- துடிப்பு: பெரியார்-ஒரு திரைப்படம்
- காலம்: நான் ‘கண்ட’ பெரியார் !
- மிதக்கும் வெளி: பெரியார் திரைப்படம் – கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல்
- விடாது கருப்பு: பெரியார் படம் எனது பார்வையில்….
- குழலி பக்கங்கள்: பெரியார் ஒரு உணர்ச்சி காவியப் பதிவு….
- விடுபட்டவை: பெரியார் திரைப்படம் -ஓர் அனுபவம்
- IdlyVadai – இட்லிவடை: பெரியார் படம் – பா.ம.க புறக்கணிப்பு
- சென்னைக் கச்சேரி: ரஜினியும் பெரியாரும்
- Tamilan Kural: பெரியாரும்,தமிழர்களும்
- குறிச்சி ஜெகதீஸ்: மக்கள் விரும்பும் பெரியார் படம் !!! பெரியார் அல்ல
- Raji’sView: பெரியார் – திரைப்படம்
சாரட் வண்டியில் “பெரியார்’ ஊர்வலம்
ஈரோடு, மே 2: ஈரோட்டில் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் “பெரியார்’, “ராவணன்’ வேடமணிந்து திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் சென்றனர்.
தமிழகம் முழுவதும் பெரியார் திரைப்படம் மே 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பெரியாராக நடிகர் சத்யராஜ், மணியம்மையாக குஷ்பு நடித்துள்ளனர். பெரியார் திரைப்படம் வெளியானதையொட்டி தி.க.வினர் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை கொல்லம்பாளையத்தில் இருந்து தேவி அபிராமி திரையரங்குக்கு ஊர்வலமாகச் சென்றனர்.
குதிரை பூட்டிய சாரட் வண்டியில் திராவிடர் கழக ஈரோடு நகரச் செயலர் தியாகு பெரியார் வேடமணிந்தும், இளைஞர் அணி அமைப்பாளர் ராசு ராவணன் வேடமணிந்தும் சென்றனர்.
ஊர்வலம் கொல்லம்பாளையம், காளைமாட்டுச் சிலை, மணிக்கூண்டு, பஸ்நிலையம் வழியாக திரையரங்கை அடைந்தது. பெரியார், ராவணன் வேடமணிந்தவர்கள் சாரட் வண்டியில் செல்வதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். திரையரங்கில் பெரியார், ராவணன் வேடமணிந்தவரை தி.க.வினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.