Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007
யாரைத்தான் நம்புவதோ?
ஜீ.வி. பிலிம்ஸ் நிறுவனம், புதிய படங்களை எடுப்பதோடு, பழைய கடன்களையும் பைசல் செய்து வருகிறது.
கம்பெனிக்கு வரும் இயக்குனர்களை முழுதாய் நம்பி, “முதல் பிரதி’ அடிப்படையில் படம் தயாரித்து வருகிறார்கள்.
“கைவந்த கலை’ படத்துக்கு பாண்டியராஜன் கொடுத்த பட்ஜெட்டைவிட பத்து லட்சம் அதிகம் செலவானதாம்!
அடுத்து ஜீவாவின் (சமீபத்தில் மறைந்த இயக்குனர்) உதவியாளர் சங்கர் கே. என்பவர் ஐம்பது லட்சம் செலவில், “திருடி’ என்ற படத்தை எடுப்பதாகக் கூறி ஒரு கோடி வரை செலவை இழுத்துவிட்டாராம்.
ஜீ.வி. பிலிம்சுக்கு, இப்போது “உற்சாகம்’ என்ற படத்தை இயக்கிவரும் ரவிச்சந்திரன் (ஏற்கெனவே, கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்த வேளை, மஜ்னு படங்களை இயக்கியவர்) அனுபவம் உள்ள டைரக்டர் என்பதால் அவர் கேட்ட பட்ஜெட்டை கொடுத்து உதவினர் தயாரிப்பாளர்கள். ஆனால், ரவிச்சந்திரன் கொடுத்த பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவழித்து படத்தை உருவாக்கி இருக்கிறாராம்.
பழைய இயக்குனரும் கொடுத்த பட்ஜெட்டைக் காப்பாற்றவில்லை. புதிய இயக்குனரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. யாரைத்தான் நம்புவதோ என்று நேர்மையாக புலம்புகிறது தயாரிப்பு தரப்பு.
Posted in Budget, Cinema, Director, Economic, Expenses, Films, Finance, Flop, Gossip, GV, Hit, Jeeva, Kai Vantha Kalai, Kisukisu, Loss, Majnu, Manirathanam, Manirathnam, Maniratnam, Movies, Pandiarajan, Pandiyarajan, Profit, Ravichandran, Rumour, Rumours, Shankar, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Blogs, Tamil channels, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Magaizine, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil TV, Thirudi, Urchagam, Urchakam, Venkatesvaran, Venkateswaran, Woes | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007
காதலனுடன் சென்ற எம்.எல்.ஏ. மகள் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை, ஜன.20: காதலனுடன் சென்ற எம்.எல்.ஏ. மகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸôரால் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
18 வயது நிரம்பாத அப்பெண்ணை அவரது பெற்றோருடன் செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர்.
சேலம்-1 தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ரவிச்சந்திரனின் மகள் ஆர். கலைவாணி, சேலத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. படித்துவருகிறார்.
கடந்த 25-11-2006 அன்று அவர் காணாமல் போய்விட்டார். அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார் ரவிச்சந்திரன்.
இதையடுத்து கலைவாணியைத் தேடி கண்டுபிடிக்குமாறு சேலம் போலீஸôருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கலைவாணியும் அவரது காதலன் சிவகுமாரும் ஹைதராபாதில் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்களை அங்கிருந்து அழைத்து வந்த போலீஸôர், சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பெண்ணைக் கடத்தியதாக சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸôர் அவரை சிறையில் அடைத்தனர்.
கலைவாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரது பெற்றோரும் நீதிமன்றத்துக்கு வந்தனர். எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் சார்பாக வழக்கறிஞர் பி.எச். மனோஜ்பாண்டியன் ஆஜரானார். கலைவாணிக்கு 18 வயது ஆகவில்லை. எனவே அவரது பெற்றோருடன் அவரை அனுப்ப வேண்டும் என்றார் வழக்கறிஞர்.
கலைவாணியைக் கடத்திச் சென்றதாக சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று அரசு வழக்கறிஞர் பாபு முத்து மீரான் கூறினார்.
நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே. மோகன்ராம் ஆகியோர் கலைவாணியிடம் விசாரணை நடத்தினர். சிவகுமார் என்னைக் கடத்தவில்லை என்றும், என் விருப்பத்தின்பேரில்தான் அவருடன் சென்றேன் என்றும் கலைவாணி கூறினார். பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் அவர் கூறினார். அவரது கருத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், அவர் பெற்றோருடன் செல்ல அனுமதி அளித்தனர். வழக்கை இத்துடன் முடிப்பதாகக் கூறினர்.
Posted in 18, ADMK, AIADMK, Arrest, Constituency, Love, Major, MLA, Movie, Police, R Kalaivani, Ravichandran, Salem-1 | Leave a Comment »