Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Reception’ Category

Chiranjeevi’s second daughter weds secretly

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 18, 2007

நடிகர் சிரஞ்சீவியின் மகள் காதல் திருமணம்: குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார்

தெலுங்கு திரைப்பட உலகின் “சூப்பர் ஸ்டார்” சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா (19), வீட்டாருக்குத் தெரியாமல் தனது காதலர் சிரிஷ் பரத்வாஜை (22) புதன்கிழமை திருமணம் செய்துகொண்டார்.

செகந்திராபாதில் போவென்பள்ளியில் உள்ள ஆர்ய சமாஜ் கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் ஸ்ரீஜாவின் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்குப் பிறகு நிருபர்களிடம் ஸ்ரீஜா கூறியதாவது:

சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் பயின்றுவந்தபோது கடந்த நான்கு ஆண்டுகளாக பரத்வாஜுடன் எனக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் பெற்றோரும், குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் எங்கள் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக என்னை வீட்டில் அடைத்து வைத்தனர்.

எங்கள் காதல் சமாசாரம் குடும்பத்தினருக்கு தெரிந்தவுடன், வலுக்கட்டாயம் செய்து எனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். என்னை வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்துவைத்தனர்.

இந்நிலையில் என் நண்பர்கள் உதவியுடன் புதன்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து தப்பிவந்து, பரத்வாஜை கோயிலில் ரகசிய திருமணம் செய்துகொண்டேன்.

தற்போது எனது தந்தை குடும்பத்தார் மூலம் எங்களது உயிருக்கு மிரட்டலும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. போலீஸôரும் பத்திரிகை நண்பர்களும் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்.

நாங்கள் இருவரும் சட்டப்படி திருமண வயதை எட்டியுள்ளோம். அதனால் நாங்கள் திருமணம் செய்துகொள்வதை அனுமதிக்க வேண்டும்.

என்னுடைய பெற்றோர் என் கணவரை என்னிடமிருந்து பிரிக்கக்கூடாது. அதற்கு பாதுகாப்பு அளிக்கவேண்டியது போலீஸின் கடமை என்றார்.

Posted in Affair, Andhra, AP, Baradhwaj, Baradwaj, Barathvaj, Begumpet, Bharadhwaj, Bharadvaj, Bharadwaj, Bharathvaaj, Bharathvaj, Brahmin, CA, Chiranjeevi, Chiru, Cinema, CLP, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), consent, daughter, Engineering, Films, Gossip, hyd, Hyderabad, Janardhan Reddy, Love, Marriage, Movies, P. Janardhan Reddy, parents, Reception, Reddy, Rumor, Rumour, secret, Shreeja, Shrija, Shrijha, Sireesh, Sirish, Sreeja, Sreejha, Srija, Srijha, Telugu, Tollywood, Wedding | Leave a Comment »

Ilaiyaraja’s son & Music Director Yuvan Shankar Raja files for Divorce

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 7, 2007

Yuvan shankar raja marriage Wedding snapஇளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜா விவாகரத்து வழக்கு : விருப்பத்துடன் பிரிகிறார்கள்

சென்னை, ஆக. 7-

இசைஞானி இளையராஜா வின் இளைய மகன் யுவன்சங்கர் ராஜா. இவரும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.

யுவன்சங்கர் ராஜா 2002-ம் ஆண்டு லண்டனில் `பிரண்ட்’ என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த லண்டனை சேர்ந்த சந்திரன் சுஜாயா என்ற பெண்ணுடன் யுவன்சங்கர் ராஜாவுக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க

தொடங்கினார்கள்.வீட்டிற்கு தெரியாமலே இருவரும் 3.9.03-ம் ஆண்டு லண்டனில் பதிவுத்திருமணம் செய்து கொண்டார்கள். இந்த விஷயம் இருவரது வீட்டுக்கும் தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இரு வீட்டாரும் பேசி முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி 21.3.05-ம் ஆண்டு இந்து வைதீக முறைப்படி சென்னையில் திருமணம் நடந்தது.

யுவன்சங்கர் ராஜா-சந்திரன் சுஜாயா தம்பதிகளுக்கு இது வரை குழந்தை இல்லை.

கடல் கடந்து தொடங்கிய இவர்கள் காதல் இரண்டு ஆண்டுகளிலேயே கசந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர்.

பிரபல இசை அமைப்பாள ராகதிகழும் யுவன்சங்கர் ராஜா வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய சினிமா பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் சமரச முயற்சி வெற்றி பெறவில்லை. இருவரும் பிரிந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர்.

இருவரும் பிரிய விரும்புவ தாக பரஸ்பர புரிந்துணர்வுபடி விவாகரத்து பெற முடிவு செய்து இன்று ஐகோர்ட்டில் உள்ள குடும்ப நல கோர்ட்டுக்கு வந்தார்கள். விவாகரத்து கோரி இருவரும் ஒன்றாக சேர்ந்து மனு தாக்கல் செய்தனர்.

கோர்ட்டுக்கு வந்த யுவன் சங்கர் ராஜாவும் அவரது மனைவி சந்திரன் சுஜாயாவும் கோர்ட்டுக்குள் ஒன்றாகவே அமர்ந்து இருந்தனர். அப்போது எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் சிரித்து பேசியபடி இருந்தார்கள்.

Posted in Affair, Alimony, Arranged, Audio, Celebrity, Cinema, Divorce, Faces, Famous, Films, Ilaiaraja, Ilaiyaraaja, Ilaiyaraja, IR, Isai, Legends, London, Love, Marriage, MD, Movies, music, Music Director, Notable, people, Raja, Reception, ShankarRaja, UK, Wedding, YSR, Yuvan, Yuvan Shankar Raja | Leave a Comment »

Meera Jasmine gets married in Thirupathy?

Posted by Snapjudge மேல் ஜூலை 25, 2007

நடிகை மீரா ஜாஸ்மின் காதல் திருமணம்- திருப்பதியில் ரகசியமாக நடந்தது

சென்னை, ஜுலை.25-

கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்தவர், மீரா ஜாஸ்மின். இவர், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தந்தை பெயர், ஜோசப். தாயார், ஜோசப் எலியம்மா. மீரா ஜாஸ்மினுக்கு ஜோ என்ற அண்ணனும், ஜெனி, ஜெவி என்ற 2 அக்காளும், ஜார்ஜ் என்ற தம்பியும் இருக்கிறார்கள்.

`சூத்திரதாரு’ என்ற மலையாள படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தை பிரபல மலையாள டைரக்டர் லோகிததாஸ் இயக்கினார். பல மலையாள படங்களில் நடித்த பின், `ரன்’ என்ற படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து, `புதிய கீதை’ படத்தில் விஜய் ஜோடியாகவும், `ஆஞ்சநேயா’ படத்தில் அஜீத்துடனும், `சண்டக்கோழி’ படத்தில் விஷாலுடனும் நடித்தார். சமீபத்தில் திரைக்கு வந்த `திருமகன்’ படத்தில், எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்து இருந்தார். இப்போது, `நேபாளி’ என்ற படத்தில் பரத் ஜோடியாக நடித்து வருகிறார்.

`நேபாளி’ படப்பிடிப்பு கடந்த மாதம் ஊட்டியில் நடந்தபோது, மீரா ஜாஸ்மின் அவசரமாக திருப்பதி போக வேண்டும் என்று டைரக்டர் வி.இசட்.துரையிடம் கேட்டார். “நீங்கள் இல்லையென்றால், படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டியிருக்கும். இதனால் பல லட்சங்கள் இழப்பு ஏற்படும்” என்று டைரக்டர் துரை கூறினார். “எப்படியாவது சமாளித்துக்கொள்ளுங்கள். இது என் வாழ்க்கை பிரச்சினை. நாளை காலை நான் திருப்பதியில் இருந்தாக வேண்டும்” என்று மீரா ஜாஸ்மின் கெஞ்சிக்கேட்டு, அவசரம் அவசரமாக திருப்பதி விரைந்தார்.

அவருடைய உதவியாளர்கள் நான்கு பேரையும் உடன் அழைத்து சென்றார். திருப்பதியில், கடந்த மாதம் 21-ந் தேதி மீரா ஜாஸ்மின் திடீர் திருமணம் செய்து கொண்டார். இதுபற்றிய செய்தி, `தினத்தந்தி’யில்தான் முதன் முதலாக வெளியானது. இந்த செய்தியை மீரா ஜாஸ்மின் மறுக்கவில்லை.

மீரா ஜாஸ்மினின் கணவர் பெயர், `மான்டலின்’ ராஜேஷ். இவருக்கும், மீரா ஜாஸ்மினுக்கும் கடந்த ஒரு வருடமாக காதல் இருந்து வந்தது. இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள். மீரா ஜாஸ்மின் எந்த ஊரில் படப்பிடிப்பில் இருந்தாலும், அந்த ஊருக்கு ராஜேஷ் சென்று விடுவார்.

உயிருக்கு உயிராக காதலித்து வந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். இந்த திருமணத்துக்கு, மீரா ஜாஸ்மின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

எதிர்ப்புகளை மீறி, மீரா ஜாஸ்மின் தனது காதலர் ராஜேசை கணவர் ஆக்கிக்கொண்டார். திருமணத்துக்குப்பின், இருவரும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள்.

இப்போது மீரா ஜாஸ்மின் ஒரு மலையாள படப்பிடிப்புக்காக கொல்கத்தா போய் இருக்கிறார். அங்கு ராஜேசும் சென்று இருக்கிறார். இருவரும் ஜோடியாக ஒரே ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள்.

இதற்கு முன்பு ரகசியமாக காதல் திருமணம் செய்துகொண்ட எல்லா நடிகைகளும் தங்கள் திருமணத்தை முதலில் மறைத்ததுபோல், மீரா ஜாஸ்மினும் தனது திருமணத்தை மறைத்து, ரகசியமாக வைத்து இருக்கிறார். விரைவில் அவர் தனது திருமணத்தை வெளியுலகுக்கு அறிவிப்பார் என்று தெரிகிறது.

——————————————————————————————–

எனக்கு திருமணம் நடக்கவே இல்லை – நடிகை மீரா ஜாஸ்மின் கொதிப்பு

இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷுடன் எனக்கு திருமணம் நடக்கவில்லை என்று நடிகை மீரா ஜாஸ்மின் ஆவேசமாக கூறினார்.

பிரபல நடிகை மீரா ஜாஸ்மினுக்கும், ஆந்திராவை சேர்ந்த மாண்டலின் கலைஞர் ராஜேஷுக்கும் திருப்பதியில் திருமணம் முடிந்து இருவரும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக செய்தி வெளியானது. ஆனால் இதனை மீரா ஜாஸ்மின் உறுதியாக மறுத்தார். ‘கொல்கத்தா நியூஸ்‘ என்ற மலையாளப்பட படப்பிடிப்புக்காக கொல்கத்தா வந்துள்ள மீரா ஜாஸ்மினை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது போது அவர் கூறியதாவது:

சாதாரண குடும்பத்திலிருந்து நடிக்க வந்த நான் கடுமையான உழைப்பாலும், திறமையாலும் தென்னிந்திய சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறேன். நான் எவ்வளவு வேகமாக வளர்ந்தேனோ அந்த அளவுக்கு பிரச்சினைகளையும் சந்தித்தேன்.

நான் ஒருவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன் குடும்பம் நடத்துவதாகவும் செய்திகள் வெளிவருவது புதிதல்ல. அதைபோலத்தான் இப்போதும் செய்தி வெளிவந்திருக்கிறது. என் மீது மீடியாக்களுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. என்னை நிம்மதியாகவே இருக்கவிட மாட்டேன் என்கிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘நேபாளிÕ படப்பிடிப்பில் இருந்து திருப்பதிக்கு போனது உண்மை. சாமி கும்பிட கோவிலுக்கு போவது தப்பா? உடனே அங்கு திருணம் நடந்தது என்பதா? திருப்பதியில் நேர்த்திகடன் நிறைவேற்ற வேண்டியது இருந்தது. அதற்காகத்தான் சென்றேன். மாண்டலின் ராஜேஷ் ஒரு நண்பர் மூலம் எனக்கு அறிமுகமானார் அவரது விழா ஒன்றுக்கு சென்றேன். உடனேயே அவருக்கும் எனக்கும் திருமணம் செய்து பார்த்து விட்டார்கள்.

நான் திருமணம் செய்யும்போது எல்லோருக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். ரகசிய திருமணம் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இனிமேலாவது என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள். இவ்வாறு மீரா ஜாஸ்மின் கூறினார்.

திருமணம் நடந்ததா என்பது குறித்து இசை கலைஞர் மாண்டலின் ராஜேஷ் தரப்பில் விசாரித்தபோது அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் கூறியதாவது:
மாண்டலின் ராஜேஷின் நண்பர் ஒருவர் மீராவுக்கும் நண்பர். அவரது ஏற்பாட்டின்படி கடந்த 20-ந் தேதி சென்னையில் நடந்த ராஜேஷின் இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் மீரா கலந்து கொண்டார். மற்றபடி ராஜேஷ§க்கும், மீராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இருவருக்கும் திருமணம் நடந்து விட்டது என்பதெல்லாம் வடிகட்டிய பொய் என்றார்.
“மீரா ஜாஸ்மின் குறைந்த அளவே படங்களில் நடித்திருந்தாலும் அவரை பற்றிய பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. முதலில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் லோகிததாஸுடன் நெருக்கமாக இருந்தார். அவருடன் குடும்பம் நடத்துவதாக செய்தி வெளியானது. சொத்து பிரச்சினை காரணமாக உறவினர்களை பிரிந்து கேரள முதல்வர் கலந்து கொண்ட விழாவில் கண்ணீர் விட்டு அழுதார் மீரா.

அதன் பிறகு நடிகர் பிருத்விராஜுடன் நிச்சயதார்த்தம் நடந்தாக கூறப்பட்டது. எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்தபோது அவருடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் வேளாங்கண்ணி கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக பேசப்பட்டது. இப்போது அதேபோல மாண்டலின் ராஜேஷுடன் திருமணம் செய்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது” என்கிறார் மீராவுக்கு நெருக்கமான இயக்குனர் ஒருவர்.

தமிழ்முரசு

————————————————————————————————–

Kumudam

Hot News: Meera Jasmine’s secret Marriage & Love Affair

01.08.07  சினிமா

‘மீராஜாஸ்மீன் கல்யாணம் பண்ணிக்கிட்டாரே?’ இதுதான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட்டாக கேட்கப்படும் கேள்வி.

அவருடன் கிசுகிசுக்கப்படும் நபர் சினிமாக்காரர் அல்ல, கர்நாடக இசைத்துறையைச் சேர்ந்தவர். ‘மாண்டலின்’ ஸ்ரீனிவாஸின் தம்பி ‘மாண்டலின்’ ராஜேஷ்தான் இந்த கிசுகிசுக்களின் ஹீரோ.

இந்த பரபரப்பிற் கிடையே ஒரு சம்பவம். பொதுவாய் மீரா ஜாஸ்மின் விழாக்களுக்கு அதிகம் செல்வதில்லை. சென்றவாரம் மங்களகரமாக ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். சினிமா நிகழ்ச்சி அல்ல, கர்நாடக சங்கீத நிகழ்ச்சி. ‘மாண்டலின்’ ராஜேஷின் கச்சேரி.

முன்வரிசையில் அமர்ந்து முழுநிகழ்ச்சியையும் பூரிப்புடன் ரசித்தார் மீரா. இந்தச் சம்பவம் பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.

‘‘இதெல்லாம் சும்மா கட்டுக்கதை. ஒரு நிகழ்ச்சிக்கு வந்ததை வச்சு காதல், கல்யாணம்னு சொல்றது தப்பு. முன்பு இப்படித்தான் மீராவை ஒரு இயக்குநருடன் இணைத்து கிசுகிசுத்தனர். இப்போது இந்த விஷயம்… பாவம்’’ என்று கேரளத்து மல்லிகைக்காக பரிதாபப்படுகிறார் அவரை நன்கு அறிந்த ஒருவர்.

இப்படி ஆளுக்கு ஆள் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண் டிருக்கும்போது இன்னொரு உஷ்ணச் செய்தியும் காதில் விழுந்தது. ஊட்டியில் பரத்துடன் மீரா ஜாஸ்மின் நடிக்கும் ‘நேபாளி’ படத்தின் ஷ¨ட்டிங். அங்கு மீராவைச் ‘மாண்டலின்’ ராஜேஷ் வந்தாராம். நீண்ட நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்களாம். அங்கிருந்துதான் திருப்பதி சென்று கல்யாணம் செய்து கொண்டார்கள் என்கிறது இன்னொரு கிசுகிசு. கேள்விப்பட்ட விஷயங்களை மீராஜாஸ்மினிடம் கேட்கலாம் என்றால், அவர் செல்ஃபோன் நமது தொடர்பு எல்லைக்கு வெளியேவே இருந்தது (உஷாரோ). ஆனால் அவருடைய நண்பர்கள் இந்தத் திருமணச் செய்தியை அடியோடு மறுக்கிறார்கள்.

‘‘நல்ல பொண்ணு சார். சத்தியமாக அவங்களுக்கு கல்யாணமாகலை’’ என்கிறார்கள்.

சினிமாக்காரர்கள் சொல்கிறார்கள். நம்புவோமாக!.

“நட்புதான்!”

இங்கு அங்கு என்று சுற்றி இறுதியில் மும்பையிலிருக்கும் ராஜேஷை தொடர்புகொண்டு, விஷயத்தை உடைத்தபோது மனிதர் சற்று பதறினார்.

‘‘சில மாதங்களுக்கு முன்பு தான் மீராவை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைச்சுது. அதிலிருந்து இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் பழகுறோம். அவருக்கும் மியூசிக்கில் ஆர்வம் இருப்பதால் என் நிகழ்ச்சிக்கு வந்தார். அவ்வளவுதான்! அதற்குள் காதல் கல்யாணம், கார்த்திகை, என்று கதை கட்டிவிடுவது நியாயமா? தவிர, திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. அப்புறம், ஒரு ஆணும், பெண்ணும் பழகினால் உடனே காதலா’’ என்று உலகின் முதல் காதல் மறுப்பு டயலாக்கோடு முடித்துக்கொண்டார்.

_ வி.சந்திரசேகரன், ராம்ஜெஸ்வி

Posted in Actress, Affair, Ajith, Anjaneya, Audio, Barath, Bharath, Calcutta, Cinema, Dhurai, Durai, Elope, Films, Freind, Friend, Function, Gossip, Heroine, Jasmine, Kerala, Kisukisu, Kolkata, Logidas, Lohidas, Lokidas, Love, Malayalam, Mandolin Rajesh, Marriage, Meera, Meera Jasmine, Mollywood, Movies, music, Nepaali, Nepali, Rajesh, Reception, release, Rumor, Rumour, Run, Sandakkozhi, Sandakozhi, SJ Soorya, SJ Surya, Soorya, Surya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Blog, Tamil Blogs, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Thirumala, Thirupathi, Thirupathy, Thurai, Tirumala, Tirupathi, Tirupathy, TTD, Vishaal, Vishal, VZ Durai, Wedding | Leave a Comment »

Flower Bouquet Trends – Booming business opportunities in Metro Cities

Posted by Snapjudge மேல் ஜூன் 8, 2007

பிசினஸ்: மருத்துவமனைக்கு மஞ்சள்..! கல்யாணத்துக்கு சிவப்பு..!

சி. தங்கராஜ்

பிறந்த நாளா? அமைச்சரை வரவேற்க வேண்டுமா? புதிய அதிகாரி வருகிறாரா? திருமண வரவேற்பா? இந்த எல்லா இடங்களிலும் கலர் ஃபுல் மகிழ்ச்சி பரிமாற்றத்துக்கு ஒரே வழி பூங்கொத்துகள்.

90-களின் பிற்பகுதியில் மேல்தட்டு மக்களிடம் புழக்கத்துக்கு வந்த இந்தப் பழக்கம் இப்போது நடுத்தர வர்க்கத்தினரிடம் தொற்றிக் கொண்டிருக்கிறது. எப்போது ஒரு விஷயம் நடுத்தர வர்க்கத்தினரின் கையில் வந்து விட்டதோ, அப்போதே அந்தப் பழக்கத்துக்கு ஒரு ஸ்திரத்தன்மை வந்து விட்டதென்று அர்த்தம்.

விளைவு… சென்னையில் தடுக்கி விழுந்தால் ஒரு பூங்கொத்து கடை.

இதனால் மலர் செண்டு தயாரித்து விற்கும் தொழில் லாபகரமானதாக நடைபெற்று வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நகரின் ஒரு சில இடங்களில் மட்டும் பூச்செண்டுகள் கடைகள் இருந்தன. இப்போது நகரின் பல பகுதிகளில் இத்தொழிலில் ஏராளமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். மல்லிகை, ரோஜா போன்றவற்றைச் சரமாகக் கட்டி விற்கும் தொழிலில் பெண்கள் பலர் பல ஆண்டுகளாக ஈடுபட்டுவருகின்றனர். இதே போல பூக்களை மாலையாகக் கட்டி விற்கும் தொழிலும் எல்லா ஊர்களிலும் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இதில் இருந்து சற்று மாறுபட்டது மலர்ச் செண்டு, பூங்கொத்து தயாரித்து விற்கும் தொழில். இதில் முதலீடு குறைவு; லாபம் அதிகம். பெரும்பாலும் வசதி படைத்தவர்களே, விழாக்களின்போது மலர்ச் செண்டு மற்றும் பூங்கொத்துகளைப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.

மலர்ச் செண்டு மற்றும் பூங்கொத்துத் தயாரிக்க, பயன்படுத்தும் பூக்கள், உயர்ந்த ரகத்தைச் சார்ந்தவை. சாதாரண ரோஜா, டச் ரோஸ், கட் ரோஸ், டபுள் டியூப் ரோஸ், ஜெர்பாரா, ஸ்டார் டெய்ஸி, ஆஸ்டர், செமி கிளாட், டபுள் கிளாட், காரனேஷன், சைப்ரஸ், யெல்லோ டைஸ், ப்ளூ டைஸ் என விதவிதமான மலர்களைக் கொண்டு பூங்கொத்துகள் தயாரிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும், பெங்களூர், ஓசூர் போன்ற இடங்களில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்படுகின்றன.

கோயம்பேடு மலர் அங்காடியில் 3 கடைகளில் இந்தப் பூக்கள் மொத்த விலையில் விற்கப்படுகின்றன. இங்கிருந்து சென்னையில் பல்வேறு இடங்களில் பூங்கொத்து வியாபாரம் செய்வோர் மலர்களை வாங்கிச் செல்கின்றனர். இதுதவிர, சென்னை எழும்பூரில் 3 கடைகளில் இத்தகைய மலர்கள் மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்கப்படுகின்றன.

சிறிய அளவிலான அழகிய மூங்கில் கூடைகளில் பூக்களை அடுக்கி அலங்கரித்து அதன் மீது பிளாஸ்டிக் பேப்பரைச் சுற்றி மலர்ச் செண்டு தயாரிக்கின்றனர். பிளாஸ்டிக் பூக்களைக் கொண்டும் மலர்ச் செண்டு தயாரிக்கின்றனர். இத்தகையை பிளாஸ்டிக் மலர்ச் செண்டை பல மாதங்கள் வரை, வீட்டின் வரவேற்பறையில் அழகுக்காக வைத்துக் கொள்ளலாம்.

இதைத் தவிர வெவ்வேறு அளவுகளில் பூச்செண்டு தயாரிக்கின்றனர். பிறந்த நாள் விழா, திருமண விழா, அலுவலகங்களில் உயர் அதிகாரிகளுக்கு நடக்கும் பாராட்டு விழாக்களுக்கு இத்தகையை பூச்செண்டுகளை வழங்குவது கெüரவமாகக் கருதப்படுகிறது. பூக்களின் நிறம், மணம், பசுமை, நீர்த்துளிகளுடன் கூடிய ஈரத்தன்மை ஆகியவை, அந்தப் பூச்செண்டைப் பெறுவோருக்கு மன மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த மலர்ச் செண்டுகள் மற்றும் பூங்கொத்துகளைத் தயாரிப்பவர்கள், அதன் அளவு, அதில் உள்ள பூக்களின் தரத்துக்கு ஏற்ப விலையை நிர்ணயிக்கின்றனர். குறைந்தபட்சம் 50 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை பூச்செண்டுகள் விற்கப்படுகின்றன.

இறுதிச் சடங்குகளிலும், கல்லறைகளிலும் வைக்க மலர் வளையங்களையும் இவர்கள் ஆர்டரின் பேரில் தயாரிக்கின்றனர். மலர் வளையங்களின் அளவுக்கு ஏற்ப 250 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா, காதலர் தினம், திருமண நாட்களின்போது பூச்செண்டு மற்றும் பூங்கொத்துகளின் விற்பனை அதிகமாக இருக்கும் என்று இத்தொழிலில் ஈடுபடுவோர் கூறுகின்றனர். 500 ரூபாய்க்குப் பூக்களை வாங்கி, பூச்செண்டுகளாகத் தயாரித்து ரூ.1500 முதல் ரூ.2000 வரை விற்கின்றனர்.

சென்னை அண்ணாநகர், எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், அண்ணாசாலை, அடையாறு, பெசன்ட் நகர், தியாகராய நகர் உள்பட சென்னையில் முக்கிய பகுதிகளில் நூற்றுக்கணக்கானவர்கள் இத்தொழிலைச் செய்கின்றனர்.

இவர்களுக்கு இது நிரந்தரத் தொழிலாகவும் மாறிவிட்டது. சென்னை நகரின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப இத்தொழிலில் ஈடுபடுவோருக்கும் வருமானம் அதிகரிப்பதோடு மட்டுமின்றி போட்டியும் வளர்ந்து வருகிறது.

Posted in Anniversary, Baskets, Bouquets, Business, Ceremony, Chennai, City, Coronation, Death, Flowers, Fruits, Gifts, Giving, Graduation, Jasmine, Koyambedu, Lily, Madras, markets, Marriage, Metro, Pots, Presents, Reception, Roses, sunflowers, Tulips, Valentines, Wedding, Wishes, Wreath | Leave a Comment »

Aiswarya Rai & Abhishek Bhachan marriage in Gwalior

Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2007

அடுத்த வாரம் ஐஸ்வர்யாராய்-அபிஷேக் பச்சன் திருமணம் குவாலியரில் நடக்கிறது

குவாலியர், மார்ச்.8-

இந்தி நடிகை ஐஸ்வர்யாராய்-நடிகர் அபிஷேக்பச்சன் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் நட்சத்திர ஓட்டலில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களில் நடத்துவதில் சிக்கல் இருப்பதால், அவர்கள் திருமணம் மத்திய பிரதேச மாநிலம் குவாலியருக்கு மாற்றப்பட்டுள்ளது.

குவாலியரில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மார்ச் 17-ந் தேதியில் இருந்து 19-ந் தேதிக்குள் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அபிஷேக் பச்சனின் தாயாரும், நடிகையுமான ஜெயா பச்சன் சமீபத்தில் குவாலியரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் அங்கு திருமணத்துக்கான ஏற்பாடுகளையும் கவனித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் ஓட்டல் நிர்வாகமோ, இன்னும் தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று கூறியுள்ளது.

Posted in Abhishek, Abhishek Bhachan, Abishek Bachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh, Amitabh Bachaan, Gwalior, Jaya, Jeya, Jeya Bachan, Marriage, Reception, Wedding | Leave a Comment »

Malavika is getting married on March 7 to Sumesh

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு: அடுத்த மாதம் 7-ந் தேதி மாளவிகா திருமணம்

நடிகை மாளவிகாவுக்கும் கேரளாவை சேர்ந்த சுமேசுக் கும் திருமணம் நிச்சய மானது.

திருமண தேதியை அறிவிப் பதற்காக மாளவிகா இன்று காலை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிருபர் களை சந்தித்தார். திருமண அழைப்பிதழை தன்கைப்பட நிருபர்களுக்கு வழங்கி அழைத்தார்.

அப்போது மாளவிகா அளித்த பேட்டி வருமாறு:-

எனக்கும் சுமேசுக்கும் மார்ச் 7-ந் தேதி பெங்களூரில் திருமணம் நடக்கிறது. பகல் 12.05 மணிக்கு கோவிலில் முகர்த்தம் நடைபெறும். இரவு 8.00 மணிக்கு திருமண வரவேற்பு நடைபெறும்.

நிறைய நடிகர், நடிகை களை திருமணத்துக்கு அழைத்துள்ளேன். சென்னை யில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

மாப்பிள்ளை சுமேஷ் கேரளாவை சேர்ந்தவர் ஒரு நண்பர் மூலம் எங்களுக்குள் முதல் அறிமுகம் நடந்தது. அப்போது காதலிக்கவில்லை பிறகு அவ்வப்போது விருந்துகளில் சந்தித்தோம் கொஞ்சம் கொஞ்சமாக காதல் துளிர்விட்டது. இரு வீட்டு பெற்றொரும் எங்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.

தேனிலவுக்கு எங்கே போவது என்று முடிவு செய்ய வில்லை. எனக்கு பிடித்த நாடு ஐரோப்பா. திருமணத்துக்கு பின் பொருத்தமான பாத்தி ரங்களில் நடிப்பேன். முத்தக் காட்சியில் இது வரை நடிக்க வில்லை. கவர்ச்சியாகவும் நடிக்க வில்லை திருமணத்துக்கு பிறகும் அது மாதிரி நடிக்க மாட்டேன்.

இந்தியில் பல நடிகை கள் திருமணத்துக்கு பிறகும் கதாநாயகிகளாக நடித்து ஜெயித்துள்ளனர் கட்டுவிரியன் என்ற படத்தில் அம்மா, மகள் ஆகிய இரு கேரக்டர்களில் நடிக்கிறேன்.

என்னைப் பற்றி சில கிசு கிசுக்கள் பரவின. அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

நடிகைகளில் ரஞ்சிதா, ஜோதிகா, ரீமாசென் ஆகியோர் எனக்கு நெருங்கிய தோழிகள் நடிகர்களில் அப்பாஸ், ஷாம், சிம்பு, நெருக்கமானவர்கள்.

சுமேசுக்கு ஆந்திராவில் வீடு இருக்கிறது. திருமணத்துக்கு பின் அங்கு குடியேறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாலத்தீவில் மாளவிகா தேனிலவு

சென்னை, மார்ச்1-

வெற்றிகொடி கட்டு, திருட்டுப்பயலே, உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மாளவிகா. சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் மூலம் மேலும் பிரபலமானவர்.

மாளவிகாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகன் பெயர் சுரேஷ், மும்பை தொழில் அதிபர். இவர்கள் திருமணம் வருகிற 7ந்தேதி பெங்களூரில் நடக்கிறது.

திருமண அழைப்பிதழ்களை மாளவிகா நேரில் கொடுத்து அழைத்து வருகிறார். ஜோதிகா, ரீமாசென், சிம்பு, ரஞ்சிதா, ஷாம் ஆகியோருக்கு அழைப்பிதழை வீட்டில் கொண்டு கொடுத்தார்.

தேனிலவு கொண்டாட மாளவிகா மாலத்தீவு செல்கிறார்.

திருமணத்துக்கு பின் தொடர்ந்து நடிப்பேன் என்று மாளவிகா அறிவித்துள்ளார். தொடர்ந்து நடிக்க சுரேஷ் அனுமதி கொடுத்துள்ளார். அதிக கவர்ச்சி காட்டாமல் நடிப்பது என்று முடிவெடுத்துள்ளார்.

நடிகை மாளவிகா-சுமேஷ் திருமணம் பெங்களூரில் நடந்தது

பெங்களூர், மார்ச் 8: நடிகை மாளவிகாவுக்கும், கேரளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுமேஷுக்கும் பெங்களூரில் புதன்கிழமை திருமணம் நடந்தது.

வெற்றிக் கொடி கட்டு, திருட்டுப்பயலே உள்பட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் மாளவிகா. கேரளத்தைச் சேர்ந்த சுமேஷ் என்பவரை தீவிரமாக காதலித்து வந்தார். சுமேஷ் மும்பையில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். அவர்களது காதல் திருமணத்துக்கு இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் மாளவிகா தனது திருமணத் தேதியை கடந்த பிப்ரவரி 20-ம் தேதி சென்னையில் நிருபர்களிடையே அறிவித்தார்.

அதன்படி பெங்களூர் ராணுவ பயிற்சி மையத்தில் (ஏஎஸ்சி) உள்ள கோயிலில் அவர்களது கலாசார முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் கன்னட திரைப்படத் துறையினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருமணத்துக்கு பின்னரும் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் ஆந்திரத்தில் உள்ள கணவர் சுமேஷுக்கு சொந்தமான வீட்டில் குடியேறவுள்ளதாகவும் மாளவிகா ஏற்கெனவே கூறியிருந்தார்.

Posted in Andhra, Andhra Pradesh, AP, Kerala, Maalavika, Malaiviga, Malaviga, Malavika, Marriage, Reception, Rumour, Sumesh, Tamil Actress, Tamil Cinema, Tamil Movies, Wedding | Leave a Comment »

‘I’m the owner of Bentley car but did not gift Bentley to Abhishek’: Amar Singh

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

அமிதாப் மகனுக்கு பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி கார் யாருக்கு சொந்தமானது? அமர்சிங் விளக்கம்

புதுதில்லி, பிப். 9: அமிதாப் மகன் அபிஷேக் பச்சனின் பிறந்த நாளன்று பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை, தானே விலை கொடுத்து வாங்கியதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அமர்சிங் கூறியுள்ளார்.

லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த காருக்கு, அனைத்து சுங்கத் தீர்வைகளையும் முறையாகச் செலுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

காரின் பதிவுக்காக (ரெஜிஸ்ட்ரேஷன்) விண்ணப்பித்த ஆவணத்தில் அமர்சிங் “ஜல்ஸô, மும்பை’ என வீட்டு முகவரியை அளித்திருந்தார். இந்த முகவரி குறித்து ஐயம் எழுப்பிய தில்லி போக்குவரத்து துறை, அது தவறான தகவல் என்றால் அமர்சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதன்கிழமை கூறியிருந்தது.

இதை மறுத்துள்ள அமர்சிங், அமிதாப் குடும்பத்துக்குச் சொந்தமான ஜல்ஸô இல்லத்தை, மும்பைக்கு செல்லும்போது தங்குவதற்காக, கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், அமிதாப் இதை மறுக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தவறான தகவலை அளித்ததற்காக தில்லி மாநில முதல்வர் மற்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹாரூண் யூசுப் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் அமர்சிங் எச்சரித்துள்ளார்.

பெண்ட்லே காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசளித்தது யார் என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.

அபிஷேக் பச்சனுக்கு வெளிநாட்டு கார்: அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி செலுத்தினார்

புதுடெல்லி, பிப். 12-

பிரபல ஹாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் கடந்த 5-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதையொட்டி அமிதாப்பின் நெருங்கிய குடும்ப நண்பரும், சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான அமர்சிங் வெளிநாட்டு காரை பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.

விலை உயர்ந்த காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசாக வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. உடனே அது தனது கார் அபிஷேக்குக்கு பரிசாக கொடுக்கவில்லை என்று அமர்சிங் மறுத்து இருந்தார்.

இந்த நிலையில் வெளிநாட்டு காருக்கு அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து மந்திரி ஹாரூன் ïசுப் கூறியதாவது:-

லண்டனில் இருந்து `பென்ட்லி’ கார் கடந்த 31-ந் தேதி விமானம் மூலம் வந்தது. இந்த காரின் மதிப்பு ரூ. 1.76 கோடி என்று கூறி அதற்கு ரூ. 85 லட்சம் சுங்க வரியை அமர்சிங் செலுத்தியுள்ளார்.

கடந்த 1-ந் தேதி அந்த கார் வடக்கு டெல்லியில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த காருக்கு நம்பர் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in Abhishek, Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, abuse, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amar Singh, Ambani, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Auto, Automotive, Bachchans, Bentley, Birthday, Bribe, Bribery, car, Chief Minister, CM, Congress, Congress(I), Corruption, Customs, customs duties, Delhi, Extravaganza, general secretary, Gift, Harun Yusuf, Import, Income Tax, kickbacks, London, Luxury, maharashtra, Mangal, Mangalsutra, Marriage, Mulayam Singh, Mulayam Singh Yadav, New Delhi, owner, peepal tree, Power, Reception, Reliance, Samajvadi Party, Samajwadi Party, Sheila Dikshit, SJP, SP, tax evasion, Transport Department, Transport Minister | Leave a Comment »

Abhishek Bachan – Aiswarya Rai Marriage Details: When, where, who?

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

அபிஷேக்-ஐஸ்வர்யா ஜெய்ப்பூரில் திருமணம்: 6 ஆயிரம் பேர் பங்கேற்கலாம்

ஜெய்ப்பூர், ஜன. 17-

பிரபல இந்தி நட்சத்திரங்களான அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாராயும் காதலித்து வருகின்றனர். இந்த காதலுக்கு ஏற்கனவே பச்சைக் கொடி காட்டப்பட்டது. அனைவ ராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் கடந்த 14-ந் தேதி இரவு நடந்தது. நிச்சயதார்த்தத்தின் போது திருண தேதி முடிவு செய்யப்படவில்லை.

பிப்ரவரி 19 அல்லது மார்ச் 7-ந்தேதி திருமணம் நடை பெறலாம் என்று ïகங்கள் வெளியாகி உள்ளது.

அபிஷேக்-ஐஸ்வர்யாராய் திருமணமோ அல்லது திருமண பார்ட்டியோ ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறலாம் என்று ïகங்கள் எழுந்துள்ளன. பாரம் பரியமிக்க ஜெய்ப்பூர் அல்லது உதய்ப்பூரில் திருமணம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமிதாப்பச்சனின் குடும்பத்தினர் ராஜஸ்தான் சென்று திருமணம் நடைபெறும் இடம் குறித்து பேசி வருகிறார்கள். சமூக அந்தஸ்தில் அமிதாப்பச்சன் மிக உயர்ந்த இடத்தில் உள்ளார். இதனால் அவரது மகன் திருமணத்திற்கு அரசியல் பிரபலங்கள, முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், இந்தி நடிகர், நடிகைகள் என 6 ஆயிரம் பேர் பங்கேற்கலாம் என்று கருதப்படுகிறது.

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக ஜெயா பச்சன் மகன் அபிஷேக்குடன் ராஜஸ்தான் சென்றார். அவர் ஜெய்ப்பூர் அரண்மனையின் முன்னாள் ராணி பத்மா தேவியை சந்தித்து பேசினார். இதனால் ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் நடை பெறலாம் என்று கருதப்படுகிறது.

ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணத்தை நடத்த அமிதாப்பச்சன் விரும்புகிறார். முக்கிய வி.ஐ.பி.க்கள் வருவதால் பாதுகாப்பு எப்படி கொடுக்க முடியும் என்ற கவலையும் அவருக்கு உள்ளது என்று ஜெய்ப்பூர் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் உதய்பூரிலும் திருமண பார்ட்டி நடைபெறலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அங்குள்ள ஜகா மந்திர் கார்டன் புகழ் பெற்றது. இங்கு 3 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில்தான் இட வசதி உள்ளது. உதய்பூரில் நடிகை ரவீணாதண்டன் – தொழில் அதிபர் அனில் தாண்டனி திருமணம் 2004-ம் ஆண்டும், இந்தி நடிகர் விக்ரம் சாவல் திருமண பார்ட்டி 2006-ம் ஆண்டிலும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Attendance, Dates, Engagement, Gossip, Invites, Jaipur, Kisu Kisu, Marriage, Reception, Rumor, Venue | Leave a Comment »

Abhishek Bhachan – Aiswarya Rai Marriage : Benaras Silk Saree Purchases

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

திருமணத்தின் போது கட்டுவதற்காக ஐஸ்வர்யாவுக்கு ரூ.2 லட்சத்தில் பனாரஸ் பட்டுப்புடவை

வாரணாசி, ஜன. 16-

அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யாராய் நிச்சயதார்த்தம் நடந்ததையொட்டி திருமணத் திற்கான ஏற்பாடுகளை அமிதாப்பச்சன் குடும்பத்தினர் மும்முரமாக செய்து வருகி றார்கள்.

திருமணத்தின் போது தனது மருமகள் விலை உயர்ந்த பட்டுப்புடவையை கட்ட வேண்டும் என்பதை அமிதாப்பச்சன் விரும்புகிறார். இதற்காக அவர் வாரணாசியில் உள்ள பிரபல கடையில் ஆர்டர் கொடுத்துள்ளார்.

திருமணத்தின் போது ஐஸ்வர்யாராய் கட்டுவதற்காக பனாரஸ் பட்டுப்புடவை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த மாத இறுதியில் தயா ராகி விடும் என்று கடை உரிமையாளர் ஜலான் தெரி வித்தார். பனாரஸ் லேகன்யா பட்டுப்புடவையின் விலையை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். ஆனால் அதன் விலை ரூ.2 லட்சம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

21 புடவைகள்

கடந்த நவம்பர் 27-ந் தேதி அமிதாப்பச்சன் குடும்பத்தினர் வாரணாசி சென்ற போது ரூ.50 ஆயிரம் மதிப்பில் 11 சேலைகளை வாங்கி சென்றனர். அப்போது ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் 21 சேலைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. அந்த சேலைகள் நேற்று அமிதாப்பச்சன் வீட்டிற்கு பார்சலில் அனுப்பப்பட்டன.

Posted in Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh Bhachan, Benaras, Benares, Marriage, Reception, Sarees, Saris, Silk Saree, Silk Sari, Varanasi | Leave a Comment »

Abishek Bachan & Aiswarya Rai Engagement – Marriage set for Feb 5; Star Gala Reception on Feb 19

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

அடுத்த மாதம் திருமணம்: அபிஷேக்-ஐஸ்வர்யாராய் நிச்சயதார்த்தம் நடந்தது

மும்பை, ஜன.16-

பிரபல இந்தி நட்சத்திரங்களான அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாராயும் காதலித்து வந்தனர். இருவீட்டு பெற்றோ ரும் இந்த காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டனர். அமிதாப்பச்சன் குடும்பத் தினரின் பல்வேறு நிகழ்ச்சிக ளில் ஐஸ்வர்யாராய் பங்கேற்றார்.

கடந்த நவம்பர் 26-ந் தேதி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இதற்கிடையே அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யாராய் திருமண நிச்சயதார்த்தம் மும்பை புறநகரான ஜ×குவில் உள்ள அமிதாப்பச்சன் வீட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. ஐஸ்வர்யாராய் கையில் அபிசேக் பச்சன் மோதிரம் அணிவித்தார். குரு பட நிகழ்ச்சிக்காக இருவரும் அமெரிக்கா சென்று விட்டு திரும்பிய 1 மணி நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப்பச்சன், அவரது மனைவி ஜெயாபச்சன், சமாஜ் வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங், தொழில் அதிபர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அபிஷேக்-ஐஸ்வர்யா திருமணம் அடுத்த மாதம் நடக்கிறது. அபிஷேக் பச்சனுக்கு பிப்ரவரி 5-ந் தேதி 31 வயது பிறக்கிறது. இதனால் அன்றைய தினம் 33 வயதான ஐஸ்வர்யாராயை திருமணம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 19 அல்லது மார்ச் 7-ந் தேதி இவர்களது திருமணம் நடைபெறும் என்று மற்றொரு தகவல் கூறுகிறது. பிப்ரவரி 19-ந் தேதிக்காக மும்பையில் உள்ள ஹோட்டல் ஹியாத்தில் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக அமிதாப்பச்சனின் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதி குறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை. அபிஷேக்-ஐஸ்வர்யா திரு மண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனது குடும்பத்தினர் பலர் இங்கு வரவில்லை. அவர்களுடன் ஆலோசனை செய்யப்படும். இரு வீட்டு குடும்பத்தினரும் முடிவு செய்து திருமண தேதியை அறிவிப்போம். எல்லா தகவல்களையும் நிருபர்களிடம் பகிர்ந்து கொள்ள இயலாது.

குரு படத்தில் அபிஷேக்கின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. நடிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக அவரை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அமிதாப்பச்சன் கூறினார்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பிறகு அபிஷேக்பச்சன் நிருபர் களிடம் கூறியதாவது:-

எனது திருமணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். நானும், ஐஸ்வர்யாவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். திருமண தேதி குறித்து நான் எதுவும் கூற இயலாது.

ஐஸ்வர்யா ஒரு சிறந்த நடிகை. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பாரா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அபிஷேக் பச்சனுக்கும், நடிகை கரிஷ்மா கபூருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh, Anil Ambani, Ash, Betrothal, Engagement, Hyatt, Jaya Bachan, Marriage, Reception | Leave a Comment »

Aiswarya Rai & Abhishek Bhachan marriage will be on February 19th 2007

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

ஐஸ்வர்யாராய்க்கு பிப்ரவரி 19-ந்தேதி திருமணம்

பெங்களூர், டிச.19-

பெங்களூரில் வசித்து வரும் ஐஸ்வர்யாராயின் குடும்ப ஜோதிடரான சந்திரசேகர சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

அபிஷேக் பச்சனுக்கு பிப்ரவரி 5-ந் தேதி 32-வது வயது பிறக்கிறது. அன்று முதல் அவருக்கு யோகம் நிறைந்த நாள். ஐஸ்வர்யாராய்-அபிஷேக் பச்சனுக்கு இடையேயான திருமண தடை அனைத்தும் நீங்கி விட்டன.

இந்தநிலையில் ஐஸ்வர்யாராய்-அபிஷேக் பச்சன் ஜோடிக்கு வருகிற பிப்ரவரி 19-ந் தேதி திருமணம் நடக்கிறது. இந்த திருமணம் மும்பையில் உள்ள ஹயத் இண்டர்நேஷனல் என்ற ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடக்க உள்ளது. பிப்ரவரி மாதம் 20-ந் தேதி மும்பையிலும், 21-ந் தேதி டெல்லியிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

இவ்வாறு ஜோதிடர் சந்திரசேகர சுவாமிகள் கூறினார்.

ஆனால், இந்த திருமணதேதி பற்றி அபிஷேக்பச்சன் குடும்பமோ, ஐஸ்வர்யாராய் குடும்பமோ எந்த தகவலும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

Posted in Abhishek Bhachan, Abishek Bachan, Aiswarya Rai, Amitabh Bachaan, Bollywood, Gossip, Guru, Hindi Actors, Hindi Actress, Hollywood, Hyatt International, Jaya Bhaduri, Kisukisu, Kollywood, Mani Ratnam, Manirathnam, Marriage, Movies, Mumbai, Personal Life, Reception, Stars, Tamil | 35 Comments »

Dance Master Raguram’s daughter – Gayatri Raghuram Marriage

Posted by Snapjudge மேல் திசெம்பர் 8, 2006

நடிகை காயத்ரிரகுராம் திருமணம்: நடிகர், நடிகைகள் வாழ்த்து 

சென்னை, டிச.8- பிரபல தமிழ் நடிகை காயத்ரி ரகுராம். விசில், ஸ்டைல், சார்லிசாப்ளின்,பரசுராம் உள்ளிட்ட படங்களில்நடித் துள்ளார். இவர் டான்ஸ் மாஸ்டர் ரகுராமின் மகள் ஆவார்.

சில வருடங்களுக்கு முன்பு நடிப்புக்கு முழுக்கு போட்டார். அமெரிக்காவில் தொழில் கல்வி படிக்கச் சென்றார். காயத்ரிரகுராமுக்கும் அமெரிக்காவில் கம்ப்ïட்டர் என்ஜினீயராக பணியாற்றும் தீபக்குக்கும் திருமணம் நிச் சயிக்கப்பட்டது.

காயத்ரி ரகுராம்-தீபக் திருமணம் சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் இன்று காலை நடந்தது.

  • நடிகர் எஸ்.வி.சேகர்,
  • நடிகைகள் குஷ்பு,
  • ஸ்ரீபிரியா,
  • சுகாசினி,
  • டான்ஸ் மாஸ்டர் கலா உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினார்கள்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை அதே மண்டபத்தில் நடக்கிறது.

Posted in America, Charlie Chaplin, Cine actress, daughter, Deepak, Gayathri, Gayatri Raghuram, Mariiage, Photos, Pictures, Prabhudeva, Raguram, Reception, Santhome, Tamil Actress, Tamil Cinema, Tamil Films, USA, Visil, Whistle | Leave a Comment »