Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Rahul’ Category

Corruption & Kickbacks Charge on Congress (I) – Job opportunity plan implementation in Indian states

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2007

ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில்… மெகா ஊழல்! * பல மாநிலங்களிலும், பல கோடி “சுவாகா’

Dinamalar.Com

மத்திய அரசின், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், மெகா ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம், அரசியல்வாதிகள், அதிகாரிகள் பாக்கெட்டில் போய்க் கொண்டிருக்கிறது.

மத்தியில், 2004ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிக முக்கிய திட்டம், கிராம மக்களுக்கு வேலை தரும், “ஊரக வேலை உத்தரவாத திட்டம்!’

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, மிகவும் பின்தங்கிய 200 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கு பல கோடி பணத்தை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஒதுக் கியது.அந்த பணத்தை வைத்து, கிராமங்களில் வேலையின்றி உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சம் வருடத்துக்கு 100 நாட்களாவது வேலை தர ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த திட்டத்தை இந்தாண்டு இறுதிக்குள் மேலும், 150 மாவட்டங்களுக்கு விரிவுப் படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டத்தில் ஊழல், நிர்வாக குளறுபடி, விழிப்புணர்வு ஏற்படுத்தாதது போன்றவை குறித்து புகார்கள் வந்ததால், மத்திய நிதிக்கமிஷன், இதற்கு நிதி ஒதுக்க மறுத்தது.பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், அரசியல் வாதிகள் முதல் பஞ்சாயத்து உறுப்பினர்கள் வரை, பணத்தை சுருட்டுவதாக, தன்னார்வத் தொண்டு அமைப்புகள், அரசு ஆய்வு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்ததால், நிதிக்கமிஷன், இதுபற்றி ஆலோசிக்க விரும்பியது.எனினும், இந்த விஷயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு, இந்தாண்டு 130 மாவட்டங்களை கூடுதலாக இந்த திட்டத்தில் சேர்க்கும்படி உத்தரவிட்டார்.காங்கிரஸ் பொதுச்செயலராக ராகுல் பொறுப்பேற்றதும், அடுத்த திருப்பம் ஏற்பட்டது.”ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். குறிப்பிட்ட மாவட்டங்கள் மட்டும் பயனடையும் வகையில் நிறைவேற்றுவது பாரபட்சமானது’ என்று பிரதமரிடம் கூறினார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்க முடிவு செய்துள்ளார்.பல்வேறு ஆய்வுகளின் மூலம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர்பான மாத அறிக்கைகள் மூலம் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. திட்டத்தை அறவே அமல்படுத்துவதில்லை என்பது இந்த மாத அறிக்கையை பார்த்தாலே தெரியும்.ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர் பான ஆய்வுகளில் கிடைத்த சில தகவல்கள்:

மேற்கு வங்கம்:

எல்லா மட்டங்களிலும் திட்டப்பணத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. பல கிராமங்களில் தொழிலாளர்களுக்கு “வேலை அட்டை’ தருவதில்லை. அப்படியே தந்தாலும், பதிவு எண் தரவில்லை. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர் எழுதி, பணம் சுரண்டப்படுகிறது.

ஆந்திரா:

இந்த மாநிலத்தில், “வேலை அட்டை’ தந்து, வேலை தந்தாலும், குறைந்தபட்ச கூலி தரப்படுவதில்லை. சம்பள பணம் பிடித்துக்கொண்டுதான் தரப்படுகிறது.

சட்டீஸ்கர்:

திட்டத்தில் பலரும் ஊழல் செய்கின்றனர்; சரிவர வேலை தரப்படுவதில்லை; சரியான நிர்வாகமும் இல்லை.

ஜார்க்கண்ட்:

கிராம மக்களுக்கு வேலை தந்ததாக எழுதி விட்டு, பணம் சுரண்டப் படுகிறது. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர்களை பட்டியல் எடுத்து, பணத்தை பஞ்சாயத்து மட்டத்தில் மோசடி செய்கின்றனர். எதிர்த்து கேட்ட கிராம மக்கள் மிரட்டப்படுகின்றனர். பெண்கள் சித்ரவதைக்கு ஆளாகின்றனர்.

மத்தியப்பிரதேசம்:

பயனாளிகளுக்கு மிகக்குறைந்த பணத்தை தந்துவிட்டு, கான்ட்ராக்டர்கள் அதிக பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு அதிகாரிகள் உடந்தை. லஞ்சம் தந்து தான் சம்பளத்தையே கிராம மக்கள் பெற வேண்டியிருக்கிறது.

ஒரிசா:

கிராம மக்களில் பலருக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியவில்லை. அதை மறைத்து, அதிகாரிகள், அரசியல்வாதிகள், பணத்தை சுரண்டுகின்றனர்.

உத்தரப்பிரதேசம்:

மிக அதிக ஊழல் என்றால், இந்த மாநிலத்தில் தான். பல மாவட்டங்களில், இந்த திட்டத்தை அமல்படுத்தியதாக சொல்லி, பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.”இப்படி பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில் மெகா ஊழல் நடந்து வருகிறது. இதை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதால், கிராம மக் களுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை. மாறாக, திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப் படலாம்’ என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.இவ்விவகாரம் பூதாகாரம் அடையும் நிலையில் உள்ளதால், மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Posted in Andhra, AP, Bengal, Chathisgar, Chathisgarh, Chattisgar, Chattisgarh, Compensation, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Contractors, Corruption, Employment, Females, Guarantee, Implementation, India, Jarkand, Jarkhand, Jharkand, Jharkhand, Jharkhand Mukti Morcha, Jharkhand Party, Jobs, kickbacks, Lady, MadhyaPradesh, Madyapradesh, Manmohan, Metro, MNC, MP, NGO, Orissa, Party, Planning, Politics, Poor, Private, Public, Rahul, Reddy, Rural, Scheme, Sonia, State, Suburban, UP, Utharpradesh, UttarPradesh, Villages, WB, Women, YSR | Leave a Comment »

Laloo, Vasundhara Raje, Jaswanth Singh – Dynasty Politics: Some Samples for Indian Monarchy

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 1, 2007

வாரிசு மீன்கள்

லாலு குடும்பம்: ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில், மனைவி ராப்ரி தேவி, மைத்துனர்கள் சாது, சுபாஷ் என ஒரு பெரும் பட்டாளமே இருக்கிறது.

ராஜஸ்தான் முதல்வர் (பா.ஜ) வசுந்தரா ராஜேவின் மகன் எம்.பி.யாக உள்ளார்.

பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் வாரிசும் அரசியல் களத்தில் உள்ளார் என்கிறார் தேசியவாத காங்கிரஸின் பொதுச்செயலாளர் டி.பி.திரிபாதி.

Posted in Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), DMK, dynasty, Examples, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Indra Congress, Indra Gandi, Jasvanth, Jaswanth, King, Kingdom, Lalloo, Lalloo Prasad Yadav, Lallu, Lallu prasad yadav, Laloo, Laloo Prasad Yadav, LalooY, Lalu, Lalu Prasad, Lalu prasad Yadav, Leaders, Monarchy, Politics, Rahul, Rahul Gandhi, Rajeev, Rajeev Gandhi, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Rulers, Samples, Sonia, Sonia Gandhi, Sonia Gandi, VasundaraRaje, Vasundhara, Vasundhara Raje, VasundharaRaje, Vasundhra, Vasundhra Raje, Vasunthara, VasuntharaRaje, Yadav | Leave a Comment »

Uttar Pradesh Elections – Anlaysis: Neeraja Chowdhry on Rahul Gandhi Politics

Posted by Snapjudge மேல் மார்ச் 26, 2007

சர்ச்சைக்கு வித்திட்ட ராகுல் காந்தியின் பிரசாரம்!

நீரஜா செüத்ரி

“”இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் பாபர் மசூதியை இடிக்கவிட்டிருக்க மாட்டார்கள்” என்று ராகுல் காந்தி பேசியதை நியாயப்படுத்தவும், விளக்கம் அளிக்கவும் காங்கிரஸ் தலைவர்கள் எந்தெந்த வகையிலோ முயல்கின்றனர்; ஆனால் தனிப்பட்ட முறையில் பேசும்போது தருமசங்கடத்தில் நெளிகின்றனர்.

உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள ராகுல் காந்தி, எதிர்க்கட்சியினரைத் தாக்குவதாக நினைத்து சொந்தக் கட்சிக்காரர்களையே தாக்கிவிட்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பி.வி. நரசிம்மராவ்தான் பிரதமராக இருந்தார். உத்தரப் பிரதேச அரசைக் கலைக்கவும் தேவைப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில், மத்திய அமைச்சரவை என்று பல்வேறு அமைப்புகளும் அவருக்கு முழு அதிகாரத்தை அளித்திருந்த நிலையிலும் மசூதி இடிக்கப்பட்டதைத் தடுக்க அவரால் முடியவில்லை.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்திருந்தால் மசூதியை இடிக்கவிட்டிருக்க மாட்டார் என்பது உண்மையே. ஆனால், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் சிலைகளை வைக்க, கதவுகளின் பூட்டைத் திறக்க உத்தரவிட்டதும் அவரே; ஷா பானு வழக்கில் அவருடைய கணவரே ஜீவனாம்சம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர், அதை செல்லாததாக்க ஒரு மசோதா கொண்டுவந்ததும் அவரே. இவ்விரு செயல்களும் மக்களை மத அடிப்படையில் அணி திரள வைத்தன. மூடப்பட்ட இந்த அத்தியாயங்களை மீண்டும் மறுவாசிப்பு செய்யவே ராகுல் காந்தியின் கருத்து உதவியிருக்கிறது. இந்நிலையில், ராகுலின் இக்கருத்து பாரதீய ஜனதாவுக்குத்தான் அரசியல் லாபத்தை அள்ளித்தரும். பாபர் மசூதி இடிப்பு என்ற விவகாரம் ஹிந்துக்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் “”நடந்து முடிந்துபோன” ஒரு விஷயம்தான்.

அவ்வப்போது, “”ராமருக்குக் கோயில் கட்டுவோம்” என்று அரற்றிக் கொண்டிருந்தாலும், அயோத்தி விவகாரம் இனி தேர்தல் ஆதாயத்துக்குப் பயன்படாது என்பதை சங்கப் பரிவாரங்கள் உணர்ந்திருக்கின்றன. எனவேதான் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு என்று பிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன.

மத ரீதியாக மக்களைத் திரட்டும் பிரச்சினைகளைப் பேசினால் அதனால் பலன் அடைவது பாரதீய ஜனதாவும் சமாஜவாதி கட்சியும்தான். ஹிந்துத்துவா கொள்கையைத் தொடர்ந்து வலியுறுத்தும் பாஜக கூட இப்போது, நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு இன்னும் தண்டனையை நிறைவேற்றாதது குறித்தும், அரசின் நிதி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசியது குறித்தும்தான் கண்டனம் தெரிவித்து வருகிறது.

ராகுல் காந்தியின் கருத்தால் முஸ்லிம்கள், காங்கிரஸýக்கு மீண்டும் ஆதரவு தருகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட, முஸ்லிம்களின் வோட்டு சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக தளம், ஜன மோர்ச்சா என்று ஐந்து வெவ்வேறு கட்சிகளுக்குப் பிரிந்து போகும்.

அதே சமயம், மேல் சாதியினரின் வாக்குகள் பாஜகவுக்கு குவியும். சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேச உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவும், உத்தரகண்ட் பேரவைத் தேர்தல் முடிவும், மேல் சாதியினர் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டதையே உணர்த்துகின்றன.

இந்த நாட்டை ஆள்வதற்குத் தகுதி உள்ள குடும்பம் “”நேரு-காந்தி” குடும்பம்தான் என்பதையே ராகுலின் பேச்சு வலியுறுத்துகிறது. குடும்ப ஆட்சி என்றாலே எழும் கண்டனக் குரல்கள் இப்போது அடங்கி வருகின்றன. இப்போது இதுதான் நடைமுறை என்றாகி வருகிறது.

இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் அரசியல் 500 குடும்பங்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் நிலைமை ஏற்பட்டுவிடலாம். இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 4-வது இடம்தான் கிடைக்கும் என்று பேசப்படும் நேரத்தில், ராகுலின் கருத்து காரணமாக காரசாரமான விவாதங்கள் தொடங்கிவிட்டன. ராகுல் பேசியது சரியே என்று காங்கிரஸ் தொண்டர்கள் வீறாப்போடு எதிர்வாதம் செய்கின்றனர். சாரமற்று, விறுவிறுப்பற்று இருந்த தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. அந்த வகையில் ராகுலின் பேச்சு வரவேற்கத்தக்கதே.

ராகுல் காந்தி வளர்ந்துவரும் இளம் தலைவர்; இளைய சமுதாயத்தின் பிரதிநிதி. அந்த வயது மக்களின் கனவுகளை, ஆசைகளை, நியாயங்களை பிரதிபலிக்கும் கருத்துகளை அவர் எடுத்துவைக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிப்பு பிரச்சினை செத்துவிட்டது. நரசிம்மராவும் மறைந்துவிட்டார். நடந்த சம்பவத்துக்கு சோனியா காந்தியும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். முஸ்லிம்களை ஈர்க்கவும், நம்பிக்கை ஊட்டவும் வேறு வழிகள் உள்ளன. வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்க, தான் மேற்கொள்ளவிருக்கும் உத்திகளை, லட்சியங்களை ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் முன் நிறுத்த வேண்டும்.

தமிழில்: சாரி.

=========================================================
உ.பி. தேர்தல்: பகுஜன் சமாஜ் கட்சியில் அதிக அளவில் கிரிமினல்கள் போட்டி

லக்னெü, ஏப். 11: உத்தரப்பிரதேச மாநில பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் அதிக குற்றப்பின்னணி கொண்டவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் கொடுத்த தகவல்களை உத்தரப்பிரதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆராய்ந்தது.

அதன்படி

  1. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் (33.33%) அதிக குற்றப்பின்னணி கொண்டவர்களாக உள்ளனர்.
  2. பாஜகவினர் (27.03%) 2-ம் இடத்திலும்,
  3. சமாஜவாதி கட்சியினர் (26.5%) 3-ம் இடத்திலும்,
  4. காங்கிரஸ் கட்சியினர் (20.17%) 4-ம் இடத்திலும்,
  5. ராஷ்டிரீய லோக்தளம் கட்சியினர் (18.31%) 5-ம் இடத்திலும் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல

  1. சமாஜவாதி கட்சியினரில் அதிகம் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
  2. இரண்டாம் இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினரும்,
  3. பாஜக,
  4. காங்கிரஸ் ஆகிய கட்சியினர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு (PAN Number) நிரந்தர கணக்கு எண் இல்லை.

=========================================================

Dinamani – May 8

மாயாவதிக்கு உ.பி. மேல்சாதியினர் ஆதரவு!

நீரஜா சௌத்ரி

கடந்த வாரம் அலாகாபாதில் மாயாவதி பேசிய தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது பிற்பகல் மணி 3. வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. அருகில் “”2 பேர்” நின்றுகொண்டு மேடையையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

வெயிலோ, மழையோ -சகோதரி மாயாவதியைப் பார்க்க தலித்துகள் காத்திருப்பதில் வியப்பு ஏதும் இல்லை; ஆனால் “”அந்த இருவரும்” தலித்துகள் அல்ல, வைசிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், வியாபாரிகள். முலாயமின் “”அடியாள் அரசு” முடிவுக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்தவர்கள்.

பொதுக்கூட்டங்களுக்கு வருகிறவர்கள் எல்லோரும் அந்த கட்சிக்கே வாக்களித்துவிடமாட்டார்கள் என்பது நாம் அனுபவத்தில் அறிந்த பாடம். ஆனால் பொதுக்கூட்டத்துக்கு வரும் கூட்டம், தலைவர்களின் செல்வாக்கை எடைபோட உதவுகிறது. மாயாவதியின் பொதுக்கூட்டத்துக்கு வருகிறவர்கள், அவர் பேச்சின் முக்கியப் பகுதியில் கைதட்டவும், ஆரவாரம் செய்யவும் தவறுவதே இல்லை.

ராகுல் காந்தியின் பிரசாரத்தின்போது அவருடைய வாகனத்துக்கு இணையாக துடிப்போடு ஓடிவரும் இளைஞர்களைப் பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்வு ஊட்டப்பட்டுவிட்டது என்று புரிகிறது.

அலாகாபாதில் நடந்த அத்வானியின் பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்களிடையே பெரிய பரபரப்போ, உற்சாகமோ இல்லை. ஆனால் வந்தவர்கள் அனைவரும் பாஜகவுக்கே வாக்களிக்கத் தீர்மானித்துவிட்டவர்கள் என்பதில் சந்தேகமே வரவில்லை.

மாயாவதியின் பொதுக்கூட்டத்துக்கு வந்த 2 வைசியர்களும், உத்தரப்பிரதேசத்தில் மேல் சாதியினரிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றத்தை உணர்த்துகின்றனர். 2007 உ.பி. சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வித்தியாசமாகவே இருக்கப் போகிறது. முஸ்லிம்கள் தங்களுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அல்லது தங்களுடைய சமூகத்துக்கு இணக்கமானவர்கள் யார் என்று பார்த்து வாக்களிப்பார்கள். உத்தரப்பிரதேசத்தில் பிராமணர்கள் இம்முறை அந்த வகையில்தான் வாக்களித்து வருகின்றனர்.

தங்கள் கட்சி சார்பில் பிராமணர்கள் போட்டியிடாத தொகுதிகளில்தான் மாயாவதி கட்சியின் பிராமண வேட்பாளர்களுக்கு பிராமணர்கள் வாக்களிப்பார்கள் என்று பாஜக நம்புகிறது. மாயாவதி 86 பிராமணர்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறார். எனவே கடைசி 2 சுற்று வாக்குப்பதிவில் அவருடைய கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று முந்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிக இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சியாக அவருடைய கட்சி வரும் வாய்ப்பும் இருக்கிறது.

மாயாவதி கட்சிக்கு 150 இடங்களுக்கு மேல் கிடைத்து, காங்கிரஸ் கட்சிக்கும் 40 இடங்கள் வரை கிடைத்தால், சுயேச்சைகள் ஆதரவுடன் மாயாவதி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.

இவ்விரு கட்சிகளைத் தவிர பிற கட்சிகளின் கூட்டணி அரசுக்கு வாய்ப்பே கிடையாது. அதிக இடங்களில் வென்ற 2-வது கட்சியாக பாஜக வரும் என்பதால், பாஜக-பகுஜன் சமாஜ் கூட்டணி அரசும் சாத்தியம்தான்! இரு கட்சிகளும் ஏற்கெனவே இருமுறை கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன. ஆனால், பாஜக தொண்டர்கள் மாயாவதியுடன் கூட்டணியே கூடாது என்று இப்போது பலமாக எதிர்ப்பதால் இம் முறை அப்படியொரு வாய்ப்பே கிடையாது என்று திட்டவட்டமாக மறுக்கின்றனர் கட்சித் தலைவர்கள்.

உத்தரப் பிரதேசமும் பிகார் வழியிலேயே செல்வதாக பாஜக தலைவர்கள் கருதுகின்றனர். யாருமே ஆட்சி அமைக்க முடியாமல் மீண்டும் பேரவைக்குத் தேர்தல் நடந்தால், அதிக இடங்களைப் பெற்ற தனிப்பெரும் கட்சியாக வரும் வாய்ப்பு தங்களுக்கே அதிகம் என்று அவர்கள் கணக்கு போடுகின்றனர். எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவருவதை பலமாக எதிர்த்தாலும், உள்ளூர அதை வரவேற்பார்கள் என்று தெரிகிறது. இந்தத் தேர்தலில் 2 தவறுகளைச் செய்துவிட்டதாக பாஜக தலைமை கருதுகிறது. முலாயம் சிங் அரசைத் தீவிரமாக எதிர்க்காதது முதல் தவறு. பிகாரில் நிதீஷ்குமார் அமைத்த சாதிக் கூட்டணியைப் போல, உத்தரப்பிரதேசத்தில் அமைக்காமல் போனது இரண்டாவது தவறு என்று அவர்கள் கருதுகின்றனர்.

ஆட்சி அமைக்க சில எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுதான் தேவை என்ற நிலை மாயாவதிக்கு ஏற்பட்டால், காங்கிரஸ் கட்சி ஆதரவு தரக்கூடும். அதே சமயம், குடியரசுத் தலைவர் ஆட்சிதான் ஒரே வழி என்றாலும் காங்கிரஸýக்கு மகிழ்ச்சிதான். ஏன் என்றால் பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அதற்கு 4-வது இடம்தான். குடியரசுத் தலைவர் ஆட்சி என்றாலோ, தில்லியில் உள்ள மத்திய அரசின் மூலம் உத்தரப்பிரதேசத்தை மறைமுகமாக ஆளலாம்.

மாயாவதி ஆட்சி அமைப்பதாக இருந்தால் அதை உடனடியாக, மின்னல் வேகத்தில் செய்வதையே காங்கிரஸ் விரும்பும். நேரம் கடத்திக் கொண்டே இருந்தால், பதவி ஆசை காட்டி பிற கட்சியினர் முதலில் காங்கிரûஸத்தான் உடைப்பார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுபவபூர்வமாகவே தெரியும்.

தமிழில்: சாரி.

Posted in Anlaysis, Assets, BJP, BSP, Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Disclosure, EC, election commission, Elections, Evasion, Income, Indira, Indira Congress, Indira Gandhi, Indra, Islam, IT, Muslim, Narasimha, Narasimha Rao, Narasimma Rao, Narasmiha Rao, Neeraja, Neeraja Chowdhri, Neeraja Chowdhry, Neeraja Chowdhury, Neeraja Chowdry, Pan, Politics, Polls, PVN, Rahul, Rahul Gandhi, Sonia, Tax, UP, Uttar Pradesh | 7 Comments »

India relies on the tried and trusted for World Cup – Sourav, Sehwag make it to squad

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

உலககோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு 15 பேர் தேர்வு

மும்பை, பிப். 12-

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலககோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 13-ந்தேதி வெஸ்ட் இண்டீசில் தொடங்குகிறது.

இதற்கான 15 வீரர்கள் கொண்ட அணியை 13-ந் தேதிக்குள் (நாளை) அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் சங்கம் கூறி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்வதற்காக தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று நடந்தது. அதன் தலைவர் வெங்சர்க்கார் தலைமை தாங்கினார். 4 தேர்வு குழு உறுப்பினர்கள் மற்றும் கேப்டன் டிராவிட், பயிற்சியாளர் கிரேக் சேப்பல் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர். பகல் 11.15 மணிக்கு கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தின் முடிவில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

  1. டிராவிட் (கேப்டன்),
  2. தெண்டுல்கர்,
  3. ஷேவாக்,
  4. கங்குலி,
  5. உத்தப்பா,
  6. யுவராஜ்சிங்,
  7. டோனி,
  8. தினேஷ்கார்த்திக்,
  9. ஹர்பஜன்சிங்,
  10. ஜாகீர்கான்,
  11. முனாப்பட்டேல்,
  12. கும்ப்ளே,
  13. அகர்கர்,
  14. பதான்,
  15. ஸ்ரீசந்த்.

Posted in 2007, Agarkar, Batsman, Batsmen, Bowlers, Cricket, Dhoni, Dinesh karthik, Dravid, Fielder, Ganguly, Harbhajan Singh, India, Kumble, Munaf Patel, ODI, Pathan, Players, Rahul, Sachin, Sehwag, Sourav, Squad, Srichand, Team, Tendulkar, Uthappa, Vengsarkar, West Indies, WI, wicketkeeper, WK, World Cup, Yuvraj Singh, Zakir Khan | Leave a Comment »

Profit law allows her but Sonia not likely to return to NAC job

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006

பதவியில் இல்லாமலே சாதித்தவர் சோனியா!

நீரஜா சௌத்ரி
தமிழில்: சாரி.
தேசிய ஆலோசனைக் கவுன்சில் என்ற அமைப்பு 2004 ஜூன் மாதம் ஏற்படுத்தப்பட்டது. “”பொறுப்பில் இல்லாமலே அதிகாரம் செலுத்தவும் அதை நியாயப்படுத்தவும் சோனியா காந்திக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இந்தக் கவுன்சில்” என்று எதிர்க்கட்சிகள் அப்போது குற்றஞ்சாட்டின.

இந்த கவுன்சிலுக்காக ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் செலவில் பட்ஜெட், 12 உறுப்பினர்கள், 50 அலுவலகப் பணியாளர்கள் – அதில் ஒருவர் செயலர், இணைச் செயலர் அந்தஸ்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி – எண்.10 ஜன்பாத் இல்லத்துக்கு எதிரிலேயே மிகப் பெரிய பங்களா என்று வசதிகள் செய்துதரப்பட்டபோது, சோனியாவுக்காக தனி அலுவலகமே தயார் செய்யப்பட்டது போன்ற தோற்றம்தான் ஏற்பட்டது.

அன்றிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அமைப்பின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் பதவியேற்க மாட்டார் என்ற நிலையில், நிலைமையே வேறாக் காட்சி தருகிறது. இந்த அமைப்பையே கலைத்துவிட்டார்கள் என்றால் அதைவிட பரிதாபம் வேறு எதுவும் இருக்க முடியாது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆதாயம் தரும் பதவிகளுக்கு விதிவிலக்கு தந்து, இரட்டைப் பதவி மசோதாவை நிறைவேற்றி, அதை குடியரசுத் தலைவரும் ஏற்று கையெழுத்திட்டுவிட்ட நிலையில், தேசிய ஆலோசனைக் கவுன்சில் கதி என்ன ஆகும் என்று தெரியவில்லை. இந்த மசோதாவே செல்லாது என்று அறிவிக்கக் கோரி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதை நீதிமன்றமும் ஏற்று அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்த வழக்கு நடந்து முடிய நிரம்ப கால அவகாசம் பிடிக்கும்.

குறைந்தபட்ச பொது திட்டத்தில் கூறப்பட்டுள்ள சமூக நல திட்டங்களை அமல் செய்வதற்கு, தேசிய ஆலோசனைக் கவுன்சில்தான் அரசுக்கு மூல விசையாகச் செயல்பட்டிருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டம், அனைத்துப் பகுதிகளிலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்டம், சத்துணவு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, கிராமப்புற சுகாதார மேம்பாட்டுத் திட்டம் போன்றவற்றுக்கு நிதி அமைச்சகம் கூடுதல் நிதி ஒதுக்க, முக்கிய காரணமாக இருந்ததே தேசிய ஆலோசனைக் கவுன்சில்தான்.

பெண்களைக் கணவன்மார்களும், அவருடைய உறவினர்களும் அடித்து உதைத்து கொடுமை செய்வதைத் தடுக்க வேண்டும், சட்டம் இயற்ற வேண்டும் என்று 1975-லேயே வலியுறுத்தப்பட்டது. ஆனால் சட்ட வடிவம் பெற்றது இப்போதுதான். இது ஆரம்பம்தான். போகப்போக இச் சட்டம் மேலும் வலிவு பெறும். பெண்களின் பறிக்கப்பட்ட உரிமைகள் ஒவ்வொன்றாக மீட்டெடுக்கப்படும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகள் பற்றிய பேச்சு வரும்போது தேசிய ஆலோசனைக் கவுன்சில் ஆற்றிய பங்கும் கூடவே நினைவுகூரப்படும். தகவல் அறியும் சட்டம் தொடர்பாக இடதுசாரிகள் உரிமை கொண்டாட முற்பட்டாலும், அதில் அதிகாரிகளின் குறிப்புகளை வெளியே தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அதிகார வர்க்கம் கூறியதை அரசுத்தரப்பில் ஏற்று சட்ட திருத்தமும் சேர்க்கப்பட்டது. அதை சோனியா காந்தி வன்மையாக ஏற்க மறுக்கவே, அது கிடப்பில் போடப்பட்டது.

இதற்கெல்லாம் பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம், தேசிய ஆலோசனைக் கவுன்சிலின் தலைவராக சோனியா காந்தி இருந்ததே. 14-வது மக்களவையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மைய விசையாக இருப்பது காங்கிரஸ் கட்சியே. அதன் தலைவர் என்ற வகையில் சோனியா காந்தி மட்டற்ற அதிகாரம் பெற்று விளங்குகிறார். அதிகாரமுள்ள பதவி எதிலும் இல்லாமலே, “”அதிகாரம் செலுத்தும் செல்வாக்கு” அவருக்கு இருக்கிறது.

நேரடியாக அதிகாரம் உள்ள பதவியில் அவர் இருந்திருந்தால், அதிகாரிகளின் ஆலோசனைகளையும் விளக்கங்களையும் கேட்டு, மக்களின் கோரிக்கைகளை முழுக்க உள்வாங்கும் சக்தியை இழந்தவராகக்கூட மாறியிருப்பார். பெரும்பாலான அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இப்படித்தான் மக்களுடைய தொடர்பை இழந்து, அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்டு செயலிழந்து நிற்கிறார்கள்.

சோனியா காந்தி இல்லாமல், தேசிய ஆலோசனைக் கவுன்சிலால் இனி வலுவாகச் செயல்பட முடியாது. கடந்த 3 மாதங்களாகச் செயல்பட்டதைப்போல, எவருக்கும் தெரியாதபடி வேண்டுமானால் செயல்படலாம். அல்லது சோனியாவின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரின் தலைமையில் ஓரளவு வலுவுடன் செயல்படலாம். ராகுல் காந்தியைக் கூட தலைவராக நியமிக்கலாம். ஆனால் கவுன்சிலில் இருக்கும் சிலரே ராகுலின் தலைமையை ஏற்கக் தயக்கம் காட்டக்கூடும்.

பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் போல இதையும் பிரதமர் தலைமையில் செயல்படும் அமைப்பாக மாற்றிவிடலாம் என்ற யோசனையும் இருக்கிறது. தொழில், வர்த்தகப் பிரமுகர்கள் தங்கள் நோக்கத்துக்கு அரசு இயந்திரத்தை வளைக்க முற்படும்போது, அதை எதிர்த்து நிற்கும் சக்தியாக, மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக இது செயல்பட வேண்டும் என்றே பலரும் கருதுகின்றனர்.

தேசிய ஆலோசனைக் கவுன்சிலுக்கு கடந்த ஆண்டு, ஓராண்டு பதவிக்காலம் நீட்டிப்பு தரப்பட்டது. இந்த ஆண்டு 6 மாதங்கள்தான் தரப்பட்டுள்ளது. எனவேதான், இதைக் கலைத்துவிடுவார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பும் அது மேற்கொண்ட பணிகளும், “”காங்கிரஸýம், சோனியா காந்தியும் ஏழை பங்காளர்கள்” என்ற மதிப்பைப் பெற்றுத் தந்துள்ளன. பொருளாதார சீர்திருத்தத்துக்கு ஆதரவாக பிரதமரும் நிதி அமைச்சரும் செயல்படும்போது, மக்களின் சார்பாக சோனியா செயல்பட்டு அரசியல்தளத்தில் சமநிலையை ஏற்படுத்தினார்.

அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்திலும் பஞ்சாபிலும் சட்டப் பேரவை பொதுத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. 2009-ல் மக்களவைக்கே பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும். சீர்திருத்தங்களால் ஏற்படும் அரசியல் லாபங்களைவிட, தேசிய ஆலோசனைக் கவுன்சிலின் மக்கள் நல திட்டங்களால்தான் அதிக அரசியல் லாபம் கிட்ட முடியும்.

தமிழில்: சாரி.

Posted in Cong(I), Congress, Congress (I), Elections, Gandhi, India, Indira Congress, Manmohan, Manmohan Singh, NAC, National Advisory Council, PM, Rahul, Sonia, Tamil | Leave a Comment »