Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரனின் இலாகா பறிப்பு, கருணாநிதி குடும்பத்திலுள்ள அதிகார மையங்களி டையே நடக்கும் உரசலின் வெளிப் பாட்டை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. தென் மாவட்டங் களைப் பொறுத்தமட்டில், ஆட்சி மட்டத் திலும் கட்சி மட்டத்திலும் அழகிரியின் சொல்லே இறுதியானது. மாறன் சகோ தரர்களுடன் நடந்த மோதலில் தான் நினைத்ததை நடத்திக் காட்டிய அழகிரி, கே.கே.எஸ்.எஸ்.ஆரின் இலாகாவைப் பறித்ததன் மூலம் ஸ்டாலினுடன் மீண்டும் உரசத் துவங்கிவிட்டார் என்கிறார்கள்.
தென் மாவட்டங்களில் ஸ்டாலினின் உறுதியான ஆதரவாளர்களில் ஒருவராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவருக் கும் அழகிரிக்கும் ஆரம்பம் முதலே சுமுக உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. விருதுநகர் மாவட்டச் செயலாளராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருவதில் அழகிரிக் குச் சற்றும் உடன்பாடில்லையாம். “அழ கிரி அண்ணன் அவரை ஒரு முன்னாள் அ.தி.மு.க.காரராகவே பார்த்தார்” என் கிறார்கள். தம்முடைய சிஷ்யர் தங்கம் தென்னரசுக்குச் செயலாளர் பொறுப்பை வாங்கித் தந்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று பார்த்தாராம் அழகிரி. ஆனால், தென் மாவட்டங்களில் தமக்கு நம்பிக் கையான ஆட்கள் தேவை என்ற அடிப்படையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர், கருப்பசாமி பாண்டியன், (மறைந்த) தா.கிருஷ்ணன் போன்றவர்களுக்குத் தமது ஆதரவைக் கொடுத்து ஊக்குவித்தாராம் ஸ்டாலின். அந்த
வகையில் மாவட்டச் செயலாளரானவர்தான் கே.கே.எஸ். எஸ்.ஆர்.
இந்நிலையில் 2006ல் கலைஞர் மீண் டும் ஆட்சிக்கு வந்தவுடன் கே.கே.எஸ். எஸ்.ஆர். ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் அமைச்சராகி விட்டார். ஆனால், செல் வாக்கு மிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அவருக்குக் கொடுக்கப்பட்டதை கடுமை யாக எதிர்த்தாராம் அழகிரி. என்றாலும், ஸ்டாலின் பக்கபலமாக இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மிகச் சுறு சுறுப்பாகவே செயல்பட்டார் என்பது கோட்டை அதிகாரிகளின் கமெண்ட். “அவர் ரொம்ப
பிராக்டிக்கலானவர், கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்பார்” என்கிறார்கள். இருந்தும் சென்னையை ஒட்டியுள்ள ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம், மருத்துவக் கல்லூரி துவங்கும் விவகாரத்தில் அவர் சர்ச்சையில் சிக்கிவிட்டார் என்ற பேச்சும் இருக் கிறது. இதுதவிர, சமீபத்தில் கிட்னி மோசடி விவ காரத்தில் இரண்டு மருத்துவ
மனைகளின் அங்கீ காரம் ரத்து தொடர்பான பிரச்னை எழுந்தது.
இதில் ஒரு மருத்துவமனை முக்கிய தி.மு.க. பிரமுகா¢ன் நெருங்கிய உறவினர் நடத்துவது. இதுவும் அமைச்சர் பதவி பிடுங்கப்பட காரணம் என்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சியில் அ.தி.மு.க. வெல்வதற்கு மறை முகமாக உதவியதால்தான் அழகிரி சரியான சமயமாகப் பார்த்து வேட்டு வைத்துவிட்டார் என்று சொல்வோரும் உண்டு.
ஸ்டாலினால் இந்த முறை கே.கே.எஸ்.எஸ். ஆரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரைச் சுத்த மாக அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என்பதுதான் மதுரையிலிருந்து வந்த விருப்பமாம். ஆனால், ஜெயலலிதா போல் இல்லாமல் கலை ஞர் தமது அமைச்சர்களைக் கழற்றிவிட விரும்பாத வர். எனவேதான் பிற்பட்டோர் நலத்துறைக்கு அவரை மாற்றி விட்டாராம். இருந்தும் அழகிரியின் கோபம் தணியாததால் அவரைச் சில அமைச்சர்கள் சமாதானம் செய்தார்களாம். மக்கள் நல்வாழ்வுத் துறை இப்போது ஸ்டாலினின் மற்றோர் ஆதர வாளரும் வட மாவட்டத்தைச் சேர்ந்தவருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கருப்பசாமி பாண்டியனை அமைச்சராக்க ஸ்டாலின் செய்த முயற்சியும் எடுபடவில்லை என்கிறார்கள்.
நெல்லையில் இளைஞர் அணி மாநாடு நடைபெறப்போகும் நிலையில், ஒரு நல்ல அமைப்பாளர் உற்சாகம் இழக்கும் நிலை ஏற் பட்டுவிட்டதே என்று அப் செட்டில் இருக்கிறாராம் ஸ்டாலின்.
Posted in ADMK, AIADMK, Alagiri, Alakiri, Assassin, Assassination, Assembly, Assembly Election, Assembly elections, assembly polls, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, backward, BC, Chicken, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chicken pox, Chickenkunya, Chickenpox, chickun gunya, CM, Districts, DMK, dynasty, Fights, Health, hierarchy, JJ, K K S S R Ramachandran, Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kalimuthu, Kalinjar, Kalki, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kill, Kingdom, Kings, KKSSR, M R K Pannerselvam, Minister, Ministers, minority, MK, Monarchy, MRK, Panneerselvam, Pannerselvam, Pannirselvam, Party, Politics, Ponmudi, portfolios, Power, Ramachandran, Registration, reshuffle, Stalin, Sureshrajan, TN, Tourism | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007
திருமண சட்டத்தை திருத்த நாடாளுமன்றக் குழு பரிந்துரை
புதுதில்லி, மார்ச் 20: வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியப் பெண்களை திருமணம் செய்துகொள்வதில் முறைகேடுகள் அதிகரித்துள்ள நிலையில், திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
வெளியுறவு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தது.
இதில் கூறியிருப்பதாவது:
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்கள் பல்வேறு சுரண்டல்களுக்கு ஆளாகி வரும் நிலையில், அதை தடுத்து நிறுத்துவதற்கு குடியேற்ற சட்டத்தில் திருத்தங்கள் செய்வது உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
குவைத், ஓமன், கத்தார், மலேசியா ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சுரண்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகிவரும் நிலையில், இந்த நாடுகளுடன் இதுதொடர்பாக உடன்பாடு செய்துகொள்வதற்கான நடைமுறைகளை துரிதப்படுத்தவேண்டும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியப் பெண்களை திருமணம் செய்துகொள்வதில் முறைகேடுகளும், பல திருமணங்கள் தோல்வியடைவதும் அதிகரித்துள்ளன. இதை தடுப்பதற்கு சக்திமிக்க நடவடிக்கைகள் தேவை.
இதற்கு, திருமணங்கள் பதிவுசெய்யப்படுவதை கட்டாயமாக்குவது, இந்திய திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் திருணம் பதிவு செய்யப்படும் நீதிமன்ற எல்லையிலேயே விவாகரத்து வழக்குகளும் விசாரிக்கப்படும் வகையில் திருமண சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளவேண்டும்.
Posted in Abroad, abuse, Alimony, Divorce, Foreign, Foreigner, Kuwait, Malaysia, Marriage, Non Resident, NRI, Oman, Overseas, Quatar, Registration, Relationship, Sex, Trade, Wedding, workers | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 8, 2007
தொலைத் தொடர்புத்துறை ஆணையால் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை இழப்பு!
மும்பை, மார்ச் 9: தங்கள் துறையிடம் நேரடியாகப் பதிவு செய்து கொள்ளாத, வெளிப்பணி ஒப்படைப்பு நிறுவனங்களின் (பி.பி.ஓ.) இன்டெர்நெட் தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்துவிடுமாறு தொலைத் தொடர்புத்துறை பிறப்பித்த உத்தரவு காரணமாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்படும் ஆபத்து நேரிட்டிருக்கிறது.
இந் நிலை நீடித்தால், இந்திய நிறுவனங்களிடம் “”அயல்பணி ஒப்படைப்பு” (அவுட்-சோர்சிங்) சேவையைப் பயன்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் வேறு நாடுகளை நாடிச் செல்லக்கூடிய ஆபத்தும் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு சிறிய பிரச்சினைக்காக, மிகப்பெரிய தண்டனை நடவடிக்கையை துறை அதிகாரிகள் மின்னல் வேகத்தில் எடுத்துள்ளனர். இதன் விளைவுகள் மிகப் பெரிதாக இருக்கும் என்று தோன்றுகிறது.
நடவடிக்கை ஏன்? கோல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பி.பி.ஓ. நிறுவனம், அமெரிக்காவில் வசிக்கும் போதைப்பொருள் உபயோகிப்பாளர்களுக்காக போலியான மருந்துச் சீட்டுகளை ஆன்-லைனில் தயாரித்து அனுப்பியதாம். இது தொலைத்தொடர்புத்துறையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. உடனே அந்த நிறுவனத்தின் தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
அதிகாரிகள் இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், இதே போல தங்களிடம் முறையாகப் பதிவு செய்யாமல் இன்டெர்நெட் தொலைபேசி இணைப்புகள் மூலம் அயல்பணி சேவை செய்யும் அனைத்து நிறுவனங்களின் இணைப்புகளையும் துண்டித்துவிடுமாறு உத்தரவிட்டது. இத்தகைய நிறுவனங்கள், இன்டெர்நெட் சேவை அளிக்கும் சிறு நிறுவனங்கள் மூலம் இந்த இணைப்புகளைப் பெற்று தொழில் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய பி.பி.ஓ. நிறுவனங்கள் இப்படி, தொலைத்தொடர்புத் துறையிடம் பதிவு செய்யாமல் பணிபுரிந்து வருகின்றன. ஒவ்வொன்றிலும் 50 முதல் 100 பேர் வரை நேரடியாக பணி புரிகின்றனர். இவர்களைத் தவிர இதில் மறைமுக வேலைவாய்ப்பு பெற்றோர் எண்ணிக்கை பல மடங்கு. இனி இவர்கள் அனைவரும் வேலை இழப்பர்.
இன்டெர்நெட் தொலைபேசி இணைப்பு தொடர்பாக அரசு இன்னமும் தெளிவான கொள்கையை வகுக்கவில்லை என்று பி.பி.ஓ. வட்டாரங்கள் கூறுகின்றன.
அதில் இறுதி நிலை என்ன என்று தெரியும்வரை, துறையிடம் நேரடியாகப் பதிவு செய்வதைத் தவிர்த்து, இச்சேவையை அளிப்பவர்களிடம் பெற்று, அயல்பணி வேலையைச் செய்வதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவு பி.பி.ஓ. நிறுவனங்களுடன் கால்-சென்டர்களையும் பாதிக்கும். கால் சென்டர்கள் பாதிக்கப்பட்டால் அரசுக்கு ஆண்டுதோறும் 600 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை வருவது அறவே நின்றுவிடும்.
பதிவு செய்யாமல் இருப்பதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், படிப்படியாக அதைச்செய்ய துறை அவகாசம் அளித்திருக்க வேண்டும், இப்படி இணைப்பைத் துண்டிப்பது நல்லதல்ல என்று வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
Posted in Biz, BPO, Business, Business Process Outsourcing, Calcutta, Comapny, Customer, Downturn, employees, Employer, Employment, Fire, Foreign, Government, Guidelines, Internet, IP, job, Jobless, Law, Layoff, Loss, Order, Outsourcing, Permission, Phones, Policy, Registration, Restriction, Sanjay Kedia, service, Telephony | Leave a Comment »