மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சாலை மறியல், கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். துணை போலீஸ் கமிஷனர் ராஜசேகரன் தலைமையில் போலீஸ் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந் தனர். இன்றும் 2-வது நாள் பாதுகாப்பு நீடிக்கிறது.

இந்த நிலையில் உடைக்கப்பட்ட சிமெண்டு சிலைக்கு பதிலாக அதே இடத்தில் புதிய பெரியார் சிலையை அமைக்க திராவிட கழகம் முடிவு செய்தது. இதற்காக நேற்று சென்னையில் இருந்து புதிய வெண்கல பெரியார் சிலையை உடனே கொண்டு வந்தனர்.

பீடத்தில் பாதி உடைந்த நிலையில் இருந்த சிமெண்டு சிலையை உடைத்து எடுத்தனர். அதன் பிறகு அந்த இடத்தில் புதிய சிலையை வைத்தனர். இரவு 11 மணிக்கு தொடங்கிய பணி அதிகாலை 4 மணி வரை நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் சேகர், செயலாளர் செந்தமிழ் இனியன் மற்றும் திராவிட கழகத்தினர் பணிகளை பார்வையிட்டனர்.

புதிதாக வைக்கப்பட்டுள்ள வெண்கல பெரியார்சிலை 550 கிலோ எடை உள்ளது. பெரியார் உட்கார்ந்து படிப்பதுபோல் அமைக்கப்பட்டு உள்ளது.

4 அடி உயரம் உடையது. சென்னை மவுண்டு ரோட்டில் முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்த பெரியார் சிலையை போன்றே இந்த சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை வடிவமைக்க ரூ.3.24 லட்சம் செலவு செய்யப்பட்டு உள் ளது.

புதிய பெரியார் சிலை வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது. அமைச்சர் நேரு தலைமை தாங்குகிறார். அமைச்சர் செல்வராஜ் முன்னிலை வகிக்கிறார்.

திராவிட கழக தலைவர் வீரமணி திறந்து வைக்கிறார். புதிய சிலை சுற்றி தற்போது தகரத்தால் ஆன தடுப்பு போடப்பட்டு உள்ளது. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலை மையில் 4 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே இந்து மக்கள் கடசி போலீஸ் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்து உள்ளது. இதனால் ஸ்ரீரங்கத்தில் இன்றும் பதட்டம் நிலவுகிறது. சிலை திறப்பு விழா நாளன்றும் உண்ணாவிரதம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் பதட்டம் இன்னும் ஒயவில்லை.

போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சங்கர் ஜிவால், துணை கமிஷனர் ராஜசேகரன் மற்றும் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.

Posted in Bronze, DK, Dravidar Kazhagam, E Ve Raa, EV Ramasamy Periyar, EVR, Expenses, Hindu Makkal Katchi, K Veeramani, Karunanidhi, Periyaar, Police, Rationalism, Religion, Religion/Politics, Srirangam, Stone, Tamil Nadu, Tax, Temple, Thiruchirappalli, Thiruchy, Trichy | Leave a Comment »

‘I never hated individual Brahmins; what I admonish is Brahminism’ – M Karunanidhi

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

தனிப்பட்ட பிராமணரை வெறுத்ததில்லை: கருணாநிதி

சென்னை, நவ. 20: திமுக ஏற்க மறுப்பது பிராமணியக் கொள்கையைத்தான், தனிப்பட்ட பிராமணரை வெறுத்ததில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

நானோ, என் தலைமையில் இயங்கும் திமுகவோ தமிழுக்கு, தமிழர்க்கு, மக்கள் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற எந்த தனிப்பட்ட பிராமணரையும் வெறுத்ததுமில்லை வெறுப்பதுமில்லை. தமிழ் செம்மொழி என நூறு ஆண்டுக்கு முன்பே முதல் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞராம் சூரியநாராயண சாஸ்திரியாரின் பிறந்த வீட்டை நினைவுச் சின்னமாக மாற்றத் திட்டம் வகுத்திருப்பதும் அவரது உருவம் பதித்த அஞ்சல் தலை வெளியிட முயற்சி மேற்கொண்டிருப்பதும் அவரது நூல்களை நாட்டுடைமையாக்கி அறிவித்ததும் இந்த அரசுதான்.

அக்ரகாரத்து அதிசய மனிதர் என் அண்ணா புகழ்ந்த வ.ரா.வின் குடும்பத்துக்கு நிதி உதவி அளித்து சிறப்பித்ததும் இந்த அரசுதான். கல்கியின் நூல்களை அரசுடைமையாக்கி ரூ. 20 லட்சம் அரசு நிதி வழங்கியதும் திமுக ஆட்சியில்தான்.

சென்னை கிண்டியில் அமைத்துள்ள தியாகிகள் மணி மண்டபத்தில், அன்றொரு நாள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை முகப்பில் கொடி மரத்தில் ஏறி தேசிய கொடியை பறக்க விட்ட “ஆர்யா’ என்ற பிராமண இளைஞனின் சிலையை அமைத்திருப்பது என் தலைமையிலான திமுக ஆட்சியில்தான்.

பத்திரிகையாளர் சாவிக்கு பெரு நிதி உதவி அளித்து பெருமைப்படுத்தியதும் திமுக அரசுதான்.

பாரதிக்கு சிலை அமைத்தது திமுக அரசுதான்.

எனவே திமுக ஏற்க மறுப்பது பிராமணியம் என்ற கொள்கையைத்தான்.

திராவிட இயக்கம் என்னும் வீரிய வித்தில் விளைந்தவர்கள் என்பது உண்மையானால் பெரியாரின் கருத்துகளிலும் அண்ணாவின் எழுத்துகளிலும் இழையோடுகிற உண்மைகளை உணர்ந்து எழுச்சி நடை, லட்சிய நடை போடுகிறவர்களாகவே இருப்பார்கள்.

கயவர்கள் சூழ்ச்சிக்கு காலம் காலமாக ஆட்பட்டு சரித்திரத்தில் களங்கச் சேற்றைப் பூசிக் கொண்டுள்ள தமிழினம். இனியாவது அவர்களது ஏமாற்றுப் பேச்சில் புதைந்து விடாமல் விழிப்புற்று எழுக. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in Bharathy, Brahmaneeyam, Brahmin, Brahminism, Cho, Hate Speech, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, MK, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, Politics, Religion, Religion/Politics, Saavi, TN | Leave a Comment »

Ka Pazhanithurai – State of Dalits in Leadership roles

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006

நீங்கியது அவமானம்

க. பழனித்துரை

பத்தாண்டு காலமாக நாம் எங்கே சென்றாலும், நம்மைக் கேட்பது

“பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டாங்கச்சியேந்தல் பஞ்சாயத்துத் தேர்தல் நடக்குமா? இதை எப்படி மத்திய அரசு, தமிழக அரசு, நிர்வாக இயந்திரம், அரசியல் கட்சிகள், அறிவு ஜீவிகள், நீதிமன்றங்கள் சகித்துக்கொண்டு உள்ளன’ என்பதாகத்தான் இருந்தது.

இடஒதுக்கீட்டிற்கு இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலம் தமிழகம். ஆனால் இந்த இடஒதுக்கீட்டை இந்தப் பஞ்சாயத்துகளில் வாழும் ஜாதி இந்துக்கள் புரிந்துகொள்ளவும் இல்லை. புரிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை. புரிய வைக்க யாரும் முனையவுமில்லை. நமக்கு அண்டை மாநிலமான கேரளத்தில் சமூக நீதிக்காக நம் பெரியார் சென்று வைக்கத்தில் போராட்டம் நடத்தினார். அந்த மாநிலம் இன்று சமூக நீதிக்கும் மனித வளத்திற்கும் மனித உரிமைப் பாதுகாப்பிற்கும் உலகிற்கு வழிகாட்டும் மாநிலமாக உருவாகிவிட்டது. ஆனால் நம் தமிழ்நாட்டில் அறுபது ஆண்டு ஜனநாயக ஆட்சியில் நம் அரசியல் சாசன ஷரத்துகளைச் சமுதாயப் பழக்கவழக்கங்களுக்குக் காவு கொடுத்து பார்க்கத்தான் முடிந்ததே தவிர, அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க முடியவில்லை. இதுதான் இந்த நான்கு பஞ்சாயத்துகளிலும் அண்மைக்காலம் வரை நடைபெற்றது. அரசியல் கட்சிகளோ, குறிப்பாகத் தமிழகத்தை ஆளும் கட்சிகள், பிரதான எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையைச் சமூகநீதி என்ற அடிப்படையில் அணுகினால், தென்மாவட்டங்களில் ஜாதி இந்துக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்ற போலிக் காரணத்தைப் பின்னணியில் வைத்து வாளாவிருந்தன. “”இந்தப் பஞ்சாயத்துகள் எல்லாம் நாட்டில்தான் இருக்கின்றனவா அல்லது காட்டில் இருக்கின்றனவா? இந்தப் பஞ்சாயத்துகளில் நடப்பதற்கு என்ன பெயர்? இவை நாட்டிற்குள் ஒரு காடுபோல் அல்லது ஒரு தீவுபோல் இருந்து வந்துள்ளனவே” என்றுதான் அனைவரும் கேட்டவண்ணம் இருந்தனர். ஆனால் நம் அரசாங்கமோ, இது அரசு இயந்திரத்திற்கு அரசியல் ஆட்சிக் கட்டமைப்பிற்கு விடப்பட்ட ஒரு சவால் என்று கருதவில்லை.

இந்தப் பஞ்சாயத்துகளில் தேர்தல் வரும்போதெல்லாம், அந்தத் தலைவர் பதவியைத்தான் குறி வைத்து அரசு இயந்திரமும் சரி, அரசியல் கட்சிகளும் சரி செயல்பட்டனவே அன்றி ஒட்டுமொத்தப் பஞ்சாயத்தை – அதாவது தலைவர், வார்டு உறுப்பினர் அனைவரும் சேர்ந்த ஓர் அமைப்பாகத் தேர்தல் மூலம் உருவாக்கிட வேண்டும் என்று யாரும் முயலவில்லை. இதுதான் இவ்வளவு நாள் தோல்விக்கும் காரணமாக இருந்தது. தேர்தல் நடத்த முடியவில்லை அல்லது அப்படி நடந்தாலும் தலைவரால் நீடித்துப் பதவியில் இருக்க முடியவில்லை. இந்த நாடகங்கள் நான்கு பஞ்சாயத்துகளில்தான் நடந்தன என்றாலும் இதன் விளைவுகள் எவ்வளவு கொடியதாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்து தமிழகத்தில் உள்ள பெரிய அரசியல் கட்சிகள் வலுவாகச் செயல்படவில்லை. இடதுசாரிக் கட்சிகளும் ஒரு சில தலித் இயக்கங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சில பத்திரிகைகளும்தான் இந்தப் பிரச்சினையைத் தாங்கித் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தனவே தவிர, மற்ற அரசியல் கட்சிகள் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை. அரசு இயந்திரமும் எப்படியாவது தேர்தலை நடத்தி முடித்தாக வேண்டும் என்ற கடப்பாட்டுடன் செயல்படுவதற்குப் பதிலாக மேலதிகாரிக்கு தாங்கள் “கடமைகளைச் செய்து கொண்டுதான் உள்ளோம், இருந்தும் முடியவில்லை’ என அறிக்கை சமர்ப்பிப்பதில்தான் கவனமாக இருந்தது. மாறாக, “கண்டேன் சீதையை’ என்று ராமனிடம் அனுமன் கூறியதுபோல் “முடித்தேன் வேலையை’ எனச் சொல்லும் ஓர் அமைப்பாகச் செயல்படவில்லை என்பதை தற்பொழுது நடந்து முடிந்துள்ள தேர்தலுக்குப் பிறகு புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இந்த முறை பல்முனைத் தாக்குதலை, மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் பத்திரிகைகளும் ஒரு சில இடதுசாரி மற்றும் தலித் கட்சிகளும் கூட்டாக நடத்தி வெற்றி பெற்றுள்ளன. கொள்கை முடிவைச் சரியாக எடுத்து உறுதியாக மாநில அரசும் நின்றதால், தமிழக அரசு ஒரு செய்தியை அந்த ஜாதியத் தலைவர்களுக்குத் தெளிவாக அறிவித்துவிட்டது. “நாம் என்னதான் செய்தாலும் மாநில அரசு அசைந்து கொடுக்காது. அது மட்டுமல்ல, எத்தனை முறை நாம் இப்படித் தடுத்தாலும் அதனால் நம் பஞ்சாயத்து பொதுத் தொகுதியாக மாறப்போவது இல்லை’ என்ற செய்தியினைத் தெளிவாகத் தந்துவிட்டது. அடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழுச்சுதந்திரம் தந்து செயல்பட வைத்தது. மாவட்ட நிர்வாகம் இந்தத் தேர்தலைச் சந்திக்கத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு, களத்தில் உள்ள அமைப்புகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது. அடுத்த நிலையில் இந்த முறை களத்திற்கும் – அதாவது பஞ்சாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை, நிமிடத்திற்கு நிமிடம் கவனித்து, முடிவுகளை அவ்வப்போது எடுத்து அவற்றை நிறைவேற்றும்போது ஏற்படும் விளைவுகளை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்குக் கிடைக்கும் வகையில் ஓர் உயிரோட்ட செய்தித் தொடர்பினை ஏற்படுத்தி அனைவரும் முழு மூச்சுடன் செயல்பட்டுள்ளனர். ஏனென்றால் களத்தில் மணித்துளியில் கருத்துப் பரிமாறும் அளவிற்கு – களத்தில் இறங்கி வேலை செய்த அமைப்புகள், அதிகாரிகள், அனைவருடனும் மாவட்ட நிர்வாகம் தொடர்பு வைத்துக்கொண்டு கணநேரத்தில் முடிவுகளை எடுத்துக் கொண்டேயிருந்தது. இந்தப் பஞ்சாயத்துகளில் ஜாதி இந்துக்களின் தலைவர்கள் வகுக்கும் அனைத்திற்கும் பதில் திட்டங்களை வைத்து ஒட்டுமொத்தப் பஞ்சாயத்திற்கும் தேர்தலை நடத்த முனைந்ததால் மிகப்பெரிய வெற்றியினை மாவட்ட நிர்வாகம் பெற்றுவிட்டது. இதில் மிக முக்கியமாக மாவட்ட ஆட்சித்தலைவரின் பார்வையும் பிரச்சினைகளின் ஆழ அகலங்களைப் பற்றிய புரிதலும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவியாக இருந்துள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்தக் கடுமையான நடவடிக்கையையும் எடுத்து மாநில அரசிற்கு எந்த விதத்திலும் தர்மசங்கடத்தை உருவாக்கவில்லை. ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தமக்கிருந்த அதிகாரங்களை வைத்தே சாதுரியமாக, தெளிவான திட்டத்தை உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாகப் பாராட்டுக்குரியவர்கள். இந்தத் தேர்தலுக்குப் பெரிதும் உதவிய காவல்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அனைவரும் பாராட்டுக்குரியோராவர்.

மாவட்ட நிர்வாகத்திற்கு ஒரு சரியான தலைமை கிடைக்கும்போது, அது தன்னகத்தே உள்ள சக்தியை எப்படிப் பயன்படுத்தி வெற்றி பெற்றுத் தருகிறது என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த சான்றாகும். மாநில அரசு, அரசுத்துறைச் செயலர், மாவட்ட நிர்வாகம், அடிநிலை அரசு அலுவலர்கள், மக்களுடன் பணியாற்றும் அரசியல் அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்த நான்கு பஞ்சாயத்துகளிலும் தேர்தலை நடத்தித் தலைவர்களை மட்டும் தேர்ந்தெடுக்காமல் பஞ்சாயத்து அமைப்பையே உருவாக்கி விட்டனர். இதுவரை பஞ்சாயத்துத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத்தான் நம் அரசு இயந்திரமும் தேர்தல் ஆணையமும் பிரயத்தனப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறை ஒட்டுமொத்தப் பஞ்சாயத்துக்கான அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தலை முடித்துவிட்டது மாவட்ட நிர்வாகம். இனிமேல் இந்தப் பஞ்சாயத்துகளில் தலைவர் ராஜிநாமா செய்தாலும் உதவித்தலைவரை வைத்துப் பஞ்சாயத்தை நடத்தி விடலாம். இந்தப் பஞ்சாயத்துகளைப் பின்பற்றி செல்லம்பட்டி ஒன்றியத்தில் இன்னொரு கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலை முறியடிக்க எடுத்த முடிவையும் மாவட்ட நிர்வாகமும் அமைப்புகளும் தகர்த்திருக்கின்றன. இவர்களின் செயல்களால் நம் அவமானம் நீங்கியது. சென்னையில் நடந்த மாநகராட்சித் தேர்தலில் நமக்கு ஓர் அவமானம் நிகழ்ந்தது. ஆனால் இந்த நான்கு பஞ்சாயத்துகளிலும் தேர்தல் நடந்து பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட்டதன் மூலம் நமக்கு ஏற்பட்ட இந்த அவமானம் நீங்கியது. இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நாம் உண்மையிலேயே நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள். ஏனென்றால் அவர்கள்தான் நமக்கு ஏற்பட்ட அவமானத்தை நீக்கியவர்கள்.

Posted in civic elections, Leader, Local Polls, Religion/Politics, Tamil Nadu | Leave a Comment »

Tamil Nadu Murpokku Ezhuthalargal Sangam expresses regret for Ilaiyaraja’s decison

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006

“பெரியார்’ திரைப்பட விவகாரம்: இளையராஜாவுக்கு பகிரங்க வருத்தம் தெரிவிக்க த.மு.எ.ச. முடிவு

திருநெல்வேலி, நவ. 15: “பெரியார்’ திரைப்படத்திற்கு இசை அமைக்க மறுத்த இளையராஜாவுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பது என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக, அதன் பொதுச் செயலர் ச. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இசை அமைப்பளர் இளையராஜா, “பெரியார்’ திரைப்படத்துக்கு இசை அமைக்க மறுத்து கோபமாக பேசிய வார்த்தைகள் முற்போக்கு எண்ணம் கொண்ட அத்தனை தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் பெருத்த வேதனையை உண்டாக்கியுள்ளது.

அவர் ஆத்திகராக இருப்பதும், எந்த ஒரு படத்துக்கும் இசை அமைக்க மறுப்பதும் அவரது ஜனநாயக உரிமை. ஆனால், ஆத்திகராக இருப்பதால், “பெரியார்’ படத்துக்கு இசை அமைக்க மாட்டேன் என கூறியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

மேலும், அவரது கருத்துக்கு ஆதரவாக மதவாத சக்திகள் குரல் கொடுப்பது தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகுந்த கவலை அளிக்கிறது.

எனவே, நல்லெண்ணத்தின் அடிப்படையில் எங்களது வருத்தத்தை பகிரங்கமாக இளையராஜாவுக்கு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். அதை அவர் புரிந்து கொண்டு மக்களின் பக்கம் நிற்க வேண்டும்.

நடிகை ராதிகாவுக்கு கண்டனம்: தமிழக மக்களின் மனங்களில் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகையாக இடம் பெற்றிருக்கும் திரைப்படக் கலைஞர் ராதிகா, கோக கோலா குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடித்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன.

எந்த நிறுவனத்தின் விளம்பரத்திலும் நடிப்பது அவரது தனிப்பட்ட உரிமை. கோக கோலாவுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையிலும், அதைக் குடிக்கச் சொல்லி ஒரு விளம்பரத்தில் நடிப்பது கூட அவரது சுதந்திரம்தான். ஆனால், அறிவியல் பூர்வமாக அந்த குளிர்பானத்தை குடிப்பது ஆபத்தில்லை என்று சொல்ல ஒரு விஞ்ஞானிக்குத்தான் உரிமை உண்டு. ராதிகா ஒரு விஞ்ஞானியைப் போல அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகப் பேசி இருப்பது கண்டனத்திற்குரியது.

எனவே, ராதிகா அவ்வாறு நடித்திருப்பதைக் கண்டித்தும், அந்த விளம்பரத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், அவர் வீட்டுக்கு தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான அஞ்சல் அட்டைகளை அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

இலங்கைத் தமிழர் துயரம்: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது குண்டு மழை பொழியும் அந்நாட்டு ராணுவத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்டக் குழுவினர், அந்தந்த மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்குச் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படம்: கடந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் சிறந்த படமாக இயக்குநர் சேரன் இயக்கிய “தவமாய்த் தவமிருந்து’ செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பரில் நடைபெறும் விழாவில், அதற்கான பரிசு வழங்கப்படும் என்றார் தமிழ்ச்செல்வன்.

Posted in Advertisement, BJP, Coke, cola, Eezham, EVR, Ila Ganesan, Ilaiyaraja, Isainjaani, music, Periyar, Politics, Radhika, Religion, Religion/Politics, Sa Thamizhselvan, Tamil, Tamil Cinema, Tamil Movies, Tamil Nadu Murpokku Ezhuthalargal Sangam | Leave a Comment »