Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2008
பிரணாப், டாடா, டெண்டுல்கருக்கு பத்மவிபூஷண் விருது
சென்ற வருடம்: Padma Vibooshan, Padma Bhooshan, Padmashree awards announced « Tamil News: “பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு பத்மபூஷன்; கவிஞர் வாலிக்கு பத்மஸ்ரீ விருது”
- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ,
- கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்,
- தொழிலதிபர்கள் ரத்தன் டாடா,
- லட்சுமி மித்தல்,
- இன்ஃபோசிஸ் தலைவர் என்.ஆர். நாராயணமூர்த்தி
உள்ளிட்ட 13 பேர் பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- பத்ம பூஷண் விருதுக்கு அமெரிக்கவாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 35 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- பத்மஸ்ரீ விருதுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 71 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த ஆண்டும் நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா’ விருதுக்கு எவரும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“பாரத ரத்னா’ விருதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அளிக்கலாம் என எல்.கே. அத்வானி பரிந்துரைத்து கடிதம் எழுதினார். இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜோதிபாசுவுக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி தங்கள் கட்சித் தலைவர் கான்சி ராமுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
2001-ம் ஆண்டு பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கர் மற்றும் பிஸ்மில்லா கானுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சராக உள்ள ஒருவர் பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பத்மவிபூஷண் விருது பெறுவோர்:
- மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி,
- தொழிலதிபர்கள் ரத்தன் டாடா,
- லட்சுமி மித்தல்,
- இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி,
- ஹோட்டல் அதிபர் பிஆர்எஸ் ஓபராய்,
- சுற்றுச் சூழல் ஆர்வலர் ஆர்.கே. பச்செüரி,
- தில்லி மெட்ரோ ரயில் தலைவர் இ. ஸ்ரீதரன்,
- உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த்,
- பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே,
- கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்,
- டெண்டுல்கர்,
- இந்திரா காந்தியின் முதன்மைச் செயலராக பணியாற்றிய பி.என். தர்.
எவரெஸ்ட் சிகரத்தை முதலில் தொட்ட எட்மண்ட் ஹிலாரிக்கு மரணத்துக்கு பின்பு பத்ம விபூஷண் வழங்கப்படுகிறது.
- நாகா தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தியதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் மத்திய உள்துறைச் செயலர் கே. பத்மனாபையா,
- பிரபல வர்ணனையாளர் ஜஸ்தேவ் சிங்,
- சிட்டி வங்கி தலைவர் விக்ரம் பண்டிட்,
- ஐசிஐசிஐ தலைவர் கே.வி. காமத் ஆகியோர் பத்ம பூஷண் விருது பெறுவோரில் முக்கியமானவர்களாவர்.
பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்
- டி.வி. நிருபர்கள் பர்கா தத்,
- ராஜ்தீப் சர்தேசாய்,
- வினோத் துவா,
- ஜம்மு காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் அமிதாப் மட்டூ,
- பின்னணிப் பாடகர் ஜவஹர் வட்டாள் ஆகியோரும் அடங்குவர்.
திரைப்படத் துறையில்
- நடிகை மாதுரி தீட்சித்,
- இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன்,
- நடிகர் டாம் ஆல்டர்,
- கால்பந்து வீரர் பாய்சுங் புடியா,
- நீச்சல் வீராங்கனை புலா செüத்ரி,
ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெறுவோரில் முக்கியமானவர்களாவர்.
- தமிழகத்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவ நிபுணர் சி.யு. வேல்முருகேந்திரன்,
- “தினத்தந்தி’ அதிபர் சிவந்தி ஆதித்தன்,
- பிரபல பாடகரும் டாக்டருமான சீர்காழி சிவசிதம்பரம் ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோரில் அடங்குவர்.
Posted in Anand, Arts, Asha, Asha Bhosale, astronaut, Awards, Baichung Bhutia, Bharat Ratna, Bhooshan, Bhosale, Bhushan, Bollywood, Booshan, Business, Chess, Citi, Dailythanthi, Dixit, Edmund, Edmund Hillary, Football, Hillary, Hotels, ICICI, Infosys, IT, Madhuri, Mittal, Mukherjee, Narayana Murthy, Narayanamurthy, Oberoi, Padhma, Padma, Padma Bhushan, Padma Vibhushan, Pathma, Performers, Pranab, Pranab Mukherjee, Prizes, Ratan, Ratan Tata, Sachin, Shyamalan, Singer, Soccer, Sports, Sunita Williams, Susheela, Sushila, Susila, TamilNadu, TATA, Tendulkar, Thanthi, Thanthy, Thinathanthi, Vibhooshan, Vibhushan, Vibooshan, Vibushan, Vikram Pandit, Viswanathan, Viswanathan Anand | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007
சிங்குரில் போராட்டத்தைத் தூண்டிவிடும் போட்டி நிறுவனத்தின் பெயரை வெளியிடத் தயாரா?: டாடாவுக்கு மாருதி சவால்
புது தில்லி, ஜன. 25: மேற்கு வங்க மாநிலம் சிங்குரில், டாடா கார் தொழிற்சாலைக்கு விளைநிலங்களை கையகப்படுத்தியதற்கு எதிரான போராட்டத்தை, எந்த போட்டி நிறுவனம் தூண்டி விடுகிறது என பெயரை வெளியிடத் தயாரா என்று டாடா நிறுவனத்துக்கு மாருதி கார் நிறுவனம் சவால் விடுத்துள்ளது.
டாடா நிறுவனஅதிபர் ரத்தன் டாடா எழுப்பிய இந்தப் புகார் குறித்து, மாருதி உத்யோக் நிறுவன நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜகதீஷ் கத்தர் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
டாடா எந்தப் போட்டி நிறுவனத்தைக் குறிப்பிடுகிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவருக்குத் தெரிந்திருப்பதால், அதை அவர் வெளியில் சொல்ல வேண்டும்.
போட்டியாளர்களின் திட்டங்களைக் குலைக்கும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபடுவது இல்லை. ஆரோக்கியமான போட்டியில்தான் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் என்றார்.
சிங்குர் ஆலையில் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ரூ.1 லட்சம் விலையிலான மக்கள் கார் சந்தைக்கு வந்தால் அது மாருதி நிறுவனத்தின் எம்-800 கார் விற்பனையை பாதிக்கும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஏனெனில், எம்-800 கார்தான் தற்போது நாட்டிலேயே மிகவும் விலை குறைவாக சுமார் ரூ.2 லட்சத்துக்குக் கிடைக்கிறது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஜகதீஷ் கத்தார் கூறியதாவது: எம்-800 விற்பனைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இரு சக்கர வாகனங்களுக்கும் கார்களுக்கும் உள்ள இடைவெளியை, ரூ.1 லட்சம் விலையிலான கார், குறைக்கும் என்பதால், எம்-800-க்கு அது உதவிகரமாகவே இருக்கும் என்றார்
Posted in Auto Industry, Automotive, Business, Cars, Competition, Fights, Maruthi, Maruti, Maruti Udyog, Marutih, Ratan Tata, Singur, Suzuki Motor Corp, TATA, Tata Motors, Wars, WB, West Bengal | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006
நடிகர் அமிதாப்பச்சனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: டெல்லி பல்கலைக்கழகம் வழங்குகிறது
புதுடெல்லி, நவ. 2-
இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கடந்த ஜுலை மாதம் இங்கிலாந்தில் உள்ள மான்ட் போர்ட் பல்கலைக் கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் பிரான்ஸ் அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அமிதாப் பச்சனின் திரையுலக சாதனை களை பாராட்டி 4-ந் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்க டெல்லி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
இது பற்றி டெல்லி பல்கலைக்கழக பதிவாளர் ஏ.கே.துபே கூறும் போது, டெல்லி பல்கலைக்கழகம் முதன் முதலாக திரையுலகைச் சேர்ந்த ஒருவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. அமிதாப்பச்சன் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன் னாள் மாணவரும் கூட அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க கடந்த ஆண்டே முடிவு செய்தோம்.
ஆனால் ஒரு சில காரணங்களால் அது தள்ளி வைக்கப்பட்டது. நாங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதற்கு முன்பே மான்ட் போர்ட் பல்கலைக்கழகம் வழங்கி விட்டது என்றார்.
அமிதாப்பச்சன் தவிர
- டெல்லி முதல்-மந்திரி ஷீலாதீட்சித்,
- விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்,
- எழுத்தாளர் மகஸ்வேதா தேவி,
- கார்ட்டூன் ஓவியர் ஆர்.கே.லட்சுமன்,
- டாட்டா நிறுவன அதிபர் ரத்தன் டாட்டா
ஆகியோருக்கும் 4-ந் தேதி டெல்லி பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது.
Posted in Amitabh, CNR Rao, Delhi University, Doctorate, Honorary, Kirori Mal College, Mahashweta Devi, Ratan Tata, RK Laxman, Romila Thapar, Sheila Dikshit, SK Vij | Leave a Comment »