Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Re-election’ Category

Kenya’s elections: A very African coup – Twilight robbery, daylight murder; After a stolen election, ethnic cleansing

Posted by Snapjudge மேல் ஜனவரி 4, 2008

திருடிய வெற்றியும் தொலைந்துபோன அமைதியும்

எம். மணிகண்டன்

இந்தியப் பெருங்கடலையொட்டிய இயற்கை எழில் மிக்க கடற்கரைகள், வண்ண மயமான விளையாட்டு மைதானங்கள் ஆகியவைதான் கென்யாவைப் பற்றி வெளிநாட்டினருக்கு அதிகமாகத் தெரிந்தவை.

Economistரத்த ஆறுகள் ஓடும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சற்று மாறுபட்டது கென்யா. இந்தியாவுக்கு ஒரு நேருவைப் போல, கென்யாவுக்கு ஒரு கென்யாட்டா கிடைத்தார். சாகும் வரை அவர் அதிபராகவும் இருந்தார்.

கென்யாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையிலேயே கழித்தவர் என்பதில் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிடத் தகுந்தவர் கென்யாட்டா. வளர்ச்சியை நோக்கிய உள்கட்டமைப்பு, கருணைமிக்க நிலச் சீர்திருத்தம், கரிசனம் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தம் என ஜோமோ கென்யாட்டாவின் பணிகள் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தன.

சூடான் மற்றும் சோமாலிய அமைதி முயற்சிகளில் ஈடுபடும் அளவுக்கு கென்யாவை உயர்த்தியது கென்யாட்டாதான் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்க உண்மை. இவ்வளவு பெருமைக்குரியவரான கென்யாட்டா ஒரு சாத்தானையும் விட்டுச் சென்றார். அதுதான் இனப் பாகுபாடு. உலக நாகரிகத்தின் முன்னோடிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு நாடு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டிய ஒரு நாடு, மிக மோசமான கலவர பூமியாக மாறிக் கொண்டிருப்பது இனக் கலவரங்களால்தான்.

கென்யாவில் 40-க்கும் அதிகமான பழங்குடி இனத்தவர்கள் வசித்து வந்தாலும், கிக்கூயூ இனத்தவரின் எண்ணிக்கை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம். 1960-களில் சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை மூன்றே அதிபர்களைத்தான் கென்யா கண்டிருக்கிறது. அவர்களில் இருவர் கிக்கூயூ இனத்தவர். கென்யாட்டாவும், தற்போதைய அதிபர் கிபாகியும்தான் அந்த இருவர். நீண்டகாலமாகவே பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதும், நாட்டின் முக்கிய விவசாய நிலங்களை வைத்திருப்பதும், பெரிய பதவிகளைக் கைப்பற்றுவதும் கிக்கூயூக்கள்தான்.

தூய்மையான நிர்வாகம் என்ற கோஷத்தோடு, கடந்த 2002 தேர்தலில் வென்றவர்தான் கிபாகி. இவரது அதிகார ஆக்கிரமிப்புதான் இப்போது பிரச்னையாகியிருக்கிறது. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் கிபாகி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் வன்முறை வெடித்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் பதற்றம் நிறைந்திருக்கிறது.

அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார் என்பது தமக்கு உண்மையிலேயே தெரியாது எனவும், ஆளுங் கட்சியினரின் நெருக்கடி காரணமாகவே கிபாகி வெற்றி பெற்றதாக அறிவித்ததாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. கிபாகியை எதிர்த்துப் போட்டியிட்ட லூ இனத்தைச் சேர்ந்த ஓடிங்கோ தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

கென்யாவில் கட்சியைப் பார்த்து யாரும் வாக்களிப்பதில்லை. இனம்தான் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நான் உங்கள் இனத்தைச் சேர்ந்தவன்; நீங்கள் தாராளமாக என்னை நம்பலாம் என நேரடியாகவே வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவதுதான் தேர்தல் வெற்றிக்கான சூத்திரம். இந்தப் பின்னணியில், ஏற்கெனவே கிக்கூயூ இனத்தவரால் தாங்கள் ஒடுக்கப்பட்டதாகக் கருதும் மற்ற இனத்தவர் இத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறையில் இறங்கிவிட்டனர். எங்கெல்லாம் கிக்கூயூ இனத்தவர் இருக்கின்றனரோ அங்கெல்லாம் படுகொலைகள் நடந்தவண்ணம் உள்ளன.

கென்ய வன்முறைகளுக்கு அந்நாட்டுக்கு நிதியுதவி செய்யும் பிரிட்டனும் அமெரிக்காவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. ஆனால் எந்த நாட்டில் சண்டை நடந்தாலும் ஆயுதங்கள் விற்பனையாகும் என்ற எண்ணத்தில் மேலை நாடுகளுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு நாட்டையும் தங்களது வாடிக்கையாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்குத்தான் மேலை நாடுகள் உண்மையிலேயே முயன்று வருகின்றன. அதனால் போர் ஏற்படும்வரை காத்திருந்து ஆயுதங்களை விற்பனை செய்வதுதான் அவர்களின் எண்ணம். எண்ணெய் வளங்களில் முதலீடு செய்திருக்கும் சீனாவும் இப்போதைக்கு உதவிக்கு வருவதுபோல் தெரியவில்லை. எனவே, எந்த நாடு உதவிக்கு வந்தாலும் அது லாப நோக்கத்துடன்தான் இருக்கும்.

ஆக, கென்யா இன்னொரு உகாண்டாவாக மாறாமல் தடுக்கும் பொறுப்பு கிபாகிக்கும் ஓடிங்கோவுக்கும்தான் உள்ளது. 300-க்கும் அதிகமானோர் பலியான பின்னரும் அமைதி முயற்சி எதையும் மேற்கொள்ளாத அதிபர் கிபாகி மீது ஆப்பிரிக்க மக்களின் மொத்தக் கோபமும் திரும்பியிருக்கிறது.

பதவியைத் துறந்துவிட்டு இடைக்கால அரசை நியமித்து புதிதாகத் தேர்தல் நடத்துவது ஒன்றுதான் இப்போதைக்கு கிபாகி முன்னால் இருக்கும் ஒரே வாய்ப்பு. பிரச்னை ஏற்படலாம் என்று தெரிந்தவுடன், அதிகாரத்தைத் தூக்கி எறிந்த நெல்சன் மண்டேலா போல் போற்றுதலுக்குரிய தலைவராக மாற கிபாகிக்கு இது நல்ல சந்தர்ப்பம்.

இல்லையெனில், இராக் ஆக்கிரமிப்புக்கு முன்பு டோனி பிளேர் கூறியது போல், நீதியை நிலைநாட்ட “அடித்துக் கொள்ள’ வேண்டியதுதான்; மேலை நாடுகளுக்குச் சாதகமாக!

 


 

கென்யாவில் வன்முறை காரணமாக 1.80.000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

கென்யாவில் கடந்த வாரம் நடந்த தேர்தலைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் குறைந்தது ஒரு லட்சத்து எண்பதனாயிரம் பேர் இடம் பெயர்ந்திருப்பதாக ஐநாமன்றத்தின் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இவர்களில் சிலர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக் கிறார்கள். சிலர் காவல்நிலையங்களிலும், சிலர் தேவாலயங் களிலும் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.

இப்படியான அகதிகள் எல்லோருமே பட்டினியாக இருப்ப தாகவும், பல குழந்தைகள் வெயிலுக்கு பலியாகி இறந்து விட்டதாகவும், இந்த வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்பட்ட கென்யாவின் மேற்கு பிரதேசங்களில் ஒன்றில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கென்யா முழுவதும் சுமார் ஐந்து லட்சம் கென்யர்கள் அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாக, நைரோபியில் இருக்கும் ஐநா மன்றத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


புதிய தேர்தலுக்கு தயார்- ஆனால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் என்கிறார் கென்ய அதிபர் கிபாக்கி

கென்ய அதிபர் கிபாக்கி
கென்ய அதிபர் கிபாக்கி

கென்யாவில் புதிதாக தேர்தல் நடத்தப்படுவதை கொள்கை அடிப்படையில் எதிர்க்கவில்லை, ஆனால் நீதிமன்றம் ஒன்று உத்தரவிடும் பட்சத்தில்தான் புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் முவாய் கிபாக்கி விரும்புகிறார் என அந்நாட்டின் அரசு சார்பாகப் பேசவல்லவர் கூறியுள்ளார்.

ரைலா ஒடிங்கா தலைமையிலான ஓ.டி.எம். எதிர்க்கட்சியானது, சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் மறுபடியும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், ஆனால் இவ்விவகாரத்தை நீதிமன்றத்திடம் கொண்டுசெல்லப்போவதில்லை, ஏனெனில் நீதிமன்ற முடிவின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்று கூறியிருந்தது.

இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கான புதிய ராஜீய முயற்சிகள் நடந்துவருகின்றன. அதிபர் கிபாகு மற்றும் ஒடிங்கா ஆகியோருடன் நொபெல் பரிசு வென்ற தென்னாப்பிரிக்க பிரமுகர் டெஸ்மண்ட் டுடு பேச்சுநடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் புஷ்ஷின் தூதர் ஜெண்டயி ஃப்ரேஸார் நைரோபி சென்றுகொண்டிருக்கிறார்.

 


தற்போதைய கென்ய அரசியல் நெருக்கடியின் பின்னணி என்ன?

நைரோபியில் தொடர்ந்து பதட்டம்
நைரோபியில் தொடர்ந்து பதட்டம்

தலைநகர் நைரோபி மற்றும் பிற நகர வீதிகளில் அரங்கேறிவரும் அரசியல் நெருக்கடிக்கு, நாட்டின் சக்திவாய்ந்த இரண்டு இனப்பிரிவுகளான – அதிபர் கிபாகியின் ககிகுயு பழங்குடியினத்துக்கும் எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்காவின் லுஒ இனத்துக்கும் இடையில் வரலாற்று ரீதியாயக நீடித்துவரும் பகைமை ஒரு பங்கில் வேராக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.

அதிபர் கிபாகியின் இனப்பிரிவான கிகுயுதான் கென்யாவின் மிகப் பெரிய மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் சக்திவாய்ந்த இனமாகும். இவ்வினத்தார் அதிகம் பேர் நைரோபியைச் சுற்றி வாழ்கிறார்கள். இவ்வினத்தாரின் தலைவர் ஜோமோ கென்யாட்டாதான் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் முதல் அதிபரானவர்.

நாட்டின் மேற்குப் பகுதியில் உகாண்டாவுடனான எல்லைக்கு அருகில் பரவலாக வாழும் லுஒ இனத்தார், பலமுறை அரசுப் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர் என்றாலும் அவர்களில் மிகப் பிரபலமான தலைவர் காலஞ்சென்ற ஒகிங்கா ஒடிங்கா ஆவார். இவரின் மகன் தான் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்கா.

கிகுயுவுக்கும் லுஒவுக்கும் இடையே நெடுநாளாக அரசியல் போட்டி பகைமை இருந்துவருகிறது என்றாலும் கென்யா பல ஆண்டுகளாக ஒரு அமைதியான நாடாகவே திகழ்ந்துவருகிறது.

சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவுகள் தொடர்பான தற்போதைய அரசியல் நெருக்கடியின் பின்னணி குறித்து எமது உலக விவகார செய்தியாளர் மார்க் டொய்ல் விளக்கும் செய்திக்குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.

 


 

 

Posted in africa, Ancestry, Arms, AU, Autocracy, Autocrats, Britain, Cabinet, China, Citizen, Cleansing, Congo, Constituency, Democracy, Dictators, Dictatorship, Eldoret, Election, Elections, Ethiopia, fraud, Government, Govt, Kenya, Kibaki, Kikuyu, Kingdom, Kings, Kisumu, Kivuitu, Luo, margin, Military, Mombasa, Monarchy, Monitors, Murder, Mwai, Nairobi, Nigeria, Nyanza, Odinga, Opposition, people, Polls, Protest, protesters, Race, Racial, Raila, Re-election, rigging, Robbery, Somalia, Vote, voters, War, Weapons | Leave a Comment »

99 Chennai Corpn councillors to resign – DMK, allies ready to face re-election in 99 wards

Posted by Snapjudge மேல் ஜனவரி 18, 2007

300 ஆண்டுகளைக் கடந்த சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் 2-வது முறையாக மேயர் இல்லாத நிலை

பா. ஜெகதீசன்

99 கவுன்சிலர்கள் ராஜிநாமாவால் மாநகராட்சி மன்றம் செயல் இழந்தது

சென்னை, ஜன. 18: சென்னை மாநகராட்சியில் மேயர் இல்லாத நிலை கடந்த 5 ஆண்டுகளில் 2-வது முறையாக உருவாகிள்ளது.

தற்போது 99 கவுன்சிலர்களும் ராஜிநாமா செய்வதால், மாநகராட்சி மன்றம் அடியோடு முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவர், 99 வார்டுகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். அதன் எதிரொலியாக மேயர் உள்பட 99 கவுன்சிலர்கள் ராஜிநாமா செய்கின்றனர்.

300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சென்னை மாநகராட்சியில் இப்படி ஒட்டுமொத்தமாக-ஒரே நேரத்தில் 99 கவுன்சிலர்கள் ராஜிநாமா செய்வது என்பது இதுவே முதல்முறை.

வரலாறு: தமிழகத்தில் 1967-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, 1959-ல் சென்னை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றி, ஆளும் கட்சி ஆகியது.

24.4.1959-ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அ.பொ. அரசு வென்றார். சென்னை மாநகராட்சியின் முதல் தி.மு.க. மேயர் அவர்.

பிறகு, 30.11.1971-ல் நடைபெற்ற மேயர் தேர்தலில் காமாட்சி ஜெயராமன் (தி.மு.க.) வென்றார்.

ஒட்டுமொத்த கலைப்பு: மாநகராட்சியில் எழுந்த ஊழல் புகாரை அடுத்து, மாநகராட்சி மன்றத்தைக் கலைப்பதாக 20.11.1973-ல் சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சென்னை மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதன் பிறகு பல ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படவில்லை. இவை தனி அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் பல ஆண்டுகள் இயங்கின.

எம்.ஜி.ஆர். ஆட்சியில் 23.2.1986-ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சென்னை மாநகராட்சிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.

தேர்தல் வந்தது: 23 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சென்னை மாநகராட்சித் தேர்தலையும், பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களையும் 1996 அக்டோபரில் தி.மு.க. அரசு நடத்தியது.

அதில் தி.மு.க.-த.மா.கா. அணி வென்றது. சென்னையின் 44-வது மேயராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2001 உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் ஸ்டாலின் 2-வது முறையாக வென்றார். ஆனால், மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் அ.தி.மு.க. அணி அதிக இடங்களை வென்று, ஆளும் கட்சியாகியது. அதனால் நிர்வாக ரீதியாக சிக்கல்கள் எழுந்தன.

ஒருகட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மேயர் பதவியில் இருந்து ஸ்டாலின் நீக்கப்பட்டார். துணை மேயராக இருந்த கராத்தே தியாகராஜன் மேயர் பொறுப்பை வகித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருந்தும் மேயர் இல்லாத நிலை மாநகராட்சியில் முதல்முறையாக ஏற்பட்டது.

தற்போதைய நிலை: மன்றத்தில் ஏற்கெனவே அ.தி.மு.க. உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ததால் 2 இடங்கள் காலியாக உள்ளன. தற்போது 99 பேர் ராஜிநாமா செய்வதை அடுத்து, காலியிடங்களின் எண்ணிக்கை 101-ஆகிறது. மேயர் இல்லாத நிலையில் -எஞ்சிய 54 கவுன்சிலர்களைக் கொண்டு மன்றக் கூட்டத்தை நடத்த முடியாது. எனவே, காலியாக உள்ள 101 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற்று, கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை மன்றம் செயல்பட முடியாது என மாநகராட்சி மன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னை மாநகராட்சி ராஜிநாமா செய்யும் 99 கவுன்சிலர்களில் திமுக-58; காங்-25; பா.ம.க-13 பேர்

சென்னை, ஜன. 18: உயர் நீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா அளித்த தீர்ப்பின் எதிரொலியாக சென்னை மாநகராட்சியில் இருந்து ராஜிநாமா செய்யும் 99 கவுன்சிலர்களில் 58 பேர் திமுகவினர்.

திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 25 பேர். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 13 கவுன்சிலர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 2 கவுன்சிலர்களும் ராஜிநாமா செய்கின்றனர்.

தி.மு.க. கூட்டணியைச் சாராத பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் ராஜிநாமா செய்கிறார்.

சென்னை மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

இதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த 2 நீதிபதிகளில் ஒருவரான கலிஃபுல்லா சென்னை மாநகராட்சியில் 99 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்ப்பு கூறினர்.

மாநகராட்சியின் 155 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியினர் 149 இடங்களில் வெற்றி பெற்றனர். மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றனர். அதன் விவரம்:

  • திமுக- 90,
  • காங்கிரஸ் -38,
  • பாமக -17,
  • அதிமுக -4,
  • இந்திய கம்யூனிஸ்ட் -2,
  • விடுதலைச் சிறுத்தைகள் -2,
  • மதிமுக -1,
  • பகுஜன் சமாஜ் -1.

தற்போது மேயர் மா. சுப்பிரமணியன் உள்பட 99 கவுன்சிலர்களும் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

ராஜிநாமா செய்தவர்களைத் தவிர மன்றத்தில் தற்போது இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை விவரம்:

  • திமுக-36,
  • காங்கிரஸ்-13,
  • பாமக- 4,
  • சுயேச்சை -1,
  • காலியிடங்கள் -2

முக்கியமானவர்கள்: 140-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மேயர் மா. சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். நகரில் 130-வது வார்டில் வெற்றி பெற்ற கே. தனசேகரனும் ராஜிநாமா செய்கின்றனர்.

மாநகராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வென்று பின்னர் திமுகவில் இணைந்த சுபாஷ் சந்திரபோஸ், மதிமுக சார்பில் வென்று பின்னர் திமுகவில் இணைந்த கன்னியப்பன் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்கின்றனர்.

Posted in 99, ADMK, AIADMK, Assembly Election, Backgrounder, Bahujan Samaj Party, BSP, bypoll, Chennai, Civic Polls, Court, CPI, CPI (M), Dalit Panthers, DMK, Elections, History, Judge, Justice, Karunanidhi, local body elections, M Subramanian, Madras, Mayor, MDMK, MLC, Order, Pattali Makkal Katchi, PMK, Re-election, Tamil Nadu, TN, Viduthalai Chiruthaigal, Viduthalai Siruthaigal | Leave a Comment »